Tuesday, June 30, 2020

THIRUK KOLOOR PEN PILLAI



திருக் கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்  J K  SIVAN   

           77   நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே

 இன்னும்  நான்கு  உதாரண புருஷர்களை  திருக் கோளூர்  பெண்பிள்ளைசொல்லி அறியப்போகிறோம்.  81 நாட்கள் நாம் திருக்கோளூர் பெண் பிள்ளையோடு  பழகிய  இனிய அனுபவம் நிறைவுக்கு வரும். 

 அப்புறம்  இந்த தொடர் ஒரு   புத்தகமாக உரு மாறி  இலவசமாக வேண்டுவோர்க்கு அளிக்கப்படும்.  இந்த கைங்கர்யம்  ஒருவராலா, பலராலா என்பது   கிருஷ்ணன் மட்டுமே அறிவான்.   யார் முன்வரப்போகிறார்கள்.?  நிச்சயம்  200 பக்கங்கள் வரும் என்று தோன்று
கிறது. ஆயிரம் பிரதிகள் குறைந்தது
அச்சிடுவதன் மூலம்  செலவினம்   குறையும். 

இதுவரை  30 புத்தகங்கள் இது போலவே  நண்பர்களின்,  அன்பர்களின்,   பங்கேற்பால் எங்கள்  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் வெளியிட்டிருக்கிறது.   

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகளை  அச்சிட்டு புத்தகமாக்கி  வெளியிட நன்கொடை உதவியர்கள் பெயர் புத்தகத்தில் நன்றியோடு அறிவிக்கப்படும்.  அது தான் எங்கள் வழக்கம்.    விருப்பமுள்ளவர்கள்  என்னை அணுகலாம்; நன்றி   ஜே .கே.  சிவன்.   வாட்ஸாப்ப் 9840279080
+++ 

இன்றைக்கு  திருக்கோளூர் பெண்பிள்ளை உதாரணமாக  காட்டுவது காசியில் வாழ்ந்த ஒருவனைப் பற்றி.  இந்தப்  பெண் ஆயிரம் வருஷங்களுக்கு முன்  எப்போது  எப்படி காசியில் இருப்பவனை தெரிந்து கொண்டி ருக்கிறாள்.? அவள் சொல்வதெல்லாம் ஆச்சர்யமாக அல்லவோ இருக்கிறது?
வடக்கே  காசி மா நகரத்தில்  ஒரு வீர வைணவன் இருந்தான்.  அவன் பெயர் சிங்கன். நாராயண பக்தன். அவன் நீச்சலில் சிறந்த மனித மீன்.    கடல் போன்ற கங்கையின் ஒருகரையிலிருந்து மறு கரைக்கு அனாயாசமாக  நீந்தி செல்வது எளிதல்ல. கங்கையில் நீந்தாத நாட்களில் ஒரு தாமரைக்குளத்தில்  நீந்துவான். குளத்தில் நீர்மேல் மிதக்கும் தாமரை மலர்களை நீந்திச்சென்று பறித்து    எடுத்து வந்து  நாராயணனை அலங்கரிப்பது அவனுக்கு பிடித்த அன்றாட வழிபாடுகளில் ஒன்று.  
நீச்சலில் தன்னை வெல்லக்கூடியவர் எவரும் இல்லை என்ற   மமதை , அகம்பாவம்,  அவனுக்குள்  நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. 
வல்லவனுக்கும்  ஒரு நாள் சோதனை வரும்.  நாரயணன்  அந்த  நாளை  தீர்மானித்து விட்டார் போலிருக்கிறது.  ஆனைக்கும்  அடி  சறுக்கும் என்பார்களே அது போல், அவன் போறாத  வேளை  ஒரு நாள்   காசி சிங்கன்   கங்கையில் குதித்து  ஒரு கரையிலிருந்து அடுத்த கரைக்கு நீந்தினான்.  அந்த   நாள்  கரையில் நின்று அவனை எல்லோரும் வேடிக்கை பார்ப்பது அவனுக்கு பெருமையாக இருந்தது.   அன்று என்றுமில்லாமல்  வெள்ளத்தின் வேகம் அதிகம். நீரோட்டம் வேறு திசையில் பலமாக  இழுத்தது.   சுழலில் வகையாக சிக்கிக்கொண்டான்.  கங்கையின் நடுவே  நீரின்  இழுப்பு சக்திக்கு முன் சிங்கனின்  நீச்சல் சக்தி ஈடுகொடுக்க முடியவில்லை.    நீரில் அடித்து செல்லப் பட்டான்.  
 முடிந்தவரை நீந்தியவன்  கொஞ்சம் கொஞ்சமாக சக்தியை இழந்து முழுக ஆரம்பித்தான்.  ''ஆஹா  இனி தப்புவது இயலாத காரியம்.  என் முயற்சி தோற்றுவிட்டது.  நாராயணா  உன் அருள் இருந்தால் தான் நான் தப்ப முடியும்''   என்று  சிங்கன்  மனம் வேண்டியது.
 கரையில் இருந்து  கவனித்தவர்கள்  அவன் தடுமாறுவதைப்  பார்த்து யாரும் கவலைப் படவில்லை. அவன் தான் நீச்சலில் வல்லவனாயிற்றே . ஏதோ வேடிக்கை காட்டுகிறான் என்று  பேசாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டார்கள்.  

''ஹே  நாராயணா,  என்  அகம்பாவம் என்னை இன்று இந்த இக்கட்டில் மாட்டிவிட்டது . இனி வீண் பெருமை அகம்பாவம், கர்வம் என்னிடம் இல்லை. எல்லாம்  இந்த நீரில் தலை முழுகி விட்டேன்.   இனி எதுவும்  உன் செயல் என  புரிந்து  கொண்டேன்.  பகவானே,  முன்பு ஒருமுறை  குளத்தில்  முதலையிடம் காலை கொடுத்து உயிர் தப்ப முயன்ற  கஜேந்திரன் நிலையில் நான் உள்ளேன்.  நான் மாட்டிக்கொண்ட  முதலை  என்   காலை அல்ல என் தலை  வரை  என்னை பிடித்து இழுக்கும் சுழல் .   இதிலிருந்து என்னை  உயிர் மீட்க உன் னால் தான் முடியும்.  உன்னை  முற்றிலும்   சரணடைகிறேன். நாராயணா, இனி  எந்த தவறும் செய்யமாட்டேன் என்னை காப்பாற்று''   என்று கதறினான்.  

ஆஹா  என்ன  ஆச்சர்யம்,  வெள்ளம் வேகம் குறைந்தது,  சுழலின் அழுத்தம்  சற்று  நேரத்தில் மிதமானது..   காற்று பலமாக  கரையை நோக்கி வீச நீரின் 
போக்கு கரையை நோக்கி அவனைப்  பிடித்துத்  தள்ள  சிங்கன் மெதுவாக நீந்தி கரை சென்றடைந்தான்.  அவன் அப்புறம் கங்கையில் நீந்துவதில்லை, குளத்தில்  தினமும்  நீந்தி தாமரை மலர் பறித்து தாமரைக்கண்ணனை  அலங்கரித்து வழிபட்டு  அவன் காலம் கழிந்தது.  

திருக்கோளூர் பெண்பிள்ளை உபயோகப் படுத்தும்  நீரோருகம் எனும்  சொல்  நீரில்  பிறந்து மலரும் தாமரைபுஷ்பத்தை குறிக்கும் சொல்.

அடேயப்பா,   திருக்கோளூர் பெண்பிள்ளை  ஆயிரம் வருஷத்துக்கு முன் தோன்றிய  அபூர்வ பெண். 

ராமானுஜருக்கு பதிலளித்த  திருக்கோளூர் பெண்பிள்ளை  அவரைப்பார்த்து 77வது  உதாரண புருஷனாக  மேலே சொன்ன   காசி வாழ்  சிங்கனை குறிப்பி டுகிறாள். 
இத்தனை வருஷம் எனக்கு  காசி சிங்கனைத் தெரியவே இல்லையே. அவள் மூலம் அல்லவோ  அறிந்து கண்டேன். உங்களுக்கும் சொல் கிறேன். 

''சுவாமி    நான்  என்ன  “காசியில் வாழ்ந்த   சிங்கனைப் போல   நாள் தோறும் மஹா விஷ்ணுவாகிய   ஸ்ரீமன்  நாராய ணனுக்கு  அலங்காரம்  செய்ய  தாமரைக்  குளத்தில் நீந்தி  அலர்ந்த அழகிய புதிய  தாமரை மலர் பறித்து  சூட்டி  அலங்கரித்தவளா?    அப்படி செய்ய முடியாவிட்டாலும் மனதால் ஒருவேளையும்  அப்படி  செய்ய நினைக்க கூட இல்லையே, நான் எந்த விதத்தில்  இந்த புண்ய க்ஷேத்ரம் திருக்  கோளூரில் வாழ  அருகதை உள்ளவள்?  என்கிறாள். 
  

Monday, June 29, 2020

SEMBIYAN MAADHEVI






வணங்குகிறோம்  பெரிய பிராட்டி    J K   SIVAN  

எனக்கு  செம்பியன் மாதேவியை தெரியாது. எனக்கு மட்டுமா?  உங்களில் அநேகருக்கும்  தான்.  இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது நான் பள்ளியில் கற்ற கல்வி அல்ல.   இளவயதில் கல்கியில் வாராவாரம் வந்த பொன்னியின் செல்வன்.  கல்கி ஸாருக்கு  வாழ்நாள் பூரா நாம் எல்லோருமே கடமைப் பட்டிருக்கிறோம். ஏன்  தெரியுமா?  இப்போது நாம்  சோழநாட்டில் காணும் அநேக  சிவாலயங்களை செங்கல், காரை, சுண்ணாம்பு, மண்ணிலிருந்து காப்பாற்றி கற்றளியாக,  கருங்கல் கோவில்களாக  அற்புத சிற்பக்களஞ்சியங்களாக, பக்தி பேருக்கும் கருவூலங்களாக மாற்றி அமைத்து, அவற்றிற்கு பராமரிப்புக்காக  விளக்குகள் தினமும் எரிய, நித்ய பூஜைகள் நடக்க,   நிறைய   ஆடுகள், மானியங்கள், நிலங்கள்  நிவந்தங்கள் விட்டிருக்கிறாள்.  அடடா எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு, பிழைக்க வழி, பக்தியை எப்படி பரப்பி இருக்கிறாள்?  தமிழர்களுக்கு இவளை இருட்டடிப்பு செய்துவிட்டிருக்கிறார்களே.    கண்டராதித்த  ஏரி, வீராணம் ஏரி, செம்பியன் மாதேவி ஏரி என்று எவ்வளவு நீர்நிலைகளை ஸ்தாபித்திருக்கிறாள்.  எத்தனை ராஜாக்களை வளர்த்திருக்கிறாள். இன்று  ராஜராஜன் கட்டிய உலகப்புகழ் பெற்ற தஞ்சை   பெரிய கோவிலுக்கு யார் காரணம்? அவனை ஐந்து வயது முதல் வளர்த்த பாட்டி இவள் அல்லவா? குந்தவை தேவி  ராஜ்யதிகாரம் செலுத்து திறம்பட சோழ ராஜ்யத்தை நிர்வகிக்க யார் காரணம்? செம்பியன் மாதேவி எனும் பெரிய பிராட்டி தானே?    மூவேந்தர்கள்  சேர சோழ பாண்டியர்களில் பெரும் புகழ் பெற்று  ப்ரஸித்தமானவர்கள் சோழர்கள் என்பது  அவர்கள் விட்டுச்சென்ற செல்வங்கள், பக்தி, ஆளுமை, மக்கள் மேல் அன்பு  பொதுநல சேவைகள் . ஆறு  ராஜாக்கள் அவளது  85 வயது வாழ்வில் வழி நடத்தியவன் செம்பியன் மா தேவி.   எவ்வளவு பெரிய  சக்தி தெய்வம்.   
சோழர் குல மாணிக்கம் செம்பியன் மாதேவி சேர மன்னருள் ஒரு கிளையான மழவர் குலத்தில் பிறந்து சோழ வம்சத்தில் புகுந்தவர். ++
அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி அருகே உள்ள செம்பியக்குடி  அவள் பிறந்த ஊர் என்பதால் அவள் பெயரை தாங்கி இன்றும் இருக்கிறது.  ஊர் மக்கள் 1000 கிலோவில் ஐம்பொன் சிலை செய்து மணிமண்டபம் கட்டி  கௌரவித்திருக்கிறார்கள்.   நாம் அவள்  பெயரை, அவளது மகத்தான சேவையை   மறந்து இருட்டடித்துவிட்டு, அவள் எழுப்பிய கோவில்களுக்குச் செல்லக்  கூட நேரமின்றி  விருப்பமின்றி  உல வுகிறோம். 
செம்பியன் மாதேவி  வாழ்நாளில்  ஆண்ட சோழ மன்னர்கள். 1. மாமன்னன் முதலாம் பராந்தக சோழன், 2. கணவர் கண்டராதித்தன், 3. கொழுந்தன் அரிஞ்சய சோழன், 4. கொழுந்தனின் மகன் இரண்டாம் பராந்த சோழன் எனப்படும் சந்தரசோழன், 5. தன் மகன் உத்தம சோழன், 6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன் 
இத்தனை  ராஜாக்களும் எழுப்பிய  சிவாலயங்கள், செய்த தர்ம காரியங்களுக்கு பின் புலமாக இருந்த  தெய்வீக பெண்மணி  செம்பியன் மாதேவி என்ற சிவபக்தை.   காவிரியின் இரு மருங்கிலும் எண்ணற்ற சிவாலயங்கள் வைணவ ஆலயங்கள் தோன்ற, பராமரிக்கப்பட காரணம்  இந்த பெண்மணி. ஒரு சில கோவில்கள் உள்ள ஊர்கள் பெயரை மட்டும் சொல்கிறேன்  
திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)
திருவாரூர் அரநெறி ( அசலேஸ்வரர் கோயில்)
திருமணஞ்சேரி
தென்குரங்காடுதுறை (ஆடுதுறை)
திருக்கோடிக்காவல்
ஆதாங்கூர்
குத்தாலம்
திருவக்கரை
திருச்சேலூர்
ஒவ்வொரு ஆலயத்துக்கும் சென்று அதன் நிலையை கண்டறிந்து உடனே புணருத்தாரணம் செய்ய வழிவகுத்தவர். ஆலய திருப்பணிகளை நேரில் சென்று மேற்பார்வை பார்த்தவர். 
செம்பியன் மாதேவி வாழ்ந்த காலத்தில்  நூற்றுக்கணக்கான  மண், செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்ட பழைய  கோவில்கள் சிதிலமடைந்திருந்த நிலை கண்டு கண்ணீர் வடித்தாள்.  அவற்றை புதுப்பிக்கும் பணி யில் தன்னை அர்ப்பணித்தாள்.   மலைகளோ, கருங்கற்களோ  இல்லாத போதும்  கற் பாறைகளை களை கொணரச் செய்து  ஆயிரக்கணக்கான சிற்பிகளை ஊக்குவித்து,  எங்கும் உளி சத்தம் கேட்க செய்தவள். செப்புச்சிலைகள், ஐம்பொன் சிலைகள் சிறந்த வேலைப்பாடுகள்  கொண்ட கோவில்கள் அமைந்தன.  செப்பு பட்டயங்கள், கல்வெட்டுகளில் செயதிகளை பரப்பினாள் . நிவந்தங்கள் ஆலயங்களுக்கு கொடுக்கும் முறையை  உண்டாக்கினாள் . ஏரிகள் குளங்கள் அமைத்து நீர் பஞ்சம் இல்லாதபடி செய்தவள்.  இதற்கெல்லாம் படிப்பு அவசியமா?
முதன் முதலில் செம்பியன் மாதேவி சீரமைத்த திருக்கோவில் நல்லம் சிவாலயம்.  சிதிலமடைந்த அக்கோவிலுக்கு கருங்கல் திருப்பணி செய்ய விழைந்தார். கருங்கற்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து ஆயிரக்கணக்கான எடை கொண்ட கற்கள் வரவழைக்கப்பட்டன. கல் தச்சர்கள் இடைவிடாமல் பணிபுரிந்து கோவிலை கருங்கல் திருப்பணியாகச் செய்தார்கள். ராஜமாதா செம்பியன் மாதேவி நாள்தோறும் இறைப்பணி செவ்வனே நடைபெறுகிறதா என்று கவனித்துக் கொண்டாள். அவள்  திருநல்லத்தில் சிவாலய மேற்பார்வை செய்த ஒரு நிகழ்ச்சி மனக்கண்ணில் காண்போம்: ++++ 

திருநல்லத்தில் ஏக போகமாக அலங்காரம். காலை வெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக வலுத்தாலும் மரங்கள் சூழ்ந்த அந்த கிராமத்தில் வெயில் தெரியவில்லை. குளிர்ந்த காற்று வீசியது. கிராமத்தின் ஒரே பாதை முழுதும், வழியெல்லாம் தோரணங்கள் கட்டியிருந்தது. எங்கும் தென்னங்குருத்து மாவிலைகள், வாழைமரங்கள் கட்டி மலர் பந்தல் கோவில் கட்டும் இடம் வரை பரந்திருந்தது. நறுமணம் வீச அகில் புகை வளர்த்தார்கள். காற்றில் மணத்தது. வழியெங்கும் நீர் தெளித்து சுத்தமாக நடு வீடு போல காணப்பட்டது.

அழகுக்கு அழகு செய்வது போல் பெரிய மாக்கோலங்கள் பல பல வண்ணம் குழைத்து கண்ணை கவரும்படியாக பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு வரைந்திருந்தார்கள் . திருநல்லம் கிராம நுழைவாயிலில் மாவிலை தோரணம், வாழைமரம் கட்டி வரவேற்பு. ஊர் பிரமுகர்கள் கை கட்டி நின்றனர். கையில் பெரிய தாம்பாளங்களில் பழங்கள், வெற்றிலை பாக்கு இனிப்புகள், வாத்திய கோஷ்டி தங்கள் கைவரிசையை காட்டின. பெரிய பெரிய பாத்திரங்களில் பொறி கடலை, வெல்லம் நீர் மோர் பானகம் எல்லாம் வருவோர் போவோர்க்கெல்லாம் அளித்தனர்.

நாட்டிய பெண்கள் ஒரு ஓரத்தில் ''மதன காம ராஜன்'' தெருக்கூத்து ஆடிக்கொண்டிருந்தனர். என்ன விசேஷம் இன்று?

'' நம்ம ஊர் கோவில் வேலை புதுசு பண்றாங்க , பெரிய ராணியம்மா வராங்க. அதோ வந்துவிட்டது பல்லக்கு'' . எல்லோர் விழியும் பல்லக்கையே பார்த்துக்கொண்டிருந்தது. சோழ பெரிய மஹாராணி, வரப்போகிறார் என்ற சேதி சில நாட்களுக்கு முன்பே காதில் விழுந்ததால் மக்கள் வெள்ளம். பெரிய மகாராணியை பார்த்தால் ஸ்ரீ லலிதாம்பிகையை பார்த்தது போல் என்பார்கள். எத்தனை கோவில்களுக்கு தான தர்மம். நிலம், விளக்குகள், அர்ச்சர்களுக்கு நிலம், மான்யம்... அடடா... பழங்கால காரை செங்கல் கோவில் எல்லாம் கல்லாக மாத்தறாங்க அந்த தெய்வம். இங்கே உமாமஹேஸ்வரர் கோவில் புதுசாவுது. உள்ளே ராஜா கண்டரா தித்தர் சிலை சாமி கும்புடுறாப்புலே வைக்கிறாங்க.''

பல்லக்கு திரைச்சீலையை விலக்கி அந்த முதிய சோழ ராணி வெளியே பார்த்தாள் . அவள் எதிர்பார்த்த கோபுரம் அங்கே விரைவில் தோன்றப்போகிறது. வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. தனது கணவர் சிவபாதசேகரன் சிவபக்தி செல்வர் கண்டராதித்த தேவரின் நினைவாக அந்த ஆலயம் இருக்கும் ஊருக்கு கண்டராதித்த புரம் என்று பெயர் சூட்டப்போகிறார்.

ரெண்டு மூன்று முறை நடராஜர் சிலை வடித்தது திருப்தியாக இல்லை.சிற்பிக்கு அரசர் ஏற்கனவே கட்டளை யிட்டுவிட்டார். இந்த முறை நடராஜர் சிற்பம் சரியாக அமையவில்லையென்றால் அவன் உயிர் பலியாகும் . சிற்பி பயத்தில் பொறுப்பை ஏற்றோ, உபவாசம் இருந்து சிலை வடித்துக் கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து யாரோ ஒரு கிழ தம்பதியர் சிற்பி யின் இல்லத்துக்கு வந்தனர்.

கவலையோடு தனது உயிரைப் பணயம் வைத்து நடராஜர் சிலை வடிக்க பஞ்சலோகங்களை காய்ச்சி வார்படம் செய்யும் நேரத்தில் வந்த கிழ தம்பதியர் வந்து பேச்சுக்கு கொடுப்பது சிற்பிக்கு எரிச்சலை தந்தது. .

''யார் நீங்கள், என்ன வேண்டும் இங்கே ? முக்கிய ராஜ காரியம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் உங்களோடு நேரம் ஒதுக்க முடியாது. வந்த விஷயம் சொல்லுங்கள் ?'' கோபமாக தான் சிற்பி பேசினான்.

''திரு நல்லம் க்ஷேத்ர தரிசனம் வந்தோம். களைப்பாக இருந்தது இங்கே கொஞ்சம் நேரம் அமர வந்தோம். நீ தான் நடராஜா சிலை வடிக்கிறாயாமே அதைப்  பார்க்க வந்தோம்.

''ஐயா பெரியவரே, தொண தொணவென்று பேசாமல் இருக்கிறீர்களா, இப்போது தான் வார்ப்படம் தயாராகிறது. இப்போது நடராஜர் சிலை பார்க்கமுடியாது. சென்று அப்புறம் வாருங்கள்''

ஓ அப்படியா. தாகமாக இருக்கிறதே கொஞ்சம் குடிக்க தண்ணீர் தருவாயா மகனே? கால் நீட்டி சற்று உட்காரு கிறோம்'' முதியவர் சொன்னார்.

சிற்பிக்கு எரிச்சல் . இங்கே உட்காரமுடியாது. எழுந்திருந்து செல்லுங்கள்.

''தாகமாக இருக்கிறது, என்று தண்ணீர் கேட்டோமே அப்பா''

''ஆமாம் இங்கே தண்ணீர்ப்பந்தல் வைத்திருக்கிறேன் வருவோர் போவோர்க்கு உபசாரம் செய்ய. வேண்டுமானால் இதோ கொதிக்கிறதே உலோக குழம்பு அது நிறைய இருக்கிறது, தாகம் தீர தாராளமாக எடுத்து குடியுங்கள்.'' கோபத்தோடு சொல்லிவிட்டு சிற்பி எழுந்து அவர்களுக்கு தண்ணீர் கொண்டுவர போனான்.

''ஆஹா சரியப்பா, நீ சொல்கிறபடியே செய்கிறோம். நீ ரொம்ப நல்லவன்.'' என்கிறார்கள் இருவரும்.

சிற்பி தண்ணீர் சொம்புடன் திரும்பி வந்தபோது அந்த கொதிக்கும் பஞ்சலோக குழம்பை காணோம். அந்த முதியவர் கிழவி இருவரும் இருந்த இடத்தில் நடராஜர் அம்பாள் சிலைகள் தான் இருந்தது. அவர்கள் அந்த உலோக குழம்பை அவன் சொல்லியபடி குடித்து சிலையாகி விட்டார்களா????

இந்த செய்தி அரண்மனைக்கு எட்டி பெரிய மஹாராணி செம்பியன் மாதேவி நேரே  நல்லம் வந்துவிட்டார்கள் 

கும்பகோணம் அருகில் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரன் ஆலயத்தில் அற்புதமான நடராஜனின் கதை மேலே சொன்னேன். அவன் அழகைப் பார்த்து வியந்தேன். கூடவே ஒரு கொசுறு செய்தியும் கிடைத்து புல்லரிக்கவைத்தது.

பெரிய சிவன் கோயில் என்று அழைக்கப்படும் உமாமஹேஸ்வரர் ஆலயத்திற்கு வட மேற்கே ஊரின் ஆரம்பத்திலேயே ஸ்ரீ கைலாசநாதர் கோவில் உள்ளது. எஸ். புதூரிலிருந்து லிருந்து கொடியமங்கலம் வழியாக கோனேரி ராஜபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது .

திருநல்லம் என்ற புராணப்பெயர் படைத்த ஊரில் பிற்காலத்தில் ஒரு சோழமன்னனின் அதிகாரி கோனேரி ராஜன் என்பவன் பொறுப்பேற்று நிர்வகித்தான். பிரதான சிவன் உமாமஹேஸ்வரர் ஆலயத்தை புதுப்பித்து நிறைய தான தர்மங்கள் அளித்து அந்த கிராமத்தை தனது பெயருள்ளதாக மாற்றினான். திரு நல்லம் காலப்போக்கில் கோனேரி ராஜபுரம் ஆகிவிட்டது. உமாமஹேஸ்வரர் ஆலயம் பெரிதாக சோழ மஹாராணி செம்பியன் மாதேவியால் புனருத்தாரணம் செய்யப்பட்டு கற்றளி ஆலயமாகி பின்னர் பல அரசர்களால் பராமரிக்கப்பட்டு பெரிய கோவிலாக இன்று நமக்கு காட்சி தருகிறது. அந்த கோவிலை சுற்றி ஒரு சில பழைய கோவில்கள் இருந்தன .

அப்படி சுற்றியிருந்த சில கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் கோவில் முழுதுமாக க்ஷீணமாகி தற்போது ஒரு சில பக்தர்களால் ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டு புதிய சிறிய கோவிலாக வளர்கிறது. கைலாச நாதர் இருந்த கோவில் அது. முழுதும் மறைந்து ஆலயத்தில் இருந்த சிலைகள் சிலரால் பாதுகாக்கப்பட்டு கோனேரிராஜபுரம் உமாமஹேஸ்வரர் ஆலயத்தில் பாதுகாப்பாக இருக்கிறது என்று ஊர் பெரியவர்கள் சொல்கிறார்கள். 150 வருடம் முன்பு வடக்கு தெரு ஸ்ரீ சியாமா மாமா என்பவர் ஸ்ரீ ராமசாமி அய்யர் டிரஸ்டி ஆக இருந்த காலத்தில் பெரிய கோயில் சுற்று பிரகாரத்தில் இந்த கோயில் சுவாமிகள் அனைவரையும் முறைப்படி பிரதிஷ்டை செய்தார். ஒரு கோயில் பெரிய கோயில் என்று அழைக்க பட்டால் இன்னும் சில கோயில் உள்ளது என்று தானே அர்த்தம்! இவ்விரண்டு சிவன் கோயில்கள் தவிர வேறு 3 கோயில்கள் உள்ளன.

கோவிலோ சிலைகளோ முழுதும் காணாமல் போனாலும் கோவில் இருந்ததற்கு சான்றாக ஒரு பெரிய பாம்பு புற்று ஒன்று செம்பியன் மாதேவி காலத்து செங்கல்லோடு நிற்கிறது. நல்லவேளை நாகராஜன் காப்பாற்றினான். இல்லையென்றால் அந்த இடமும் அடையாளம் தெரியாமல் போயிருக்கும். செம்பியன் மாதேவி கால செங்கல்லும் அவளோடு சேர்ந்து மறைந்திருக்கும். அபேஸ் பண்ணியிருப்பார்கள்.

ஆலயத்தை சுற்றிலும் பச்சை பசேல் என வயல்கள் . அமைதியான கிராம சூழ்நிலை. கோனேரி ராஜபுரம் 18 வாத்திமா கிராமங்களில் ஒன்று. 200 க்கும் மேல் பட்ட பிராமண குடும்பங்கள் வாழ்ந்த வசித்த ஊர். ஏழு அக்ரஹாரங்களை கொண்டது. கோவில் மடவிளாகம் உமா மஹேஸ்வரர் ஆலயத்தை ஒட்டி இருந்தது. அங்கே கோவிலை தனி அக்ரஹாரமாக குருக்கள் மற்றும்  பரிஜாரகர்கள் வசித்தனர். கால ஓட்டத்தில் பிழைப்பை தேடி நிறைய பேர் புலம் பெயர்ந்த காரணத்தால் கோவில்களும் அதில் சம்பந்தப்பட்ட ஒரு சில குடும்பங்கள் மட்டுமே எஞ்சியவை.

கோனேரி ராஜபுரம் நிறைய சாம வேதக்காரர்கள் நிறைந்த ஊர். 1950 களில் ஸ்ரீ மஹா பெரியவா கும்ப கோணத்தில் முகாம் இருந்த காலத்தில் இங்கு வந்து அநேகமாக எல்லா வீடுகளிலும் தங்கி ஆசிர்வதித்து உள்ளார். உமா மகேஸ்வர கோயில் ஸ்தல வ்ருக்ஷம் அரசமரம். குளக்கரையில் பலி பீடமும் மஹா வில்வ மரமும் உள்ளன.

GITANJALI



கீதாஞ்சலி          J K  SIVAN          
தாகூர்  
                              
     
      2.    நினைத்தாலே  இனிக்கிறாய்  கண்ணா

நண்பர்களே,  நீங்கள் கவனித்திருப்பீர்கள்.  நான்  படித்த  மூலங்களை  அப்படியே  வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பவன் அல்ல.  நான் படித்து ரசித்ததை  என் மனதில் தோன்றியவாறு உங்களுக்கு கொடுப்பவன். எத்தனையோ  மஹான்களின் ஸ்லோகங்கள், உபநிஷத், வேத சாரங்கள், மஹான்களின் வார்த்தைகள், கருத்துகள் இவ்வாறு தான் உங்களை இதுவரை அடைந்து வருகிறது.   


தாகூரை மொழிபெயர்ப்பது எளிதல்ல. மனப்பக்குவம் வேண்டும். அவரது எண்ணங்கள் எழுத்தாக வரும்போது உருவம் சரியாக தெரியாது. உணர்ச்சி மட்டுமே கொப்புளிக்கும். அது தான் அவருக்கு உலகப்புகழ் தந்தது. நோபல் பரிசும் தந்தது.    மோனத்தின் எல்லா ஞானம்.    கீதாஞ்சலியை அப்படியே  வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால்  ஜூக்நு   என்று  முன்பெல்லாம் டிவியில் வருமே   அதில் பேசுவார்கள்   ''நீ   போகிறாய்  அங்கே  அப்போ  என்று   சொன்னார்   மாமா  கேட்க ''   என்போது போல்  இருக்கும். 

இனி கீதாஞ்சலி  2வது கவிதைக்கு  செல்வோம்.

2.When thou commandest me to sing it seems that my heart would break with pride;
and  I look to thy face, and tears come to my eyes.
All that is harsh and dissonant in my life melts into one sweet harmony---
and my adoration spreads wings like a glad bird on its flight across the sea.
I know thou takest pleasure in my singing.
I know that only as a singer I come before thy presence.
I touch by the edge of the far-spreading wing of my song thy feet which I could never aspire to reach.
Drunk with the joy of singing I forget myself and call thee friend who art my lord

 '' நீ பாடு என்று சொல்லி விட்டாய். என்னை பாடகனாக பார்க்கிறாய்.  என்னைப்பார்க்கும்போதெல்லாம் நீ பாடு.... என்கிறாய். அப்போதெல்லாம் என் இதயம் எப்படி மகிழ்ச்சியில் பெருத்து,பருத்து வெடிக்கும் போல் ஆகிவிடும்   என்பது உனக்கு தெரியுமா கிருஷ்ணா?

எனக்கு பாட வராது.  எதைப்பாடுவது, எப்படிப் பாடுவேன், எவ்வளவு நேரம் ?  பாட முடியாமல் நான் உன்னையே பார்த்துக்கொண்டிருப்பேன். கண்கள் பனித்து திரை விழும். 

உன்னை நினைக்கையில் தான்  என்ன ஒரு பெருமிதம் எனக்கு.     எங்கோ ஆகாசத்தில்  திசையின்றி மனம் போன போக்கில்  சஞ்சரிப்பதை போல் இருக்கிறதே. கண்களில் ஆனந்த கண்ணீர். முகம் நூறு சூரியனாகி விட்டதே.   என்னுள் இருந்த  கடினங்கள், இளகிவிட்டன.  முன்னுக்குப் பின் முரணாக எண்ணங்கள்  எல்லாம் காணாமல் போய்விட்டது. ஏதோ ஒரு சொல்லத்தெரியாத  இனிய  அனுபவம்....

எத்தனை சொல்லொணா கஷ்டங்கள் ஏமாற்றங்கள் இதுவரை நான்  பார்த்து விட்டேன். எல்லாம் உருகி ஒன்றாய் மனக்கடலில்  கரைந்து கலந்து மறைந்து  விட்டது. 

உன்நினைப்பு போற்றி மனதிற்குள் பாடும்  நான்   சந்தோஷத்தில் திளைத்த  ஒரு பறவை   பெரிய சிறகடித்து   பெருங் கடலையை தாண்டி பறக்கும் பறவையாகி விட்டேனா?   இவ்வளவு பெரிய கடலை சுலபத்தில் சந்தோஷமாக ரெக்கை அடித்து தாண்டிவிடுவேனே. ஏன் தெரியுமா ரகசியத்தை சொல்கிறேன் கேள். உனக்கு என் பாட்டு பிடிக்கும்.  அந்த ஒரு பெருமை எனக்கு கிடைத்துவிட்டதே.

உனக்கு நான் என்றுமே ஒரு பிரபல பாடகன். நான் எப்போதும் உன் எதிரில் இருக்கும்போது ஒரு பாடகனாகவே தான் தெரிவேன். அப்படி  உன் முன்னே மனம் உருகி பாடி தானே  நான்  பழக்கப்பட்டவன். 

 என்னுடைய  பாடலின்  இறகு   பெரிதோ சிறிதோ  எதுவாயினும்  அதன் முனையால்,  நுனியால்  எப்படியாவது உன்  திருப்பாதங்களை வருடுவேன் கண்ணா.    ஆஹா,  உன் திருப்பாதங்களை அவ்வளவு எளிதில் எவராலாவது தொடமுடியுமா? 

உனக்கு  பிடித்த பாடகன்,   நீ விரும்புவதை  என்னை மறந்து நான்  பாடுகிறேன் என்ற பெருமை, கர்வத்தோடு கூடிய  ஆனந்தம் தலைக்கேறி  கூத்தாடுகிறேன், பாடுகிறேன்.  கிருஷ்ணா,  நீ   என் ஆருயிர்த் தோழன்   என்று  மகிழ்ந்து,  நீ தந்த  உரிமையோடு உன்னை  நினைத்தாலே   நீ  இனிக்கிறாய் கிருஷ்ணா  ''

Sunday, June 28, 2020

ASHTAPADHI

நாத ஹரே ஜெகந்நாத ஹரே J K SIVAN

கொரோனா வீட்டுக்குள் உட்கார வைத்து விட்டாலும் டிவியில், யு ட்யூபில் வாட்சப்பில் ஜகந்நாதன் பூரியில் தேரில் செல்லும் வைபவத்தை படுத்துக்கொண்டே பார்த்தேன். பூரி என்றால் எப்போதும் எனக்கு உருளைக்கிழங்கு மசாலாவை விட ஒரு மஹான் தான் நினைவுக்கு வருவார்.
ஜெயதேவர் என்கிற பெயரை விட அஷ்டபதி எனும் ராதா கல்யாண பஜனை பாடல்கள் உலக ப்ரஸித்தம்.

இதில் என்ன ருசி என்றால் பலர் பலவித ராகங்களில் கற்பனையுடன் செவிக்கு விருந்தாக ராதா கல்யாண மஹோத்ச வங்களில் பாடுகிறார்கள். அதைத் தவிர பிரபல வித்துவான்களும் இதை விட்டு வைக்கவில்லை. சங்கீத நிகழ்ச்சி ஜனரஞ்சமாக இருக்கவேண்டும் ரசிகர்கள் கை தட்டல்கள் அதிகம் பெறவேண்டும் என்று ஜெயதேவர் அஷ்டபதிகள் சில உருப்படிகளை கச்சேரியில் சேர்த்துக்கொள்கிறார்கள். சினிமாக்களும் தமது பங்குக்கு சில அஷ்டபதிகளை நல்ல மெட்டுக்களில் அமைத்து நடுவே சேர்த்துக் கொள்கிறது. காசு பார்க்கிறது.

ஜெயதேவர் வாழ்வில் அவர் உள் மூச்சாக இருந்தது ராதா கிருஷ்ணன் நினைவுகள். வெளிமூச்சாக வந்தது ராதா கிருஷ்ணன் பிருந்தாவன லீலா அற்புத அஷ்டபதி பாடல்கள் . அஷ்டபதி காட்சிகளில் ஆள் அதிகம் கிடையாது. ராதை, கிருஷ்ணன், ராதையின் ஒரு தோழி, (சகி,) அப்புறம் மறைவாக இதையெல்லாம் கவனித்த ஜெயதேவர் மட்டுமே பிருந்தாவனத்தில்.
பிருந்தாவனத்தில் நடந்ததை அப்படியே ஒவ்வொரு ஓவராக கிரிக்கெட் விளையாட்டு ரன்னிங் கமென்டரி மாதிரி ஜெயதேவர் ராதா கிருஷ்ணன் சகி , தோழிகள் சந்திப்பு, பேச்சு, அவர்களது உணர்வுகள் ஆகியவற்றை கீத கோவிந்தம் (அஷ்டபதி) பாடல்களில் உயிரூட்டி கண்ணெதிரே கொண்டு வருகிறார்.

அதில் ஒன்று இது.

Naatha hare, Nata hare, Naata hare
Pasyati disi disi, Pashyathi dishi dishipaSyati diSi diSi rahasi bhavantam
tvadadhara madhura madhu ni pibantam
nAdha harE jagannAdha harE
seedati rAdhA vAsa gruhE ||nAdha|
tvadabhisaraNa rabhasEna valantee
patita padAni kiyanti chalantee||nAdha|

vihita viSada bisa kisalaya valaya
jeevati paramiha tava rati kalayA||nAdha||
muhuravalOkita manDana leelA
madhuripu rahamiti bhAvana SeelA||nAdha |.
tvarita mupaiti nakadhA mabhisAram
hari riti vadati sakhee manu vAram||nAdha||
Slishyati chumbati jaladhara kalpam
harirupagata iti timira manalpam||nAdha||
bhavati vilambini vigaLita lajjA
vilapati rOditi vAsaka sajjA||nAdha||
Sree jayadEva kavErida muditam
rasika janam tanutam atimuditam||nAdha|
Naatha hare, Nata hare, Naata hare
Pasyati disi disi, Pashyathi dishi dishi

ராதையின் தோழி மதுவனத்தில் கிருஷ்ணனை தேடி கண்டுபிடித்து

''கிருஷ்ணா, ராதை உன்னைக்காணாமல் துரும்பாக இளைத்து கவலைக்கிடமாக இருக்கிறாள் . நீயோ அவளை பற்றியே கவலைப்படாமல் மற்ற கோபியர் புடைசூழ இங்கே ஆடலும் பாடலுமாக இருக்கிறாய். உன்னை உடனே சந்திக்கவேண்டும். வா'' என்கிறாள் ராதையின் தோழி.

''அவளையே இங்கே வரச்சொல்லேன்?''

''அது தானே முடியவில்லை, அவள் கால்கள் செயலிழந்து தள்ளாடுகிறது. அவளை தாங்கும் சக்தி அவள் கால்களுக்கு இல்லை. உன்னை பிரிவதால் உண்டான துயரம் நெஞ்சுக்கு சக்தி இல்லாமல் செயகிறது.உடல் அனலாக கொதிப்பதால் குளிர்ந்த தாமரை இலைத் தண்டுகளை எடுத்து அவள் நெற்றி, கை, கால்களில் கட்டிவிட்டு வந்திருக்கிறேன். உன்னைக்காணாததால் தன்னையே கிருஷ்ணனாக பாவித்து, நினைப்போல் வேஷம் தரித்து பார்த்து கொஞ்சம் தெம்போடு உயிரோடு இருக்கிறாள். ராதை கிருஷ்ணன் என்பது மனித உடல்கள் அல்ல. பக்தனுக்கும் பரமனுக்கும் இடையிலான பக்தி பிணைப்பு. பாசம். ஜெயதேவர் கற்பனைக்குதிரையை தட்டி விட்டு பிருந்தாவனம் போய் நேரில் கண்டது போல் காட்சிகளை விளக்குவது ரொம்ப ஆச்சர்யம். என்னே அவரது கிருஷ்ண பக்தி.
இந்த பாடலை பாடியவர் ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா. அதை கேட்டு நானும் பாடினேன். பாலமுரளி கிருஷ்ணா பாடியதற்கு ்
விளம்பரம் வேண்டாம். நான் பாடியதை நானே கூட கேட்கவில்லை என்பதால் அவசியம் இந்த யூ ட்யூப் லிங்க் https://youtu.be/R-meCpm1YDE க்ளிக் செயது நான் எப்படி பா.மு.கி யை அவமானப்படுத்தி இருக்கிறேன் என்று கவனியுங்கள்

GITANJALI

தாகூர் கீதாஞ்சலி J K SIVAN

1 எங்குமே ஆனந்தம். 1. ''Thou hast made me endless, such is thy pleasure.
This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life.
This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new.
At the immortal touch of thy hands my little heart loses its limits in joy and gives birth to utterance ineffable.
Thy infinite gifts come to me only on these very small hands of mine.
Ages pass, and still thou pourest, and still there is room to fill. தாகூருக்கு கிருஷ்ணன் ஞாபகம் வந்திருக்கிறதோ? எப்படி அவன் குழலிசை கீதத்தை நினைவிலிறுத்தி கீதாஞ்சலியை எழுத ஆரம்பிக்கிறார். கீதை தந்தவனுக்கு அஞ்சலி தான் கீதாஞ்சலியோ? யாராயிருந்தாலும் எந்த பாஷை பேசினாலும் கிருஷ்ணனை மறந்து இயற்கையையோ தெய்வத்தையோ நினைக்க வழி உண்டா? அவனை நினைத்தாலே ஆனந்தம் பெருகாதா? ''பகவானே, எனக்குகடைசிகாலம் என்று ஒன்று இல்லை. நிரந்தரமாக்கி விட்டாய். அதில் உனக்கு எவ்வளவு சந்தோஷம். இந்த தேகம்எனும் மண்பாத்திரம் அடிக்கடி உடையும், காலியாகும். ஆனால் நீ மறுபடியும் இன்னொன்று படைத்து அதில் உயிரை உள்ளே வைத்து நிரப்பி அனுப்புபவன் . மீண்டும் புது வாழ்க்கை. !! அடேயப்பா, கிருஷ்ணா, நீஎப்படியப்பா, இந்த சாதாரண நாணல் மூங்கில் குழாயில் உன் மூச்சுக்காற்றை செலுத்தி ஒரு தெய்வீக சங்கீதத்தை கொடுத்து, காடு மலை, நதி பள்ளத்தாக்கு என்று எங்கும் ஜீவநாதத்தை பரப்பி உயிர்ப்பிக்கிறாய்.ஒவ்வொரு ஒலியும் உயிரோட்டம் நிறைந்த ஒரு புது நாதம். ஜீவ கானம் .எல்லையற்ற நிரந்தர அமர இன்னிசை. உன் மூச்சுக்காற்று மட்டுமா?. உன் தெய்வீகக் கரங்கள் தாங்கி விரல்கள் அசைந்து எழும் அந்த சாஸ்வத சங்கீதம் என் மேல் காற்றில் படும்போது நான் எங்கே இருக்கிறேன் என்றே தெரியவில்லை! எங்கோ எல்லையில்லாத ஆனந்த லோகத்தில் சஞ்சரிக்கிறேன்.என் நெஞ்சத்திற்கு அதை எடுத்துச் சொல்லும் சக்தி இல்லை. அது வார்த்தைகள் மொழிகள் மீறிய ஒரு எல்லையற்ற இன்பம். அதன் அர்த்தங்கள் எத்தனை வேதத்திலும் அடக்க முடியாதது. நீ பரோபகாரி, எவ்வளவு அதிசயதானமாக இதை அளிக்கிறாய். இந்த பிரபஞ்சத்தில் எனது கரங்கள் மிக நுண்ணியவை. அவற்றின் மூலம் நீ அளிக்கும் அளவற்ற தொடரும் பரிசுகள் எண்ணற்றவை .
யுகங்கள் தான் மாறி மாறி வருமே தவிர உன் கருணைப் பரிசு தொடர்ந்து தான் அளித்துக் கொண்டிருக் கிறாய். இந்த பிரபஞ்சத்தில் சுற்றிப்பார்க்கிறேன். இதயமாகிய என் மண் பாண்டமும் காலி
ஆகவில்லையே. விடாமல் உன் பரிசு மழை அதை நிரப்புகிறதே. இல்லையே அடடா எல்லாமே உன் ஜீவ நாதத்தால் நிரந்தரமாக நிரம்பி பொங்கி வழிகிறதே! எங்குமே ஆனந்தம்.

GOD GIVEN TREASURE




நமக்களித்த பொக்கிஷம் .  J K SIVAN

அண்ணாசாமி  மொறுமொறுவென்று  மூன்றாவது   முருங்கைக் கீரை வெங்காய   அடையையும் சூடாக அவன் மனைவி  செல்லம்மா   அவன் தட்டில் கொண்டு  போட்டதும்   சட்டையை மடக்கி விட்டுக்கொண்டு   ஒரு கை  பார்க்க தயாராகிவிட்டான் .
எதிரே இருந்த மிளகாய்ப்பொடி நல்லெண்ணையை  அடைமேல் குழைத்து தடவி அதை முக்கால் வாசிசிகப்பாக   மறைத்தான்.  கண்களில் நீர் வடிய  சூடாக விழுங்கி சுகமாக பாதிக்கு மேல்  சாப்பிட்டுக்  கொண்டு  இருக்கும்போதா  திடீரென  ஒரு தாங்கமுடியாத பளிச்சென்ற  வலியோடு, வியர்த்துக் கொட்டி, மார்பு அடைத்துக் கொள்ளவேண்டும்?
கண நேரத்தில் கண் இருட்டியது. மூச்சு முட்டியது.  ''செல்லி''   என்று கூப்பிட வாய் திறந்தான் வாயில் வார்த்தை வரவில்லை, சைகையால் அவளை அழைத்தான். அவள் திரும்பி பார்க்காமல் சமையல் அறையில் அடுத்த அடையின் மறுபக்கத்தை அவனுக்கென்று  சூடாக  தோசைக்  கல்லில்  திருப்பிப் போடுவதில் கவனமாக  இருந்தாள் .  ஹாலில்  டிவி யில்  தேவதாஸ் படம் ஓடிக்கொண்டிருந்தது.  கண்டசாலாவின் குரல்  ''உலகே மாயம் ''  என்று இருமிக்கொண்டிருந்தது.
ஒரு  க்ஷணம்  திக்குமுக்காடிய அண்ணாசாமியின் தலை மேசையில் தட்டின்  இருந்த  பாதி அடையின் மேல்
கவிழ்ந்தது  கண்கள் குத்திட்டு நின்றது. பேச்சு மூச்சு இல்லை.  4.47 மணிக்கு மாலை  அடை  சாப்பிட டைனிங் டேபிள் எதிரே  உட்கார்ந்த  அண்ணாசாமி   ண்டரை அடையோடு   5.12க்கு  காலமாகிவிட்டான்.
நான்காவது  அடையோடு அவனை நெருங்கிய செல்லம்மா  திகைத்தாள். ஏன் இப்படி டைனிங் டேபிளில்  தட்டுமேலேயே  சாய்ந்து படுத்துவிட்டார்?
''என்னங்க? ''.  கூப்பிட்டாள் , அசைத்தாள்,  சரிந்தான். அலறினாள்,  வீட்டில் இருந்த அவன் மகன் மகள் சகோதரி எல்லோரும் வந்தார்கள். அப்புறம் என்ன? டாக்டர் வந்து உதட்டை பிதுக்கினார். செய்யவேண்டிய  காரியங்கள் நிறைய இருக்கிறதே.
அதெல்லாம் அவர்கள் கவனிக்கட்டும். நாம்  அண்ணாசாமியைப்   பின் தொடர்வோம்.
அண்ணாசாமி தனது வீட்டை விட்டு எங்கு போய்கொண்டிருக்கிறான்?  
புது இடமாக இருக்கிறதே? ரொம்ப லேசாகி விட்டானே, நல்ல குண்டு தொந்தியும் தொப்பையுமாக இருந்தவன் எப்படி காற்றில்  ஆடும்  துளிர்  இலைமாதிரி அசைந்து நகர்கிறான்.
யார் அவன் எதிரே அவனை நட்போடு புன்னகையோடு  தலைஅசைத்து வரவேற்பது?
 அவர் கையில் என்ன பெரிய பெட்டி.    உற்று பார்த்தான். அட  என் கிருஷ்ணன் தான்.''
''என்ன இது கிருஷ்ணா, எனக்கு ஒன்றுமே  புரியவில்லையே?''
உனக்கு என்னை சந்திக்கும் நேரம் வந்துவிட்டதே''
''நாளைக்கு  மைலாப்பூரில் ஒரு  காம்ப்ப்ளெக்ஸ்  ரெண்டு பில்டிங் கான்க்ரீட் ROOF  போடணும் கிருஷ்ணா. ஆள் எல்லாம் வருவார்கள் எல்லா ஏற்பாடும் பண்ணிவிட்டேன்''  கிருஷ்ணா பிளேட்ஸ் FLATS   என்று பெயர் சூட்டப்போகிறேன்
.என் பெண்  நாட்டிய  அரங்கேற்றம் அடுத்த ஞாயிறு   நங்கநல்லூர்  ரஞ்சனி சபாவில்  ஏற்பாடு பண்ணி யிருக்கிறேன். 
பையன் கார்  டெலிவரி எடுக்கிறான் நாளன்றைக்கு.   
மனைவி  தென்னாங்கூர் போகவேண்டும் என்கிறாள் ஞாயிறன்று அங்கே  நீ  மஹாராஜா.  அப்படி உன்னை  பார்க்க  வேண்டும் என்று   எனக்குக்கூட  ஆசை

.''சாரிடா  அண்ணாசாமி,  டைம் ஆயிடுத்தே''''
என்ன  உன் கையிலே பெட்டி , நான் தூக்கிக்கொண்டு வரட்டுமா?''''
அது உன் சமாச்சாரங்கள் இருக்கிற உன் பெட்டி தாண்டா''
'என் சாமான்களா,  என் துணி பணம், துண்டு வேஷ்டி  புஸ்தகம், சீப்பு கண்ணாடி, சங்கிலி மோதிரம் வாட்ச்  எல்லாமா?
''''அதெல்லாம் உனது என்று யார் சொன்னது? அது இந்த பூமிக்கு சொந்தம்''
''என்ன சொல்றே கிருஷ்ணா?  அப்போ இதிலே என்ன  என் சிந்தனைகளா, ஞாபகமா?''''
அது உனதில்லையே, காலத்துக்கு அல்லவோ சொந்தம்?''
''நான் ரொம்ப கெட்டிக்காரன் சாமர்த்தி யசாலி என்பார்களே, அப்போ  அதில்    என் சாமர்த்தியம், திறமையா?
'''உளறாதே அண்ணாசாமி, அது சமய சந்தர்ப்பம் கொடுத்தது.   அதனிடமே திரும்பி  போய்விடும் '
'''ஓஹோ என் நண்பர்கள்  குடும்பம் அதெல்லாம் போட்டு திணித்து வைத்திருக்கிறாயா, நீ  தந்திரசாலி ஆச்சே?''
''டேய்  அண்ணாசாமி, அதெல்லாம் , வீதி வரை மனைவி, காடுவரை  பிள்ளை  விஷயங் கள் .உனதில் லை யப்பா''

'''என்ன சொல்கிறாய்  கிருஷ்ணா?'' என் மனைவி பிள்ளை குட்டி எல்லாம் .......எனதில்லையா?''''
உன் உடம்பில் இருந்த மனதுக்கு  தோன்றிய உறவு அதெல்லாம்''
' ஆமாம் கிருஷ்ணா  நான் தான் இப்போது உடம்பு இல்லாதவனாகி விட்டேனே. என் உடம்பை அதில் வைத்திருக்கி றாயா?

''''இல்லேடா  அது மண்ணுக்கு சொந்தம். வந்த இடத்துக்கு திரும்பிவிடும்''
''ஆஹா  மலையை கிள்ளி எலியை  பிடித்துவிட்டேன்.  அப்போது உன் கை  பெட்டியில் இருப்பது என் ஆத்மா ''
''தப்புடா  அண்ணாசாமி பையா.  உன் ஆத்மா என்னுடையது. அது எனக்கு அல்லவோ சொந்தம்''
அண்ணாசாமி கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.     கையெடுத்து கிருஷ்ணனை கும்பிட்டு மெதுவாக தழுதழுத்த குரலில் கேட்டான்:  ''அந்த பெட்டியை திறந்து காட்டு.  என்ன  அதில் ?''''

காலி பெட்டி . உள்ளே ஒன்றுமே இல்லையே.'
' கண்களில் நீர் பெருக கை கூப்பிக் கொண்டே  ''கிருஷ்ணா  எனக்கு என்று ஒன்றுமே இல்லையா?''
''ரொம்ப சரி  நீ சொல்வது  அண்ணா சாமி''''
எது தான் எனக்கு என்று சொந்தம் அப்போது?'''
'கணங்கள். நான் உனக்குமட்டும் அல்ல, உன்னைப்போல் எல்லோருக்கும் அளிக்கும் கணங்கள். அதை நீ அனுபவித்தாய் அல்லவா, அது தான் உன் இன்ப துன்பம் சொந்த பந்தம்  சர்வமும் ''

இறைவன் அளித்த நேரத்தை பொன்னே போல் போற்றி  அவன் அருளால் அவன் தாளை வணங்குவோமா,   வேலை வணங்குவதை தவிர வேறென்ன  வேலை  என்று ஒருவர் அழகாக பாடி இருக்கிறாரே

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...