Saturday, August 31, 2019

SHEERDI BABA



ஷீர்டி பாபா     J K SIVAN 
மனித உருவில் ஒரு தெய்வம் 


                                       
  தேவ தூதர்கள் 

கண்ணன் வருகின்ற நேரம் நெருங்கிக்  கொண்டே இருக்கிறது போல்  தோன்றுகிறது.  

''எப்போதெல்லாம்  தர்மம் சீர் குலைகிறதோ,  அதர்மம் மேலோங்குகிறதோ, அப்போதெல்லாம் நான் வருவேன்.  நல்லோரைக் காக்க தீயோரை அழிக்க , நீதி நெறி, தர்மம் நியாயம்  தழைத் தோங்க  ஒவ்வொரு காலத்திலும் நான் நிச்சயம் அவதரிப்பேன் '' என்று தான் கிருஷ்ணன் கீதையில் நமக்கு சொல்லியிருக்கிறானே' . 

கண்ணன் எந்த ரூபத்தில், யாராக,  எங்கே,  எப்போது வருவான் என்பது அவனுக்கு மட்டுமே  தெரிந்த  ரஹஸ்யம்.எண்ணற்ற மகான்களை, ரிஷிகளை, யோகிகளை, ஞானிகளை  அவன் சார்பாக,  அவ்வப்போது நமக்காக பூமியில்  அனுப்பிக்கொண்டே  தானே  இருக்கிறான். 

அவரவர்  ஸ்வதர்மங்களை விட்டொழித்து விடுகிறார்கள்.  ஏற்ற தாழ்வு மக்களிடையே  பரவி விட்டது.  நீதி, நியாயம், சத்யம், நேர்மை என்றால்  எங்கோ ஒரு கம்பத்தின் உச்சியில்  மூன்று சிங்கங்களை மட்டும் காட்டுகிறோம்.  அது தான் சத்யம் அது மட்டுமே ஜெயிக்கும் என்று பாவம் அந்த ஒன்றை ஒன்று பார்க்காத மூன்று சிங்கங்களை  சுட்டிக்காட்டுகிறோம்.நீதி மன்றங்களில் அடுக்கடுக்காக பொய் சொல்கிறோம்.  வேதங்கள் சாஸ்திரங்கள் எல்லாம் தூக்கி  எறியப்படுகிறது. பெரியோர், சான்றோர் வாக்கு எடுபடவில்லை.  தகாத செயல்கள் பட்டப்பகலில் மனச்சாட்சி இன்றி நடை பெருகிறதே. தீய பழக்கங்கள் நல்ல பழக்கங்களை விழுங்கிக்கொண்டே போகின்றன.   ஒற்றுமை மனப்பான்மை மறைந்து ஒருவரை ஒருவர் தாக்கி, அவமதித்து, இகழும் காலமாகி விட்டது. அன்பும் பண்பும் காகிதத்தில் மறைந்து விட்டது. யோகிகள், துறவிகள்  காசு பார்க்க ஆரம்பித்தாகிவிட்டது. குடும்பம் நரகமாகி விட்டது. எலிகளும் பூனைகளும் தான்  மிச்சம்.  

இந்த சூழ்நிலையில் தான் அவ்வப்போது உண்மை ஞானிகள் தோன்றி கொஞ்சம் அமைதியை நிலைநாட்டுகிறார்கள். அவர்கள் சொல்லும் செயலும் நம்மை திரும்பி பழைய பாதையில் செல்ல வைக்கிறது.  இருட்டில் ஒளி விளக்காக  வழி காட்டுகிறார்கள்.  இப்படி வந்தவர்களில் சில பெயர்கள் சொன்னால் ஞாபகம் வரும். துக்காராம், நாமதேவர், கோரா , ஏகநாதர், நார்சி மேத்தா , ராமதாஸ், ஞானதேவர்,ஷீர்டி ஸாயி பாபா, சைதன்யர், காஞ்சி மஹா பெரியவா ஆகியோர். 

கோதாவரி நதி தீரம் எத்தனையோ மகான்களை அளித்திருக்கிறது.   ஞானேஸ்வர் தோன்றினார்.  ஷீர்டி அங்கே தான் கோபர்காவுன் தாலுகாவில் இருக்கிறது. அங்கிருந்து ஒன்பது  மைல்  தூரத்தில்  நீம் காவுன் என்ற கிராமம் உள்ளடக்கியது தான்  ஷீர்டி. நமது காவிரிக்கரை எத்தனை மகான்களை தந்திருக்கிறது.  எனவே தான் அவை புண்ய நதி என்று பெருமையோடு போற்றப்படுகிறது. 

ஷீரடி எனும்  குக்கிராமம் உலகப் பிரசித்தி பெற்ற க்ஷேத்ர மானது ஸாயீ பாபாவினால் தானே.   அந்த மஹான் சம்சார சாகரத்தை வென்றவர்.  அமைதி பூத்த மனம், எளிமை, கருணை, அளவற்ற ஞானம் இதெல்லாம் ஒன்று சேர்த்தால் அதன் பெயர் தானே  ஷீர்டி ஸாயீபாபா  என்ற ஆத்ம ஞானி. தேனான வாக்குகள், அந்த  கண்ணாடி போன்ற துல்லிய  ஹ்ருதயத்தில் இருந்து வந்ததே. ஏழை யார்  பணக்காரன் யார் என்றே அறியாதவர்.  எந்த மரியாதை, உபச்சாரம் எதிர்பார்க்கா தவர். ஆடம்பரம் தேக சுகம் அறியாதவர். சமாதி நிலையில் தன்னை இழந்தவர்.இறைவன் நாமத்தையே மூச்சாக கொண்ட ஞானி. சர்வ வியாபி. ஒரு இடத்தில் இருந்தாலும் எங்கு எது நடந்தாலும் துல்லியமாக அறியும் சித்த புருஷர்.

ஒரு கணம் கண் மூடி  நினைத்து பாருங்களேன் .  ஒரு காலை குறுக்கே மடக்கி ஒன்றன் மேல் ஒன்றாக  வைத்துக்கொண்டு ஒரு பாழடைந்த மசூதி சுவற்றில் சாய்ந்து நிற்கும் முக்காடிட்டு  நீண்ட அங்கி யணிந்த  தாடிக்கார முதியவர் கண் முன்னே தோன்றவில்லையா?  அவர் தான் ஸாயீ . அவரது வாழ்க்கை ஒவ்வொருகணமும்  அற்புதங்கள் விநோதங்கள் நிறைந்த சம்பவங்கள் கொண்டது  என்பதால் தானே இதை எழுதுகிறேன்.

அவரது  கூர்ந்த பார்வை,  மௌனமான, சாந்தமான முகம் எண்ணற்ற துன்பங்களிலிருந்து பக்தர்களை  இன்றும் விடுவித்துக்கொண்டு இருக்கிறதே.

அவரை நேரில்  காண கொடுத்து வைத்த நம் முன்னோர்கள்  பாக்கியவான்கள். அப்படித்தான் இப்போது நாம் ஸ்ரீ மஹா பெரியவா வாழ்ந்த காலத்தில் அவரை தரிசிக்க கொடுத்து வைத்தவர்கள். இது பிற்காலத்தில் கிடைக்குமா?  ஷீர்டி ஸாயீ பாபாவின் உதி ( துனி சாம்பல்) சகல வியாதி நிவாரண, துக்க நிவாரணியாக பல வீடுகளில் இன்றும் உண்டே.

ஆச்சர்யமாக நான் சமீபத்தில் உடல் நலம் குன்றி இருக்கும்போது ஒரு சிறந்த  ஸாயீ  பக்தர் ஸ்ரீ  சுந்தரராமன்  எனக்காக  ஷீர்டி ஸாயி உதி ஒரு சிறு பாக்கெட் கொடுத்து நீரில் கரைத்து குடிக்க சொல்லி  அப்படியே செய்தபிறகு  எழுந்து உற்கார்ந்து,
 பழையபடி புத்துணர்ச்சியோடு  எழுத ஆரம்பித்தேன் என்பது கட்டுக்கதை அல்ல. 

கேட்டதை எல்லாம் கொடுப்பவனான க்ரிஷ்ணனாகவும், ராமனாகவும் விட்டலனாகவும்,  எண்ணியபடியெல்லாம் பலருக்கு காட் சி அளித்த ஸாயீ பகவான் சர்வ சக்தி மிக்க தெய்வமாக இருப்பதால் தானே கணக்கில்லா  ஆலயங்களிலும்  எண்ணற்ற இல்லங்களிலும் ''யாம் இருக்க பயம் ஏன்?'' என்று தைரிய மூட்டுகிறார்! 

VETRI VERKAI



வெற்றி வேற்கை J K SIVAN
அதி வீர ராம பாண்டியன்

பாண்டியன் நீதி வாக்கியங்கள்

அதி வீர ராம பாண்டியனின் நறுந்தொகை என்னும் வெற்றி வேற்கை நிறைய அன்பர்களை ஈர்த்துவிட்டது என்று அறிந்து மகிழ்கிறேன். ஆம் அ.வீ.ரா பாண்டியன் ரொம்ப கெட்டிக்காரன். ஞானி. மேலும் அவன் சொல்வதில் இன்றும் சிலவற்றை கேட்போம். மூன்றாவது நான்காவது வகுப்பில் படித்திருந்தாலும், இன்றும் அதன் விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறதே.

தலையில் குட்டு வாங்கிக்கொண்டு தப்பில்லாமல் மறுபடி மறுபடி இந்த வெற்றிவேற்கை மனப்பாடம் செயது குட்டு பெறாமல் வரதராஜ நாயக்கர் தமிழ் வாத்தியாரிடம் ஒப்பித்து இருக்கிறேனே.

''பெருமையும் சிறுமையுந் தான் தர வருமே'' - ரொம்ப புத்திசாலி, அதி மேதாவி, படித்தவன், தானே தனது பெயரை, பெருமையை, கெடுத்துக்கொண்டு தவிப்பதை பார்க்கிறோம். எதற்கு இந்த நிலை? தேவையா? இல்லை. விதி மதியை கெடுப்பதால் நேருவது. தன்னை எவரும் நெருங்கமுடியாது என்ற அகம்பாவம், தானே வரவழைத்துக் கொள்ள செயகிறது.. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டும் என்பது மறந்து விடுகிறது.

நல்லதை செய்து கொண்டே வருபவன் அதன் அருமை தெரியாத அறியாத பலரால் இகழப்பட்டாலும், கேலி செய்யப்பட்டாலும், தனது கடமையை எந்த சுயநலமும் இன்றி பிறர் நலனுக்காக, பொது நலத்துக்காக செய்துகொண்டு பாடுபடுவதை உலகம் அறிந்து வியக்கிறது, போற்றுகிறது. அதுவும் தானே வரவழைத்துக் கொள்ளுவது தான். இது இப்படி இருக்கிறது?

''சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே''
பாண்டியனின் அற்புதமான சொல் இது. அறிவில் குறைந்தவர் தவறுகள் தான் செய்வார்கள். அதிகப்ரசங்கியாக பேசுவார்கள். எல்லோராலும் இகழப்படுவார்கள். அமுல் பேபி என்று அவர்களை சிரித்துக்கொண்டே புறக்கணித்து பொறுமை காக்க வேண்டும். பெரியோர்கள் இந்த அரைகுறைகளுடன் தோளுக்கு தோள் சமமாக வாதம் புரிந்தோ, கோபம் கொண்டு பதில் சொல்வதோ சேற்றை வாரி மேலே பூசிக்கொள்வது போல் என்கிறான் பாண்டியன். இப்போது இப்படி எல்லாம் நடக்கும் என்று அப்போதே என்ன தீர்க்க தரிசனம்!

இதில் இன்னொரு கஷ்டம் இருக்கிறது என்பதை அடுத்து சொல்கிறான் வேந்தன்.

''சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற் பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே'' -

''சரி, ஏதோ அவனுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று பொறுத்து பூமி ஆள்வாராக இருந்தால், அந்த அரைகுறைக்கு மேலும் தெம்பு கூடிவிடும். சிறுபிழை பொறுக்கப்பட்டதால் பெரிய பிழை ஒன்றைச் செய்யும். அதால் கேடு விளையும் என்று அறியும்போது பெரியோர் பொறுமை காக்க மாட்டார்கள். தக்க சமயத்தில் குறுக்கிட்டு பெரும்பிழைகள் நேராது பாதுகாப்பார்கள். அறுபது எழுபது வருஷங்கள் கூட பொறுப்பார்கள் போல இருக்கிறது.!

'' நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே'' -

சிலரை திருத்தவே முடியாது என்கிறோமே அவர்களைப் பற்றி தான் அதிவீரராம பாண்டியன் இதை சொல்கிறான். அவன் காலத்திலேயே இப்படி எல்லாம் ஆசாமிகள் உண்டு போல் இருக்கிறது. நாம் நினைப்பது போல் பழையகாலத்தில் ''எல்லோரும் நல்லவரே'' அல்ல என்று தெரிகிறது.

நூறு வருஷம் பழகினாலும், பழக்கினாலும், குறுகிய, தாழ்ந்த, கொடிய எண்ணம் கொண்டவன் நட்பு நம்மை நெருங்க விடாமல் அவனை சற்று தள்ளியே தூரவே வைத்துக் கொள்ள செய்யும். நாம் தான் நிறைய பேரை பார்க்கிறோமே.

குளத்தின் அடியில் பாசி நிறைய படர்ந்திருக்கிறதே, அது குளத்தில் வேரூன்றியா இருக்கிறது. அப்படியே படர்ந்து அங்குமிங்கும் காலை சுற்றிக்கொள்ளுமே தவிர அதற்கு நிலை கிடையாது. மேலே சொன்னவர்கள் நட்பு அப்படிப்பட்டது என்கிறான் பாண்டிய ராஜா.\

மேலே சொன்னதற்கு முற்றிலும் நேர் மாறாக ஒரு வாக்கியம் அடுத்தது.

''ஒரு நாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே'' - என்ன அர்த்தம்?

ஒரு சிறந்த அறிவாளி, நல்ல மனதும், எண்ணமும் கொண்டவர், ஊருக்கு உபகாரி, இப்படி ஒருவர் நட்பு நமக்கு ஒரே ஒரு நாளைக்கு கிடைத்தாலும், அது போதுமானது. மேலும் வளரும், பலப்படும், எப்படியாம் தெரியுமா? உறுதியான பூமி இரண்டாக பிளந்து நடுவே பிளவில் வேர் ஒன்றி வளரும் தாவரம் போல என்கிறான். அருமையான உதாரணம் இல்லையா இது? இப்படிப்பட்டோர் நட்பு பெரிய விருக்ஷமாக வளரும் என்கிறான்.

''கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.''
படிப்பது நல்லது, என்று மூன்று முறை சொல்கிறான் பார்த்தீர்களா பாண்டிய ராஜா. கற்கை நன்று..... ஆம் .
படிக்கவேண்டும் சார். நாம் நிறைய படிக்கவேண்டும். கற்க வேண்டும். கற்றது வெறும் ஒரு கை மண் அளவு என்று நாம் சொல்லமுடியாது. ஒளவைக் கிழவி சொல்லலாம். அவள் நிறைய கற்றவள் அவளுக்கே அவள் கற்றது வெறுமே ஒரு கை மண்ணாம்.!

நாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டாலும், பிச்சை எடுத்தாலும், எப்படியாவது படித்து முன்னேறவேண்டும். படித்தால் மட்டுமே முன்னேற முடியும். இல்லையேல் அப்பா தாத்தா கொள்ளை கொள்ளையாக, கொள்ளையடித்தாவது, சேர்த்து வைத்து, நல்ல பதவியில் இருக்க வேண்டும். நமக்கு எல்லோருக்கும் அது எப்படி முடியும்.. மார்க் ஒன்று தான் வழி!.

Friday, August 30, 2019

RAPURAM KRISHNA DEVOTEE



தெய்வங்களோடு தொடரும் வாழ்க்கை J K  SIVAN 








 என்று  ஸ்ரீ  கிருஷ்ணார்ப்பணம் சேவா  சங்கம்  தொடர்ந்தேனோ, அன்று முதல் அமோக மான  செல்வந்தன் நான். எங்கிருந்தெல்லாமோ எனக்கு ஸ்ரீ கிருஷ்ண பக்த நண்பர்கள். என்னை பரவசமாக்குகிறான் ஸ்ரீ கிருஷ்ணன்.  மேலும் மேலும் அவனைப் பற்றி நினைக்க வைக்கிறான். எழுத வைக்கிறான். தொடரட்டும்.. தொடர்ந்து கொண்டே  போகட்டும்.........அது ஒன்றே என் ஆசை... நிறைவேறுகின்ற  ஆசை....

அழகு தெய்வம்  ஒன்று உண்டு என்றால் அது கிருஷ்ணன் என்று குழந்தைகள் கூட சொல்லும்.  பக்தர்கள் உள்ளம் கொள்ளை கொள்ளும் மன்னன் அவன். அவனையும்  அவன் சோதரி அம்பாளையும்  சேர்த்து வழிபடும் ஒரு அருமையான வாசக சகோதரி  ராஜா அண்ணாமலை புரத்தில்  அற்புதமாக கிருஷ்ணனை,  ஸ்ரீ லலிதாம்பிகையை ஆசை ஆசையாக  அபிஷேகம்  செயது, அலங்கரித்து அர்ச்சனை செய்து,  மகிழ்ந்து வாழ்பவர். என்னை அவர் இல்லத்துக்கு  ஒரு அகண்ட  லலிதாம்பா பூஜைக்கு அழைத்து  என்னையும்  என் மனைவியையும்  தம்பதி பூஜையில் பங்கேற்க செய்தவர்.  ஆயிற்று மூன்று வருஷங்களாக இந்த நட்பு தொடர்கிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் அலங்கரித்த கிருஷ்ணனும்  அம்பாளும்  என்னிடம் வண்ணப்படங்களாக  வாட்ஸாப்பில்  வந்தடைவது எனது பூர்வ ஜென்ம சத் கர்ம பலன் என்று தான் சொல்வேன்.

''  எனது குரு அம்மையார்  உபதேசித்தபடி அவனை அலங்கரித்து பூஜை செய்ய ஆரம்பித்து  மூன்று  நான்கு ஆண்டுகள் ஆகிறது. அன்று முதல் எனக்கு அவனை அலங்கரிக்க அலங்கரிக்க நேரம் போவதே தெரியவில்லை. அவனுக்கு போட்டியாக  அம்பாளும் எனக்கு தான் நீ  முதலில் அபிஷேகம், அர்ச்சனை, அலங்காரம் எல்லாம் செய்யவேண்டும் '' என்று பிடிவாதமாக அவளை முதலில் அலங்கரிக்க செய்கிறாள்.  அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, பூஜை ஸ்லோகம் சொல்லி  நிவேதனம் அளித்து   அந்த பிரசாதத்தை உண்ணும் வரை என் உடல் உள்ளம் ஆவி எல்லாமே அவர்களிடம் தான்  என்கிறார் அந்த  கிருஷ்ண பக்தை.  


''ஒவ்வொருவர்  உலக வாழ்விலும் தம்மை மற்றவர்கள்  தங்கள் விருப்பம் நிறைவேற  ஒரு  கருவியாக  பயன் படுத்திக்கொள்வது  ஆன்மிக உலகிலும் உண்டு.  எனக்கும் அந்த  அனுபவம் உண்டு.   அதை உணரும்போது  மனது சங்கடம் சஞ்சலம் கொள்ளும், அமைதி குறையும்,  இது  எனக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தது வருத்தமடைய செய்தது என்றாலும் கண்ணன் அம்பாள் இருவரும் இதை எல்லாம் லக்ஷியம் செய்யாத திட மனதை அருளியதால்  இப்போதெல்லாம் இவை என்னை நெருங்குவதில்லை. என்னால் ஆன உதவியை, காரியங்களை  பூரண  மன திருப்தியோடு  செய்து தருகிறேன், பலன் எதிர்பாராமல்.  அதைத்  தானே  கீதையில் அவன் போதித்தான்'' என்கிறார்  அந்த  சகோதரி.  மனம் அன்பால் நிறைந்து பண்பட்டுவிட்டது.  

''கண்ணன், அம்பாள் என்னோடு எப்போதும் என் இல்லத்தில் என்னோடு வாழ்வது போன்ற ஒரு ஆனந்தம் மனதை நிரப்புகிறது.  இது தொடர்ந்து என்னை மகிழ்விக்க மனம் வேண்டுகிறது'' என்று  அவர்  சொன்னபோது என் கண்களில் ஆனந்த பாஷ்பம். 

சங்கீதத்தில் இளம் வயதில் நாட்டியத்தில்  ஈடுபாடு கொண்டவர். சங்கீத  நாட்டிய  நிகழ்சசிகள் நடத்தியவர். பொறுப்பான  குடும்பத்  தலைவி. இரு பெண்கள். கணவர் உயர்ந்த உத்யோகத்தில் இருப்பவர் என்ற சிறு உலக வட்டத்தில்  மற்றவர் போல் உழன்றாலும்,  தனித்து ஆன்மீக உலகில் கிருஷ்ணனோடு  சஞ்சரிப்பவர்.

இன்று என்னை அடைந்த, அவரிடமிருந்து வந்த  ஸ்ரீ கிருஷ்ணன்  அம்பாள் அலங்காரங்களை நீங்களும் கண்டு களிக்க வேண்டாமா?

Thursday, August 29, 2019

my master


\SWAMIJI'S TIME                              J K  SIVAN
RAMAKISHNA PARAMAHAMSA                          ''MY MASTER''
There are different natures born into this  world and  they  require different applications of the same religious truths.  So we are bound to have forbearance with each other. Just as nature is unity in variety, an infinite variation in the phenomenal, and behind all these variations,  the Infinite, the Unchangeable, the
Absolute, so it is with every man; the microcosm is but a miniature repetition of the macrocosm; in spite of all these variations, in and through  them all runs this eternal harmony, and we have to recognize this.
This idea, above all other ideas, I find to be the crying necessity of the day. Coming from a country which is a 'hotbed of religious sects—through good fortune or ill fortune, everyone who has a religious idea wants to send an advance guard there.
From my childhood I have been acquainted with the various sects of the world; even  the Mormons came to preach in India.  Welcome them all! That is the soil on which to preach religion. There it takes root more than in any other country. If you come and teach politics to the Hindus they do not understand, but if you come to preach religion, however curious it may be, you will have hundreds and thousands of followers in no time, and you have every chance of becoming a living god in your  life time. I am glad it is so, it is the one thing we want in India. The sects among the Hindus are various, almost infinite in number, and some of them apparently hopelessly contradictory. Yet they all tell you they are but different manifestations of   Religion. " As diflferent rivers, taking their  start from different mountains, running crooked or straight, all come and mingle their waters in the ocean, so the different sects, with their different points of view, at last all come unto Thee."
This is not a theory, it has to be recognized, but not in that patronizing way which we see with some.
''Oh, yes, there are some very good things." (Some even have the most wonderfully liberal idea that other religions are all little bits of a prehistoric evolution, but " ours is the fulfilment of things.")
One man says because his is the oldest religion it is the best ; another makes the same claim because his is the latest.We have to recognize that each one of them has the same saving power as every other.
It is a mass of superstition that you have heard everywhere, either in the temple or the church, that there is any difference. The same God answers all, and it is not you, nor I, nor any body of men, that is responsible for the safety and salvation of the least little bit of the soul; the same Almighty God is responsible for all of them.

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K. SIVAN

''ஆஹா, இன்று கணக்கு தீர்ந்தது.''.

குருக்ஷேத்ரம் அமைதியாக காட்சியளித்
தது. எண்ணற்ற உயிர்கள் பறிபோன இடமாக தெரியவில்லை. இன்னும் பிணங்களை மொத்தமாக எரித்துக்கொண்டிருந்தார்கள். ரத்த ஆறுகள் உறைந்து போய் காணப்பட்டன.
பாண்டவர்கள் ஒரு தனி இடத்தில் தங்களது கூடாரத்தை அமைத்துக்கொண்டு அதில் வசித்து வந்தார்கள். பீஷ்மர் அருகிலே ஒரு இடத்தில் அம்பு படுக்கையில் சயனித்துக் கொண்டிருந்தார். உத்தராயண புண்ய காலம் வருவதற்கு காத்திருந்தார். அவர் விண்ணுலகம் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது.
திரிஷ்ட த்யும்னன் மற்ற வீரர்களோடு ஒரு பெரிய கூடாரத்தில் ஒரு படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தான்., அஸ்வத்தாமன் அந்த கூடாரத்தை நள்ளிரவில் அடைந்தபோது திருஷ்டத்யும்னன் எந்த ஆபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்பதால் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்போது அஸ்வத்தாமன் மெதுவாக அவனை அணுகி அவன் நெஞ்சில் கால் வைத்து தலையை இழுத்தது மார்பை கை நகங்களாலேயே கிழித்து பிளந்தான். அரை குறை தூக்கத்தில் இருந்து எழுந்த திருஷ்டத்யும்னன் திடீரென்று எதிர்ப்பட்ட இந்த அசுர தாக்குதலை உணர்ந்து திடுக்கிட்டான். எழுந்து அருகில் வைத்திருந்த உடைவாளை எடுக்க முடியவில்லை. அவன் நெஞ்சில் கால் வைத்து அஸ்வத்தாமன் நிற்பதை உணர்ந்தான். கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் மிக்க பலத்தோடு அஸ்வத்தாமன் தனது ஆயுதத்தால் அவனை அடித்துக் கொன்றான். ஹா ஹா என்று மனதில் தந்தையின் மரணத்துக்கு பழி தீர்த்தான். திருஷ்டத்யும்னன் கடைசி சப்தம் கேட்டு எழுந்த அவன் மனைவியர் கூச்சலிட எதிர்த்தவர்கள் அனைவரையும் அஸ்வத்தாமன் கொன்றான். உத்தமௌஜா படுத்திருந்த கூடாரத்தில் சென்று அவனையும் யுதாமன்யுவையும் கொன்றான். கண்ணில் பட்டவர்கள் எதிர்த்தவர்கள் எல்லோரையும் கொன்றான். மரண தேவதையின் உருவாக காட்சி அளித்தான் அஸ்வத்தாமன்.
அடுத்து அவன் கண்ணில் தென்பட்டவர்கள் பாண்டவ குமாரர்கள். நிர்தாக்ஷண்யமாக வெறியோடு தாக்கி கொன்றான். திரௌபதி புத்திரர்கள் மாண்டனர். சப்தம் கேட்டு ஆயுதங்களோடு ஓடிவந்த சிகண்டியையும் எதிர்த்து தாக்கி அஸ்வத்தாமன் அவனை வாளால் இருகூறாக வெட்டினான். இவ்வாறு சுதஸோமன், சதானீகன் , ச்ருதகர்மன், ஸ்ருத கீர்த்தி, சிகண்டி ஆகியோரை கொன்றான்.
கூடாரங்களுக்கு வெளியே நின்ற க்ருதவர்மன் கிருபர் ஆகியோர் வெளியே ஆயுதம் தாங்கி ஓடிவந்தவர்களை கொன்றார்கள். பாண்டவர் கூடாரங்களுக்கு தீ இட்டு எரித்தனர். இரவு அஸ்வத்தாமன் நுழையும்போது எப்படி பாண்டவ சைன்யம் சப்தமின்றி உறங்கி கொண்டிருந்ததோ அவ்வாறே விடியற்காலை அஸ்வத்தாமன் அங்கிருந்து வெளியேறும்போது எண்ணற்ற உயிர்கள் அங்கே மீளா தூக்கத்தில் உயிரிழந்து அமைதியாக கிடந்தன.
''எண்ணியதை முடித்தேன்'' என்று மகிழ்ந்தான் அஸ்வத்தாமன். பழிவாங்கினேன் என்று போய் துரியோதனன் இன்னும் உயிரோடு இருந்தால் சொல்லுவோம் என்ற அஸ்வத்தாமனை கிருபரும் க்ருதவர்மனும் கட்டி அணைத்தார்கள்.
மூவரும் துரியோதனன் கிடந்த இடத்தை அடைந்தபோது ரத்த வெள்ளத்திலே அவன் உடலைச் சுற்றி ஏராளமாக ஓநாய்கள் கழுகுகள் காத்திருந்தன. ஒரு சிறந்த உணவு அன்று அவற்றிற்கு கிடைத்தது.

vikramathithan stories



விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் J K SIVAN

புறாக்களின் திருமணம்
விக்ரமாதித்தன் பெண்ணாக வேஷமிட்டு ராஜகுமாரி சம்பகவல்லியின் தோழியாக அவள் அந்தப்புரத்தில் இருக்கிறான். அவள் மனம் திறந்து ஒருநாள் எதற்காக அவள் ஆண்களை வெறுக்கிறாள் என்ற காரணத்தை சொல்கிறாள். அது அவள் பூர்வ ஜென்மம் சம்பந்தப்பட்டது.

''நான் சொல்வதைக் கேள் தோழி, அழகு வனம் என்று ஒரு காடு இருந்தது. அந்த காட்டிற்குள் ஒரு காளி கோவில்.சுற்றிலும் அடர்ந்த மூங்கில் காடு. அந்த புதரில் ரெண்டு புறாக்கள் வசித்தன. ஒன்று சால்யவான், இன்னொன்று சல்லரி. பாவம் வெகுநாள் அந்த புறா தம்பதிகளுக்கு வாரிசு பிறக்கவில்லை. கடவுள் கிருபையால் ஒருநாள் சல்லரி ரெண்டு முட்டை இட்டது. முட்டையை கூட்டில் விட்டுவிட்டு ரெண்டு புறாக்களும் இறை தேட சென்றபோது மூங்கில் காட்டில் தீ பற்றிக்கொண்டது. பாவம் ரெண்டு முட்டைகளும் கருகி வெந்து சாம்பலாயின. திரும்பி வந்த புறாக்கள் நடந்ததை அறிந்து வாடின. அழுதன.

''இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம். நாமும் இந்த தீயில் விழுந்து மடிவோம் என்றது சல்லரி. ரெண்டும் ஒன்றாக தீயில் விழும் சமயம் சால்யவான் தப்பி ஓடிவிட்டது. சல்லரி தீயில் வெந்து செத்தது.

'தோழி, நான் தான் சல்லரி. எனக்கு ஆண்கள் மேல் கோபம் வெறுப்பு வருவது நியாயம் தானே ?'' என்றாள் ராஜகுமாரி.
இந்த கதையை விக்ரமாதித்தனின் மந்திரி பட்டியும் ஒரு பல்லி உருவில் தன்னை மாற்றிக்கொண்டு சுவரோரத்தில் ஒளிந்துகொண்டு கேட்டான்.

ஏற்கனவே திட்டமிட்டபடி பட்டி ஆயிரம் பொற்காசுகளுடன், விக்ரமாதித்தியின் தந்தையாக வேஷமிட்டு அரசனிடம் வருகிறான். என் பெண்ணை மீட்டுக்கொண்டு போகிறேன். இந்தாருங்கள் உங்களிடம் வாங்கிய பணம் என்று காசுகளை தருகிறான். அவனுக்கு இப்போது ஏன் சம்பகவல்லி ஆண்களை வெறுத்தாள் என்று தெரிந்துவிட்டதே. அவள் தந்தை ராஜாவுக்கு அது தெரியாமல் கவலையில் அல்லவோ வாடினான்.
சம்பகவல்லிக்கு தனது தோழி விக்ரமாதித்தியை பிரிய மனமில்லை. என்ன செய்வது?.

அடுத்த ஒரு சிலநாளில் பட்டி ஒரு மந்திரவாதியாக அந்த ஊருக்கு வருகிறான். ராஜாவின் முன்னால் அரசவையில் சில மாயா ஜால வித்தைகள் செயதுக்காட்டுகிறான்ல். எப்படி? வேதாளம் தான் கைவசம் இருக்கிறதே.அதன் உதவியால் கண்கட்டு வித்தைகள் செய்கிறான். ராஜாவுக்கு அளவுகடந்த சந்தோஷம். மந்திரவாதி பட்டிக்கு பரிசுகள் வாரி வழங்குகிறான். அப்போது மந்திரவாதியாக நடிக்கும் பட்டி என்ன சொல்கிறான் தெரியுமா?

''மஹாராஜா இதுவரை நான் காட்டிய வித்தைகள் ரொம்ப சிறு பிள்ளைத்தனமானவை. சாதாரணமானது. என் குரு அநேக பெரிய பெரிய வித்தைகள் தெரிந்தவர். அவர் காட்டில் இருக்கிறார். இங்கே வரமாட்டார். அவருக்கு பெண்களை பார்க்கவே பிடிக்காது.

ராஜா விடுவானா? சரி உங்கள் குருவை அழைத்துவாருங்கள். நான் பெண்களே யாரும் வராதபடி நாலாபக்கமும் திரை போட்டு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணுகிறேன் என்று ஒரு பெண்ணும் கண்ணில் படாதபடி ஒரு ''ஆண்களுக்கு மட்டும்'' பிரத்யேகமான மந்திர மாயாஜால காட்சிக்கு ஏற்பாடு செய்தான்.

சம்பகவல்லிக்கு எப்படியாவது அந்த நிகழ்ச்சியை பார்க்க ஆவல். திரைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு பார்த்தாள் .விக்ரமாதித்தன் குருவாக வேஷம் தரித்துக் கொண்டு வந்தான். வேதாளத்தின் உதவியோடு பல வித்தைகள் புரிந்து எல்லா ஆண்களையும் மகிழ்வித்தான். ராஜாவுக்கு தலை வெடித்துவிடும் போல் ஆகி விட்டது. மெதுவாக விக்ரமாதித்தன் அருகே வந்தான். கையைக் கட்டிக்கொண்டு

''மாயாஜால குருவே, எதற்கு நீங்கள் பெண்களையே கண்ணால் பார்க்கமாட்டீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?''என்று கேட்டான்.

''மஹாராஜா, நான் இதை யாரிடமும் சொன்னதில்லை. உங்களைக் கண்டால் எனக்கு பிடித்து விட்டது. எனவே காரணம் சொல்கிறேன். கேளுங்கள்:

''அழகுவனம்'' என்று காடு. அங்கே ஒரு காளி கோவில் அதைச் சுற்றி மூங்கில் காடு. அதில் ரெண்டு புறாக்கள் வசித்தன. ஆண் புறாவின் பெயர் சால்யவான். பெண்ணின் பெயர் சல்லரி. வெகுகாலம் அவற்றிற்கு குழந்தை செல்வம் இல்லை. இறைவன் அருளால் சல்லரி ரெண்டு முட்டை இட்டது. ரெண்டு புறாக்களும் இரைதேட பறந்து போயிருக்கும்போது மூங்கில் காட்டில் நெருப்பு பற்றிக்கொண்டு காடு அழிந்தது. மரத்தின் மேல் கூட்டில் இருந்த புறாமுட்டைகளும் எரிந்தன. திரும்பிவந்து பார்த்த சால்யவான் சல்லரி இரண்டு புறாக்களும் அழுதன. நமக்கு இனி எதற்கு வாழ்க்கை என்று இரண்டுமே நெருப்பில் விழுந்து எரிந்து போவோம் என்று நெருப்பில் குதித்து சாக துணிந்தன. சால்யவான் நெருப்பில் விழுந்தது சல்லரி தப்பி ஓடியது. நான் தான் அந்த ஆண் புறா சால்யவான். எப்படி எனக்கு பெண்களைக் கண்டால் பிடிக்கும் நீங்களே சொல்லுங்கள்? என்றான் விக்ரமாதித்தன் மந்திரவாதி குரு வேஷத்தில்.

அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த சம்பகவல்லி திரை மறைவில் இருந்து ஓடிவந்தாள். ''இல்லை இல்லை. தப்பு. சல்லரி தான் நெருப்பில் விழுந்தது. சால்யவான் உயிர் தப்பி ஓடிவிட்டது '' என்று கத்தினாள்.

''இல்லவே இல்லை, சால்யவான் தான் நெருப்பில் விழுந்து மாண்டது'' என்று விக்ரமாதித்தன் உரக்க கத்தினான். ரெண்டுபேரும் இப்படி மாற்றி மாற்றி காத்த, ராஜாவும் மந்திரிகளும் மற்றவர்களும் ஒருவேளை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ரெண்டு புறாக்களும் நெருப்பில் விழுந்து மாண்டிருக்கலாம். இந்த ரெண்டு பேர் தான் அந்த புறாக்கள் முன் ஜென்மத்தில். ஆகவே இந்த இருவரையும் இந்த பிறவியிலாவது ஒன்று சேர்த்து வைக்கவேண்டும் என்று அவர்களுக்கு செயதுவைப்பது என்று என்று முடிவெடுத்தனர்.

கல்யாணம் ஜோராக இனிது நடந்து முடிவடைந்தது. ஆறு மாதம் ஆனது. விக்ரமாதித்தன் மீண்டும் நாடாறு மாதம் ஆள்வதற்கு உஜ்ஜையினி திரும்ப கிளம்பியபோது தான் அந்த ஊர் ராஜாவுக்கு '' ஆஹா நமது பெண்ணை மகா வீரன் விக்ரமாதித்த மஹாராஜா அல்லவோ மணந்து கொண்டான்'' என்று மகிழ்ந்தான். ஊராரும் இது தெரிந்து அதிசயித்தனர். வாழ்த்தினார்கள்.



Wednesday, August 28, 2019

PURI JAGANNATH



   சிறுவனின் உதவி    J K  SIVAN 

          
சிறந்த  ஜெகன்னாத பக்தரான  ரகுதாசருக்கு இந்த  உலகமே ஜகந்நாதர் மட்டும் தான். வேறெந்த நினைவும்  இல்லை. ஜெகந்நாதனை ஒரு ஆத்ம  நண்பனாகவே  கருதுபவர்.  

ஒரு சமயம் ரகுதாசர்க்கு கடும் ஜுரம். உடல் நெருப்பாக கொடுத்தது. குளிர் ஜுரத்தில்  நடுங்கி பிரஞை விட்டு விட்டு வந்தது. ஒரு  பழைய பாயில் படுத்துக்கொண்டிருந்தவரால் நகரமுடியாத  நிலை. உடல் நலம்  கொஞ்சம்  கொஞ்சமாக மரணத்தை  நோக்கி அவரை  இட்டுச் சென்றது. மலஜலம் எல்லாம் படுக்கையிலே என்று  ஆகிவிட்டது.  எவரும் அவரை அணுகமுடியாதபடி  துர் நாற்றம்.                                                   

யார்  இந்த பையன்? எங்கிருந்தோ வந்தானா?  உறவு மற்றொருவர் இல்லாத ரகுதாசருக்கு  உதவ வந்தவனா?  ஒரு பக்கெட் ஜலம்  கொண்டுவந்து ரகுதாசரை  நன்றாக கழுவி  செய்தான். உடல் முழுதும்  வாசனை சந்தனம் பூசினான்.  அவர்   கிடந்த அறையை நன்றாக  சுத்தம்  செய்தான்.  அவன் உதவியால்  ஆச்சார்யமாக ரகுதாஸரின்  ஜுரம்  குறைந்தது.  நினைவு சிறிது  மீண்டது.கண்கள்  திறந்தன..  எதிரே  யார் தமக்கு உதவியது என்று பார்க்க முடிந்தது.

யார்  இவன்?  அட  இவன் முகம் அப்படியே  ஜெகந்நாதனின் முகமாக அல்லவோ  தோன்றுகிறது.? என் ஆருயிர் ஜெகன்னாதா  நீயா எனக்கு இந்த குடிசைக்குள் வந்து உதவினவன்?  என்ன  செயகிறாய் நீ?  நாயினும் கடையேன்  எனக்கு இப்படி பணிவிடை செய்வதன்  மூலம் உன்னை  தாழ்த்திக்கொண்டாயே ?  என்னை  குற்றவாளியாக்கி விட்டாயே பிரபு.  உன்னை இப்படி  எனக்கு பணிவிடை செய்ய அனுமதித்ததால்  என் பாப மூட்டை இன்னும் பெரியதாக   சுமக்கமுடியாத மூட்டையாகி விட்டதேயப்பா.  நீ  கருணா சாகரன் என்று தெரியும்.  இந்த ஜகத்துக்கு  நாதன்.  உன்னால்  ஆகாதது ஒன்று இல்லை.  நீ  மனதில் நினைத்தாலேயே, சங்கல்பித்தாலேயே எனக்கு  வியாதி குணமாகியிருக்குமே. எதற்கு நேரில் வந்து இப்படியெல்லாம் சிஸ்ருஷை செய்தாய்?'' என்று  கதறினார்  ரகுதாஸர்.

''ரகுதாஸா ,  நீ  சொல்வது வாஸ்தவம் தான். உன்னை  உனது  பிராரப்த கர்மாவிலிலிருந்து விடுவித்து  என்னிடம் சேர்ப்பித்துக் கொள்ள வேண்டுமே.  அதற்காக தான் வந்தேன்.   இன்னொரு  காரணமும்    உண்டு.  என் பக்தர்கள்  எனக்கு சேவை செய்வதன் மூலம்  மகிழ்கிறார்களே .எனக்கும்  என் பக்தர்களுக்கு  சேவை செய்யவேண்டும் என்ற ஆசை இருக்க கூடாதா? அதனால் மகிழ்ச்சி அடையக்கூடாதா? .உனக்கு சேவை செய்யவேண்டும் என்று எனக்கு எப்போதுமே விருப்பம்.  எனக்கும் என் பக்தனுக்கும்  என்றுமே வித்யாசம் என்ற  இடைவெளி கிடையாது. '' என்றான் ஜெகந்நாதன்.

ஜெகந்நாதன்  குழந்தை உள்ளம் கொண்டவன்  அல்லவா?  .அதனால் தான் சிறு  பையனாக வந்து  ரகுதாசருக்கு உதவினான்.சூர் தாசருக்கும் அப்படி தானே  சிறு பையனாக வந்து  உதவினான்?  எப்போதும் அவர் மனக்கண் முன் அப்படி சிறு  கோகுலபாலகனாக  காட்சி அளித்தான்.  

ரகுதாசரை  எல்லோருக்கும்  பிடித்திருந்ததற்கு காரணம் அவர்  எளிமை, இனிமையான குணம், அன்பான நோக்கம். திறந்த குழந்தை மனது. ஜெகன்னாநாதனின் தோழன் என்று எல்லோரும் அவரை மதித்தார்கள்.  இன்னும் ஒன்றிரண்டு சம்பவங்களையும் கூறுகிறேன்.

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
ஆந்தை தந்த அறிவுரை...

வைசம்பாயனரே , யுத்தம் முடிந்தாலும் அதன் விளைவுகள் அதைவிட ஆபத்து நிறைந்ததாக இருக்கும் போல அல்லவா தோன்றுகிறது?'' என்று வருந்தினான் ஜனமேஜயன்.

''உடல் யுத்தம் முடிந்தது. உள்ள யுத்தம் பூதாகரமாக பெருகியது ஜனமேஜயா. விவரமாக சொல்கிறேன் கேள்'' என்கிறார் வைசம்பாயன ரிஷி.

''துரியோதனனைக் கண்டு சத்தியம் செய்துவிட்டு மூன்று வீரர்களும் ஒரு காட்டுக்கு சென்றார்கள். படை சேர்த்து இனி பாண்டவர்களை வெல்வது கனவு. எப்படி பழிவாங்குவது?. நமது அரசனுக்கு கொடுத்த வாக்கை எப்படி நிறைவேற்றுவது? என்று துடித்துக்கொண்டிருந்தான் அஸ்வத்தாமன், புது தளபதி!கௌரவ சைன்யம் இல்லாத அதன் சேனாதிபதி.!

''சஞ்சயா, என் மக்கள் போய் விட்டார்கள், கண்ணற்ற நான், கிழவி என் மனைவி இருவரும் அனாதைகள் ஆகிவிட்டோம்.. இனி நான் எங்கே செல்வேன் எப்படி வாழ்வேன். பாண்டு புத்ரர்களின் அடிமையாக இருக்க விருப்பமில்லை. நினைக்க நினைக்க எனக்கு ஆறவே இல்லையே, ஏன், எப்படி ?

பீமன் ஒருவனேயா என் நூறு பிள்ளைகளையும் கொன்றான்?
அப்படியானால் விதுரன் முன்பே சொன்னது சரிதானா?
நான் தான் சபையில் பீமன் சொன்னதை வெறும் வீராப்பு என்று எடுத்துக்கொண்டு முட்டாளாகவே இருந்துவிட்டேனா?
எப்படி பீமன் என் மகன், சரி சமமாக பலம் உள்ளவன், பதினாயிரம் யானை பலம் கொண்டவன், கதாயுதத்தில் நிபுணன், அவனை அதர்ம வழியில் துடையைப் பிளந்து கொன்றதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள்?
துரோகம் அல்லவா அது?
எப்படி அஸ்வத்தாமன் இதற்கு பழி வாங்கப் போகிறான்?'' என்று நூறு கேள்விகேட்டான் நூறு பிள்ளைகளை இழந்த
திருதராஷ்டிரன்.

''இருண்ட காட்டில் அன்றிரவு மூன்று வீரர்களும் தங்கினார்கள். காட்டுவிலங்குகள் வராமல் ஒருவர் காவல் இருக்க வேண்டுமே. அஸ்வத்தாமன் பொறுப்பை மேற்கொண்டான். அவனால் மற்ற இருவரைப் போல தரையில் படுத்து தூங்க முடியவில்லை. மனம் கொதித்தது. என்னால் பாண்டவர்களை நேருக்கு நேர் வெல்ல முடியாது. கொன்று விடுவார்கள் என்னை. என்னை வளர்த்த துரியோதனனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றவேண்டும்? என் தந்தையை நிராயுதபாணியாக இருக்கும்போது கொன்றவனை கொன்று பழி தீர்க்க வேண்டுமே. எப்படி ?

அந்த பெரிய ஆலமரத்தின் அடியில் அஸ்வத்தாமன் யோசித்துக்கொண்டு இருளில் அமர்ந்தபோது, ஒரு ஆந்தை கத்திக்கொண்டே வந்தது. ஆந்தையும் காகமும் ஜென்ம வைரிகள். பகலில் ஆந்தையை காக்கைகள் கொல்லும் , இரவில் ஆந்தை காக்கைகளை கொல்லும் . அந்த மரத்தின் மேலே கிளைகளில் அநேக காக்கைகள் அமர்ந்தவாறு உறங்கி கொண்டிருந்தன. நிசப்தம். கண்கள் பச்சையாக ஒளி வீச அந்த ஆந்தை சப்தமின்றி பறந்து வந்தது. மின்னல் தாக்குதலில் மேலே அமர்ந்த காக்கைகளை கால் நகத்தால், அலகால், பற்களாலும் தாக்கி இறகுகளை பிய்த்து, குத்திக் குதறி கொன்றது. பறந்தது.

இதைப் பார்த்ததும் பொறி தட்டியது அஸ்வத்தாமனுக்கு. இறைவன் எனக்கு உணர்த்திய நீதி இது. அஸ்வத்தாமனாகிய நானே இப்போது இந்த ஆந்தை. தூங்கும் பாண்டவர்கள் தான் காக்கைகள். உடனே சென்று என் எதிரிகளை கொல்வேன்'' என்று தனது மார்பின் மேல் படீர் படீர் என்று அடித்துக்கொண்டான் அஸ்வத்தாமன்.

நள்ளிரவில் பாண்டவர்கள் பாசறைக்கு சென்று அவர்கள் தூங்கும் நேரத்தில் அவர்களையும் பாஞ்சாலர்களையும் கொல்வது ஒன்று தான் வழி. விறுவிறு வென்று கிருபரையும், க்ருதவர்மனையும் எழுப்பினான், திட்டத்தை சொன்னான். அவர்களுக்கு இந்த திட்டத்தில் விருப்பமில்லை.

''அவர்கள் தீய வழியில் நம் சேனையின் அரசனை கொன்றதால் இந்த சூழ்ச்சியும் தவறில்லை'' என்று வாதாடினான் அஸ்வத்தாமன்.

''உழைப்பு இருந்தாலும் விதியின் ஒத்துழைப்பு இல்லையென்றால் பயனில்லை. அதே போல் விதி அவன் பக்கம் இருந்தாலும் அவன் எந்த உழைப்பும் இன்றி அதை வீணாக்கினாலும் பயனில்லை. துரியோதனன் பெரியோர் வாக்கை மதிக்கவில்லை, அவர்களை அலட்சியப் படுத்தினான், தவறான பாதையை வேண்டுமென்றே நாடினான். சகலமும் கடைசியில் உயிரோடு சேர்த்து இழந்தான். பேராசை பெருநஷ்டம் என்பதற்கு அவனே உதாரணம்.

என்னைக் கேட்டால் நாம் நேராக அஸ்தினாபுரம் சென்று திருதராஷ்டிரன், விதுரன் காந்தாரி ஆகியோரைக் கலந்து ஆலோசித்து அவர்கள் சொற்படி நடப்பதே உசிதம்'' என்கிறார் கிருபர்.

''எனக்கென்னவோ அவரவர் சித்தப்படி நடப்பது தான் உசிதம் என்று படுகிறது. ஒரே மனிதனுக்கு ஒரு நேரம் தோன்றும் முடிவு மறு கணம் தவறானதாக படுகிறதே.. சந்தர்ப்பம் ஒத்துழைத்தால் தவறான வழியும் கூட சரியான முடிவாக பலனளிக்கும். உயிரைத் திரணமாக மதித்து வெற்றியும் பெறுவான். (இது தான் ரிஸ்க் எடுப்பது!) ஒவ்வொருவனும் தனது வாழ்வில் ஒருமுறை யாவது இப்படி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முடிவை எடுத்து அதன் பலன் பேராபத்தை தருவதாக இருந்தாலும் நல்ல முடிவே தரும் என்று துணிந்து எடுக்கிறான். என் முடிவு அப்படிப் பட்டது.

இறைவன் ஒவ்வொரு உயிரையும் படைக்கும்போதே இது இப்படி நடக்கவேண்டும் என்று தலையில் எழுதி விடுகிறான்.

நான் பிறப்பால் பிராமணன், மேற்கொண்டது க்ஷத்ரிய தர்மத்தை, வில்லும் வாளும் தாங்கி மிகப் பெரிய வீரன் என்று பேர் .பெற்று என்ன பயன்? என் தந்தையைக் கொன்ற திருஷ்டத்யும்னனையும், அர்ஜுனனையும் இன்னும் பழிவாங்கவில்லை, என் அரசனையும் அவன் 99 சகோதரர்களையும் கொன்ற பீமனை இன்னும் பழிவாங்காத க்ஷத்ரியனாக இருந்து என்ன பயன்?

இன்று இரவு ஒரே நேரத்தில் இரண்டையும் நிறைவேற்று கிறேன். இன்று இரவே பாண்டவர் பாஞ்சாலர்கள் தங்கியிருக்கும் வாசங்களுக்கு சென்று இரவில் அவர்கள் தூங்கும்போது அதை மீளாத்தூக்கமாக பண்ணிவிடுகிறேன்.'' என்றான் அஸ்வத்தாமன்.

''அஸ்வத்தாமா, நீ துணிச்சலாக முடிவெடுத்துவிட்ட பிறகு என்ன சொல்ல? உனக்கு துணையாக நாங்களும் நாளை போருக்கு வருகிறோம். அங்கே உன் வீரத்தை காட்டி வெல்வாய். அதுவே நியாயம். இன்று இரவு நீ உறங்கு. நாளைக்கு பழி தீர்ப்போம், அல்லது மடிவோம்'' என்கிறார் கிருபர்.

''வாசுதேவனையும் அர்ஜுனனையும், பீமனையும் போரில் வெல்வது என்பது முடியாத காரியம். தானே போய் மரணத்தைத்தேடிக் கொள்ளும் சமாச்சாரம். அவர்களை என்னால் முடிந்த வழியில் கொல்வது எனக்கு நிம்மதியை தரும். யோசித்து தான் நான் செய்த முடிவு இது.''என்றான் அஸ்வத்தாமன்.

''உனக்கு சரியான வழியை உபதேசித்தால் ஏறாது. கரண்டி குழம்பில் மூழ்கி இருந்தாலும் ருசி அறியாது. நீ சுத்த வீரன். ஆயுதங்களைக் கடுமையாக, கொடியனவாக உபயோகிக்க தெரிந்தவன். துரோணர் மகன். வில்வித்தையில் நிபுணன். எனவே உன்னோடு நாங்கள் கடைசிவரை உதவிக்கு கூட நின்று, பாண்டவர்களை, பாஞ்சாலர்களை போரில் வெல்வதுவே சரி''

''இல்லை நேர்மை செத்து விட்டது என் தந்தை, கர்ணன், பீஷ்மர், துரியோதனன், பூரி ஸ்ரவஸ், ஜயத்ரதன், எல்லோருமே ஏமாற்றப் பட்டு கொல்லப் பட்டார்கள். நேர்மை இனி இல்லை. எப்படி என் தந்தை தனது ஆயுதங்களை கீழே வைத்தபோது கொல்லப் பட்டாரோ, அதே போல் திருஷ்டத்யும்னன் ஆயுதங்கள் இன்றி கவசமின்றி உறங்கும்போது கொல்லப் படுவது தான் சரியான பதில். உடனே இருவரும் என்னோடு வாருங்கள். நான் இப்போது உங்கள் தளபதி சொல்வதைக் கேட்கவேண்டும்.'' என்றான் அஸ்வத்தாமன்.

மூவரும் பாண்டவர் பாசறைக்கு சென்றார்கள். அஸ்வத்தாமன் கொடிய ஆயுதங்களை கையில் வைத்திருந்தான். மனதில் தனது தந்தையையும் பரமசிவனையும் பிரார்த்தித்து விட்டு மெதுவாக பாஞ்சாலர்கள் தங்கிய கூடாரத்தில் எவரும் அறியாவண்ணம் நுழைந்தான்.



இரவில் பாண்டவர்கள் பாசறையில் நடந்ததை இருட்டில் நாமும் அஸ்வத்தாமன் பின்னாலேயே போய் பார்ப்போம்.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...