Thursday, November 9, 2017

போஜனத்திலே இப்படி ஒரு தத்துவமா?

PESUM DEIVAM - J.K. SIVAN

போஜனத்திலே இப்படி ஒரு தத்துவமா?

மகரபூஷண நாயுடுவுக்கு அடிக்கடி ஏதாவது சந்தேகம் வந்து கொண்டே இருக்கும். எப்படியோ என்னை பிடித்து விட்டார். விடாமல் ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார். இன்று மழையில் குடை பிடித்துக் கொண்டு என்னை தேடி வந்தவர் கேட்ட ஒரு கேள்வி.

''தாத்தா சார், ஒரு சந்தேகம்.''
''நல்லவேளை ஒன்று தானே''
''ஹிஹி ... நிறையவே இருக்கு... ஆனா ஒண்ணு மட்டுமே கேக்கறேன்''
''கேளுங்கோ.''
''ப்ராம்மணா போஜனப் ப்ரியா'' என்றால் என்ன அர்த்தம் என்கிறார் நாயுடு.
'உங்களுக்கு என்ன புரிஞ்சுது அதை சொல்லுங்கோ''
''ஹிஹி பிராமணர்களுக்கு சாப்பாடு ரொம்ப பிடிக்கும்'' அப்படித்தானே.
ஓஹோ மற்றவர்களுக்கு போஜனம் பிடிக்காதோ?'
''எதுக்கு பின்னே அப்படி சொல்லியிருக்கு?''
''யார் சொன்னா?-- ப்ராமணா பஹுஜனப்ரியா'' என்றால் பிராமணர்களுக்கு எல்லோரையும் பிடிக்கும். எல்லோருக்கும் நல்ல பிராமணர்களை பிடிக்கும்'' என்றிருக்கலாமே. கொஞ்சம் வார்த்தையை மாற்றினால் அர்த்தம் அனர்த்தம் தான்.

நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே. மகா பெரியவா இதை பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறாரா?
''எனக்கு அவர் போஜனத்தை பற்றி சொன்னது இப்ப ஞாபகம் வருது. அதை சொல்றேன் கேளுங்கோ நாயுடு.''

காஞ்சி மடத்தில் ஒருநாள் மஹா பெரியவா ஒரு நல்ல மூடுல இருந்தப்ப ஏதோ கல்யாண சமையல் பற்றி பேச்சு நடந்தது.

கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்?'' என்று பெரியவா கேட்டார்.

வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''

அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"

''ஓ அதை கேக்கறேளா பெரியவா. மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம்,கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.

"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?" மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மௌனமாக இருந்தார்கள். தெரியும் அவரே பதில் சொல்வார் என்று.

"மொதல்ல குழம்பு.இதுல, 'தான்' இருக்கு. தான் என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா ஏதோ ஏதோ இருக்குமே அது தான் '' தான் '' என்பது இல்லையா.

நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் '' என்கிற அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம்.அந்தத் ''தானை'' கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்த கட்டத்துக்குப் போறோம்.

அப்போ ''தான்'' இல்லாததால் ஒரு தெளிவு வந்துடறது இல்லையா. அதாவது ''ரச'' மான மன நிலை.அதுதான் ரசம்.

''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது.

அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது..

கடோசியா மோர். மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது?

பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய்
வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது.

அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.

இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது?

நாமளும் அகங்காரத்தைவிட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு,யாருக்கும் எந்த உபத்ரவமும் பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!"

சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம்
பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப்
பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான் அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார் மகாபெரியவா.

மகர பூஷண ராவ் ''அடடா மஹா பெரியவா பத்தி நினைச்சாலே, இப்படி ஒரு தெய்வம் நம்ம கூட இருந்து நமக்கு இன்னும் அருள் புரியறதே என்று பெருமையாக இருக்கு சார்'' என்று எழுந்தார்.

ஆமாம் நிறைய அவரைப் பத்தி பேசலாம், சொல்லலாம், கேக்கலாம், எழுதலாம், அலுப்பே தட்டாது என்பது நிதர்சனமான அனுபவம் எனக்கு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...