Sunday, January 30, 2022

MOOKA PANCHASATHI


 மூக  பஞ்சசதி  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஆர்யா சதகம்  ஸ்லோகங்கள்  60-70

तुष्यामि हर्षितस्मरशासनया काञ्चिपुरकृतासनया ।
स्वासनया सकलजगद्भासनया कलितशम्बरासनया ॥ ६१॥

61. Thushyami harshitha smara sasanayaa, Kanchipura kruthaasayaa,
Swasanayaa sakala jagad bhasanayaa kalithasambarasanayaa

துஷ்யாமி ஹர்ஷிதஸ்மரஶாஸனயா காஞ்சிபுரக்றுதாஸனயா |
ஸ்வாஸனயா ஸகலஜகத்பாஸனயா கலிதஶம்பராஸனயா ||61||

அம்பாள்  காமாக்ஷி தேவி  பரமேஸ்வரனுக்கும்   பக்தர்களுக்கும்  பரம சந்தோஷத்தை அளிப்பவள் பிரபஞ்சத்தில் உள்ள சகல  ஜீவன்களுக்கும்  ப்ரம்மமே   ஆதாரம்,  அந்த பிரம்மமே உருவானவள் அம்பாள். பிரபஞ்சத்தில்  சகலமும் திருப்தி அடைய செய்பவள் அம்பாள்.  காஞ்சிபுர க்ஷேத்ரத்தில் நிலையாக  வாசம் செயது மகிழ்பவள்.  மன்மதன்  சம்பரன்  எனும் அசுரனை வதம்  செய்து சம்பராசனன் என்ற பெயர் பெற்றவன்.   அவனை  பரமேஸ்வரன் நெற்றிக்கண் தீயினால் சுட்டெரித்த பொது அவனுக்கு புத்துயிர் தந்தவள் அம்பாள்.   சம்பரம் என்றால்  மிகவும் ஸ்ரேஷ்டமானது என்று ஒரு அர்த்தம்.   சம்பராஸன என்று சொல்லும்போது அம்பாள் மிகச் சிறந்த, ஸ்ரேஷ்டமான  காஞ்சி காமகோடி பீடத்தில் அமர்ந்திருப்பவள் என்று அவளை வணங்கச் செய்கிறது.

प्रेमवती कम्पायां स्थेमवती यतिमनस्सु भूमवती ।
सामवती नित्यगिरा सोमवती शिरसि भाति हैमवती ॥ ६२॥

62. Premavathi kampyaam sdhemavathee yathi manassu bhoomavathi,
Saamavathi nithyagiraa somavathi sirasi bhathi Haimavathi.

ப்ரேமவதீ கம்பாயாம் ஸ்தேமவதீ யதிமனஸ்ஸு பூமவதீ |
ஸாமவதீ னித்யகிரா ஸோமவதீ ஶிரஸி பாதி ஹைமவதீ ||62||

இந்த ஸ்லோகத்தில் அம்பாளை மூகர்  அருமையாக வர்ணிக்கிறார்.  ஹிமவான் பெண் ஹைமவதி, காஞ்சியில் தவழும் கம்பாநதியின் மேல் ப்ரியம் கொண்ட பிரேமாவதி,  முனீஸ்வரர்கள் , யோகிகள், யதீந்த்ரர்கள் மனதில் ஸ்திரமாக வாசம் செய்யும்  ஸ்தேமவதி,  பூமியில் சகல செல்வங்களுக்கும் ஐஸ்வர்யங்களும்  அதிபதி பூமவதி, வேதங்களால்  பூஜித்து  பாடப்படுவாள் ஸாமவதி,  சந்திரனை பிறையாக சூடியவள்  சோமவதி என்கிறார். 

कौतुकिना कम्पायां कौसुमचापेन कीलितेनान्तः ।
कुलदैवतेन महता कुड्मलमुद्रां धुनोतु नःप्रतिभा ॥ ६३॥

63. Kouthukinaa Kampaayaam kousuma chapena keelithenaantha,
Kula daivathena mahathaa kudmala mudhram dhunothu na prathibhaa.

கௌதுகினா கம்பாயாம் கௌஸுமசாபேன கீலிதேனான்தஃ |
குலதைவதேன மஹதா குட்மலமுத்ராம் துனோது னஃப்ரதிபா ||63||

அம்பாள் மனசில் என்ன இருக்கிறது?  கம்பாநதி   மேல் அளவில்லாத  ஆசையும்  உத்ஸாகமும் . மன்மதனின்  ஸ்ருங்கார  ரசத்தை  அப்படியே  மனதில் கொண்டு  பரமேஸ்வரன் பால் பாவிக் கிறவள்,  நமது குல தெய்வமான அம்பாளின் மேல் நமது மனதை  அரும்புகள் மலர்வது போல் பரிமளிக்கச் செய்வோம்.

यूना केनापि मिलद्देहा स्वाहासहायतिलकेन ।
सहकारमूलदेशे संविद्रूपा कुटुम्बिनी रमते ॥ ६४॥

64. Yoonaa kenapi milad, dehaa swaahaa sahaya thilakena,
Sahakara moola dese, samvid roopaa kutumbhinee ramathe.

யூனா கேனாபி மிலத்தேஹா ஸ்வாஹாஸஹாயதிலகேன |
ஸஹகாரமூலதேஶே ஸம்வித்ரூபா குடும்பினீ ரமதே ||64||

அம்பாள்  நெற்றிக்கண்ணாக  ஸ்வாஹா எனும் அக்னியை உடையவள்.   ஹோமத்தில், யாகத்தில்  அக்னிக்கு வஸ்துக்களை அற்பணிக்கும்போது அதனால் தான்  ''ஸ்வாஹா ஸ்வாஹா''  என்று அவள் பெயரை மந்திரமாக  சொல்கிறோம்.   காமேஸ்வரன் எனும் பரமேஸ்வரனின் மேல் எல்லையற்ற  விருப்பமுடையவள். அவனுக்காக, அவனை அடைய    காஞ்சியில்   ஏக  ஆம்ரம் எனும் ஒற்றை மாங்கனி மாமரத்தின் அடியில் தவமிருப்பவள். அழகிய பாலா.

कुसुमशरगर्वसम्पत्कोशगृहं भाति काञ्चिदेशगतम् ।
तमस्मिन्कथमपि गोपितमन्तर्मया मनोरत्नम् ॥ ६५॥

65. Kusuma sara garva sampath kosa gruham, bhaathi Kanchi madhya gatham,
Sthapitha masmin kadhamapi gopitha mantharmaya manorathnam.

குஸுமஶரகர்வஸம்பத்கோஶக்றுஹம் பாதி காஞ்சிதேஶகதம் |
ஸ்தாபிதமஸ்மின்கதமபி கோபிதமன்தர்மயா மனோரத்னம் ||65||

இந்த ஸ்லோகத்திலோ மூகர்  காஞ்சிபுர க்ஷேத்ரத்தின் நடுவே அமைந்துள்ள காமகோடி பீடத்தை மன்மதனின்  கர்வத்திற்கு  பொக்கிஷமாக  உவமை சொல்கிறார்.   ஏனென்றால்  அங்கே  காமாக்ஷி இருக்கிறாளே. அவளல்லவோ அந்த பொக்கிஷம். அந்த  ரத்னத்தை  விலை மதிப்பற்ற பொக்கி ஷத்தை என் மனதில் நான் ஜாக்கிரதையாக   ஹ்ருதய  பெட்டகத்துக்குள் வைத்து க் கொண்டேன் என்கிறார். 

दग्धषडध्वारण्यं दरदलितकुसुम्भसम्भृतारुण्यम् ।
कलये नवतारुण्यं कम्पातटसीम्नि किमपि कारुण्यम् ॥ ६६॥

66. Dhagdha shadadwaranyam dhara dalitha kusumba sambhoothaarunyam,
Kalaye nava tharunyam kampa thata seemni kimapi karunyam.

தக்தஷடத்வாரண்யம் தரதலிதகுஸும்பஸம்ப்றுதாருண்யம் |
கலயே னவதாருண்யம் கம்பாதடஸீம்னி கிமபி காருண்யம் ||66||

மிக உயர்ந்த  ஜகத் காரண  தத்வம் இந்த ஸ்லோகத்தில் அடங்கியுள்ளது. காம க்ரோத, மத,  மோக, லோப, மாத்சர்யம் என்ற ஆறு ஈர்ப்புகளை  ஷட்வாரண்யம் என்பார்கள்.  ஆரண்யம் என்றால் காடு..மரங்கள் தாவரங்கள் ஒன்றை ஒட்டி இன்னொன்று  கூடவே வளர்ந்து அடர்ந்த காடாகுமே  அது போல் இந்த ஆறு குணங்கள் மனதை  ஆட்கொள்வதாக உபமானம்.  இன்னொரு உள்ளர்த்தம்,  ஆறு  விஷயங்கள் . அதில் வாக்கு  சம்பந்தப்பட்ட மூன்று  வர்ணம், பதம், மந்த்ரம்.  அர்த்தத்தை சேர்ந்தவை மூன்று  கலா, தத்வம், புவனம் என்பவை. அந்த ஆறு, ஷட்வாக்களால்  ஜகத் உருவாகிறது.. விவரமாக உள்ளே போக வேண்டாம்.  காமாக்ஷி அம்பாள் இந்த ஆறுக்கு, ஷட்வாக்களுக்கு, அப்பாற்பட்ட குங்குமப்பூ நிறக்காரி. கம்பா நதி தீர  கருணாசாகரி  என்கிறார்.

 काञ्चि वर्धमानामतुलां करवाणि पारणामक्ष्णोः ।
आनन्दपाकभेदामरुणिमपरिणामगर्वपल्लविताम् ॥ ६७॥

67. Adhi Kanchi vardhamaanam athulaam karavani paaranaam akshno,
Aananda paka bhedhaam arunima parinaama garva pallavithaam.

அதிகாஞ்சி வர்தமானாமதுலாம் கரவாணி பாரணாமக்ஷ்ணோஃ |
ஆனந்த பாகபேதாமருணிமபரிணாமகர்வபல்லவிதாம் ||67||

அம்பாள், காஞ்சி, கம்பாதீரத்தில்  யௌவன பாலையாக,  அதிரூப சுந்தரியாக, தன்னிகரில் லாதவளாக,   காருண்ய,  மணம் வீசும் மலர்க்  கொடியாக  எனக்கு காட்சி தருகிறாள்.

बाणसृणिपाशकार्मुकपाणिममुं कमपि कामपीठगतम् ।
एणधरकोणचूडं शोणिमपरिपाकभेदमाकलये ॥ ६८॥

68. Bana sruni pasa karmuka kamapi Kama peeta gatham,
Yena dhara kona choodam sonima pari paka bhedhamakalaye.

பாணஸ்றுணிபாஶகார்முகபாணிமமும் கமபி காமபீடகதம் |
ஏணதரகோணசூடம் ஶோணிமபரிபாகபேதமாகலயே ||68||

பூர்ணச்சந்திரனில்  கருப்பாக  இருப்பதை களங்கம் என்பார்கள், முயல் குட்டி, தோசை வார்க்கும் பாட்டி, என்றெல்லாம் சொல்லி  வா வா  என்று கையாட்டி  இடுப்பிலுள்ள குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவது ஒரு வழக்கம்.    சந்திரன் சூடிக்கொண்டிருக்கும் மான்  அது என்கிறார்  மூகர் .   மானைச் சூடிக்கொண்டிருக்கும்  ''மூன்',  சந்திரனை,  தன்னுடைய சிரசில் சூடிக்கொண்டிருப்பவள் அம்பாள். அதுதவிர கரங்களில் புஷ்ப பாணங்கள், அங்குசம், பாசம், கரும்பு தனுசு,  அது தான் கோதண்டம், அதெல்லாவற்றுடனும் காமகோடி பீடத்தில் அமர்ந்து தரிசனம் தருபவளே வணங்குகிறேன். 

किं वा फलति ममान्यौर्बिम्बाधरचुम्बिमन्दहासमुखी ।
सम्बाधकरी तमसामम्बा जागर्ति मनसि कामाक्षी ॥ ६९॥

69. Kim vaa phalathi mamanyai, bimbadara chumbi manda hasa mukhi,
Sambhadhakari thamasaam Ambaa jagarthimanasi Kamakshi.

கிம் வா பலதி மமான்யௌர்பிம்பாதரசும்பிமன்தஹாஸமுகீ |
ஸம்பாதகரீ தமஸாமம்பா ஜாகர்தி மனஸி காமாக்ஷீ ||69||

எனக்கு ஒருவர் தயவும் தேவையில்லை. கோவைக்கனி போன்ற செவ்வதரங்களில்  மனதை மயக்கும் புன்முறுவல், ஆனந்தம் தரும் அருள் பார்வையால்  அஞ்ஞானத்தை  அகற்றுபவள்,  என் இதய பீடத்தை அலங்கரிக்கும்போது எனக்கு வேறு என்ன,  எவரிடம்,   வேண்டும்?

मञ्चे सदाशिवमये परिशिवमयललितपौष्पपर्यङ्के ।
अधिचक्रमध्यमास्ते कामाक्षी नाम किमपि मम भाग्यम् ॥ ७०॥

70. Manche sadaa shiva maye, para shiva maya lalitha poushpa paryange,
Adhi chakra madhyamaasthe Kamakshi naama kimapi mama bhagyam.

மஞ்சே ஸதாஶிவமயே பரிஶிவமயலலிதபௌஷ்பபர்யங்கே |
அதிசக்ரமத்யமாஸ்தே காமாக்ஷீ னாம கிமபி மம பாக்யம் ||70||

லலிதையை, காமாட்சியை உபாசிக்கிறவர்கள்  ஸ்ரீ சக்ர பூஜை செய்பவர்கள். அதன் நடு நாயகமாக இருப்பது தான் சர்வானந்தமய சக்ர பிந்து.   அதி சக்ர மத்யம் என்று மூகர்  அதைத்தான் சொல்கிறார்.  அந்த மஞ்சத்தில்,  காமேஸ்வரர் மஞ்சத்தில், புஷ்ப  மெத்தையில்  அமர்ந்திருக்க அவர் இடது பாகத்தில் அம்பாள் வீற்றிருந்து அருள் பாலிக்கிறாள். அவரை சதாசிவன் எனும் ஆநந்த ஸ்வரூபனாகவும், அந்த கட்டிலின்  நாலு கால்களுமே, ப்ரம்மா,  விஷ்ணு, ருத்ரன் , ஈஸ்வரன்  ஆகியோர்  என்றும்   சொல்வதுண்டு.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...