Wednesday, August 31, 2022

THE TWO HOLY RIVERS

 புண்ய தேவிகள்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


அந்த ரெண்டு பேருமே ரொம்ப  வயசானவர்கள். ஓடிக்கொண்டே இருப்பவர்கள்.
இனம் இனத்தோடு சேரும்  என்பார்களே அது போல் அந்த  இரண்டு தாய்களுமே இணைபிரியாதவர்கள். ஒன்று சேர்ந்தவர்கள்.  எங்கோ பிறந்து வளர்ந்து உழைத்து  தேய்ந்து களைத்து கடைசியில் ஒன்று சேர்ந்தவர்கள்.  ஒருவள்  தங்கநிறம். மற்றவள்  மாநிறம்.  
''வாம்மா,  யமுனா தேவி.  உன்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் இப்போது தான்  சந்தித்தேன்''  என்கிறாள் கங்கம்மா.
''கங்கா, நான் சொல்ல நினைத்ததை நீ சொல்லி முந்திக்கொண்டாய்...உன் பெருமை என்ன, புகழ் என்ன. ஒருநாளாவது உன்னை சந்திப்பேனா என்று ஏங்கின  எனக்கு  தான் உன்னை சந்தித்ததில்  பரம சந்தோஷம் ' என்றாள் யமுனா தேவி.
''யமுனா நீ யார் உன் பூர்வோத்திரம் சொல். கேட்க ஆசையாக இருக்கிறது.''
நானும்  உன்னைப்போல  தான்  ஹிமாச்சலத்தில் பிறந்தவள். நான் பிறந்த இடம் யமுனோத்ரி. நீண்ட  வழி வந்தவள் ஆயிரம் மைல்கள்  கடந்து வந்தவள். என் தந்தை  சூர்ய தேவன்.  சகோதரன்  யமராஜன். யமன்.  அதனால் என் பெயர் யமி , யமுனா என்று கூப்பிடுகிறார்கள்.
''ஆஹா  எப்பேர்ப்பட்ட புண்யசாலி நீ ''என்றாள்  கங்கம்மா .
''நிறுத்து போதும்.  அக்கா  நீ  சாதாரணமானவளா? பரமேஸ்வரனே உன்னைப் போற்றி  தன் தலையில் சூட்டிக்கொண்ட பெருமை கொண்டவள். எவ்வளவு  உயிர்களுக்கு  உணவளிப்பவள். எத்தனை பேர்  பாபங்களை வாங்கிக் கொண்டு  புனிதப் படுத்துபவள். இந்த தேசத்துக்கு புகழ் தருபவள்.  எத்தனை தெய்வங்கள் உன்னை வணங்குகிறார்கள்.அக்கா   கங்காதேவி,  உன் முன்பு  நான் ஒரு சிறு ஓடை. அவ்வளவே."
"இல்லை  யமுனா, உன் பெருமை நான் அறிவேன்.
ரிஷிகள்  என்ன சொல்கிறார்கள் தெரியுமா? கங்கையை நூறு மடங்கு புனிதப்படுத்தினால் கிடைப்பவள்  யமுனா.  விஷ்ணு என்கிற நாராயணனின் ஆயிரம் நாமத்தை விட ராமா என்கிற பெயர் உசத்தி. அப்படிப்பட்ட ராமனின் மூன்று நாமங்களுக்கு ஈடு கிருஷ்ணன் என்கிற ஒரு நாமம். இது பாகவதத்தில் இருக்கு.
யமுனையில் நீராடினால் ஒருவன் செய்த பாபத்தின் விளைவுகள் அவனை விட்டு விலகும் 
''கங்கா தேவி  நான் உன் சகோதரி என்ற பெருமையே போதும்.''
''யமுனா, நீ ரொம்ப புண்யம் செய்தவள். புண்யம் தருபவள். உன்னில் ஒருமுறை ஸ்நானம் செய்தவன் குளித்து எழும்போது மனம் பூரா கிருஷ்ணனின் நினைவுகளோடு தான் கரையேறுகிறான். சைதன்யர் சொன்னதம்மா இது.

''யமுனா, உனக்கு தெரியுமா? பிருந்தாவனத்தில் வசித்து அன்றாடம் உன்னிடம் ஸ்நானத்துக்கு வருபவர்களால் இந்த உலகமே சுத்தமாகிறது. நீ மறந்துவிட்டாயா? எத்தனை ஆயிரம் முறை உன்னில்  மூழ்கி விளையாடியிருக்கிறான் கிருஷ்ணன் நண்பர்களுடனும் கோபியர்களுடனும்!! அவன் பாதத்தை எவ்வளவு ஆயிரம் தடவை நீ தொட்டு புனிதமடைந்தவள். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்??? 

''அக்கா  உன்னோடு இருந்தால் தான் கிருஷ்ணனைப் பற்றி முழுதும் உனக்கு சொல்ல முடியும் என்றாயே , இனி உன்னை விடமாட்டேன், இதோ வந்துவிட்டேன் ....சொல்லு ஆர்வமாக இருக்கிறது கேட்க....''
யமுனாவும்  கங்கையும்  அணைத்து  இறுக்க  கட்டிக்கொண்டார்கள்  ஒன்று சேர்ந்தார்கள்.  
அங்கே  தான் நாம்  இருவரையும் நமஸ்கரித்து கண்ணுக்கு தெரியாத  சரஸ்வதியையும் சேர்த்து வணங்கி திரிவேணி சங்கமம் என்று ஸ்னானம் செயது பாவத்தை போக்கிக் கொள்கிறோம்.



THIRUVACHAKAM


 எல்லாமே  பொய் :   #நங்கநல்லூர்_J_K_SIVAN 


இன்று  மாணிக்கவாசகர்  படித்தேன்.  திருவாசகம் ஆஹா...  ஒரு  பக்தி பொக்கிஷம் அது. நாம்  யாருமே  சத்ய சந்தர்கள் இல்லை. சத்யமாகிய  சூர்யன் உதித் தவுடனே  அன்றைப் பொழுது  விடிந்ததும் ஏதாவது ஒரு  பொய்  சொல்லாமல் நம்மால் இருக்க முடியவில்லை.  ஏன்?  நாம் பொய்யிலே  பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்.  இப்படி பொய்யே வடிவாக உள்ள நாம் செய்யும் காரியங்கள், சொல்பவை எப்படி நிஜமாகும்?

அடே  ஸர்வேஸ்வரா , எனக்கு எல்லாம் கொடுத்த நீ ஏனடா இந்த பொய்யை  என்னுள் திணித்தாய்? அது இல்லாமல் நான் வாழ முடியாதா?
நான் முழுசாக ஒரு பொய்.  என் தேகம் நான்  நிஜம் ஸாஸ்வதம்  என்று என்ணுவதும் மஹா பெரிய பொய் . இதில் ஒரு வேடிக்கை பார்த்தாயா?  இந்த பொய்யான உடலுக்கு 'மெய்' என்று பெயர். 

என் உடம்புக்குள்ளே என் கண்ணுக்கே  தெரியாத நெஞ்சம், மனம், உள்ளம்  என்று ஒன்றை வைத்திருக் கிறாய். அது பொய்யில் ரொம்பி வழிகிறது.  வஞ்சம், லஞ்சம், பொய் , பொறாமை, கோபம், ஆத்திரம், மடமை, மதம், ஆங்காரம் என்று சகல விதமான  துர்க் குணங்களும் நிரம்பியுள்ளது.

இப்படிப்பட்ட  நான்  செலுத்தும் அன்பு நம்பக்கூடியதா? சுத்த  பொய் .  அழியும், நிலையற்ற வஸ்துக்களை, உறவுகளை, தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், சுற்றம் என்று பெருமையோடு சொல்கிறேன்.  என் வீட்டை பார்  எவ்வளவு பெரிய கோட்டை மாதிரி கட்டி இருக்கிறேன் என்று மார் தட்டுகிறேன். இதோ இந்த கருப்பு வஸ்து, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட  கார். 3  கோடி ரூபாய் விலை.

இதற்கிடையே  என் கண்களில் சில  நல்ல விஷயங் களும் கண்ணில் படுகிறது. சனாதன தர்மம் பற்றி நிறைய பேசுகிறேன், படிக்கிறேன், அதில் உள்ள உண்மை மனதில் பதியாமல் பொய்  அதை மறைத்து விடுகிறதே. ஞானிகள் சொல்வது காதில் ஏறவில்லை யே.தங்கள் கூறும் உண்மை! ஞானிகள் உணர்ந்த சத்தியம்! இதுவே நம் சனாதன தர்மம் உரைப்பது!பகவானே நான் திருந்த என்ன வழி?

முந்தைய ஜென்ம பாவங்கள் என்னை இப்படி  பொய்யனாக்கி விட்டதே. இதில் இருந்து விடுபட உன்னை நினைக்கவேண்டும், உன்னிடம் என் பாபங்களை சொல்லி அழவேண்டும். அழுதால்  சுமை, பாரம், குறையும், நெஞ்சு லேசாகும். நீ தெரிவாய்.  அழுத  பிள்ளை தான் பால் குடிக்கும்.

நான் உன்னையே நினைத்து நினைத்து என் பாபங்களை சொல்லி அழுகிறேன் அழுகிறேன். நீ ஒருவனே சத்யம்.   அழுதாள்  பாப பிராயச்சித்தம் பெற்று உன்னை அடையலாம்  என்று ஏற்கனவே அழுத  மாணிக்க வாசகர் சொல்கிறாரே.  உன்னை ''சிக்'' கென பிடிக்க முடியுமாம். சர்வேஸ்வரா, நீ  தான் அம்ரிதம்,   தேன் .தெள்ளிய  கரும்புச்சாறு. அடியார்களுக்கு இனிப்பவன். தெவிட்டாதவன். நெஞ்சார அழுது உன்னை தொழுகிறேன் என்மேல் இரக்கம் வையப்பா.

 இதோ  வள்ளலார் அழுது அனுபவித்த ஒரு வாக்கியம்;“

''நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே”

நான் படித்த  மாணிக்கவாசகரின் திருவாசக  பாடல்: 

''யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே''.

Tuesday, August 30, 2022

BRINDHAVANAMUM NANDHAKUMARANUM

 ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்  5

#J_K_SIVAN


மெத்து  மெத்து  மண் 

மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம்.  நாம்  50 வருஷங்களுக்கு முன்  வாழ்ந்த ஒரு வீட்டை பார்க்க போனால் அந்த வீடு, தெரு, அடுத்தடுத்த கட்டிடங்கள்  எல்லாமே  மாறிப் போய் இருப்பதை பார்க்கிறோமே,  ஐந்தாயிரத் து முன்னூறு வருஷங்களுக்கு   முன் கிருஷ்ணன் வாழ்ந்த கோகுல  பிருந்தாவன ஸ்தலங்கள்  சிறிதே மற்றம் அடைந்து அப்படியே இருப்பது ஆச்சசர்யம்.

கோகுல பிருந்தாவன வனங்களில்  அருமையான ஒன்று ரமண் வனம்  அல்லது ரமண் ரேதி.   கோகுலத்திற்கும்  ப்ருந்தாவனத்துக்கும் இடையே  15 கி.மீ. தூரம்.  பாலகர்களாக  கிருஷ்ணன் பலராமனோடும் நண்பர்களோடும்  சேர்ந்து விளையாடிய ஊர்  கோகுலம்.   ரமண் ரேதி  அதில் ஒரு மனோஹரமான இடம்.  ரமண் ரேதி  என்றால் புனித மண்  என்று அர்த்தம்.   கிருஷ்ணனும்  நண்பர்களும்  ஓடி ஆடி, கீழே விழுந்து, புரண்டு  ஒருவர் மேல் மற்றவர்  மண் எடுத்து வீசி விளையாடிய இடம். 

5300 வருஷங்களுக்கு அப்புறமும் அந்த இடம் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது.  அங்கே  மண்ணில் படுத்து புரண்டேன்.  நெற்றியில் மண் பிரசாதம் பெற்று,  மெத்து மெத்து என்று  சில்க் மெத்தை மேல் படுப்பது போல் எனக்கு  இருந்தது.  இந்த இடத்திலும் கிருஷ்ணன் தனது கடமையை ஆற்றியிருக்கிறான். ஆம்.  சில  ராக்ஷஸர்களை இங்கே கொன்றான்.

இங்குள்ள  கிருஷ்ணன்  ரமண் விஹாரி அவன் பெயரில் ஒரு ஆலயம்.  அதை  ரமண்பிஹாரிஜி ஆலயம் என்கிறார்கள்.. பல ரிஷிகள் குடிசை  ஆசிரமங்களில் இங்கே வாழ்ந்தார்கள்.  சிறிய  ஆஸ்ரமங்களாக இன்றும் இருக்கிறது. கதம்ப மரம் நிச்சயம் இங்கே உண்டு.

ஒரு சின்ன கதை.  இருநூறு வருஷங்களுக்கு முன்பு ஞானதாஸ்ஜி  என்று ஒரு பண்டிதர்  தவம் செய்ய இடம் தேடி   ரமண் ரேதியை செலக்ட் பண்ணினார்.  உள்ளூர்  பக்தன் ஒருவன் தினமும்  சுவாமிஜிக்கு  ஆகாரம் கொண்டு தருவான். ஒருநாள் கனவில் கிருஷ்ணன், ''ஞானதாஸ்,  உனக்கு  அந்த ஆசாமி கொண்டு வரும் உணவை உண்ணாதே''  என்று கட்டளையிட அப்புறம் ஸ்வாமிஜி யாரிடமும் உணவு பெறவில்லை.  

இங்கிருந்து 25 கி.மீ. தூரத்தில்  ஒரு சாது  தியானம் பண்ணிக்கொண்டிருந்தார்.  அவர் கனவில் கிருஷ்ணன் ''நீ  ரமண் ரேதிக்கு போ. அங்கே ஒரு சாது இருப்பர்  அவருக்கு சேவை செய் '' என்று கட்டளையிட  அந்த சாது ரமண ரேதிக்கு  வந்து ஞானதாஸை  வணங்கி 

''ஸ்வாமிஜி,  என்னை கிருஷ்ணன் தங்களிடம் அனுப்பி இருக்கிறார்.  எனக்கு கட்டளையிடுங்கள்  சேவை புரிய'  என்று வேண்டினார்.

''வாரம் ஏழு நாளுக்கும் ஆகாரமாக  ஏழு பிடி கடலையை மட்டும் எடுத்துக்கொண்டு வா  அது போதும்''  என்கிறார்  ஞானதாஸ்.  ஒரு நாளைக்கு ஒருபிடி கடலை  பருப்பு  உணவாக 12 வருஷம்  தவம் இருந்தார் ஞானதாஸ்.  ஞானதாஸ் தவத்தை மெச்சி கிருஷ்ணன் அவருக்கு தரிசனம் கொடுத்த இடம் தான்  ரமண்  ரேதியில் உள்ள  ரமண்  விஹாரி  கிருஷ்ணன் ஆலயம்.  கோகுலத்தில் பார்க்கவேண்டிய  புண்ய ஸ்தலம் இது.  
5000 வருஷங்கள்  ஆனபோதிலும்  அந்த ஊர் தெருக்களில்  போகும்போது, காணும் பழைய கட்டிடங்கள், குறுகிய சந்துகள்,  ஒவ்வொன்றும்  ஆயிரமாயிரம்  கதை கிருஷ்ணன் பலராமன், தோழர்களுடன் சேஷ்டை பண்ணிய  விஷயங்களை  சொல்கிறது. அவற்றை புரிந்து கொள்ள  ஆத்ம சக்தி வேண்டும்.   
ரமண ரேதி மண்ணில் புரண்டு விளையாடிய பின்  அருகே இருக்கும்  ரமண சரோவர்  எனும்  குளத்தில்  இறங்கி  கிருஷ்ணன் நண்பர்களோடு நீந்தி விளையாடி குளிப்பான்.  
''இந்தாடா கிருஷ்ணா, கட்டுச்சோறு. போ  பசுக்களை, கன்றுக்குட்டிகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்''  என்று அம்மா யசோதை மூட்டை கட்டி கொடுத்ததை எடுத்துக்கொண்டு பசுக்களை கன்றுகளை மேய்க்க  கிருஷ்ணன் செல்வான். ஆனால்  அவளுக்கு தெரியாமல் ரமண ரேத்தியில் தான் வெகுநேரம் விளையாடுவார்கள். மான்களோடு  விளையாடுவார்கள்.  அதன் ஞாபகமாக இன்றும் ஒரு  பெரிய  மான் வனம்  இருப்பதை பார்த்தேன்.  இங்கே மண்ணில் புரளும்போது  5250  வருஷங்க ளுக்கு முன்பு கிருஷ்ணனோடு சேர்ந்து  மண்ணில் விளையாடி புரள்வது போன்ற அனுபவம் பெற்றேன்.
பிருந்தாவனம் போவதற்கு முன்பே  இங்கே ராதையுடனும் விளையாடி இருக்கிறான் கண்ணன்.
கிருஷ்ணன் வளர்ந்த நந்த பவன்   எனும்  நந்தகோபன் வீடு  அழகாக இருக்கிறது. அதை  சவ்ராஸி  கம்பா  ஆலயம் என்கிறார்கள். அதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்.


Monday, August 29, 2022

BRINDHAVANUM NANDHAKUMARANUM

 பிரிந்தாவனமும்  நந்தகுமாரனும்  3.

நங்கநல்லூர் J K  SIVAN 

பகலும் இரவும் கொண்டாட்டம் 

தீபாவளி,  நவராத்ரி  பண்டிகைகள்  என்றால் குழந்தைகள் எவ்வளவு குதூகலமாக  ஓடி யாடி மகிழ்வார்கள்.  பண்டீரவனத்தில்  ஒவ்வொரு நாளும் நவராத்ரி தீபாவளி தான். அங்கே குழந்தைகளுக்கு பதிலாக  கோபியர்கள். வளர்ந்த குழந்தைகள்.  அவர்கள்  கோலாகலத்துக்கு காரணம்  கிருஷ்ணன்.  அடர்ந்த ஆல  மரத்தின்  கிளைகள்  குடை பிடித்த மாதிரி 
சூரியனை மறைக்க  வெயிலே தெரியாது. சில்லென்ற  காற்று  யமுனை நதியிலிருந்து  வரும்.   இப்போது மாதிரி அல்ல அப்போது. யமுனை வேண்டும்போதெல்லாம் தனது பாதையை மாற்றிக்கொள்வாள்.  மரத்தின் அருகே  சலசல வென்று ஓடினாள். நிறைய  வேறு தினுசு  மரங்கள் நறுமண மலர்கள் தருபவையம் அங்கிருந்தன.   குளிர்ந்த காற்றில்  அற்புத நறுமணம் கமழ்ந்து  கிறங்க வைக்கும். இதற்கு  பின்னணி சங்கீதம்  பறவைகளின் இன்னிசை குரல்கள். மயில்களின் நடனம்.
யமுனை நதிக்கரையில் எண்ணமுடியாத  இவ்வளவு  மரங்களை  யார்  எப்போது  நட்டது? ஓடிப் பிடிக்க இடம் விட்டு கிருஷ்ணனும்  நண்பர்களும்  கோபியரும் சுற்றிச்  சுற்றி வர சௌகரியமான இடம். பிருந்தாவனத்தில் இது வைகுண்டம்.  நந்தகுமாரனின் பிருந்தாவனம். எப்போது ராதா வருவாள், என்ன செய்வாள் என்று கிருஷ்ணனுக்கு தெரியாது. ஏன் என்றால் அது  ராதைக்கே தெரியாது.

வழக்கம்போலவே ஆநிரைகளுடன் கிளம்பிய கிருஷ்ணன் பசுக்களை யமுனையில் அதிக ஆழமில்லாத இடத்தில் அவற்றை குளிக்க வைத்தான். கன்றுக்  குட்டிகளுடன் விளையாடிக்கொண்டே, அவற்றை குளிப்பாட்ட சுகமாக  அரைத் தூக்கத்தில் அவை  அம்மா என்று குரல் கொடுக்கும்.

கிருஷ்ணனைச் சுற்றி கன்றுக்குட்டிகள் வெல்லத்தை ஈ மொய்ப்பது போல் வளைய வரும். . வாயில் பால் நுரை கலையாத அம்மாவிடம் பால் குடித்துக் கொண்டிருந்த குட்டிகள். அவன் அழகாக அவற்றை தேய்த்து குளிப்பாட்ட காத்திருந்தன. நான் முதலில் நீ முதலில் என்று அவற்றுக்குள் போட்டி வேறு.

தூரத்தில் இருந்தே அம்மா பசுக்களின் கண்கள் இந்த குட்டிகள் மேலே தான். இருந்தும் அதில் ஒரு நிறைவு.

''என்னைக்காட்டிலும் என் குழந்தையை இந்த கிருஷ்ணன் நன்றாகவே பாதுகாப்பவன் '' என்ற சந்தோஷம்.
ஒரு பசுவின் கண்ணில் இந்த உணர்ச்சியை கண்ட இன்னொரு பசு கண்ணாலேயே பதில் சொல்லியது.

''என்னடி லக்ஷ்மி இப்படி சொல்றே. உன்னைக்  காட்டிலும் ''பாதுகாப்பவன்'' என்கிறாயே. உன் குட்டியை கேள் என் குட்டியை போலவே அதுவும் பதில் சொல்லும் ''
''என்ன சொல்லும் ?''
''எனக்கு நீ அம்மா வேண்டாம். கிருஷ்ணன் தான் என் அம்மா '' என்று சொல்லும்.
'' ம்ம்.. ஒரு விதத்தில் அதுவும் நியாயம் தானே '' என்று முதல் பசு தலையாட்டும்.
''கலீர் கலீர்''  என்று கை வளைகள், கால் தண்டை,  சிலம்பு மட்டும் அல்ல, சிரிப்பும் அங்கே  ஒலிக்கும். ஒரே சந்தோஷ  மயமாக கோபியர்கள் கண்ணனை சூழ்ந்து கொண்டு பேசுவார்கள், ஆடுவார்கள்,பாடுவார்கள். வேடிக்கையாக இருக்கும் இதெல்லாம்  பார்க்க  அந்த  பசுக்களுக்கு.
இன்னும் இருக்கு நிறைய சொல்ல.


maha periyava miracle

 

HERE is the latest video from THE HINDU spiritual channel ANAND JOTHI, publishing a recording by me on Maha Periyava miracle of finding out the buried samadhi of the 58th Peetadhipadhi Sri Athma Bodenthra swamigal. link https://youtu.be/iJZWdELCmwI


https://youtu.be/iJZWdELCmwI

BRINDHAVANUM NANDHAKUMARANUM

 பிரிந்தாவனமும் நந்தகுமாரனும்  -    நங்கநல்லூர்   J.K. SIVAN 


1,   ராதா  கல்யாண  வைபோகமே...

பிரிந்தாவனத்திலிருந்து  திரும்பி வந்தவுடன்  நான் தெரிந்து கொண்ட  சில உண்மைகள்.

பிருந்தாவனத்தை ''இது இவ்வளவு தான் '' என்று ஒரு  அளவிட்டு எவராலும் சொல்ல முடியாது.  அப்படி யாராவது  சொன்னால் அவர் சரியாக, முழுமையாக  நிறைய  பார்க்கவில்லை என்று அர்த்தம்.  பார்க்கவும் முடியாது.

ராமாயண காலத்தில் தேவர்கள் வானரங்களாக அவதரித்து ராமனுக்கு உதவி  ராவணாதியர்களை துன்புறுத்தினார்கள்.  பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் காலத்தில் இருந்தார்களா என்று  சந்தேகம் வேண்டாம்.    இருந்தவர்களின் சந்ததிகள் இக்காலத்தில் அங்கு வரும் எல்லோரையும் துன்புறுத்துகிறார்கள்.  கண்ணனைப்  பார்க்க வந்த உனக்கு ''கண்ணாடி எதற்கு?'' என்று  மூக்கிலிருந்து கண்ணாடியை உருவி கடித்து உடைத்து விடுகிறார்கள்.   உலக பற்றை எல்லாம் ஒழித்தால் தானே நீ கண்ணனை அடையலாம் என்பதற்காக  கைப்பைகளை பிடுங்கிக்  கொண்டு  உச்சாணிக்கிளைகள், கோபுரங்கள் மீது போய்  அமர்ந்து அவற்றை கிழித்து வீசுகிறார்கள்.   பணப்பை வேண்டுமென்றால்  ஐநூறு ரூபாய் கொடுத்தால்  குரங்குக்கு  டூட்டி டப்பா கொடுத்து கவனத்தை மாற்றி பையை திரும்ப பெற வழி வகுக்கா என்றே  சில  சிலர்  பிழைக்கிறார்கள். 

கிருஷ்ணன் ராதா சம்பந்தப்பட்ட இடங்கள் எத்தனை எத்தனையோ இருக்கிறது. அவைகள்  வனங்கள் என்று அழைக்கப் படுகிறது, ஒன்றே ஒன்றைப்  பற்றி  மட்டும் இன்று சொல்கிறேன்.

மதுரா ஜில்லாவில்  பிருந்தாவனம் ஒரு கிராமம். அதற்குள்  குட்டி க்ஷேத்ரம்  பண்டீரவனம் எனும்  நந்தவனம். அங்கே இப்போது ஒரு குட்டி கோவில்.  இந்த குட்டி காட்டில் தான் ராதைக்கும் கிருஷ்ணனுக்கும்  கல்யாணம் நடந்ததாம்.  ப்ரம்ம வைவர்த்த புராணம்,  சொல்கிறது.  ப்ரம்மா தான் கல்யாணம் பண்ணி வைத்தார்.  பூலெரா தூஜ் PHOOLERA  DOOJ  என்று  ஒரு விழா ஒவ்வொரு  வருஷமும் இதை கொண்டாடுகிறது. வ்ரஜ பூமியில் இது ஒரு முக்கிய க்ஷேத்ரம். வேணு கூபம்  ஒரு கிணறு இருக்கிறது. அதை கிருஷ்ணன் புல்லாங்குழலால்  உருவாக்கினார். பண்டீர வனம் என்றால்  ஆலங்காடு.  ஒரு பெரிய  ஆலமரம்.  பண்டீர் வடம்.   அதன் கீழ் தான் கல்யாணம் நடந்தது. நம்மைப்போல  கல்யாண மண்டபங்கள், ஒளி, ஒலி  பெருக்கிகள் இல்லை.    பலராமனுக்கும் அங்கே ஒரு கோவில் உள்ளது.

இந்த வனத்தில் தான்  தன்னுடைய  கோபர்கள் நண்பர்களுடன் கண்ணன் அமர்ந்து பகலில் சாப்பிடுவான். விளையாடு வான். சூரியனையே மறைக்கும் அளவு அடர்ந்த  பண்டீர வடம்  அடர்த்தியாக, ஜிலுஜிலுவென்று  குளிர்ந்த காற்றை வீசும் இடம்.

ராதா-  கிருஷ்ணன் கல்யாணம் காதும் காதும் வைத்தது போல் ரஹஸ்ய  நிகழ்ச்சி இல்லை. லக்ஷக் கணக்கானோர்  பங்கேற்ற ஒரு அற்புத  வைபவம்.  ராதா  கிருஷ்ணன் இருவரின் தோழர்கள் தோழியர்கள்,எண்ணற்ற மயில்கள், கிளிகள், பசுக்கள், வானரங்கள். நம்மைப் போன்ற மற்றவர்கள் இல்லை.   பார்த்தீர்களா?  வானரங்கள்  கிருஷ்ணன் காலத்திலும் உண்டு.  நம்மைப்போன்று  உடல் சம்பந்தப்பட்ட  ''ஸ்வகீய ரஸம் '' உறவு  கல்யாணம் இல்லை, இது  ''பரகீய ரஸம் ''  மனதளவில். கர்க் ஸம்ஹிதை  நிறைய  சொல்கிறது.

ஒருநாள்  நந்தகோப மஹாராஜா  குழந்தை கிருஷ்ணனோடு  பசுக்களை மேச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது ஒரு பெரிய  சுழல் காற்று வீசியது.  எங்கும்  இருள் சூழ்ந்தது.  ஓ வென்ற பேரிரைச்சல். ''ஆஹா கிருஷ்ணா'' என்று நந்தகோபன் பயப்படும்போது, தானும் பயப்படுவது போல் நடித்து அப்பாவை கட்டிக்கொண்டான் கிருஷ்ணன். எங்கிருந்தோ  ராதா ராணி  ஒளிவீசி  தேவதைபோல் ஜொலித்து, தெய்வ ஸ்வரூபமாக  அங்கே ஓடிவந்தாள்.  நந்தகோபனுக்கு  ராதா  கிருஷ்ணன் இருவரின்  அளவு கடந்த பிரேமையையும்,  உயிரும் உடலும்  போல் பிரிக்கமுடியாதவர்கள் அவர்கள் என்றும்  தெரியும்.   கர்க  ரிஷி  சொல்லி இருக்கிறாரே. 

''அம்மா, ராதிகா,  நீ கிருஷ்ணனைப் பார்க்க தான் ஓடிவந்தாய் என்று எனக்கு தெரியும்.  போ அவனுடன் விளையாடிவிட்டு, குழந்தையை  ஜாக்கிரதையாக அழைத்துச்சென்று அவன் அம்மா  யசோதையிடம்  ஒப்படைத்து விடு.''  என்கிறார்  நந்தகோபன்.   

அப்போது அங்கே ஒரு அதிசயம் நேர்ந்தது.  ஒரு புத்தம் புதிய மாளிகை. மரகத மாணிக்க ரத்ன  கோமேதக கற்கள்  இழைத்த  மாளிகை.  அவள்  மடியிலிருந்த குழந்தை கிருஷ்ணன்  மறைந்து, அங்கே ஒரு நவயௌவன  சுந்தர புருஷன்  மணி மகுடம், மயிற்பீலி, ஆபரணங்களுடன் கிருஷ்ணனாக தோன்றினான்.  

''ராதா,  நான் உன்னில்  ''ஆதா'' பாதி என்றான். அது உண்மைதானே.  RADHA  என்றாலே  ADHAR. அவனுக்கு அவள் தானே  ஆதாரம்.  RADHAKRISHNAN ல்  ''R;;   இல்லாவிட்டால்  ADHAKRISHNAN  தானே.  ஒரு கணமும் பிரியா இருவருக்கும் அங்கே  சேர்ந்திருந்ததில் எவ்வளவு ஆனந்தம்!  தேவர்கள் மலர்மழை பொழிய,   ப்ரம்மா இருவரையும் மாலை சூட வைத்து, மந்திரங்கள் சொல்லி, மனம் செய்து வைத்தார்.  க்ஷண காலம் தான். இதோ கிருஷ்ணன் மீண்டும்  குழந்தை ஆகி  ராதையின் மடியில் விளையாடுகிறான்.  அவனை  ஆசை தீர ஆயிரம் முத்தங்கள் கொடுத்து அணைத்து  விளையாடி விட்டு அம்மா யசோதையிடம்  '' அம்மா இதோ உங்கள் தீராத விளையாட்டுப் பிள்ளை '' என்று ஒப்படைக்கிறாள் ராதை.  பண்டீரவனம்   ''ராதா கிருஷ்ண  விவாஹ ஸ்தலம்'' என்று அழைக்கப்படுகிறது.
பண்டீரவன  கோவில் புகைப்படங்கள் சிலவற்றை இணைத்துள்ளேன்.  ரசிக்கவும்.



Friday, August 19, 2022

BRAMMA'S ONE DAY

 ப்ரம்மாவின் ஒரு நாள்....   நங்கநல்லூர்  J K  SIVAN 



நாம்  இப்போது வசிக்கும் வாழும்  கலியுகம் பற்றி நாம் முழுதாக தெரிந்து கொள்ளவில்லை.  ரொம்ப ரொம்ப கஷ்டமான ஒரு கால கட்டத்தில் நாம்  ஜீவிக்கிறோம் என்று மட்டும் தெரிகிறது.

கலியுகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள  சில புள்ளிவிவரங்கள் முதலில் அறிந்து கொள்வோம்.
 எழுதப்போவதை  படிக்கவும்.

நம்மைப்  படைக்கும்  ப்ரம்மாவுக்கு   ஒரு  நாள்   என்பது ....ப்ளீஸ்....  கால்குலேட்டரைத்  தேடவேண்டாம். அதால் கணக்கு போட முடியாது.... பக்கத்தில் கம்பம், தூண் இருந்தால் கெட்டியாக பிடித்துக்கொண்டால்  விழாமல் இருக்கலாம். 

 நமது  வீட்டில்  ஏதாவது விசேஷம்  நடக்கும்போது  வலது தொடை மீது  இடது  உள்ளங்கை வைத்து  அதன் மீது  வலது உள்ளங்கை  மூடி  சங்கல்பம்  செய்கிறோமே.  அந்த  மந்திரத்தை  கொஞ்சம் ஞாபகத்துக்கு  கொண்டு (மனப்பாடமாக இருந்தால்) இல்லாவிட்டால்  கவலையே  இல்லை.  அடுத்த  முறை  வாத்யார்  சொல்லும்போது   காதாலாவது கேட்கலாம்.

"...ஆத்ய  பிரம்மணே , த்வீதிய  பரார்த்தே, ஸ்வேத வராஹ  கல்பே,   வைவஸ்தவ மன்வந்தரே, கலியுகே,  ப்ரதமே பாதே,  ...................''
 இது  என்ன சொல்கிறது?   பிரம்மாவிற்கு  ரெண்டு  காலவரையறை.   ஒரு  பரார்த்தம்  50  வருஷங்கள் கொண்டது.  ரெண்டு  பரார்த்தம்  தான் அவர்  பதவி காலம்.  
இப்போது  பிரம்மாவிற்கு  ரெண்டாவது  பரார்த்தம்    .அதாவது  51-100  பீரியட் .  51 வது  வருஷ  சர்வீஸ்  நடக்கிறது..இங்கு ''வருஷத்தில்''  தான்  சூட்சுமம்  இருக்கிறது.
 நமது  வருஷம் போல்  12 மாதம்,  X 30  நாள்  சமாசாரம்  இல்லை   பிரம்மாவுக்கு.>
ஒவ்வொரு  நாளும்  ஒரு  ''கல்பம்''.   மொத்தம்  30  கல்பம்  முப்பது நாள்.  (உதாரணம்:  ஸ்வேத  வராஹ கல்பம், நீல லோஹித கல்பம்,   வாம  தேவ  கல்பம்  இத்யாதி.....) ஆச்சா.  
''கல்பம்''  என்றால் என்ன?
ஒரு கல்பம்  14  மன்வந்திரம்  கொண்டது.
என்னய்யா புதுசு புதுசா அடுக்குறீர்.  ''மன்வந்த்ரம்'' ன்னா  என்னது?
மன்வந்தரம்  என்பது  நமது  கணக்குப்படி, 17.28 லக்ஷ  வருஷங்கள்  இடைவெளி  கொண்டது. 
அப்படியென்றால்  பிரம்மாவுக்கு நடுவிலே  ரெஸ்ட்.  படைப்பு  தொழிலுக்கு   ஹாலிடேயா?  இல்லை.
ஒவ்வொரு  மன்வந்தரமும்   71    மஹா யுகங்களை  கொண்டது.  
ஒரு  மகா  யுகம்  என்பது    நாலு  யுகங்களை  உடைய  க்ரூப்.  ( சத்ய ,  த்ரேதா, த்வாபர,  கலியுகங்கள்)  இவற்றிற்கு  முறையே  4, 3, 2, 1  பாதங்கள்  உண்டு.   கணக்கு இன்னும் முடியலை.   இன்னும் இருக்கிறது.  கவலை  வேண்டாம்.  
 ஒரு  பாதம்  என்பது நமது  கணக்குப்படி   4,32,000 வருஷங்கள்.   
நாம்  இப்போது  உள்ளது    7வது  மன்வந்தரத்தில்  28வது  கலியுகத்தில்.
ஒவ்வொரு  மன்வந்தரத்திற்கும்  ஒரு  தலைவன்.   அவன்  தான்  மனு.  ஆசாமி பேர் இல்லை. பதவிக்கு பேர். 
 இந்த  மனு  பதவிக்கு  நியமனம்  பெற்றவர்கள் 14  பேர்.   (1. ஸ்வயம்புவ, 2.  ச்வரோசிஷா,  3உத்தம,  4.தாமச, 5.ரைவத,  6 சக்ஷுசன்,  7   வைவஸ்வதன் --  இவர்தான்  இப்போதைய  மனு  அதிகாரி. .(சூரியனின்  பிள்ளை)  8. சூர்ய சவ்மி ,, 9 தக்ஷ சவ்மி , 10. பிரம்ம சவ்மி . 11. தர்ம  சவ்மி , 12. ருத்ர சவ்மி , 13.தேவ சவ்மி 14  இந்திர  சவ்மி .
ஒவ்வோர்  மன்வந்திரத்திலும்  ஒரு  இந்திரன்  உண்டு.  அவன் தான்  தேவலோக ராஜா.

இந்திரனுக்கு  கீழே  புரந்தரர்கள் என்று சில பேர்.
 ஒவ்வொரு  புரந்தரருக்கும்  உதவியாக   7  ( சப்த)  ரிஷிகள்  இருக்கிறார்கள். 
இப்போதுள்ள  சப்த  ரிஷிகள்  யார் தெரியுமா?
அத்ரி,  வசிஷ்டர் ,  காச்யபர், கவ்தமர் , பரத்வாஜர்,  விஸ்வாமித்ரர்,  ஜமதக்னி.
அடுத்த  இந்திர பதவிக்கு  காத்துக்கொண்டிருப்பவன் 
 மஹாபலி.

மஹாபலி   அடுத்த இந்திரன் ஆனால் அவனுக்கு உதவ  சப்த ரிஷிகள் ரெடியாகி  விட்டார்கள்: அவர்கள் யார்? 
 பரசுராமர்,  தீப்திமதர், காலவ ரிஷி, கிருபர் , அஸ்வத்தாமா,  வியாசர்,  ரிஷ்ய ஸ்ரிங்கர்/

 இப்போது  நடக்கும்  கலியுகம்  28 வது சுற்று.  நமது  கலியுகம்  ஆரம்பித்தது  3102 B.C (கிருஷ்ணன்  இருந்த  காலத்தில் கடைசியில்)
 அடுத்து  வரப் போகும்  மனு  :    சூர்ய  சவ்மி (விவஸ்வான் பிள்ளை,சூரியனின்  பேரன்--  அங்கும்  வாரிசு  ஆட்சி தானோ?)
 சாஸ்திரங்கள்  என்ன  சொல்கிறது தெரியுமா.  இந்த  மகா  காலத்தைப்  பற்றிய  விவரங்களை  அறிந்து கொண்டாலே  ஒருவன்  தனது  பாபங்களில்  இருந்து  விடுபடுகிறான்  என்று.  

 இதையெல்லாம் படித்தாகிவிட்டது. நான் இப்போது  ஒரு கேள்வி கேட்கிறேன். 
  உங்கள்  பெயர்  என்ன??????? 
மேலே  படித்ததில்  தலை சுற்றி உங்கள் பேரே  மறந்து போய்   விட்டதா?    இது தான் பிரம்மாவின்  ஒரு  நாள்  .....

AN EX HERO

 


குன்றத்தனை நிதியும் அன்றைப்பொழுதில் அழியும்...
நங்கநல்லூர்  J K SIVAN 

இது ஒரு கற்பனை . எவரையும் குறிப்பிடவில்லை  என்றாலும் எங்கோ எவருடனோ பொருந்தினால் அது  அதிசயம் தான்.
அவன் குரல் இப்போது வெளியே எழும்பவில்லை. சினிமா உலகம் அவனை மறந்து போய்விட்டது ஒரு காலத்தில் கொடி கட்டி பரந்த பாடும் அழகு நடிகன் அவன்.  குரல் வெண்கல நாதத்தில்  மத்தாப்பூ  போல  சங்கதிகள் உதிரும் அபூர்வ குரலோன்.  அவனை சிறுவயதில்  யாரோ ஒரு அறிவாளி பட தயாரிப்பாளனோ  இயக்குனனோ கண்டுபிடித்ததே  ஒரு கதை.  

ஓடும்  ரயிலில் அந்த சிறுவன் பெட்டி பெட்டியாக ஏறி, கையில் ஒரு அலுமினியம் லோட்டாவை பாடிக்கொண்டே  நீட்டுவான்.  அவனது  ராக ஆலாபனை, குரலின் காந்த சக்தி அந்த சினிமாக்காரனுக்கு பிடித்தது ஐந்து ரூபாய் காசுகள்  போட்டு தலையசைத்து ரசித்தான்.  வண்டி நின்றதும்  இறங்கும்போது அந்த தனவான்  ''பையா நீயும் என்னோடு வருகிறாயா, உன்னை நாடக கம்பெனியில் பாட நடிக்க வைக்கிறேன்'' என்றதும் ஆனந்தம் அந்த சிறுவனுக்கு.    அவனோடு சென்றான். அவன் தாய் தந்தை அவனைப்பற்றி கவலைப்படவில்லை.

மதுரை  திருச்சி  திருநெல்வேலி  மதராஸ்  கோவை என்று பல இடங்களுக்கு  நாடக கம்பெனி சென்றது.  வருஷங்கள் ஓடியது சிறுவன் இப்போது அயன் ராஜ பார்ட் நடிகன். அவன் பெயரைப் போட்டு  கும்பல்  சேர்ந்தது. கொட்டாய் நிரம்பியது. பதினெட்டு வயதான காளை அவனை சினிமா உலகம் அடையாளம் கண்டுகொண்டது. படத்தில் நடிக்க வைத்தார்கள்.  அத்தனையும்  வெற்றிப்படங்கள்.    பல இசைத்தட்டுகள் அவன் பாடல்களை தாங்கி ஊர் உலகமெல்லாம் கேட்டு மயங்கியது.   அவனைத்  தெரியாத ஆளே கிடையாது. குதிரை மேல்  சவாரி செய்தான்.   பெரிய மாளிகை கட்டி வாழ்ந்தான்.    பன்னீரில் குளித்து தங்கத்தட்டில் உண்டான். பல பெண்கள் அவனை நாடினர்.  மணந்தான். பலரை கைவிட்டான். நடித்தான். குடித்தான்.  பணம் அவனை அறிவிலியாக்கி சிக்கல்கள்  சூழ்ந்தன. கொலை வழக்கிலும் சிக்கினான்.  சிறை சென்றான். பல வருஷங்கள் கழித்து வெளிவந்தான். குரல் மங்கியது. பட உலகம் ஒன்றிரண்டு சந்தர்ப்பம் கொடுக்க முன் வந்தது.  கண்டிஷன்கள் போட்டது. அவன்  சுய கௌரவம்.அதை ஏற்க மறுத்தது.   படவுலகம் பாட்டை மறந்து பேச்சை ஆதரித்தது. அவனுக்கு பேச தெரியாது. கடன் வாங்கினான். தானே படமெடுத்தான். அவனைத் தவிர அதை பார்க்க அதிக ஆளில்லை.  முடங்கினான். வியாதி வந்தது. சொத்தை விற்று  கடனை அடைத்தான்.   ஓட்டாண்டியானான்.  ஆரம்ப வாழ்க்கை திரும்பியது. கோவில்கள் வாசலில் அமர்ந்து பாடினான்/ தான் யாரென்று அடையாளம் காட்டிக்கொள்ள  மறுத்தான். பாடின போதெல்லாம்,    கேட்டவர்கள்  ''ஆஹா நீ அந்த  பெரிய நடிகன் பாடுவானே  அவனைப்போலவே  அழகாக  பாடுகிறாயே, குரல் தான் அவனைப் போல இல்லை''   என்று அவனிடமே சொன்னார்கள். தனது புகழ் இன்னும் முற்றிலும் மங்கவில்லை என்ற சந்தோஷம் அவனை வாழ விட்டது.  

அன்று காலை யாரோ ஒரு புது நடிகநின் படம் வெளிவருவதால் பிரம்மாண்டமான  பெரிய  படம் சட்டம் கட்டி  தெருவில் நிற்க வைத்து ஏணி வைத்து  ஏறி அந்த நடிகன் படத்தின் தலையில் பால் குடம் குடமாக ஊற்றினார்கள்.  அவன் ஒரு பெருமூச்சு விட்டான். அந்த படத்தில் இருந்த நடிகன் ஒரு காலத்தில் அவனுக்கு கால் பிடித்து விட்ட இளம் சிறுவன்.

மெதுவாக ஒருநாள்  நடக்க முடியாமல்   கிழிந்த ஆடைகளோடு தெருவில் நடந்தவன் ஒரு டீக்கடை வாசலில் நின்றான். அந்த டீக்கடையில் தினச் செய்தி பத்ரிகைகளும் நாடார் விற்றார். அந்த கடையில் தொங்கிய  செய்தித்தாளில்  அவன் படம்.  அவன்   நாடக சினிமா உலகில் 30 40  ஆண்டுகள்  தலை சிறந்து கோலோச்சியது,  அவன்  நாடகங்கள்  சினிமா படங்கள் வெகுநாட்கள் ஓடியது பற்றி பல பழைய படங்களில் இருந்து போட்டோக்கள் இருந்தது.  அதையே உற்றுப்  பார்த்துக்  கொண்டிருந்தவனுக்கு  அந்த பத்திரிகை வாங்க கூட காசில்லை. 

''என்னா  பெரிசு, சினிமா ந்யூஸ் பார்க்கிறியா. ஒரு காபி நாலு ரூபா''   அவன் பதில் பேசாமல் தனது படங்களின் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென்று கண்களில் நீர் பெருகியது.  '' ஹே நன்றி  கெட்ட உலகமே, நான் தான் அது''  என்று கத்த  முயன்றான். நெஞ்சை ஏதோ அடைத்தது. பேச்சு வரவில்லை, மூச்சுத் திணறியது.  டீக்கடை பெஞ்சில் சாய்ந்தான். மண்டையில்  ஒரு  கல் இடித்து ரத்தம் சொட்டியது. ' ஹும் '  என்று ஒரு வார்த்தை எழுந்து அடங்கியது. 

பால்ராஜ்  சோடா  வாயில் ஊற்றியபோது அது வழிந்தது.  திறந்திருந்த கண்களை மூடி விட்டார். நடிகன் இப்போது  விண்ணுலகத்தில் நடிக்க போய்விட்டான்.  போலீஸ் வந்தது. அவன் யாரென்று அடையாளம் தேடியது. அவனது கிழிந்த ஜிப்பாவில் ஒரு பிளாஸ்டிக் கவரில்  அவன் பெயர் அச்சிட்ட  புகைப்படங்கள், எல்லாம் ஹிட் படங்களில் அவன் ஹீரோ வாக நடித்த காட்சிகள் தாங்கிய பழைய படங்கள்.....  மறுநாள்  அவன் பெயர், பழைய பெருமை, அவன் சாதனைகள் தாங்கிய பத்தி பத்தியாக செய்திகள் வந்தபோது அவன் ' காலமானான் ''  என்ற வார்த்தையும்  அதில் இருந்தது...... நாடார் கடையில் பலர்  பத்ரிகை  வாங்கினார்கள். பழைய  ரசிகர்கள் கண்ணீர் சிந்தினார்கள்....


 


Thursday, August 18, 2022

ADHI SANKARA

 


ஆதி சங்கரரின் வினா விடை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ப்ரஸ்னோத்ர  ரத்ன  மாலிகா.

  ३३. किमहर्निशमनुचिन्त्यं? भगवच्चरणं न संसारः।  चक्षुष्मन्तोऽप्यन्धाः के स्युः? ये नास्तिका मनुजाः॥
  33.  kimaharnishamanuchintyam? Bhagavachcharanam na samsaarah  Chakshushmanto’pi andhaah ke syuh? Ye naastikaa manujaah

77. எதைப்பற்றி ஒருவன் இரவும் பகலும் சிந்திக்கவேண்டும்?
உலக சமாச்சாரங்கள்  எதுவுமே மனதில் இடம் பிடிக்கக்கூடாது.பகவான் திருப்பாதம் ஒன்றே மனதை நிரப்பவேண்டும். 
        
78. யாரை  கண்ணிருந்தும் குருடர்கள் எனலாம்?
கடவுள் இல்லை என்பவன்,  வேதங்களை பழிக்கிறவன் நிச்சயம் குருடன்.
  
३४.  कः पंगुरिह प्रथितो? व्रजति च यो वार्धके तीर्थं ।  किं तीर्थमपि च मुख्यं? चित्तमलं यन्निवर्तयति॥            
34.    kah Panguriha prathito? Vrajati cha yo vaardhake teertham  kim teerthamapi cha mukhyam? Chittamalam yannivartayati

79. எவன்  காலிருந்தும் முடம்?
ரொம்ப வ்ரிருத்தாப்பியத்தில், முதிய வயதில்  தீர்த்த யாத்திரை கிளம்புகிறவன் (என்னைப்போல)

80. எது ரொம்ப ரொம்ப உன்னத  தீர்த்தம், குளமா, ஏரியா, நதியா, கடலா, இதில் முழுகி பாபத்தை தொலைக்கலாம்
எதுவாக இருந்தாலும்  உடல் அழுக்கு நீங்கி பயனில்லை. தீய  நெடுங்கால  வாசனைகளை அகற்றி  மனதை எது சுத்தப்படுத்துகிறதோ அந்த நீர் நிலை உன்னதமானது.

३५. किं स्मर्तव्यं पुरुषैः?हरिनाम सदा,न यावनी भाषा।   को हि न वाच्यः सुधिया? परदोषश्चानृतं तद्वत्॥   
35.  kim smartavyam purushaih? Harinaama sadaa, na yaavanee bhaashaa  Ko hi na vaachyah sudhiyaa? Paradoshashchaanrutam tadwat
  
81. எதை ஒருவன் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்?
ஹரிநாமத்தை விட வேறு எது இருக்கிறது நினைக்க?  யவனர்களின் பாஷையா  ஞாபகத்தில் இருக்க வேண்டும்?

82. அறிவாளி, கற்றவன் எதை  உச்சரிக்கமாட்டான்?
உண்மையற்ற,  சாத்தியமில்லாத  விஷயங்களை, பிறர் குற்றங்களை வாயை திறந்து சொல்லமாட்டான்.


thanks giving manthra


 In today's video recording for THE HINDU spiritual channel a small manthra is chanted by us in grateful thanks to the god of protection Sriman Narayana. It is a well known manthra chanted by us in all auspicious occasiona and poojas. It comes also at the end of Sri Vishnu Sahasranamam

कायेन वाचा मनसेन्द्रियैर्वा ।
बुद्ध्यात्मना वा प्रकृतिस्वभावात् ।
करोमि यद्यत्सकलं परस्मै ।
नारायणयेति समर्पयामि ॥
KAYENA VACHA MANASENDHRIAIRVA, BUDDHIYATHMANAVA, PRAKRITHIYE SWABAVATH, KAROMI YATH YATH SAKALAM PARASMAI NARAYANETHI SAMARPPAYAMI
You may view the short video recording by clicking the link

MAYA

 மாயனும்  மாயாவும்   -  நங்கநல்லூர்  J K  SIVAN



அந்த காலத்தில்  குழந்தை பிறந்து தொப்புள் கொடி  அறுத்ததும் அடுத்ததாக வந்து நிற்பவர் ஜோசியர்.  பிறந்த நேரம், நாள், நக்ஷத்ரம், திதி எல்லாம் ஜாதகம் பார்த்து பிள்ளையின்  ஆய்சு,  எதிர்காலம் என்ன என்று பெற்றோர்கள் ஆவலாக  தெரிந்து கொள்வார்கள். ஜாதகர்மா என்று அதற்கு பெயர்.  கிருஷ்ணனுக்கு அதெல்லாம் யாரும் பண்ண நேரமில்லை. பிறந்ததுமே பார்சல் பண்ணி உயிர் தப்ப  நள்ளிரவிலேயே கோகுலம் அனுப்பப்பட்டான். இப்படிச்செய்  என்று  தந்தை வசுதேவருக்கு  கட்டளையிட்டதே  மஹாவிஷ்ணு அம்சமான கிருஷ்ணன் தான். 

ततश्च शौरिर्भगवत्प्रचोदित:
सुतं समादाय स सूतिकागृहात् ।
यदा बहिर्गन्तुमियेष तर्ह्यजा
या योगमायाजनि नन्दजायया ॥ ४७ ॥  ஸ்ரீமத் பாகவதம்  10.3.47 ஸ்லோகம்.

tataś ca śaurir bhagavat-pracoditaḥ
sutaṁ samādāya sa sūtikā-gṛhāt
yadā bahir gantum iyeṣa tarhy ajā
yā yoga-māyājani nanda-jāyayā

மெஷின் மாதிரி வசுதேவர் கிருஷ்ணனைத் தூக்கிக்கொண்டு  கம்சன் அரண்மனைச் சிறையிலிருந்து வெளியே வந்து, எவரும் பார்க்காமல் மதுராவை விட்டு கிளம்பி கொட்டும் மழையில் காரிருளில்  யமுனையைக் கடந்து அக்கரையில் கோகுல கிராமம் அடைந்து நந்தகோபன் அரண்மனைக்குள் எவரும் பார்க்காமலேயே நுழைந்து பிரசவ அறையில் புகுந்ததும் கிருஷ்ணன் யசோதையின் வயிற்றில் உதித்து  பிறந்தான். அடுத்து இன்னொரு பெண் குழந்தை   அப்போதே  யசோதைக்கு  யோகமாயா வாக  பிறந்து அந்த குழந்தையை வசுதேவர் தூக்கிக்கொண்டு வந்த வழியே  மீண்டும் சென்று  எவர் கண்ணிலும் படாமல்  சிறைக்குள் தேவகி அருகே பிறந்தகுழந்தையாக குவா குவா என்று கத்தியதும் காவலாளிகள் எழுந்தனர். கம்சனுக்கு  எட்டாவது குழந்தை பிறந்த சேதி பறந்தது. தேவகிக்கு விஷ்ணுவாக  சதுர்புஜத்தோடு, சர்வாபரணனாக  பிறந்தவன் யசோதைக்கு கருப்பு கிருஷ்ணனாக பிறந்தான் என்கிறது இந்த ஸ்லோகம். அற்புதம்.  பகவானால் முடியாது என்ன?   தேவகியின் பக்திக்கு முன்  பகுத்தறிவு இங்கே செல்லாது.  யானை முன் அது கொசு/

LIFE LESSON


 மறவேன் நான் மறவேன். #நங்கநல்லூர்_J_K_SIVAN


கலிகாலத்தைப் பற்றி சுகப்பிரம்ம ரிஷி ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பே சரியாக கணித்து பரிக்ஷீத் ராஜாவுக்கு சொன்னதை படித்துக்கொண்டு வருகி றோம்.

அம்மா பிள்ளை அப்பா என்ற மூன்று பேர் கொண்ட அமைப்பில் அம்மா அப்பா ரெண்டுபேரும் பிள்ளைகள் மேல் வைக்கும் பாசத்துக்கு அளவு ஈடு இணை, கிடை யாது. வளர்த்த பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்கள் பாசம் பெற்றோர் மேல் குறைவதைக் காண்கிறோம். அதுவும் அதிகம் படிக்காத அம்மாவை ஏசும், இகழும், பிள்ளைகளைப் பார்க்கும்போதும், அவர்களை பற்றி கேட்கும்போதும் நெஞ்சம் உடைகிறது.

''பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு'' என்று யார் அப்பட்டமாக எழுதியது?? இன்னொரு சுக ப்ரம்ம ரிஷியோ?

கலியுகத்தில் பணத்தால் பிள்ளை- பெற்றோர் உறவு துண்டாவதை பார்க்கும்போது தவறு நாம் சரியான பாதையில் போகாமல் பிள்ளைகளையும் அந்த தவறான பாதையில் கூட்டிச் சென்றதால் விளைந்த வினையோ என தோன்றுகிறது. பாசம் இருக்க வேண்டிய இடத்தை பணம் பிடித்துக் கொண்டு விட்டால் கோர்ட்டில் தான் ரெண்டு பேரும் சந்திக்கிறார்கள். கொலையும் நடக்கிறது.

அன்பு தெரியவில்லை ரெண்டு பக்கத்துக்கும். பாசத்தை ஊட்டத் தவறிய பெற்றோர்கள் பணத்தை நம்பி பாழுங்கிணற்றில் பிள்ளைகளோடு விழுகி றார்கள். பணம் தவிர மணமும் மனத்தை மாற்றி விடுகிறது. மணமான பிள்ளைகள் மாறி விடுகிறார்கள் என்று ஒரு வழக்கு பொதுவாக உள்ளது.

''அன்னையும் பிதாவும் தான் முன்னறி தெய்வம்'' என்று அப்போதெல்லாம் சின்ன வயதில்பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்தார்கள் . இது வேண்டாம் என்று யார் மாற்றி அமைத்தது? நாம் தானே.

புதிய கல்வி முறை எந்த விதத்தில் பாசத்தை வளர்க் கிறது? ''பணமா பாசமா ?'' சினிமாவில் மட்டும் அல்ல ஒவ்வொருவர் வாழ்க்கையும் அப்படி ஆகிவிட்டதற்கு நாம் தானே காரனம். சிறு தலைகள் தறுதலைகளாக மாற வழி கோரியது யார்?

பள்ளியில் இல்லாவிட்டாலும் வீட்டிலாவது அந்த உணர் வை ஊட்டவேண்டாமா? இனியாவது செய்வோமா? குழந்தைகளோடு அதிக நேரம் செலவழித்து நம் முன்னோர்கள் நமக்கு தெரிவித்ததை நாம் அவர்க ளுக்கு அளிப்போமா? அப்போது பிள்ளைகள் பெற்ற தாயை மறக்க மாட்டார்கள். கடவுள் பக்தி அவர்களை ஒன்று சேர்க்கும் வீடுகளில் சேர்ந்து வழிபடுவது நின்று போனது ஒரு காரணம்.

வள்ளலார் மனமுருகி ஒரு பாடல் பாடுவது காதில் விழுகிறதா?

'' பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே''

''என்னப்பனே, பரமேஸ்வரா, பெற்று பாசமாக வளர்த்த பிள்ளை அம்மாவை மறந்து போகட்டும். அந்த அம்மா வுக்கும் பிள்ளை பின்னாலே அலைந்து அலுத்துப் போய் அவன் நினைவே அவளுக்கு மரத்து , மறந்து போகட்டும். தேகம் உயிர் இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்திருந்தாலும் உடலை உயிர் மறந்து போகட் டும். தன்னுள்ளே கடைசி வரை இருக்கும் உயிரை அந்த உடல் மறக்கட்டும் . பள்ளிக்கூடத்தில் காலேஜ் மற்றும் பெரிய கலாசாலையில் எல்லாம் படித்தது அத்தனையும் மனது மறந்து போகட்டும். கண்ணை இமை மூடி மூடி இமைத்து காப்பது நின்று போகட்டும், பரவாயில்லை,

''என்னப்பனே, எல்லாம் அறிந்த தவ யோகிகள் மனதில் நிறைந்திருக்கும் ''ஓம் நமவசிவாய '' எனும் பஞ்சாக்ஷர மந்திரத்தை மறக்க மாட்டேன். அதன் உருவகமான உன்னையும் மறக்கவே மாட்டேன் மாட்டேன் மாட்டேன். 

Wednesday, August 17, 2022

JANMASHTAMI

 


ஜன்மாஷ்டமி   -  நங்கநல்லூர்  J K  SIVAN 

கிருஷ்ணன் எங்கே  எப்போது பிறந்தான்?
 இந்த கேள்விக்கு எல்லோரும் என்ன பதில் சொல்கிறோம்? 
வடமதுரையில் கம்சன் அரண்மனை சிறையில் வசுதேவருக்கும் தேவகிக்கும்   எட்டாவது மகனாக பிறந்தான் என்பது நமது பதில்.  

வேறு பதிலும் இருக்கிறது. கோகுலத்தில் நந்த கோப மகாராஜாவைக் கேளுங்கள்.  சந்தோஷமாக  ''எனக்கு ஒரு கருப்பு குண்டு பிள்ளை பிறந்தான்''  என்பார்.   எல்லோருக்கும் பசுவும், பொன்னும், நெல்லும், பாலும் தயிரும் வழங்குகிறார் பாருங்கள். 

 ஸ்ரீமத் பாகவதம் அதை அழகாக விவரிக்கிறதே.  அப்படி என்றால் கிருஷ்ணன் சிறையில் பிறக்கவில்லையா?  யார் சொன்னது இல்லை என்று?  அவன் அங்கும் பிறந்தான், இங்கும் பிறந்தான் எங்கும் பிறக்கிறான். இதோ நாளை நம் எல்லோர் வீட்டிலும் அழகாக  பிறந்து வாசல் வரை அவன் நடந்து செல்லும் காலடி சுவடுகள் வெள்ளை மாவில் தெரியுமே.  சிலர் வீட்டில் பெர்மனெண்ட் ஆகவே அந்த மாக்கோலம்  இருப்பதை பார்த்திருக்கிறேன்.

நங்கநல்லூரில் கிருஷ்ணா மாமி என்று ஒரு பக்தை வீட்டில் அவனை எங்கும் பார்த்திருக்கிறேன். தி.நகரில் கிருஷ்ணா மாமா வீட்டில் நான் அவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது  சத்தம் போட்டு பேசாதீர்கள் குழந்தை தூங்குகிறான் என்று தொட்டிலை காட்டினார். குட்டியாக  வெல்வெட்டு தலையணையில் கண்ணுறங்கி மேலே பட்டு போர்த்திக்கொண்டு தொட்டில் மெதுவாக  ஆட,  மேலே மின் விசிறி சத்தம் போடாமல் சுற்ற, அவனை தரிசித்தேன்.  வீடு முழுதும் எங்கு திரும்பினாலும்  கிருஷ்ணன்கள்.  

இது போல் எண்ணற்றவர்கள் வீட்டில் இருக்கும் மாஜயலக்காரன் கிருஷ்ணன் அவனால்  பல இடங்களில் பிறந்து மகிழ்ச்சி தரமுடியாதா?   ஸ்ரீமத் பாகவதம் இதை எப்படி சொல்கிறது: ஸ்ரீமத் பாகவதம்  10.5.1-2 ஸ்லோகங்கள் அர்த்தம்.

नन्दस्त्वात्मज उत्पन्ने जाताह्लादो महामना: । आहूय विप्रान् वेदज्ञान्‍स्‍नात: शुचिरलङ्कृत: ॥ १ ॥ वाचयित्वा स्वस्त्ययनं जातकर्मात्मजस्य वै । कारयामास विधिवत् पितृदेवार

nandas tv ātmaja utpanne   jātāhlādo mahā-manāḥ āhūya viprān veda-j�ān snātaḥ śucir alaṅkṛtaḥ vācayitvā svastyayanaṁ jāta-karmātmajasya vai kārayām āsa vidhivat pitṛ-devārcanaṁ tath

கோகுலத்தில் நந்த கோப மஹாராஜா வீட்டில் தடபுடல்.  தெருவெல்லாம்  கோகுலம்  பூரா கல்யாண கோலம்.  ராஜா வீட்டில் ஒரு பிள்ளை பிறந்திருக்கிறான்.  கருப்பு அழகன் என்பதால்  கருப்பன் என்ற அர்த்தம் கொண்ட  கிருஷ்ணன் என்று பெயர் வைக்க போகிறார்கள்.   எங்கே பார்த்தாலும் வேத பிராமணர்களின் தலைகள்.  அத்தனைபேருக்கும் கொடுக்க  லக்ஷக்கணக்கான பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிற்கின்றன. அவற்றின் கழுத்தில்  விலை உயந்த ஆபரணங்கள். எல்லாமே பிராமணர்களுக்கு தானம். அவர்களுக்கு பித்ரு தானமும் கொடுக்க ஏற்பாடு செயதாகி விட்டது.  ஊரில் எல்லோர் வீட்டிலும் கோலாகலம். எல்லோர் வீட்டிலும் கிருஷ்ணன் பிறந்தது போல்  ஆனந்தம். 

அது தான் கிருஷ்ணன்.


krishna jayanthi




 ஸ்வாகதம் கிருஷ்ணா  -  நங்கநல்லூர்  J K  SIVAN


நான்  ஹிந்து வாக பிறந்ததில்  அதிர்ஷ்டசாலி. அடடா!,  எத்தனை  பண்டிகைகள்   கோலாகலம். 
ஒவ்வொன்றும் இறைவனை ஏதோ ஒரு ரூபத்தில்  நினைத்து வணங்க வழி செயகிறது. ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும்போது  ஒரு  புது உற்சாகம் பிறக்க ஏதோ ஒரு பண்டிகை, 

இதோ  கிருஷ்ண ஜெயந்தி.  உலகமெங்கும் தெரிந்த முழு முதல் கடவுள்  கிருஷ்ணன் அவதரித்த நாள்.   பூமியிலிருந்து  ராக்ஷஸர்களை  இடப்பெயர்ச்சி பண்ணுவதற்காக  தான் பிறந்த   ஆவணி அஷ்டமி நள்ளிரவே  மதுரை சிறையிலிருந்து  கோகுலத்திற்கு இடப்பெயர்ச்சி செய்ந்துகொண்டவன்.

கண்ணன்  என்று சொன்னாலே சுபிக்ஷம் வடக்கே ஜன்மாஷ்டமி சமயம்  பருவக்காற்று காலம் தீர்ந்து  பயிர்கள் வளர்ந்து அறுவடை காலமாக இருக்கும். எனவே விவசாயிகள், விளை நிலங்களில் அதிக வேலையின்றி கேளிக்கைகளில் ஈடுபட நேரம் கிடைக்குமே. ராஸலீலா வைபவத்திற்கு கேட்கவா வேண்டும்!  . கோவர்தன கிரி நன்றி இன்னும் நம்  ரத்தத்தில் ஓடுகிறதே.

ஜென்மாஷ்டமி அன்று  ஜம்மு காஷ்மீரில்  காற்றாடி விடுகிறார்கள். ஒவ்வொரு வீட்டு மொட்டை மாடியிலிருந்தும்  பட்டம் பறக்கும்.  இந்த  வருஷமும்  இனி  வரும் காலத்திலும்  கேட்கவே வேண்டாம்.  இதுவல்லவோ  சிறப்பு  அந்தஸ்து.!  மணிப்பூரில் அஸ்ஸாமில்  ராஸ் லீலா கேளிக்கைகள் பிரபலம்.

  கோகுலாஷ்டமி தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனை வரவேற்பது வழக்கம். வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், பாதச்சுவடுகளை மாக்கோலமாக இடுவர். பாத சுவடு கோலமிடுவதில்  தான் எத்தனை ரகம். குழந்தைகளின்  கால்களை மாவில் தோய்த்து  ரப்பர் ஸ்டாம்பாக   rubber stamp ஆக  சில வீடுகளில்.   பெரிய முன்பாகம், சின்ன பின்பாதம்,   விரல்களுக்கு மேல், அல்லது குறைவாக, பாதங்களும் ஒன்றன் பின் மற்றொன்றாக,  சேர்ந்து, 8 வரைந்து மேலே குச்சி குச்சிகளாக விரல்களை  நீட்டி  எத்தனையோ வீடுகளில் வேடிக்கையாக  பார்க்கலாம்.  குழந்தைகளை பாலகிருஷ்ணர்களாவும், ராதைகளாகவும் கோபியர்களாகவும் அலங்கரித்து அவர்களை கண் குளிர,  பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

 நம்  குழந்தைகளுக்கு கண்ணன் போல் வேடமிட்டும் அவர்களின் பாதச்சுவடுகளை மாக்கோலமாக வரையும்  பழக்கத்தை வளர்ந்துவரும்  நாகரிகம்   இதுவரை  மாற்றவில்லை. இப்படி பாதம் வரைவதற்கு அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது. கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வேண்டியது இறைவனின் திருவடியைத் தான்.  ஆச்சார்யனின் பாதத்தை  கண்ணனின் திருவடியோடு சேர்த்து  நாம்  வழிபடுபவர்கள்.  நம் வீட்டிலும் பாதச்சுவடுகளை வரைந்து வைத்தால் குழந்தைக் கண்ணன்  பால கிருஷ்ணன்  தன் பிஞ்சு பாதங்களை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நம் வீட்டுக்கு வருவதைப் போல ஒரு தோற்றத்தைத் தரும்.

தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும்  குட்டி குட்டியாக  கிருஷ்ணன் பாதங்கள் அரிசி மாவில் வரைந்து கண்ணை பறிக்கும். உப்பு சீடை, வெல்ல சீடைக்கு ஒரு தனி ருசி. இரவெல்லாம் பஜனை. ஹரே கிருஷ்ணா நாம சங்கீர்த்தனம். வடக்கே கீத கோவிந்தம் படிப்பார்கள், பாடுவார்கள்.

கண்ணனுக்கு பட்சணங்கள் என்றால் கொள்ளை பிரியம். அவல், பொரி, சுகியன், அப்பம்,தட்டை, வெல்லச் சீடை,உப்புச் சீடை,முறுக்கு, அதிரசம் ஆகியவைகளை படையல் இட்டு வணங்கி குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கின்றனர்.
குட்டி குட்டியாக குழந்தைகள் -- இல்லை  பிஞ்சு ராதைகள்   குட்டி  கிருஷ்ணன்கள்  என்றும் கண்ணில் படுவார்கள்.

உலக முழுதும் ,  நம்மைக்காட்டிலும்  கிருஷ்ணன்  என்றால் அதிக உற்சாகத்தோடு  வெள்ளைக்காரர்கள்  கொண்டாடுவது ஆச்சர்யம். . இஸ்கான்  பக்தர்கள்  ஆடல் பாடல்  மேள  தாளங்களோடு  நெற்றியில் நாமம், தலையில் முழு, அரை, சிண்டு,   குடுமிகளோடு,  பஞ்சகச்சம், கோலத்தோடு பெண்களும் புடவையோடு தெருவெல்லாம்  ஆடிப்பாடிக் கொண்டு, கோலாட்டம், கைத்தாளங்களுடன்  நெற்றியில் கோபி சந்தனமிட்ட  வண்ண வண்ண குழந்தைகளோடு கொண்டாடுவதைக்  காண  நிச்சயம் ரெண்டு கண்கள் போதாது.

KRISHNA JAYANTHI

 கண்ணன் பிறந்தான்  எங்கள்  மன்னன் பிறந்தான்.--  


நங்கநல்லூர்  J K  SIVAN 


கிருஷ்ணன் அபூர்வன். பூர்ணாவதாரன். பிறந்ததும் மரணம்  ரெடி  என்று தெரிந்த தாய்க்கு  ''பிறப்பு இறப்புக்கு அல்ல, சிறப்புக்கு ''  என்று  நிரூபித்தவன்.. பிறந்ததும் மரணம் என்று முத்திரை குத்தினாலும் 125 வருஷம் வாழ்ந்தவன்.

ஒரு யுகம் முந்தி, துவாபர யுகத்தில் 5250 வருஷத்துக்கு முன்பு ரோஹிணி  நக்ஷத்திரத்தில்,  ஆவணி மாதம்  நள்ளிரவில், தேய்பிறை அஷ்டமி திதியில் இருட்டில் பிறந்தாலும்  அஞ்ஞான இருள் போக்க கீதை போதித்தவன்.  யது குலத்தை சேர்ந்தவன் என்றாலும் ஆநிரை மேய்த்து ஆயர்பாடியில் அனைவரையும் எளிமையோடு  அரவணைத்து  ஆனந்தத்தில் 
ஆழ்த்தியவன். 

கிருஷ்ணாவதாரத்தை  இந்த வருஷம் 19.8.2022 அன்று  உலகமுழுதும் வாழும்  ஹிந்துக்கள் கோகுலாஷ்டமி. ஜன்மாஷ் டமியாக கொண்டாட  வைஷ்ணவர்கள்  அடுத்தநாள் ரோகினி நக்ஷத்ரத்தன்று  கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடு கிறார்கள்.  ஸ்ரீ ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, தஹி அண்டி, தயிர் ச ட்டி,  என்று பல பெயர்களில் இது கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் ரொம்ப விசேஷம். அன்று  நிறைய   பசுக்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு மாலைகள் அணிந்து ஊர்வலம் ஜம்மென்று வரும்.    நம் ஊர்களில் வெண்ணைத்தாழி  உற்சவம்.

மஹாராஷ்டிராவில் ஒட்டு மொத்தமாக  ஜென்மாஷ்டமி விழாவன்று உறியடி கோலாகலமாக நடக்கிறது. எண்ணற்ற பெண்களும் ஆண்களும் இதில் குழந்தைகளோடு பங்கேற்பார்கள்.  மக்கள் ஈடுபாடு கிருஷ்ணன் பிறந்த ஜென்மாஷ்டமி விழாவில்  அதிகமானது என்பது  .உலகறிந்த  உண்மை.

இஸ்கான் கோவில்களில் வெகு வெகு விமரிசையாக இந்த ஜென்மாஷ்டமி விழாக்கள் நடைபெறும். வ்ரஜ பூமி 
 என்று
கிருஷ்ணன் பிறந்த இடத்தையும், அவன் வளர்ந்த பிரிந்தாவனத்தையும் அவன் கம்சனை தேடிச்சென்று அவனைக் கொன்ற மதுராவையும் தரிசிக்க  இந்தியாவின் பல பாகங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள்.   

 நான் அடுத்தநாள்  20/8/2022   அன்று கிருஷ்ணனை பிருந்தாவனத்தில் காண புறப்படுகிறேன்.  ஒரு வார குதூகலம். 

BOOTHANA KILLED

 

Today's video recording for the HINDU spirituaand by channel "Anandajothi" is demoness BUTHANA's attempt to kill baby Krishna who outsmarted her by "drinking"life force out of her.This is a special presentation for children in connection with ensuing GOKULASHTAMI. Pl view the video clicking the link in the channel and subscribe. the link is


https://youtu.be/Ork1KRTyNCc

SHOULDER



 


முக்கிய உறுப்பு.      நங்கநல்லூர்  J K  SIVAN 

பள்ளிக்கூடத்தில்  கற்றுக்கொடுக்காத  பாடம் ஒன்று அம்மா கற்றுக்கொடுத்தாள். நிறைய படித்த, பட்டம், வாங்கிய  நிறைய சம்பளம் வாங்கும்  ஆசிரியைகள் சொல்லிக் கொடுக்க தவறியதை   எட்டாம் க்ளாஸ் படித்த அம்மா சொல்லிக்கொடுத்தாள்.

அடிக்கடி கேள்விகள் கேட்பான், அவள் பதில் சொல்வாள் .  சில சமயம்  அவள் கேள்விகள் கேட்க அவன் பதில் சொன்னதும் ஞாபகம் வந்தது.

''ராகவ்.  நீ  ஐந்தாவது வகுப்பு,  ஆங்கில மீடியத்தில் நிறைய  படிக்கிறாய்.  உன்னை ஒரு கேள்வி கேட்கட்டுமா?''
''கேளும்மா''
''நம்ம உடம்பிலேயே முக்கியமான உறுப்பு எது?''

''நமக்கு சப்தம் அவசியம்  ஆகவே  காது தான்  அம்மா,  சிறந்த உறுப்பு. அதால் தான் எதையுமே  கேட்க,  பார்க்க, புரிந்து கொள்ள, தெரிந்துகொள்ள, பதில் சொல்ல முடிகிறது''என்று சொன்னான்.

''இல்லேடா, எத்தனையோ பேர்  பிறவி செவிடர்களாக இருந்தும்  நீ சொன்னதெல்லாம் செய்ய முடிகிறதே'' 

சில மாதங்கள் கழித்து அதே கேள்வியை அம்மா கேட்டபோது ராகவ் சொன்ன பதில்:

''எனக்கு தெரிந்து விட்டது. கண் தான்  அம்மா உடம்பிலேயே முக்கியமான உறுப்பு' அதால் தான் பார்க்க வாழ முடிகிறது''
.
''இல்லேடா எத்தனையோ  பேர்  பிறவிக் குருடர்களாக இருந்தும்  வாழ்கிறார்களே . யோசித்து சொல்லு''

ராகவ் வளர்ந்துகொண்டே யோசித்துக்கொண்டும் இருந்த போது  சில மாதங்களுக்குப் பிறகு  ஒருநாள் வீட்டில் அவன் தாத்தா காலமானார். அப்பா  கதறி அழுவதை, மற்ற உறவுகள் கண்ணீர் விட்டு கலங்குவதை, அம்மா  சோகமாக இருப்பதை அன்று தான் பார்த்தான். எது சிறந்த உறுப்பு உடலில் என்ற கேள்விக்கு பதில் அப்போதும் தேடிக்கொண்டே இருந்தான். அவனும் அழுதபோது அம்மா அவனை அரவணைத்து தாங்கிக்கொண்டாள். 

''மகனே,  ஒருவன் வாழ்க்கையில் நல்லபடியாக இரக்கத்தோடு,பிறருக்கு ஆறுதலாக  வாழ்ந்தானா என்பது தான் முக்கியம். இன்று அந்த கேள்விக்கு  பதில் தெரிந்து  கொள்ள  வேண்டிய நாள்.

உடலின் முக்கிய  உறுப்பு  தோள் தான். ஒருவர் சோகமாக இருக்கும்போதோ, உடைந்து போனபோதோ,அவர் அழும்போது   அவருடைய தலையை, உடலை  ஆதரவோடு, ஆதங்கத்தோடு  தாங்குவது  தோள் தான்.  ஒருவர்  துக்கத்தை வெளிப்படுத்த, ஆற்றிக்கொள்ள , மனத்தின் பாரம், அழுத்தம் கலைய ,  மனம் உருகி  அழுவதற்கு  தேடுவது, அன்பான ஒரு  தோள் தான் அப்பா. உனக்கு நல்ல நட்பும், அன்பும்  பரிமாறிக்கொள்ள  இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கவேண்டும். அவர்கள்  தோள்கள்  நீ அழும்போது   உன் கண்ணீரை துடைக்க, உன் துயரை மாற்றிக்கொள்ள  ரொம்ப  அவசியம். 

உடலின் மற்ற உறுப்புகள்  சுய லாபத்துக்காக சுய  நலனுக்காக படைக்கப்பட்டவை என்று ராகவனுக்கு அப்போது புரிந்தது. திடமான தோள் அவனுக்கு வாழ்வில் தேவையான  பாரம் சுமக்கவும், அதோடு கூட  பிறருக்கு  ஆறுதலளிக்கவும்  இறைவனால் அளிக்கப்பட்டது என்று புரிந்தது.   

நாம் செய்த  காரியங்கள், சொன்ன சொல், கொடுத்த பணம், எதுவுமே மறந்து விடும். ஆறுதலாக கைத்தாங்கலாக தோளில்  அழுத்தி அணைத்துக்கொண்டு  ஒருவர அழும்போது  முதுகில் தடவி விட்டது மறக்கவே மறக்காது. மற்றவர் துயர் தீர்க்க உதவும் தோள்  கடவுள் மாதிரி.   பிறர் நலம் பேணும் உறுப்பு.






Tuesday, August 16, 2022

MANICKA VACHAKAR

 


எல்லாம் பொய்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

என் அன்பு நண்பர்களே,  உங்களில் எத்தனை பேர்  மாணிக்க வாசகரின் திருவாசகம்   மனமுருக படித்திருக்கிறீர்கள்.. பகவானிடத்தில் சரணடைவது பற்றி  எண்ணியவர்கள்.  எல்லோரையும் விட  ஏன்  மாணிக்க வாசகர் எழுத்துக்கு மட்டும் இவ்வளவு சிறப்பு?  ''திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும்  உருகார்''  என்று எப்படி பேர் வந்தது?

தனது வாழ்நாளின் ஒவ்வொருநாளின்  ஒவ்வொரு கணத்தையும்  சிவன் பால் வைத்தவர். சித்தத்தை சிவன் பாலே வை என்றவர் மணிவாசகர். அவர் வாசகங்கள்  மணி மணியானவை என்பதால் தான் அவர் மணிவாசகர்.

இன்று ஒரு பாடல் படித்தேன். அதை மட்டும் சொல்கிறேன்.  ருசி பாருங்கள்.  

''யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும்  பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்  பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே''

பரமேசா,  நான்  எனது இனிஷியல், பெயர், பட்டம், பதவி, பணம், உருவம், உடல் அழகு, என்  போட்டோக்கள், என்  நகைகள், சகலமும் சுத்த பொய் .  நான்  ஒரு   சும்மா. 

 எனக்குள் ஒரு மனம் என்று இருக்கிறதே  அடேயப்பா, அதைப்போல  ஒரு ரௌடி கிடையாது. ரொம்ப ரொம்ப  அநியாய மானது. அதுவும் பலே பொய்.  எப்படியெல்லாம் என்னை ஆட்டிவைக்கிறது! 

நான் மற்றவர்களிடம்  இருப்பது காட்டிக்கொள்ளும் அன்பு இருக்கிறதே  அதுவும்  ஒரு  வடிகட்டின பொய்.  சிவாஜி கணேசனை விட  உயர்ந்த  நடிப்பு.

ஆனால்  ஏதோ எப்போதோ  செய்த முன் ஜென்ம   புண்யத்தால் மேலே சொன்னதை எல்லாம் உணர்ந்து என்னைப்பற்றி நன்றாக தெரிந்துகொண்டு  ''பகவானே, நீ ஒருவன் தான் மெய், சத்யம், என்று உன்னை  அடைய உருகி உருகி அழுகிறேன்  பார், அது பொய்  இல்லை. அது உனக்கே தெரியும். அதால் தான் உன்னை அடைய என்னால் முடியும்,  அதனால் தான்  உன்னை மனமுருக  கெஞ்சுகிறேன், 

நீயே என்  தேன் , அமுது, கரும்பு ரஸம், மற்றதெல்லாம் பொய் . நீ ஒருவன் தான் எனக்கு உன்னை அடையும் வழியை காட்ட  முடிந்தவன். அதற்கு அருள் புரிவாயப்பா.

எவ்வளவு பக்தி உணர்வு மணிவாசகருக்கு  நாலு வரியில் ஒரு  பேருண்மை.


AADHI SANKARA

 


ஆதி சங்கரரின் வினா விடை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ப்ரஸ்னோத்ர  ரத்ன  மாலிகா.

3०. कुत्र विधेयॊ वासः? सज्जननिकटेऽथवा काश्यां। कः परिहार्यॊ देशः? पिशुनयुतो लुब्धभूपश्च॥
30.  kutra vidheyo vaasah? Sajjananikate’thavaa kaashyaam  kah parihaaryo deshah? Pishunayuto lubdhabhoopashcha: 

71.ஒருவன் எங்கே வசிக்கவேண்டும்?
நல்லவர்களோடு  கூடி , சேர்ந்து, அவர்கள் அருகே அவனும்  வாழவேண்டும்.  இல்லையென்றால் காசிக்கு போய் அங்கே  வசிக்க லாம். 

72. எந்த இடத்தை தவிர்க்கவேண்டும்? 
மட்டமான வர்கள்,  தீய எண்ணங்கள்  செயல்கள் கொண்ட   கெட்டவர்கள் வர்கள் வாழும் இடத்தில்  வசிக்கவே கூடாது.  அதைவிட ஒரு படி மேலே போய் சொல்வதென்றால் சுயநலம், பேராசை, கருமித்தனமான ராஜா ஆளும் ராஜ்யத்திலேயே  இருக்கக்கூடாது.  (  அடே கிருஷ்ணா,  நாம் எங்கே போவது?)

३१  केनाशोच्यः पुरुषः?  प्रणतकलत्रेण धीरविभवेन।  इह भुवने कः शोच्यः? सत्यपिविभवे यो न दाता॥
31.  kenaashochyah purushah? Pranatakalatrena dheeravibhavena Iha bhuvane kah shochyah? Satyapivibhave yo na daataa
       
73.  ஒருவனை துயரத்திலிருந்து, துன்பத்திலிருந்து  எது விடுபட செய்கிறது?
இருப்பதை வைத்து திருப்தியாக  வாழத் தெரிந்த, அடக்கமான   சொற்படி கேட்கும்  மனைவியை  அடைந்தவன் பாக்கியசாலி. 

74.. இந்த உலகில் யாரைப் பற்றி ஒருவன் வருந்தவேண்டும்?
பகவான்  எல்லா வசதிகளையும், செல்வங்களையும் அளித்திருந்தாலும்  ஏழை எளியவர்களுக்கு, உதவாத மனம் கொண்டவர்களை பற்றி.

३२. किं लघुतायाः मूलं? प्राकृतपुरुषेषुयाच्ञा।  रामादपि कः शूरः स्मरशरनिहतो न यश्चलति॥
32.  kim laghutaayaa moolam? Praakrita purusheshu yaachjnaa  Raamaadapi kah shoorah? Smarasharanihato na yashchalati

75.  எந்தச்செயல்  ஒருவனைப் பற்றிய  வெறுப்பு,அவநம்பிக்கை , அருவருப்பு  உண்டாக்குகிறது?
மட்டமான, ரொம்ப கெட்டகுணங்கள் செயல்கள்  உடைய இழிவானவர்களிடம் யாசகம் பெறுவது.

76. ஸ்ரீ ராமனைக்காட்டிலும் வீரமான, கம்பீரமானவன் யார்?
மன்மதனின் காம அம்புகள்  மனதை துளைத்தாலும், துளியும்  தனது நிதானத்தை இழக்காதவன், நேர்மை தவறாதவன். சஞ்சலம் அடையாதவன்.

PAAV AAHAARI BABA

 


பாவ் ஆஹாரி பாபா - #நங்கநல்லூர்_J_K_SIVAN

காற்றை உண்டு வாழ முடியுமா? ஒருவர் வாழ்ந்ததாக சரித்திரம் இருக்கிறது. விவேகானந்தர் அவரை பார்த்து வணங்கி, பேசி இருக்கிறார்.
காசி பிராமணன் ''பாவ் ஆஹாரி'' air eater பாபா. காற்றை ஆகாரமாக கொண்டவர். காசிபூரில் மாமாவிடம் கல்வி கற்றார். பிறகு மேற்கே கத்தியவார் சென்று யோகம் கற்று காசிப்பூர் திரும்பினார். வீட்டில் ஒரு பள்ளம் தோண்டி அந்த சிறு குகையில் நாட்கணக் கில் யோகம் செய்வார்.
ஒரு தடவை ஒரு திருடன் ஏதோ நகைகளை திருடி பிடி படும் முன் பாவ் ஆஹாரி பாபா குகையில் போட்டு விட்டான். பாபா அதெல்லாம் எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி திருடனைப் பிடித்து ''இந்தா நீ விட்டு விட்டுப் போனவை'' என்று ஆபரணங்களை அவனிடம் கொடுத்தபின் அந்த திருடன் மனம் மாறி அவர் சிஷ்யனானான் என்று ஒரு கதை.
1890ல் விவேகானந்தர் பாபாவை காசிபூர் சென்று தரிசித்தார்.
''நீ இங்கேயே காசிப்பூரில் இருந்து விடுகிறாயா ?'''
''இல்லை பாபா எனக்கு நிறைய வேலைகள் இருக்கி றது. முதுகு வலி தொந்தரவு செயகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்து தியானம் பண்ண முடிய வில்லை.
'இனிமேல் இருக்காது . போ''
நான்கு நாட்கள் காசி பூரில் தங்கி இருந்தார் விவேகா
னந்தர். .அப்புறம் விவேகானந்தருக்கு முதுகு வலி இல்லை
'.நான் உங்கள் சீடனாக விரும்புகிறேன்' -விவேகானந் தர்.
''நாளைக்கு உனக்கு தீக்ஷை தருகிறேன் '' என்கிறார்
பாபா. அன்றிரவே விவேகானந்தர் கனவில் ராம கிருஷ்ண பரமஹம்சரின் விரக்தி கொண்ட முகம் தெரிகி றது. உடனே விவேகானந்தர் மனதை மாற்றிக் கொண் டார்.
'' ராமகிருஷ்ணரை தவிர வேறு எவருக்கும் எனக்கு ஆசானாக முடியாது'' என்று தீர்மானித்தார். ஆனால் பாவ் ஆஹாரி பாபாவை தனது ரெண்டாவது குருவாக மனதில் ஏற்றுக்கொண்டார்.
''பாபா நீங்கள் ஏன் பூமிக்கடியில் குகையிலேயே வாழ்கிறீர்கள். வெளியே வந்து சமூகத்துக்கு மற்ற வருக்கு உபதேசங்கள் செய்வது உபயோகமாக இருக்குமே ?''
''உடல் மூலம் தான் மற்றவருக்கு உழைக்க முடியும் என்றா நீ நினைக்கிறாய்.? மனது உடலின் தேவை இல்லாமலேயே, பல மனங்களை எளிதில் அடைந்து அதில் மாற்றங்களை உண்டுபண்ணி உதவ முடியும் என்பது உனக்கு தெரியாதா? என்றார் பாபா.
பாவ் ஆஹாரி பாபாவுடன் விவேகானந்தர் பேசும் போது '' சிஷ்யன் குருவின் வீட்டு வாசலில் நாய் போல் காத்து கிடக்கவேண்டும்' என்றதன் அர்த்தம் விவேகா னந்தருக்கு புரிந்தது:
'சிஷ்யன் குருவுக்கு சேவை செய்து கொண்டு நன்றி
யுடன் அவரிடம் விசுவாசமாக இருந்து அருள் ஞானம் பெறவேண்டும் ''
ஞானிகள் பூடகமாக பேசுபவர்கள். சேஷாத்ரி ஸ்வாமி கள் பேசுவது எல்லாமே புரியாமல் பேத்தலாக தான் இருந்தது என்று அர்த்தம் புரியாதவர்கள் சொன்னார்கள்.
1898ல் பாபா 100 வது வயதில் தனது குகைக்குள் தீமூட்டி தீக்குளித்தார். பல நாள் குகை மூடி இருந்து புகை வந்ததும் பலர் மாமிசம் வேகும் நாற்றம் அறிந்து பாபா உடலை நீத்ததை புரிந்துகொண்டார்கள் என்று சரித்திரம்.இந்த சேதி விவேகானந்தாவுக்கு அவர் அல்மோராவில் இருந்தபோது தெரிந்தது.


paruthiyur

 ரஸ ஆஸ்வாத தரங்கிணி  J  K  SIVAN 

                                                             
 ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் சப்தரிஷிகளில் ஒருவரான  பாரத்வாஜர் வம்சாவழிவந்தவர்  என்பதால்  பாரத்வாஜ கோத்ரம்.    வடமர்கள். ராமபக்த வம்சம்.  

என்னுடைய  தாத்தா  ஆத்ரேய கோத்ர ராம பக்த குடும்பம்.  தென்னிந்தியாவில்  சேர சோழ பாண்டியர் களுக்கு பிறகு வந்த  தஞ்சாவூரை ஆண்ட  மராத்திய  ராஜாக்கள், நாயக்க மன்னர்கள் பக்தியை, சாஸ்த்ர, சம்பிரதாயங்களை, சங்கீதத்தை போற்றி வளர்த்தார்கள் என்பதால் பல இடங்களிலிருந்து தமிழகத்துக்கு  சாஸ்திர , சங்கீத விற்பன்னர்கள் குடியேறினார்கள்.  இப்படி அவர்கள்  ''தஞ்சம்'' புகுந்ததால்,  அவை  ''தஞ்சாவூர்'',   ''வந்து வசி'' த்ததால்  ''வந்தவாசி',  கோவில்கள் செல்வம் நிறைந்த காஞ்சி போன்ற புண்ய க்ஷேத்ரங்களில்  அற்புத ஞானிகள், மஹான்கள் நமக்கு கிடைத்தனர்.  வடக்கே  காளிதாசன் போன்றோர்  கூட  காஞ்சி பற்றி அறிந்து ''...நகரேஷு காஞ்சி..''  என்று  போற்றும் பெருமை வந்தது. 

 நர்மதை பள்ளத்தாக்கிலிருந்து  தெற்கே வந்த  பாரத்வாஜ கோத்ர வடமர்கள்  வந்தவாசி, காஞ்சி, யிலிருந்து தஞ்சாவூர்  பக்கம் நகர்ந்தார்கள்.  கிருஷ்ண சாஸ்திரிகள் முன்னோர்கள் குடமுருட்டி கரையில், கோதண்ட ராமபுரம் என்ற  கிராமத்தில், (சேங்காலிபுரம் வழி) வாழ்ந்தார்கள். பருத்தியூரில் கோதண்டராமர் கோவில் சோழர்காலத்தில் இருந்ததால் கோதண்டராமபுரம் என்று பெயரோ? என்று சம்சயம்.

பல தலைமுறைகள் காலப்போக்கில்  விவரம் அறியப்படாமல் மறைந்துவிட்டன. அண்ணாவாள்  சிவபக்தர், அய்யாவாள் விஷ்ணு பக்தர் என்று அந்த குடும்பத்தில் இரு சகோதரர்களை தஞ்சாவூர் மஹாராஜா அழைத்து பரிசளித்தார். அவர்கள் தலைமையில் தான்  காஞ்சிபுரத்திலிருந்து காமாக்ஷி அம்மன்  ஜாக்கிரதையாக  திப்பு சுல்தான் ஆட்களிடமிருந்து  சேதப்படாமல்  தஞ்சாவூர் கொண்டுவரப்பட்டு பங்காரு காமாக்ஷி இன்றும் நமக்கு காட்சி தருகிறாள்.  ஏற்கனவே இது பற்றி ஒரு  கட்டுரையில் எழுதினாலும்  மீண்டும் விவரமாக ஒரு முறை எழுதுகிறேன்.அற்புதமான விஷயம்.   அடிக்கடி  எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம்.

பருத்தியூர் கோதண்டராமர்  தான்,  பருத்தியூர் பெரியவா கிருஷ்ண சாஸ்திரிகளின் மூச்சு. 1842ல்  காடகம்பாடியில் பிறந்தது முதல் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிகளிடமிருந்து அறிந்த ஒரே பாடம்  ஸ்ரீ ராம சரித்திரம். மணலில் கோவில் குளம்  கட்டி விளையாடும்  காலம்.   விக்கிரஹங்கள் என்று சின்ன சின்ன பொம்மைகளை சப்பரம் கட்டி  ஊர்வலம்  இழுத்து வருவது, பூஜை அபிஷேகம் அலங்காரம் பண்ணுவது போல் தான் விளையாட்டுகள் அப்போதெல்லாம். BARBY DOLL  பிறக்காத காலம்.  

நானே அப்படி தென்னங்குருத்துகளோடு, தென்னை குரும்பைகளோடு குச்சி வைத்துக்கொண்டு  வடபழனியில் விளையாடி இருக்கிறேனே. 

கிருஷ்ண  சாஸ்திரிகளுக்கு  ஏழு வயதிலே உபநயனம். பனையோலை  ஏட்டுச்சுவடியில்  எழுத்தாணியால்  துளை போட்டு  எழுதுவது   அதைப்  படிப்பது தான் பாடம். . குடும்பத்துக்கே  இஷ்ட தெய்வமான  ஸ்ரீ ராமனை நேரில் பார்க்க  இளம் வயது முதல் ஆசை. 

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை தரிசிக்க குடும்பம்  ஒரு முறை போனபோது  சிறுவன்  கிருஷ்ண சாஸ்திரிக்கு ரங்கநாதன் உருவம்  திருப்தி அளிக்கவில்லை.
''என்னடா  கிருஷ்ணா யோசிக்கிறாய்?  - அப்பா ராமேசேஷ சாஸ்திரி.
''ராமன் மாதிரி இல்லையே, நாம் வணங்கும் ராமனை நேரில் பார்க்க முடியுமா?''
''ஆஹா,  நிச்சயம், விடாமல் பிரார்த்தனை பண்ணினால் தோன்றுவான்''

ஸ்ரீரங்கம் கடைத்தெருவில் ராமசேஷன் நண்பர் அருணாசலம் செட்டியார் பார்த்துவிட்டு குசலம் விசாரிக்கும்போது  அவர் பலசரக்கு கடையில்  குடும்பம்  தேவையானவற்றை தேடுகிறது. 
 ''கிருஷ்ணா இங்கே வா  அழகான  ராமர்  பார் '' 
அண்ணா  வெங்கு எதையோ பார்த்துவிட்டு கூப்பிட்டான்.
அது  ராமர் சீதா  லக்ஷ்மண  ஆஞ்சநேய களிமண் பொம்மை செட்.''  
''அது வேணுமே''  
ஏக்கமாக  அதை பார்த்தான் கிருஷ்ணன். செட்டியார்  தனியாக செட்டிலிருந்து பிரித்து ராமரை மட்டும் தர தயாரில்லை. செட்டாக  பொம்மை  வாங்க  காசு அதிகம் தரவேண்டும்.   

அன்று ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். அப்பா ராமசேஷ சாஸ்திரி மனதில் கிருஷ்ணன் கேட்டது வட்டமிட ஒரு கனவு.  ரங்கநாதர் தோன்றி ''ராம  சேஷா, நீங்கள் குடும்பமாகவே ராம பக்தர்கள். உன் பிள்ளை கிருஷ்ணனைப்  பற்றி கவலைப்  படாதே. உன் ஊருக்கு அருகே சேங்காலிபுரம் இருக்கிறதே அங்கே வைத்தியநாத தீக்ஷிதரிடம் அவனை அனுப்பு''  .  

ராமேசேஷனுக்கு  தீக்ஷிதரையோ அவர் இருக்கும் இடமோ தெரியாதே. துல்லியமாக ரங்கநாதன் தான்  சொல்கிறானே.
ஸ்ரீரங்கத்தை விட்டு  அவர்கள் ஊருக்கு  கிளம்பு முன் ஒரு அதிசயம்.  கடைக்கார செட்டியார்  ''சாஸ்திரி அய்யா  '' என்று கத்திக்கொண்டு வருகிறார். 
''என்ன செட்டியாரே ?''
''ஐயா,   உங்க பிள்ளைங்க ராமர் பொம்மை மட்டும்  கேட்டுது. எனக்கு தனியா செட்டு பிரிச்சு கொடுக்க முடியல.  மீதி செட் விக்காது.  அந்த பையன் கிருஷ்ணன் கண்ணுலே  ராமர் மேலே  காந்தம் மாதிரி பார்த்த  பார்வை  என் மனசை தொட்டிச்சு.  

''ரங்கநாதா இன்னிக்கு நல்லா வியாபாரம் நடந்தா, அந்த பையனுக்கு இந்த ராமர் பொம்மை  செட்டை  கொடுக்கணும்'' னு வேண்டிகிட்டேன்.  நம்ப மாட்டீங்க. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தவங்க நிறையபேரு  என் கடைக்கு  அதிசயமா கும்பலா வந்து  என்னன்னவோ சாமான்லாம் வாங்கி அள்ளிக்கிட்டு போய்ட்டாங்க. கடையே  காலியாயிடுச்சி ன்னா  எவ்வளவு வ்யாவாராம்னு  பாருங்க.  அதனாலே  இந்த ராமர்  செட் பொம்மைகளை  தனியா எடுத்து வச்சிட்டேன். அதை உங்க பையனுக்கு   தர தான் ஓடிவந்தேன். ''

அட்டை பெட்டி  கைமாறியது. ராமன் கிருஷ்ணனிடம் வந்தான்.  அதுவரை மணலில் ராமர் செய்து   விளையாடிய  கிருஷ்ணன், பின்னால்  பருத்தியூர்  பெரியவா கிருஷ்ண சாஸ்திரிகளாக  ராமர் கோவில் கட்டினார்  இன்றும் அந்த ஆலயம் உள்ளது.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...