Wednesday, June 3, 2020

KRISHNA CLARIFIES

யமுனா விட்ட வழி  J K SIVAN


யமுனை நதியை ஒட்டி  பல  ரிஷிகளின் ஆசிரமங்கள் இருந்த காலம்.  எதிரே  யமுனை கரை புரண்டு வேகமாக  எதற்கு ஓடுகிறாள்? வெள்ளம் பெருக்கெடுத்துவிட்டது.   ஒரு  சிறு ஆஸ்ரமத்தில் இருவர் மட்டுமே. ஒன்று கிருஷ்ணன், இன்னொன்று ருக்மணி.

"ருக்மணி  ஒரு  வேலை  எனக்காக  செய்கிறாயா ?"  என்றான் கிருஷ்ணன்

"என் பிராண நாதா  அது  என்  பாக்கியம், சொல்லுங்கள்"

“இதோ  அந்த  யமுனை  நதியின்  அக்கரையில்  ஒரு  ஆஸ்ரமத்தில்  துர்வாச முனிவர்  வந்து தங்கியிருக்கிறார் " நாம் அவருக்கு  இன்று ஒரு  சிறந்த  விருந்து அளிப்போம்.  உடனே தயார் செய்து நீயே  அதை கொண்டுபோய் அவருக்கு  பறி மாறிவிட்ட வருகிறாயா?"

"உடனே செய்கிறேன் பிரபு ”
ருக்மணி  அறுசுவை உண்டி  தயாரித்து  நிறைய  பாத்திரங்களில் வைத்து தலைமேல் கூடையை  எடுத்துகொண்டு  யமுனை நதியை அணுகினாள். வெள்ளம் கரை புரண்டோடு கிறதே  எப்படி  அக்கரை  செல்வது. படகு   ஒன்று கூட  காணோமே.   என்ன செய்வேன் பிரபு ?"    
"ஒ,   அப்படியா நீ  யமுனையிடம் போய் "நித்ய  பிரம்மச்சாரி" உன்னை வழி  விடச்சொன்னார்" என்று சொல்." என்றான் கிருஷ்ணன்

" யார் அந்த  நித்யப்ரம்மசாரி?"
"ஏன்,  நான் தான்!."

ருக்மணி மனதுக்குள் சிரித்தாள் . அவளை யும் சேர்த்து  எட்டு  மனைவிகள்  கொண்ட கிருஷ்ணனா நித்ய பிரம்மச்சாரி!,  என்ன வேடிக்கை.  பரவாயில்லை,  கிருஷ்ணன் சொன்னதை செய்வது மட்டுமே  என் கடமை"  ''

''யமுனா  எனக்கு  வழி விடு. நித்ய பிரம்மச்சாரி உன்னிடம் வழி விட சொன்னார் ''

யமுனை இரண்டாக  பிரிந்து நடுவே ராஜ பாட்டையில் ருக்மணி  அக்கரை அடைந்தாள். மனதிற்குள்  ஆச்சர்யம்.   ஆஸ்ரமத்தில் காத்து கொண்டிருந்த  துர்வாச மகரிஷி

''வாம்மா  ருக்மணி உனக்காக தான் காத்திருக்கிறேன். உன் கை  அறுசுவை உண்டிக்கு தனி ருசி அல்லவா? ''

 ருக்மணி பறிமாறிய  உணவை  திருப்தியாக உண்டார். பாத்திரங்கள் கூடையை தலையில் வைத்து யமுனை யை பார்க்கிறாள். ஓ வென்ற சப்தத்துடன்  பெருவெள்ளமாக ஓடுகிறாள் யமுனை. 

''என்ன யோசிக்கிறாய்  ருக்மணி?"  என்றார்  துர்வாசர்.

" மகரிஷி,   வெள்ளம் எப்போது வடிந்து எப்போது நான் அக்கரை  திரும்புவது. கிருஷ்ணன் காத்திருப்பாரே ?"

''ருக்மணி நீ  போய் யமுனையிடம்  " நித்ய உபவாசி கேட்கிறார்  வழி விடு"  என்று சொல். வழி தருவாள்.

ருக்மணிக்கு தனது காதுகளை நம்பமுடிய வில்லை.   இப்போது தான்  அவள் கையால்  மூக்கு பிடிக்க  வயிறு வெடிக்க  விருந்து சாப்பிட்ட இவரா  ''நித்ய உபவாசி''  ??   வாய் திறக்காமல் சொன்னபடியே செய்தாள். அவர் பெரிய  கோபக்கார முனிவராச்சே.

யமுனை அவள் வழி கேட்டதும்  மீண்டும்  ராஜ பட்டை.  ருக்மணி அக்கரை  அடைந்து   மனதில்  கிருஷ்ணனிடம்  விஷயத்தை சொல்லும் போது அவளுக்கு  மனதில் ஒரே  குமைச்சல்,  என்ன  இது,  ஒருவர்  நித்ய பிரமச்சாரியாம் ஒருவர் நித்ய  உபவாசம் இருப்பவராம்! சம்திங்  ராங் சம் வேர் something wrong  somewhere .  

 "ருக்மணி, உனது மனதில் ஓடும்  எண்ணம் என்ன என்று எனக்கு தெரியும்  நானே  விளக்குகிறேன். உனக்கு. நீ பார்க்கும்   இந்த உடல் வேறு, உள்ளே இருக்கும்  நான்  வேறு,  துர்வாசர் உடலில் வாசம் செய்யும்  ஆத்மாவும் அவ்வாறே.  உடல் சம்பந்தப்பட்ட  எந்த ஆசை, பாசம், உணர்ச்சி, காலம், நேரம், உணவு,  உறவு, வேண்டியது, வேண்டாதது செய்யும் செயல்
ஆத்மாவாகிய  எங்களுக்கு  கிடையாது.  எனவே  நீங்கள் நினைப்பது போல்  அல்லாமல்  நான் நித்ய  பிரம்மச்சாரி  துர்வாசர்  நித்ய உபவாசி தான் .புரிகிறதா".

 புரிகிற பக்குவம்  வந்தால் உனக்கு  இது விளங்கும்"    என்றான் கிருஷ்ணன்.  ருக்மணிக்கு மட்டும் அல்ல இந்த உபதேசம் நமக்கும் தான் . 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...