Thursday, November 30, 2017

ENGAL VAMSAM:

எங்கள் வம்சம்    J.K SIVAN 

                                      பாரதி மானியம் 

என் தந்தைக்கு வயது 11 என் அம்மாவுக்கு  6 அல்லது 7 வயதோ தெரியவில்லை. எப்படியும்  10த்துக்குள் நிச்சயம்  திருமணம் நடந்தது.  அது அக்காலத்து வழக்கம். 

அந்தகாலத்தில்  சிறு குழந்தைப்  பருவத்திலேயே  திருமணம்  செய்து வைத்தார்கள்.  கணவன் 15 வயது சிறுவனாக இருந்திருக்கிறான்.   பெண்ணோ 9 வயதிலேயே  மனைவி  பதவி  அடைந்தவள்.  மருத்துவ  வசதிகள் அதிகமில்லாத காலத்தில்,  வியாதிகள்  அடையாளம்  காணாத  காலத்தில்,  பால்ய விவாகத்தால் சிசு மரணத்தால் எண்ணற்ற  இளம் பெண்கள்  விதவையாகி ,  அவர்களை  உடன்கட்டையும்  ஏற வைத்தது, கொடுமைகளுக்குள்  ராஜா. அதையெல்லாம்  இப்போது  நினைக்கவே  என்னவோ  செய்கிறதே. இதைப்பற்றி மேலே  எழுத மனமில்லை.   ஒரு சிறு பெண்குழந்தைக்கு  தனக்கு திருமணம் நடந்தது என்றால் என்ன என்று புரியும் முன்பே அவள் விதைவையும் ஆகி பலர் முன்னிலையில் கணவனின் சடலத்தோடு தானும் பற்றி எரியும் நிகழ்ச்சி... அய்யோஓஓஓஓஓ !

இந்த பழக்கம்  ஏறக்குறைய  100-130 வருஷங்கள்  முன்பு வரை இருந்தது.  அக்பர் சக்ரவர்த்தி இதை  தடுக்க எடுத்த  முயற்சி பலன் தரவில்லை.   பின்னர்  வில்லியம்  பெண்டின்க் காலத்தில்  சட்டமாகியது.  காலம் செல்லச்  செல்ல  சாரதா  சட்டமும் நிறைவேறி  பால்ய விவாகமும்  தடை  செய்யப்பட்டுள்ளது.

வைத்தியநாத பாரதி மனைவி ஜானகி  அம்மாள்  தனது  உடன்  பிறவாச்   சகோதரியாக இருந்த  ராமசாமி பாரதிமனைவி  ஞானம்மா சக கமனம் செய்துகொண்ட பின்னர்  மனம் உடைந்தாள். பிரிவு  அவளை  வாட்டி  வைத்யநாத பாரதியின்  மனைவி  ஜானகியும்  சிறிது காலத்தில்  இயற்கை  எய்தினாள்

வைத்யநாத பாரதியின்  மகன்  பரசுராம  பாரதிக்கு  அப்போது  20 வயது.  ராமநாடக  கீர்த்தனை போன்ற  தமிழ் நூல்களில்  கற்றுச்  சிறந்தார். சங்கீதமும்  கை கொடுத்தது.  ராம நாமமே  அவர்களுக்கு  வழிகாட்டி.

அந்த காலத்தில்  இத்தகைய  சிறந்த  பக்தர்கள்  யாராவது  ஒருவரை  வாழ்த்தினால்  அவர்கள்  சிறந்து வாழ்ந்தனர்.  மனமொடிந்து  சிலரை  கடினமாக  சபித்தால்  அதுவும்  பலித்தது.  பரசுராம  பாரதியை  இப்படி ஒரு சிறந்த  தூய  ராம  பக்தராக, வாக்தேவி  சக்திவாய்ந்த தெய்வமாக சாத்தனூர் கிராம மக்கள் பார்த்தனர். போற்றினர். எவருக்கு  வியாதி வந்தபோதும்,  ராமநாமம்  உச்சரித்து  துளசி ஜலத்தால், சில  சமயங்களில்  வெறுமே  கை நிறைய  மண் எடுத்து கொடுத்து  குணமாக்கியதாகச்  சொல்வார்கள்.   எந்த மாடு கன்று நோய் வாய்ப் பட்டாலும் அவரிடம்  வந்து  மந்திரித்து, குணமாகியது. இதனால்  அவர் பெயர்  பிரசித்தமாகி  பக்கத்து  ஊர்களில் இருந்தெல்லாம்  மக்கள்  திரண்டனர்.

அதிகாலையில்  காவேரி  ஸ்நானம் செய்து  நியமங்கள்  முடித்து கம்பராமாயணச் சுவடியோடு உட்கார்ந்துவிடுவார்.   ராம  பாராயணம், பூஜை.   பிறகு  உச்சி வேளையில்  போஜனம்.  பிறகு  தன்னையே   மறந்து  ராமத்யானம்.  அவருக்கு  ராமத்யானம்  (ராமனைப் பற்றிய  தியானம்)    '' ரா (இரவு)   ''மத்யானம்'' (பகல்)  என்று இடைவிடாமல்  நடந்தது  என்று சொல்வார்கள் .  இப்படிப்பட்ட   சுத்த ராம பக்தர்  அவர்.

 காவேரிக்கரையில்  மதகடியில் அரசமரத்தருகே   ஒரு பிள்ளையார் இருந்தார் .  அவர்க்கு  ஒரு  சிறு  ஆலயம்  கட்டி  மதகடிப்பிள்ளையார்   பென்று  பெயர் சூட்டினார்.  அந்த  பிள்ளையார்  பெயரில்  பஞ்சரத்ன மாலை,  வேறு  பதிகங்கள், எல்லாம்  இயற்றினார்.  பிள்ளைகள்  விளையாட்டுக்காக  மானம்பு பாட்டு,  கோலாட்ட  பாட்டு  எல்லாம் பாடியிருக்கிறார்.  மழைவராவிடில்  பரசுராம பாரதிகளிடம்  விவசாயிகள்  வந்து  முறையிட்டு  அவரை  பிரார்த்திக்க  சொல்வார்கள்.

ஒருசமயம்  புரட்டாசி  வரை  கூட மானம்  பொய்த்து  விட்டது. ஆனி  மாசம்  ஹஸ்த நக்ஷத்ரத்தில்   விதை  விதைத்தால் அமோக  விளைச்சல்  என்று  நம்பிக்கை. கம்பர்அவர் எழுதிய  ராமாயணத்தில்  ''ஏரெழுபது'' எனும்  காவியத்தில்  ''விரை விடு  இலக்கணம் '' எனும்   செய்யுளில்  இதை  விளக்கியிருக்கிறார்.

 வைகாசி  மாதம்  காவேரியில்  வெள்ளம் வராமலும்   ஆனி ,  ஆடி,  ஆவணி, புரட்டாசி வரைகூட  மேல் மழை  பெய்யவில்லை  என்றால்  வேளாளர்களுக்கும்  சோழகர்களுக்கும்   வயிற்றில் புளி  கரைக்குமே.  ஓடி வருவார்கள்  பரசுராம  பாரதியிடம். வாசல்  நிரம்பிவிடும்.

 ''பாரதி  சாமி, மழை  பெஞ்சால்  தான்  இன்ஜெயிருந்து நவுருவோம்''.  


வெய்யில் தான்  ஏறியதே  தவிர  வேளாளர்கள் இடத்தை விட்டு  நகரவே இல்லை.  கண்கள்  ஆர்வமுடன்  நம்பிக்கையோடு  பாரதிகளையே  பார்த்துக்கொண்டிருந்தன.

 வெகுநேரம்  ஆகாயத்தையே கண் கொட்டாமல்  பார்த்துக்கொண்டு   ராமநாமம் சொல்லிகொண்டே இருந்த  பரசுராம  பாரதி  ஒரு  கவி  உடனே  இயற்றினார்.

''சீராமன்   பாதத்தை சிந்திக்கப்  பெய்யும்  மழை
வாரா  வளங்கள் எல்லாம்  வந்திடுமே  தேறீர்
நன்மைகள்   யாவும் நாளுக்கு நாள்  பெருகும்
தினமைகள்  ஏதேதும் வாராதே''

 (இந்த  பாடலை என் அம்மாவழி  தாத்தா  பிரம்மஸ்ரீ  வசிஷ்ட  பாரதிகள்   ஞாபகம்  வைத்திருந்தார்.  அதை  தனது வம்சாவளி என்ற தொடரில் இந்துநேசனில் பிரசுரித்து அதன் ஒரு பிரதி  கிடைத்தது  நம்முடைய  அதிர்ஷ்டம். )

 மேற் சொன்ன  பாடலை பரசுராம பாரதி உடனே இயற்றி  பாடியதன் அர்த்தம்: 

 ' ஸ்ரீ   ராமனின்  கிருபை  என்கிற  மழை,  கருணை மழையாக  அமோகமாக பொழியும், என்  அப்பன்  மதகடி விநாயகன் எங்கே  போனான்? அவன் இதை கவனிப்பான்.  நீங்கள்   யாவரும் மனம்  தளர வேண்டாம். இது  சத்தியம்.  தைரியமாகச்  செல்லுங்கள்.  நம்புங்கள்.   மழை வரும். ''

 விடுவிடென்று  கிளம்பினார் பரசுராம  பாரதியார்.  மதகடி பிள்ளையார் ஆலயம்  சென்றார்.  விபூதியைக் குழைத்து  பூசிக்  கொண்டார்.   விநாயக மூர்த்தியை  வலம்  வந்தார்.

 ''மண்ணுருகப்  பேயும்,  பொன்னுருகக்  காயும்,,
 மண்ணாளப்  புரட்டாசி என்பது  பிரட்டா-சீ  போ
எண்ணுரு   தேதியுமாச்சே  இனிமேல்   எப்படி விரைப்பு?
 எப்படி நாத்து  விடல்?  எப்படியே நடவாகும் ?
அண்ணலே இது  உனக்கு  சம்மதமா?  உந்தன்

 அடிமைகளாம்  குடிகளுரை  சாத்தனூர் அதனில்
பண்ணுரு  செய் பயிர்  தழைக்க  உயிர்களெலாம் செழிக்க
 பக்ஷமுடன் மதகடி வாழ்  கணபதியே  அருள்க.''

அவர்  மழை பெய்யாத  விஷயத்தைச்  சொல்லி,  பெய்யவைக்கும்  பொறுப்பை  மதகடிப்பிள்ளை யாரிடம் தள்ளிவிட்டு   சந்தோஷமாக  வெற்றிலை  போட்டுக்கொண்டு  குடியானவ  ஜனங்களிடம்  பேசிக்  கொண்டிருந்தார்.   வானம்  கருத்தது.  இடி இடித்தது.  கார் மேகங்கள்  நகர்ந்து  வந்தன. ஒரு நாழிகை  நேரம்  மழை கொட்டோ கொட்டு என்று  மண்வாசனை நிறக்க  மழை பெய்தது.

 மழையில் நனைந்து கொண்டே  கம்பர்  இயற்றிய  ஒரு  ராமாயணப் பாடலை  பாடிக் காட்டினார்  பரசுராம  பாரதிகள்.

 அதன் பொருள்   '' களைக்கோட்டு மாமுனி  (ரிஷ்ய ஸ்ரிங்கர் ) வரவால் அங்க தேசத்தில்  மழை பொழிந்து வறுமை  நீங்கியவாறு''   இங்கும்  பெய்யும்.. ஒரு குறைவு மில்லை. போய்   விரை  விடுங்கள் '' என்று  குடியானவர்களை சந்தோஷத்தோடு அனுப்பினார்.

அந்த வருஷம்  அமோக விளைச்சல்.  ஊர்  மக்கள் கூடி  பொதுவில்  ''கோவிலடி செய்'' என்ற  பெயரில் ஒரு பெரிய ''செய்""  (நன்செய்,  புன்செய்""  மாதிரி நிலம்) அதன் பக்கத்தில் வேறு  சில  நிலங்களும் ஊர்ப் பொது ''பாரதி மானியம்'' என்று   அவருக்கு  ஒதுக்கினார்கள்.

இந்த  நிலம்  வெகுகாலம்  அவர் குடும்ப  அனுபவத்தில்  இருந்து வந்தது.  வருஷம் தோறும்  கறவைப்பசுவும்,விளைச்சலில்  பங்கும்  அவர்  குடும்பத்தை  வந்தடைந்தது.

SWAMIJI'S TIME




SWAMIJI'S TIME - J.K. SIVAN

THE CULTURE OF HINDUS

Every one can easily perceive that in the spiritual realm India conquers the world. No doubt it is true that just as the too active Western mind would profit by an admixture of Eastern introspection and the meditative habit, so the Eastern would benefit by a somewhat greater activity and energy. Still we must ask: What may be that force which causes this afflicted and suffering people, the Hindu, and the Jewish too (the two races from which have originated all the great religions of the world) to survive, when other nations perish? The cause can only be their spiritual force. The Hindus are still living though silent, the Jews are more numerous today than when they lived in Palestine. The philosophy of India percolates throughout the whole civilised world, modifying and permeating as it goes. So also in ancient times, her trade reached the shores of Africa before Europe was known, and opened communication with the rest of the world, thus disproving the belief that Indians never went outside of their own country.
It is remarkable also that the possession of India by a foreign power has always been a turning-point in the history of that power, bringing to it wealth, prosperity, dominion, and spiritual ideas. While the Western man tries to measure how much it is possible for him to possess and to enjoy, the Eastern seems to take the opposite course, and to measure how little of material possessions he can do with. In the Vedas we trace the endeavour of that ancient people to find God. In their search for Him they came upon different strata; beginning with ancestor worship, they passed on to the worship of Agni, the fire-god, of Indra, the god of thunder, and of Varuna, the God of gods. We find the growth of this idea of God, from many gods to one God, in all religions; its real meaning is that He is the chief of the tribal gods, who creates the world, rules it, and sees into every heart; the stages of growth lead up from a multiplicity of gods to monotheism.


This anthropomorphic conception, however, did not satisfy the Hindus, it was too human for them who were seeking the Divine. Therefore they finally gave up searching for God in the outer world of sense and matter, and turned their attention to the inner world. Is there an inner world? And what is it? It is Âtman. It is the Self, it is the only thing an individual can be sure of. If he knows himself, he can know the universe, and not otherwise. The same question was asked in the beginning of time, even in the Rig-Veda, in another form: "Who or what existed from the beginning?" That question was gradually solved by the Vedanta philosophy. The Atman existed. That is to say, what we call the Absolute, the Universal Soul, the Self, is the force by which from the beginning all things have been and are and will be manifested.

Wednesday, November 29, 2017

ANNADHANA SIVAN 3

எங்கள் வம்சம்: - J.K. SIVAN

அன்னதானத்துக்கு ஒரே ஒரு சிவன் தான் 3

காஞ்சிபுரம் சென்றவர்களுக்கு அங்கே ஓணகாந்தன்தளி என்று ஒரு ஆலயம் இருப்பது தெரியும். ஓணன், காந்தன் என்ற இரண்டு அஸுரர்கள் சிவனை வழிபட்ட ஸ்தலம். அந்த ஆலய பிக்ஷாடன மூர்த்தியை சுந்தரமூர்த்தி நாயனார் ஒரு முறை பார்த்தார். “லோக ஜனங்களுக்கெல்லாம் வயிறாரப் போட்டு வளக்கற எங்கம்மா புராதனமான இந்தக் காஞ்சிபுரத்திலே, ‘கச்சி மூதூர்’லேயே இருக்கா. அவ போட்டு சாப்பிட்டா வயிறு ரொம்பறது மட்டுமில்லே, உயிரும் ரொம்பி விடும்' என்று ஒரு பாடல் பாடினார்.

''தையலாள்உல குய்யவைத்த காரிரும்பொழிற் கச்சிமூதூர்க் காமகோட்டமுண் டாகநீர்போய் ஊரிடும்பிச்சை கொள்வதென்னே, ஒணகாந்தன் றளியுளீரே?''

இதை மஹா பெரியவா எப்படி சொல்லியிருக்கிறார் தெரியுமா:

‘ஞான வைராக்ய ஸித்த்யர்த்தம் பிக்ஷாம் தேஹி’ ன்னு ஆதி சங்கராச்சாரியார், (அன்னபூர்ணியிடம்) பிரார்த்திச்சுண்டபடியே, அவ கையால வாங்கி சாப்பிட்டா ‘உய்நெறி’ங்கற மோக்ஷ மார்க்கமே ஸித்திச்சுடும் இப்படி ஒருத்தி இந்த காஞ்சிபுரத்திலேயே, காமகோட்டத்துல இருகிறப்போ, ஏ பிச்சாண்டி ஸ்வாமி! நீர் ஏங்காணும் இப்பிடி ஊர் ஊரா, வீடு வீடா பிச்சை எடுத்துண்டு திரியறீர்?’ன்னு ஸுந்தரர் ஸ்வாமியை ரொம்ப ஸ்வாதீனமாகக் கேலி பண்றார்''

இப்படி அன்னபூரணி ஞாபகம் வரகாரணம் நாம் இப்போது அன்னதான சிவனை பற்றி நினைப்பதால்.
''எத்தனை அண்டா வெச்சாலும், எத்தனை நீளம் கோட்டையடுப்பு வெட்டினாலும் சாதம் வடிச்சு மாளாதுன்னு அவர் என்ன பண்ணுவாராம் தெரியுமா? பத்து மூட்டை, இருபது மூட்டை வடிச்சு அதை அப்படியே நீள நீளப் பாய்லே பரத்திக்கட்டி, கொதிக்கக் கொதிக்க இருக்கிற அந்த அன்னப் பாவாடை மேலேயே மெல்லிசா ஒரு துணியைப் போட்டு மூடி, கிடு கிடுன்னு அது மேலேயும் ஒரு பத்து இருபது மூட்டை ஈரப்பச்சரிசியை, ஆமாம் பச்சையா இருக்கிற அரிசியாவேதான் பரத்திக் கொட்டிட்டு,அதுக்கு மேலே கெட்டிக் கோணியாப் போட்டு, நன்னா அடிப்பாய்க்கு அடி வரையில் அதை ஓரளவு இறுக்கமாச் சொருகி மூடிப்பிடுவாராம். கால் மணியோ அரைமணியோ கழிச்சுக் கோணியை எடுத்தா அத்தனை அரிசியும் புஷ்பமா சாதமாயிருக்குமாம். அதாவது சாதம் வடிக்கிற கார்யத்தில் பாதி மிச்சம்பிடிக்க இப்படி யுக்தி பண்ணிண்டிருந்திருக்கார்.''

“இத்தனை ஆயிரம், பதினாயிரம் பேருக்கு நன்னா, கெட்டியா நெறைய மோர் விடனும்னா அத்தனை பாலுக்கு எங்கே போகிறது?

இந்த மாதிரி பெரிய உத்ஸவ சமாராதனைகளில் சிவன் அதுக்கும் ஒரு யுக்தி கையாண்டிண்டிருந்தார். ரிஃப்ரிஜிரேடர், அது இதெல்லாம் இல்லாத அந்த நாளில் அவர் ஒரு புது மாதிரி ரிஃப்ரிஜிரேடர் கண்டுபிடிச்சிருந்தார்!

ஸமாராதனைக்குப் பல வாரம், மாஸம் முந்தியே தயிர் சேகரம் பண்ண ஆரம்பிச்சிடுவார். சேர சேரப் பெரிய மரப் பீப்பாய்கள்ல அந்தத் தயிரை விட்டு, ஒவ்வொண்ணும் ரொம்பினதும் வாயை மெழுகால அடைச்சு, அப்படியே, ஆழமான கொளங்களுக்கு அடியில் தள்ளிப்பிடுவார். அப்பறம் எப்ப தேவைப்படறதோ அப்ப தொறந்தா மொத நாள் ராத்ரிதான் தோச்ச மாதிரி தயிர் சுத்தமா இருக்கும். கொளத்தோட குளிர்ச்சி மாத்திரந்தான் காரணம்னு சொல்லறதிக்கில்லே, அவரோட மனஸு விசேஷமும் சேந்துதான் அப்படி இருந்திருக்கணும்.”

1933ல் கும்பகோணம் ஸ்ரீமடத்தின் ஜீரணோத்தாரணத் திருப்பணியும் பூர்த்தி அடைந்திருந்தது. முழுக்கவும் கருங்கற் திருப்பணியாகவே அதைச் செய்து முடித்திருந்ததும் அன்னதான சிவனேதான். ஆயினும்கூட, அவருடைய திருப்திக்காக ஸ்ரீ மஹாபெரியவாள் வீதியிலிருந்தவாறே மடத்தின் வெளிப்புறத்தை மட்டும் பார்வையிட்டாரேயன்றி உள்ளே பிரவேசிக்கவில்லை.

அன்னதான சிவன் லக்ஷக்கணக்கான யாத்ரிக ஜனங்களுக்கு அன்னதானம் அளித்தது பல இடங்களில் பல விழா, விசேஷ தினங்களில். - சித்திரை மாதம் திருச்செங்காட்டாங்குடி அமுது படையல் திருவிழா. வைகாசியில் தேப்பெருமாள் நல்லூர் வசந்தோத்ஸவம், பூந்தோட்டம் திருமாளகரம் திருவிழா. ஆனி மாதம் காரைக்காலில் மாம்பழத்திருவிழா. ஆடி மாதம் சங்கமுகம், ஆடி அமாவாசை பூம்புகாரில். ஐப்பசியில் மாயூரம் (மயிலாடுதுறை) துலாஸ்நானம், கார்த்திகையில் திருநாகேஸ்வரம் கார்த்திகை சோமவாரத்திருவிழா,மார்கழியில் நாச்சியார் கோயில் தெப்பம், தை மாதம் எண்கண் புஷ்யம் திருவிழா, மாசியில்கும்பகோணம் மகம், திருவைகாவூர் சிவராத்திரி பங்குனியில் எட்டுக்குடியில் உத்திரம். இன்னும் எத்தனை எத்தனையோ...

''எனக்கு அன்னதானத்துக்கு காசு கொடு '' என்று யாரிடமும் சிவன் காசு பணம் கேட்டதில்லை. ''அன்னதானத்துக்கு இந்த இடத்துக்கு இந்த பொருள்களை அனுப்பி வைச்சு புண்யத்தை மூட்டை கட்டிக்கோ''-- அவ்வளவு தான். அவரவர் தகுதி வசதி தெரிந்து எது முடிகிறதோ அதை பெற்றுக்கொள்வார்.

ஒருமுறை இரண்டு மூட்டை அரிசி அனுப்பி வைத்த ஒருவரிடம் '' உன் குடும்பம் பெரியது ஒருமூட்டை போதும்'' என்கிறார்.

ஒருமுறை ஸமாராதனைக்கு ஊறுகாய்க்கு நெல்லிக்காய் பத்து வண்டியில் வந்ததாம். '' இரண்டு நாளில் தீர்ந்துவிடுமே'' என்று கொஞ்சம் கவலைப்பட்ட சமயம் எங்கிருந்தோ மேலும் பத்துவண்டி நெல்லிக்காய் வந்ததாம்.

விறகு நூறு வண்டி, உணவு பரிமாறப்பட்ட இடத்தினை உடனடியாக சுத்தம் செய்வது சிவனின் தூய்மையான குணத்துக்கு அடையாளம். சுத்தம் செய்ய துடைப்பம் மட்டும் இரண்டு மாட்டுவண்டியில் வந்ததாம்.
திருச்சி திருவானைக்கா கோயில் தாடங்க பிரதிஷ்டையின் போது ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டதாம்.

சிவனின் தாராள மனசு, சுத்தம், பக்தி, சுயநலம் கருதா குணம், பரோபகாரம் சேவை, இவற்றால் பல நூறு செல்வந்தர்கள் அவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தது நம்மை அதிசயிக்க வைக்கிறது. அது சிவன் ஸமாராதனை.

பரிமாற பாத்திரங்களை அந்தந்த இடங்களில் வாங்கி பின் பணி முடிந்தவுடன் ஏலம் விட்டு அதன் மூலம் சிப்பந்திகளுக்கு சம்பளம் கொடுத்து, உணவு மீதம் இல்லாமல் பார்த்துக்கொள்வதுடன் யாருக்கும் இல்லை என சொல்லாது உணவளித்து, தயிர் ,நெய் மீதமானால் அவற்றினை பீப்பாய்களில் நிரப்பி... கெடாமல் இருக்க குளத்துக்குள் குளிர்ந்த நீரில் மூழ்க வைத்து ... பாதுகாத்து பின் பயன்படுத்திக்கொள்வது அவரின் சிக்கன நடவடிக்கை.

உணவு தயாராகும் போதே அதன் வாசனையிலிருந்தே சொல்லிவிடுவார். “டேய்! சாம்பாருக்கு இரண்டு முறம் பச்சை கொத்தமல்லி சேர்க்கணும், ஒரு முறம் உப்பு போடு. குறைவு போல இருக்கு '' .

ஸமாராதனையில் உண்டவர்கள் எழுந்தவுடன் அவர்கள் உண்ட எச்சில் இலையின் மீது விழுந்து புரளுவது சிவனின் வழக்கம். கரூர் அருகே உள்ள நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை (நினைவு) தினத்தில் பலதரப்பட்ட மக்கள் உண்ட இலைகளின் மீது பிரார்த்தனை செய்துகொண்டவர்கள் உருள்வது இன்றும் நடைபெறுகிறது.

இது சிவனின் மன அடக்கத்துக்கு உதாரணம். நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. எல்லோருக்கும் உணவு அளித்த சிவன் தான் பசியோடு சாப்பிட உறவினர் நண்பர் யார் வீட்டுக்காவது, பிராமணர் அல்லாத பக்தர்கள் வீட்டிலும், போய் ஒரு கவளம் மோர்சாதம் சாப்பிடுவார்.

நடக்கமுடிதா தள்ளாத வயதில் மாட்டு வண்டியில் பயணம் செய்யும்போது வண்டிக்காரனிடம் ''மாட்டை அடிக்காதே, விரட்டாதே, தார் குச்சி போடாதே. மாட்டை துன்புறுத்தாதே'' என்பார். முடிந்தபோது மாட்டுவண்டியின் பினால் நடந்து போனார்.

''உங்க மனைவிக்கு உடம்பு சரியில்லை உடனே வாங்கோ'' என்று செய்தி வந்தபோது ''ஸமாராதனை முடியட்டும். வரேன்.போகிற உயிரை பிடிக்கவாடா முடியும்? இத்தனை பேருக்கும் சாப்பாடு போடவேண்டாமா.''

ஸமாராதனை முடிந்து சிவன் வீடு சென்றார். அவருடைய தன்னலமற்ற சேவைக்கு, தியாகத்துக்கு உற்ற துணையாய் இருந்த தர்ம பத்னி சிவகாமி, தீர்க்க சுமங்கலியாய் கைலாச பதவி அடைந்திருந்தார். சிவனுக்கு சிவகாமி அந்த பரமசிவன் அளித்த பரிசு.!

அன்னதான சிவனுக்கு நன்றாக ஜோதிடம் தெரியும். சொன்னபடியே நடக்கும். 87 வருஷம் இடுப்பில் ஒரு கந்தல் கரை படிந்த வேஷ்டி, மேலே ஒரு சவுக்கம் வாழ்ந்தார். வைகள், மனிதர்கள், இடுப்பில் ஒரு கந்தல், தோளில் ஒரு சவுக்கம், கையில் ஊன்றி நடக்க ஒரு தடி, பல லக்ஷம் பேருக்கு அன்னதானம் செய்தவரின் சொத்து இது தான். !

ஆஹா! தன்னலம் சிறிதும் இல்லாமல் அன்னதானத்துக்கு கூட யாரிடம் பல் இளித்து கேட்காமல் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் கருணையோடு பக்தியோடு சேர்ந்த கட்டளையில் ''நீ இதை இதை அனுப்பி வை” என்று அவர் சொன்னதை எல்லாம் ''இது எங்கள் பாக்கியம்'' என தனவந்தர்கள் செல்வந்தர்கள் பரோபகாரிகள் பொருளாக, பணமாக அளித்தார்கள். சிவனைப் போல் மற்றவர்கள் இதை செய்ய இயலாது.


தேப்பெருமாள் நல்லூரில் சிவனை அடையாளம் காட்ட சிலையோ, மண்டபமோ இல்லை. வேண்டாம். மனதில் நிறைந்து நிற்கிறார் அது போதும். தேப்பெருமாள் நல்லூர் சிவன் கோயில் சன்னதியில் தட்சிணாமூர்த்தியை சேவிக்கும்போது அங்கே சிவன் தெரிவார். நம்மை ஆசீர்வதிப்பார். பக்தர்கள் மனமே அன்னதான சிவனுக்கு மணி மண்டபம்.

SWAMIJI'S TIME

SWAMIJI'S TIME - J.K. SIVAN

''ARISE AWAKE AND STOP NOT TILL THE GOAL IS REACHED.''

Scriptures have to be studied . For the attainment of Jnana, study of scriptures is essential. I shall soon open classes in the Math for them. The Vedas, Upanishads, the Gita, and Bhâgavata should be studied in the classes, and I shall teach the Pânini's Ashtâdhyâyai.

Disciple: Have you studied the Ashtadhayayi of Panini?
Swamiji: When I was in Jaipur, I met a great grammarian and felt a desire to study Sanskrit grammar with him. Although he was a great scholar in that branch, he had not much aptitude for teaching. He explained to me the commentary on the first aphorism for three days continuously, still I could not grasp a bit of it. On the fourth day the teacher got annoyed and said,

"Swamiji, I could not make you understand the meaning of the first aphorism even in three days; I fear, you will not be much benefited by my teaching."

Hearing these words, a great self-reproach came over me. Putting food and sleep aside, I set myself to study the commentary on the first aphorism independently. Within three hours the sense of the commentary stood explained before me as clearly as anything; then going to my teacher I gave him the sense of the whole commentary. My teacher, hearing me, said,

"How could you gather the sense so excellently within three hours, which I failed to explain to you in three days?" After that, every day I began to read chapter after chapter, with the greatest ease. Through concentration of mind everything can be accomplished — even mountains can be crushed to atoms.

Disciple: Sir, everything is wonderful about you.



Swamiji: There is nothing wonderful in this universe. Ignorance constitutes the only darkness, which confers all things and makes them look mysterious. When everything is lighted by Knowledge, the sense of mystery vanishes from the face of things. Even such an inscrutable thing as Maya, which brings the most impossible things to pass, disappears. Know Him, think of Him, by knowing whom everything else is known. And when that Atman is realised, the purport of all scriptures will be perceived as clearly as a fruit on the palm of one's hand. The Rishis of old attained realisation, and must we fail? We are also men. What has happened once in the life of one individual must, through proper endeavour, be realised in the life of others. History repeats itself. This Atman is the same in all, there is only a difference of manifestation in different individuals. Try to manifest this Atman, and you will see your intellect penetrating into all subjects. The intellect of one who has not realised the Atman is one-sided, whereas the genius of the knower of Atman is all-embracing. With the manifestation of the Atman you will find that science, philosophy, and everything will be easily mastered. Proclaim the glory of the Atman with the roar of a lion, and impart fearlessness unto all beings by saying, "Arise, awake, and stop not till the goal is reached."

Tuesday, November 28, 2017

NALOPAKYANAM

நளோபாக்யானம் - J.K. SIVAN நிடத நாட்டு ராஜா நளன். சகல கலா வல்லவன். தேவர்களும் பொறாமை கொள்ளும் குணமும் அழகும் கல்வியும் நிறைந்தவன். தமயந்தியை மணக்கிறான். கலி புருஷன் பிடியில் சிக்கியவன் சகலமும் இழந்தவன், மனைவியை விட்டு புரிகிறான். கார்கோடன் எனும் விஷ நாகம் தீண்டி உருமாறுகிறான். அதுவே அவன் மறைந்து வாழ உதவுகிறது. ருது பர்ணன் எனும் அரசனுக்கு தேரோட்டுகிறான். மீண்டும் தமயந்தியை சந்திக்கும் தருணம் கலி நீங்கி இழந்தைஎல்லாம், மனைவியும் சேர்த்து தான், திரும்ப பெற்று மீண்டும் நிடத நாட்டு அரசனாகிறான். தருமனைப் போலவே பகடை யாட்டத்தில் முதலில் தோற்றவன் ருதுபர்ணனிடம் அந்த வித்தையை நன்றாக கற்றதால் பகடை ஆட்டத்தில் நிபுணனாகி தான் இழந்தல் நாட்டை மீண்டும் வெல்கிறான். தமயந்தி தனது தந்தையாகிய விதர்ப்ப நாட்டரசன் பீம ராஜாவின் அரண்மனையில் இருந்தாலும் ஊர் ஊராக ஆட்களை விட்டு ஒரு வெண்பா கவிதையில் ஒரு கேள்வி யை கேட்டு எங்கும் அதை பரப்ப சொல்கிறாள். எங்காவது நளன் இருந்தால் நிச்சயம் அதற்கு பதில் சொல்வான். அவன் இருப்பதை கண்டு பிடிக்கலாம் என்று எண்ணம் அவளுக்கு. புகழேந்தியின் தமிழ் நெஞ்சை அள்ளுகிறது. நளோபாக்யானம் மஹாபாரதத்தில் வருகிறதுஇதை நளவெண்பா என்று எளிய வெண்பா பாடல்களில் எழுதியிருக்கிறார். சிலவற்றை ரசிப்போம். ''இருங்கானில் நீத்த இகல்வேந்தன் தன்னைநீ நாடுகெனத் தண்கோதை - மின்னுப் புரைகதிர்வேல் வேந்தன் புரோகிதனுக் கிந்த உரைபகர்வ தானாள் உணர்ந்து. '' தனது தந்தை விதர்ப்ப நாட்டு அரசன் பீமராஜன் அரண்மனையில் கெட்டிக்கார பிராமண புரோஹிதன் சுவேதன் என்பவனை அயோத்தி நாட்டுக்கு ஒரு கவிதையுடன் அனுப்புகிறாள் குளிர்ச்சி பொருந்திய கூந்தலையுடைய தமயந்தி. ''என்னை நள்ளிரவில் ஒரு பெரிய காட்டில் விட்டுப்பிரிந்த போர்மன்னனாகிய என் கணவன் நள மகாராஜாவை அங்கே சென்று தேடி இங்கே அழைத்து வா '' என்கிறாள். ''காரிருளிற் பாழ்மண்ட பத்தேதன் காதலியைச் சோர்துயிலில் நீத்தல் துணிவன்றோ - தேர்வேந்தற் கென்றறைந்தால் நேர்நின் றெதிர்மாற்றம் தந்தாரைச் சென்றறிந்து வாவென்றாள் தேர்ந்து. 2 ''நீ போய் காசி ராஜன் அரண்மனையில் இந்த கேள்வியை கேள்....''கரியநிறமுள்ள இருட்டில் (நள்ளிராப் பொழுதில்) பாழடைந்த ஓர் மண்டபத்தில் தூங்கும் அன்பு மனைவியை கை விட்டுச் செல்லுதல் தேர் படைகள் கொண்ட ஒரு ராஜா செய்யும் சரியான செயலா?'' என்ற இந்த பாடலை கேள்வியாக அறிவிக்கவேண்டும். என்கிறாள். இதற்கு தகுந்த மறுமொழி உரைக்கின்றவர் எவராக இருப்பினும் அவரை நீ போய் அறிந்து கையோடு அழைத்துக்கொண்டு வா''. புரோகிதன் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னமாதிரியே செய்கிறான். மின்னும் ஒளி கொண்ட மேகங்கள் தவழ்கின்ற பெரிய மலைகளிலும்,கடற்கரைப் பகுதிகளிலும், கடல்சூழ்ந்த பல்வகை நாட்டு புறங்களிலும், காடுகளிலும், பார்த்துக்கொண்டே சென்று, நிலைபெற்ற மதம் கொண்ட மயக்கத்தையுடைய ஆண் யானைகளையுடைய நள மன்னனைத் தேடி,அயோத்தி நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தான். 'மின்னாடு மால்வரையும் வேலையும் வேலைசூழ் நன்னாடும் கானகமும் நாடினான் - மன்னு கடந்தாழ் களியானைக் காவலனைத் தேடி அடைந்தான் அயோத்தி நகர்''. அங்கே அனைவரும் கேட்க தமயந்தி கேட்ட கேள்வியை பாடலாக கேட்கிறான் அதாவது ''அடர்ந்த காட்டில் நள்ளிரவில் தன் மனைவியைத்தன்னந்தனியாக விட்டுவிட்டு பிரிந்து சென்ற நிலை அரசனுக்குப் பொருத்தமாமோ? அங்கிருந்த உருமாறிய நளன் அர்த்தம் புரிந்து கொள்கிறான். புரோகிதன் எதிரே வருகிறான். ‘மனைவியைக் காட்டில் விட்டுச்செல்லல் அரசர்கட்குத் தகுமோ?’ எனல் கானகத்துக் காதலியைக் காரிருளில் கைவிட்டுப் போனதூஉம் வேந்தற்குப் போதுமோ - தானென்று சாற்றினான் அந்தவுரை தார்வேந்தன் தன்செவியில் ஏற்றினான் வந்தான் எதிர். உருமாறிய நளன் வாகுகன் என்ற பெயரில் அங்கே சேவகம் செய்கிறான். புரோகிதனைப் பார்த்து வெண்பா வில் பதில் சொல்கிறான் . ''குளிர்ச்சி பொருந்திய முத்துக்களால்கோக்கப்பட்ட மாலைகளைக்கொண்ட வெண்கொற்றக் குடையையுடைய வீம ராஜனின் பெண் தமயந்தியை, கொடிய காட்டிடத்தில் தனியே நள்ளிரவில் விட்டுச் சென்றான் அந்த ராஜா என்பதை பற்றி சந்தேகம் வேண்டாம். ஒளிபொருந்திய வளை அணிந்த தமயந்தியை தூங்கும் போது தனியே விட்டு பிரிந்ததன் காரணம் முன்செய்த கர்ம வினையின் பயனால் தான். வேறு வழியில்லாததால்'' என்று நீ போய் சொல்'' என்கிறான். ''ஒண்தொடி தன்னை உறக்கத்தே நீத்ததூஉம் பண்டை விதியின் பயனேகாண் - தண்தரளப் பூத்தாம வெண்குடையான் பொன்மகளை வெவ்வனத்தே நீத்தானென் றையுறேல் நீ'' சுவேதன் தமயந்தியிடம் திரும்பி வருகிறான். '' எனது கேள்விக்கு பதில் அயோத்தி ராஜ்யத்தில் ஒருவன் பதிலளித்தான''. என்கிறான். ''நீ எங்கே தங்கியிருந்தாய்? நிடத நாட்டு மன்னன் நளனை எங்கெல்லாம் தேடினாய், எங்கே உன் கண்ணில் பட்டார் அவர்? உடனே சொல்'' என்கிறாள் ஆவலுடன்.. ''எங்கண் உறைந்தனைகொல் எத்திசைபோய் நாடினைகொல் கங்கைவள நாட்டார்தம் காவலனை - அங்குத் தலைப்பட்ட லாறுண்டோ சாற்றென்றாள் கண்ணீர் அலைப்பட்ட கொங்கையாள் ஆங்கு.'' 6 புரோகித பிராமணன் சுவேதன் ''மலர்மணம்கமழுகின்ற கூந்தலையுடைய தமயந்தி!, நான் அயோத்தி மாநகரில் நல்ல உயர் குலத்தோனாக தோன்றிய அயோத்தி ராஜ ருதுபன்னனின் தேரோட்டி ஒருவனை பார்த்தேன். வாகுகன் என்று பெயர். அவன் பேச்சு நள ராஜா மாதிரியே இருந்தது. ஆனால் அவன் உருவம் கருத்து அழகற்று இருந்தது. நளன் அழகிய உருவம் கொண்டவனாச்சே'' என்கிறான் ''வாக்கினான் மன்னவனை ஒப்பான் மறித்தொருகால் ஆக்கையே நோக்கின் அவனல்லன் - பூக்கமழும் கூந்தலாய் மற்றக் குலப்பாகன் என்றுரைத்தான் ஏந்துநூல் மார்பன் எடுத்து''. தமயந்திக்கு வாகுகன் என்பவன் தனது கணவன் நளனாக இருக்கிறன் என்று புரிந்து விட்டது. உருவம் வேறாக இருக்கிறதே? எதனால்? ஒரு எண்ணம் மனதில் உதயமாகிறது. . வாகுகனை வரவழைக்க திட்டம் தீட்டிவிட்டாள் ''சுவேதா, நீ மீண்டும் அயோத்தி ராஜ்ஜியம் செல். அதன் அரசன் ருதுபன்னனிடம் வீமராஜாவின் அழகுள்ள மகள் தமயந்தி கணவன் நளன் விட்டு விட்டு சென்றதால் மீண்டும் ஒரு சுயம்பரத்திருமணத்தை நிகழ்த்தி வேறு ஒரு அரசனை மணக்க போகிறாள். ரெண்டு நாள் தான் இருக்கிறது.அரசர்கள் எல்லாம் அழைக்கப்படுகிறார்கள் என்று செயதி சொல். அயோத்தியிலிருந்து இவ்வளவு தூரம் வருவதற்கு அவன் வாகுகனை தேரோட்ட சொல்வான். என் காதல் கணவன் நளன் உலகில் சிறந்த தேரோட்டி என்பதால் அவனை விரைவாக தேரோட்ட சொல்லி வாகுகன் இங்கே வருவான்.''. ''மீண்டோர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை பூண்டாளென் றந்தணநீ போயுரைத்தால் - நீண்ட கொடைவேந்தற் கித்தூரம் தேர்க்கோலங் கொள்வான் படைவேந்தன் என்றாள் பரிந்து'' சுவேதன் அயோத்தி சென்று ருது பண்ணனிடம் எங்கள் விதர்ப்ப நாட்டு ராஜா பெண் தமயந்திக்கு மறு கல்யாணம். சுயம்வரம்.நாளைக்கு நீங்களும் பங்கேற்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் அவளை மனைவியாக அடையலாம்'' என்கிறான். ''எங்கோன் மகளுக் கிரண்டாம் சுயம்பரமென் றங்கோர் முரசம் அறைவித்தான் - செங்கோலாய் அந்நாளும் நாளை அளவென்றான் அந்தணன் போய்த் தென்னாளும் தாரானைச் சேர்ந்து''. நாளை தமயந்தியின் ஸ்வயம்வரத்தில் நாம் மீண்டும் இதுபற்றி மேற்கொண்டு விஷயம் அறிவோமா?. ATTACHED IS RAJA RAVIVARMA PICTURE OF NALAN LEAVING HIS SLEEPING WIFE IN FOREST AT MIDNIGHT

NOSTALGIA

                  '' உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே..'' J K. SIVAN 


ஒரு சில பழைய தமிழ் சினிமா பாட்டுக்களை இன்னமும் மறக்க முடியவில்லை.
''கையிலே வாங்கினேன் பையிலே போடலே ஆனா காசு போன இடம் தெரியலே''

ஏறக்குறைய 50-60 வருஷங்களுக்கு முன்பு கூடவா இந்த எகனாமிக் ப்ராப்ளம் என்று நினைக்கும்போது ஒன்று புரிகிறது. விலைவாசி கொஞ்சமாக இருக்கிறதே என்று பார்க்காதே அதை வாங்க உன்னிடம் ஐவேஜ், வரும்படி, எவ்வளவு இருந்தது என்று பார். எதுவுமே  தாறு மாறாக ஏறலை  இரங்கலை.  வருமானம் கொஞ்சமாக இருந்தபோது விலைவாசியும் அதற்கேற்றமாதிரி கொஞ்சமாக இருந்தது.  


அப்போதெல்லாம்  எல்லாமே  ரொம்ப  சீப், விலை குறைச்சல் என்று வருமானத்தை, வாங்கும் சக்தியை பற்றி யோசிக்காமல் பேசுகிறோம்.   இப்போது  வருமானம் எங்கோ மேலே போய்விட்டது.  இட்டிலி வடையும் ஆகாசத்தில் பறக்கிறது. கைக்கு எட்டவில்லை.ஆகவே வாய்க்கு எப்படி எட்டும்?

பஸ், டாக்சி, ஆடோ, டூ வீலர், கார், எதுவுமே ஓட தார் ரோடே இல்லாத காலம், மின்சாரம் தெருவில் அங்கொரு இங்கொரு விளக்காக முணுக் முணுக் என்று கூட எரியவில்லை. கண்ணாடி கூண்டில் கெரொசின் எண்ணெய் விளக்கு வெளிச்சம் தான்.

அப்படியும் இவ்வாறு பணத்துக்கு முடையா என்றால் ஆமாம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஆறு ஏழு எட்டு டிக்கட் என்று இருந்ததாலும் ஒருவர் இருவர் வருமானத்தில் வண்டி ஓடியதாலும் பண முடை நிறைய குடும்பங்களில் வீட்டுக்கு வீடு வாசப்படியாக இருந்தது. எல்லோரும்  அதே கஷ்டத்தில் இருக்கும்படியாக வாழ்க்கை முறை அமைந்திருந்ததால் யாருமே அதை கஷ்டமாக நினைக்கவில்லை.  சமாளித்தார்கள்.

இது ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் பூதாகாரம் எடுத்தது.

நான் வேலைக்கு சென்றபோது வருஷத்துக்கு ரெண்டு ரூபாய் இன்க்ரிமெண்ட். Rs 45-2-80-5. என்று சம்பள ஸ்கேல். பஞ்சப்படி என்றே அல்லவன்ஸ் களுக்கு பெயர் பொருத்தமாகவே இருந்தது. அது ஒரு 20+25 ரூபாய் சேர்ந்து வரும். பச்சை யாக ஒரு அச்சு எழுத்து மங்கி படிக்க முடியாமல் உத்தியோக வரி நோட்டிஸ். அதை பார்க்கவே நாங்கள் வெறுத்தோம். 5 ரூபாய் அதன் மூலம் போய் விடும்.

திடீரென்று ஒருவர் கத்தையாக மடித்து இந்த நோட்டிஸ் களோடு கார்ப்பரேஷன் ஆபிசிலிருந்து  ஒண்ணாம்தேதி  சம்பள பட்டுவாடா அன்று வந்து  சம்பளம் பட்டுவாடா  பண்ணுபவர் அருகில் உட்கார்ந்து கொண்டு   சம்பளம் வாங்குபவர்களை  பேர் சொல்லி கூப்பிட்டு பணம் வாங்கிக்கொண்டு ரசீது  கொடுத்து வசூல் பண்ணுவார்.

சம்பள நாள் அன்று  அந்த காலகண்டன் '' ஜே.கே. சிவனா? ஏதோ ரெண்டு மூணு பாக்கி நோட்டிஸ் லே இந்த பேர் பார்த்தேனே'' என்று தேடி நோட்டிஸ் பாதி கிழித்து கொடுத்து கை மாறி 15-20 ரூபாய் என்னிடமிருந்து போய்விடும்.

பத்தரை மணி பார்த்தசாரதி திருவல்லிக்கேணி ஒரு கோவில் வேலை முடித்துவிட்டு நான் வேலைசெய்த M.E.S   (அப்புறம்  MSEB ,  TNEB   ஆகி  இப்போது  ஏதோ பிரைவேட் கம்பனி ஆகிவிட்டதாம்) .ஆபிஸ் வருவார். 10 மணி ஆபிசுக்கு பத்தரைக்கு நேரம் தவறாமல் நாள் தோறும் வந்து விடுவார். அட்டேண்டன்ஸ் ரிஜிஸ்டர்லே கையெழுத்து போடும்போது அலட்சியமாக சிரிப்பார். நிறைய பேர் என் காது கேட்க அவரை ''லேட்'' பார்த்தசாரதி என்று உயிரோடு இருக்கும்போதே அழைத்தார்கள். அவர் காலம் தவறி வந்ததால் இப்படி ஒரு பேர்.

என் வருமானம் வருமான வரி கட்டும் அளவுக்கு அப்போது இல்லை என்பதாலோ வருமான வரி அதிகம் பேரிடம் வாங்க அரசாங்கத்துக்கு (நல்ல அரசாங்கம்!) அவசியம் இல்லாததாலோ அதை பற்றி நாங்கள் ஆபிசில் பேசாமல் மற்ற அக்கப்போர் பேச்சுகள் தான் பேசிக்கொண்டே வேலை செய்வோம். எங்கும் காகித மலைகள். அவைகளுக்கு நடுவே அங்குமிங்குமாக சில ரெமிங்க்டன், அண்டர்வூட் டைபிஸ்டுகள்.

ஏனோ தெரியவில்லை நிறைய ராஜாக்கள் சுல்தான்கள் இருந்தாலும்  பழைய வஸ்துக்களுக்கு  என்று ஒரு தனி பெயர்.  

மேலே சத்தம் ஏராளமாக போட்டுக்கொண்டு எப்போது  வேணுமானாலும் கீழே விழுந்துவிடுவேன் என பயமுறுத்திய மின் விசிறிகளுக்கு ''ஹைதர்'' காலத்தவை என்று பேர்.  என் தலைமேல்  ஒரு  CROMPTON  விசிறி  மெதுவாக சுற்றிக்கொண்டு இருந்தாலும் ஊரைக் கூட்டும் அளவுக்கு சத்தம் போட்டு அது பழக்கமாகி விட்டது.

சம்பளம் வாங்கின மறுநாளே நரசிம்மன் ரெண்டு ரூபா கை மாத்தாக கேட்பார். சம்பளம் வாங்கி தரேன் என்று சொல்லப்பட்ட அந்த ரெண்டு ரூபாய், எட்டணா ஒரு ரூபாயாக சில்லரையாக பல நாட்களுக்கு பிறகு நாணயமாக வந்து விடும்.

பெரிய ஹால்.   12வது  பிளாக்   பிளாக்  BLOCK   என்று வெள்ளைக்காரன் வைத்த பெயர் கொண்ட  திருமலைநாயக்கர் மஹால் மாதிரி ஒரு  இடம்.  200 பேருக்கு மேல் அதில்  காகித மலைகளுக்கு இடையே தலைமட்டும் தெரிய  உட்கார்ந்து இருப்போம்.   இருந்தோம். ஆறு மணி ஆனால் பெருச்சாளி காலடியில் ஓடும். நிறைய பைல் (files) களை எங்கள் அதிகாரிகளோ பணியாளர்களோ தீர்வு காணாமல் கட்டி போட்டிருந்த கஷ்டமான விவகாரங்களை எலியாரும் பெருச்சாளியாரும் சம்பளம் வாங்காமலேயே முடித்து விட்டார்கள். அந்த file களில் பிரச்சனை தீராமல் சம்பந்தப்பட்டவர்கள் ஒருவேளை பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்க வேண்டிக்கொண்டதால் அவர் தனது வாகனங்களை அனுப்பி பிரச்சனையை முடித்திருக்கலாம்.

பணம் இருப்பவனிடம் குணம் இருப்பதில்லை. குண வந்தன் பணக்காரனாவதில்லை. இதை பல பேர் சொல்லி கேட்டிருக்கிறோம். ஏன் பணமும் குணமும் ஒத்துப்போவதில்லை?

பணம் கொடுத்துக்கொண்டே இருக்கும் வரை பெறுபவர்கள் புகழ்கிறார்கள். பணம் கொடுப்பவனிடம் குறைந்தால் அவனை ஏசுகிறார்கள். கருமி, கஞ்சன் என்ற பட்டம் அவனை எளிதில் சேர்கிறது. சரி பணத்தை கட்டுப்பாட்டோடு வைத்துக்கொண்டு ஜாக்ரதையாக ஒருவன் செலவழித்தாலும் அதே கஞ்சன் கருமி பட்டம் தானே வந்தடைகிறது. மறுநாள் பற்றிய கவலை இன்றி ஒருவன் தன்னிடமுள்ள பணத்தை வாரி இறைப்பானாகில் அந்த ஒருநாள் தர்மிஷ்டன் மறுநாள் காணாமல் போகிறான். அதனால் தான் கொடுப்பதே தெரியாமல் கொடுப்பது என்கிற வழக்கம். கேட்டுக் கொடுப்பதைவிட கேளாமல் தானே பார்த்து உணர்ந்து தருமம் செய்வது. வெளியே அதை காட்டிக்கொள்வது இல்லாமல் நடக்குமானால் அவன் செல்வந்தனாகவும் தர்மிஷ்டனாகவும் காலம் தள்ள முடியும். எண்ணற்ற செல்வங்கள் மேலே மேலே குமிந்து கொண்டிருப்பவனுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை.

சூரியனிடம் பெற்ற செல்வத்தை எல்லாம் கர்ணன் வாரி வழங்கினான். கொடுத்து கொடுத்து கரம் சிவந்தான். கொடுப்பதைத் தவிர வேறு ஒன்றும் அறியாத அளவுக்கு அவன் தானம் செய்பவன் ஆனான்.

கல்யாணங்கள் விசேஷங்களுக்கு போனால் பவன்ஸ் ஜர்னல் அலுவலகம் பாரதிய வித்யா பவன் வெளியீடுகள் ராஜாஜியின் ராமாயணம்,(சக்ரவர்த்தி திருமகன் கல்கியில் வாரா வாரம் ஓடிப்போய்  வியழைக்கிழமை நாலு அணா கொடுத்து வாங்கிவந்து படித்திருக்கிறோம். மகாபாரதம்  வியாசர் விருந்து என்ற பெயரில் வந்தது. ஒரு ரூபாய் ஒரு புத்தகம். (
நானும் ஒருநாள் மஹா பாரதம் எழுதுவேன் என்று கனவிலும் தெரியாது).   மு.வ. எழுதிய திருக்குறள்  கையடக்க புத்தகம் கூட ஒரு ரூபாய் தான்.   இதெல்லாம் வாங்கி  பரிசாக அளித்து இருக்கிறோம்.  இதே பரிசு எனக்கும் வீட்டில் நிறைய வந்திருக்கிறது.

 என். எஸ். கிருஷ்ணன் பாட்டில் வருமே ''முதல் தேதி.. முப்பதாம் தேதி'' என்று. அவர் சொன்ன உத்தி, அதாவது பெருமாள் உண்டியிடம் ''லோன்'' பெற்று செலவு செய்து சம்பளம் வந்தவுடன் வட்டியோடு உண்டியில் திரும்ப போட்டு பொருளாதார சிக்கலுக்கு விடை தேடிய குடும்பங்கள் பலஅக்காலத்தில் உண்டு.

எவ்வளவோ எண்ணங்கள்   எத்தனையோ நெஞ்சின் அலைகளாக நினவுகள் பிரவாகமாக  பெருக்கெடுக்கிறது. ஓடிவரும்போது வரட்டும். அணையா போட்டிருக்கிறேன்!

Monday, November 27, 2017

NEETHI SATHAKAM

ராஜா பர்த்ருஹரியின்  நீதி சதகம்:            
                                                                                           
                                              சுபாஷிதம்  - 9

यस्यास्ति वित्तं स नरः कुलीनः
स पण्डितः स श्रुतवान्गुणज्ञः ।
स एव वक्ता स च दर्शनीयः
सर्वे गुणाः काञ्चनम् आश्रयन्ति

yasyāsti vittaṃ sa naraḥ kulīnaḥ
sa paṇḍitaḥ sa śrutavānguṇaṅñaḥ |
sa eva vaktā sa ca darśanīyaḥ
sarve guṇāḥ kāñcanam āśrayanti || 1.41 ||

யஸ்யாஸ்தி வித்தம் ஸ னரஃ குலீனஃ
ஸ பண்டிதஃ ஸ ஶ்ருதவான்குணஜ்ஞஃ |
ஸ ஏவ வக்தா ஸ ச தர்ஶனீயஃ
ஸர்வே குணாஃ காஞ்சனம் ஆஶ்ரயன்தி || 1


குப்புசாமி  ஐந்தாவது  தாண்டாதவன்.   சுட்டுப்போட்டாலும் படிப்பு  ஏறாதவன். அதனால் என்ன?.அவன் தந்தை பாட்டனார்கள் மரத்தில் கள் இறக்கி விற்று காசு பண்ணினவர்கள். ஊரெல்லாம் பனந்தோப்பு. நிலம் நீச்சு. அநியாய வட்டிக்கு விட்டு பணம் குட்டி போட்டு மூட்டை மூட்டையாக இருக்கிறதே.  ராஜா மாதிரி ஜமீன்தார்.  அவனை சுற்றி யாசிக்கும்  பலர். நிறைய படித்த பண்டிதர்கள். கவிஞர்கள், புலவர்கள்.  அவர்கள் என்ன சொல்கிறார்கள் அவனைப் பற்றி ?  அடாடா  இவர்  ராஜ குடும்பம் ராமன் மாதிரி, கிருஷ்ணன் மாதிரி, கல்வியில் வியாசர், யஞவல்க்யர்.  குணம் பற்றியா?  கரும்பு கூட கசக்கும் அவ்வளவு இனிய குணம்.  தங்கமான மான  தாராள குணம். கடல் மடை திறந்தால்  போல  ஞானம் நிரம்பிய பேச்சு. அழகும் கம்பீரமும் இவன் தான் மன்மதனோ? என்று திகைக்க வைக்கும்.  ''   இதெல்லாம்  எதனால்..... குப்புசாமி  கொடுக்கும்  பரிசு, திரவியம், பணம்.... இதற்காக??  இப்பவும் பார்க்கிறோமே  நிறைய படித்த ஆசாமிகள் கூட  சில  அயோக்கியர்கள் பின்னால் ஆதாயத்துக்கு  சுற்றுவதை...  பணம் பத்தும் செய்யும் என்பார்கள்  இல்லை  அது பார்த்தும் பார்க்கமால் கூட  செய்யவேண்டியதை  செய்யும். 

 दानं भोगो नाशस्तिस्रो
गतयो भवन्ति वित्तस्य ।
यो न ददाति न भुङ्क्ते
तस्य तृतीया गतिर्भवति

dānaṃ bhogo nāśastisro
gatayo bhavanti vittasya |
yo na dadāti na bhuṅkte
tasya tṛtīyā gatirbhavatI

தானம் போகோ னாஶஸ்திஸ்ரோ
கதயோ பவன்தி வித்தஸ்ய |
யோ ன ததாதி ன புங்க்தே
தஸ்ய த்றுதீயா கதிர்பவதி

சரி,   நிறைய  செல்வம் இருக்கிறது. மூட்டை மூட்டையாக  கணக்கிலோ, அதில் வராமலோ  இருக்கிறது.  என்ன செய்வது  அதை?  மூன்றே மூன்று வழிகள் தாண்டா  குப்புசாமி.   ஒன்று   எல்லோருக்கும் கொடுத்து நீயும் தேவையானதை வைத்துக்கொள்.    ரெண்டாவது  நீயே  அதை ஏகபோகமாக  அனுபவி... ஒரு சல்லிக்காசு கூட எவனுக்கும் கொடுக்காதே......  கர்ணனுக்கு எதிரியாக,  மைடாஸாக (Midas,  the miser)  வாழ்ந்து  கொள்.  மூன்றாவது வழி  நீ  தேடிபோகவேண்டாம்.  அதுவே  தானாக நேரும்.   இப்போது நடப்பது போல்  எங்கோ எவனோ சொந்தம் கொண்டாடிவிடுவான்--தெரிந்தோ தெரியமாலோ, திருட்டு,  ஏமாற்றி, கொள்ளை, நெருப்பு,சுனாமி  போலவும் கூட இழப்பு நேரலாம். 


राजन्दुधुक्षसि यदि क्षितिधेनुम् एतां
तेनाद्य वत्सम् इव लोकम् अमुं पुषाण
तस्मिंश्च सम्यगनिशं परिपोष्यमाणे
नानाफलैः फलति कल्पलतेव भूमिः

rājandudhukṣasi yadi kṣitidhenum etāṃ
tenādya vatsam iva lokam amuṃ puṣāṇa
tasmiṃśca samyaganiśaṃ paripoṣyamāṇe
nānāphalaiḥ phalati kalpalateva bhūmiḥ || 1.46 ||


ராஜன்துதுக்ஷஸி யதி க்ஷிதிதேனும் ஏதாம்
தேனாத்ய வத்ஸம் இவ லோகம் அமும் புஷாண
தஸ்மிம்ஶ்ச ஸம்யகனிஶம் பரிபோஷ்யமாணே
னானாபலைஃ பலதி கல்பலதேவ பூமிஃ

ராஜாவே, ஏ அரசனே, இல்லை அரசன்   போல  நாட்டை ஆள்பவனே,  ராஜா  பர்த்ருஹரி சொல்வதை கவனமாக கேள். நீ  ஆளும் நாடு  ஒரு  பசு மாதிரி.  பசு பால் கொடுக்கவேண்டுமானால் முதலில் அதன் கன்றுக்குட்டியை நன்றாக பராமரிக்க வேண்டும். அதற்கு போஷாக்கு வேண்டும். அது தான்  ஜனங்கள்,  நாட்டின் குடிமக்கள், அவர்களுக்கு தேவையானதை, சௌகர்யமாக கொடு.  பசு நிறைய பால் சொரியும்.  உன் நாடு அதுபோல் சுபிக்ஷமாக இருக்கும்.  கற்பகவிருக்ஷமாக கேட்டதை எல்லாம்  நாடு, பூமி, வாரி வழங்கும்.

आज्ञा कीर्तिः पालनं ब्राह्मणानां
दानं भोगो मित्रसंरक्षणं च
येषाम् एते षड्गुणा न प्रवृत्ताः
को‌உर्थस्तेषां पार्थिवोपाश्रयेण ॥ 1.48 ॥

āṅñā kīrtiḥ pālanaṃ brāhmaṇānāṃ
dānaṃ bhogo mitrasaṃrakṣaṇaṃ ca
yeṣām ete ṣaḍguṇā na pravṛttāḥ
ko‌உrthasteṣāṃ pārthivopāśrayeṇa || 1.48 ||

ஆஜ்ஞா கீர்திஃ பாலனம் ப்ராஹ்மணானாம்
தானம் போகோ மித்ரஸம்ரக்ஷணம் ச
யேஷாம் ஏதே ஷட்குணா ன ப்ரவ்றுத்தாஃ
கோ‌உர்தஸ்தேஷாம் பார்திவோபாஶ்ரயேண

நாட்டை  ஆள்கிறேன் பேர்வழி என்று தனது சுகத்தை, தேவையை பூர்த்தி செய்த்துக்கொள்பவனால் என்ன பயன்?  அதிகாரம், புகழ், நல்லவர்கள், முதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என்று எல்லோருடைய நல்வாழ்வு, தானம் தர்மம்,  செல்வத்தை எல்லோருக்கும் உதவ செலவழித்தால், நண்பர்கள்,உற்றவர்கள் பாதுகாப்பு,  இதெல்லாம்  கருதாமல், கவனிக்காமல், ஒருவன் மக்களை ஆள , முயல்வதால், அரசனுக்காக அரசுக்காக பணிபுரிந்து என்ன பயன்?  -- இப்படி  ஞாயமாக கேட்பவர்  பர்த்ருஹரி.


ANNADHANA SIVAN 2

எங்கள் வம்சம்: 
   

                       அன்னதான சிவன்   - 2

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.  எங்கோ எவரோ ஒரு சிலர்  எப்போதோ  செய்த தவறுகள் இருப்பின், அதற்காக ஒட்டுமொத்தமாக  அந்த தவறு செய்தவர்களின் வர்கத்தையே வெறுப்பதும் அக்குலத்தையே  எதிரிகளாக பாவித்து, அவர்கள்  மீது வெறுப்பும் காழ்புணர்ச்சியும் காட்ட  சிலர் முனைகிறார்கள்.  

இது அவர்களது பலவீனத்தையே காட்டுகிறது. நேர்மையின்மை, அநியாயம்  அக்ரமத்துக்கு துணைபோவது  புலப்படுகிறது. 

பிராமணர்களை பொறுத்தவரை எத்தனையோ நல்லவர்கள் எத்தனையோ  நல்ல சேவைகள் புரிந்திருக்கிறார்களே. யாராயிருப்பினும் பாராட்டுவோம்.  குறுகிய மதியினர் தானே திருத்தட்டும். காலம் திருத்தும்.

பசிப்பிணி மருத்துவராக  ஸ்ரீ அன்னதான சிவன் அரை நூற்றாண்டுக்காலம்  தமிழகத்தில் பல லக்ஷம் உயிர்கள் போற்ற  உணவளித்திருக்கிறார். ஒருவேளை சோற்றுக்கே  நாம்  அன்னமிட்டவருக்கு கடமைப்பட்டிருக்கும்போது  இவ்வளவு காலம்....! அடேயப்பா.


        சின்னஞ் சிறுவயதில் செயலதுவோ பெரியதுவாம்
        செவியில் ஒலித்ததுமே சிலுசிலுத்துப் போகுதடா
        அன்னதான சிவம் அறமேற் கொண்டதுவோ
        அதுவல்லோ தேப்பெருமாள் நல்லூரின் அழியாப்புகழ்
        ஆவியை தந்தவர் அன்னதான சிவன்.

     1852 இல்  பிறந்த  சிவனுக்கு  பெயர்   ராமசாமி.  அப்பா அசுவத நாராயண சாஸ்திரியார்,  அம்மா: லக்ஷ்மி அம்மாள். கூடப் பிறந்தவர்கள்": அன்னம்மாள், சகோதரி.   சுப்ரமணிய சாஸ்திரி:  சகோதரர்: 
தேப்பெருமாள் நல்லூர் சிவன் கோவிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தியிடம்  குழந்தை பருவம் முதல் அசாத்திய பக்தி.   பள்ளிக்கூடம் போகாமல்   சிலேட்டில் பூக்களை  வைத்துக்கொண்டு தக்ஷிணாமூர்த்திக்கு ஸமர்பிப்பார்.

 உள்ளூர் காளியாட்டத்திருவிழாவின் போது தண்ணீர் பந்தல் வைக்கவேண்டும் என்று  ஆரம்பித்த  ஆசை, தயாள மனசு, பின்னாளில்  பெரிதாக வளர்ந்து  ராமசாமியை  அன்னதான சிவனாக்கியது.

 வேத அத்யயனம் நடந்தது.  வைதீகத்துக்கு செல்ல மனம் இல்லை.  திருவிடைமருதூர் செட்டியார் சத்திரத்தில் தங்கும் யாத்ரீகர்களுக்கு  போஜனம் தயாரிக்கும் தலைமை சமையல்காரர் வேலை.. மாத சம்பளம் மூன்று ரூபாய்+சாப்பாடு. திண்ணை படுக்கை.

 அன்னம்  தயாரித்தவுடன் ஒரு சின்ன கிண்ணத்தில் கொஞ்சம் சாதம் தனியாக எடுத்து வைத்து விட்டு, அனைவரும் போஜனம் செய்தபின், மீண்டும் ஸ்நானம் பண்ணிவிட்டு, திருவிடைமருதூரிலிருந்து தேப்பெருமாள் நல்லுர்  சிவன் கோவிலுக்கு நடந்து வந்து  தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு நிவேதனம் செய்வார் அப்புறம்  தனது  வீட்டில் உணவு உண்பார்.

  சிலசமயம் நேரம் ஆகி சாதம் கெட்டு போய் விடக்கூடாதே  என்று  அதன் மேல் ஜலம் சேர்த்து எடுத்துக்கொண்டு வந்து தேப்பெருமாநல்லூர்  தக்ஷிணாமூர்த்திக்கு   நீர் கலந்த சாதம் நைவேத்தியம்.  இப்படி  ''பழையதை''  நைவேத்தியம் பண்ணுவதாக  சிலர்  கேலி செயது   ''பழையசோத்து சிவன்” என பெயரிட்டதும் உண்டு.  தக்ஷிணாமூர்த்தி ஒருவேளை ராமர்  சபரி கொடுத்த  கடித்த  எச்சில் பழத்தை விரும்பி சாப்பிட்டது போல் பக்தியோடு சிவன் அளித்த  பழையதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாரோ?

 சிவனுக்கு  25வயசில் சிவகாமி மனைவியானாள். சிவனுக்கேற்ற சிவகாமியாக அவருக்கு உதவினாள் . 

வருஷாவருஷம்  தேப்பெருமாநல்லூர்  பெருமாளுக்கு  சித்திரை வஸந்தோத்ஸவம் விமரிசையாக நடக்கும்.  எங்கிருந்தோ எல்லாம்  வித்துவான்கள் நாட்டிய நாடக விற்பன்னர்கள் வருவார்கள். ஸம்ப்ரதாய நாட்டிய நாடகம் எல்லாம் கோலாகலமாக  நடக்கும்.   விழாவிற்கு  பல ஊர் மக்கள் ஜேஜே என்று கும்பல் சேர்வார்கள். ''ஆஹா  இந்த  சந்தர்ப்பத்தை விடலாமோ?  இவர்களுக்கெல்லாம்  அன்னதானம் செய்யலாமே ''  என்று ராமசாமிக்கு தோன்றி  அப்போது தான் தனது  பூர்வீக சொத்தினை விற்று ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்ரீ ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத வரதராஜர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர்  உத்ஸவத்தில் அவருடைய  முதல் அன்னதானம்  துவங்கியது. அப்புறம்  50வருஷங்கள்  உலையில் சாதம் பொங்கிக்கொண்டே இருந்தது. தேப்பெருமாள்நல்லூரில் மட்டும் அல்ல. தங்கு தடையின்றி   தமிழ் நாட்டின் பல ஊர்களில் கோயில் திருவிழாக்களில். பாத்திரங்களோடு  முதல் நாள் இரவு செல்வார் .சிப்பந்திகள் வருவார்கள். முதல் நாள் மாலை வரை அன்னதானத்திற்கான எந்த அறிகுறியும் தெரியாது.   மறுநாள் காலை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் எப்படி நடந்தது??

சிவன் உபயோகித்த சமையல் பாத்திரங்கள் பல கும்பகோணம் ஸ்ரீ காஞ்சிமடத்தில் இருந்தது.

தொடரும்  

Sunday, November 26, 2017

OUR FAMILY HISTORY

எங்கள் வம்சம்:  J.K. SIVAN 

                                   
இப்படியும்  நடந்தது.


மீண்டும் நாம் கஷ்டமே படாமல்  300-350 வருஷங்கள்   பின்னோக்கி அப்போதைய  சோலையும்  வாவியுமான  உடையார் பாளையம்  போகப் போகிறோம்.  அப்போதைய காலம் போல்  மாட்டு வண்டியில் அல்ல.  அதற்கு பல நாள்  ஆகும்.  ஆகவே,  இதோ இந்த கணமே  மனத்தால் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கிறோம்.  வந்து சேர்ந்தாயிற்று.

ராமஸ்வாமி  பாரதியையும்  அவர்  தம்பி  வைத்யநாத  பாரதியையும்  பார்க்கிறோமே.  இருவருமே உடையார்பாளையம்  யுவரங்க  பூபதி ஜமிந்தார் ஆதரவில்  வாழ்ந்தவர்கள். சகோதரர்கள் குடும்பம் ஒற்றுமையான ஒன்று.

இந்த  சகோதரர்களுக்கு மணம் முடிக்க வரன்  தேடியதில்  திருக்குன்னம்  ராமு அய்யர் பெண் ஞானம்மா   ராமசாமி பாரதியையும்,  திருத்தி மலை சுப்பையர் பெண்  ஜானகி  வைத்யநாத பாரதியையும்  மணந்தார்கள்.
ஜானகிக்கு  ஸ்ரீதனமாக ஒரு வீடும்  நிலமும்  கிடைத்தது. தஞ்சை  ஜில்லாவில்     ஒரு  சாத்தனூர்  கிராமம் இருக்கிறது.  அங்கே  போய்  வைத்யநாத பாரதியும்  அண்ணா ராமஸ்வாமி பாரதியும்  குடியேறினார்கள்.

காவிரிக்கரையில் வடக்கே  இந்த  கிராமம்   பூலோக  கைலாசம் என  பெருமை வாய்ந்த  திருவையாறுக்கும் சப்தஸ்தான   க்ஷேத்ரமான திருநெய்த்தானத்துக்கும் இடையே  உள்ளது.   திருநெய்த்தானத்தை தில்லைஸ்தானம் என்றும்  அழைப்பதுண்டு.

இந்த  க்ஷேத்ரத்திற்கு  மேற்கே   ஒரு   நாலுமைல்  நடந்தால் (அந்த காலத்தில்  நடக்கும்  தூரத்தை  வைத்து தான் அடையாளம்  சொல்ல முடியும்)  மரூர் என்று ஒரு  சிறிய  கிராமம்  வரும்.  அதற்கு பக்கத்தில்  தான்  சாத்தனூர். பச்சைப் பசேலென்று   விளைச்சல் நிலங்கள் உள்ள  பூமி.  காவேரிப்  பாசனம்.  கேட்க வேண்டுமா விளைச்சலுக்கு?  அமோகம். விவசாய பூமி என்பதால் அங்கே  வேளாளர்கள் அதிகம். அவர்களில் சிலர்   பட்டப்பெயர்கள் கொண்டிருந்தார்கள்  அந்த  காலத்தில்.    இன்னும் சில குடும்பங்களில் அந்த பெயர்கள் பெருமையாக  வழங்கி வருவது  சந்தோஷம்.

சோழகர்,  மழவராயர்,  தஞ்சிராயர்,  வாண்டையார்,  ராஜாளியார்,  தென்கொண்டார்  என்றெல்லாம் பட்டங்கள் இருந்து  இருந்தது.  கல்கியின் அமர காவியம் பொன்னியின் செல்வனில்  இந்த மாதிரியான பெயர்கள் வருவதை சிலர் ஞாபகம் வைத்திருக்கலாம்.

காலாட்டி  சோழகர் என்று  ஒருவர் அப்போது  பெரிய  மிராசுதார் அந்த  ஊரில்.  ' நாட்டாமை'  என்று  தான் அவரை  எல்லோரும் அழைப்பார்கள் தெய்வ பக்தி  உள்ளவர்  சோழகர்.  அவருக்கு  பிராமணர்களையே தெய்வமாக பார்க்கும் குணம்.  தரும சிந்தனை  எல்லோருக்கும் அவசியம் தான்.    இருந்த போதிலும் இந்த மாதிரி  தார்மீக குணம் படைத்த  மிராசுதாருக்கு   அது  இருந்தால் பலருக்கு நன்மையல்லவா?.

ரெண்டு சகோதர பாரதிகளுமே  ராமநாடக  கீர்த்தனையில்  பயிற்சி  உள்ளவர்கள். தினமும் அவர்கள் வீட்டு  திண்ணையில்  சாயந்திரம் ஆனவுடனே பாடுவார்கள். அப்போது  ஊரே திரண்டு உட்கார்ந்துவிடும். காலாட்டி சோழகர்  ராமசவாமி  பாரதியின்  கீர்த்தனைகளில்  தன்னையே  இழந்துவிடுவார். சமஸ்க்ரிதத்தில்  கீத கோவிந்தமும் சங்கீத ஞானத்துடன்  பாடுவார்.   ஜெயதேவர்  அஷ்டபதி,  சதாசிவ ப்ரம்மேந்திரா கிருதிகள் அனைத்துமே  தினமும்  தனது  வீட்டில்  பாராயணம்  செய்வார்.  இதற்கெல்லாம் நல்ல  ஞாபக சக்தி வேண்டும். அது பயிற்சியில்  விட முயற்சியில் தானே வரும்.  ஊர் மக்கள்  அனைவரும் இரவு  பின்னேரம்  வரை  அமர்ந்து ரசிப்பார்கள்.  
உடையார் பாளையத்துக்கும்  அவ்வப்போது  போய்  ஜமீன்தாரை  பார்த்து விட்டு சிலகாலம் தங்கி பரிசுகள் பெற்று வருவார்கள். பரிசு  காசு கொஞ்சம்,  நெல், பருப்பு, காய்கறிகள், எண்ணெய், வஸ்திரங்கள், ஆபரணங்கள்.

சகோதரர்களின் மனைவிமார்கள்  ஜானகியும்  ஞானம்மாளும்  நகமும்  சதையுமாக  இருந்தார்கள். ஞானம்மாவுக்கு புத்திர பாக்கியம் இல்லை.  ஜானகியின் ஐந்து ஆறு குழந்தைகளை ஆசையாக  வளர்த்தாள்.

குற்றால   புராணத்தில்  அக்கால  பெண்களின்  சிறப்பு  குணங்கள்  எழுதப்பட்டிருக்கிறது.  அதன் படி அந்தக்காலத்தில்  ஒரு குடும்ப ஸ்திரீயிடம்  என்ன  எதிர்பார்த்தார்கள்  தெரியுமா?

அதிகாலையில்  எழுந்து  ஸ்நானம் செய்து  புலாலன்றி  சுவையோடு  சமைத்தல்,  
வீட்டிற்கு   யார் வந்தாலும் இன்முகத்தோடு விருந்த்து சமைத்தல்.
மகப்பேறு,  
அச்சம்  மடம்  நாணம்,  
பின்னுறங்கி முன்  எழுதல், 
காலையில் கணவன்  காலைத்தொட்டு கண்ணில்  ஒற்றிக் கொண்டு பிறகு   கடவுள்  வழிபாடு. (

இதை இப்போது  யாராவது அமுலுக்கு கொண்டு வரமுடியுமா? நினைப்பதே குற்றம்.  அமுல் டப்பா வேண்டுமானால்  வாங்கி வந்து கொடுக்கலாம்.    நான்  சொன்ன இப்படிப்பட்ட  பெண்  ''ஏ, மழையே பெய்' என்றால் வருணன் உடனே கொட்டோ கொட்டு  என்று  மழையைக்  கொண்டுவந்து தருவான்.' என்று நம்புவோம்.

 ராமஸ்வாமி பாரதி  68வது வயதில்  கைலாச  பதவி  அடைந்தார்.  ஞானம்மாள்  கணவன் உடல் அருகிலேயே இருந்தாள் .  எல்லோருடனும்  இருந்து  கணவன் உடலின் அந்திம க்ரியைகளுக்கு வேண்டிய  உதவி செய்தாள்   ஆச்சார்யமாக இருந்தது. துளியும் அவளிடம்  கண்ணீரோ கவலையோ   இல்லை. அவரது  சடலம்  தூக்கிச்  செல்லப் படும்போது கூடவே  போனாள்.   காவிரிக்கரையில்  மந்திரங்கள் சொல்லி  கனல்  மூட்டும் சமயம்,  ஞானம்மா ஸ்நானம் செய்து, மஞ்சள்  குங்குமம்  அணிந்து,   ஈர  வஸ்த்ரத்தோடு  என்ன செய்தாள் தெரியுமா?

  ''அவரைப்பிரிந்து   நான்  அரைக்கணமும் இரேன் ''  என்று  அனைவரிடமும் சொல்லிவிட்டு,  ஜ்வாலையோடு  தீப்பற்றி   எரியும்  சிதையில்  கணவன் ராமசாமி  பாரதியின் உடலின் மேல் தாவினாள் .

'அம்மா  நீங்கள்  எங்களோடு இருங்கள்''  என்று  வேண்டிக் கொண்டவர்களிடம்   '' என்ன சொல்கிறீர்கள் நீங்கள்.  நான் அவரைத் தனியே விடுவதாவது.  அவருக்கு  யார்  சிச்ருஷை செய்வார்கள்?'' 
என்ற   பதில் தான்  வந்தது.  
எல்லோரையும்  ஒரு முறை பார்த்தாள் 

''நீங்கள்  எல்லோரும்   சௌக்கியமாக வாழணும் ''   என்ற  ஆசியுடன் கனலானாள். 

அப்போது  ராஜாராம்  மோகன் ராயோ,  வில்லியம்  பெண்டின்க் பிரபுவோ  சதி  எனும்  உடன்கட்டை ஏறும் பழக்கத்தை  சட்டபூர்வமாக  நீக்கவில்லை. எண்ணற்ற பத்தினிகள்  கணவனோடு  தங்கள் வாழ்க்கையையும் முடித்துக்கொள்வது வழக்கத்தில்  இருந்தது.  நிறைய குடும்பங்களில் இத்தகைய  பெண்டிரை சுமங்கலிப் பிரார்த்தனையில் இன்னும்  வணங்கு கிறார்கள்  அவர்கள்  ஆசியுடன்   அக்குடும்பங்கள் சுபிக்ஷமாகவும் உள்ளன.   நமது முன்னோர் வாழ்க்கை எனும் சுரங்கத்தில் எத்தனையோ  பேர் தெரியாத அபூர்வங்கள் நிறைந்திருக்கிறது.

தொடரும் 


                                                                           

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...