Tuesday, July 31, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J.K. SIVAN 

                          51   விதியை யார்  வெல்லுவார் ?

ஒருவரைப் போல் மற்றவர் இல்லை.  ஒவ்வொருவர் வாழ்க்கையும் அதே போல்  வித்தியாசமானது.  ஒவ்வொருவர் வாழ்க்கையையும் விதி தான் மாற்றி அமைக்கிறது.  இதை புரிந்து கொண்டவர்கள் அமைதியாக அதை  ஏற்றுக் கொண்டு இறைவனிடம்  பக்தியோடு வேண்டிக்கொண்டு வாழ்கிறார்கள். 


விதி எப்படி நடத்துகிறதோ அப்படியே தான் அனுபவிக்கவேண்டும்.  மாற்றியமைக்க முடியாது.  திருதராசலத்திறன் இட்ட கட்டளையின் படி விதுரன் நேராக இந்திரப்பிரஸ்தம் சென்றான்.  யுதிஷ்டிரனிடம்  திருதராஷ்ட்ரனின்  அழைப்பு பற்றி பேசினான்.
ஜாடையாக  சூதாட்டம் நிகழ வாய்ப்பு பற்றியும் எச்சரித்தான்.

''ஐயோ  என்  தாத்தாமார்களே, உங்களுக்கு ஏன் இந்த சோதனை?   வைசம்பாயன மகரிஷி.  பிறகு என்ன நடந்தது.  சூதாட்ட சூழ்ச்சி. அதன் விளைவு. எங்கு நடந்தது, யார் யார் எல்லாம் இருந்தார்கள்  என்பது பற்றி அறிய ஆவலாக உள்ளது. சொல்லுங்கள்'' என்றான்  ஜனமேஜயன்.

 '' சொல்கிறேன் கேளப்பா''  என்று தொடர்ந்தார் வைசம்பாயன ரிஷி.  

திருதராஷ்ட்ரன் துரியோதனனை தனியே அழைத்து  புத்திமதி சொன்னான்.  உனக்கென்ன  குறை வைத்தேன். சகலமும் இருந்தும் நீ ஏன்  மற்றவனைப் பார்த்து பொறாமைப் படவேண்டும்?.   சூதாட்டம் வேண்டாம்.  அந்த  எண்ணத்தை  நிறுத்து. அதால் அழிவு நேரலாம்''   என்று  எச்சரித்தான். ஒரு தந்தையின் கடமையை செய்யத் தவறவில்லை.

''அப்பா,  எவன்  ஒருவன்  எதிரியின்  வளர்ச்சியைக் கண்டு  துன்பமோ பொறாமையோ  அடையவில்லையோ அவனுக்கு  பாதுகாப்பு கிடையாது.  மயன் கட்டிய அந்த அதிசய மாளிகையில் தரை தண்ணீராக, தண்ணீர்  தரையாக  தெரிந்து  நான் பட்ட அவமானத்தையும், கதவை கண்ணாடி என்றும் கண்ணாடியை  கதவு என்றும் தெரியாமல்  நான் தலையில் முட்டி மோதி, விழுந்ததை எல்லாம்,   திரௌபதி முதலாக  அத்தனை பாண்டவர்களும்  கண்டு   சிரித்து  என் மனம் புண் பட்டதையும்,   வேலைக்காரர்கள் கொடுத்த  துணியை நான்  உடுத்து  நீரிலிருந்து வெளியேறியதும்  என் உயிர் இருக்கும் வரை மறக்க முடியாது.''

 'துரியோதனா,  வரும் பரிசுகளை  நீ  வாங்கி வை''  என்று பொறுப்பை என்னிடம் கொடுத்தான் யுதிஷ்டிரன்.  அப்பப்பா. ஆயிரமாயிரம், யானைகள், குதிரைகள்,  பசுக்கள், மலை மலையாக  வைரங்கள், தங்க  ஆபரணங்கள், ஆயிரம் பதினாயிரம், வீராதி வீரர்கள்,  எண்ணற்ற  ஆயுதங்கள்,  கணக்கற்ற  அழகான  பணிப் பெண்கள்,   வித விதமான  தங்கத்தில் வேய்ந்த வைர வைடூர்ய   கிரீடங்கள், ஆடைகள், வரிசை வரிசையாக தேர்கள்,  என்னால்  பார்க்க கூட முடியாத  அளவுக்கு  எங்கும் நிறைந்திருந்ததை எப்படி  மறப்பேன்.

 எங்கும்  வேத பிராமணர்கள்  கை நிறைய மூட்டை மூட்டையாக  பரிசு பொருட்கள், தானங்கள் பெற்றுக்கொண்டு   போவதை பார்த்தேன். ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு  விமரிசையாக  அன்ன தானம் நடைபெற்றது. அபிஷேகம்  நடத்தி வைத்தது  வியாசர் நாரதர்  போன்ற ரிஷிகள்.  பரசுராமன் வாழ்த்தினான். கிருஷ்ணனே  வெண் சங்கினால்  புண்ய தீர்த்தங்கள் நிரப்பி  யுதிஷ்டி ரனுக்கு அபிஷேகம் செய்வித்தான்.  இதையெல்லாம்  பார்த்து  என்னால்  தாங்க முடியவில்லை,  கண் இருண்டது,  மனம் வெதும்பியது. தலை சுற்றியது''    புலம்பினான் துரியோதனன்.

திருதராஷ்ட்ரன்  மகனைத் தடவிக் கொடுத்து  ''என்  அருமை மகனே,  நீ அவர்களைப்  பார்த்து  பொறாமை படும் நிலையில் நான் உன்னை வைக்கவில்லையே. உனக்கு என்ன குறை இங்கே?    எதற்கு  உன் மனத்தை  வருத்திக் கொள்கிறாய்.  வேண்டாததை எல்லாம்  நினைக்காதே  விடு.  உடனே  வேத பிராமணர்களை  அழைத்து  சப்ததந்து என்ற யாகத்தை நடத்து.  நீயும்  வேண்டியதைப் பெறலாமே'' என்றான்.

''அப்பா, உங்களுக்கு  நான் சொல்லவேண்டியதில்லை.  ஒரு அரசன்  மற்றவன் அவனை விட பலசாலியாக இருப்பதை அனுமதிக்க மாட்டான். மேலும்  அதிருப்தியில் தான் ஒருவன் செழிக்க முடியும். மேலும் மேலும் அடைய வேண்டும் என்ற ஒரு வேகம் தான் ஒருவனை  உயர்த்தும்.  திருப்தி, போதும்,  என்ற மனம் அவனை இருந்த இடத்திலேயே தான் அழுத்திவிடும்.  ஒன்று நான் பாண்டவர்களின் செல்வத்தை பெற வேண்டும். அல்லது செத்து ஒழிய வேண்டும். வேறு வழியே இல்லை' என்றான் துரியோதனன். .

"துரியோதனா , பாண்டவர்களின் செல்வத்தை உனதாக்குக்கிறேன் பார்''  என்றான் சகுனி. 

''திருதராஷ்டிரா  நீ  உடனே யுதிஷ்டிரனை இங்கு வரவழைக்க வேண்டும்.'' என்று சகுனி குறுக்கிட்டான்.

 ''என் சகோதரன் விதுரனை ஒரு வார்த்தை கேட்கவேண்டும். அவன் எனக்கு  எப்போதுமே  நல்லதை தான் சொல்பவன்''

''அப்பா  திரும்பவும் பழையபடியே தான்  பேசுகிறீர்கள்.  விதுரன் பாண்டவ நேசன். நமக்கு எதிராகவே செய்பவன்.

 "துரியோதனா, இதால்  ஒன்று  யுத்தம் வரும். வந்தால்  பாண்டவர்களின் சக்தியை  உன்னால்  தாங்கமுடியாது.  குல நாசம்  ஏற்படும்.  அல்லது  அவர்கள் வழிக்கு போகாதே. இந்த சூதாட்டம் வேண்டாம்''என்றான்  திருதராஷ்டிரன்.

"அப்பா  இந்த  சதுரங்கம் சொக்கட்டான்  எல்லாம்  பழைய  விளையாட்டுகள் தான். முன்னோர்  தான் கண்டு பிடித்தார்கள்.  நானாக  உண்டாக்கவில்லை. சகுனி மாமா  சொல்படி நட. ''

"அப்பா,  விதி உன்னை நடத்துகிறது.என் வார்த்தைக்கு இனி மதிப்பேது''  இந்த  சம்வாதம் நடந்த பின்னரே  திருதராஷ்டிரன்  விதுரனை அழைத்து  இந்த்ரப்ரஸ்தம் அனுப்பினான்.

இந்த்ரப்ரஸ்தத்தில் விதுரனை மரியாதைகளோடு  உபசரித்து வணங்கி  பாண்டவர்கள்  அவன் வந்த சேதியை அறிந்தனர்.

 ''யுதிஷ்டிரா,  திருதராஷ்டிரன் ஒரு புது மாளிகை  கட்டியிருக்கிறான். அது  உனது மாளிகையைப் பார்த்து அதைப்போலவோ  இன்னும்  அழகாகவோ  இருக்கிறதா என்று  நீ  உன் சகோதரர்களோடு  வந்து பார்க்கவேண்டுமாம். உனக்கு பிடித்த சொக்கட்டான் விளையாட்டுக்கும்  ஏற்பாடு  செய்திருக்கிறானாம்.  நீ  தட்டாமல் என்னோடு வரவேண்டும்  என்று  உன்னிடம்  சொல்ல சொன்னான்.'' என்றான் விதுரன்.

''விதுரரே,  நீங்கள் அறியாதது இல்லை.  சூதாட்டத்தில் பணயம் வைத்து ஆடுவது வழக்கம்.  வெற்றி தோல்வி உண்டாகும்போது  கோபம் சண்டை கூட  வரும்.  இது எதற்காக?  அவசியம் இல்லை என்று  எனக்குப் படுகிறது. நீங்கள்  என்ன சொல்கிறீர்களோ அதன்படி நடக்கிறேன். ''

''யுதிஷ்டிரா  நான்  இப்போது ஒரு  தூதுவன்.  இந்த சூதாட்டத்தில்  சில கை தேர்ந்த  சூதாடிகளும் இருப்பார்கள். நீ தான்  முடிவெடுக்க வேண்டும்.''

''யார்  யார் இருக்கிறார்கள்.  துரியோதனன்  சகோதரர்களைத் தவிர?''.

''எனக்குத் தெரிந்து  காந்தார தேச  மன்னன் சகுனி,  மற்றும் சித்ரசேனன். சத்ய வ்ரதன் , புருமித்ரன் , ஜெயன் ஆகியோரும் இருப்பார்கள் என்று தெரிகிறது.  அவர்களில் சகுனி  கை தேர்ந்த சூதாட்டக்காரன்.''

 ''எனக்கு  இதில் விருப்பமில்லை  என்றாலும் என்னை  அழைத்து  போட்டியிட்டால்  நான்  மறுக்க முடியாது.''

முடிவில்  மறுநாள் சகோதரர்களோடு  யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரம் பயணமானான்.

அங்கே  பீஷ்மர் துரோணர், கிருபர்  அனைவரையும் வணங்கி, திருதரஷ்ட்ரனை வணங்கி  இரவு தங்கினர். மறுநாள்  சபா மண்டபத்தில்  போட்டி  தயாராகியது.   போட்டிக்கான விதிகள்  புரிந்து கொள்ளப்பட்டன.  பணயம் வைத்தவர்  தோற்றால் அதை இழப்பார். அதிருஷ்டம் இருப்பவர்  வெற்றி பெறுவார்.  எதிராளியின் பணயம் அவரைச் சேரும்.

"யுதிஷ்டிரா  விளையாட்டில் வெற்றி பெற  போட்டியிடுபவர்கள் எல்லாருமே விழைவர்.  அவரவர்  விளையாடுவதை பொறுத்து வெற்றி அமைகிறது. இதில் என்ன  தவறு.  வெற்றியும் தோல்வியும் சமமாக எடுத்துக்கொள்ளவேண்டும். அவ்வளவே. நீ  விளையாட்டு தெரிந்தவன் வெற்றி பெறலாமே.'' என்றான் சகுனி.

 " சரி மாமா.  போட்டி  ஆரம்பமாகட்டும். நான் யாரோடு விளையாட வேண்டும்.  என்ன  பணயம் வைக்க வேண்டும். ?''

''யுதிஷ்டிரா  எனக்காக  என் மாமன்  சகுனி உன்னோடு  விளையாடுவான்.  நான்  என்னிடம் உள்ள  அனைத்து ஆபரணங்களையும்   பணயமாக வைக்கிறேன்.'' என்றான் துரியோதனன்.

 ''ஒருவனுக்காக  மற்றொருவன் போட்டியில் கலந்து கொள்வது  சரியல்ல. என்றாலும்  நான் ஒப்புக்கொள்கிறேன்'' என்றான்  யுதிஷ்டிரன்.

விதி சிரித்தது.  விதியை யார்  வெல்லுவார் ?

SWAMIJI'S TIME


SWAMIJI'S TIME J.K. SIVAN

LOVE HIM

Let nothing stand between God and your love for Him. Love Him, love Him, love Him; and let the world say what it will. Love is of three sorts — one demands, but gives nothing; the second is exchange; and the third is love without thought of return — love like that of the moth for the light.

"Love is higher than work, than Yoga, than knowledge."
Work is merely a schooling for the doer; it can do no good to others. We must work out our own problem; the prophets only show us how to work. "What you think, you become",
"Extreme love and highest knowledge are one."

But theorising about God will not do; we must love and work. Give up the world and all worldly things, especially while the "plant" is tender. Day and night think of God and think of nothing else as far as possible. The daily necessary thoughts can all be thought through God. Eat to Him, drink to Him, sleep to Him, see Him in all. Talk of God to others; this is most beneficial.

Get the mercy of God and of His greatest children: these are the two chief ways to God. The company of these children of light is very hard to get; five minutes in their company will change a whole life; and if you really want it enough, one will come to you. The presence of those who love God makes a place holy, "such is the glory of the children of the Lord". They are He; and when they speak, their words are scriptures. The place where they have been becomes filled with their vibrations, and those going there feel them and have a tendency to become holy also.

"To such lovers there is no distinction of caste, learning, beauty, birth, wealth, or occupation; because all are His."
Reasoning is limiting something by our own minds. We throw a net and catch something, and then say that we have demonstrated it; but never, never can we catch God in a net.


Love should be unrelated. Even when we love wrongly, it is of the true love, of the true bliss; the power is the same, use it as we may. Its very nature is peace and bliss. The murderer when he kisses his baby forgets for an instant all but love. Give up all self, all egotism s get out of anger, lust, give all to God. "I am not, but Thou art; the old man is all gone, only Thou remainest.""I am Thou." Blame none; if evil comes, know the Lord is playing with you and be glad.

NOSTALGIA



நான் வாங்கிய மனை. J.K. SIVAN ...

நான் செய்த காரியத்துக்கு என்னை அர்ச்சனை செய்யாதவர்கள் கிடையாது. தலை கொழுப்பு. நாலு காசு சம்பாதிக்கிறோம் என்கிற கர்வம். தான்தோன்றி தனம் . சொந்த புத்தியும் கிடையாது. சொல் பேச்சும் கேட்கறதில்லை.

''சிவா, நீ பண்ணது மடத்தனம். மனிஷன் இருப்பானா அங்கே?

நான் பதிலே சொல்லவில்லை. ஒருவேளை எல்லோரும் சொல்வது சரியோ. நான் மடையனோ? அவசர குடுக்கையோ?

''ஒரு வார்த்தை என்கிட்டே கேட்டிருந்தா நான் சொல்லியிருப்பேனோல்லியோ? பஞ்சாபகேசன் ஆதுரமாக என் தலையை தடவினார்.

''இல்லே என் பிரென்ட் சொன்னான். நல்ல இடமா இருக்கு. வாங்கிடுன்னு. வாங்கிட்டேன். இன்னும் முழுசா பணம் கொடுக்கல் லியே. மூன்று இன்ஸ்டால்மெண்ட் லே தறேன்னுதானே சொல்லிருக்கேன். வேணா இந்த முதல் இன்ஸ்டால்மென்டுக்கு தலை முழுகிடுறேன்.

''மறுபடியும் அவசரப்படாதே. வாங்கிறது தான் வாங்கினியே. இடத்தை போய் பார்த்தியா. ?''

''எங்கிருக்குன்னே தெரியாதே''
''பின்னே எப்படி செலக்ட் பண்ணே?''
''என் அத்திம்பேர் சொன்னார். இங்கே எல்லாம் நல்ல இடம் இருக்கு. நிறைய பேர் வந்து பார்த்துட்டு போறா. விலை ஏறினாலும் ஏறும். நீ வாங்கறதா இருந்தா சீக்கிரம் வாங்கிடு ''ன்னு.
''அப்புறம்?''
''என் சொந்தக்காரன் ஒருத்தன் ஏற்கனவே வாங்கி இருக்கான். இன்னும் வீடு கட்டலே . அவனை அவன் ஆபிஸ்லே போய் பார்த்து கேட்டேன்.
என்ன சொன்னான்.?''
''இப்போதைக்கு அங்கே வந்து தங்கி ஆபிஸ் போறது சௌகரியம் இல்லை. ரெண்டு மூன்று மணிநேரம் முன்னாலேயே கிளம்பினா பத்துமணிக்கு ஆபிஸ் போய் சேரலாம். மழைக்காலத்துலே எதுவும் சொல்லமுடியாது.
''நீங்க எதுக்கு வாங்கினேள் ?' என்று அவரை கேட்டேன்.
''ஆபிஸ்லே நாலைஞ்சு பேர் மொத்தமாக விலை பேசி வாங்கினா. ஒரு பிளாட் இருக்குன்னு என் பக்கத்து சீட் காரன் தொளை ச்சான். நான் அவன் கிட்டே ரெண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அவன் பேச்சை தட்டமுடியல்லே. கடனுக்கு தான் கொடுத்து மாசா மாசம் கட்றேன் ''

சரி எல்லோரும் சொல்கிறார்களே என்று என் ''நிலத்தை '' பார்க்க ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்றேன். பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் இறங்கி தெற்கு நோக்கி நடந்தேன். வயல்கள் . சோடா கடை குப்புசாமி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தான் எனக்கு விற்றவர். அவர் சொன்ன அட்ரஸ் தவிர மற்றதெல்லாம் இருந்தது. ரெண்டு மணி நேரத்திற்கு பிறகு, பத்து பன்னிரண்டு பேர் தவறாக அடையாளம் காட்டிய இடம் எல்லாம் அலைந்து குப்புசாமியை ரயில்வே கேட் அருகே சைக்கிளில் நிற்கும்போது பிடித்தேன். அவர் சைக்கிளில் பின்னால் அமர்ந்தேன். மிதித்துக்கொண்டு வயல் வழியே எங்கெங்கெல்லாமோ வளைந்து வளைந்து சென்றார். கொஞ்சம் தெற்கே சென்றால் ஆப்பிரிக்கா வரும்போல் இருந்தது. மனித சஞ்சாரமே இல்லாத வயல்கள் இடையே சைக்கிள் நின்றது.
''இங்கேயா ?''
''இல்லே சைக்கிள் பஞ்சர். கோபாலு வீட்டில் போய் ஒட்டிக்கொண்டு போகலாம். கோபாலு வீடு உச்சி வெயில் வேளையில் கிடைத்து அவன் வந்து பஞ்சர் ஒட்டின பிறகு இருவரும் நடந்தே போனோம். செருப்பு அறுந்தது. அதை ஏற்கனவே ரெண்டு மூன்று தடவை தைத்தாகிவிட்டது. தலையை சுற்றி ஏதோ ஒரு நிலத்தில் விசிறி எறிந்துவிட்டு வெறும் காலில் நடந்தால் எங்கு பார்த்தாலும் நெருஞ்சி முள் காலை பஞ்சர் செய்கிறது. நிறைய நடந்தபிறகு ஒரு இடத்தில் நின்றான் குப்புசாமி. எதிரே விச்ராந்தியாக ரெண்டு மூன்று எருமைகள் ஒரு குட்டையில் குளித்துக்கொண்டிருந்தன.

''அது தான் நான் அடையாளம் சொன்ன அந்த ஒத்தை பனைமரம் தெரியுதா? '' என்றான் குப்புசாமி.
எனக்கு பல பனைமரங்கள் தெரிந்தன.
''எந்த ஒத்தை பனைமரம்?.
'' கருவேல முள் புதர் பக்கத்திலே.''
கிட்டே போன போது வெடுக்கென்று சட்டையை பிடித்து இழுத்தான் குப்புசாமி. கீழே பாக்கமாட்டிங்களா ?''

ஒரு மஞ்சள் கட்டம் போட்ட தோலோடு பளபளவென்று ஒரு நீளமான பாம்பு என்னை லக்ஷியம் செய்யாமல் என்னை கடந்து சென்றதில் என் இதயம் நின்று விடும்போல் ஆகிவிட்டது.

சில வாத்து கூட்டங்கள் ஓட ஒரு இடத்தை காட்டினான். ரெண்டு கருங்கல் நட்டு இருந்தது. வேறு ஒன்றும் வித்யாசமாக இல்லை. இதிலிருந்து ரெண்டாவது பிளாட். நல்ல இடம். உங்களுக்கு அதிர்ஷ்டம் சார்.''

''ஏன் ?'' ஈனஸ்வரமாக கேட்டேன்.
பக்கத்திலே கோவில் வருது. அங்கே பார்க் வருது.''
எல்லாமே மரம் செடிகொடியாக பார்க்காகவே இருந்ததால் தனியாக ஒரு பார்க்கில் எனக்கு நாட்டமில்லை. தூரத்தில் நங்கநல்லூர் பிள்ளையார் கோவில் சின்னதாக தெரிந்தது. அது தான் அந்த ஊர் முதல் கோவில். (இப்போது அதற்கு கும்பாபிஷேகம்)
நான் இருக்கும் இடத்தில் இருந்து மூன்று நாலு கி.மீ. தூரத்தில் மீனம்பாக்கத்திலிருந்து மின்சார ரயில் பீச் நோக்கி ஓடியது. நடுவே எங்கோ சில சிறிய வீடுகளே இருந்தன. தூரத்தில் பல்லாவரம் மலை ஒரு பக்கம். தெற்கே தலையை சுழட்டி பார்த்தேன். திரிசூலம், மலைகள்.

கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்களுக்கு முன் நங்கநல்லூரில் நான் ஓர் பிளாட் ஓனர்.
ஒண்ணரை க்ரௌண்ட் ரெண்டாயிரம் ரூபாய்.. அடேயப்பா? இவ்வளவு விலையா ? எதுக்கு இவ்வளவு ஜாஸ்தி? பணத்துக்கு எங்கே போவது ?''
மேற்கொண்டு அப்புறம் சொல்கிறேன்.



''



LALITHA SAHASRANAMAM

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (238 -248)     J.K. SIVAN

मनुविद्या चन्द्रविद्या
चन्द्रमण्डल-मध्यगा ।
चारुरूपा चारुहासा
चारुचन्द्र-कलाधरा ॥ ५९॥

Manu Vidya Chandra Vidya
 Chandra mandala Madhyaga
Charu Roopa Charu Hasa
 Charu Chandra Kaladhara

மநுவித்யா சந்த்ரவித்யா
சந்த்ரமண்டல மத்யகா |
சாருரூபா சாருஹாஸா
சாருசந்த்ர கலாதரா || 59

चराचर-जगन्नाथा
चक्रराज-निकेतना ।
पार्वती पद्मनयना
पद्मराग-समप्रभा ॥ ६०॥

charaachara jagannadhaa
chakraraja nikethana
parvathi padhmanayana
padmaraaga samapraba

சராசர ஜகந்நாதா
 சக்ரராஜ நிகேதநா |
பார்வதீ பத்மநயநா
பத்மராக ஸமப்ரபா || 60


                           ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (238 - 248)  அர்த்தம்

* 238 *  மநுவித்யா  - மனுவின் வாக்குக்கு  மஹத்வம் அதிகம். அவர்  என்ன சொல்கிறார்  ஸ்ரீ லலிதாம்பிகையை பற்றி  அம்பாள் ஸ்ரீ வித்யா ஸ்வரூபம் என்கிறார்.   

 239 *  சந்த்ர வித்யா
1. விஷ்ணு,  2 சிவன், 3. ப்ரம்மா 4. மனு  5 சந்திரன் 6  குபேரன் 7. லோபாமுத்திரை 8. அகஸ்தியர் 9 நந்திகேஸ்வரன் 10. சூர்யன் 11 ஸ்கந்தன் 12 மன்மதன் 13 சகரன் 14 துர்வாசர்  15 யமன் 

இந்த அகண்ட பிரபஞ்சத்தில்  சந்திரனைச் சுற்றியுள்ள  சந்திர மண்டலத்தில்  நடுநாயகமாக வீற்றிருப்பவள் என்கிறார்.  சந்திரமண்டலம் என்பது   நமது உடலில் சஹஸ்ராரத்தை குறிப்பதாகவும், அதன் நடுவே எனும்போது சக்ரமத்தியில் பிந்து வாக இருப்பதாக ஒரு கருத்து. சந்திரமண்டலம் என்பதே  ஸ்ரீ  சக்ரத்தைத்தான். சந்திரனுக்கு 16 கலைகள். அதனால் தான் பௌர்ணமி அன்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்வது.  சிவன் அக்னியின் சிரசிலும்  அம்பாள் சந்திரனின் சிரசிலும் இருப்பதாக  ஐதீகம். 
  
* 241 * சாருரூபா -     அம்பாள் அதிரூப சௌந்தர்யம் கொண்டவள்.  விவரிக்கமுடியாதவள். 
* 242 *  சாருஹாஸா -  அவள் அங்க லாவண்யத்தை போலவே அவளது புன்னகையும் அழகுவாய்ந்தது.  சந்திரனின் ஒளியோ என திகைக்க வைக்கும்  புன்னகை. அது அவளது பக்தர்கள் அனுபவிக்கும்  திவ்ய ஆனந்தத்தையும்  குறிக்கும்.


* 243 *  சாருசந்த்ர கலாதரா -  அம்பாள் வேறு  அரன் வேறா. இரண்டும் ஒன்றே. ஒன்றே இரண்டும். எனவே அவளும்  பிறை சூடி.  சாரு  என்ற சந்திர ஒளி.  


* 244 * சராசர ஜகந்நாதா  -- 


  அசையும் அசையா  சகல ஜீவராசிகளுக்கும் எஜமானி. தாவர ஜங்கம வஸ்துக்கள் அனைத்தும் அவள் கட்டுப்பாட்டில் அல்லவா?



* 245 *  சக்ரராஜ நிகேதநா -   ஸ்ரீ சக்ர மத்தியில் காண்பவள் ஸ்ரீ லலிதை.  ஸ்ரீ சக்ர ராஜ  ஸிம்ஹாஸனேஸ்வரி
.  சஹஸ்ராரம் தான் ஸ்ரீ சக்ரம். குண்டலினி சஹஸ்ராரத்தை அடையும் போது



 மனம் வசப்படும். சகலமும்  கட்டுப்பாட்டில் வரும். 



* 246 *  




பார்வதீ --  ஹிமகிரி தனயை.  ஹேமலதை .  ஹிமவான் புத்ரி.  சிவபத்னி.  எவ்வளவு அழகான பெயர் அம்பாளுக்கு!


* 247 * 





பத்மநயநா   - அங்கயற்கண்ணி.  அன்றலர்ந்த தாமரை விழியாள் .



* 248 *






பத்மராக 














ஸமப்ரபா  - நவரத்தினங்களில்  பத்மராகம் என்ற ஒரு மாணிக்கக்  கல்  செக்க செவேல் என்று இருக்கும். செந்தாமரைக்கு சாப்பிடலாமா?  பத்மம் என்றாலே  தாமரை தானே.  பிரபை என்றால் ஒளி வட்டம்.  அம்பாளின் குண்டலினி 











சக்தி  அனலென உஷ்ணத்தோடு சஹஸ்ராரத்தில் பிரவேசிப்பதை குறிக்கிறது. செஞ்சுடர் மேனி சிவனை சேர்கிறாள் அம்பாள்.  தான் அவனாகிறாள்.   ப்ரம்மம்.   ப்ரம்மத்திற்கு ஐந்து கார்யங்கள் உண்டு. சிருஷ்டி,  ஸ்திதி,  லயம், திரோதானம்,  அனுக்கிரஹம். 

BHADRACHALA RAMADAS




        கடன் தீர்த்த  ராமன் - J.K. SIVAN 








மற்றவர் பற்றி கவலை இல்லை. நமது நம்பிக்கையை இகழ்வதோ அவமதிப்பதோ, அலட்சியப்படுத்துவதோ  நடக்கட்டும்.  அதைப்பற்றி ஏன் நினைக்கவேண்டும்.  தெருவில் சில மிருகங்கள் சதா ஊளையிடத்தான் செய்யும். திருப்பி நாமுமா ஊளையிடுகிறோம். பொருட்படுத்தவேண்டாம்.  என்றாவது  யாரையாவது கேவலப் படுத்தி இருக்கிறோமா, இல்லையே! 

நாம் வணங்கும் ராமர் வெள்ளைக்காரர்களுக்கு , முஸ்லிம்களுக்கு கூட  நேரில் வந்து காட்சி தந்திருக்கிறார்.  சரித்திரமே இருக்கிறது.

கோபன்னா  ராம பக்தர்.  அவருடைய மாமா  மத்தன்னா.  கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் தானா ஷாவுக்கு  மந்திரி. கோபன்னா மாமாவின் செல்வாக்கால் சுல்தானின் கஜானாவிலிருந்து பணம் எடுத்து  சிதைந்து போயிருந்த பத்ராச்சலம் ராமர் கோவிலை புதுப்பித்தார்.  விஷயமறிந்த தானா ஷா கொதித்தான். உடனே ஆணை இட்டான்.


''கோவில் கட்ட என் பணம் கிடையாது .எனவே  பணத்தை உடனே கட்டு இல்லாவிட்டால் பன்னிரெண்டு வருஷம் ஜெயில் தண்டனை''. நல்லவேளை கோபன்னாவின் தலை தப்பியது. ஆனால் சுல்தானின் கோல்கொண்டா சிறையில் கோபன்னா வாடினார். ராமனையே நினைந்து உருகி பாடினார்.   

கோபன்னாவின் குரல்  கோதண்ட ராமனுக்கு கேட்காமலா போகும்?

ஒருநாள் காலை  தானா ஷாவின் அரண்மனை வாசலில் இருவர்  நின்றனர். ஒருவர் கையில் பெரிய மூட்டை ஒன்று. வாசல் காவலர்கள் சுல்தானின்  அனுமதி வாங்கி உள்ளே அனுப்பினார்கள்.

''யார்  நீங்கள் ? என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீர்கள்?''

''நாங்கள் கோபன்னாவின் பணியாளர்கள்'' 
''ஓ அப்படியா.  என்ன விஷயமாக வந்தீர்கள்?
''அவர் உங்களுக்கு பணம் திருப்பி தரவேண்டுமாம். அதை வட்டியோடு சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம். சரி பார்த்து பெற்றுக்கொண்டு அவரை உடனே சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.

''அப்படியா?  என் கஜானாவிற்கு சேரவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டால் எனக்கு கோபன்னாவை விடுதலை செய்வதில் தயக்கம் இல்லை. எங்கே  பணம்?

ஒரு பெரிய  பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் பையிலிருந்த தங்க மோஹராக்களை வந்த இருவரும் கொட்டினார்கள். அளந்துகொள்ளுங்கள், எண்ணிக் கொள்ளுங்கள்'' என்கிறார்கள்.

ராஜாவின் ஆட்கள்  மொத்த பணத்தை  எண்ணினார்கள்.  வந்த இருவரும் உட்காரக் கூட இல்லை. நின்று கொண்டே இருந்தார்கள்.  எண்ணினதில் முஸ்லீம் ராஜாவுக்குச்  சேர வேண்டிய தொகையை விட அதிகமாகவே ரொக்கம் இருந்தது.  சுல்தானுக்கு பரம சந்தோஷம்.

''சரி,  கோபன்னாவை விடுதலை செய்யுங்கள் நாங்கள் வருகிறோம்'' -  வந்த வீரர்கள் இருவரும் புறப்பட்டு விட்டார்கள்.

சிறையில் வாடி ராமனை வேண்டி  உருகிக்கொண்டிருந்த கோபன்னாவின் முன்னால்  சுல்தானின் ஆட்கள்.

''வாருங்கள் எங்களோடு. சுல்தான் உங்களை அழைத்து வர கட்டளை இட்டிருக்கிறார்.

''ஓஹோ  எனக்கு  சிரச்சேதமா?  அதற்கு தான் தான்  அழைப்பா?  எதுவானால் என்ன. எல்லாம் ராமனின் சித்தம்.''
சுல்தான் முன்னே நின்றார் கோபன்னா '

சுல்தான் முக மலர்ச்சியாக இருந்தான். ''கோபன்னா, நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்பது தெரியாமல் உங்களை அவமானப் படுத்தி விட்டேன்.  எனக்கு சேரவேண்டிய பணம் எல்லாம் அதிகமாகவே திரும்ப தந்து விட்டீர்கள். நீங்கள் தாராளமாக இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உங்களை விடுதலை செய்தாகிவிட்டது. இனி நீங்கள் என் விருந்தாளி''.

கோபன்னாவுக்கு புரியவில்லை. 

 'சுல்தான்,   நானா? செல்வந்தனா?  என்னுடைய ஆட்கள் உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தந்தார்களா?  யார் அவர்கள்?, எனக்கு அப்படி  யாருமே கிடையாதே, என்னிடம் செல்வமே இல்லையே? -  குரல் தழுதழுக்க  தட்டு தடுமாறி  கேட்டார் கோபன்னா.

''என்ன சொல்கிறீர்கள் கோபன்னா.  இரண்டு  வீரர்கள்  ஆஜானுபாகுவாக  பொன்னிற சரீரத்தோடு, காதில் குண்டலம், ஜடாமகுடம் தரித்து, கையில்  நீண்ட வில் வைத்துக் கொண்டு இங்கே என்னை சந்தித்தார்களே, அதில் கொஞ்சம் பெரியவன் நீல நிறத்தில் இருந்தான். மற்றவன் பளபளக்கும் பொன்னிறமாக இருந்தான். இளையவன் தான்  கையில் தங்க மோஹராக்கள் கொண்ட பை  இருந்தது.

''சுல்தான்   சுல்தான்.....என்ன சொல்கிறீர்கள்.  எனக்காக  பணம் கட்டிய  அவர்கள் யார் ?
''என்ன கோபண்ணா  உங்களது  பணியாளர்கள் என்கிறார்கள் தெரியவில்லை என்கிறீர்களே. நான் அவர்கள் பெயரைக் கேட்டேனே.''

கோபன்னாவுக்கு  உடல் நடுங்கியது.  ''சுல்தான்  யாரும் எனக்கு அப்படி இல்லையே.  என்ன பெயர் சொன்னார்கள் ? ஸ்ரீ ராமா  இது என்ன சோதனை 
''கொஞ்சம் இருங்கள்  என்  சேனாபதி அருகில் இருந்தார் அவர் நினைவு வைத்திருப்பவர்.  சேனாபதி கைகாட்டிக்கொண்டு அருகே வந்தான்.  வந்தவர்கள்  என்ன பெயர் சொன்னார்கள் என்று சுல்தான் கேட்க  சேனாபதி கணீர் என்று பதில் சொன்னான்.
' நீல நிறமாக கொஞ்சம் பெரியவராக இருந்தவர் 'ராமோஜி, மற்றவர்  லக்ஷ்மோஜி''  என்று சொன்னதாக  ஞாபகம்.  கோபன்னா சிலையானார்.இரு கைகளும் சிரத்தின் மேல் சென்றது. கண்களில் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் வழிந்தது.  அவரை அவ்வாறு நிற்கவைத்து விட்டு சில விஷயங்கள் தெரிந்து கொள்வோம். 

பத்ராசலம், கம்மம் ஜில்லாவில் ஆந்திராவில்  கோதாவரி நதிக்கரையில் உள்ள தண்டகாரண்ய  பிரதேசம். வனவாசத்தின் போது இங்கேதான்   ராமர்  லக்ஷ்மணர் சீதை,   லக்ஷ்மணன் கட்டிய ஒரு பர்ணசாலையில் வசித்தார்கள்.  அப்போது  தான் ராவணன் வந்து சீதையை கடத்தி சென்றான்.

பக்த பத்ரர் என்று ஒரு ரிஷி. ராமனின் தர்சனம் பெற த்ரேதா யுகத்தில்  தவம் இருந்த மலை அது எனவே,  அதற்கு பத்ராசலம் என்று பெயர்.                                              
                                           
கிட்டத்தட்ட   நானூறு வருஷங்களுக்கு முன்பு இங்கே ஒரு ராமர் கோவில் கட்டப் பட்டது. ராமர் சீதா சிலைகள் ஸ்வயம்பு.  பொக்கல தம்மக்கா  என்ற  ராம பக்தை ஒருவள் ஒரு இரவு கனவில் ''பத்ரகிரி மலையில் சில விக்ரஹங்கள் புதையுண்டு உள்ளன. அவற்றை வெளியே எடுத்து வேண்டியதை செய் '' என்று உத்தரவு பெற்றாள் .

 மறுநாள் விடிந்ததும் அவள் ஓடித்  தேடி அவற்றை  கண்டுபிடித்து ஒரு கூரை வேய்ந்து சிறிய கோவில் ஒன்றை ஸ்தாபித்தாள்.  காட்டைத்  திருத்தி வழி செய்து தினம் அங்கு சென்று   பூஜை செய்து வந்தாள் .

எங்கே ராமரை சிலையாக அவள் வழிபட்டாளோ , அங்கேதான் ராமர் சீதா, லக்ஷ்மணனோடு த்ரேதா யுகத்தில் வாசம் செய்தனர். அங்கே தான் பர்ணசாலை கட்டப்பட்டது.  பத்ராசலத்லிருந்து  35 கிமீ தூரத்தில் இந்த பர்ணசாலை இருக்கும் இடத்தை த்ரேதா யுகத்தில்  தேர்ந்தெடுத்தவர் அகஸ்தியர்.  ரெண்டு கி.மீ தூரத்தில் ஜடாயு பாகா என்கிற இடத்தில் தான் ஜடாயு ராவணனோடு சண்டையிட்டு சிறகு வெட்டப் பட்டு குற்றுயிரோடு  ராமனுக்கு காத்திருந்த இடம். ஜடாயு சொல்லி தான் ராமனுக்கு ராவண சந்நியாசி சீதையை கடத்தியது தெரிந்தது.

தும்முகூடெம்  என்று ஒரு இடம்.  இங்கே தான்  பதினாலாயிரம் ராக்ஷஸர்களை கர தூஷணர்க
ளோடு ராம லக்ஷ்மணர்கள் கொன்றார்கள்.  அந்த ராக்ஷஸர்களின்  மலை போன்ற சாம்பலில்  உருவானது இந்த தும்முகூடம்.  இங்கே ராமனை  ஆத்ம ராமன் என்று வழிபடுகிறோம்.

ஐந்து கி.மீ தூரத்தில்  சில வெந்நீர்  ஊற்றுக்கள் இருக்கிறது. குண்டாலா  கிராமம்  என்று அதற்குப் பெயர்.  குளிர் காலத்தில் ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வரர்கள்  சூடாக ஸ்நானம் செய்த வெந்நீர் ஊற்றுகள்.

மீண்டும் சுல்தான் அரண்மனையில்  கோபன்னாவிடம் செல்வோம்.


சுல்தான் முன்பு கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய  இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி  வணங்கியவாறு சிலையாக நின்ற  கோபன்னா  தனக்காக பணம் கொண்டு வந்து கடனைத்  தீர்த்தவர்கள்  ராம லக்ஷ்மணர்களே  என்று புரிந்து கொள்ள  வெகு நேரமாக வில்லை. 

தானா ஷாவும் அவர் வழிபட்ட  தெய்வமே  தனக்கு முன் காட்சியளித்தவர்கள் என்று  புரிந்து கொண்டு ஆச்சர்யப்பட்டான்.  அவன் கோபன்னாவை பல்லக்கில் ஏற்றி  பத்ராசலம் அனுப்ப,   அவர் அங்கேயே  தங்கி ''ராமதாசனாக'' சேவை செய்து  வாழ்ந்தார். ராமர் கொடுத்த தங்க மோஹராக்கள் சில இன்னும் அங்கே இருக்கிறதாம். கண்ணாடி பெட்டகத்தில் சில காசுகள் பார்த்தேன். 

பத்ராசல  ராமதாஸ்  தெலுங்கு  பாடல்கள் மனதை உருக்கக்கூடியவை. தெலுங்கு தெரியவேண்டும் என்பது தேவையில்லை.  பக்தி பாவம் ஒன்றே போதும்.  பாலமுரளி கிருஷ்ணா குரலில் நிறைய கேட்டு அனுபவித்திருக்கிறேன். ஒரு சில பாடல்களை கற்றுக்கொண்டும்  காமா சோமா என்று  பாடுவேன். please click the following link to enjoy Balamuralikrishna's Bhava poorva rendering of Baktha Badrachala Ramadas krithi ''Ye Theeruga nanu.."''https://youtu.be/2EUysga8pMQhttps://youtu.be/2EUysga8pMQ

ARUPATHTHU MOOVAR







அறுபத்து மூவர்   J.K. SIVAN 
ஆனாய  நாயனார் 


   ''அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்'' 

சாம வேதம் என்றால் என்ன என்று எடுத்துரைத்த ஸ்தலம், ஆலயம் ஒன்று இருக்கிறது.  அரசாங்கமோ,  மற்றும் தனவான்களோ கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால்  என்ன. நாமே ஒன்று சேர்ந்து எழுப்புவோம் என்று சில பக்தர்களின் முயற்சியால் அந்த ஆலயம் உருவானதா, உருவாகிறதா?.   இப்படி தேனீ போல் உழைத்து கோவிலை வளரச்செய்யும்  இரு நபர்கள் பெயர்கள் : ஸ்ரீ  R. Chandrasekar, 37/2, Third Main Road, Gandhinagar, Adyar, Chennai-600020. (Ph: 24416336) and Kittu Josyar, Thirumangalam, Lalgudi-621703. (Ph: 2541020). 

திருச்சி  லால்குடி  பெருவழியில்  3 கி.மீ.  வடக்கே உள்ள சிவன் கோவில் அது. ராஜகோபுரம் தலை தூக்கிவிட்டது.  அந்த கிராமத்தின் பெயர்  திருமங்கலம், நல்ல பெயர்.  மழ நாடு. சிவன் அங்கே சாமவேதீஸ்வரர்.  எண்ணற்ற பக்தர்கள் மஹான்கள் தரிசித்த ஆலயம். ரிஷி  சாய் முனி  சாமவேதத்தை விளக்கி பதம் உரைத்த ஊர். கோவிலில் உள்ள கல்வெட்டில் பரசுராமேஸ்வரம் என்று இதற்கு பெயர் என்று தெரிகிறது.  பரசுராமனின் பாவங்கள் விலகிய இடம்.  லக்ஷ்மி  சிவனை உபாசித்த  ஸ்தலம். பலாமரம் ஸ்தல விருக்ஷம். சிற்றாறுகள் பொழில்கள் சூழ்ந்த இயற்கை வளம் மிக்க அமைதியான கிராமம். மூன்று பிராஹாரங்கள். வசந்த வாகன மண்டபங்கள்.  200  ஏக்கரா நிலம் கொண்ட ஆலயம்.  மரத்தேர் செப்பம் செய்தாகிவிட்டதா? அப்பர் சேக்கிழார் ஆகியோர் தரிசித்த சிவன்.   இனிமேல் தான் விஷயத்துக்கு வருகிறேன்.  இது சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக கோவிலாக இருக்க இன்னொரு முக்கிய காரணம் இங்கே ஒரு நாயனார் பிறந்து வாழ்ந்தார்.  யாதவ குலத்தவரான ஆனாய நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். 

பலவிஷயங்களில்  ஆனாயர்  கிருஷ்ணனை போலவே இருக்கிறார்.  யாதவர். பசுக்களை மேய்ப்பவர். புல்லாங்குழலில் இனிய  மதுர கானம் புரிந்தவர். அசையும்  அசையா சகல ஜீவன்களையும்  ஜீவநாதத்தால் கவர்ந்த கலியுக கிருஷ்ணன். பட்டை பட்டையாக திருநீறணிந்து ருத்ராக்ஷமாலைகளோடு காணும்  சிவ பக்தர்.

விடிகாலை விடிந்தவுடனேயே  பசுக்கள், கன்றுகள்  ரெடியாக  நாயனாருக்கு காத்திருக்கும்.  அவருடன் மேய்ச்சல் காடுகளுக்கு சென்று  பொழுதுசாய்ந்து  அஸ்தமன நேரத்தில் அவற்றோடு திரும்புவார். அதுவரை அவரது நேரம்  சிவனை  நினைந்து பாடுவதிலேயே கழிந்து விடும். 

வழக்கமான  ஒரு கொன்றை மரம் அவரிடம் ஒரு புல்லாங்குழல் இணைபிரியாமல் இடுப்பிலே இருக்கும். அதில் கான வெள்ளம் காட்டை நிரப்பும்.  காந்தத்தால் கவரப்பட்ட  இரும்பு துகள்களைப் போல  பக்ஷிகள், மிருகங்கள், சகல ஜீவராசிகளும்  மயங்கி அவரருகில் வந்து மெய்ம்மறந்து நிற்கும்.  இசையின்பத்தில் மூழ்கும்.

இப்படியே  நாட்கள் நகர்ந்தது. இசையும் தொடர்ந்தது. ஒரு நாள்  பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுதது மந்திரத்தை அழகாக  சிவநாம சுகத்தில் புல்லாங்குழல் ஒலித்தது.  சகல ஜீவராசிகளும் மயங்கி சுகானுபவம் பெற்றன.  நீர் குடிக்க மறந்த,  உண்ண  மறந்து நின்றன.  எதிரி என்ற நினைப்பே இல்லாமல் அருகருகே  புலியும் மானும்  தலையசைத்து  ரசித்தன.பயமே இல்லாமல் பாம்பின் நடனத்துக்கு தவளை தாளம் போட்டது.  நேரம்  வந்துவிட்டது  ஆனாயருக்கு,  என்பதால்,  சிவனே உமாசகிதம்  அவரை அணுகி  அணைத்து  கைலாசம் கூட்டி சென்றான்.

இந்த நாயனாரை  வேணுகோபாலன் மாதிரி சிலை வடித்து  கோயிலில் வழிபடுகிறார்கள் சிவபக்தர்கள் என்பதால்  இவரை  ஆனந்த கிருஷ்ணனா  ஆனாயநாயனாரா என்று  சட்டென்று அடையாளம் காணமுடியாது. தூய பக்திக்கு, இறைஅன்பை  நாதோபாஸனை மூலம் பெற்றவர்  ஆனாய நாயனார்.

Monday, July 30, 2018

ORU ARPUDHA GNANI


ஒரு அற்புத ஞானி J.K. SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள்

6 ''என் பிள்ளை இவன்''

நான் எனது என்பதே ஒரு மைல் தூரத்துக்கு இருக்கக்கூடாது என்று எல்லோருக்கும் போதிக்கும் சில காவிகள் தங்களது படம், பெருமை, கடவுள் சக்தி என்று பீற்றிக்கொள்ள பத்திரிகை, வெளிநாட்டு பயணம், பணம், மற்றும் மீடியாவை தேடும் காலத்தில், இப்படியும் ஒருவரா என்று வியக்க வைக்கிறார் சேஷாத்திரி ஸ்வாமிகள். எவருமே அருகில் வரக்கூடாது. சொந்தம் கொண்டாட கூடாது. எங்கும் ஒரு இடத்தில் நிலைத்திருக்க மாட்டேன். வசதி வேண்டாம் என்று இருந்தவர். அவரது வாழ்க்கை அசாத்தியமானது. உண்மையான காமாக்ஷி ஸ்வரூபம். சர்வ மந்த்ர தவ சக்தி உடைய ப்ரம்ம ஞானி.

'' எதற்கு நெற்றி நிறைய குங்குமத்தை அப்பிக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று யாரோ ஒரு பக்தர் கேட்டார் ஸ்வாமிகளிடம்.

''அசடே, நான் யாரா டா? தெரியலே உனக்கு. உன் அம்மாடா . சாக்ஷாத் பார்வதி தேவி'' என்பார் சேஷாத்திரி ஸ்வாமிகள்.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் வெங்கடாச்சல முதலியார். அதிகாலையிலேயே எழுந்து சிவ நாமங்களை உச்சரித்துக் கொண்டே சிவகங்கை குளத்துக்கு நடந்து சென்று அங்கே ஸ்நானம் செய்து அன்றாட நித்யானுஷ்டானங்களை முடிப்பது அவர் வழக்கம். குளத்துக்கு எதிரே தான் பழைய ஆயிரங்கால் மண்டபம்.

ஒருநாள் இப்படி குளத்தில் ஸ்நானம் செயது கொண்டிருந்த போது மண்டபத்தில் ஏதோ சப்தம். காலை வேளையில் இங்கென்ன சப்தம்? முதலியார் சுற்று முற்றும் பார்த்தார்.

குளத்தங்கரையில் முதலியார் ஈர வஸ்திரங்களை சுற்றியபடியே மண்டபத்தை அடைந்தார். அங்கே ஒரு பக்கத்தில் சில சிறுவர்கள் கையில் கற்கள் வைத்துக்கொண்டு அங்கிருந்து மண்டபத்தின் ஒரு மூலையிலிருந்த பாதாள லிங்க கோயிலுக்குள் வீசிக்கொண்டி ருந்தார்கள்.

சுற்றி முற்றும் பார்த்த முதலியார் பாதாள லிங்க கோயிலுக்குள் எட்டிப் பார்த்தார். அதிலிருந்து ''ஹா ஹா'' என்று இடி முழக்கம்போல சிரித்துக் கொண்டு சேஷாத்திரி ஸ்வாமிகள் வெளியே வந்தார்.

வந்தவர் கையில் ஒரு குச்சி வைத்துக் கொண்டிருந்ததால் அதால் அந்த சிறுவர்களை ஓட ஓட விரட்டினார். சிறுவர்கள் அவரை தான் தாக்கிக்கொண்டிருந்தார்கள்.

பிறகு முதலியாரிடம் வந்தார். ''வா என்னோடு, என் பிள்ளையைப் பார்த்திருக்கியா, வா காட்றேன் ?''

''என்ன சாமி இது ? உங்களுக்கு ஏது சாமி புள்ளை ? கல்யாணமாகாத ஒத்தை கட்டை நீங்க '' முதலியார் சிரித்தார்.

ஸ்வாமிகள் முதலியாரின் கைகளை பிடித்து வலுவாக தர தர வென்று இழுத்துக் கொண்டு அந்த இருட்டு பாதாள லிங்க கோவிலுள் சிறிய படிகளில் நடந்தார்.

''எதற்காக இவர் என்னை வேகவேகமாக இப்படி இழுத்துக் கொண்டு இந்த குகையில் இறங்குகிறார். என்ன விளையாட்டு இது?''

முதலியாருக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னவென்று தான் பார்க்கலாமே. ஏதோ காரணம் இல்லாமலா இருக்கும்?

''லிங்கத்துக்கு பின்னாலே பார் ''

ஒரு தலை தெரிந்தது.

என்ன ஆச்சர்யம்! ஒரு சிறு பிள்ளை பாதாள லிங்கத்துக்கு பின்னால் அமர்ந்தவாறு தவத்தில் ஆழ்ந்திருந்தான்.

யார் இவன்? இதுவரை பார்த்ததில்லையே?'' முதலியார் வியந்தார்.

''இது தான் என் குழந்தை! நன்னா பார்!. ஸ்கந்தன் இவன். என் பிள்ளை'. இனிமே நீ பார்த்துக்கோ '' என்று சொல்லிக்கொண்டே ஸ்வாமிகள் வெளியே ஓடிவிட்டார்.

முதலியார் அந்த சிறுவனைப் பார்த்தார். கண்கள் மூடியிருந்தது. உடல் கற்சிலையாக அசைவற்று இருந்தது. கால்களை மடக்கி அமர்ந்திருந்தான். உடம்பெல்லாம் என்னன்னவோ வித பூச்சிகள். அவனது துடைகளை பூச்சிகள் அரித்து சில அங்குலங்கள் ஆழமாக துளையாக்கி அதிலிருந்து ரத்தம் பீறிட அவற்றை உண்டு கொண்டு எண்ணற்ற ஜந்துக்கள்.

இவன் யார் எப்படி இதற்குள் வந்தான்? கர்ப கிரஹத்தில் எப்படி நான் நுழைந்து அவனை அணுகுவது ?

அதிர்ச்சி அடைந்த முதலியார் இருட்டிலிருந்து படியேறி வெளியே வேகமாக வந்தார். கண்ணில் பட்ட சிலரை அழைத்து வந்தார். எல்லோருமாக அந்த சிறுவனை அப்படியே தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவனுக்கு அப்போதும் உலக நினைவே இல்லை.

அந்த சிறுவனே பிற்காலத்தில் ரமண மஹரிஷியாக உலகமே போற்ற திருவண்ணாமலைக்கு தனிச் சிறப்பு வாங்கித் தந்த மஹான்.

எப்படி சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கு இந்த பாதாள குகையில் சிவலிங்கத்திற்கு பின்னால் இருட்டில் அமர்ந்திருந்த ரமணனை தெரிந்தது?

அவனை துன்புறுத்திய சிறுவர்களை அடித்து துரத்தி அவனைக் காத்து, முதலியாரைப் பிடித்து அவர் பொறுப்பில் ரமணனை விட்டு, வெளியே கொணரச் செய்த தாயன்பை எந்த வார்த்தையால் நான் விளக்குவேன்?
-
ஓஹோ.. ''நான் தான் உனது அம்மாடா, பார்வதி'' என்று சொன்னது இந்த அர்த்தத்தில் தானா??

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...