Sunday, September 30, 2018

FRANCIS XAVIER THE MISSIONARY



 ARE  THESE  FROM THE PAGES OF TRUE HISTORY OF INDIA ? 
                                                                                                 J.K. SIVAN 

I came across a book  by one Mr Sita Ram Goel,  the contents of which gave me the shock of my life.   Are they true?  If so, how many such grave facts remain unknown to most of us??   It is all about ST FRANCIS XAVIER SJ, The Man and His Mission by Sita Ram Goel.
What do we know about this St Xavier? Not much of what we should have known. There are many Colleges and educational institutions in which our children study bearing the name of this person, in many parts of the country.   When I browsed, it was disgusting for me to know more about this Missionary.  I had been so innocent and visited the place where his body still is preserved in Goa and would never have done it had it been known that he was instrumental in many Hindus being brutally converted to Christianity and many temples and idols were destroyed to pieces by this man. I will not regard him a saint anymore as all that I learnt about him appears to be bare facts.  I give below what I learnt and some of you might know more than this.

 Francis Xavier -    Born 1505 in Navaare, Pyrennes.  His friend, a Spaniard,  Ignatius Loyola.
Portugese pirates  made headway in Indian Ocean after Vasco da Gama sailed to Calicut in 1498. Seized Goa  1510.
Pope consulted Ignatious Loyola  and recommended Loyola's friend Francis Xavier to spread the christianity mission in Goa
Xavier left Lisbon on April 7, 1541 and landed in Goa on May 6, 1542 and met the Portuguese governor Alfonso de Souza.  got a salary of  4000 gold fanam. (rupees then). He founded College of St Paul to train missionaries and began planting Christianity in foreign lands.
In October, 1542 Xavier landed on the Coromandel Coast where the Portuguese had established themselves between 1518 and 1530.
The Missionaries promised help and protection to the the local  Paravas engaged in pearl fishery the Paravas if they  agreed to get baptised and convert to Christianity. The Paravas  embraced Christianity in 1534.  Instead of help, The Portuguese proved no better than Arabs,  if not worse, than the Arabs. They extracted heavier taxes from the poor fishermen. One of  these taxes was 4000 gold fanams to be paid annually for the slippers of the Queen of Portugal.  Xavier paid no attention to their material plight. He was more concerned about their spiritual
condition. He found that they were still making and worshipping the  images of their old Gods and Goddesses. He had to exert himself
considerably between 1542 and 1545 in order to “clean up” the Coromandel Coast.

1544 there was a  quarrel between the princes of Travancore and some of them sought Portuguese help to fight among their kith and kin.
The Governor of Goa deputed Xavier to the court of the Tiruvadi Raja of Quilon. The Raja  promised financial help and freedom to convert the fishermen along  the Malabar Coast, provided the Portuguese sided with him. The Fishermen who refused to be baptised or apostatised were prevented from fishing and confiscated their boats

He met Anjiro (Yajiro), a Japanese who had committed murder in his native land and escaped.  He was a fugitive from justice. Xavier took Anjiro to Goa in 1548 and trained this criminal to function as a missionary.   Xavier came back to Goa in 1551.  Xavier,  inspired by the iconoclastic zeal of the monotheistic creeds,  he was keen in destroying non ­Christian temples.  Aided by frenzied mobs, the monks had destroyed thousands of non­ Christian temples all over.   Xavier was  unhappy, that  though baptised in 1534, the Parava fisherman  did  not practice  Christianity, and  lived by making images of Hindu deities. All of them were worshipping these “evil spirits”according to Francis Xavier.  When he came to know that some of the  Paravas 
 made an idol,  he had the idols  broken into a thousand pieces. In spite of all his advice someone persisted in making idols, he would have them punished by the patangatis (heads of Parava villages) or banished to another village.

One day when he heard that idols had been worshipped in the house of a Christian, he ordered the hut to be burned down as a warning to others    “When the whole village was baptised, Xavier would get them to pull down their village temple and break into small pieces the idols it contained.”  He did this at a time the Tiruvadi Raja of Quilon had given him 2000 fanams to build churches. The poor fishermen were in no position to resist him because the Portuguese pirates were always at hand to assist the missionary. Xavier took great delight in what he had done in Malabar. 

On February 8, 1545, Francis Xavier  wrote to the Society of Jesus: “Following the baptisms, the new Christians return to their homes and come back with their wives and families to be in their turn prepared for baptism. After all had been baptised, I order that the temples of the false Gods be pulled down and idols broken. I know not how to describe in words the joy I feel before the spectacle of pulling down and destroying the idols by the very people who formerly worshipped them.” 

 Belgium scholar Dr. Koenraad Elst has pointed out, anti-brahminism is as evil a prejudice as anti-Semitism—though that seems not yet to have registered in the Indian psyche.

FRANCIS XAVIER  wrote to Rome thus:     “There are in these parts among the pagans a class of men called Brahmins. They are as perverse and wicked a set as can anywhere be found, and to whom applies the Psalm which says: ‘From an unholy race, and wicked and crafty men, deliver me, Lord.’ IF IT WERE NOT FOR THE BRAHMINS, WE SHOULD HAVE ALL THE HEATHENS EMBRACING OUR FAITH.”

 Xavier's colleague in this mission of Christianising the Hindus was Miguel Vaz, the Vicar General of India appointed by Rome. In consultation with Xavier,  Vaz  wrote a long letter to the King of  Portugal in November 1545.   .......“Since idolatry is so great an offence against God, as is manifest to all, it is just that your Majesty should not permit it within your territories and an order should be promulgated in Goa to the effect that in the whole island there should not be any temple public or secret; contravention thereof should entail grave penalties; that no official should make idols in any form, neither of stone, nor of wood, nor of copper, nor of any other metal; ... and that persons who are in charge of St. Paul's should have the power to search the houses of the Brahmins and other Hindus, in case there exists a presumption or suspicion of the existence of idols there (Joseph Wicki,Documenta Indica , Vol. 1).” On March 8, 1547 the King ordered his Viceroy at Goa that all Hindu temples should be destroyed........ 

 Francis Xavier died on December 3, 1552, at the age of 46. His body  is resting at a basilica which was once the famous Slaptakoteswarar temple they say?  It is possible if above facts of Francis Xavier are true. Within the short time he lived, he had  baptized  about  30,000 hindus.  Xavier was beatified by Pope Paul V in 1619, and canonized by Pope Gregory XV in 1622.  He is St Francis Xavier now. 

The  Saptakoteshwar temple at Narve is considered to be one of the six great sites of temples of Lord Shiva in the Konkan area. The village of Narve is located about 35 kilometers from Panaji and can be reached via an interesting route which requires a a ferryboat from the island of Divar.   The Lord Siva here is the deity of the Kings of the Kadamba dynasty around the twelfth century. Coins found from this era mention the name of the deity along with that of the King Jayakeshi.

In 1352, when the Kadamba kingdom was conquered by the Bahamani Sultan Allauddin Hasan Gangu  who ruled Goa  for about fourteen years. A number of temples were destroyed during this period and the Linga (symbol of Lord Shiva) at the Saptakoteshwar temple was also dug up by the troops.   In 1367, the army of Vijayanagar King Hariharraya defeated the Bahamani Sultan’s troops in Goa and managed to restore most of the temples to their former glory including that of Saptakoteshwar.  After the Portuguese conquest, in the year 1540 during the years of the Inquisition, once again the Linga at the temple was removed and misused. Soon afterwards, it was smuggled away by one of the locals named Narayan Shenvi Suryarao and taken to a place called Latambarsem where it remained for 3 years. In 1543, it was installed in a temple near the island of Divar.  The great Maratha King Shivaji conquered the area in 1664  driving away  the Portuguese in 1668.

SIVAJI MAHARAJA  ORDERED the Saptakoteshwar temple at Narve to be REBUILT AND THE LINGA   INSTALLED IN PROPER PLACE. The STONE INSCRIPTION IS STILL THERE TODAY EVIDENCING THIS.
The legend behind the name Saptakoteshwar is also quite interestg. According to the legend, seven holy sages once set out to pray to Lord Shiva near the place where five holy rivers met the sea. They prayed for seven crore years at the end of which, Lord Shiva appeared to grant their wishes and agreed to stay at the place in one of his incarnations. This incarnation is known as Saptakoteshwar (sapt means seven and koteshwar means lord of crores).


The Saptakoteshwar Temple in Goa was at Divar is located at Narve in Bicholim which is 37 kms from Panjim. The frequent raids on Goa in the 14th Century mostly by the Sultans of Delhi and the Bahmanis, was one of the main reasons for the destruction of Hindu temples in Goa. 

Fearing destruction to the temple due to Muslim rulers attacking Goa frequently, the linga from the temple was shifted and buried in a paddy field to avoid it from being destroyed, and was later reinstalled back during the peaceful reign of the Vijayanagar empire.

The Saptakoteshwar Temple at Naroa was actually destroyed by the Portuguese during one of their invasions and the stone from the temple was used for the church building there. The remnants of the temple ruins are still visible in the chapel attached to the cemetery of the church of Nossa Senhora da Piedade or the Our Lady of Compassion Church at Divar.

The linga from the Saptakoteshwar temple was abandoned for quite a long period of time and was found near a well on the Divar island. It was used as a pulley for drawing the well water, the marks still distinct on the rope. The other side of the river bank was annexed by an ally of the Sultan of Bijapur, this chieftain played an important role in the rehabilitation of the linga on the river bank that was visibly hidden amidst a narrow valley. This village assumed the name of Nae Naroa, and now is popularly known as Naroa or Bicholim.

A new temple was born from an incident during Shivaji's reign. In 1664 when Shivaji (who had gone to offer prayers to the linga placed in a mud & thatch house) found a straw from the thatch roof fallen on his shoulder he immediately took it as a good omen and ordered the construction of the temple. It is built based on the typical contemporary Goan architecture, with only the lamp tower design being of a distinct variety. The linga itself is distinctive of a 'daralinga' type and made of polished tone.  Sapthakoteswara Lord Siva's temple is one of the six great sites of temples of Lord Shiva in the Konkan area.  It was built by the kings of Kadamba dynasty in 12th century.

The gold coins discovered at Chandor, Goa (old name: Chandraura, Chandrapura), Gopikapatna and other places of the kings Jayakeshi I, have on them the inscrition:  “Saptakotishvaralabdha – Varaprasada”  which means "with the grace of Lord Saptakotishwara", the family deity of Kadambas. These coins were often referred to as Saptakotisha-Gadyanakas

The temple was demolished in 1560 by the Portuguese (and a chapel dedicated to Nossa Senhora De Candelaria was erected in its place[6]), the linga was used as a well shaft until some Hindus managed to rescue it. The idol was then smuggled across the river to Bicholim where it was installed in a brand new temple and revamped in 1668 by the Maratha Chatrapati Shivaji Maharaj.
The village of Narve is about 35 km (22 mi) from Panaji and can be reached by an interesting route that requires a ferryboat from the island of Divar.
These historical facts to be remembered;
 Portuguese troops conquered Goa from the Sultan of Bijapur in 1510,  AND FORCIBLY CONVERTED  THOUSANDS OF HINDUS to Christianity. 
1540,-  THEY DESTROYED  due to fanaticism  300 ancient Hindu temples,
1545, -  FRANCIS XAVIER  the fanatical priest, petitioned the Portuguese Crown to establish the Inquisition (Government authorised strict enforcement of heresy,  torture). Once the king’s approval had been secured, the former Hindu population of Goa, as well as the hundreds of secret Jews living there, found themselves at the complete mercy of the Church. Simply keeping a statue of Shiva in a family shrine, or whispering a Hebrew prayer over the grave of a loved one, became a serious criminal offence. Those  who were  practicing their old beliefs in secret were summarily arrested and tortured in dungeons, kept in shackles by priests hoping to force them to divulge the names of friends and family members who had joined them in their ‘heretical’ practices.  Prisoners who refused to identify others or give up their beliefs in Hindu or Jewish ‘sorcery’ were strangled by executioners or burnt alive in public Acts of Faith – from 1560 all the way up to 1812, when the Inquisition was finally abolished.  Francis Xavier was responsible  for the torture of tens of thousands of Hindus and Jews, had been canonized by Pope Gregory XV in 1622 and made a Saint of all the missions of the Catholic Church.



KUNTHI PRAYERS



       குந்தியின் பிரார்த்தனை. 3
                        J.K. SIVAN

யார் சொன்னாலும் பரவாயில்லை.  நான் விடை பெறட்டுமா?  என்று கிருஷ்ணன்  எளிதாக கேட்டுவிட்டான்? ஆஹா  நன்றாக போய்வா  அப்பனே  என்று நம்மாலேயே  அவனை கைகூப்பி விடை கொடுக்க முடியாதே. அவனோடு பழகி, அவனால் பல நன்மைகளை எதிர்பாராமலேயே  அடைந்த அவன் நெருங்கிய உறவினள், மனதாலும், உடலாலும் தான்,  ''சரி நீ போ''  என்று அவனை எப்படி அனுப்புவாள்?  குந்தியின் பாடு  அப்பப்பா  ரொம்ப தர்ம சங்கடம். மேலே  அவனிடம் தனது உள்ளக்குமுறலை கொட்டுகிறாள்.


கிருஷ்ணன் தான் பரமேஸ்வரன் எனும் பரமாத்மா. உள்ளும் புறமும் நிறைந்தவன். அவன் குந்தியின் எதிரே அவள் சகோதரன் மகனாக மானிட உருவில் நின்றாலும் அவள் உள்ளத்திலே பரமாத்மா ஸ்ரீ நாராயணனாக அவன் அம்சமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாக ஒளி வீசியவன்.

குப்புஸ்வாமி என்ற  நண்பன்,   நாடகத்தில்  எண்ணைக்கடை  செட்டியாராக வேஷம் போட்டால் நாம் செட்டியாரை பார்க்கிறோமே தவிர நமது நண்பன் குப்புஸ்வாமி அங்கே தென்படவில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அப்படித்தான் எல்லோரிலும் இருந்தாலும் நாம் எல்லோரையும் பார்க்கிறோமே தவிர எல்லோரிலும் அவனைப் பார்க்க தவறுகிறோம்.

தவம் செய்து சக்தி பெற்றாலும் அசுரர்கள் அவன் மூலம் பெற்ற தங்களது அதிகாரம் சக்தி அவற்றை உயர்வாக மதித்து, அவனையே இகழ்ந்து, எதிரியாகத் தான் பார்த்தார்கள். அழிந்தார்கள்.

பகவானை புலன்களையும், ஐம்பூதங்களையும் கடந்து மட்டுமே உணரமுடியும். கண்ணால் கண்டால் தான் அவன் இருப்பதை உணர்வேன் என்ற எண்ணம் மறைய, நமது சரீரத்தில் அவன் அளித்த ஐம்புலன்களின் சக்தியை மீறிய உணர்வு என்ற அறிவு தேவை. அர்ச்சாரூபமாக ஆலயங்களில் அவன் தோன்றுவது அவன் அதையும் தாண்டிய அருவமான, அதீத, ஒரு மா பெரும் சக்தி என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு உணர்த்துவதற்காகவே.

கட்டம் போட்ட நோட்டு புத்தகத்தில் ஒவ்வொரு எழுத்தாக எழுதி பழகியவன் தான் பின்னால் மாபெரும் கவிஞனாக, புலவனாக, அறிஞனாக, எழுத்தாளனாக பக்கம் பக்கமாக வெள்ளைத்தாளில் எந்த கோடுகளும் இன்றி எழுதுபவனாக மாறுவது போல். விழுந்து வணங்குவது, சரணடைவது என்பதே அவனே எல்லாம், அணுவுக்குள் அணுவாக, அண்டத்தில் பேரண்டமாக மிளிர்பவன் என்பதை உணர்வதற்காக. இதனால் நமது அகந்தை அழிந்தபின். அறிவினால் அறியமுடியாத கிருஷ்ணனை அன்பினால், கருணையால் அறியமுடியும். பக்தியால் தான் பரமனை பருக முடியும்.

வயதில் முதிர்ந்தவள், தனது அத்தை என்று அவளிடம் விடைபெற வரும் கிருஷ்ணன் அவள் காலடி மண் தொட்டு வணங்குகிறான் என்றால் அவளது பக்தியை தான் அங்கே நான் உணரவேண்டும். அவன் பக்தவத்சலன் . பக்தனுக்கு அடிமை. கத்தியவாரில் பிறந்தவர்கள் எல்லோரும் மஹாத்மா காந்தியாகி விடமுடியுமா. காந்தி என்ற பெயரை ரொட்டி விற்பவன் கூட வைத்துக்கொள்ளலாம். பூர்வ ஜென்ம பலன் மூலம்  பக்தி ஒருவனை மாற்றிவிடும்.

படிப்பு ஒருவனை பண்டிதனாக வேண்டுமானால் மாற்றும். பக்தனாக மாற்றாது .பரமனை உணர உதவாது. இதயமும் மனமும் பக்தியோடு ஒன்று சேரவேண்டும். பரமஹம்சர் படிக்காமல் தான் பார் புகழும் ப்ரம்ம ஞானியானார். அறிவுக்கனலான விவேகானந்தரால் குருவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அன்னையை அறிந்தார், பவதாரிணியை நேரில் கண்டார். அருள் பெற்றார். படிப்பு வேறு ப்ரம்ம ஞானம் வேறு.பிராமண குலத்தில் பிறப்பதால் மட்டும் உயர்வு அல்ல. அகந்தை இன்றி, தன்னை புல்லினும் தாழ்வாக கருதுபவன் எளிதில் உயர்வடையமுடியும். உள்ளே இருக்கும் ஆத்மாவின் தன்மைப்படியே தான் ஒவ்வொரு மனிதனும் இயங்குகிறான். கிருஷ்ணன் பரம ஆத்மா என்பதால் அவனது செயல்கள் நன்மை பயக்குபவை என்பதை குந்தி ஒரு பரம பக்தையாக அறிவாள் .

''நீ போகாதே எங்களுடனேயே இரு'' என்று வேண்டுபவளின் பிரார்த்தனை தொடர்கிறது

.यथा हृषीकेश खलेन देवकी कंसेने रुद्धातिचिरं शुचार्पिता ।
विमोचिताहं च सहात्मजा विभो त्वयैव नाथेन मुहुर्विपद्गणात् ॥६॥
6.Yadha hrishikesa, khalena Devaki kamsena rudhathichiram sucharpitha,
Viomochithaham cha sahathmaja Vibho thwayaiva nadhena muhurvipadganath.
''கிருஷ்ணா, ஹ்ரிஷிகேசா, எதைச்சொல்வேன் எதை விடுவேன். நீ செய்த உதவிகள் எக் காலத்திலும் மறக்கமுடியாதவை அல்லவா. நீ உன் தாய் தேவகியை, தந்தை வசுதேவரை மட்டுமா கம்சனின் சிறையிலிருந்து மீட்டவன்.? என்னையும் என் குழந்தைகளையும் அல்லவா இடைவிடாத, எண்ணற்ற துயர துன்ப கொடுமையின் சிறைகளிலிருந்து மீட்டவன். மஹாத்மா, பரமாத்மா, உன்னை தஞ்சம் அடைந்தல்லவோ நாங்கள் ஜீவிக்கிறோம்    

NEWS

NEWS COVERAGE BY NANGANALLUR TIMES AND NANGANALLUR TALK ON SKST PARTICIPATION IN VISIT TO VEDHASRAM AND GOSALAA ON 15.9.18 AT ATHUR AND ENDATHUR







TAMIL SCHOLARS





இந்த சதாவதானியை  தெரியுமா?   J.K. SIVAN 

கன்யாகுமரி,   நாகர்கோயில் அதை ஒட்டிய காயல் பட்டினம் போன்ற பகுதிகள்  நாஞ்சில் நாடு என்ற பெயரில் தமிழோடு கலந்தவை.
அந்த பக்கத்திலிருந்து ஒரு அற்புத கவிஞர் உருவானார். ஷேக் தம்பி என்று அந்த புலவருக்கு பெயர். தமிழில் அபார ஞானம். சதாவதானி. அதாவது  ஒரே சமயம் நூறு விஷயங்களில் கவனம் சென்றாலும் எதிலும் தவறு, தப்புகளிருக்காது. எட்டு விஷயங்கள் செய்பவன் அஷ்டாவதானி.

ஒரு சமயம்  வடலூர் வள்ளலாரின் அருட்பா  ஏமாற்று வேலை,  மருட்பா என்று சிலர்  எதிர்த்தபோது  வள்ளலாரின்  அருட்பாவை ஆதரித்து கொதித்தெழுந்தனர் ஷேக் தம்பி பாவலர்.  தமிழில் அவர் பெயரை  செய்குத்தம்பி புலவர் என்பார்கள்.

 ஒரு வேலையையே  சரியாகி செய்ய முடியாத நம்  சதாவதானம் செய்வதை பற்றி  சரியாக யோசிக்க முடியாதவர்கள். உதாரணமாக  சதாவதானிக்கு ஒரு பக்கம் முதில் மல்லிகைப்போ ஒன்றன் பின் ஒன்றாக போடப்பட்டு அது எத்தனை என்று பார்க்காமலே சொல்லவேண்டும். மணி எங்கோ நடித்துக்கொண்டிருக்கும். எத்தனை தடவை மணி அடித்தது என்று கேட்டால் சரியாக சொல்லவேண்டும். ஒரு பக்கம் ஒரு அடி   கொடுத்து இதில் ஆரம்பி,  இன்னொரு வார்த்தை கொடுத்து அதில் முடி என்று வெண்பா கேட்பார்கள், குறித்த நேரத்தில் அதை நிறைவேற்ற வேண்டும்.

இப்படியெல்லாம் சோதனைகளில் வெற்றி பெற்றவர் செய்குத்தம்பி பாவலர்.

ஒரு தடவை சில  புலவர்கள் அவரை சோதித்து  தோற்கடிக்கவேண்டும் என்று எண்ணினார்கள்.  செய்குத்தம்பியை ஒரு சபைக்கு அழைத்து 
சதாவதானம் நடந்தது.  புலவர் அதை சரியாகி செயதுகொண்டுவந்தார்.  நடுவே ஒருவன் எழுந்து 

புலவரே,   நான் ஒரு கடைசி அடி வார்த்தை கொடுக்கிறேன் அதில் முடியும்படியாக ஒரு பாடல் உடனே சொல்லமுடியுமா?'' என்றான் 
அதற்கென்ன  ''கேளுங்கள் '' என்கிறார் புலவர்.
நீங்கள் பாடும் பாட்டின் கடைசி அடி    ''துருக்கனுக்கு ராமன் துணை''   என்று முடியவேண்டும். சரி ஆரம்பியுங்கள் என்றான் அந்த புலவன்.

துருக்கனுக்கு எப்படி ராமன் துணை?? ராமன் காலத்தில் துருக்கர்களே கிடையாதே. அந்த மதமே பிறக்கவில்லையே?  இப்படி எல்லாம் யோசிக்க கூட நேரமில்லை செய்குத்தம்பி பாவலருக்கு. ஆரம்பித்தார் அற்புதமாக 

(எனக்கு முதல் மூன்றடி மறந்துபோய்விட்டது)   மூன்றாவது அடி  முடிவில்     ''....................................... பரத்த சத்
நாலாவது  அடி கடைசி அடியில்                                                                                                 துருக்கனுக்கு ராமன் துணை.'
எப்படி லாகவமாக  துருக்கனுக்கு  என்பதை சத்ருக்கனுக்கு என்று மாற்ற அந்த அற்புத புலவருக்கு தோன்றியது என்று இதை எழுதும்போது கூட  வியக்கிறேன்.   தமிழ்நாட்டில் விந்தை மனிதர்களுக்கு பஞ்சமே இல்லை.  குறும்பாக  இந்த ஈற்றடி  கொடுத்தவன் நிச்சயம் அசந்து போயிருப்பான்.

இன்னொருமொரு செய்குத்தம்பி பாவலரின் கவிதையை ரசித்து விடை பெறுவோம்.

''கொக்கிவிட்ட சங்கிலிபோற் கூண்டெழுந்து நும்மடியார்
சொக்கிவிட்ட நல்லருட்கே தோய்ந்து நின்றாரை யோநா
னுக்கிவிட்ட நெஞ்கினான யுள்ளுடைந்த மெய்ம்மடங்கிக்
கக்கிவிட்ட தம்பலொத்தேன் கல்வத்து நாயகமே.

துட்டென்றால் வாயைத்திறந்து துடிதுடித் தெழுந்து
கொட்டென்று கேட்டுநிற்குங் கோளர் கட்கோ - இட்டென்றும்
வற்றாத் தனம்படைத்த வள்ளல்சி தக்காதி
 பொற்றா மரைக்கோ புகழ்

என்னைவிட  எத்தனையோஓஓஓஓஓஓ   மடங்கு உயர்ந்த ஞானஸ்தர்கள்  பண்டிதர்கள் உங்களில் உண்டே.  யாராவது ஒருவர் இந்த மேலே கண்ட  ரெண்டு தமிழ் செய்யுளுக்கு அர்த்தம் எழுதுங்கள். மற்றவர்கள் என்னையும் சேர்த்து தான்,  செய்கு தம்பி பாவலர்  கவிதை நயத்தை தெரிந்து கொள்கிறோம்.

Saturday, September 29, 2018

IRUPADHU VARUSHAM



இருபது வருஷம்....  ஜே.கே. சிவன் 


அடுத்த மாதம்  லீலாவதி மாமி பாட்டியாக போகிறாள். பெண்ணுக்கு பிள்ளையோ பெண்ணோ  வரப்போகிறதே.   அமெரிக்கா  பறக்க போகிறாள்.வேலைக்கு காசில்லாத ஆயா எங்கே கிடைப்பாள் என்று அவள் நண்பிகள் முதுகுக்கு பின்னால் பேசுகிறார்கள். மாமிக்கு  தன்னை ஏதோ ஞாபக மறதியாக  சரஸ்வதியோடு எது வாக்குவாதத்தின் போது  ரதியாக  படைத்துவிட்டான் அந்த பிரமன் என்று நினைப்பு. என்னை அழகு அழகு ன்னு எல்லோரும் சொல்றாளே. வெக்கமாக இருக்கு என்று தலையில் ரெண்டு சுருள் எடுத்து முன்னால் விட்டுக்கொள்ளும் வழக்கம்.

ரெண்டு நாளைக்கு முன்னாள்  வடைக்கு அரைத்துக்கொண்டிருந்த போது  மிக்சிக்கு  வலிக்கவில்லை. இடது நெஞ்சு வலித்தது. மூச்சு திணறியது. கண் இருந்தது கை தோள்  மேல் முதுகு வலி.   நாணா என்று கத்தி கீழே விழுந்தாள்.  நாராயணஸ்வாமி எனும் தம்பி உடனே ஒரு  ஊபர் பிடித்து அழைத்து வா எடுத்து போ  ஆஸ்பத்திரி கொண்டுபோனான். பெரிய பெரிய டாக்டர்கள் மாமியை பார்த்து  நின்று போன இதயத்தை எழுந்திரு எழுந்திரு என்று அடித்து  பயனில்லை.  மாமி  கிருஷ்ண  பக்தை. அவள் இறந்து போனது அவளது ஸூக்ஷ்ம சரீரம் பார்த்துக்கொண்டிருந்தது.  தனது உடல் அந்த பெரிய அறையில் நிறைய மெஷின்களுக்கு  நடுவில் வெள்ளை படுக்கையில்.மேலே பச்சை கவுன்  கை கால் அசையாமல் மரக்கட்டை. இதயம் நின்று சில நிமிஷங்கள்.. ''என்னடி லீலா இப்படி பண்ணிட்டே.  அடுத்தமாசம் அமெரிக்கா....பேரனோ பேத்தியோ...ஆசையா பாக்கணும் னு இருந்தியே....அவள் சூக்ஷ்ம சரீரம் கண்ணீர் விட்டது. அதன் தோள்  அருகே  எமதர்மன் நின்று கொண்டிருந்தான். எதற்கு அழறே.  இதிலே ஏதோ தவறு ஆகிவிட்டது.  ராங் அட்ரஸ் போய்ட்டான் என் அசிஸ்டன்ட்...  லீலா  மாமிக்கு இன்னும் இருவது வருஷம் இருக்கு... அப்புறம் தான் என்கிட்டே வரணும்.''

சூக்ஷ்ம சரீரம் கையெடுத்து கும்பிட்டு  லீலாவதி உடம்பில் மீண்டும் புகுந்து கொண்டது. நர்ஸ் ரோஸ் டாகடர் டாக்டர் என்று கத்தி   கோபால்ராவ் வந்து பார்த்து அதிசயித்தார். இதயம் இயங்குவதை கம்ப்யூட்டர் மானிடர் சிறு கோடாக அசைந்து காட்டியது.  வேக வேகமாக மீண்டும் என்னன்னவோ சிகிச்சை.   ஒருமணிநேரத்தில்  லீலாவதி கண்ணை திறந்தாள். நாணா  சிரித்தான்.  வடபழனி விபூதி நெத்தியில் தடவினான். முருகன் காப்பாத்திட்டான்.

லீலாவதிக்கு  எல்லாம் தெரிந்தது. தான் இறந்தது. தனது உடலை தானே பார்த்தது. எமன் இன்னும் இருபது வருஷம் இருக்கு என்று சொன்னது.
நாலைந்து நாளில் நடக்க ஆரம்பித்தாள். அமெரிக்கா யாத்திரைக்கு ஏற்பாடுகள் ஜரூராக பண்ணினாள் அழகு சாதனங்கள் உபயோகித்தாள் . சிறந்த மேக்கப் எல்லாம்  பண்ணிக்கொண்டாள்.

அப்புறம் என்ன.  எல்லாம் முடிந்து வெளியே வந்தாள் . அடையாளம் தெரியவில்லை மாமியை.  எல்லோரும் என்னடி லீலாவதி இருபது வருஷம் குறைஞ்சு  போயிட்டே.   ஒருவர் இருவரல்ல  நிறைய பேர்  இருபது  வருஷம் குறைச்சல் பத்தி சொன்னது அவளுக்கு  ஆனந்தத்தை தந்தது 
வாசலில் சென்றாள்   ஆட்டோ என்று கத்தினாள்  சாலையின் எதிர் பக்கம் நின்றிருந்த  ஆட்டோ நகர்ந்தான். அவனை நோக்கி ஓடினாள். அதை தண்ணீர் லாரி காரன் எதிர்பார்க்காமல் அவள் மீது எட்டு டன்  ஏறியது.  இருபது வருஷம் கூடினால் என்ன குறைந்தால் என்ன கணக்கு சரிதான் என்று எமனின் ஆள் அவளை தூக்கி போனான்.

WARNINGS OF DEATH



கால தேவன் எச்சரிக்கை - J.K. SIVAN

பராங்குச நாய்டுவுக்கு பதினெட்டு வயதிலி ருந்தே ஒரு சிந்தனை. சில புத்தகங்கள் படித்து, சில பிரசங்கங்கள் கேட்டு, அப்பா, தாத்தா விட்டு வைத்த எண்ணற்ற சொத்துக்கள் நிறைய இருப்பதை அனுபவிக்க, அவசியம் தேவை பூமியில் நீண்ட நாள் என்று புரிந்து விட்டது. நீண்ட நாள் வேண்டு மென்றால் என்ன செய்ய வேண்டும்? நிறைய சாப்பிட்டு, தூங்கி, பேப்பர் படித்து, நடந்து, கச்சேரி கேட்டு நாய்க்குட்டியோடு விளையாடி, பல ஊர்களை சென்று பார்த்தால் போதுமா?? மரணம் என்று ஒன்று இருக்கிறதே அதை அல்லவா வராமல் செய்ய வேண்டும்? அதற்கு என்ன வழி?

தவம் செய்தால் கடவுள் முன்னே வந்து ''உன் தவம் திருப்தியாக இருந்துது நாயுடு, உனக்கு என்ன வேண்டும் கேள் என்று வரம் கொடுப்பாரே'' அப்படித்தானே படித்தோம், கேட்டோம், பாடினோம், ஆகவே தவம் செய்வோம்.

அது சரி அடுத்தது இன்னொரு பெரிய விஷயமாக இருக்கிறதே?
எந்த கடவுளை நோக்கி வரம் இருப்பது?
நிறைய பேர் ப்ரம்மா, விஷ்ணு சிவன் என்று இந்த மூன்று பேரை நோக்கி அல்லவோ தனித்தனியாக பல வருஷங்கள் தவமிருந்தார்கள். கடும் தவம் வேறே
.
சரி. ஆகவே இந்த மூன்று பேரில் ஒருவரை செலெக்ட் பண்ணுவோம். ஆனால் யாரை செலக்ட் பண்ணி தவம் இருந்தாலும் கடைசியில் வரம் பெற்றவன் இறந்து அல்லவோ போயிருக்கிறான்?. எவனும் மரணத்திலிருந்து தப்பவில்லையே? ஆகவே என்ன தோன்றுகிறது இதிலிருந்து?
மரணம் வரக்கூடாது என்றால் இந்த மூன்று பேரில் எவரையும் நம்பி பிரயோஜனமில்லை.

பராங்குச நாயுடு பல இரவுகள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
பேசாமல் அந்த மரணத்திற்கு அதிபதியான எமதர்ம ராஜனையே நோக்கி தவமிருப்போம். அவன் தயவு வைத்தால் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுவானே . அது அவன் டிபார்ட்மென்ட் அல்லவா. அவனை பேசாமல் கைக்குள் போட்டுக்கொண்டால்??... இதல்லவோ சமயோசிதம். சபாஷ் பரங்குசா, உன் புத்தி கூர்மையே கூர்மை'' என்று தனக்கு தானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண் டான்..

இந்த கதை சீக்கிரம் முடியவேண்டும் என்பதற் காக பராங்குச நாய்டுவின் கடுந்தவம் பல காலம் தொடர்ந்து முடிந்ததாக அரை வரியில், எழுதி விட்டு மிகுந்த திருப்தியடைந்த யம தர்ம ராஜனை நாயுடு முன்னால் நிற்கவைக்கிறேன்.
''பக்தா நீ என்னை நோக்கி இவ்வளவு கடுந்தவம் புரிவாய் என்று நான் நினைக்கவில்லையே. நிறைய பேர் என்னை நினைப்பதே இல்லை. ரொம்ப சந்தோஷம். எதற்கு என்னை நோக்கி தவமிருந்தாய்?. என்ன வேண்டும் உனக்கு கேள் ? '' யமதர்மன் பெருத்த உருவத்தோடு, சிவந்த கண்களுடன், ஜொலிக்கும் கிரீடம் மேல் ஒரு கூரான வாள் தொங்க, கன்னங்கரேல் என்ற ஒரு டில்லி எருமை போல் ஒன்றின் மேல் ஏறி கையில் ஆள் (ஆயுள்) பிடிக்கும் கயிறு தொங்க வந்து நின்றான். மீசையை முறுக்கி '' சொல்லு'' என்றான் யமதர்மன்

பராங்குச நாயுடு பயந்து நடுங்கினான். பேச்சு கஷ்டப்பட்டு வந்தது.

''உங்கள் அருளால் எனக்கு மரணமே சம்பவிக்க கூடாது''

''அப்பனே, அது யாராலும் காரண்டி கொடுக்க முடியாத விஷயம். எவரானாலும் பிறந்தால் இறப்பது நிச்சயம். எப்போது நிகழும் என்றும் தெரிவிப்பதில்லை. எனக்கு தெரியும். ரகசியம் அது. உனக்கு மட்டும் அல்ல எவருக்குமே சொல்ல மாட்டேன். ஆகவே ரொம்ப வருத்த மாக இருக்கிறது உனக்கு உதவ முடிய வில்லை யே என்று. ''

''ஐயோ எம தர்மா நான் மரணம் வேண்டா மென்று தானே உன்னையே நோக்கி தவம் இருந்தேன்.''

''இல்லை பக்தா. உனக்கு ஒரு உதவி வேண்டுமானால் நான் செயகிறேன். உனக்கு மூன்று எச்சரிக்கை கொடுக்கிறேன். அதிலிருந்து நீ உஷாராக மரணம் எப்போது வேண்டுமானாலும் அதற்குப் பிறகு சம்பவிக் கும் என்று உணர்ந்து கொள் மரணத்துக்கு உன்னை தயார் செயது கொள் ... சரியா? . இது ஒன்று தான் என்னால் உனக்கு உதவ முடியும். நான் வருகிறேன்'' என்று யமன் எருமை வாகனமேறி திரும்பி விட்டான். மறைந்தான்.

பராங்குச நாயுடுவுக்கு பரம சந்தோஷம். '' ஆஹா நல்ல ஆள் இந்த யமன். நமக்கு மூன்று எச்சரிக்கை தருகிறேன்'' என்று ஒரு சலுகை காட்டி இருக்கிறானே.. அதுவரை நாம் நன்றாக ராஜ போக வாழ்க்கை வாழ்வோம். அப்புறம் மரணத்தை பற்றி கவலைப் படுவோம்..

பல வருஷங்கள் பராங்குச நாயுடு சந்தோஷ
மாக வாழ்ந்தான். வயதாகி கிழவன் இப்போது. காதோரம் தலையில் எல்லாம் நரைத்து சொட்டை விழ ஆரம்பித்தது. உடனே நல்ல டாக்டர் ஒருவரை பார்த்து நிறைய FEES கொடுத்து சொட்டை தெரியாமல் தலைமுடி நாற்று நட்டுக்கொண்டான். கருப்பு நிற மை தடவிக்கொண்டு வெள்ளை நிற முடியை கருப்பாக்கி இளமையாக காட்டிக் கொண்டான். இன்னும் சில வருஷம் ஆகியும் யமன் வரவில்லை என்று நாயுடு மகிழ்ந்தான். எத்தனையோஎங்கெங்கோ ஆள் பிடிக்கும் வேலையில் நம்மை வேண்டுமென்றே மறந்துவிட்டு இன்னும் எச்சரிக்கை கொடுக்க வில்லை யென்றால் என்ன அர்த்தம். மரணம் இன்னும் பல காலம் நமக்கு கிடையாது என்று தானே பொருள்? எச்சரிக்கை தான் அவன் கொடுக்க வராமல் மறந்து விட்டானே.

பத்தடி தூரத்தில் எருமை நின்றால் கூட தெரியாமல் கண் பார்வை மங்கியதும் பராங்குச நல்ல கண் டாக்டரை தேடி தங்க FRAME போட்ட கண்ணாடி மாட்டிக்கொண்டான். மாடு பக்கத்தில் அம்மா என்று கத்தியது அப்பறம் தான் தெரிந்தது. இன்னும் சுகமாக சில காலம் வாழ்ந்தான் நாயுடு . நாளாக நாளாக பல் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக பொருள்விளங்கா உருண்டை கடித்து உதிர்ந்தது போல் அவனை விட்டு வெளியேறி வாய் ஜிப் ZIP இல்லாத பர்ஸ் போல் ஆனது. பொய்ப்பல் ஒட்டிக்கொண்டான். எதையும் ''கடிக்காதே'' என்று தான் டாக்டர் சொல்லிவிட்டாரே .
ஏன் இந்த யமன் எச்சரிக்கவே வரவில்லை? . நம் பக்கம் அவன். யோக்கியமானவன். என்று பராங்குச நாய்டு சந்தோஷமாக நினைத்து ஒரு நாள் சாயங்காலம் சினிமா போக வாசலில் செருப்பு காலில் மாட்டும்போது எதிரில் யமன் வந்து நின்றான். அதே தோற்றம். கயிறு சுருக்கு போட்டு அவன் பக்கம் ஆடியது.

''அடேடே, எம தர்மனா வரவேண்டும். என்ன விஷயம். முதல் எச்சரிக்கையா? சொல்லுங்கள். எப்போது மரணம் ? இன்னும் பல காலம் இருக்கு போல் தெரிகிறதே. தேங்க்ஸ் '' '

''பராங்குச நாடு, பத்மநாப நாய்டு மகன், 18 , பரக்காவட்டி தெரு,... நரப்பாக்கம்... வயது 71. நீ தானே அப்பா அது? '''

''ஆமாம் சரியாக என் விஷயங்கள் சொல்லிவிட்டீர்கள். எதற்கு என்ன விஷயம்.?
''உன் நேரம் முடிந்து விட்டது. பூலோக வாழ்க்கை அவ்வளவுதான் உனக்கு. கிளம்பு. வழக்கமாக நான் வருவதில்லை என் ஆள்கள் தான் வருவார்கள். உன் விஷயத்தில் உன் தவம் என்னை நோக்கி என்பதால், எனக்கு அது மகிழ்ச்சி தந்ததால், நானே உன்னை ''இட்டுக்கொண்டு '' போக வந்திருக்கிறேன்.

''ஐயய்யோ . எமதர்மா, வார்த்தை தவறிவிட்டாய்..... எனக்கு மூன்று முறை முன் எச்சரிக்கை தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி விட்டு இப்போது திடீரென்று ஏதோ பார்க்குக்கு வாக்கிங் போவது போல் கூட்டிக்
கொண்டு போவது நியாயமா, தர்மமா எம தர்மா?

''முட்டாளே உனக்கு நான் மூன்று எச்சரிக்கை கொடுத்து வெகு காலம் ஆகிவிட்டதே. காதருகே நரை எதற்கு கண்ணாடியில் தெரியும்படி கொடுத்தேன்? . இனியாவது உன் நினைவு கடவுள் மீது திரும்பட்டும், நல்லதே செய், நல்லதே நினை.இறைவனை நம்பு. ''

அதை விட்டாய் என்று ரெண்டாவது எச்சரிக்கையாக உன் கண் பார்வை மங்க வைத்தேன். ஏன்? உன் அகக்கண் திறக்கட்டும். அது ஒளி தரட்டும் என்று ... அதையும் நீ கண்டுக்க வில்லை.

உன் பல்லைக் கழட்டினேன்... பல் போனால் சொல் போச்சு என்பார்களே உங்கள் ஆட்கள்... இனியாவது நாராயணா, பரந்தாமா என்று ஒரு சொல்லாவது சொல்ல மாட்டாயா என்று எதிர் பார்த்தேன்.... ''கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலர் பாட்டு தான் நீ பாடினாய்.'' சரி பேச நேரமில்லை கிளம்பு.

''ஐயோ நான் புரிந்து கொள்ளாமல் விட்டேனே. தர்மா என்னை கொஞ்சம் காப்பாற்றேன்''

சரி கடைசி சந்தர்ப்பம். உன் உயிர் பிரியுமுன்பு, உனக்கு ஒரு வினாடி நேரம் தருகிறேன். மனம் திறந்து, கண் மூடி, மனம் வாக்கு காயத்தால் உன் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு பரந்தாமா உன் திருவடியே துணை என்று ''அரை நிமிஷ நேரமட்டும் '' துதி. உனக்கு என் டிபார்ட்மென்ட் நரகம் இல்லாமல் மோக்ஷ சவுகரியம் தருகிறேன்.''

பராங்குச நாய்டுவுக்கு மட்டும் அல்ல, கால தேவன் தலை மேல் கத்தி தொங்குவதால், பாரபக்ஷ
மின்றி, எல்லாருக்கும் இந்த மூன்று எச்சரிக்கை தருகிறான். அப்போதைக்கு சொல்ல முடியுமோ முடியாதோ, இப்போதைக்கு நாராயணா என்று சொல்லிவிடுவோம். சொல்லிக்கொண்டே இருப்போம்.

(எங்கோ ஒரு முறை காஞ்சிமட பெரியவா ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பக்தர்களுக்கு தமாஷாக சொன்ன கதையின் வர்ணனை)

NALA CHARITHRAM



ஐந்தாம் வேதம். (மஹா பாரதம்)   J.K. SIVAN 
நள  சரித்திரம் 

                      துன்பம்  சாஸ்வதமல்ல

''வைசம்பாயனரே,  என்ன என்ன கஷ்டம் எல்லாம்  நமது முன்னோர்கள்  பட்டிருக்கின்றனர் என்று அறியும்போது  நாம்  எவ்வளவு பாக்யசாலிகள் என்று புரிகிறது'' என்றான்  ஜனமேஜயன்.

''ஆமாம்  ஜனமேஜயா,  அவர்கள்  தெய்வீகமானவர்கள். கஷ்டத்தை கஷ்டமாக எடுத்துக்கொள்ளாதவர்கள்.  அதை ஏற்கத்தகுந்த, ஏற்கவேண்டிய  கடமையாக, கர்ம பலனாக அனுபவித்து  இறைவனிடம் நன்றியோடு வாழ்ந்தவர்கள். ஒன்று சொல்கிறேன் கேள்:

'' பெரியோர் செய்த புண்ணியம் எல்லாம்  அவர்களது தலைமுறையில்  பின்னால்  வருவோர்க்கு தான்  பலனளிக்கும்.  எனவே தான்  நல்லதையே நினைத்து நல்லதையே செய்யவேண்டும். இறைவனது அருள் கிடைக்க  நம்மாலான சரீர, சம்பத்து  உதவிகளை  மனமார  பிறகு செய்யவேண்டும். துன்பம்  வரும் காலத்தில்  நம்மை  தனித் தனியாக அணுகுவதில்லை.  எல்லாம்  ஒட்டு மொத்தமாக  சேர்ந்தே  வரும். 

உனக்கு  நான் சொல்லிவருகிறேனே  நளனும்  அவன் மனைவி தமயந்தியும் பிரிந்து பட்ட கஷ்டங்கள் பற்றி.  மேலே கேள்.

 இதுவே தமயந்திக்கு நேர்ந்தது. நாடு, நகரம், நண்பர்கள்,  சேனை, மக்கள், செல்வம்,  பிள்ளைகள், கணவன், சகலமும் பிரிந்தாகிவிட்டது. உதவியவர்கள் சிலரையும், ஒரு யானைக்கூட்டம் ஒன்று சிதறடித்து, அவப்பெயரை  வாங்கித்  தந்ததே. விதி அல்லவோ இது?  மனதாலும்  ஒருவருக்கும்  கெடுதல் நினைக்கவில்லையே?  இறைவா உன் சோதனை இன்னும்  இருக்கிறதா எனக்கு?

சேதி  தேசத்து  ராஜா அரண்மனை அருகே வியாபாரிகள்  தமயந்தியோடு அவர்கள் வந்தபோது  மேலே உப்பரிகையில்  ராணி  தமயந்தியின்  நிலையை பார்த்து விட்டு, ஒரு தாதியை  அனுப்பி  அவளை அழைத்து வர செய்தாள் .

 "நீ யாரம்மா?''  என்று அந்த ராணி  கேட்டதற்கு  தனது விருத்தாந்தங்களை தமயந்தி சொல்கிறாள்.

' நீ  என்னுடனேயே  இரு என்று  அந்த  ராணி அவளுக்கு அடைக்கலம்  தந்தாள். ஆட்களை விட்டு  உன் கணவனை தேடச் சொல்கிறேன். எங்கெல்லாமோ சுற்றி  அவனும் இங்கே  வரக்கூடும்.'' அதுவரை நீ ஜாக்கிரதையாக இங்கே இரு''

'' அம்மா  நீங்கள்  ஆதரவு தருவதற்கு நன்றி.  என்னை  எந்த  ஆடவரும் சந்திக்கவேண்டாம்.  நான்  எவருக்கும்  பணி  செய்யமாட்டேன். என்னை அத்துமீறி  எவராவது துன்புறுத்தினால்  அவர்களுக்கு மரண தண்டனை  நீங்கள் வழங்க வேண்டும்.  இதற்கு ஒப்புக்கொண்டால்  நான் இங்கு தங்குகிறேன்.'' என்றாள்  தமயந்தி.  அரசியும் சரி என்றாள் .

அரசகுமாரி சுனந்தாவின்  அந்தப்புரத்தில் அவரது  தோழியாக  தமயந்தி குடி புகுந்தாள் .
நளன்  பசியோடு இரவில்  தமயந்தியை விட்டு பிரிந்து  தனியே நடந்து சென்றானே அவனுக்கு என்ன ஆனது என்று கொஞ்சம் அறிவோம்.

 தமயந்தியை விட்டு பிரிந்த நளன்  காட்டில் அலைந்து ஒரு இடத்தில்  தீ  பற்றி எரிவதை கண்டான்.  அதன் நடுவில் ஒரு  பெரிய நாகம்  தவித்துக் கொண்டிருந்தது.   நளனைப்  பார்த்ததும்  ''தேவனே,  தக்க சமயம் வந்தீர். என்னை இங்கிருந்து எப்படியாவது  அப்புறப்படுத்தவேண்டும். உதவுங்கள்''   என்றது.

யார்  நீ?

நான்  கார்க்கோடகன், தேவரிஷி நாரதரின் சாபத்தால்  இந்த  தீவட்டத்தில்  இடையே  தவிக்கிறேன்.  என்னை  நளன்  என்று ஒரு அரசன் வந்து விடுவிப்பான். அதுவரை  காத்திரு ''  என்று சொன்னார்.

'' நான் தான்  நளன்''

மெதுவாக  கார்க்கோடகனை எடுத்து  தீயிலிருந்து மீட்டு  வேறு ஒரு  இடத்தில் விட்டான்  நளன் .  '' நளா, நீ  என் நண்பன். ஒரு சில அடிகள் இங்கிருந்து எடுத்து வை.   எண்ணிக்கொண்டே போ.''   நளனும்  அவ்வாறே செய்தான். ஒரு  பத்தடி  கூட  போயிருக்க மாட்டான்.  கார்கோடகன்  அவனை கடித்தான்.  நளன்  நிறமும் உருவும் மாறி விட்டான்.  

''உனக்கு  உயிர் மீட்டு  உதவினேனே   இது தான் எனக்கு உன் கைம்மாறா  கார்க்கோடகா?'' என்றான் நளன் .

''நளா, நான் உனக்கு நல்லது தான் செயகிறேன். என் சொல்லை தயவு செயது கொஞ்சம் கேள்.  இனி உன்னை  யாரும்  அடையாளம்  காண மாட்டார்கள். உன்னுள்ளே  உன்னை  ஆட்டிபடைத்த  கலி /சனியின்  தீய சக்தி இப்போது முதல்  என்னுடைய கொடிய  விஷம் உன்னுடைய  உடம்பில் இப்போது இருப்பதால், அவதிப்படும்.  உன்னைவிட்டு   கலி /சனி  நீங்கும்வரையில்  என்னுடைய  விஷம்  அவனை  வாட்டிக்கொண்டே இருக்கும். இது நான் உனக்கு செய்யும்  பிரதியுபகாரம்.  ஒரு பாவமறியாத  உனக்கு  துரோகம் செய்தவனுக்கு   இது தான்  நான்  தரும்  தண்டனை. என் விஷத்தால்  உனக்கு  எந்த துன்பமும் வலியும் உடலில்  உண்டாகாது.

நீ  இங்கிருந்து அயோத்யாவுக்கு செல்.   அங்கே அரசனாக இருக்கும் ருதுபர்ணன்  உனக்கு  பகடைக்காய்  ஆட்டத்தின் ரகசியங்களை சொல்லித்தருவான். உனது அச்வ சாஸ்திரம் அவனுக்கு  உபயோகமாகும்.  இக்ஷ்வாகு  அரச வம்சம் உனக்கு  உதவும். உன் மனைவி மக்களை க்ஷேமமாக  மீண்டும்  காண்பாய்.  இதோ இந்த  வஸ்திரத்தை  ஜாக்கிரதையாக  வைத்துக்கொள்.  எப்போது உனது  பழைய உருவம் உனக்கு தேவைப்படுகிறதோ  அப்போது இதை உடுத்திக்கொள்.அடுத்த கணமே  பழைய  அழகிய  நள மஹாராஜனாக உருவம் பெறுவாய்.''  என்றான் கார்கோடகன்.  

''வ்ரிஹதஸ்வ மகரிஷி,  நள  தமயந்தி புராணம் இதுவரை நான்  கேட்டதில்லை.  நான்   ஒருவன் தான் இப்படி  துன்புற்றேன் என்று   நினைத்துக்கொண்டிருந்தேன்.என் முன்னோர்களும்  இதை அனுபவித்தி ருக்கிரார்களே''  என்றான்  யுதிஷ்டிரன்

மேலே சொல்லுங்கள்  மகரிஷி  என்றாள்  திரௌபதி. பெண்ணல்லவா, அவள் மனம்  தமயந்தியின்  துன்பம்  விலகவேண்டும் என்று  ப்ரார்த்தித்தது . 

ADVICE




ஒரு அறிவுரை J.K. SIVAN



கலீல் கிப்ரான் ஒரு அருமையான பாரசீக அறிஞன். கவி. எனக்கு பிடித்த கவிஞன். எனக்கு அவனை அறிமுகப்படுத்தியது எனது ஆரம்ப கப்பல் நிர்வாக உத்தியோக காலத்தில் என்னுடைய மேலதிகாரி. எதை எழுதினாலும் அதில் ஒரு கிப்ரான் பொன்மொழி உபயோகிப்பவர். அவர் ஆத்மா சாந்தியடையட்டும். இன்று கிப்ரான் கொஞ்சம் படித்தேன். அதில் ஒரு அருமையான வாசகம்.
: "I have learned silence from the talkative, tolerance from the intolerant, and kindness from the unkind; yet, strange, I am grateful to those teachers"
ஆம், ''புயலில் தான் அமைதி உருவாகிறது. நிறைய பேச்சில் தான் மௌனம் புரிகிறது. கொடூரத்தில் தான் கருணை புரிகிறது. இப்படி உண்மையை உணர்த்துபவைகளுக்கு, உணர்த்துபவர்களுக்கு நன்றி''. '
ப்ரணதார்த்திக்கு எப்போது யார் மீது கோவம் வந்து வெடிப்பான் என்று பகவானுக்கே தெரியாது. ஹல்வா சாப்பிடும்போது கூட கடுகடு என்று மூல வியாதிக் காரன் மாதிரி முகம். சந்தோஷம் என்ற வார்த்தையே அறியாதவன். எவனோ ஒருவன் தெரியாமல் ''சார் இங்கே ஷண்முகம் தெரு எங்கே?'' என்று கேட்டுவிட்டு வாங்கிக்கட்டிக்கொண்டு இனிமேல் எந்த சண்முகமோ சுப்ரமணிய மோ பேர் கொண்ட எந்த ஒரு தெருவுக்கும் போகமாட்டேன் என்று போய்விட்டான்.
யார் எது சொன்னாலும் செய்தாலும் அதில் தப்பு கண்டுபிடிப்பது அவனது வியாதி. பிராண தீர்த்தி (உயிரை எடுப்பவன்) என்று கூட வேலை செய்பவர்கள் ... நண்பர்கள்... (அப்படி யாரும் இல்லை, ஒருவனைத்தவிர குப்பு சுவாமி... அவனுக்கு காது கொஞ்சம் மந்தம் என்பதால் ப்ரணதார்த்தி சொல்வது பாதி காதில் விழாதே.) அவனுக்கு பேர் வைத்திருந்தார்கள்.
ப்ரணதார்த்திக்கு கல்யாணம் வேறு ஆகிவிட்டது. ஜலஜாவால் அவனை தாக்குபிடிக்கமுடியவில்லை. தற்காப்புக்கு கத்த ஆரம்பித்தாள். அவனைவிட குரல் உச்ச ஸ்வரத்தில் கத்தியதால் ப்ரணதார்த்தி கொஞ்சம் அடங்கினான். அவனுக்கே அவன் குறை தெரிந்தது. இருந்தாலும் அவனிடம் குறை கண்டு, யாராவது அறிவுரை கொடுத்தால் அங்கேயே ஒரு உயிர் பிரியும். அந்த அளவுக்கு கத்துவான்.
சுப்புசாமி டாக்டர் ப்ரணதார்த்திக்கு எப்படியோ அறிமுகமாகி அவனை நன்றாக புரிந்து கொண்டுவிட்டார். அவன் குணம் தெரிந்த மனோதத்துவ நிபுணர். நிறைய ப்ரணதார்த்திகளை பார்த்தவர்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அல்லவா. நீ இப்படி செய்து பார் பிரண தார்த்தி..
''இனிமேல் நான் ஹாஸ்யம் நிறைய ரசிப்பேன், எல்லோருடனும் சிரித்து பேசுவேன். சந்தோஷமாக இருப்பேன்''
பொழுது விடிந்தது முதல் இரவு படுக்கும் வரை தினமும் மணிக்கு ஒரு தடவை இதை கண்ணாடிக்கு முன்னால் நின்று சொல்லு '' என்கிறார். அவன் வேலை பார்க்கும் அவனது மேலதிகாரி உறவினர் டாக்டர் சுப்புசாமி. உனக்கு உத்யோக உயர்வு சம்பள அதிகரிப்பு எல்லாம் நான் சிபாரிசு செயகிறேன் இதை நீ செய்தால் என்று தூண்டிலில் மீனுக்கு புழு மாட்டினார்.
ஒரு மாதம் ஆகி விட்டது. ப்ரணதார்த்தி விடாமல் மணிக்கொரு முறை பல நாட்கள் இதை சொல்லி சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அவனிடம் தெரிந்தது .
அவன் முகத்தில் இயற்கையாகவே கொஞ்சம் சிரிப்பு தெரிந்தது. கண்கள் கோபமின்றி மலர்ந்தன. யாரா வது ஏதாவது சொன்னால் வாய் விட்டு சிரித்தான். தானும் பதிலுக்கு ஏதாவது சிரிக்கும்படியாக சொன்னான். அவன் மனைவி ஜலஜாவுக்கு ஆச்சர்யம். ஆபீஸிலும் இப்போது அவன் அருகே சில தலைகள்.
கோபம் அவனிடம் அடிக்கடி வந்து இப்போது குளிர்ந்த அமைதியாகி விட்டது. நண்பர்கள் பெருகினர் . எதெல்லாம் அவனுக்கு துன்பம் விளைவித்ததோ அதெல்லாம் இப்போது அவன் மாற்றத்துக்கு வழி கோலியவை. அவைகள் இல்லையென்றால் அவன் மாறியிருக்க முடியுமா?
கோபம், வெறி, பயம் ஆகியவை தான் ஒருவனை நிலைகுலையச் செய்வன. யார் மீதாவது கோபம், எரிச்சல் வந்தால் உன்னை புரிந்து கொள்ள அவை நல்ல சந்தர்ப்பங்கள். இழக்காதே. பயத்தை சந்தித்தால் தான் பயமற்று இருக்க முடியும். எதிர்ப்பு இருந்தால் தான் வரவேற்று உன் திறமை மேல் நீ நம்பிக்கை கொண்டு வெல்ல முடியும். கசப்பு மருந்து தானே குணப்படுத்துகிறது. கூரிய ஊசியால் குத்தினால் தானே வியாதி குணமடைகிறது. ஆகவே, கோபம், எரிச்சல், பயம் இவற்றை கண்டு அஞ்சாதே. எதிர்கொள் உனக்கு உலகை புது மாதிரியாக பார்த்து அனுபவிக்க உதவும் கண்கள் அவை.

Friday, September 28, 2018

BUDHDHA



''புத்தரின் போதனை..''. J.K. SIVAN

காருண்ய மூர்த்தி புத்தர் ராஜ வம்சம். சித்தார்த்தன் கௌதமன் என்ற இளவரசன். நேபாளத்தில் லும்பினி கிராமத்தில் பிறந்தான். கபிலவாஸ்துவில் வளர்ந்தான். கி.மு.563ஐ சேர்ந்தவன். பின்னர் மாபெரும் உலகம் போற்றும் துறவி புத்தரானவன்.

அசிதர் என்ற ரிஷி அவன் அப்பா ராஜா சுத்தோதனரிடம் ''மஹாராஜா, உங்கள் மகன் கௌதமன், மிகப்பிரபல சக்ரவர்த்தியாக வருவான். அல்லது சகலமும் துறந்த மிகப் பெரிய துறவியாகவும் ஆகலாம்'' என்றார். ராஜாவுக்கு தனது செல்ல மகன் துறவியாவதில் விருப்பம் இருக்குமா? எனவே அந்த இளவரசன் மிக நேர்த்தியாக அரச போகங்களோடு எந்த குறையும் இன்றி வெளியுலகமே தெரியாதவாறு வளர்க்கப்பட்டவன்.

அப்புறம் நடந்தது தான் நிறைய படித்திருக்கிறோமே.

புத்தரின் பிறந்த நாள் புத்த பூர்ணிமா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மஹாயான புத்த மதத்தினரின் 'தேரவாட த்ரிபிதக' நூல் பிரகாரம் அவர் பிறந்தநாள் புத்த பௌர்ணிமா ஆகும்.

ஒருநாள் புத்தர் தனது சீடன் ஆனந்தாவுடன் பிக்ஷைக்கு சென்றபோது ஒரு வீட்டின் வாசலின் நின்றார்கள்.

''ஏன்யா தடி மாடுகளா, உங்களுக்கு உழைச்சு திங்க வழியா இல்லை. சோம்பேறிகளா பிச்சை எடுக்க வந்து நிக்கிறீங்களே. போங்கடா. '' கதவை படார் என்று சாத்தினாள் அந்த வீட்டு அம்மணி.

ஆனந்தாவுக்கு படு கோபம். ''குருவே எனக்கு உத்தரவு கொடுங்கள் அந்த பெண்ணுக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன்''

''பேசாமல் வா''. அமைதியாக புத்தர் அவனை அழைத்துக் கொண்டு நடந்தார். சற்று தூரம் நடந்தார்கள்.

''ஆனந்தா, இந்த தண்ணீர் கமண்டலத்தை வைத்துக் கொள்'' இருவரும் சற்று ஓய்வெடுத்துவிட்டு மேலே நடந்தார்கள்.

சிறிது நேரம் கழிந்தது.

''ஆனந்தா உன் கையில் வைத்திருக்கிறாயே தண்ணீர் பாத்திரம் அது யாருடையது?''

''உங்களுடையது தான் குருதேவா''

அதை வாங்கிப் பார்த்த புத்தர் ''ஆனந்தா, இல்லை அப்பனே. இது உனக்கே தான் . நான் தான் இதை நீயே வைத்துக்கொள் என்று உனக்கு பரிசாக கொடுத்துவிட்டேனே ''

ராத்திரி மீண்டும் புத்தர் '' ஆனந்தா இது என்ன, யாருடையது?'' என்று அதே கமண்டலத்தை பார்த்து கேட்டபோது ஆனந்தன் ''குருவே, இது என்னுடையது. எனக்கு உங்களிடமிருந்து பரிசாக வந்தது''

புத்தர் சிரித்தார்.

''குருவே எனக்கு புரியவில்லை. எதற்கு இந்த சிரிப்பு, விளக்குங்களேன்''

''ஆனந்தா, நான் காலையில் கேட்ட போது இந்த கமண்டலம் என்னுடையது என்றாய். இப்போது உன்னுடையது என்கிறாய். ஒரே கமண்டலம் எப்படி நம் இருவருக்கும் சொந்தமானதாகும்?''

ஆனந்தனுக்கு குழப்பமாயிற்று. புரியவில்லை. புத்தரை கேட்டான்:

''குருவே, நீங்கள் தானே இந்த கமண்டலத்தை எனக்கு பரிசாக கொடுத்தேன் என்கிறீர்கள். நான் பெற்றுக் கொண்டேன். அதனால் என்னுடையது தானே என்று சொன்னேன். முதலில் நீங்கள் என்னிடம் கொடுத்தபோது ''வைத்துக் கொள் '' எனறு மட்டுமே சொன்னதால் அது என்னுடையதாக இல்லை. உங்களுடையதாக மட்டுமே இருந்தது. .அப்புறம் எனக்கு தானமாக வந்தபோது என்னுடையது என்றேன்''

''அப்பனே ஆனந்தாஇதிலிருந்து என்ன புரிகிறது?.

அந்த வீட்டில் அந்த பெண் கோபித்துக் கொண்டபோது ''அந்த வார்த்தைகள் என்னைச் சேர்ந்ததல்ல அவளுடையவை'' என்று நான் கருதியதால் அவளது சொற்களை நான் லக்ஷியம் செய்ய வில்லை
. ஏற்கவில்லை. என்னை நோக்கி வீசப்பட்டாலும் அந்த சுடு சொற்கள் அவளுடையது தானே . அதனால் தான் நீ அவளுக்கு பாடம் கற்பிக்க எந்த அவசியமும் இல்லை . பேசாமல் நடந்து வா'' என்றேன்.

இதில் ஒரு பேருண்மை புதைந்திருக்கிறது. யாரோ உன்னை கடுமையாக திட்டியபோதும் அது உன்னை நோக்கி அல்ல என்று நீ கருதினால் உன்னை அது ஒரு போதும் பாதிக்காது. உன்னைப் பொறுத்தவரை நீ சோம்பேறியோ, வேலையில்லாதவனோ, முட்டாளோ அல்ல. உன் வேலையை, பொறுப்பை உணர்ந்து நீ கண்ணும் கருத்துமாக உழைப்பவன். மற்றவன் சர்டிபிகேட் உனக்கு எதற்கு? அதற்கு மதிப்பு கொடுத்து உள் வாங்கிக்கொண்டால் அல்லவோ உனக்கு ரத்தக் கொதிப்பு,கோபம், வருத்தம் எல்லாம் வருகிறது.
++
ஒருவன் சோம்பேறியாக இருந்தாலும் அவன் மாறுவதற்கு வழி உண்டா? ஒரு கதையை இது விஷயமாக சொல்லட்டுமா?

ஒரு சுறுசுறுப்பான வியாபாரி. கப்பல் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம். பணத்தில் கொழித்தான். போதாத காலம் ஒரு நாள் அவன் கப்பல் சாமான்களோடு புயலில் சிக்கி கடலில் முழுகியது. எல்லா பணமும் போய் ஓட்டாண்டியானான். கடன் நெருக்கவே எல்லாவற்றையும் விற்று பறி கொடுத்து பிச்சைக்காரனானான்.ஐந்து வருஷ காலம் புரட்டி எடுத்துவிட்டது அவனை.

கஷ்டப்பட்டு முன்னேறினான். மீண்டும் ரெண்டு கப்பல் வாங்கினான். முன்னிலும் அதிக பணக்காரனாக வளர்ந்தான். எல்லோரும் அவனை அணுகினார்கள். எப்படியடா மீண்டு வந்தாய்? என கேட்டார்கள்.

''என் வியாபாரம் தோல்வியை சந்தித்தது என்று தானே சொன்னேன். நானா தோல்வியடைந்தேன்? இழந்த வியாபாரத்தை மீண்டும் நிலைநிறுத்தினேன்'' என்றான்.

தோல்வி வெற்றி, இகழ்ச்சி, புகழ்ச்சி, ஒருவனை உள்ளே ஆட்கொள்ளக் கூடாது. இடம் கொடுத்தால், ஆசாமியை சாப்பிடுட்டுவிடும். தைர்யம், மனஉறுதி, கடின உழைப்பு, தன்னம்பிக்கையோடு கலந்த ஈஸ்வர பக்தி இருந்தால் எவனுமே எதற்குமே கலங்கவேண்டியதில்லை. பிறரின் போற்றலோ ,தூற்றலோ லக்ஷியம் பண்ண வேண்டிய
தில்லை.


attached photo of Budhdha is in one of our FB friend's house where He is in a meditation place

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...