Thursday, October 31, 2019

CLAY




பெற்றோர்களே......சற்று சிந்தியுங்கள்
J K SIVAN
.எழுபது  எழுபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு  நான்  ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு  களிமண் எடுத்துக் கொண்டு போயிருக்கிறேன். அங்கே  ஒரு சிலநாள் மண்ணில் ஏதாவது பொம்மை செய்ய சொல்வார்கள். கைவேலை என்று ஒரு பாடம், வகுப்பு. அதில்  ஓலை முடைதல், காகிதத்தில்  பூக்கள் செய்வது, மாலை செய்வது போன்ற சில திறமைகள் வளர்ந்தது.  களிமண்ணில் நான்  பிள்ளையார் பண்ணி இருக்கிறேன். வீடு கட்டி இருக்கிறேன், மரம் ஆடு மாடு யானை எல்லாம் செய்தவன்.  களிமண்  எப்படி வளைத்தாலும் வளையும் தன்மை கொண்டது. சொன்னபடி கேட்கும்.
விநாயகரை மட்டும் களிமண்ணால் ஏன் செய்ய முன்னோர்கள்  வழக்கமாக் கினார்கள்?

அந்த ஒரு தெய்வம் எல்லோருக்கும்  பிடிப்பதற்கே காரணம் வளைந்து கொடுப்பதால்.  நமது தவறுகளை நீக்குபவர். விக்னங்களை விலக்குபவர், எடுத்த காரியம் நல்லபடியாக முடித்து வைப்பவர், எளிமையாக  ஆற்றங்கரை, குளத்தங்கரை, நாற்சந்தி, தெருமுனைகளில் சிறிதாக கல்லில் உட்கார்பவர்

அவர் ஒருவரை தான் நாம்  டெண்டுல்கர், கார்கில் போர் வீரன்,  ஸ்கூட்டர் ஓட்டி , மத்தளம், வாய்ப்பாட்டு பாடகர், மற்றும் மனதில் தோன்றும்  உருவமாக்கி மகிழ்கிறோம். நம்மை நல்ல வழிக்கு கொண்டுவருபவரை பல உருவங்களாக நாம் காண்பதில்  மகிழ்கிறோம்.

நம்மை சிறிய வயதில் வளைப்பவர்கள் பெற்றோர், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

கடவுள் அதனால் தான் நாம் பிறக்கும்போது வெறும் களிமண்ணாக நம்மை படைத்தி ருக்கிறார். நம்மை ஒரு உருவமாக செய்வது நமது பெற்றோர்கள்.  பிறகு பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள், மனைவி, குருமார்கள், ஆச்சார் யர்கள்,  அப்புறம் எல்லோருமே.  பெற்றோர்கள் தான் நம்மை முதலில் உருவாக்குபவர்கள், உருவமாக் குபவர்கள்.  ஆங்கிலத்தில்  CHILDREN  ARE  MOULDED  BY PARENTS என்று சொல்கிறோமே அது தான் இது.  சின்ன வயதில் அம்மா போல் புடவை உடுத்த, அப்பா சட்டையை, செருப்பை மாட்டிக்கொள்ள அப்பா அம்மா  விளையாட்டு  எல்லாம் இந்த அடிப்படையில் தான்.  அப்பனைப் போல் பிள்ளை, தாயைப்போல மகள்  வளர்வது குணம் பெறுவது இதனால் தான். அன்னையும் பிதாவும் நமக்கு முன்னறி தெய்வம் இல்லையா?

குழந்தைகள் எதிரில்  சிகரெட் குடிப்பது, அப்பா அம்மா சண்டை, அடிப்பது, திட்டுவது  எல்லாம் குழந்தைகள் பிற்காலத்தில் உபயோகிக்க பயிற்சி கொடுப்பவை.  ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது பெற்றோர்கள்  தான். பேய் பிசாசு கதை, பயமுறுத்துவது போன்ற செயல்கள் குழந்தைகளின் தைரியம் தன்னம்பிக்கையை கொன்றுவிடும். தாயோடு இருக்கும் நேரம் தான்  குழந்தைக்கு அதிகம் என்பதால்  தாய் இதில் அதிக கவனம் செலுத்தி குழந்தைகளுக்கு  அன்பு, நல்ல பண்பு, பக்தி, உறவு நட்பு இவைகளை நேசிப்பது .... இதை யெல்லாம் வளர்க்கலாம்.

ஐந்து அல்லது எட்டு வயது வரை தாய் தந்தை தான் குழந்தைகளின் உலகம்.  சரியாக வளர்க்கப்படாத குழந்தைகள் பிற்காலத்தில் பெற்றோராகும்போது அவஸ்தைப்படுவது அவர்கள் மட்டுமல்ல அவர்களது குழந்தைகளும் என்பது  நினைவிலிருக்கட்டும்.  நல்ல ஆசிரியர்கள், நண்பர்கள்  சிலரால் நிலைமை சரியாக்கப் பட வாய்ப்புண்டு.  குழந்தைகள் தானாக வே  கற்றுக்கொண்டு திருந்த காலம் அதிகம் தேவைப்படும் ஆனால் அது கிடைக் காதே.  கிடைத்த நேரத்தில் முன்னுக்கு வந்தால் தான் தானே நல்லது..பெற்றோர்களே......சற்று சிந்தியுங்கள்

AAYIRA NAMAN




ஐந்தாம் வேதம்  J K SIVAN
விஷ்ணு ஸஹஸ்ரநாமம்                                                  

                                       ஆயிர நாமன் 

ஸ்ரீ வைஸம்பாயன மஹரிஷி  ஜனமேஜயனிடம் சொல்வது:

‘’ஸ்ருத்வா தர்மாந ஸேஷேண பாவநாநி ச ஸர்வஸ: |
யுதிஷ்டிர ஸாந்தநவம் புநரேவாப்ய பாஷத ||

'' யுதிஷ்டிரன் தர்மவான் நேர்மை தவறாதவன், சாஸ்திரத்தை மதித்து நடப்பவன், ஒழுக்கமானவன். பீஷ்மரிடம் ஆறு கேள்விகள் கேட்டான் அல்லவா. அவை ஸ்லோகமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

யுதிஷ்டிர உவாச:

கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயாணம்:
சத்துவந்த; கம் கமர்ச்சந்த: ப்ராப்நியூர் மணவாஸ் ஸுபம்’’

யுதிஷ்டிரன் பய பக்தியுடன் பீஷ்மரை மெதுவாக கேட்கிறான்:
''இந்த பூவுலகிற்கே ஒரே கடவுள் என்று எவரைச்  சரணடையலாம்? ''  என கேட்கிறான் யுதிஷ்டிரன்.

‘’கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜந்ம ஸம்ஸார பந்த நாத்

‘’இந்த மனித குலமே எவரை போற்றி துதித்து, வழிபட்டு அமைதியும், வளமும் பெற்று உய்யமுடியும் ?’’
‘’எவரை உபாசித்தால் பிறவியினால் ஏற்படும் பந்தங்களை, கட்டுக்களை உதறிவிட்டு  பரிசுத்தமாகலாம்? எது சிறந்த, உயர்ந்த தர்மம் என்று உங்களுக்கு தோன்றுகிறது?’’

‘’கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜென்ம சம்சார பந்தனாத்:’’
‘’எந்த மந்திரங்களை உச்சரித்து ஒருவன் பிறவி - மரண துன்பத்திலிருந்து விடுபட முடியும்?’’

'' தாத்தா, நீங்கள் எல்லாம் தெரிந்தவர், நீங்களே சொல்லுங்கள்,நீங்கள் எதை உயர்ந்த தர்மம் என்று கருதுகிறீர்கள்? எந்த ஜெபத்தை, மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உலக ஜீவ ராசிகள் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை பெறும்?'' - யுதிஷ்டிரன்.

ஸ்ரீ பீஷ்ம உவாச:

‘’ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித: ||

''இந்த பூவுலகில் எல்லோர் நலனுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் தன்னையே தியாகம் செயது கொள்பவர் ஸ்ரீ மஹா விஷ்ணு ஒருவரே. ஆதி அந்தம் இல்லாத பிரபு''

‘’தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம் |
த்யாயந் ஸ்துவந்நாமஸ்யம்ச யஜமாநஸ் தமேவச ||

அப்படிப் பட்ட மகா புருஷனை ஸ்தோத்ரம் பண்ணியும், வழிபட்டும் ஒருவன் முக்தி பெறலாம்.

‘’அநாதி நிதநம் விஷ்ணும் ஸர்வலோக மஹேஸ்வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வதுக்காதிகோ பவேத் ||

தர்ம ஸ்வரூபனான மூவுலகும் காப்பவனான மஹாவிஷ்ணு ஆதியோ அந்தமோ இல்லாத மகேஸ்வரன். அவனது நாமத்தை நாமத்தை ஸ்மரிப்பவன் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு துக்கங்களற்ற நிலை அடைகிறான்.

‘’ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம் |
லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம் ||

ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ திகதமோமத: |
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்ச்சேந் நர:ஸதா||

பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப: |
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் ||

மகா விஷ்ணுவை தான் ஒளி மயமான 'மஹத்' என்போம் . அவரல்லவோ சர்வ ஜன ரக்ஷகர். சத்ய ஸ்வரூப மானவர். பர ப்ரம்மம் ;

பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம் |
தைவதம் தேவதாநாம் ச பூதாநாம் யோவ்யய: பிதா ||

எதெல்லாம் பவித்ரம் என்று கருதுகிறோமோ அவற்றையே பவித்ரமாக்குபவர் மஹா விஷ்ணு. தேவாதி தேவன். சாஸ்வதன் . ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தை.

யத: ஸர்வாணி பூதாநி பவந்த்யாதி யுகாகமே |
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புநரேவ யுக்க்ஷயே ||

யுக சந்திகளில்
பிரளயம் நேரிடும்.அப்போது சகல ஜீவராசிகளும் அழியும். பிரளய முடிவில் அனைத்தும் மீண்டும் தோன்றும்.எல்லாம் அவனிலிருந்து வந்தவை. முடிவில் அவனடியே சேரும்.

தஸ்ய: லோக ப்ரதாநஸ்ய ஜகந்நாதஸ்ய பூபதே|
விஷ்ணோர்நாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம் ||

‘’யுதிஷ்டிரா, நான் உனக்கு அந்த கீர்த்தி வாய்ந்த மகா விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை சொல்கிறேன். வேதங்கள் அவனையே பாடுகின்றன ஏனென்றால் அவனல்லவோ அனைத்து பாபங்களையும் சம்சார பயத்தையும் போக்குபவன்.

‘’யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மநா : |
ரிஷி பி: பரிகீதாநி தாநி வக்ஷ்யாமி பூதயே ||

''நான் சொல்லப்போகும் விஷ்ணுவின் நாமங்கள் எல்லாமே அவனது கல்யாண குணங்களை அறிவுறுத்தும். ரிஷிகளின் வாக்கியங்களில் பொதிந்தவை அவை.

ரிஷிர் நாம்நாம் ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹா முநி: |
சந்தோ அநுஷ்டுப் ததா தேவோ பகவாந் தேவகீஸுத: ||

''ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயர் கொண்ட வேத வியாசர் தான் இந்த ஆயிரம் நாமங்களை தொகுத்து அளித்தவர். அவை அனுஷ்டுப் எனும் சப்த அளவில் சொல்லவேண்டும். இந்த ஆயிர நாமங்களுக்கும் தலைவன், நாயகன், தேவகி மைந்தனான ஸ்ரீ கிருஷ்ணனே  

தொடரும் 

sur das


ஸூர் ஸாகரம் J K SIVAN
ஸூர் தாஸ்
ஸ்வாகதம் கிருஷ்ணா ஸூர் தாஸ் பிறவிக்குருடர். கண்தெரியாது என்று நினைத்தால் நாம் தான் குருடர்கள். புறக் கண் இல்லாவிட்டால் என்ன , அகக்கண் அற்புதமாக பல யுகங்கள் தாண்டி குட்டி கிருஷ்ணனை தொட்டிலிலிருந்து யசோதை எழுப்பும் காட்சியை எவ்வளவு முறை எத்தனை படங்கள் பார்த்தாலும் நம்மால் வர்ணிக்க முடியுமா? அவருக்கு தெரிந்த மொழி வ்ரஜ பாஷை மட்டுமா நமக்கு தெரியாது. அவர் கண்ட காட்சியும் நமக்கு தெரியாததால் ஸூர் தாசை யாரோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததில் இருந்து கொஞ்சமாவது அதை தமிழில் அனுபவிப்போம்.
wake up , Krishna, wake the lotus-petals open the water-lilies droop the bumblebees have left the creepers cocks crow, and birds chirp on the trees. The cows are in the byre lowing; they run after their calves; the moon fades before the sun. Men and women arise and joyfully sing their songs; Krishna, of hands lotus-like awake, for the day is about to dawn. பொல் என்று பொழுது விடிந்துவிட்டதடா. எழுந்திரு கிருஷ்ணா, சீக்கிரம். விழித்துக்கொள். இதைப்பார். எவ்வளவு அழகாக தாமரை மலர்கள்மொட்டுஅவிழ்கிறது. சூரியனைக் காண அத்தனை ஆசை. அதோ அல்லி மலர்களும் எவ்வளவு அழகுடன் இதழ்களை கூம்பாக வைத்துக் கொண்டு உள்ளே தேன் வண்டுகளை
அழைத்து வயிறு நிரப்பி வழி அனுப்புகிறது. கொடிகள் இளம் குளிர் காற்றில் சுகமாக அசையும் போது சிறு சிறு பறவைகள் அதில் அமர்ந்து சந்தோஷமாக பாடி ஊஞ்சலாடி விட்டு பறக்கின்ற அழகைப்பார்.
நமது கிராம கடிகாரம் ''கொக்கரக்கோ'' சப்தங்கள் கேட்கிறதா? சொல்லி வைத்தாற்போல் எல்லா சேவல்களும் ஒரே மாதிரி ஸ்வரத்தோடு சப்தமிடுகின்றன. சப்தஜாலங்கள் என்றால் மரங்களில் கூவும் பறவைகளின் வினோத ஒலிகள் தான்.
''அம்மா அம்மா'' என்று பெரிதாக அடி வயிற்றிலிருந்து ஒலி எழும்பும் பசுக்களின் குரல் கன்றுகளை சந்தோஷப்படுத்துகிறது. கன்றுகளை தேடுகின்றன. அவிழ்த்து விட்டவுடன் கன்றுக் குட்டிகள் எவ்வளவு ஆசையாக தாவித் தாவி குதித்துக் கொண்டு அம்மாக்களை தேடுகிறது.
சூரியன் கிழக்கே எழும்பியதால் சந்திரனின் சாம்ராஜ்யம் முடிவுக்குவருகிறது. ''வா சூர்யா இனி உன் பொறுப்பு'' என்று சந்திரன் விடைபெறுகிறான்.
கோபி கோபியர்கள் எழுந்து எறும்புகள் போல் சுறுசுறுப்பாக அன்றாட கடமைகளை துவங்க தொடங்கி விட்டார்கள். அட எவ்வளவு இனிமையாக பாடிக் கொண்டே அவர்கள் சந்தோஷமாக தங்களது வேலைகளை செய்கிறார்கள்.
''எழுந்திரடா குட்டிகிருஷ்ணா, பொழுது புலர்ந்து விட்டது. உன் தாமரை மலர் போன்ற மிருதுவான திருக் கைகளை நீட்டு, தூக்கி விடுகிறேன். எழுந்திரடா செல்லமே ''
On the occasion of my 81st birthday (Sathabishekam) on 26.9.2019 a free book on Surdas poems (33 nos only) with 88 pages was distributed to those who were present as my compliment. For those who did not meet me on that day, can contact me by whatsapp 9840279080 and get an ebook titled MANADHILADUM MAADHAVA, Those who desire it by post can send their address to above whatsapp no. I shall send and those who can meet me personally at Nanganallur can have it across the table.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...