Tuesday, February 16, 2021

SURDAS


 ஸூர்தாஸ்   ----          J K  SIVAN 


15.  எழுந்திரடா  குழந்தே

 சூர்தாசுக்கு  கண்தெரியாது  என்று நாம் நினைத்தால்  நாம் தான் குருடர்கள். புறக்கண்ணால்   சிறி து தூரம் வரை இருப்பதை  அப்படி பார்க்கும் போது  மட்டும் தான்  காண முடியும். மனக்கண் அற்புதமாக  பல யுகங்கள் தாண்டி  எங்கோ எப்போதோ  நடந்ததைப்  பார்க்கிறது.  
 குட்டி  கிருஷ்ணனை தொட்டிலிலிருந்து  யசோதை  எழுப்பும்  காட்சியை  எவ்வளவு  அற்புதமாக ஸூர்தாஸ்   வர்ணிக்கிறார் பார்க்கலாமா?  இந்தியோ  வ்ரஜபாஷையோ  நமக்கு தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் எவரோ மொழிபெயர்த்ததை தான் ரசிக்கமுடிகிறது என்றாலும்  அதை  தமிழில் அனுபவிப்போம்.

 wake up , Krishna,   wake the lotus-petals                  
 open the water-lilies droop
 the bumblebees have left
the creepers cocks crow,
and birds chirp on the trees.
The cows are in the byre lowing;
they run after their calves;
the moon fades before the sun.
Men and women arise
and joyfully sing their songs;
Krishna, of hands lotus-like awake,
for the day is about to dawn.    

சுப்ரபாதம்.  பொழுது புலர்ந்துவிட்டது . எழுந்திரு  கிருஷ்ணா, சீக்கிரம்.  விழித்துக்கொள்.  இதைப்பார். எவ்வளவு அழகாக  தாமரை மலர்கள் மொட்டு அவிழ்கிறது.  அதோ  அல்லி மலர்களும் எவ்வளவு  தேன் வண்டுகளை வயிறு நிரப்பி வழி அனுப்புகிறது. கொடிகள் காற்றில் அசையும் போது சிறு சிறு பறவைகள் ஊஞ்சலாடிவிட்டு பறக்கின்ற அழகைப் பார்.  கொக்கரக்கோ  சப்தங்கள்கேட்கிறதா?  சொல்லி வைத்தாற் போல்  எல்லா சேவல்களும் ஒரே மாதிரி ஸ்வரத்தோடு சப்த மிடுகின்றன.  சப்த ஜாலங்கள் என்றால் மரங்களில்  கூவும்  பறவைகளின் வினோத ஒலிகள் தான்.  அம்மா, அம்மா என்று  அடிவயிற்றி லிருந்து எழும்பும் பசுக்களின் குரல் கன்றுகளை சந்தோஷப் படுத்துகிறது. அவிழ்த்து விட்டவுடன் கன்றுக் குட்டிகள் எவ்வளவு  ஆசையாக தாவித் தாவி அம்மாக்களைத்  தேடுகிறது. சூரியன் கிழக்கே எழும்பியதால்  சந்திரனின் சாம்ராஜ்யம்  முடிவுக்கு வருகிறது.  கோப கோபியர்கள்  அன்றாட கடமைகளைத்  துவங்க தொடங்கி விட்டார்கள்.
 அட எவ்வளவு இனிமையாகப்  பாடிக் கொண்டே அவர்கள் சந்தோஷமாக தங்களது வேலைகளை செய்கிறார்கள்.  எழுந்திரடா  குட்டிகி ருஷ்ணா, உன் தாமரை மலர் போன்ற திருக்கைகளை நீட்டு  தூக்கி விடுகிறேன். எழுந்திரு.''           

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...