Friday, November 10, 2017

ஸூர் ஸாகரம்

ஸூர் ஸாகரம் J.K. SIVAN

சந்திப்பு

காலை மாலை என்று எல்லாம் தனியாக நேரம் ஒதுக்குவதில்லை. எப்போதும் விளையாட்டு தான். பிருந்தாவனத்தில் வசித்த அனைத்து பையன்கள் பெண்கள் எல்லோருக்கும் அவனை நன்றாக தெரியும். அவனில்லாமல் எந்த விளையாட்டும் இல்லை. இருக்கும் அத்தனை வீடுகளிலும் உள்ள கோபியர்கள் அவனை நன்றாக அறிவார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் என்ன இருக்கிறது. எவ்வளவு வெண்ணை, தயிர் வைத்திருக்கிறார்கள் எள்கிற கணக்கு அவர்களை விட அவனுக்கு தான் நன்றாக தெரியும். அவ்வளவும் அத்துபடி .

நந்தகோபன் வீட்டுக்கு பின்னால் ஒரு பெரிய நாவல் மரம். அதில் நிறைய கிளைகள். அது தான் அந்த வாண்டு களின் முக்கிய வாசஸ்தலம். சிறு வளைந்த குறுகலான தெருக்கள் அந்த கோபியர்கள் வீடுகளை முன்னும் பின்னுமாக இணைத்தது. அந்த ஒவ்வொரு மண் தெருவும் அவனது காலடி பட்டதுதான். எப்போது எந்த நேரத்தில் எந்த கோபியின் வீட்டில் அவன் நுழைவான் என்று யாருக்குமே தெரியாது.

வெண்ணை, சட்டியோடு காணாமல் போனபின், அல்லது சட்டி உடைபட்டு வெண்ணையின்றி விழுந்து கிடந்தால் , அல்லது சட்டி காலியாக வெண்ணை இன்றி இருக்கும்போது தான் அவன் வந்து போனது புரியும்.

ஒருநாள் கண்ணன் வழக்கம்போல் நொண்டி அடித்து தாவி தாவி ஒரு சந்தில் ஓடிக்கொண்டிருந்தான் . நான்காவது வரிசை கடைசி பெரியவீடு, வாசலில் புங்கமரம் அதை ஒட்டி ஒரு சின்ன வளைந்த குறுகல் சந்து. இடுப்பில் மஞ்சள் வஸ்த்ரத்தில் புல்லாங்குழல் செருகி இருந்தான். வாய் என்னமோ பாட்டை பாடிக்கொண்டிருந்தது. ஆறு வயது சிறுவன் கிருஷ்ணன்.

அந்த சந்தின் மூன்றாம் வீட்டு தாழ்வாரத்தில் ஒரு பொன்னிற கன்றுக்குட்டி. அது அவனை ஈர்த்தது. ஓடி அதன் அருகே சென்றவன் மலைத்து நின்றான். அதன் அருகில் ஒரு பெண். சிவந்தநிறம் . அழகு முகம். அந்த ரோஜாமலரில் கருவண்டுகளை போல் இரு கண்கள். காந்த விழிகள். அவனைப் பார்த்தன. முகத்தில் லேசாக ஒரு புன்னகை.

''யார் நீ?அழகாக இருக்கியே? ''
''யாரோ?''
''சொல்லு''
''உனக்கு எதுக்கு சொல்லணும்?''
''நீ இந்த வீட்டிலே தான் இருக்கியா?''
''தெரிஞ்சு நீ என்ன பண்ண போறே?''
''சொல்லேன். குறைஞ்சு போவியா?''
''எதுக்கு கேக்கறே அதை சொல்லு நீ முதல்லே?''
''நீ இந்த வீட்டிலேயா இருக்கே, யார் உங்க அப்பா அம்மா?''
.''..........''..
''சொல்லு?''
''ஏன்?''
''இதுக்கு முன்னாலே உன்னை பார்க்கலியே இங்கே.?''
''நீ சரியாக பார்த்திருக்க மாட்டே''
''எனக்கு தெரியாமல் இங்கே யாருமே கிடையாது.கேட்டுப்பார் எல்லோருக்கும் என்னை தெரியும் இங்கே.''
''அதனாலே என்ன. நான் இந்த பக்கமே இந்த சந்துகள் எதிலும் வறதில்லே''
''ஏன்?''
''ஏன்? எதுக்கு வரணும் இங்கே இந்த சந்திலே எல்லாம்?
''நீ எங்கே போய் விளையாடுவே அப்போ?
''என் வீட்டு வாசலிலேயே விளையாடுவேன்''
''எல்லா சந்துலேயும் வந்து ஓடி ஆடி விளையாடினால் என்ன?''
''வேண்டாம் வேண்டாம். இங்கே ஒரு பொல்லாத பையன் இருக்கானாம். அதனால் வர்ரதில்ல''
''யார் அவன் அப்படி பட்ட பையன்''
''நந்தகோபன் மாமா பசங்களில் ஒருத்தனாம். ''
''அவன் பேர் என்ன ?என்ன அப்படி பொல்லாதவன் அவன்?''
''கிருஷ்ணனாம் . எல்லார் வீடு வெண்ணையும் திருடறவன். தயிர் சட்டியை காலி பண்றவன்.'' விஷமக்காரன்''
''நிறுத்து உன் பேச்சை... நான் தான் அவன். நான் எதுக்கு எல்லோர் வீட்டு வெண்ணை தயிர் எல்லா திருடணும்? ''
''நீ தானா அது'' நீ இங்கே எங்க வீட்டுக்கு வராதேடா ''
''நான் எதுக்கு உங்க வீட்டு தயிர் வெண்ணெய் திருடணும். நான் அப்படி திருடறவன் இல்லை''. வா வா நீயும்எங்களோடு சேர்ந்துக்கோ. இன்னிக்கு நாங்க ஒரு புது விளையாட்டு விளையாடப்போறோம்.
அந்த பெண் தலை ஆட்டியது. அவன் பேச்சில் பூவில் வண்டாக மயங்கியது. அதை அறியாமலேயே அந்த பையன் பாவம் திருடன் இல்லை. சாது, பொய் சொல்லத்தெரியாதவன். நல்ல பையன் என்று அபிபிராயம் மனதில் எழுந்தது. அவன் பின்னால் ஓடியது. யமுனை ஆற்றங்கரையில் ஒரு பெரிய ஜமாபந்தி.
ராதா கண்ணனோடு சேர்ந்துகொண்டாள்.

சூர்தாஸ் இந்த கண்ணன் ராதை நட்பை நினைத்துப்பார்க்கிறார்..

KRISHNA APPROACHES RADHA

KRISHNA SAYS '' O FAIR DUTY, WHO ARE YOU?''
WHERE DO YOU LIVE? WHOSE DAUGHTER ARE YOU?
I NEVER YET SAW YOU IN THE LANES OF BRAJ''

RADHA SAID, ' WHAT NEED HAVE I TO COME THIS WAY?'
I KEEP PLAYING BY MY DOOR
BUT I HEAR SOME SON OF NANDA
IS IN THE HABIT OF STEALING BUTER AND CURDS''

KRISHNA SAYS: ' LOOK, WHY SHOULD I APPROPRIATE
ANYTHING THAT IS YOURS? COME LET US PLAYTOGETHER ,

SURDAS: SAYS ''BY HIS HONEYED WORD
KRISHNA, THE CRAFTY PRINCE OF AMORISTS
BEGUILED RADHA AND PUT HER AT EASE






No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...