Wednesday, September 5, 2018

GITANJALI



கீதாஞ்சலி J.K. SIVAN
ரபீந்திரநாத் தாகூர்

''க்ரிஷ்ணய்யா வா.....

மஹா மேதாவி பக்தர் தாகூர். அவருடைய கீதாஞ்சலி ஒன்று இன்றைக்கு படித்து வழக்கம்போல் எழுதுகிறேன். நான் எழுதியது எனக்கே பிடித்தது.

You came down from your throne and stood at my cottage door.
I was singing all alone in a corner, and the melody caught your ear. You came down and stood at my cottage door.
Masters are many in your hall, and songs are sung there at all hours. But the simple carol of this novice struck at your love. One plaintive little strain mingled with the great music of the world, and with a flower for a prize you came down and stopped at my cottage door.I had gone a-begging from door to door in the village path, when thy golden chariot appeared in the distance like a gorgeous dream and I wondered who was this King of all kings!

My hopes rose high and methought my evil days were at an end, and I stood waiting for alms to be given unasked and for wealth scattered on all sides in the dust.

The chariot stopped where I stood. Thy glance fell on me and thou camest down with a smile. I felt that the luck of my life had come at last. Then of a sudden thou didst hold out thy right hand and say `What hast thou to give to me?'

Ah, what a kingly jest was it to open thy palm to a beggar to beg! I was confused and stood undecided, and then from my wallet I slowly took out the least little grain of corn and gave it to thee.

But how great my surprise when at the day's end I emptied my bag on the floor to find a least little gram of gold among the poor heap. I bitterly wept and wished that I had had the heart to give thee my all.

நான் சந்தோஷமாக இருந்தேன். ஏன்? உன் நினைவில்?
ஆகவே, என் சந்தோஷம் எப்படி வெளிப்பட்டது? நான் உரக்க பாடினேன். ''ஹரி மாதவா கிருஷ்ணா.... பாரோ க்ரிஷ்ணய்யா ..........''
எங்கோ அரண்மனையில் சிம்ஹாஸசனத்தில் இருந்த உன் காதில் என் கானம் விழுந்து தான் நீ என் குடிசையின் வாசல் கதவை திறந்து வந்திருக்கிறாய். என் பாட்டு எந்த பெரிய சபையிலும் பக்க வாத்யத்தோடு நடக்கவில்லை. என் குடிசையில், ஓரு மூலையில் அமர்ந்து கை தட்டி பாடினேன். என்னை மறந்துவிட்டேன். ஓஹோ, என் பாட்டு பிடித்து நீ இங்கே வந்தாயா. சிரிக்கிறாயே! என் பாட்டின் இனிமையிலா? அட இதுவும் ஒரு பாட்டு என்றா? இவன் பாடினானா ஏதோ உடம்பு வலியில் கத்தினானா என்று பார்க்கவா?
எப்படி இருந்தால் என்ன கிருஷ்ணா, நான் பாடியதும் நீ வந்திருப்பதும் ஏதோ சந்தர்ப்பவசத்தால் என்றாலும் இருந்து விட்டுப்போகட்டும். உன் அரண்மனையில் நீ கேட்காத பாட்டா? சங்கீத ஜாம்பவான்கள், மஹா வித்துவான்கள், வைணீகர்கள் வாத்திய கோஷ்டிகள், சதா சர்வகாலமும் உன்னை புகழ்ந்து பாடுவார்களே அதெல்லாம் எனக்கு தெரியாதா?

''வா க்ரிஷ்ணய்யா வா'' என்று இந்த கத்துக்குட்டி ஆசையாக, பாசமாக, மனதில் உன் நினைவு பூரா நிரம்ப அழைத்தேன், கத்தினேன். நீ வந்துவிட்டாயே .

உன் கருணையை நான் எப்படி சொல்வேன்? . எப்படி நன்றியை உணர்த்துவேன்? என் மனத்துயர் நீங்க உருகி, உருகி, உன்னை நினைந்து நான் பாடியது ஒரு பாட்டா ?
ஒரே ஒரு காட்டுப்பூ ஒன்று கிடைத்து அதை எடுத்து உன் படத்தில் மேல் போட்டு உன்னை நினைத்து பாடினதற்கு இவ்வளவு பெரிய பரிசா..... நீயாகவே வந்ததா? என் குடிசை வாசல் கதவு க்ரீச்ச் என்று சத்தமிட அதை திறந்து உள்ளே தலை இடி படாமல் குனிந்து வந்து என் எதிரே நிற்கிறாய் கண்ணா '' நான் என்ன சொல்வேன்!! வீடு வீடாகப் போய் நான் யாசித்து உன் புகழ் பாடிக்கொண்டு சென்றேன் எதிரே பெரிய ஊர்வலம்... பெரிய தங்கத் தேர் வந்தது. ... பளபள என்று கண்ணைப் பறித்தது.... அதனுள்ளே கம்பீரமாக வீற்றிருக்கும் ராஜாதி ராஜன் யார் என்று அதிசயித்தேன். நீ தான் அது என்று உன்னைப் பார்த்ததும்தான் தெரிகிறது.

ஆஹா என் நம்பிக்கை வலுத்தது. என் கஷ்டங்கள் என் துன்ப தினங்கள் விலகிவிட்டன. இனி நான் பிக்ஷைக்கு சென்றால் தானாகவே எல்லாம் கிடைக்கும். எங்கும் புழுதி கிடக்க ,என் கண்ணுக்கு மட்டும் செல்வம் மலை மலையாகி குவிந்திருப்பது தெரிகிறதே ......

நான் நிற்கும் இடத்தில், என் எதிரே உன் தங்கத்தேரும் நின்றது. தலையை வெளியே நீட்டி என்னை பார்த்தாய். அடடா என்ன உன் அழகு. அந்த காந்த புன் சிரிப்புக்கு இணை ஏது? எனக்கு வாழ்வில், என் கடைசி காலத்தில் எதிர்பாராத அதிருஷ்டம் கிடைத்து விட்டது.

ஆஹா! இது என்ன ஆச்சர்யம் கிருஷ்ணா. நீயா இப்படி செயகிறாய்? திடீரென்று கையை என் பக்கம் நீட்டி '' எனக்குத் தர என்ன வைத்திருக்கிறாய்? '' என்று கேட்கிறாயே. இப்படி யாராவது விளையாடுவார்களா? எவ்வளவு பெரிய சர்வ சக்தி வாய்ந்த மஹா ராஜா, சக்ரவர்த்தி நீ, என் போன்ற பிச்சைக்காரனிடம் கை நீட்டி என்ன தருவாய் எனக்கு.... என்று .....கேட்கிறாய்... எனக்கு தலை கால் புரியவில்லை. மதி மயங்கிவிட்டது. விரைந்து என் ஜோல்னா பையை துழாவினேன். ஒரு சில தானியங்கள் சிதறி இருந்தன. ஒன்றிரண்டு எடுத்து உன் கையில் ஒரு இயந்திரமாக வைத்தேன். சந்தோஷமாக வாங்கிக்கொண்டு போய் விட்டாய். உன் தேர் பறந்துவிட்டது. நான் கனவா காண்கிறேன்!

சாயந்திரம் வரை இதே, உன் நினைவுதான். என்னால் உனக்கு ஒன்றும் கொடுக்க இயலவில்லையே என்ற வருத்தம் என்னை கண்ணீர் பொழிய வைத்தது. வழக்கம் போல் எங்கெங்கோ சுற்றிவிட்டு என் குடிசைக்கு திரும்பினேன். யாசித்தது, எல்லாவற்றையும் வழக்கம்போல் தரையில் கொட்டினேன். என்ன கிருஷ்ணா இப்படி செய்திருக்கிறாய்? எங்கிருந்து ரெண்டு மூன்று தங்க கட்டிகள் என் யாசகப்பையில் வந்தடைந்தன.

அப்போது எனக்கு சந்தோஷமாக இல்லை. அழுகை பொங்கி வந்தது. ''அடே மடையா, என்னை அப்படியே பிடுங்கி கிருஷ்ணனுக்கு கொடுக்க தோன்றவில்லையே உனக்கு . நல்ல சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு விட்டாயே ''என்று என் இதயம் கேட்கிறதே. அது வெடித்து விடுமோ?.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...