Tuesday, August 2, 2022

KALIYUGAM

 

அப்போதே சொன்ன சுகர்:   நங்கநல்லூர்  J K  SIVAN  
கலிகாலம்  6


என்ன நடக்கிறது  இங்கே?

''பரீக்ஷித் மஹாராஜா,    கலியுகம் என்பது எப்படி இருக்கும்,  மக்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்று மேலும் சொல்கிறேன். கேளுங்கள்  என்று தொடர்கிறார் சுகப்பிரம்ம ரிஷி.   ஸ்ரீமத் பாகவதம்  12.2. 6  ஸ்லோகம் இது தான்  

दूरे वार्ययनं तीर्थं लावण्यं केशधारणम् । उदरंभरता स्वार्थ: सत्यत्वे धार्ष्ट्यमेव हि । दाक्ष्यं कुटुम्बभरणं यशोऽर्थे धर्मसेवनम् ॥ ६ ॥

dūre vāry-ayanaṁ tīrthaṁ lāvaṇyaṁ keśa-dhāraṇam udaraṁ-bharatā svārthaḥ satyatve dhārṣṭyam eva hi
dākṣyaṁ kuṭumba-bharaṇaṁ yaśo ’rthe dharma-sevanam

ஊரைக்கூட்டுற அளவு  மூக்கைத் துளைக்கிற  சென்ட்,  பளபள  ஜிலுஜிலு  பட்டு சட்டை வேஷ்டி, புடவை நகைகள், இதனால்  அலங்காரம் செய்தவர்கள் எல்லாம், அழகானவர்களாக அறியப்படுவார்கள்.   இயற்கற்கையான  இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் அழகு புறக்கணிக்கப்படும்.  இது தான் கலிகாலத்தில் நடக்கும்.

முரட்டுத்  தனமான  பொய் நிறைய கலந்த அடாவடி பேச்சு, உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள், வெறித்தனமாக  மேலே மேலே  எல்லோரையும் பிடித்து காசு கொடுத்து  ஆட்களை மதம் மாற்றி  தமது மதத்தாராக சேர்த்துக் கொள்வதையும், பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லக்ஷ்யமாக கொண்டிருக்கும். இதெல்லாம் கலிகாலத்தில் சர்வ சாதாரணம் என்பதை நாம் கண்கூடாக இப்போது பார்க்கிறோம். ஆனால் சுகப்ரம்மம் அப்போதே  இதை அறிந்திருக்கிறாரே !  (பாகவத புராணம் 12.2.6)

க்ஷேத்ரம்  என்றால்  பகவான் அவதரித்த ஸ்தலம், புண்ய காரியங்கள் நடந்த இடம்,  பல மஹான்கள் சஞ்சரித்த, அவதரித்த,  வாழ்ந்த  இடம், சில  நல்ல பலன்களை கொடுக்கும் ஸ்தலம்  என்பதெல்லாம் ஏனோ  கலிகாலத்தில்  நமக்கெல்லாம்  மறந்து விடும், எல்லாம்  போகப்போக   மறைந்துவிடும்.  எங்கோ  ஒரு  இடத்தில்  பூமியில் பள்ளத்தில் சற்று நீர் நிறைந்திருந்தால் அந்த குட்டை  தான்  புனித ஸ்தலம், க்ஷேத்ரம்  என்று கலியுகத்தில் மக்கள்  நம்பி  மகிழ்வார்கள்.  இது அவர்கள் தப்பில்லை.  இப்படி  கொஞ்சம் கொஞ்சமாகி  அழிவை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதன் ஆதாரம்.

அழகு  என்பது சாமுத்திரிகா லக்ஷணம்  இல்லை.  ஒருவன் தலைமுடி ஸ்டைல் எப்படி  இருக்கிறதோ  அது தான் அழகு என்ற நிலை வந்துவிடும்.  இப்போது  MKT  பாகவதர்  கிராப்  யாராவது அழகு என்று ஒப்புக் கொள்வார்களா?  யாராவது  கிருஷ்ணன், ராமன்  மாதிரி  நீளமாக தலைமுடி வளர்த்துக் கொள்கிறோமா?  ஒரு காலத்தில் கை  ரிக்ஷா இழுத்துக்கொண்டு போகிறவன், குதிரை வண்டி ஓட்டுபவன் கூட  அப்படி  ஒரு தலை முடி வளர்த்து   ''மன்மத லீலையை'' பாடிக்கொண்டு  போவதை  நானே சிறுவபதில் கோடம்பாக் கத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது எவனாவது  பாகவதர் படம் வீட்டில் வைத்திருக்கிறானா? அவர் பாட்டை பாடுகிறானா? அவர்போல் ஜில்பா, கடுக்கன், அங்கவஸ்திரம், ஜவ்வாது பொட்டுடன்  திரிவானா? ஊரே அவனைக் கேலியாக  பார்க்காதா??  இது தான் கலி முற்றிக்கொண்டே வருவதன் அடையாளம்.
 

அமெரிக்காவில் புதுப்  புது  HAIR ஸ்டைல்.  ஏன்  நாம்  பார்க்கும்  IPL  விளையாட்டுகளில், ஒலிம்பிக் விளையாட்டுகளில்  பங்கேற்கும் சில  வீரர்கள், வீராங்கனைகள் தலையே  பொட்டுக்கூடை  தகவல் சொல்ல வில்லையா?  அதற்கென்றே  நிறைய  பணம் செலவு  செய்து  நம் வீட்டு பிள்ளைகள் தலையை அப்படி  அலங்கரித்துக் கொண்டு வந்து,  வீட்டில் தாத்தா  பாட்டிகளிடம்  சாபம்  வாங்குவது தெரியாதா?   இப்போது கரோனா சமயத்தில் பலர் தலைகள்  முகங்கள்  எல்லாமே   ரிஷிகள் தலைகளாக  காண்கிறதே. அப்படியே  ஒருவேளை நிலைத்துவிடுமோ? அப்படித்தான்  தோன்றுகிறது. அட கலிகாலமே !


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...