Tuesday, October 22, 2019

GITANJALI



கீதாஞ்சலி                                     J K  SIVAN 
ரவீந்திரநாத்  தாகூர் 
                                                                                           
                   கனவாய்  மறையாதே   கண்ணா!!

22.  In the deep shadows of the rainy July, with secret steps, 
thou walkest, silent as night, eluding all watchers.
Today the morning has closed its eyes, 
heedless of the insistent calls of the loud east wind, 
and a thick veil has been drawn over the ever-wakeful blue sky.
The woodlands have hushed their songs, and 
doors are all shut at every house. 
Thou art the solitary wayfarer in this deserted street. 
Oh my only friend, my best beloved, 
the gates are open in my house---do not pass by like a dream.

பருவக்காற்று  சீசன் மழை அறிகுறி ஜூலை  மாதம்  நன்றாகவே  தெரிந்துவிடும். கிருஷ்ணா,  வாடைக் காற்று உடலை ஊடுருவிச்  செல்லும்.  நீயோ  எதிலும் சம்பந்தம் இல்லாதவன். ரஹஸ்ய சப்தமற்ற காலடி தடங்கள் பதிப்பவன்.  இரவைப் போலவே  அமைதியானவன்.  
யார் பார்த்தால் என்ன,  பார்க்காவிட்டால்  என்ன? எவர் கண்ணிலும் நீ படாதவன்.
நினைப்பவனுக்கு  நீ  மனதில் தோன்றுபவன்.

இன்று என்னவோ  காலை வேளையே ஒளி குன்றி  இருக்கிறது.  கண்ணை மூடி  இன்னுமா தூங்குகிறது? கிழக்கே இருந்து தொடர்ச்சியாக பலமான காற்று  வீசுகிறது கூட  தெரியாதோ?.  புழுதி தரையிலிருந்து மேலே எழும்பி காற்றில் புகை மண்டலம் போடுகிறது.  நீலவானமே தெரியவில்லை
 
 எப்போதும் பளிச்சென்று  விழித்துக் கொண்டு இருக்கும்  நீல வானத்துக்கே  கனமான கருப்பு போர்வை போர்த்தி தூங்கப் பண்ணியாகி விட்டதோ?.
 எங்கும் அடர்ந்து  காணும்  காடுகளில் இருந்து மூங்கில்கள் உராய்ந்து காற்றில்  தோன்றும் மரங்களின் அசைவு  காற்றில்  ஓ   வென்று  விடாமல் ஒலிக்கிறதே  அதனால் இயற்கையாகவே  கேட்கும் உன்  சுநாத வேணுகான ஓசை கேட்க முடியவில்லையப்பா !.

குளிருக்கும் மழைக்கும் பேய்க் காற்றுக்கும்  பயந்து காற்று  கதவுகளை  பிய்த்துக்  கொண்டு பறக்காமல்   எல்லா வீடுகளும்  தீப்பெட்டிகள்  போல் கதவுகள் ஜன்னல்கள் மூடப்பட்டு இருளில் மூழ்கிப்போய் விட்டன.   நான் மட்டும் தான்  விழித்துக்கொண்டு நீ இருண்ட இந்த ஆளில்லாத  தெருக்களில் திசை தெரியாத  ஒரு ஒற்றையாளாக வழிப்போக்கன்  போல் நடந்து வருவாய் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.  

 கிருஷ்ணா,   ஜன நடமாட்டம் இல்லாவிட்டால் என்ன. நான் உன் உன் ஒரே உயிர் நண்பன் அல்லவா.

கிருஷ்ணா, என் வீட்டின் கதவுகளை  மற்றவர்கள் போல்  நான்  மூடி வைக்கவில்லை. திறந்தே வைத்திருக் கிறேன். வா  கிருஷ்ணா  வா, என் நெஞ்சக் கதவும் என் வீட்டு வாசலைப்போலவே  உனக்காக திறந்தே இருக்கிறது. நீ வருவாய் என்று தெரியும். கட்டாயம்  வா.  கண் சிமிட்டும்  நேரத்தில் தோன்றி  மறையும்  கனவாக மறைந்து விடாதே.....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...