Tuesday, July 17, 2018

LALITHA SAHASRANAMAM




ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (126 - 143)  ஜே.கே. சிவன் 


शाङ्करी, श्रीकरी, साध्वी, शरच्चन्द्रनिभानना ।
शातोदरी, शान्तिमती, निराधारा, निरञ्जना ॥ 43 ॥

சாங்கரீ ஸ்ரீகரீ ஸாத்வீ சரச்சந்த்ர நிபாநநா |
சாதோதரீ சாந்திமதீ நிராதாரா நிரஞ்ஜநா || 43
निर्लेपा, निर्मला, नित्या, निराकारा, निराकुला ।
निर्गुणा, निष्कला, शान्ता, निष्कामा, निरुपप्लवा ॥ 44 ॥

Nirpepa nirmala nitya nirakara nirakula

நிர்லேபா நிர்மலா நித்யா நிராகாரா நிராகுலா |
நிர்குணா நிஷ்கலா
சாந்தா நிஷ்காமா நிருபப்லவா || 44

           ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம  விளக்கம்: 


* 126 * சாங்கரீ -    சங்கரனின் பத்னி. சங்கரனான சங்கரி. சம் என்றால் சந்தோஷம். கரி என்றால்  செய்பவள். அதாவது அளிப்பவள்.  சிவனும்  உமையும் வேறல்ல. அம்மையும் அப்பனும் ஆனவர்கள்.

தூத்துக்குடியில் 
இருக்கும்போது  பாகம்பிரியாள் என்ற அம்பாளை அனுதினமும் தரிசிப்பேன். ஆனந்தமாக இருக்கும்.

*127*  
ஸ்ரீகரீ  -- ஸ்ரீ  என்றால் லட்சுமி. செல்வம். அளவற்ற செல்வங்களை சந்தோஷத்தை வாரி வழங்குபவள் அம்பாள்.செல்வம் இங்கே அருட்செல்வம் பொருட்செல்வம் இரண்டையும் தருபவள் என்று பொருள். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை. அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை அல்லவா?  ஈருலகும் நாம் அனுபவிக்க செய்பவள்.  அளவற்ற இச்செல்வங்கள் பெற்றவனே லக்ஷ்மிபதி. 

* 128 *  

ஸாத்வீ --   கணவனோடு என்றும்  இணைபிரியால், சிவபக்தியொரு ஓம் நமசிவாய மந்த்ர ஸ்வரூபமாக இருப்பவள். 

*129 * 

சரச்சந்த்ர நிபாநநா    --  வசந்தகால  அக்டோபர் பாதிக்குமேல் சந்திரன் போன்ற அழகிய வதனம் கொண்டவள் ஸ்ரீ லலிதாம்பாள் என்கிறார் ஹயக்ரீவர்.
-  அக்டோபர் நடுவிலிருந்து, நவம்பர் , டிசம்பர் முற்பாதி வரை  சரத்காலம்.  மழை கொட்டோகொட்டு என்று சென்னையில் தெருவெல்லாம் தெப்பம் விடும் காலம்.அம்பாள் நிறைய மழை தரட்டும். மேகங்கள் இன்றி வானம் துல்லியமாக இருக்கும். சந்திரன் முழுசாக களங்கமின்றி தெரிவான். அப்படிப்பட்ட முகம் அம்பாளுக்கு.

* 130 * 


சாதோதரீ - இடையே இல்லாதவள்.  கொடி இடையாள் . காமகலா என்னும் மெல்லிய நுண்ணிய ஸ்வரூபம் 

* 131 *

சாந்திமதீ -   அமைதியே உருவமானவள்.  ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஏன் சொல்கிறோம். எங்கும் எதிலும் மனம் சஞ்சலம் அடையக்கூடாது. அமைதியினால் தான் நிம்மதி பெறுகிறோம். அம்பாள் நமக்கு எது தேவை என அறிந்து அதுவே ஆனவள்.  பக்தர்கள் தவறை எல்லாம் புன்னகையோடு பொறுப்பவள். 


 அம்மா  குழந்தை ரொம்ப விஷமம் பண்ணினால்  தான் ஒரு தட்டு தட்டுவாள்.  தவறுக ளை திருத்த  ரெண்டு டீச்சர்கள்  இருக்கிறார்களே. அஸ்வாரூடதேவி, வராஹி தேவி உபாங்கங்கள். இனி வரும் நாமங்களில் அம்பாள் எப்படி நிர்குணமாக இருக்கிறாள், அருவமாக  என்று அறிவோம். 

* 132 * 
நிராதாரா -  உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு பிடிப்பு, ஆதாரம் தேவை. அம்பாளுக்கு எந்த  ஆதாரமும் தேவையற்றவள் என ஒரு நாமம்.  முடிவில்லாதது அழியாதது என்கிறது சாண்டோக்யஉபநிஷத்

 (VII.24.1) ஆரம்பம் முடிவு இல்லாத ஒன்றுக்கு எது ஆதாரம்?



* 133 *  
நிரஞ்ஜநா  -   அஞ்சனா:  அவித்யா, அஞ்ஞானம்.    அம்பாள்  பூர்ண  ப்ரம்ம ஞான உரு. குற்றங்குறை அற்றவள். மாசு மரு  இல்லாத ஸ்ரீ லலிதாம்பாள்.  அஞ்சனம் என்றால் மை என்றும் ஒரு அர்த்தம். மை தீட்டுவதே அழகு சேர்க்க. அழகுக்கு எதற்கு மை?  அம்பாள் அதனால் தான் நிர் -அஞ்சனா. நிஷ்களங்கமானவள்.

* 134 * 
நிர்லேபா - பற்றுதல் ஏதும் இல்லாதவள்.  ஒட்டு உறவு மூலம் தான் பற்றுதல் வருவது. கர்மம், பந்தம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவள் அம்பாள். அவள்  பந்தமும் பாசமும் பக்தர்களிடம் மட்டுமே. 



* 135 * 
நிர்மலா  
-  அசுத்தம் நெருங்காதவள். பரிசுத்தமானவள். மலம் இங்கு  ஆணவமலம், கன்மமலம், மாயாமலம்.  இதனால் தான் நாம் சம்சார பந்தத்தில் சிக்கி சுழன்று, வாடி வதங்குகிறோம்.

* 136 * 
 நித்யா -  சாஸ்வதமானவள். நிலைத்து நின்று அருளுபவள். அழிவற்றவள்.


* 137 *
நிராகாரா - தனக்கென ஒரு  உருவமற்றவள்.  பக்தர்கள் வேண்டும் நாம ரூபத்தில் தெரிபவள். நிர்குணப்ரம்மம்.


* 138 * 
நிராகுலா -   மனதில் சஞ்சலம், சந்தேகம் இருந்தால் அடைய முடியாதவள்.   மாயை தான் தடுக்கிறது. பவித்ரமான சாதகனின்  நெஞ்சுக்கு அவளைத் தெரியும்.  


* 139 *  
நிர்குணா -  விவரிக்கமுடியாதவள். இது தான் குணம் என்று நிர்ணயிக்கமுடியாத அதீதமானவள் அம்பாள். 


* 140 *  
நிஷ்கலா -  அங்கங்களாக பிரிவு படாதவள்.  ப்ரம்மம் எப்போதுமே முழுசானது தானே.   இந்த இடத்தில் கிருஷ்ணன் சொன்னது பொருத்தமாக இருக்கிறது.  ''அர்ஜுனா,  இதோ பார்,  எல்லைக்குட்பட்ட, இந்த உலகில் அனைத்து ஜீவராசிகளும் என்னில்  ஒரு துண்டு,  பாகமானவையே.'' 

* 141 *சாந்தா -   சில சமயம் ஒரே அர்த்தம் கொண்ட ரெண்டு மூன்று நாமங்கள் வந்தால் அவற்றை படிக்காமல் விடவேண்டாம். ஒரு காரணத்துக்காகவே திருப்ப சொல்லவேண்டியிருக்கும். அதற்குள் முன்னர் சொல்லாத அர்த்தம்  த்வனிக்கலாம்.   ஸ்ரீ லலிதாம்பிகை எப்போதும் சாந்தஸ்வரூபி. நமது பெண்கள் பலருக்கு சாந்தா, சாந்தி என்று பெயர் வைப்பதே  நற்குணங்கள் நிரம்பி இருக்கவே.  பாரபக்ஷமற்ற பாசம், நேசம் பக்தர்களிடம் கொண்டவள். 
* 142 *
நிஷ்காமா -  எந்த விதமான ஆசையோ, விருப்பமோ, வேட்கையோ,தேவையோ,  இல்லாதவள் அம்பாள். எல்லாமே தன்னுள் நிறைந்த ப்ரம்மத்துக்கு தனியாக என்ன ஆசையோ தோசையோ வேண்டும்?உயர்ந்த வேதாந்தமான  ப்ரஹதாரண்யக உபநிஷத்  (

II.iii.6) 
''நெதி  நெதி -  ந இதி ந இதி ,''  இது இல்லை இது இல்லை என்று ஒவ்வொன்றாக புறக்கணித்துக்கொண்டே வரும்  வைராக்கியம் கடைசியில் எதுவும் எனக்கு தேவையில்லை என்று கொண்டுவிடும். 

* 143 *  நிருபப்லவா -  ஸ்ரீ லலிதாம்பிகை நித்யஸ்வரூபி.  என்றும் சாஸ்வதமானவள்.  உடம்பில் ஓடும் 72000 நாடி நரம்புகளுக்கு அம்ருதத்தை வழங்குபவள். ஆனந்தஸ்வரூபி.  நிர்  என்றால் தேகம். உப : அதைசேர்ந்த, ப்ளவா : கொட்டுதல்.  தொண்டை வழியாக குண்டலினி பெருக்கும்  அம்ருதத்தை உடல் முழுதும் நரம்புகளில் பாய்ச்சி, ஆனந்தாம்ருதம் பருகச்செய்பவள்.

அம்பாளின் விசேஷ ரஹஸ்யங்கள் தொடரும்.

ATTACHED IS THE SCULTURE OF AMBAL WITH LORD SIVA IN ONE OF THE PILLARS. THE SAME FACE OF THE AMBAL REFLECTS HER DIFFERENT FEELINGS AND EMOTIONS OF SHYNESS AND ANGER WHEN VIEWED FROM DIFFERENT ANGLES.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...