Thursday, February 11, 2021

SOOR DAS

 

ஸூர்தாஸ்        J K  SIVAN 

       13      வசிய  ரஹஸ்யம்...

நமக்கும் ஸூர் தாசுக்கும் உள்ள வித்யாசம் நாம் கண்ணிருந்தும் கண்டதை எல்லாம்  பார்ப்பவர்கள்.  அவர்  கண்ணில்லாமல் கண்ணனைப் பார்ப்பவர். கிருஷ்ணனின் வேணுகானத்தை  எண்ணிப் பார்க்கிறார். காதில் இன்பத் தேனாக வந்து பாய்கிறது. 
''ஓஹோ,  ஏதோ ஒரு குயில் தான் பாடுகிற தோ?  இல்லை  இல்லை .குயிலுக்கு இந்த ரசனை கிடையாதே. அதற்கு குரல் ஒன்று தான் இனிமையாகஇருக்கும். மனதைப்  பிழியும் இந்த ரசானுபவம், சகல உயிர்களையும் கட்டிப்போடும் மாய சக்தி கிருஷ்ணன் வாயில் வைத்து ஊதும்  மூங்கில் குழாயிலிருந்து  அன்றோ வருகிறது. கொஞ்சம் கவனிக்கிறார். மேலே மேலே அவரை இன்ப சாகரத்தில் குழலிசைஆழ்ந்து மூழ்க  வைக்கிறது.  கண்ணனின்  உதடுகளிலிருந்து வெளிப்படு வது  அவனது மூச்சுக் காற்றுஒன்று தான். அதை  முழுதுமாக வாங்கி இனிமை யான  காந்த சக்தி மிக்க இசையாக  வெளியே சஞ்சரிக்கச் செய்வதுஅவனது சாதாரண மூங்கில் குழல். உலகிலேயே எளிமையான ஒரு சங்கீத கருவி.

''அடடே,  ஸூர் தாஸின் கவனம் இப்போது  கிருஷ்ணனிடமிருந்து அவனதுபுல்லாங்குழல் மேல் படிந்துவிட்டதா? . ஆச்சர்யத்தோடுஅதை கேட்கிறார் :

''ஹே,  எளிய மூங்கில்புல்லாங்குழலே,   நாணல் குழலே,   எனக்கு உன் ரகசியத் தைச்  சொல்கிறாயா? நீ என்ன தவம் செய்தாய், என்ன விரதம் இருந்தாய்? எப்படி உனக்கு இந்த கிருஷ்ணன் வாயோடு தொடர்பு கொள்ள முடிந்தது?. எப்படி கிரிதாரியின் அதரங்களில் தங்கி அவனை முத்தமிட்டுக்கொண்டே இருக்க முடிந்தது? எப்படி அந்த சியாமள வண்ண னின், தாமரைக் கண்ணனின் பூரண அன்பும் ஆதரவும் உனக்கு கிடைத்தது? அவன் உடலிலும் நீ, அவன்உள்ளத்திலும் நீ, அவன் அதரத்திலும் நீ.   அவனை நீ இன்றி யோசித்து பார்க்கக்கூட முடியாதே. 
ஹே   மூங்கில் குழாயே, என்ன மாயம் செய்து இப்படி  கண்ணனோடு  பிரிக்க முடியாத இந்த தொடர்பு பெற்றாய்?   என்ன தவம் செய்தனை சொல்? ஜகத் காரணனை, ஜகத்ரக்ஷகனை நீ எப்படி உன் அடிமையாக்கினாய்?   இணை பிரியாது அவனோடு சேர்ந்து காலத்தால் அழியாத புகழ் பெற்றாய்?   ஏதோ வசியம் செய்திருக்கிறாய். சீக்கிரம் அந்த   வசிய ரஹஸ்யம் என்ன என்று சொல் ?

சூர் தாஸின் அந்த பாடல் இது

Ri bansi kaun tap tein kiyo
Rahat giridhar mukh hi lagi 
Adharan ko ras piyo 
Shyam sundar kamal lochan 
Tohi tan man diyo
Sur shri gopal bas bhayen
Jagat mein yash liyo 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...