Sunday, February 28, 2021

VAIRAGYA SATHAKAM

 


வைராக்ய சதகம்       -   நங்கநல்லூர்  J   K  SIVAN ராஜா  பர்த்ருஹரீ 

ब्रह्मज्ञानविवेकनिर्मलधियः कुर्वन्त्यहो दुष्करं
 यन्मुञ्चन्त्युपभोगभाञ्ज्यपि धनान्येकान्ततो निःस्पृहाः ।
सम्प्राप्तान्न पुरा न सम्प्रति न च प्राप्तौ दृढप्रत्ययान्
 वाञ्छामात्रपरिग्रहानपि परं त्यक्तुं न शक्ता वयम् ॥ १३॥

ப்³ரஹ்மஜ்ஞாநவிவேகநிர்மலதி⁴ய: குர்வந்த்யஹோ து³ஷ்கரம்
யந்முஞ்சந்த்யுபபோ⁴க³பா⁴ஞ்ஜ்யபி த⁴நாந்யேகாந்ததோ நி:ஸ்ப்ருʼஹா: ।
ஸம்ப்ராப்தாந்ந புரா ந ஸம்ப்ரதி ந ச ப்ராப்தௌ த்³ருʼட⁴ப்ரத்யயாந்
வாஞ்சா²மாத்ரபரிக்³ரஹாநபி பரம் த்யக்தும் ந ஶக்தா வயம் ॥ 13 ॥

குளித்து,பட்டையாக  விபூதி  தரித்து, பஞ்ச கச்சம் கட்டி கழுத்தில் ருத்ராக்ஷமணிந்து,  ஒரு இடத்தில் கண்மூடி உட்கார்ந்தாள் ஞானம் வந்துவிடாது.  உடலை அதன் விருப்பங்களை, வென்று, உள்ளத்தை ஒருமுகமாக்கி  இறை வனைத் தேடினால் கிடைப்பதை எளிதில் பெற இயலாது.  ஞானம் என்பதே எது தேவை, எது வேண்டாம் என்று பகுத்து உணர்வது. அதற்கு தான் புத்தியை பகவான் கொடுத்திருக் கிறான்.  கடினமான பயிற்சி வேண்டும்.  ஆசைகளை தியாகம் செய்வது  சுலபமல்ல.  பழைய நினைவுகள் வாசனைகள் இழுக்கும்.  அதை ஓரம்கட்டி, ஒரேயடியாக வீட்டில் கரப்பாம்பூச்சியை ஒழிப்பதுபோல் இரக்கமின்றி அழிக்கவேண்டும். திருமூலர் அனுபவித்து தானே   ஆசை அறுமின்கள், அசைபட்டால் துன்பம் தான் மிஞ்சும்  ஆனந்தம் வேண்டுமானால்  ஆசையை விட்டால் தான் கிடைக்கும் என்று  பாடினார்.

धन्यानां गिरिकन्दरेषु वसतां ज्योतिः परं ध्यायतां
आनन्दाश्रुकणान्पिबन्ति शकुना निःशङ्कमङ्केशयाः ।
अस्माकं तु मनोरथोपरचितप्रासादवापीतट-
क्रीडाकाननकेलिकौतुकजुषामायुः परं क्षीयते ॥ १४॥

த⁴ந்யாநாம் கி³ரிகந்த³ரேஷு வஸதாம் ஜ்யோதி: பரம் த்⁴யாயதாம்
ஆநந்தா³ஶ்ருகணாந்பிப³ந்தி ஶகுநா நி:ஶங்கமங்கேஶயா: ।
அஸ்மாகம் து மநோரதோ²பரசிதப்ராஸாத³வாபீதட-
க்ரீடா³காநநகேலிகௌதுகஜுஷாமாயு: பரம் க்ஷீயதே ॥ 14 ॥

இந்த  சகவாசமே வேண்டாம்  என்று தானே  உலக வாழ்க்கையிலிருந்து  தனித்து  எங்கோ மலைக் குகை, காடுகளில் போய் தனியாக உட்கார்ந்து கொண்டார்கள் ரிஷிகள்.  தியான த் துக்கு இடம் ஒரு முக்கிய அம்சம்.புத்தர்  லும்பினி வனத்தில்  இரவுபகல் அன்னா காரமின்றி  ஞான ஒளியைத் தேடி பிடித்தார். புலி பாம்பு, பறவைகள் எல்லாம் மேலே வந்து  தைரியமாக உட்காரும். இவன் நம்மை துன்புறுத்தும் சாதாரண மனிதன் இல்லை என்று அவை நன்றாக தெரிந்தவை.  எத்தனை போட்டோக்களில் ரமணரைச்  சுற்றி மிருகங் கள், பறவைகள் பார்த்தோம்.  எவ்வளவு சந்தோ ஷம் அவற்றின் முகத்தில்.   அரண்மனையில்  அந்தப்புரத்தில்,  நந்தவனங்களில், தடாக கரை களில்  கிடைத்தவையை விட எத்தனையோ மடங்கு  ஆனந்தம் தரும் அனுபவம் ஞானம் பெற்றால்  கிடைக்கிறதே 

भिक्षाशनं तदपि नीरसमेकवारं
शय्या च भूः परिजनो निजदेहमात्रम् ।
वस्त्रं विशीर्णशतखण्डमयी च कन्था
हा हा तथापि विषया न परित्यजन्ति ॥ १५॥  

பி⁴க்ஷாஶநம் தத³பி நீரஸமேகவாரம்

ஶய்யா ச பூ:⁴ பரிஜநோ நிஜதே³ஹமாத்ரம் ।
வஸ்த்ரம் விஶீர்ணஶதக²ண்ட³மயீ ச கந்தா²
ஹா ஹா ததா²பி விஷயா ந பரித்யஜந்தி ॥ 15 ॥

உணவு எதற்கய்யா?  உடலை வாடாமல், உயிரை பாதுகாக்க  பெட்டகமாக உழைக்க மட்டும் தான்?  உடலைவிட உள்ளே இருக்கும்  ஆத்மா தான் முக்கியம். அதற்கு உதவும் உபகரணம் இந்த உடல். இதற்கு தீனி போடுவதில்  எதற்கு ருசி?  கிடைப்பதே  பிக்ஷை, பிச்சை எடுத்தது  அடுத்த  வேளை  வரை அதை பாதுகாக்க, அதில் எங்கே வந்தது ருசி?  கட்டாந்தரை தான்   பெரிய  சுகமான   படுக்கை, பதினாயிரம் ஒட்டு போட்ட கந்தல் தான் போர்வை.  ஒரு வேடிக்கை என்ன தெரியுமா, இவ்வளவு கட்டுப்பாட்டிலும்   ஐம்புலன்கள் ஒடுங்கவில்லை, அவ்வப்போது தலை தூக்கி என்னை திருப்தி படுத்து என்று பிடுங்குகிறதே!
தொடரும் 

CHETTIYAR FAMILY WEDDING

 

ஒரு செட்டியார்  வீட்டு கல்யாணம்  5  ---  நங்கநல்லூர்  J K  SIVAN



செப்டம்பர்  11,  1943.  மாலை  ரெண்டு  மணிக் கு  முன்பு  நான் கோட்டையூரில்  என்ன செய்தேன்? 
 M L வசந்தகுமாரி பாடிய  கிருதிகள்  அற்புத மாக  இருந்ததை எண்ணி மகிழ்ந்து கொண்டி ருந்தேன்.  ரெண்டு  மணி நேரம்  ஓடியதே தெரியவில்லை.   மாளிகை  சுவற்றில் தாத்தா கடிகாரம்  ரெண்டு மணி காட்டியது.  சின்னமுள்  2  பெரியமுள்  12ல்  நிற்கும்போது   ''பவமான  சுதடு  பட்டி''  இசைத்து    அம்மா லலிதாங்கியோடு சேர்ந்து வசந்தகுமாரி கச்சேரியை நிறைவு செய்து   காது செவிடு படும்  பலத்த கை  தட்டலைப் பெற்று  எல்லோ ருக்கும் வணக்கம் தெரிவித்தார்.
அதுவரை சாப்பிடாமல் இருந்தவர்களுக்கு அப்போது தான் வயிறு ஞாபகம் வந்தது.  சமையல் ஹாலுக்கு ஓடினார்கள். ஏற்கனவே சாப்பாடு கடை முடித்த   என் போன்றோர்   சிலர்  செட்டியார் மாளிகையில் அறிமுகமான  புதிய நண்பர்களோடு   இதுவரை  அனுபவித்த  சங்கீத, நாட்டிய,  காலட்சேப, உபன்யாச  நிகழ்ச்சிகளை பற்றி  சில நிமிஷங்கள்   அலசி னோம்.  யார் யார் எப்படி ஆடினார்கள், பாடினார்கள் பேசினார்கள் என்பதை அலசு வதில் எப்போதுமே  ஒரு பேரானந்தம்.  
 என்னென்ன  அயிட்டங்கள் மூன்று  நாட்களாக சாப்பிட்டுக் கொண்டு வருகிறோம், இன்னும் என்ன குறை இருக்கிறது என்று யோசித்தால்,  செவிக்கோ, வயிற்றுக்கோ  ஒரு வஞ்சனை யுமில்லை என்று தான் தோன்றுகிறது. செட்டி யாரிடம் குறை ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா என்று பார்த்தால்  முடியவே முடியாது போல் இருக்கிறதே.  எனக்குள் இருந்த  ஒரு பெரிய குறை  பிரம்மதேவன் மேல் தான்.  ஏன் ஒரு  நாளைக்கு 24 மணி நேரம் மட்டும் வைத் தான்? என்று   கோபம் கோபமாக வந்தது. அவன் ஒரு நாளைக்கு  100 மணி நேரம் என்று வைக்க தோணவில்லை,    ஏன்  அந்த  பயல் சூரியனை  மெதுவாக ஊர்ந்து செல்ல   வைக் வில்லை ?வயிறு நிறைய  விருந்து சாப்பிட்டால் இப்படியெல்லாம் எண்ணங்கள் தோன்றுமோ என்னவோ?
அடுத்ததாக  மேடைக்கு யார் வரப்போகிறார் கள் என்று செட்டியார் சிப்பந்திகள் அறிவித்து அனைவரையும் வரவேற்று அமைதியாக  அமரச் சொன்னார்கள்.  
இசையரசு தண்டபாணி தேசிகர்  மேடை ஏறினார். கழுக்கு  முழுக்கு என்று  கொஞ்சம் குள்ள உருவம் , ரெட்டை நாடி,  கருப்பாக இருந்தாலும்  வசீகரமான ரவுண்டு முகம்.  முன் வழுக்கை. முழுக்கை சட்டை மேல்  ஜரிகை அங்கவஸ்திரம், நெற்றியில் பெரிய  காலணா அளவு  ஜவ்வாது குங்குமம். வெண்ணிற  பற்கள் உதடுகள் விரிய சிரித்தன.  நந்தனார்  நந்தனார் என்று கூட்டத்தில் குரல்கள் ஒலிக்க  சங்கீத குழுவோடு கச்சேரியை ஆரம்பித்தார்.  முழுக்க முழுக்க  தமிழ் பாட்டுகளே  கணீரெ ன்று பாடினார்.  அருணாச்சல கவிராயர் பாடல்கள், கோபால கிருஷ்ண பாகவதர் பாடல்கள்   நேயர் விருப்பமாக  பாட கோரிக் கைகள்.  வறுகலாமோ, ஐயே மெத்தகடினம்,  வழி மறைத்திருக்குதே,  தவிர  ஜெகஜ் ஜனனி பாடும்போது ஒன்ஸ் மோர்  கேட்டார்கள்.நாலு மணி வரை பாடினார்.  ரெண்டு மணி நேரம்  இவர்களுக்கெல்லாம் போதவே  போதாது.  
நாலுமணிக்கு  எல்லோருக்கும்  வழக்கம்போல்  சாயந்திர சிற்றுண்டிகள், வெங்காய பஜ்ஜி,  தூத் பேடா,  பாதாம்கீர்,  மெது  பக்கோடா,   சுட சுட மொறுமொறுவென்று  ஆரஞ்சு  நிறத்தில்  மைசூர் போண்டா,  தேங்காய் சட்னி  வாழை இலையில்  பரிமாறல்.   சுவையான  பீ பரி   PEABURRY பில்டர்  காப்பி  குடித்துவிட்டு  மண்ட பம் வந்து அமர்ந்தபோது தான்  சிறிது நேரத் தில்  KBS,   கே. பி சுந்தராம்பாள்  குழுவி னர்  பாட ஆரம்பித்தார்கள்.    ஹார்மோனியம்,  தவில், பிடில், மிருதங்கம் ஒரு நல்ல காம்பினேஷன்.   நாடக பாட்டுக்கள், வள்ளி கல்யாணம், முருகன் பாடல்கள்,  கர்நாடக சங்கீத கீர்த்தனைகள் எல்லாமே  கணீரென்று குரலில்  வார்த்தைகள் ஸ்பஷ்டமாக  கேட்கும்படி பாடுவதில் KBS   தனியிடம்  பிடித்தவர். அவரது பாடல்களில்  சங்கீத தெளிவும், பக்தி பாவமும்  கலந்து ஒன்றை ஒன்று மிஞ்சும்படி இருப்பது அலாதி அழகு.   பிற்காலத்தில்  அவரது ஒளவையார் படம் பார்த்திருக்கிறீர்களா?
சாயந்திரம்  நிகழ்ச்சிகள் இத்தோடு முடிந்த வுடன்  கல்யாண கோஷ்டி மாப்பிள்ளை வீட்டார் சமூகத்துக்கு   கண்டனுர்  புறப்பட்டது. எல்லோருக்கும் வில்வண்டிகள்  இருந்தது  அத்தனைபேரும்  கோட்டையூரிலிருந்து  மாப்பிள்ளை வீட்டுக்கு கண்டனூர் செல்ல ஏற்பாடு நடந்தது.  நடந்து செல்ல  பிடித்த வர்கள்  நிறையபேர் காலாற  கிளம்பி விட்டார் கள்.    முன்பே  அங்கே  எல்லா ஏற்பாடுகளும் வைரவன் செட்டியார்  செய்து முடித்துவிட்டார்.
அழகப்பர் மாளிகையிலிருந்து  கண்டனுருக்கு  4 - 5  கிமி. தூரம் தான்.  அற்புதமான ஊர்.  வைரவன் செட்டியார் மாளிகையில்  இரவு தங்க  ஏற்பாடுகள், தொடர்ந்து சில கச்சேரிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.கண்டனூரில்  அற்புதமான சிவன் கோவில் உள்ளது. பிரம் மாண்டமாக கட்டப்பட்டு நகரத்தார்களால் சிறப்பாக  பராமரிக்கப்பட்டு வரும் ஆலயம்.   நிறைய பெண்களுக்கு இங்கே உமையாச்சி, உமையாள்  என்று பெயர் உள்ளது. பழனியில்  சுப்பிரமணி,முருகன், மதுரையில் சொக்க லிங்கம், சொக்கநாதன்,  சுந்தரேஸ் வரன் சிதம்பரம்  நடராஜன் மாதிரி.    எல்லோருக்கும்  தங்க இட வசதிகள் ஏற்பாடாகி யிருந்தது.    
உள்ளூர்  சிவன் கோவில்  விசாலமானது. பக்தி பூர்வமாக  நகரத்தார்கள்  கண்காணிப்பில்  பராமரிக்கப்பட்டு வருகிறது. அருகே சாக் கோட் டையில்    உமையாம்பிகை சமேத  வீர சேகரர்  சிவாலயம் ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட  சோழன் கட்டிய கோவில். கண்டன்  என்கிற சோழன் பேரில் உள்ளதாள்  சிவபக்தர்  கண்டராதித்த சோழர் காலமாக இருக்கலாம்.  விவரங்களுக்கு உள்ளே இன்னும்  போக வில்லை.
செட்டியார்  உபசரிப்பில்  அற்புதமான  இரவு சாப்பாடு முடிந்து எல்லோரும்  ஆவலாக  காத்திருந்தது  பானுமதி நாட்டியத்திற்காக. எப்படி எல்லாம் ஆட்களை பிடித்து  ஏற்பாடு செய்திருக்கிறார் செட்டியார். திரைப்புகழ் P .பானுமதி  அப்போது நடன நிகழ்ச்சிகள் கொடுத்திருக்கிறார் போலிக்கிறது .  இரவு  பதினோரு மணிக்கு முடிந்த இந்த நாட்டிய நிகழ்ச்சியை தொடர்ந்து நித்ராதேவி  என்னை முழுமையாக ஆட்கொண்டாள். அதற்கு முன்  கல்கண்டு  ஏலக்காய் போட்ட  THICK    கள்ளிச் சொட்டு  பசும்பால் ஒரு டம்ளர் வயிற் றை ஆக்கிரமித்தது.  
நாளை  இங்கிருந்து புறப்படு முன் கண்டனு ரில் நடந்த நிகழ்ச்சிகளை சொல்வேன்.
.தொடரும் 

SONGS TO HEAR

 



    பாடல்களும்  பகவானும்.   J K SIVAN 


மனதில்  என்றும்  நீங்காமல் நிறைந்து இருக்கும் சில  முருகன் பாடல்களை இன்று  பகிர்கிறேன்.  பேச்சுக்கும் பாட்டுக்கும்  உள்ள வித்யாசம் என்ன?  பாடல்  செவிக்கும்  உள்ளத்துக்கும் இனிமையை தரும் சக்தி கொண்டது.  


ரிஷிகள் முனிவர்கள், மஹான்கள்  பாடல்களுக்கு இதற்காகவே  பொருத்தமான  ராகங்களை அமைத்து பாடி இருக்கிறார்கள். இயற்கையே இசைக்கு அடிமை.  இறைவனும் அவ்வாறே.  ஒளவையை, அருணகிரியை, கம்பரை,  கண்ணதாசனை, புரந்தரதாசர், தியாகராஜர் தீக்ஷிதர்  பாரதியார், சைவ சமய குறவர்கள்,  ஆழ்வார்கள்   போன்றவர்களை தன்னைப்  பாட  வைத்தவன் KBS ,  MSS , TMS  சீர்காழி,  எண்ணற்ற பல சங்கீத வித்வான்களைப்  பாட வைத்தான்.  ஏன்? ஏன்?  நம்மை அவற்றை செவிமடுத்து  நம் மனம்   வெயிலில் வைத்த ஐஸ் கட்டி மாதிரி அவன்  பால்  உருகி  ஈர்க்கபட வேண்டும்.   அதில்  நாம்  தவறினால்  அரிய  சந்தர்ப்பத்தை கோட்டை விட்டவர்கள் என்று தான் சொல்லவேண்டும்.  எத்தனையோ பாடல்கள் தமிழில் இருந்தாலும்  முருகன் பாடல்கள் அதிகம் என்பதற்கு காரணம்   முருகனை தமிழ்க்கடவுளாக நாம்  கொண்டாடுவதால் தான்.  வெற்றி வேல் வீரவேல்  எங்கும்  ஒலிப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்.   சில அற்புத பாடல்களை கேட்டு அனுபவிக்க ஒரு லிஸ்ட் தருகிறேன் கேட்கிறீர்களா.

TMS  பாடிய  முருகன்  பாட்டுகளில்  சில  மட்டும்:  
மண்ணானாலும்,  கற்பனை என்றாலும், முருகா நீ வரவேண்டும், உள்ளம் உருகுதய்யா, முத்தைத்தரு, ஓராறுமுகமும், இன்னும் எத்தனையோ...  நீங்களே  யு ட்யூபில்  தேடி எடுத்து  ரசிக்கலாம்.

சீர்காழி.கோவிந்தராஜன்  -  முழு முதல் கடவுள் விநாயகன் மேல் பாடியவை அதே போல்  அற்புதமானவை. 
அந்த குரலுக்கு தனி ஈர்ப்பு உண்டு. பாவத்தோடு  ராகம் லயித்து  கணீரென்று பாடும் போது கண்முன் கணபதி தோன்றுவான்.   ஒரு சில  பேர்கள் மட்டும் சொல்கிறேன். அதைக் கேட்டுவிட்டு மற்ற பாடல்களை நீங்களே தேடிப்  பிடிப்பீர்கள். 

கணபதியே வருவாய்,  விநாயகனே, இன்னும் எத்தனையோ.   முருகன் மீதும் நிறைய  பாடல்கள் இருக்கிறது.
மதுரை சோமு:  ஆஹா  சொல்லவே வேண்டாம்.  எல்லாமே அற்புதம்.  உள்ளம்  உருக, கண்ணீர் பெறுக  கம்மல் குரலில் பாடும் சாரீரம் நெஞ்சை அள்ளும் 

சும்மா  நான் முருகனை, விநாயகனை தொட்டேன். அவ்வளவு தான். கண்ணன், நாராயணன், பாண்டுரங்கன், அம்பாள், சிவன்  என்று ஒவ்வொரு தெய்வம் மேலும் பாடல்களை ஆராய புறப்பட்டால்  அருமையாகத்தான்  இருக்கும்  காலம் போதாதே. என்ன செய்வது.  இவர்கள் அத்தனை பேர் மேலும் பாடிய   திரை இசை கலைஞர்கள், கர்நாடக சங்கீத வித்துவான்கள் பெயர்கள்  அவர்கள் பாடிய  பாடல்களை  லிஸ்ட்  எடுக்க முயன்றால்  எனக்கு  இன்னும் ரெண்டு மூன்று பிறவியாவது  குறைந்தது   நிச்சயம்  வேண்டும் என்பதால்  சும்மா கோடி காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.    வழி காட்டுகிறேன். நடப்பது, ஓடுவது உங்கள் முயற்சி, விருப்பம்.  ஒழிந்த நேரத்தில் பட்டி மன்றத்துக்கு  செலவழிக்கும் நேரத்தில் கொஞ்சம்  இதற்கு  தந்து இந்த அற்புதத்தை  அனுபவிக்கிறேன்.  

ORU ARPUDHA GNANI

 


ஒரு அற்புத ஞானி --- நங்கநல்லூர் J K SIVAN சேஷாத்ரி ஸ்வாமிகள்
''பறவை பறந்தது''
நண்பர் ஊரப்பாக்கம் ஸ்ரீ மோகன் தம்பதியர் என்னை நேரில் கண்டு அவர்கள் வீட்டில் சுனாமியின் போது வீடே பாதி முழுகிய நேரம் சேதமடைந்த ஒரு பழைய புத்தகம் ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார். அது ஸ்ரீ குழு மணி நாராயணஸ்வாமி சாஸ்திரிகள் நூறு வருஷங்களுக்கு முன்பு சேஷாத்திரி ஸ்வாமி கள் வாழ்வில் நடந்த சில சம்பவங் களை குறிப்பெடுத்து எழுதிய பக்தி நூல். ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிஸ்வாமிகள் சரித்திரம். எதற்கு இதை ஊரப்பாக்கத்திலிருந்து நங்கநல்லூர் வந்து நேரில் தரவேண்டும்? என்னை எப்படி தெரியும். அவர்களை எனக்கு முன்பின் தெரியாதே? எல்லாம் முக நூலில் நான் இடும் ஆன்மீக பதிவுகளால் கிடைத்த நட்போ?
''நான் இதை உங்க கிட்டே கொண்டு வந்து கொடுத்தது நீங்க இதை மறுபடியும் இதை எழுதவேண்டும் என்று. ஏதோ தண்ணீரில் ஊறிவிட்டாலும் பக்கம் பக்கமாக திருப்ப முடிகிற அளவு ''ஒக்கப்'' WORKUP பண்ணி கொண்டு வந்திருக்கோம். ரெண்டு தலை முறையா பூஜைலே இருக்கிற புஸ்தகம்.''
நான் சேஷாத்திரி ஸ்வாமிகளை ஒரு சின்ன அட்டையில் எங்கள் வீட்டு பூஜை அறையில் என் சிறியவயதில் என் அப்பா வழிபட்டதை பார்த்திருக்கிறேன் என்பதைத தவிர அவரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முயலவில்லை. அதைப் போக்க அவரே என்னிடம் வந்ததாக எடுத்துக் கொண்டேன். கஷ்டப்பட்டு அந்த புத்தகத்தின் பக்கங்கள் சொன்னதை புரிந்து கொண்டு என் வழியில் தமிழில் எழுதி ஒரு அற்புத ஞானி புத்தக மாக்கினேன். அது புத்தகமாகும் செலவில் ஒரு பங்கை ஏற்றுக்கொண்டவர்கள் மோகன் தம்பதியினர். உலகில் பட இடங்களில் உள்ள பக்தர்கள் சிலரை சேஷாத்திரி ஸ்வாமிகள் இப்புத்தகமாக சென்றடைந்து அருளாசி வழங்கிவருகிறார் என்பது ஈஸ்வர சங்கல்பம் மட்டும் அல்ல, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் சித்தமும் ஆகும். எனக்கு இதில் ஒரு பொறுப் பை வழங்கியதும் அவர் என் மேல் கொண்ட கருணை, மோகன் தம்பதியர் மூலமாக என்று தான் கூறவேண்டும்.புத்தகத்திலிருந்து ஒரு சம்பவம்:
'' நான் சொல்லிக்கொண்டு வருவது இருநூறு வருஷங்களுக்கு முன்பான செயதிகள். அப்போதைய வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள் இப்போது முற்றிலும் மாறு பட்டவை . எனவே அக்கால நிலவரத்தை மனதில் கொண்டு வாசகர்கள் இந்த கட்டுரைகளை அணுகினால் அப்போது அக்காலத்தவர்களோடு நாமும் இருப்பதை போன்ற சுகானுபவம் பெறலாம். எல்லாம் மனசு பண்ணும் காரியம். .

''நீ என்னடா ஜபம் பண்ணிண்டு இருக்கே எப்போவும்?'' என ஒருநாள் வங்கீபுரம் ஸ்ரீனி வாச அய்யங்கார் கேட்டார் சேஷாத்ரியை.
''அம்பஸ்ய பாரே'' என்கிற நாராயண உப நிஷத்திலிருந்து, காமோகார்ஷித் மன்யுர கார்ஷீத், காம க்ருதி நாஹம் கரோமி '' என்னும் சில வேத மந்த்ரங்கள் மாமா''
(ஆசை அறவே அகல வேண்டும். கோபம் கிட்ட வரக்கூடாது என்று உறுதி பெற சொல்லும் மந்திரங்கள் இவை. இதை தான் ஆவணி அவிட்ட உபா கர்மத்தில் சொல்கிறோம்.)
''எவ்வளவோ சொல்லுவே?''
''ஆயிட்டுது . லக்ஷத்துக்கு மேலே ஆவர்த்தி. இன்னும் ஒரு லக்ஷம் சொல்லணும்'' -
''எதுக்கு?
''கர்மம் ஒழியாம எப்படி மோக்ஷம் அடைய றது? உங்களுக்கு மோக்ஷம் வேண்டாமா? நீங்களும் பண்ணுங்கோ. ''
பேசிக்கொண்டே அந்த பையன் சேஷாத்ரி நகர்ந்து விட்டான். அவருக்கு கிடைத்த பட்டம் ''பாவம் சின்ன வயசிலேயே ஞானப் பைத்தி யம்''
கோவில்களில் மணிக்கணக்காக உட்கார்ந்து ஜபம் செய்வதால் வீட்டில் தொந்தரவு, உபத் திரவம். வீட்டிலும் செய்ய வழியில்லை. என்ன செய்யலாம்? நிம்மதியாக எப்படி மனதை ஜெபத்தில் செலுத்த உபாயம்? ராத்திரி எல்லோரும் தூங்கும் போது மட்டும் செய்யலாமா? ஆஹா, இந்த இடம் மறந்து போச்சே. வேகவதி ஆற்றங்கரையில் சதுர்த்தர்கள் ஸ்மசானம் ஒருவரும் இல்லாத இடமாயிற்றே. அங்கே? . எனவே சாயந்திரம் சந்தியாவந்தனம் செய்து விட்டு அங்கேயே ஓரமாக மயானத்தில் இரவெல்லாம் ஜெபம். மறுநாள் காலை வீட்டுக்கு திரும்புவார் சேஷாத்ரி.
பத்துநாள் வரை ஒருவரும் இதை கவனிக்க வில்லை. அப்புறம் தான் கிளம்பிற்று எதிர்ப்பு வீட்டில். சுனாமியாக வெடித்தது.
சேஷாத்ரியின் சித்தப்பா ஜோசியர் ராமசாமி , அத்தான் வெங்கட்ரமண சாஸ்திரி, எல்லோ ரும் பிலுபிலு என்று பிடித்துக் கொண்டார்கள்.
'''என்னடா காரியம் இது?, அசுத்தமான, அசுப, இடத்துலே எல்லாம் போய் ராவோடு ராவா ஜெபம் பண்ற வழக்கம்? முன் போல கோவிலி லேயோ, இல்லை வீட்டிலேயோ பண்ணாமல் இது என்ன வக்ர புத்தி உனக்கு ?
'' வக்ரம் ஒண்ணும் இல்ல. அது ருத்ர பூமி. மீதி இடத்திலே ஆயிரம் ஜபம் பண்றது , அங்கே ஒரு ஜெபம் பண்றதுக்கு சமம் னு உங்களுக்கு தெரியாதா?'' - சேஷாத்ரியின் பதில். .
அதற்குப்பிறகு சேஷாத்ரி இரவில் வெளியே போகவிடாமல் இரவு வீட்டின் கதவை பூட்டி னார்கள். சேஷாத்திரி மூன்று நாலு நாள் வீட்டுக் குள்ளேயே கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு அறையிலேயே அன்ன ஆகாரம் இன்றி இருந்தார்.
''ஐயய்யோ, இவன் உயிருக்கே ஆபத்து வந்துடுமோ?'' என்று பயம் வந்துவிட்டது மற்றவர்களுக்கு. கெஞ்சிக் கூத்தாடி ''கதவை திறடா சேஷாத்ரி'' என்று கதறினார்கள். வீட்டில் அடக்குமுறை அதிகரித்தது. இருந் தாலும் சேஷாத்ரியின் மயான ஜபம் நடந்துகொண்டிருந்தது. இப்போதெல்லாம் சேஷாத்ரி முகத்தில் ஒரு புது தேஜஸ். கண்களில் ஒரு ஒளி பிரகாசித்தது.
ஒருநாள். அன்று சனிக்கிழமை என்பதால் வீட்டில் எல்லோரும் அப்யங்க ஸ்நானம் (நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது) பண்ணுவது வழக்கம். சனி நீராடு பழக்கம் இன்னும் பல வீடுகளில் தொடர்கிறது. பழைய சம்பிரதாயங்கள் முற்றிலும் சாகவில்லை.
காலை பத்து மணிக்கு தான் சேஷாத்ரி வீடு திரும்பினான் . ''எனக்கு எண்ணெய் குளியல் வேண்டாம்'' என்கிறான் . சேஷாத்ரி தான் சித்தப்பாவுக்கு எண்ணெய் தேய்த்து விடுவது வழக்கம். வஸ்திரங்களை துவைத்து கொடுப் பார்.எல்லோருடனும் சிரித்து பேசு வார்.
''சித்தி, சித்தப்பா எங்கே. எண்ணெய் தேய்த்து விடறேன்''.
''சேஷா, சித்தப்பாவுக்கு இன்னிக்கு எண் ணெய் ஸ்நானம் வேண்டாமாம்'' என்றாள் சித்தி கல்யாணி.
''ஏனாம்?''
''உன்னைப்பத்தி தான் கவலை''
'என்னைப் பத்தி என்ன கவலை. நான் ஒரு வழி. மத்தவா அவா அவா வழி.'' சித்தப்பாவுக்கு காத்திருந்து ஒருவழியாக சித்தப்பாவுக்கு எண்ணெய் தேய்த்து விட்டார். அப்போதெல்லாம் மிளகாய் வற்றலை பெருங்காயகட்டியை நல்லெண்ணையில் பொறித்து காய்ச்சி தலையில் தேய்ப்பார்கள். போட்டு பொட்டென்று சூடு பறக்க எண்ணெ யை பொருக்கிற சூட்டில் தலையில் வைத்து ரெண்டு கையாலும் தட்டுவார்கள்.முக்காவாசி வீடுகளில் சுண்டக்கா வற்றல் குழம்பு, மிளகு ஜீரக ரசம். பருப்பு துவையல், சுட்ட அப்பளம் தான் மெனு அன்று.
சித்தப்பாவுக்கு பாதி எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்த சேஷாத்ரி நிறுத்தி விட்டு வாச லுக்கு ஓடிச் சென்று பார்த்தார். ரெண்டு நிமிஷத்தில் திரும்பி வந்தார்.
''என்னடா அங்கே போய் பார்த்தே?''
''ஆகாசத்தில் பாட்டு சத்தம் கேட்டுது. தேவதைகள் பாடிண்டு போறா. போய் பார்த்தேன்''
சித்தப்பாவுக்கு இது பைத்தியம் என்று கேலி. ஆஹா என்று வாய்விட்டு சிரித்தார். ''ஓஹோ தேவதைகள் மட்டும் தானா. ஏன் கந்தர்வர்கள் கூடவே போய் பாடலியா?''
''ஓ, இருந்தாளே. ரெக்கை இருக்கே. அவாளும் போறா''
''என்ன ராகம் பாடினான்னு உனக்கு தெரிஞ்சுதா?''
''ஓ.தெரிஞ்சுதே, பிலஹரி''
''ஏண்டா இப்படி பைத்தியமா இருக்கே. அவா உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவாளா. எனக்கு தெரியலியே ''
''கர்மிகள் கண்ணுக்குத்தெரியமாட்டா சித்தப்பா. அவா நிலையிலேயே நாமும் இருந்தா தான் தெரிவா''
'' சரி சரி உனக்கு பைத்தியம் முத்திவிட்டது''.
சித்தப்பாவுக்கு ''தன்னாலே தான் காகினி யோடு சேஷாத்திரியின் கல்யாணம் நின்னு போச்சு. இன்னொரு இடத்திலே சீக்கிரம் ஒரு பொண்ணை பார்த்தா ஒருவேளை சேஷாத் ரி சரியாயிடுவானோ? என்று தோன்றியது.
விஷயம் சேஷாத்திரி காதுக்கு எட்டியது. ஓரு நாள் தனியே சித்தப்பாவை பிடித்து விட்டார்.
''சித்தப்பா எனக்கு கல்யாணம் எதுவுமே வேண்டாம். என்னை இப்படியே நிம்மதியா விட்டுடுங்கோ. கல்யாணம் பேச்சு எடுத்தால் இந்த ஊரிலேயே இருக்கமாட்டேன்''
''ஐயோ, அப்படியெல்லாம் பண்ணாதேப்பா. எங்களுக்கு உன்னை விட்டா யாரு இருக்கா. இனிமே உன் ஜோலிக்கே வரலே. நீ உன் மனம்போல் இரு'' என்று கல்யாணி சித்தியும் அழுதாள். மயான நள்ளிரவு ஜெபங்கள் தொடர்ந்தது. மாதங்கள் ஓடியது.
ஒருநாள் தாமல் ஊரிலிருந்து பரசுராம சாஸ்திரி ஒருநாள் வந்தார்.
''கேள்விப்பட்டே

ன். சேஷாத்ரியை திருத் தணும்னு தான் வந்தேன். எங்கே அவன்?''
''எங்கேயோ சுத்தறான்.''
சேஷாத்ரி வீடு வந்ததும் . ''இதோ பார்டா இனிமே நீ ஸ்மசானத்துக்கு போகப்படாது. அது தப்பு''
சேஷாத்ரி சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி அது எவ்வளவு உயர்ந்தது என்று விளக்கியும் பயனில்லை. மூணு மணி நேர விவாதம். கடைசியில் சேஷாத்ரி பொறுமையாக சாஸ்திரிகளுக்கு பதில் சொன்னார்: ''நான் நைஷ்டிக பிரம்மச்சாரி. உபாசகன். எனக்கு கால தேச நியமம் எல்லாம் கிடையாது '' என்று .சொன்னபோது தான் பிரம்மாஸ்திரம் போட்டார் சாஸ்திரி.
''சுடுகாட்டுக்கு போய்விட்டு வாழற குடும்பம் இருக்கிற வீட்டுக்குள்ளே நுழையக்கூடாது.
'''சரி'' என்கிறார் சேஷாத்ரி.
''ஆஹா ! கூண்டிலிருந்து பறவை விரைந் தோடுதே .....இனி சேஷாத்திரி மரத்தடியில், கோவில்களில் பொது குளக்கரையில் சந்தோ ஷத் தோடு சுதந்திரமாக காணப்பட்டார். வீடு வருவது நின்று போனது. கடைசி மூச்சு வரை சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கு தனக்கென்று ஒரு இடம் வைத்துக் கொள்ளவில்லை. அனால் எல்லா பக்தர்கள் மனத்திலும் இடம் பிடித்து விட்டார்.. கண்கண்ட கலியுக தெய்வம் அல்ல வா? மஹா பெரியவாள் போற்றிய மஹா ப்ரம்மஞானி இல்லையா?

Saturday, February 27, 2021

ADHI KADAVOOR MAYANAM




 மயானம் போனதுண்டா?      ---      நங்கநல்லூர்  J.K. SIVAN


யாரையாவது  பார்த்து  நீங்கள்  மயானம்  எப்போது போனீர்கள்  என்றால்  அவர் கண் சிவந்து  பல்லை நறநறவென்று கடிக்க  வாய்ப்புண்டு.  அவர் நினைக்கும்  மயானம் வேறு நான் சொல்லும் மயானம் வேறு ஸார்.  நான் மட்டுமல்ல. ஒரு பஸ் நிறைய  அநேகரை  மயானத்துக்கு  கூட்டிக்கொண்டு சென்றி ருக்கிறேன்.  அது பல வருஷங்களுக்கு முன்பு.
எங்கள் பஸ்  திருக்கடவூர்,திருவிடை மருதூர், தலைச்சங்காடு, போகும் வழியில் மதுராந் தகம், செங்கல்பட்டு, இன்னும் எத்தனையோ கோவில்களை பார்த்துக்கொண்டே சென்றோம். ஒருவர் இருவர் இல்லை. ஐம்பத்தைந்து பேர். ஒரு சொகுசு பேருந்து நிறைய.  எல்லோரும் வேதவித்துக்கள். வழியெல்லாம் கோவில்களில் விளக்கேற்றி, எண்ணெய் அளித்து, ஸ்லோகங் கள் மந்த்ரங்கள் சொல்லி, அர்ச்சனைகள் செய்தோம்.  ருத்ரம், சமகம்,  தேவாரம் திருவாசகம் எல்லாம் பாடினோம்.அதெல்லாம் முக்கியமில்லை. மயானம் சென்றது தான் நான் இப்போது  சொல்லப்போவது.   பஸ்ஸில்  ஒரு மாமி  
''சிவன் மாமா, மயானம் எப்போ போகப் போகிறோம்?''
''நிச்சயம் காலை பதினொன்றுக்குள்..''
இந்த கேள்வி பதிலை முதல் முறையாக படிக் கின்ற உங்களில் சிலர் அல்ல பலர் ''இந்த ஆளுக்கு பைத்தியமா, அல்லது இப்படி கேட்டவளுக்கா ? அதெப்படி  மயானம் செல்லப்போகும் நேரத்தை முன்னராகவே சொல்ல இயலும்?  பைத்தியங்கள்  பேத்தல்'' என்று  தான்  சான்றிதழ் தருவார்கள். 
ஐயா பொறுங்கள். மயானம் என்றால் சுடுகாடு இல்லை இங்கே. ''மெய்ஞானம்'' என்கிற அற்புத க்ஷேத்ரம் வழக்கம்போல் நம்மவர்களால் சிதைக்கப்பட்டு,  சிதை அடுக்குகிற  ''மயான'' மாக போய்விட்டது. பழங்காலத்தில் இதற்கு பிரம்மபுரி, வில்வா ரண்யம், வேதபுரி, திரு மெய்ஞ்ஞானம் என்றெல்லாம் பெயர். திருஞான சம்பந்தர் காலத்திலே எல்லாமே எரிந்து போய் ''மயானம்'' ஆகிவிட்டது  என்பது  அவரது பதிகத்தில் ''மயானம்'' என்று வருவதில் தெரிகிறது. பக்தர்கள் இந்த பக்கமே வராததற்கு இந்த பெயரேகூட   ஒரு காரணமோ?

எத்தனை பேருக்கு உங்களில் மயானம் என்கிற  இந்த மெய்ஞானம் க்ஷேத்ரம் திருக்கடவூரில் (இப்போது திருக்கடையூர்) இருப்பது தெரியும். தெரியாதவர்களுக்கு விவரம் சொல்கிறேன்.
திருக்கடவூரிலிருந்து 2 கிமீ.   மயிலாடுதுறை - காரைக்கால் மார்கத்தில்  வந்தால்   22 கி.மீ. தூரம்.  மயானம் ஆலயத்தில் சிவன் பெயர்: பிரம்மபுரீஸ்வரர். ஸ்வயம்பு. அம்பாள்: ஆம்ல குஜாம்பிகை. மலர் குழல் மின்னம்மை. கொன்றை, வில்வம் ஸ்தல விருக்ஷங்கள். அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பெற்ற ஸ்தலம். காவிரி தென்கரை 276 சிவாலயங் களில் 48வது. மேற்கு பார்த்த 55 சிவாலயங் களில் ஒன்று.    ராஜகோபுரம் இல்லை. மூன்றுஅடுக்கு மாடங்கள். ரெண்டு பெரிய பிராஹாரம்.

புராணங்களில் சிவன் பிரம்மாவை ஒரு கல்பத்துக்கு ஒன்றாக, ஐந்து முறை ஸம்ஹரித்து உயிர்ப்பித்தார் என்றும் அந்த ஐந்து இடங்கள் ''மயானம்'' என்று அழைக் கப்படுவதாகவும் தெரிகிறது. இந்த மயானங் கள், காசி மயானம், கச்சி மயானம், திருக்கடவூர் மயானம், காழி மயானம் (சீர்காழி) , வீழி நாலூர் மயானம் எனப்படும். பிரம்மனுக்கு சிவன் ஞானம் போதித் ததால் மெய்ஞானம் என்று பெயர். மார்க்கண்டர் சிவனை பிரார்த்தித்த இடம்.  ஆதி கடவூர் இது. இங்கிருந்து கிணற்று ஜலம் திருக்கடையூர்  அம்ரிதகடேஸ்வரருக்கு அபிஷேகத்துக்கு தினம் செல்கிறதுண்டு. .

ஒரு வரிக்கதை சொன்னால்  ஸ்தலபுராணம் அறியலாம்.  ஏமக்கேரிடன் எனும் சாளுக்கிய சிவபக்த ராஜா போரில் தோற்றுப்போய் நாடிழந்து இங்கே வந்து வேண்டிக் கொண்ட தால் சிங்காரவேலன் ராஜா உருவில் சென்று அந்த எதிரி ராஜாவை வென்று சாளுக்கியன் மீண்டும் ராஜ்ஜியம் பெற்று நன்றிக் கடனாக 53 ஏக்கர் நிலம் இங்கே முருகனுக்கு எழுதி வைத்து, அது தான்  ''சிங்காரவேலி '' .
இங்கே ஒரு விசேஷம். வில்லேந்திய முருகனை இங்கே தரிசிக்கலாம். ருத்ராக்ஷம் தரித்து ஒரு கையில் வில், மற்றதில் அம்பு. காலணி அணிந்த சிங்காரவேலன்.  தக்ஷிணாமூர்த் திக்கு  இங்கே  ஆறு சிஷ்யர்கள் இங்கே.  தொந்தி இல்லாத கணபதி.
பாம்பாட்டி சித்தர் வாழ்ந்த ஊர்.  ஸ்கந்த ஷஷ்டி, திருக் கார்த்திகை, திருவாதிரை இந்த ஆலயத்தில் சிறப்பு நாட்கள். மயானம் பற்றி  தேவார பாடல்  சில:  எல்லாவற்றிலும்   ''திருக்கடவூர் 'மயானம்''  கவனியுங்கள்:

வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவரெம் பெருமான் அடிகளே.

மங்கைமணந்த மார்பர் மழுவாள் வலனொன்றேந்திக்
கங்கைசடையிற் கரந்தார் கடவூர்மயானம் அமர்ந்தார்
செங்கண்வெள்ளே றேறிச் செல்வஞ்செய்யா வருவார்
அங்கையேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே.

ஈடல்இடபம் இசைய ஏறிமழுவொன் றேந்திக்
காடதிடமா வுடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பாடலிசைகொள் கருவி படுதம்பலவும் பயில்வார்
ஆடல்அரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே.

இறைநின்றிலங்கு வளையாள் இளையாளொருபா லுடையார்
மறைநின்றிலங்கு மொழியார் மலையார்மனத்தின் மிசையார்
கறைநின்றிலங்கு பொழில்சூழ் கடவூர்மயானம் அமர்ந்தார்
பிறைநின்றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே.

வெள்ளையெருத்தின் மிசையார் விரிதோடொருகா திலங்கத்
துள்ளும்இளமான் மறியார் சுடர்பொற்சடைகள் துளங்கக்
கள்ளநகுவெண் டலையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பிள்ளைமதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே.

பொன்றாதுதிரு மணங்கொள் புனைபூங்கொன்றை புனைந்தார்
ஒன்றாவெள்ளே றுயர்த்த துடையாரதுவே யூர்வார்
கன்றாவினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார்
பின்தாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.

பாசமான களைவார் பரிவார்க்கமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பேசவருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.

செற்றஅரக்கன் அலறத் திகழ்சேவடிமெல் விரலாற்
கற்குன்றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்
மற்றொன்றிணையில் வலிய மாசில்வெள்ளி மலைபோல்
பெற்றொன்றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே.

வருமாகரியின் உரியார் வளர்புன்சடையார் விடையார்
கருமான்உரிதோல் உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
திருமாலொடுநான் முகனுந் தேர்ந்துங்காணமுன் ணொண்ணாப்
பெருமானெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே.

தூயவிடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள்
காயவேவச் செற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
தீயகருமஞ் சொல்லுஞ் சிறுபுன்தேரர் அமணர்
பேய்பேயென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே.

மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னுமயானம் அமர்ந்த
அரவம் அசைத்த பெருமான் அகலம்அறிய லாகப்
பரவுமுறையே பயிலும் பந்தன்செஞ்சொல் மாலை
இரவும்பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.

நான் சென்றபோது அந்த கோவிலில் ஒரு முதியவர் பணி புரிந்து வந்தார். மிக அற்புதமான குரல் படைத்த அவர் கட கடவென்று மேற்சொன்ன திருஞான சம்பந்தரின் மயான ஆலய பாடல்களை பாடி தெரிந்த அர்த்தங்களை சொன்னது நினைவிருக்கிறது. என் தமையனார் ரத்னமய்யரும் ஜோடி சேர்ந்து நிறைய ஸ்லோகங்கள் பாடினார். நான் என்னுடன் வந்தவர்களிடம் நிதி வசூலித்து அந்த முதியவருக்கு எங்களாலான காணிக்கையை சமர்பித்தோம்.

ஆலய நேரம் காலை 6.30 - மதியம் 12மணி வரை. மாலை 4.00 முதல் 7.30 வரை. .இன்னும்  மயானம் பற்றி சொல்கிறேன் 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...