Monday, November 20, 2017

SUR SAGAR

சூர் ஸாகரம் - J.K. SIVAN

அன்று கண்டதும் அதே நிலா...

இந்த உலகத்தில் இத்தனை பேர் எத்தனையோ காலமாக பிறக்கிறோம். யாருக்காவது என்று ஒருவர் மற்றொருருவருக்கு பிறக்க முடியுமா? வழியில் சேர்ந்து கொண்டு குடும்பமாகிறோம். சிலது எலியும் பூனையும். சிலது ஜோடி கிளிகள். அதது அவரவர் அதிருஷ்டம்.பாக்யம். கிளிகளை பார்த்து எலி-பூனை ஜோடிகள் பொறாமைப் படும். படட்டும். அது வந்த வழி.

கிருஷ்ணனை ராதை பார்த்தாள் .
அண்ணலும் நோக்கினான். இதயங்கள் ஒன்றை ஒன்று இடம் ?ஒன்றாயின. இது தெய்வீக உறவு. வைகுண்ட உறவு வ்ரஜ பூமியில் தொடரக்கூடாதா? கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடியது. எத்தனையோ பக்கங்கள் பேசியது. அத்தனையிலும் அடிநாதம் பிரேமை. உணர்வு ஒன்றாக கலந்த பின்னர் வார்த்தைக்கு என்ன வேலை?

எந்தெந்த ஜென்மத்தில் என்னவாய் இருந்தோம். என்னென்ன பேசினோம். என்னென்ன பரிமாறிக் கொண்டோம் ??

ஒன்றன் பின் ஒன்றாக கூட்ஸ் வண்டியை போல் வரிசையாக வருகிறதே. நான் சின்ன வயசில் கூட்ஸ் வண்டி யை கோடம்பாக்கம் சூலை மெட்டு வீட்டில் இருந்தே பார்க்க முடிந்தது. இப்போது ஐந்து ஆதி தூரத்தில் இருக்கும் எதையும் கூட பார்க்க முடியாத அளவு கான்க்ரீட் வீடுகள் கூடுகள். கூட்ஸ் வண்டியின் வித வித வர்ண உருவ பெட்டிகளை எண்ணுவேன். நூற்றுக்கும் மேலே கூட போகும். மெதுவாக ஊர்வது ஒரு மரவட்டை நேராக நகர்வது போல் இருக்கும்.

பாம்பும் பூரானும் வளைந்து ஓடும். மரவட்டை நூறு கால்களோடு நேராக சீராக நகர்வது ஒரு தனி அழகு.

ஒவ்வொருவர் மனத்திலும் தமது முன் ஜென்மத்தின் தொடர்புகள் அலை அலையாக முடிவின்றி எழுப்புவதை ராதையும் ரசித்தாள் கண்ணனும் சிரித்து தலையாட்டினான்.
மனம் பேசியது. மனங்கள் என்று சொல்லவில்லை. ரெண்டும் தான் ஒன்றாகிவிட்டதே.

'' ராதா, வா, என் வீட்டிற்கு ''
'' உன் வீடு எங்கே என்று சொல்லாமல் வா என்றால் எப்படி வருவது ?'' ----- துடுக்குக்காரி ராதை.
''உனக்கு தான் எல்லாமே தெரியுமே என்று நான் சொல்லவில்லை. இந்த பிருந்தா வனத்தில் நந்தகோபன் வீடு என்று கேள்.. நேராக உன்னை என்னிடம் தான் கொண்டு வந்து விடுவார்கள்.''
''அவ்வளவு பெரிய ஆளா நீ? உன் பேர் என்ன ?
''கிருஷ்ணன் என்று கூப்பிடுவார்கள். யார் எந்த பேர் சொல்லி கூப்பிட்டாலும் நான் வருவேனே''
''ஓ சரி ''
''நீ எங்கே இருக்கிறாய் என்று சொல்லவில்லையே ராதா?
''ரொம்ப தூரத்தில் இருக்கிறேன்...''
'''உன் வீடு எங்கோ தூர இருக்கிறது என்று சொல்கிறாய். உன் ஊர் சப்தம் இங்கே கேட்கிறதே?'' என்றான் கிருஷ்ணன்
''கேட்கும், கேட்கும்... நீ மனது வைத்தால் எங்கெங்கோ யார் யாரோ பேசுவது, உன்னை கூப்பிடுவது கூட இங்கேயே உனக்கு கேட்கும் என்று எனக்கு தெரியும் '' என்றாள் ராதா.
''நீ என் வீட்டுக்கு வருவாயா? உன் அப்பா யார்?'
''விருஷபானு -எங்கள் ஊரில் எல்லோருக்கும் அவரை தெரியும்.''
''ஓ, அப்படியென்றால் அவ்வளவு பெரிய மனிதர் பெயரில் நீ சத்தியம் செய், என்னை பார்க்க என் வீட்டுக்கு வருவேன் என்று ''
''அவர் பெயரில் சத்தியம் செய்யாமல் உன் தலையில் அடித்தே சத்தியம் செயகிறேனே. வருகிறேன் உன் வீட்டுக்கு, போதுமா '
''காலையிலும் வரவேண்டும். தினமும் மாலையிலும் வருகிறாயா''
''அப்படியென்றால் மத்தியானத்திலும் வரக்கூடாதா?'' என்று கேட்டாள் ராதா.
மரங்களில் பக்ஷிகள், விலங்குகள், யமுனை நதியின் நீரோட்டம், காற்று, மலர்கள் எல்லாமே குலுங்கி குலுங்கி சிரித்தன. எங்கும் மகிழ்ச்சி பிரவாகமாக ஓடியது.
சூர்தாஸ் கண்ணின்றி மனதுக்குள் இந்த காட்சியை கண்டு, ரசித்து ஆடினார் பாடினார்.


அந்த பாட்டு கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...