Monday, February 15, 2021

VAIRAGYA SATHAKAM

 

வைராக்கிய சதகம்       J.K. SIVAN
ராஜா பர்த்ருஹரி

உஜ்ஜயினி க்கு  பழைய  பெயர்  அவந்திகா.  மால்வா  ராஜ்ஜிய தலைநகரம். செல்வ  செழிப்புள்ளது.  அதன் ராஜா விக்ரமாதித்தன்.  நமது சரித்திரத்தில்  ரெண்டு விக்ரமாதித்தர்கள் இருந்திருக்  கிறார்கள். ஒருவர் சகாப்தமாக பெயர் பெற்றவர்.  பிரபல கெட்டிக்கார ராஜா.  '' தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி....  என்று ஆரம்பித்து  ஒவ்வொரு அருமையான சமயோசித கதையின் முடிவிலும் விக்ரமத்தில் சரியான விடையை சொன்னதும்.........  '' விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, தான் தங்கியிருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ளுமே  அந்த ''வேதாளம்'' சம்பந்தப்பட்டவர்.   முடிந்தபோது விக்ரமாதித்தன் கதைகளும்  தொடர்கிறேன்.

இன்னொருவர்  ரெண்டாம் சந்திரகுப்தர் விக்கிரமாதித்தன்.  அவருக்கு சகோதரராக இருந்தவர் தான்  ராஜா பர்த்ருஹரி. பல மனைவிகள். அவர்களில் ஒருவள்  அழகி பிங்களா. ராஜா பர்த்ருஹரி சமஸ்க்ரிதத்தில் மஹா பண்டிதன். அவன் எழுதிய  300 ஸ்லோகங்கள் த்ரிசதி. சுபாஷிதம், எனப்படும்.  நூறு  நீதி சதகம். நூறு வைராக்கிய சதகம்.  இன்னும் நூறு  ஸ்ரிங்கார சதகம்.    முதலில்  வைராக்ய சதகத்தை  ரசிப்போம் .

பர்த்ருஹரி நீதிமான்.  அவன் அழகிய மனைவி  அரண்மனை தேரோட்டி மீது காதல் கொண்டவள் என்று அறிந்து நாட்டை அரச போகத்தை எல்லாம் வெறுத்து துறந்து   ராஜா  பர்த்ருஹரி சன்யாசியாகிறான் என்று  முந்தைய பதிவில் அறிந்தோம். பல  வருஷம் காட்டில் தவம் புரிந்து  சந்நியாசியாக  ஊர் எல்லாம் சுற்றியவன் பர்த்ருஹரி.  முதலில் கோரக்நாத் யோகியின் சிஷ்யன்.

चूडोत्तंसितचन्द्रचारुकलिका चञ्चच्छिखाभास्वरो
लीलादग्धविलोलकामशलभः श्रेयो दिशाग्रे स्फुरन् ।
अन्तस्फूर्जदपारमोहतिमिरप्राग्भारमुच्चाटयन्
चेतस्सद्मनि योगिनां विजयते ज्ञानप्रदीपो हरः ॥।  

Choodothamsita-chandrachaarukalikaa-chanchachchhikhaabhaaswaro
Leelaadagdha-vilola-kaamashalabhah shreyo dishaagre sphuran
Antahsphoorjad-apaara-mohatimira-praagbhaaram-uchchaatayan
Chetah sadmani yoginaam vijayate jnaanapradeepo harah     [1]  

சூடோ³த்தம்ஸிதசந்த்³ரசாருகலிகாசஞ்சச்சி²கா²பா⁴ஸ்வரோ
லீலாத³க்³த⁴விலோலகாமஶலப:⁴ ஶ்ரேயோத³ஶாக்³ரே ஸ்பு²ரந் ।
அந்த:ஸ்பூ²ர்ஜத³பாரமோஹதிமிரப்ராக்³பா⁴ரமுச்சாடயந்:
சேத:ஸத்³மநி யோகி³நாம் விஜயதே ஜ்ஞாநப்ரதீ³போ ஹர: ॥ 1 ॥

பர்த்ருஹரி சிவபக்தன்.  என் பகவான்  பிறைசூடி.  ஜடாமுடி அழகன்.  நெற்றியிலுள்ள  த்ரிநேத்ரத்தால்,  முக்கண்ணால், மன்மதனை நொடியில் சாம்பலாக்கினவன், விளக்கில் வீழ்ந்து மாயும்  விட்டில் பூச்சியாக செய்தவன்.   மகா தேவன், தவயோகி, அவன் அல்லவோ எல்லா யோகிகள் மனத்திலும் வீற்றிருக்கும் ஞானவான். அஞ்ஞானத்தை  அழிப்பவன்.  அவனை வணங்கி துவங்குகிறேன்.


भ्रान्तं देशमनेकदुर्गविषमं प्राप्तं न किञ्चित्फलं
त्यक्त्वा जातिकुलाभिमानमखिलं सेवा कृता निष्फला ।
भुक्तं मानविवर्जितं परगृहेष्वाशंकया काकवत्
तृष्णे जृंभसि पापकर्मनिरते नाद्यापि संतुष्यसि॥

Bhraantam desamanekadurgavishamam praaptam na kinchitphalam
Tyaktwaa jaatikulaabhimaanamakhilam seva kritaa nishphalaa
Bhuktam maanavivarjitam paragriheshwaashankaya kaakavat
Trishne jrimbhasi paapakarmanirate naadyaapi santushyasi   

ப்ராந்தம் தே³ஶமநேகது³ர்க³விஷமம் ப்ராப்தம் ந கிஞ்சித்ப²லம்
த்யக்த்வா ஜாதிகுலாபிமாநமுசிதம் ஸேவா க்ருʼதா நிஷ்ப²லா ।
புக்தம் மாநவிவர்ஜிதம் பரக்³ருʼஹேஷ்வாஶங்கயா காகவத்
த்ருʼஷ்ணே ஜ்ருʼம்பஸி பாபகர்மபிஶுநே நாத்³யாபி ஸந்துஷ்யஸி ॥ 2

''நான் சுற்றாத இடம் கிடையாது.  எங்கெல்லாமோ அலைந்தேன். கல், முள்,  பள்ளம்,  மேடு, காடு,  நாடு  ஒன்று பாக்கி இல்லை.  என்னத்தைக்  கண்டேன்? என்ன பிரயோஜனம்?   என்ன சொன்னாலும் தட்டாமல்  இரவு பகல் பார்க்காமல்  வீடு,  மானம் மரியாதை எதுவும் பார்க்காமல் அடிமையாக  ராஜாவுக்கு சேவை, முதலாளி, எஜமானன்,  பணக்காரர்களுக்கு எல்லாம்  உழைத்தேன்,  சே,  இதனால்  என்ன பலன் அடைந்தேன்?  தன்னை யாராவது ஏதாவது செய்து  விடுவார்களோ என்ற பயத்தோடு காக்கை  அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு பயந்து கொண்டு  சாப்பிடுவது போல் சோற்றை உண்டேன்.  ''ஏ  பேராசையே , என்னுள் இருந்து கொண்டு என்னை இப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க   ஆட்டுவிக்கிறாய்.  தப்பு தப்பாக ஒவ்வொன்றையும் செய்ய வைக்கிறாய். இன்னுமா உனக்கு திருப்தி இல்லை?''


उत्खातं निधिशङ्कया क्षितितलं ध्माता गिरेर्धातवो
निस्तीर्णस्सरितांपतिर्नृपतयो यत्नेन संभाविताः ।
मन्त्राराधनतत्परेण मनसा नीताः श्मशाने निशाः
प्राप्तः काणवराटकोऽपि न मया तृष्णेऽधुना मुञ्च माम् ॥

Utkhaatam nidhishankayaa kshititalam dhmaataa girerdhaatavo
Nisteernah saritampatirnripatayo yatnena santoshitaah
Mantraaraadhanatatparena manasaa neetaah shmashaane nishaah
Praaptah kaanavaraatako’pi na mayaa trishne ‘dhunaa muncha maam [4]

உத்கா²தம் நிதி⁴ஶங்கயா க்ஷிதிதலம் த்⁴மாதா கி³ரேர்தா⁴தவோ
நிஸ்தீர்ண: ஸரிதாம் பதிர்ந்ருʼபதயோ யத்நேந ஸந்தோஷிதா: ।
மந்த்ராராத⁴நதத்பரேண மநஸா நீதா: ஶ்மஶாநே நிஶா:
ப்ராப்த: காணவராடகோঽபி ந மயா த்ருʼஷ்ணே ஸகாமா ப⁴வ ॥ 3 ॥

''ஆசை  எவனை விட்டது?  பூமியை முதுகு ஓடிய  ஆழமாக தோண்டுகிறான். மலையை குடைகிறான். எதற்கு? அதற்குள் இருக்கும் விலையுயர்ந்த கனிம பொருள், வைரம், தங்கம் கிடைக்காதா? என்று தானே. அதையெல்லாம் எடுத்து அலசி, உருக்கி பாடுபடுகிறான் . கடல் கடந்து வெளிநாடுகளில் போய்  ஆதாயம் தேடுகிறான்.  ராஜாக்களை வாழ்த்தி புகழ்ந்து  ஆதரவு நாடுகிறான்.  இரவெல்லாம் ஸ்மசானத்தில்  அமர்ந்து பூஜைகள் புரிந்து மந்திரங்கள் ஜெபித்து  துர் தேவதைகள் உதவியையும்  நாடுகிறான்.  நானும்  இதெல்லாம் செய்தவன் தான். இதனால் என்ன பயன் பெற்றேன். செல்லாக்காசும் பெறவில்லை. வேண்டவே வேண்டாம்.  பேராசையே என்னைவிட்டு ஓடு.''  

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...