Thursday, March 19, 2020

GITANJALI




கீதாஞ்சலி J K SIVAN
 ரவீந்திரநாத் தாகூர் 
                                                 
35.   பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். 

 எனக்கு ஏற்பட்ட  ஒரு அதிசய அனுபவத்தை முன்பே கூறி இருக்கிறேன். மீண்டும் அதை சுருக்கி சொல்கிறேன்.  கீதாஞ்சலி எழுதியவர்  ரவீந்திரநாத் தாகூர் எனும் வங்காள தேச தியாகி. கவிஞர். நோபல் பரிசு பெற்ற  கவிஞர். நமது தேசிய கீதத்தை இயற்றியவர்.   அவரது கீதாஞ்சலியை எனது வழியில் கிருஷ்ணனை  தோய்த்து நான் எழுதினாலும் அவர் படத்தை
 விடாமல் போடுவேன். ஒரு அன்பர் என்னை தொலைபேசியில் கூப்பிட்டார்.

''சார்  சிவன் பேசறீங்களா?''
''ஆமாம் சார்.  சொல்லுங்க''''
நான்............. பேசறேன். உங்கள் எழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும் . விடாமல் எல்லாவற்றையும் படிப்பேன்'''
சந்தோஷம் நன்றி.'''
'எனக்கு  ஒரு சந்தேகம் அதை நிவர்த்தி செய்துகொள்ள தான் கூப்பிட்டேன்'''
'என்ன சந்தேகம்?'''
'கீதாஞ்சலி எழுதிறீங்களே. அதிலே எதற்கு  பெரியார் படம் போடறீங்க? .....'
'பெரியார் இல்லீங்க. ஒரு பெரியவர். 
தாடி வச்சதெல்லாம் பெரியாரா?
பேச்சு தொடர்பை அறுத்து விட்டேன்.....

இப்படி  ஒரு இழுக்கு தனக்கு ஏற்படும் என்று தெரிந்தால் தாகூர் எவ்வளவு வருந்தி இருப்பார். முதலில் நாவிதரை கூப்பிட்டு மழுங்க மொட்டை அடித்துக்கொண்டு தாடி மீசை எல்லாம் எடுத்திருக்கமாட்டாரா?
தாகூரை சரியாக தெரியாதவர்கள் இன்னும் எவ்வளவோ பேர் இருக்க காரணம், எவருக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ  எழுபது வருஷங்களில்  அவர்கள் மறக்க, மறைக்க பட்டது தான்..
தாகூரை தொடர்வோம்.

35   Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action---
Into that heaven of freedom, my Father, let my country awake.

நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம் என்று பாரதியார் பாடி விட்டு போய்விட்டார். சுதந்திரத்தை பார்க்கவில்லை, நாட்டின் நிலையும் தெரியாது. அப்படித் தான் தாகூரும். கனவு கண்டிருக்கிறார். எவ்வளவு அழகான கனவு. பகல் கனவு அல்ல.. 

எங்கு  எவர் மனத்திலும் பயம் என்பதே கடுகளவும் கிடையாதோ,  தலை நிமிர்ந்து நிற்கிறதோ,நான் இந்திய குடிமகன் என்று பெருமையுடன்  நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறோமோ, எங்கு எதையும் கற்க வசதி, இலவசமாக எல்லோருக்கும்  உயர்ந்த ரக, முற்போக்கு கல்வியறிவு  கிடைக்கிறதோ,எங்கு  இந்த உலகம் ஒன்றே, நாம் எல்லோரும் ஒரு குடி மக்களே,  ஒரு கொடியில் மலர்ந்த மலர்கள் என்ற எண்ணம் வேரூன்றி இருக்கிறதோ, உலகம் துண்டாடப்படவில்லையோ, குட்டி குட்டியாக தன்னை சுற்றி சுவர் எழுப்பிக் கொள்ளாத  நாடுகள் நிறைந்த உலகமோ, எங்கே எவன் எதை பேசினாலும் அது சத்தியத்தின் பிரதிபலிப் போ,  பொய் இல்லையோ, எங்கே எதை தொட்டாலும்  செய்தாலும்  அதை  ஒழுங்கு, நேர்மை, சரியான சீரோடு அமைக்கின்ற ஓய்வற்ற, களைப்பில்லாத உற்சாக உழைக்கும் கரங்கள் உள்ளதோ,எங்கே  மக்கள். எதையும் யோசித்து, பிறகு யாவருக்கும்  பயனுள்ளதாக இருக்கும்படி செய்யும் எண்ணம் எல்லோர் மனதில் நிறைந்திருகிறதோ, தீமை தரும்  பழைய வழக்கங்கள் இல்லையோ,எங்கேயோ  எல்லோர் மனத்திலும் கிருஷ்ணா நீ இருந்து வழிகாட்டி மேலும் மேலும் சுகமாக இருக்கும் சுபிக்ஷ பாதைக்கு அழைத்து செல்வாயோ,  ஒவ்வொரு எண்ணத்திலும் ஒவ்வொரு செயலிலும் நீ உண்டோ,.என் அப்பனே, கிருஷ்ணா, அங்கே  ஒரு அற்புதமான சுதந்திர நாடாக என் பாரத தேசம்.  ஒரு பூலோக ஸ்வர்கமாக உருவாகட்டும்.  அடிமைத்  தளையிலிருந்து  விடுபட்டு விழித்தெழட்டும்.''

ஐயோ,   தாகூரே,   இதென்ன இப்படி ஒரு பேராசை. எங்கள் இப்போதைய இந்தியா நீ பார்க்காததை சொல்லட்டுமா?

இந்தியா ஒன்றல்ல, பல குட்டி நாடுகள், தேசங்களை, பிரதேசங்கள், பல மொழிகள், ஒன்றை பேசுபவனுக்கு மற்றொன்று பிடிக்காது. காற்று, மழை, தண்ணீர் எல்லாமே அவனவனுக்கு. மற்றவனுக்கு கிடையாது. பொய்யைத் தவிர வேறு பேசமாட்டோம். எல்லாம் காசு. கிடைத்தால்  காற்றைக்கூட பிடித்து, விற்போம்.  கல்வி கற்பதற்கல்ல. விற்பதற்கு.  சுயநலம் ஓன்றே எங்களுக்கு தெரிந்த  ஒரே  நலம்.  பொதுநலம் என்றால் என்ன? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி யார்? அவர் என்ன ஜாதி? ஜாதிகள் இருந்தால் தான் கூட்டம் சேர்ப்போம், கொடி பிடிப்போம், நாட்டை ஆள்வோம். எங்கள் நாடு எங்களுக்கே என்று நாங்கள் சொல்லும்போது அதன் அர்த்தம் உங்களுக்கு தெரியாது சார்.  இது வேறு உலகம்.  நீங்கள் கனவு கண்டதல்ல. 
ஐயோ தாகூரே   இதென்ன இப்படி ஒரு பேராசை உங்களுக்கு? எங்கள்  தேசம்,  நீர்  பார்க்காததை சொல்லட்டுமா?

எங்கள் தேசம்  பேருக்கு தான் ஒன்று . பல குட்டி நாடுகள், தேசங்கள் , பிரதேசங்கள், பல மொழிகள் இங்கே உண்டு.  ஒன்றை பேசுபவனுக்கு மற்றொன்று பிடிக்காது.   காற்று, மழை, தண்ணீர் எல்லாமே அவனவனுக்கு. மற்றவனுக்கு கிடையாது. பொய்யைத் தவிர வேறு பேசமாட்டோம்.எல்லாம் காசுக்காக ,கடவுளைக் கூட  கூடவிற்போம்.  சுயநலம் ஓன்றே எங்களுக்கு தெரியும். பொதுநலம் என்றால் என்ன? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி, யார்? அவர் என்ன ஜாதி? ஜாதிகள் இருந்தால் தான் கூட்டம் சேர்ப்போம், கொடி பிடிப்போம், நாட்டை ஆள்வோம்.எங்கள் நாடு எங்களுக்கேஎன்று நாங்கள் சொல்லும்போது அதன் அர்த்தம் உங்களுக்கு தெரியாது சார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...