Tuesday, March 31, 2020

RAMANUJAR



ஸ்ரீ ராமானுஜர்  J K SIVAN


         அத்வைத  விசிஷ்டாத்வைத வாதம் 

ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு இருந்த சிறந்த கல்வி கேள்விகளில் தேர்ந்த பண்டிதர்களில் ஒருவர் யஞமூர்த்தி.  அத்வைத சித்தாந்தத்தை பின்பற்றிய யஞமூர்த்தி பல பண்டிதர்களை வாதத்தில் வென்றவர். நிறைய விரிவுரைகள் வேதாந்த ஸாஸ்த்ரங்களுக்கு எழுதியவர். அதிகம் இவரைப் பற்றி அறியமுடியவில்லை.

''குருநாதா, யாரோ  ஒரு வைஷ்ணவர்  சிறந்த ஞானி என்று போற்றப்படுகிறார். எங்கும் அவர் பிரபலமாக பேசப்படுகிறாராம். அவருடன் வாதத்தில் எவராலும் ஜெயிக்க முடியவில் லையாம்''

''யார் அவர்? என்ன பெயர் ?  எங்கிருக்கிறார்?''

''ராமானுஜர்.  காஞ்சியில் இருந்தவர்.  அடிக்கடி இப்போதெல்லாம் ஸ்ரீ ரங்கம் வருகிறார். ஸ்ரீ வைஷ்ணவத்தை காற்றை விட வேகமாக  பரப்புகிறாராம். அவரது  புதிய கோட்பாடு விசிஷ்டாத்வைத வாதத்தை எவராலும் வெல்ல முடியவில்லை யாம்'  அக்காலத்திய  விவாதங் கள், எதிர்ப்பவருக்கு தக்க மரியாதையுடன்,  சம்பிரதாய கோட்பாடுகளை  மட்டுமே  விவாதப் பொருளாக வைத்தார்கள்.   எவருடைய கோட்பாடு பெரும்பாலோரால்  ஆமோதிக்கப் பட்டு , ஏற்றுக்கொள்ளப்பட்டதோ அவர் வென்றவர் என்று ஏகமனதாக  கௌரவிக்கப் பட்டனர். நிரம்ப கற்றவர்கள் பொருத்தமாக வேத சாஸ்திர பிரமாணங்களை முன் வைத்து மற்றவர் சந்தேகங்களை நிவர்த்தி செய்து ஏகோபித்து ஒப்புக்கொள்ள வைத்தனர்.  மன்னனே இந்த வாதங்களை விரும்பி அரசவை மண்டபத்தில் பலரும் பாராட்டும்படி ஏற்பாடு செய்த காலம்.  தமது வாதத் திறமையால் யஃனமூர்த்தி அட்வைதத்தை எங்கும் பரப்பி வந்த  நேரம். .மாயாவாத (அத்வைத) கோட்பாடை பின்பற்றிய யக்ஞ மூர்த்தி என்னும் புகழ்பெற்ற  இந்த மஹா பண்டிதர் எல்லா சமஸ்தானங் களுக்கும் சலென்று பண்டிதர்களை  வித்வான் களை எல்லாம் தமது வாதத்தில் ஜயித்து, (ஏகதண்ட) ஸந்யாஸாச்ரமத்தையும் ஏற்றுக் கொண்டு, சிஷ்யச் செல்வம், கல்விச் செல்வம் முதலானவற்றோடு கூடியவராக  ஒப்பற்ற பெருமையோடு, புகழ் வாய்ந்த பண்டிதர். 
ஒரு நிமிஷம் யோசித்த  யஃனமூர்த்தி, ஆம்  நானும் கேள்விப்பட்டேன். ராமானுஜர் என்ற  இளம் வயதினர்  பெயர்  சபைகளில் ஆடி படுகிறது. சிறந்த வித்துவான். சகல கலைகளும் கற்ற ஸ்ரீ வைஷ்ணவராம். அவரது விசிஷ்டாத்வைத கோட்பாடு காட்டுத் தீயெகிறார்கள்.
  
''அவருக்கு சேதி அனுப்புங்கள்.  அவரை சந்தித்து ஒரு விவாதம் நடத்தி அவர் கோட்பாடுகளை முறியடிக்கவேண்டும்’’   என்று யக்ஞ மூர்த்தி  தயாரானார்.  ராமானுஜரை ஜெயிப்பதற்காக, சுவடிகளில் பல சாஸ்திர நூல்களை எழுதி, ஆயிரக்கணக்கான அச்சுவடிகளை ஓர் வண்டியில் கட்டி எடுத்துப் போட்டுக் கொண்டு, தன் வித்யாகர்வம் தோற்றமளிக்கும் வகையில் படாடோபமாக சிஷ்யர்கள் சூழ வேகமாக  ஸ்ரீரங்கத்திற்கு வந்தார் .

வாசலில் கட்டியம் கூறி  வாத்ய கோஷம் ஒலித்தது.  ராமானுஜர் தனது ஆஸ்ரமத்தில் சிஷ்யர்களுக்கு   ஸ்ரீ வைஷ்ணவ பாடம் நடத்திக் கொண்டிருந்தார். 

ஒரு சிஷ்யர்  அவசரமாக உள்ளே ஓடிவந்தனர்  ராமானுஜரை வணங்கி எதிரே சேதி சொல்ல நின்றார்

.''என்ன என்று  ஜாடையாக கேட்ட  ஸ்ரீ ராமாநுஜரிடம்

‘’ ஒரு பெரிய பண்டிதர்,  யஞ மூர்த்தி யாம் . உங்களை பார்க்க வந்திருக்கிறார்,  சிறந்த தர்க்க வாதம் பண்ணுபவர் என்று சிஷ்யர்கள் சொன்னார்கள் ’’   

''தக்க மரியாதையோடு அவரை அழைத்து வாருங்கள்'' 

''வாருங்கள்'' என்று இனித்த முகத்துடன் எழுந்து நின்று  அவரை  வரவேற்று ஆசனம் அளித்து

 ‘’நான் எந்த விதத்தில் உங்களுக்கு உதவலாம்?’’  என்று  ராமானுஜ ஆசார்யர் கேட்டார்.

“ ஓ  நீர் தான்  இராமாநுஜரோ,  உம்மைப்பற்றி கேள்விப்பட்ட ஆவலில்  என்னோடு நீர் நேரே சாஸ்த்ர தர்க்கம் புரிய வேணும், முடிந்தால் ஜெயிக்கவேண்டும்  என்ற  கோரிக்கையோடு வந்திருக்கிறேன்  ” என்றார்  யஞ மூர்த்தி சிரித்துக்கொண்டே. அவர் சிரிப்பில் எதிரே நிற்பது ஒரு தூசி என்ற அஹங்காரம்  த்வனித்
தது. 

இராமானுஜரும், சிரித்துக்கொண்டே,'' போட்டி யா?  நீங்கள்  பெரியவர். என்னோடு வாதம் செய்ய முற்பட்டது எனக்கு பெரும். கௌரவம் பெருமை.  வாதம் என்றால்  யாராவது  ஒருவர் தானே ஜெயிக்க முடியும்.  ஒருவேளை  என்னால் நீர் வாதத்தில் ஜயிக்கப் பட்டீரானால்  தாங்கள்  நான் சொல்வதை ஏற்றுக் கொள்ள  சம்மதமா?   என்று கேட்டார் யதிராஜர்.

யஜ்ஞமூர்த்தி கை  கொட்டி சிரித்தார்.
“இராமாநுஜரே! உங்களுக்கு அப்படி ஒரு ஆசையா. இருக்கட்டும்.   உம்மால் ஜயிக்கப்பட்
டால், உமது மதத்தைத் தழுவி, என் தலையில் உமது பாதுகைகளைத் தாங்கி, உமது பெயரை
யே எனக்குப் பெயராகக் கொள்கிறேன்.  சரியா.  நிச்சயம் அது நடக்கப்போவதில்லை .   நான் இப்போது கேட்கிறேன்,  அது போலே நீர் இப்போது என்னால் ஜயிக்கப்பட்டால் என்ன செய்வீர்”

''யஃனமூர்த்தி பண்டிதரே , வித்வானே! உம்மால் நான் ஜயிக்கப்பட்டால் நான் இது வரை  எழுதியுள்ள க்ரந்தங்களைக் கைவிட்டு விடுகிறேன். இனி எந்த நூலும் எழுதவும் மாட்டேன். தங்களுக்கு திருப்தியா?''

யஜ்ஞமூர்த்தியும், யதிராஜரும் தமது சாஸ்த்ர
வாதப் போருக்குப் பதினெட்டு நாட்களை, பாரதப்போர் போல,  முடிவாக  ஒப்புக்கொண்டு   சாஸ்த்ரங்களில் தம் திறமையனைத்தையும் காட்டி வாதம் செய்தனர்.  பதினாறு நாட்கள் வெற்றி தோல்வியில்லாமல்   அத்வைத x  விஸி ஷ்டாத்வைத   ஞானப்போர்  புரிந்தனர்.   அதன் விவரங்கள் கிடைக்கவில்லை.  கிடைத்தாலும் நம்மைப்போன்றவர்களுக்கு புரியவும் போவதில்லை. 

பதினேழாவது நாளன்று யஜ்ஞமூர்த்தியின் விதண்டா  வாதங்களாலே,  குறுக்கு வெட்டு எதிர் வாதங்களால்,  ஸ்ரீ ராமானுஜரின் நேர்மையான வாதங்கள் தள்ளப்பட்டன போலத் தோற்றமளித் தன. மிகவும் சந்தோஷத்தோடு, வெற்றி உற்சா கத்தோடு  யஞ மூர்த்தியும் அன்றைய  வாதம் முடித்து  தன் மடத்திற்குச் சென்றார்.

அன்று தான் முதன் முதலாக  ராமானுஜர் சற்று கலங்கினார். தமது மடத்திற்குச் சென்ற இராமானுஜர் நெஞ்சு உடைந்தவராக  தமது திருவாராதனைப் பெருமாளான  காஞ்சி வரதராஜப் பெருமாளை  தியானித்தார்.

 “பேரருளாளப் பெருமாளே! புருஷோத்தமனே! நெடுங்காலமாக இந்த வைஷ்ணவ தர்சனம் நம்மாழ்வார், நாதமுனிகள், ஆளவந்தார் காலங்களில் எங்கும் எப்போதும் தோல்வி யடையாதபடி வைணவ சம்ப்ரதாயம் தேவரீரால் பாதுகாக்கப்பட்டு  இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது.  ஜகன்னாதா,  அடியேன் காலத்தில் அது தோல்வி யடையுமோ? இதுவரையில் தேவரீருடைய  ஸ்வரூபம்,  குணம் முதலியவை உண்மை என்று விளங்கும் படி  உன்னத  ஸ்ரீ வைஷ்ணவ ப்ரமாணங்களை தேவரீர் முன்வைத்து பல உதாரண புருஷர்கள்  மூலம்  நடத்திக் கொண்டு வந்தீர். இப்போது என் காலத்தில் ஒரு மாயா வாதியை  ஏவி விட்டு,  அவர்  சந்தோஷத்தோடு அந்த ப்ரமாணங்களையே அழிக்கத் திருவுள் ளமோ?  உமது அலகிலா விளையாட்டு அப்படியாகில், நான் உமது அடிமை, என்ன செய்ய முடியும். . உமது சித்தம் அதுவாக  இருந்தால்  அப்படியே செய்யும். எதுவும் உம்மால் ஆகும். எல்லாம் உம் செயலே" என்று  மனம் நொந்து   வரதராஜனிடம் விண்ணப்பித்தார். 

அன்றிரவு  உணவு கொள்ளாமல் உறங்கச் சென்றுவிட்டார் ராமானுஜர்.  வெகு நேரம் கண்ணயறவில்லை. தமது பொறுப்பில் தவறுவோமோ  வழி தேடியவாறு  வருத்தத்
தோடு தூங்கிவிட்டார். 

சற்று கண்ணயர்ந்து உறங்கிய  ராமானுஜரின்  கனவில்  கருணைக் கடலான  காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் புன்னகையோடு தோன்றி எழுப்பி   “குழந்தாய் ராமானுஜா ! எதற்கு உனக்கு வருத்தம்?  நீர் வல்லவரன்றோ! ஒரு பெரிய அறிவாளியை உமக்கு சிஷ்யனாக அளித்தி ருக்கிறேன், உமது பரமாசார்யரான ஆளவந் தாரால் இயற்றப் பெற்ற "மாயாவாத கண்டனம்"  ஆயுதமாகக்கொண்டு   நாளை  நீ  யஜ்ஞமூர்த்தியை ஜயிப்பாய்''  என்று ஆசிய ருளினார்.

கனவு களைந்து புத்துணர்ச்சியோடு  ராமானுஜர் எழுந்தார். உடனே  ஆளவந்தார் இயற்றிய மாயாவாத கண்டன ஓலைச்சுவடிகளை  தேடி எடுத்து இரவெல்லாம் உள்  வாங்கினார்.  பொழுது புலர்ந்தது. நித்ய அனுஷ்டானங்கள் பூஜை முடிந்து மிகுந்த உற்சாகத்தோடு  ஒரு  புதிய ராமானுஜர், தெளிந்த  மனத்தோடு,  நிமிர்த்திய  நெஞ்சோடு யஜ்ஞமூர்த்தியை வெற்றி கொள் வதற்காக,  வாதம் புரிய   சபைக்குள் நுழைந்தார். 

ராமானுஜர் மிகுந்த நம்பிக்கையோடு, தைரியத்தோடு, உற்சாகத்தோடு முகத்தில் ஒளியோடு  வாத ஸபையில் இவ்வாறு நுழைவதைக் கண்ட யஞமூர்த்தி,  விதிர் விதிர்த்தார்.  வியப்புடன் யோசித்தார்.

 “ராமானுஜர்   நேற்று மிக வருந்தியவராய், துயரத்தோடு   தோல்வி எதிரே தெரிபவர் போல், தம் இருப்பிடம் சேர்ந்த யதிராஜர், இன்று அதிக கம்பீரமான கஜேந்திரனைப் போல விளங்குவதற்குக் காரணம் என்னவாக இருக்கும் ?. ஒரு வேளை என் வாதத்தை முறியடிக்க கைவசம் ஏதோ சாஸ்திர ப்ரமாணத்தோடு வந்திருப்பாரோ?   இந்த  பதினாறு நாட்களிலே அவரை வெல்வது சுலபமில்லை, இதுவரை சந்தித்த பண்டிதர்கள் சாஸ்திரிகள் போல் இவர் இல்லை என்று புரிந்ததே. இன்று  ஒருவேளை , பல பேர் முன்னிலையில் நான் தோற்று விட்டால்?   என்னால் தாங்க முடியாத  அவமானம். ..எனக்கு  மூச்சு இருக்கும் வரை  ஒரு பெரிய  இழுக்கு.. இதுவரை நான் கட்டிய கொட்டைகள் சரிந்து விழ விடக்கூடாது. மாட்டவே மாட்டேன் .மரியாதை யாக, பெருந்தன்மையோடு அவரை சேர்ந்து விடுவது  நல்லது'' என்று முடிவெடுத்தார் .

சற்று தயக்கத்தோடு, அதே சமயம் கௌரவமாக  அவர் பேச்சு ஒலித்தது. 

‘ராமானுஜரே!   நீர் இவ்வுலகில் ஹரியின் அம்சாவ தாரமாகப் பிறந்தவர் என்பதை சந்தேகம் இல்லை.. உமது வாதங்கள் நேர்த்தியாக இருந்தது.  நானும் நேற்றெல்லாம்  நன்றாக யோசித்துப் பார்த்ததில் உமது   விசிஷ்டாத்வைத கோட்பாடுகள் சத்துடையவை,  உன்னதமானவை ,ஏற்றுக் கொள்ளக் கூடியவையே  என  தீர்மானித்
து விட்டேன்.   அவை சிறந்தவை என இந்த சபையில்  ஏகமனதாக ஒப்புக்கொள்கிறேன். 

ஆச்சர்யமாக எல்லோரும் கரக்கம்பம் சிரக்கம்பத்தோடு அதை  ஏற்றனர்.  யஞமூர்த்தி  ராமானுஜரை ப்ரதஷிணம் பண்ணிானார்.


கரங்களை சிரமேற் கூப்பி   கண்களை மூடியவாறு   ’வரதராஜா’’ என்று மனமார வேண்டிய ராமானுஜர், நன்றிப்பெருக்கால் வழியும் ஆந்த கண்ணீரை துடைத்தவாறு 

“யஜ்ஞமூர்த்தி பண்டிதரே, !   இது என்ன? ஏன் நீர் தொடர்ந்து  இன்று என்னுடன் வாதம் துவங்க வில்லை?” என்று கேட்டார்.

''குருநாதா,  தேவரீர்க்கு  பகவான் விஷ்ணுவே ப்ரத்யக்ஷமாக ஸேவை ஸாதித்திருக்கிறார் என்பதை உணர்கிறேன். நீர் ஒரு அவதார புருஷர். இப்போது தேவரீருக்கும் விஷ்ணுவுக்கும் வேற்றுமை யில்லை; ஆகையால் தேவரீர் திரு முன்பே அடியேன் எப்படி வாதம்  தொடர்வேன் . தெரிந்த முடிவு தானே!  

 ''எனது ஏக தண்டத்தை தூர எறிந்து  விட்டேன் . “யதிராஜரே! உம்மால் நான் ஜயிக்கப்பட்டே ன். சரணமடைந்த என்னை ரக்ஷிப்பீர். யஜ்ஞோ பவீதம் த்ரிதண்டம் முதலானவற்றை அளித்து என்னை உமது சீடனாக்குவீர்” என்று  கைகூப்பி வேண்டிய யஞ மூர்த்தி   ''அருளாளப் பெருமாள்’   என்னும் வரதராஜ பேரருளாளன் திரு நாமத் தோடு, தமது ‘எம்பெருமானார்’ என்னும் நாமத்தையும் சேர்த்து, ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ தேவராஜமுனி என்னும் திரு நாமத்துடன் அப்போது முதல்  ஸ்ரீ ராமானுஜர் தொண்டனானார்.



பெரிய மடம் ஒன்று  கட்டுவித்து, பெருமையிலே தன்னையொத்த யக்ஞ மூர்த்தியை அம் மடத்தி லே  வாசம் செய்ய வைத்தார்  ராமானுஜர். 

SUR SAGARAM




சூர்  சாகரம்   J K SIVAN


        பக்தி பரவசம் வேண்டுமா,  இதோ!

பக்தி பரவசம்  ஒன்றால்  தான்   தன்னை இழந்து இறைவனோடு ஒன்றி அவனது ப்ரபாவத்தில் மூழ்கி ஆனந்த மயமான நிலையிலிருக்க முடியும்.  இப்படி இருக்கும்   மஹான்கள் இந்த உலக சிந்தனை துளியும் இல்லாதிருப்பவர்கள். அவர்களது வாக்கில் சத்யம் எதிரொலிக்கும். அவர்கள் எழுத்தில் கற்பனையில் உண்மை பிரதிபலிக்கும். நம்மால் காண முடியாததை எளிதில் ஆனந்தமாக பேச்சிலும்  எழுத்திலும்  கண்டு ரசிப்பவர்கள், அனுக்ரஹிப்பவர்கள்.

அப்படி ஒருவர் தான் கண்ணற்ற சூர் தாசர். கண்ணன் அவர் மனதில் நிரம்பி, மூச்சாக அவரிடமிருந்து வெளிப்பட்டு பாடலாக வெளிவந்து எவராலோ எழுத்தில் இன்று நம் முன்னே புத்தகமாக நிற்கிறான். அவனை அந்த புத்தகத்தில் ரசிக்கவேண்டாமா? அதன் மூலம் சூர்தாஸின் இன்பத்தில் கடுகளவாவது நாமும் பங்கு கொண்டு அனுபவிக்க வேண்டாமா?

சூர்தாஸ் சொல்கிறார்:

''ஹே மனமே வா உனக்கு ஒரு நல்ல வழி சொல்லித்தருகிறேன். அங்கே இங்கே ஓடாதே. அதோ பார் ஒளிவீசும் சிவப்பு நிறத்தில் ஏதோ தெரிகிறதே என்னவென்று புரிகிறதா?   தெரியவில்லை அல்லவா?   பிறகு  என்ன யோசனை? நானே சொல்கிறேன்.அது  தான்  செந்தாமரைமலர்ப் பாதங்கள்.

ஓ....யாருடைய பாதம் என்று தெரியவில்லையா?அவன் யாரென்று யோசிக்கிறாயா ? அதுதான் அப்பா, நமது நந்தகோபன் மகன் கிருஷ்ணன். எவன் திருவடி துணை இருந்தால் பயங்கள் நீங்குமோ அவன்.

அரிது அரிது மானுடராகப் பிறத்தல் அரிது. அப்படிப் பிறந்து, இந்த வாழ்க்கை சம்சார கடலை தாண்டவேண்டாமா? அதற்கு சாதுக்களின் சத் சங்கம் தேவை இல்லையா?

இதோ என்னை பார். இரவு எது பகல் எது எனக்கு? எல்லாமே இருட்டு. .எல்லாமே வெளிச்சம். தூக்கம் ஏது? உடலில் உஷ்ணம் குளிர்ச்சி, மழை வெயில் படுவது தெரிகிறது. அனுபவிக்கிறேன். அற்ப சுகத்தை, (என் விஷயத்தில் காகித பணத்தை தேடி,) நாடி எத்தனையோ வருஷங்கள் கொடிய, கருமிகளுக்கு உழைத்தேன். என்ன பிரயோஜனம்?

நான் யார்? அந்த கோவிந்தனின் தாசானு தாசன். நவ வித பக்தி என்பார்களே அதில் விருப்பம் வேண்டாமா? அது என்னவா? சொல்கிறேன். என் ஹரியின் பெருமைகளை கேட்பது, அவன் பெருமைகளை நாவினிக்க சொல்வது, பேசுவது, ஸ்மரிப்பது, கணநேரமும் விடாமல் அவனை நினைவினில் நிறுத்திக் கொள்வது, பிரார்த்திப்பது, அவன் செந்தாமரை திருவடிகளில் சரணடைவது, நறுமண வாசமிகு மலர்களால் அவனை அர்ச்சிப்பது, வாசனாதி திரவியங்களால் அவனை மகிழ்விப்பது, அவனுக்கு உற்ற நண்பனாக சேவை புரிவது, இதையெல்லாம் விடு..... என்னையே அவனுக்காக மறந்து இழந்து அவனுக்கு என் உயிர் உடல் பொருள் ஆவி அனைத்தும் அர்ப்பணிப்பது.... போதுமா ??

போதும் போதும் போதும்..... என்கிறார் சூர்தாஸ் இந்த அருமையானபாடலில்:

Bhajahoon re man sri nand nandan abhaya charan arvind hey
Durlabh manav janam satsange tar jaave bhav sindh re
Sheet Aatap Vatavariyat , ae din aavanijaani re
Biphale sevenu kripan durjan chapal sab sukh lagi re…
Sravan Kirtan Smaran Vandan Paadsevan Dasya re
Poojan Sakhijan Atmanivedan , Govind Das abhilashi re…
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare .

LOST CHILD



                           அம்மா?     அப்பா  ??''  J. K  SIVAN

கூடவே  வரும் குழந்தை கூட்டத்தில்  நம் கைப்பிடியை விட்டு   திடீரென்று காணோம் என்றால்....அந்த  பதற்றத்தை நினைத்து பார்க்கவே முடியாது.  அனுபவித்தவர்களுக்கு தெரியும்.  திருவிழாக்களில்,  கோவில் உற்சவங்களில், பொருட்காட்சி சாலைகளில், பெரிய மால்களில்  சினிமா  தியேட்டர்களில்..  இது இன்னமும் நடக்கிறது.  பேசத்தெரியாத குழந்தை,  எங்கு பார்த்தாலும் குழந்தை திருடுபவர்கள்  நடமாட்டம்... அப்பப்பா,,, மன நிலை படும் பாட்டை எழுதவா முடியும்? அந்த அனுபவம் ஒரு தரம் அல்ல மூன்று தரம், அதுவும் அதே பெண்  குழந்தையால்  எனக்கு ஏற்பட்டது.  மூன்று முறையும் கிருஷ்ணன் தான் கண்டுபிடித்து கொடுத்திருக்கிறான் என்று அப்போது அறியவில்லை. இப்போது உணர்கிறேன்.

முதலில்  நான்கு  வயதான குழந்தையாக  என்னோடு நடந்துகொண்டே வந்தவள்  கும்பகோணத்தில் ராமஸ்வாமி கோவில்  ஒரு கும்பலில் திடீரென்று சிக்கி காணாமல் போனாள் . மற்ற குழந்தைகளோடு வெளியே வந்த நாங்கள் அவளை காணாமல் தேடினோம். அதற்குள் அவளை யாரோ அழைத்துக்கொண்டு போய் விசாரித்திருக்  கிறாகள் . குதிரை வண்டியில் ஏறப்போன நாங்கள் அவளைத்  தேடி   அலைந்து மீட்டோம்.

ரெண்டாவது கிட்டத்தட்ட இதே அனுபவம் பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி கோவிலில். ரொம்ப தேடல் அங்கு ஏற்படவில்லை  ஒரு சில நிமிஷங்கள் இதயத்  துடிப்பு அதிகரித்ததோடு சரி. மூன்றாவதாக  ஆபத்தான சூழ்நிலையில்  திருச்சானூரில் குளத்தின் படியில் உட்கார்த்தி வைத்துவிட்டு  நாங்கள் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டு திரும்புவதற்குள் தானும் சற்று நகர்ந்து எங்கோ ஒரு இடத்தில் குளத்தில் இறங்கியவளை நல்லவேளை ஒருவர் நீர் குடித்து மூழ்காமல் தூக்கி காப்பாற்றியிருக்கிறார். தேடி அங்கும் இங்கும் பார்த்தபோது சற்று தொலைவில் அவளை சுற்றி மூன்று நான்குபேர். நான் அவர்களுக்கு நன்றி சொல்வதற்குள் என்னை அவர்கள் திட்டி முடித்தாகிவிட்டது.

இந்த குழந்தை காணாமல் போகும் அனுபவம் ஒரு அருமையான கதையில் வருகிறது. படித்ததை   சுருக்கி சொல்கிறேன்.

கல்கத்தாவில் வசந்த கால பெருவிழா  கண்காட்சி. கிராமத்தில் எல்லோரையும்   ஜேஜே என்று கூட்டமாய்  ஈர்த்தது. சின்ன சின்ன சந்துகள் பூரா வளைத்து போட்டு  கடைகள்.   சின்ன வளைந்த தெருக்களில்  சிலர் குதிரைகள்  மீது, சிலர் நடந்து, கட்டை வண்டி, மாட்டு வண்டி, கை  ரிக்ஷாக்கள் என்று தனியாகவும் குடும்பத்தோடும் நிறைய பேர் கூடிவிட்டார்கள்.

ஒரு ஐந்து வயது பயல் அப்பாவின் கால்களுக்கியிடையே  கையைப் பிடித்தவாறு பரம சந்தோஷத்தோடு இந்த உலகையே மறந்து  கண்காட்சி பொருள்களை  பார்த்துக்கொண்டு  எங்கோ உலகத்தில் இருக்கிறான்.  அங்கங்கே வாயைப் பிளந்து ரசித்துக்கொண்டு நின்று விடுகிறான் மேலே நகர மறுக்கும் அவனை ''வா  வா ''  என கையைப் பிடித்து தர தர வென்று இழுக்கும் அப்பா அம்மா.  அவன் மனதைக்  கொள்ளை கொள்ளும்  டமாரம் அடிக்கும் குரங்கு, தாவும் கன்றுக்குட்டி பொம்மைகள். ரயில் தண்டவாளத்தில் ஓடுகிறது.   கண்ணை கவரும் நாய்,   யானை,  குரங்கு,  அணில் பொம்மைகள். எல்லாமே  காந்தம் போல் அவன் கண்களை கவர்கிறது.  கால்  மேலே நகர  மறுக்கிறது. . கடை நிறைய எண்ணற்ற தின்பண்டங்கள். கலர் கலராக பச்சை சிகப்பு, நீலம், மஞ்சள் எத்தனையோ வண்ண உருவத்தில் பலூன்கள். சின்னதும் பெரிதுமாக. கோலாகலமாக இருந்தது அவனுக்கு.

 ''எனக்கு அது வேணும் '' அவன்  கை  ஒரு பொம்மையை காட்டியது.  அப்பா வாங்கித்தர மாட்டாரே.   அவனுக்கு தெரியுயம். இருந்தாலும் ஆசை.  

சிவந்த கண்களோடு ''ஹூஹூம் ..வா இங்கே. கண்டதெல்லாம் வாங்க கூடாது. 
அம்மாவுக்கு குழந்தையின் ஆசை புரிந்தாலும்  ராக்ஷஸ அப்பாவிடம் எப்படி ரெகமெண்ட்  RECOMMEND பண்ணுவாள்? காசு அவன் தானே கொடுக்கவேண்டும். குழந்தையின்  கவனத்தை வேறுபக்கம்  ஈர்த்தாள் .

''கண்ணா  அதோ பார் அங்கே என்னன்னு?''    எதிரே  பச்சை பசேல் என்று தோட்டம். கடுகுச் செடிகள்  கொள்ளையாக பூத்திருந்தன. தங்க நிறம் கண்ணுக்கெட்டியவரை. அப்பப்பா  எவ்வளவு பட்டாம்பூச்சி, வண்ணாத்தி, தட்டான் பூச்சிகள், பொன் வண்டுகள். தும்பிகள். குட்டி குட்டியாக  அழகிய இறக்கைகளுடன் ரீங்காரம் செயது கொண்டு நிறைய பறந்ததில் பையன் மகிழ்ந்தான். அவற்றை துரத்திக்கொண்டு ஓடினான். கையில் பிடி படுவது போல் பாவலா காட்டி ஒரு வண்ணாத்தி பூச்சி அவனை ஏமாற்றியது.  வண்ண வண்ண ரெக்கை யை அடித்துக்கொண்டு அங்கும் இங்கும் பறந்தது.

''கோகுல், அங்கும் இங்கும் வயலுக்குள்  ஓடாதே  வா. போகலாம். '' அம்மா  அழைத்தாள் .பெரிய வயலில்  அவற்றை துரத்திக்  கொண்டு ஓடினான்.  வயல் நடுவே ஒரு பெரிய கிணறு . கைப்பிடி இல்லை.  கிணற்றில் பூச்சிகள் ஓடி ஒளிந்தன . கிணற்றை சுற்றி சுற்றி வந்தான்.

''கோகுல்  வா  வா வா''/   
 தூரத்தில் வரப்பில் இருந்து  அம்மா கூப்பிட்டாள்.  அப்பா ஒரு மர நிழலில் .
கிணற்றுக்கு அப்பால் ஒரு பெரிய பூந்தோட்டம். உயர உயர சாமந்திப்பூ, .சூரியகாந்தி பூ, ரோஜா  மல்லிகை செடிகள்.
அவன்  கவனம் இப்போது  சூரியகாந்தி பூ மேல்.   அவன் மேல் நிறைய மலர்கள் அபிஷேகம் செய்தன. நறுமணம் அவனுக்கு பிடித்தது.  எங்கிருந்தோ ஒரு மரத்திலிருந்து வெள்ளையாக புறாக்கூட்டம்   பறந்து அவனருகே அவன் தலையை தொடுவது போல் பறந்தபோது  அவற்றை துரத்தினான்.

''அம்மா  அதோ பார் புறா''  .
'வாடா  கோகுல்  வா போகலாம் '' அம்மாவின் குரல் கேட்டபோது எதிரே  பார்த்த  பெரிய  ஆலமரத்தை நோக்கி ஓடினான்.
அவனை ஓடிப் பிடித்து அம்மா கையால் அணைத்தாள்.   கடுகுச்செடி வயல் கடந்து கண்காட்சி சாலைக்குள் சென்றார்கள்.  நிறைய வளைந்து வளைந்து செல்லும் சந்துகள் எல்லாம் அந்த பொருட்காட்சி சாலையை சுற்றி இருந்தன. அம்மாவின் கையை உதறிவிட்டு ஒரு சந்தில் ஓடினான்.  அங்கே ஒரு பக்ஷணம் விற்பவன் நிறைய குலாப் ஜாமூன் ரசகுல்லா, பர்பி, ஜிலேபி எல்லாம் பரப்பி நடுவில் அமர்ந்திருந்தான். கூட்டம் நெரிசல்.
கோகுல்  சந்தோஷமாக  அந்த கடைக்குள்  ஓடினான். வாயில் எச்சில் ஊறியது   '' எனக்கு அந்த பர்பி வேண்டும்'' வாய் முணுமுணுத்தது. அப்பா வாங்கி தரமாட்டான் என்றும் புரிந்தது. எனவே மேலே வளைந்து நகர்ந்தான். மற்றும் ஒரு குறுகிய சந்து வந்தது அதில்  நிறைய அழகான கூடை கூடையாக மலர்கள் ஒரு இடத்தில், '' குல்மோஹர் வேண்டுமா''  என்று பூக்காரன் கத்தி விற்றுக் கொண்டிருந்தான்.  

கோகுல் கூடைகள் அருகே சென்றான். பூக்காரன் அவனிடம் ஒன்றை கொடுத்தான்.  ஆசையாக வாங்கி கொண்டு மேலே வேறு ஒரு வளைவில் சென்றான். ஒரு கிழவி நிறைய  ரோஜா  திண்டு மாலைகள் தொடுத்து எங்கும் தோரணமாக தொங்க விட்டிருந்தாள்.  எனக்கு ஒரு மாலை ?   அவன் சின்ன குரல் அந்த கிழவிக்கு கேட்டது. சிரித்து கொண்டே  அங்கு  நுழைந்த கோகுல் கழுத்தில் ஒரு சின்ன மாலையை  போட்டாள் . மெத்த மகிழ்ச்சி அவனுக்கு. மாலையை  தரித்துக் கொண்டு ஆடினான்.

ஒரு கும்பல் எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அவன் அவர்களை முண்டியடித்து உள்ளே சென்று பார்த்தால்........ ஒருவன் ஒரு பெரிய கொம்பின் மேல்  நிறைய  பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம் , ஊதா, வெள்ளை, பழுப்பு நிற பலூன்களை ஊதி கட்டி பறக்க வீட்டுக் கொண்டிருந்தான்.  கோகுல் எதிரே நின்றதும் ஒரு பலூனை கையில் எடுத்து அதை தேய்த்ததும்  அதில் இருந்து சப்தம் வந்தது.  சிரித்தான்.  வானவில் கலரில் அந்த பலூன்கள் அவன் மனதை கொள்ளை கொண்டன.

அப்பா வாங்கி தர மாட்டார்.. ஏக்கம் மனதில் வழக்கம் போல் சூழ்ந்தது. அவனை அறியாமல் கால்கள் மேலே  நகர்ந்தன. இன்னும் ரெண்டு வளைவுகள் தாண்டினான்.

ஒரு  மரத்தடியில்  வட்டமாக எல்லோரும் நின்று பார்த்துக் கொண்டிருக்க, நடுவே  ஒரு பாம்பாட்டி.
எதிரே ஒரு திறந்து வைத்திருந்த கூடையில்  ஒரு பாம்பு ஆடிக்கொண்டிருந்தது.  ''ஆ  ஆ   எவ்வளவு பெரிய பாம்பு''  பாம்பாட்டி  குழல் போல் ஒன்றை வாயில் வைத்து ஊதிக் கொண்டிருந்தான்.  கூடையை இன்னொரு கையால் ஆட்ட அதன் உள்ளே இருந்து இன்னொரு பெரிய கருப்பும் மஞ்சளுமாக ஒரு பாம்பு மெதுவாக தலையை தூக்கி  வெளியே வந்தது.

வெகுநேரம் அதை பார்த்துக் கொண்டிருந்த கோகுல் இன்னொரு இடத்தில் ஒரு கூட்டம் நிற்பதை பார்த்துவிட்டு அங்கே ஓடினான்.

அதில் நடுவே  ஒரு பெரிய ஒரு மெஷின் அதை நான்குபேர்  பக்கத்துக்கு ரெண்டு பேராக  ஒரு இரும்பு கைப்பிடியை  சுற்றிக் கொண்டிருந்தார்கள்.  மரத்தின் அடிப்பாகம் போல் இருந்த அதின் கிளைகள் போல் நிறைய  இரும்பு தூண்கள் அதிலிருந்து அநேக  ஆசனங்கள், தொட்டில், குதிரை,  யானை  என்று ஒவ்வொரு கம்பியிலும்  இணைத்திருந்த இந்த குதிரை யானை, நாற்காலி தொட்டில்களில் குழந்தைகள் அமர்ந்து வட்டம் வட்டமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஊஞ்சல்.  ரங்க ராட்டினம்.

இது தான் கைலாசம், வைகுண்டம்.  நான்  நீ என்று போட்டி போட்டுக்கொண்டு குழந்தைகள் உட்கார ஆசைப்பட   பெற்றோர்கள் பணம் கொடுத்து  அவர்களை அமர்த்தின போது குழந்தைகள்  உற்சாகமாக  சிரித்து, சப்தம் போட்டனர். 

''நான் இந்த குதிரை ஊஞ்சலில் உட்காரணும் ''    கோகுல் பிடிவாதம் பிடித்து  கத்தினான்.
அப்பாவின் பதில் காணோம்.
கோகுல் நினைவுலகத்துக்கு வந்தான். '' அப்பா  அப்பா''   அவன் குரல் உயர்ந்தது. திரும்பி அங்கும் இங்கும் பார்த்த போது எங்கே அம்மாவையும் அப்பாவையும்  காணோம்.
கோகுலுக்கு தொண்டையை அடைத்தது.  கும்பலில் எத்தனையோ முகங்கள்,  ஆனால் அப்பாவையே அம்மாவையே காணோமே.
அழுகை கண்ணில் நீராக கொப்புளித்து.  உடம்பு குலுங்கியது. அங்கும் இங்கும்  ஓடினான் எதிரே பிறகு திரும்பி இன்னொரு வளைவில் சந்தில்  ஓடினான் ''அப்பா  அம்மா''   அவன் குரல் பெரிதாக அழுகையுடன் கலந்து  கண்ணீர் வெள்ளத்தோடு  எதிரே இன்னொரு சந்தில்  ஒலித்தது.
கோகுலை  பயம்  முழுமையாக  விழுங்க,  தலை சுற்றியது. வெந்நீராக  கண்ணீர் அவன் மார்பில் சிந்தியது.
கண்ணில் பட்ட  சந்துகளில் எல்லாம் ஓடினான்  தேடினான் ''அப்பா   அம்மா''  கதறினான். .  அவன் தலையில் அணிந்திருந்த தொப்பி கீழே விழுந்ததை பற்றி கவலை இல்லை.  ''அப்பா  அம்மா'' .  அவன் குரலுக்கு பதிலே இல்லையே. ஓவென்று அழுதான்.

தேம்பி தேம்பி அழுது களைத்தான். எதிரே நீண்ட வயல், தங்க நிற கடுகு செடி இப்போது அவனைக் கவரவில்லை.  பலூனோ பாம்போ, குரங்கு பொம்மையோ,  பர்பி  குலாப் ஜாமூனோ,  புறாக்கள் கூட்டமோ,  அவனைக் கவரவில்லை.  ரங்கராட்டின குதிரை பிடிக்கவில்லை. . அம்மா அப்பாவை போல்  அவன்  ஆசைகளும்  காணாமல் போனது.

ஓடினான். கண்ணில்  அழுகை திரையிட்டது. ஆண்களும்  பெண்களுமாக அநேகர் அவன் ஓடுவதை பார்த்தார்கள். தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.  மஞ்சள் புடைவை அம்மாவை தேடினான்.  சிகப்பு சட்டை அப்பாவையும் காணோமே.   இடது பக்கம் ஓடினான்.  அங்கே தான் மிட்டாய் பக்ஷணக்காரன் இருந்தான். அந்த கும்பலில் தேடியதும் அம்மா  அப்பா என்று குரல் கொடுத்தும்  அவர்கள் இல்லையே .  மிட்டாய், பர்பி லட்டு எல்லாம் ஏதோ கசப்பு பக்ஷணங்களாக வே தோன்றின. பிடிக்கவே இல்லை.  அம்மா  அப்பா  எங்கே  ?
ஒரு கோவில் வந்தது அதன் வாசலில் நின்று தேடினான்.  கும்பலில் காணோம்.ஒருவரை ஒருவர் இடித்து க்கொண்டு உள்ளே போக முயன்று கொண்டிருந்தார்கள். அவர்கள் காலுக்கு இடையே புகுந்து உள்ளே சென்று பார்த்தன் எங்கும் அப்பா அம்மாவைக் காணோம். நிறைய பேரின் உதைகள் தான் மிஞ்சின.  கீழே தடுமாறி விழுந்தவனை அநேகர் மிதித்தார்கள். மெதுவாக சமாளித்து எழுந்தான். அம்மா  அப்பா ''
யாரோ அவனை தூக்கினார்கள்.
''யாரடா குழந்தை நீ.  எப்படி இங்கே வந்தாய்?
''அப்பா வேணும். அம்மா வேணும்.''  அந்த ஆள் தூக்கிக் கொண்டபோது அவன் தோளிலிருந்து  கத்தினான்.
''அதோ அந்த குதிரை மீது உட்காருகிறாயா,  உனக்கு  மிட்டாய் வாங்கி கொடுக்கட்டுமா,  பூக்கள் தரட்டுமா
வண்ணாத்தி பூச்சிகள் காட்டட்டுமா, பாம்பு பார்க்கிறாயா? ஒரு பெண் குட்டி பாடுகிறதே ஆடுகிறதே பார்.' அவன் வாங்கி கொடுத்த பலூனை வீசி எறிந்தான் ''
அவனை தூக்கிக் கொண்டிருந்த ஆள்  அழுகையை நிறுத்த  எவ்வளவோ வழிகளை தேடினான்.
தலையை வேகமாக ஆட்டினான்  கோகுல்  ''ஹூஹூம்  எனக்கு அம்மா தான் வேணும். அப்பா கிட்டே போகணும்''
கோகுலைப் பொறுத்தவரை   எதெல்லாம் வாழ்க்கையின் லக்ஷியமாக இருந்ததோ அவை வெறுத்துவிட்டன.  ''அம்மா  அப்பா'' மட்டும் தான் வேணும்.
அவனுக்கு  இப்போது அத்தியாவசியமாக  ஒண்ணுமே வாங்கித்தராத அப்பா இப்போதே வேணும்.
மேலே  சொன்ன கதை முல்க் ராஜ் ஆனந்த் எழுதிய காணாமல் போன பையன் கதை. கோகுல் அப்பா அம்மாவை  அடைந்தானா.   பையனை பெற்றோர் மீட்டனரா இல்லையா?    வாசகர் கற்பனைக்கு விட்டு விடுகிறார் முல்க்  ராஜ்  ஆனந்த் 





GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...