Monday, July 30, 2018

lalitha sahasranamam

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (232 -237)   J.K. SIVAN
`
महेश्वर-महाकल्प-
महाताण्डव-साक्षिणी ।
महाकामेश-महिषी
महात्रिपुर-सुन्दरी ॥ ५७॥


Maheswara Mahakalpa
Maha Thandava Sakshinee
Maha Kaamesa Mahishee
Maha Thripurasundari 

மஹேச்வர மஹாகல்ப
மஹாதாண்டவ ஸாக்ஷிணீ |
மஹாகாமேச மஹிஷீ
மஹாத்ரிபுரஸுந்தரீ || 57

 चतुःषष्ट्युपचाराढ्या
चतुःषष्टिकलामयी ।
महाचतुः -षष्टिकोटि-
योगिनी-गणसेविता ॥ ५८॥

Chatustatyupacharadya
Chathu sashti kala mayi
Maha Chathusashti kodi
yogini gana sevitha

சதுஷ்ஷஷ்ட் யுபசாராட்யா
சதுஷ்ஷஷ்டி கலாமயீ |
மஹாசதுஷ்ஷஷ்டி கோடி
யோகிநீ கணஸேவிதா || 58


  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (232 - 237 )  அர்த்தம்


* 232 *மஹேச்வர மஹாகல்ப  மஹா  தாண்டவ சாக்ஷிணே. --  ஊழித்தாண்டவம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  இந்த யுக முடிவில்  பிரளயம் தோன்றி எல்லாம் அழிந்து மீண்டும் புனருத்தாரணம், புது யுகம் பிறக்கும். அந்த நேரத்தில் அதை விளைவிப்பது ஈஸ்வரனின் சங்கல்பம். அந்த நேரத்தில் அவன் அருகே இருப்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை மட்டுமே.  பிரபஞ்சத்தில் சிவனும் சக்தியுமன்றி வேறெதுவும் இல்லாத நிலை அது.  எல்லாமே  சிவனும் ஐக்கியமாகி மீண்டும் துவங்கும் நேரம். அம்பாள் காலராத்ரி என்று ஒரு பெயர் கொண்டவள்.

* 233 *  மஹாகாமேச மஹிஷீ -  சர்வமும்  மீண்டும் புத்துயிர் பெற உதவுபவள்  காமேஸ்வரி,  பரமேஸ்வர காமேஸ்வர பத்னி.

* 234 * மஹா த்ரிபுரஸுந்தரீ -   முப்புரங்களிலும் அவளைப்போல கொள்ளை அழகு கொண்ட  அதி ரூப சுந்தரி யார் ?  காயத்ரி  மற்றும்  64  கலைஞான எந்த ரூபத்திலும் மிளிரும்  ஞான சுந்தரி. அவளை  அறுபத்து நாலு உபச்சாரங்களோடு  வழிபடுகிறோம். பூக்களை அர்ச்சிப்பது, வளையல் அணிவிப்பது, விசிறுவது,வாசனாதி திரவியங்களை அளிப்பது, விதவிதமான நைவேத்தியங்களை அர்பணிப்பது  போன்றவை.  ஷோடசோபசாரம் என்று பதினாறு தெரியும். இது  64 வகை உபச்சாரங்களோடு பூஜிப்பது. அம்பாள் மனம் குளிரவேண்டாமா?

* 235 * சதுஷ்ஷஷ்ட் யுபசாராட்யா -  அம்பாள்  64 உபச்சாரங்களோடு வழிபடவேண்டியவள்.

* 236*  சதுஷ்ஷஷ்டி கலாமயீ -  அறுபத்துநான்கு என்பது ஒரு விசேஷ எண். அம்பாள் ஸ்ரீ லலிதை  64 வித  தந்த்ர சாஸ்திரம் சொல்லும் கலைகளின்  ரூபம் கொண்டவள்.  பஞ்சதசி சொல்லும் மந்திரங்களில் இந்த  கலைகள் பற்றியும் வரும்.


64  கலைகள் என்னவா?  அது இவை தான். 1 கீதம், 2. வாத்தியம், 3  நிருத்யம்,  4. நாட்யம், 5. ஆலேக்யம் .6.விசேஷக சேத்யம். 7. தண்டூல குஸும பலிவிகாரா,8,  புஷ்பாஸ்தரணம்  9. தசாநா வாசனங்காரகா-கர்மா, 10. மணி பூமிகா கர்மா, 11 சயன ரசனம் 12.  உதக வாத்யம்  13  உதக கடம் , 14. சித்ர யோகா,  15. மால்ய கிரந்தன விகல்பா, 16, கேஸாசேகரா பீடயோஜனம்  17 நேபத்ய  யோகா  
18. கர்ண பத்ர பங்கா 19. கந்தயுக்தி 20. பூஷணயோஜனம்  21. இந்த்ரஜாலம் 




22 கௌசுமாரா யோகம் 23 ஹஸ்தலாகவம்  24 சித்ர சாகாபூப பக்ஷ்ய விகார க்ரியா 25.  பானகர சராகாசவ யோஜனம்   




 26.சூசி வாபகர்மா 27.வீணா டமருக சூத்ர கிரீடா, 28. ப்ரஹெலிகா 29.ப்ரதிமா 30. துர்வசகயோகா 31. புஸ்தகவாசனம்  32 நாடகாக்யாயிக தர்சனம் 33 காவ்ய ஸமஸ்யாபுராணம்   








34 பட்டிகாவேத்ரபாண  விகல்பா 35 தர்க்கு கர்மாணி  36 தக்ஷணம், 37. வாஸ்து வித்யா,  38 ரூப்ய ரத்ன பரிக்ஷா 39 தாது வாதம் 40 மணிராக ஞானம்  41 ஆகார ஞானம் 42 வ்ருக்ஸாயுர்வேத  யோகம்  43 மேஸ குக்குட லாவக யுத்தவிதி  











 44  சுகசாரிக ப்ரலாபனம்  45 உத்ஸாடனம்  46 கேச மார்ஜன கௌசலம் 47 அக்ஷர முஷ்டிகாக தனம் 48 ம்லேச்சிதக விகல்பா  49 தேசபாஷா ஞானம் 50. புஷ்ப சகதிகா நிமித்த ஞானம் 51 யந்த்ரமாத்ரிகா  52  தாரண மாத்ரிகா  53 சம்பாத்தியம் 54 மானசி காவ்ய க்ரியா 55  க்ரியா விகல்பா  56  சலிதகயோகம் 














 57 அபிதான கோசச்சந்தோ 

 ஞானம்.  58. வஸ்திர கோபனானி  59. த்யுத விசேஷம் 60. ஆகர்ஷண கிரீடா  61. பாலகிரீடன கானி  62. வைணாயி கினாம் வித்யானாம் நானம்  63.வைஜயகீனாம்  64 வித்யானாம்  ஞானம். 



ஒரு விஷயம். இந்த  64ம்  ஆளுக்கு ஆள்  மாறுகிறது என்பது ஞாபகம் இருக்கட்டும்.  தமிழில் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்  என்று கம்பர் சொல்லும்போது அந்த 64   கொஞ்சம் வேறுபடும்,  

* 237 *  மஹாசதுஷ்ஷஷ்டி கோடி கண சேவிதா -  ஒருவரிருவர் அல்ல.  64 கோடி யோகினி கணங்கள் ஒன்பது விதமான சக்ரங்களில் அம்பாளை வழிபடுகிறார்கள்.  ஸ்ரீ சக்ரத்தில் எட்டு  மாத்ருகா தேவிகள், அஷ்ட மாதா என்று  பெயர்.  ப்ராஹ்மி, மாஹேஸ்வரி, கௌமாரி,  வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டா,  மஹாலக்ஷ்மி என்று நாமங்கள் அவர்களுக்கு. இந்த எட்டு பேருக்கும்  எட்டு உதவியாளர்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும்  ஒரு கோடி  யோகினிகள்.  இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தை அனுகிரஹிக்க அம்பாளின்   அஎட்டு ஆவரண  அ ர்ரேஞ்ஜ்மென்ட் இது. ஒன்பாவது ஆவரணத்தை லலிதாம்பிகையே  நேரடியாக  நிர்வகிக்கிறாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...