Tuesday, October 8, 2019

PRAYER



விஜய தசமி இந்த நன்னாளில் ஒரு  சின்ன  வேண்டுகோள்.    J K SIVAN 

எண்ணற்ற நமது நண்பர்கள், அன்பர்கள்,  லக்ஷக்கணக்காக உலகமெங்கும்  இருக்கிறார்களே, அவர்களைத் தவிர  நமக்கு தெரியாத பழக்கமில்லாத  கோடானுகோடி மக்கள் உயிர்வாழ்கிறார்களே, அவர்களில் யாருக்கு உடல்நலம் குன்றி இருந்தால்  சீராகவும், வியாதிகள் குணமாகவும், துன்பங்கள் இன்பங்களாக மாறவும், நீண்ட ஆயுள் பெறவும், நேர்த்தியாக உடல்நலம் பெறவும் தினமும் இன்றுமுதல்  6.30PM  லிருந்து 6.45 பின் வரை  நாம் பிரார்த்தனை செய்வோம்.  இது தான் பிரார்த்தனை.


''கிருஷ்ணா, 
நீ காக்கும் கடவுள். 
உலகமெங்கும் உன் ஜீவர்கள் உன் அருள் நாடியோ, நாட தெரியாமலோ வாழ்கிறார்கள்,
அவர்கள் அனைவரும் நீண்ட ஆயுள் பெறவும், ஆரோக்கியமான உடல் நலத்துடனும் 
சகல சௌபாக்கியங்களோடும்,  முக்கியமாக மனதில் அமைதியுடனும் வாழ  உன்னை 
தாள் பணிந்து வேண்டுகிறோம்..''

கிருஷ்ணனை  சுயநலம் இன்றி பொது நலம் கருதி இவ்வாறு வேண்டி, ஒரு சிறு  புஷ்பமோ, ஒரு இல்லையோ, சிறிது ஜலமோ  அளிப்போம். அது போதும் அவனுக்கு. அவன் மனதைப் பார்ப்பவன், ருசி, மணம், பொருள் எது வென்று பார்ப்பவன் இல்லையே.


நண்பன்   ஜே.கே. சிவன்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...