Tuesday, April 30, 2019

GITANJALI



கீதாஞ்சலி               J K SIVAN 
                             
ரபீந்திரநாத் தாகூர் 


                                                       அம்மாவின் பார்வை ....


''சென்னையில்  ஜோ  என்று  விடாத  பெரிய  மழை...''     இது   மே  மாத  செய்தி அல்ல.  ஒரு இனிமையான கனவு .  தூக்கத்திலாவது சில்லென்று காற்று வரட்டுமே.   மேலே  மின் விசிறி  அதிக சப்தம் போடுகிறதே தவிர காற்றை விரட்டுகிறது.   துரோகி. 

இப்போது தாகூரோடு கல்கத்தா  செல்வோம்:   

இது மழையா தூத்தலா?   சை .. விடாது நசநச என்று நாளெல்லாம் பெய்கிறதே என்று  முன்பு சொல்வேன்.  இப்போது  மழையே  நீ வேண்டும். ஏன் ரொம்ப நாளாகவே  உன்னைக்  காணோம்?  என் தெய்வமே  கிருஷ்ணா, நீ மழையாக வா. என் இதயம்  பாளம் பாளமாக  விரிசல் விட்ட  மழைகாணாத  வறண்ட  நிலமாகி விட்டதே.    வானத்தை உற்று நோக்குகிறேன். எங்குமே  கருமை கண்ணில் படவில்லை. தொடுவானம் வரை எட்டியவரை பார்த்துவிட்டேன். மலட்டு வானம். மேக  ஆடை இல்லாத நிர்வாண வானம்.  கொஞ்சமாவது ஒரு குட்டி மேகம்..    ஹுஹும்..   எங்காவது  மண் வாசனையை கிளப்பி விட  கொஞ்சம் தூத்தல்...ஹுஹும். 

கிருஷ்ணா. உன் கோபமான  சூறைக்   காற்றை கிளப்பி விடு. அனுப்பு.  இருண்ட  கரு நிறத்தோடு  மரண ஓலத்தோடு, உயிர்களை பலி வாங்க வரட்டுமே. அப்படி உன் விருப்பம் இருக்குமா? மின்னல் சாட்டையால் பளீர் பளீர் என்று வலிக்க வலிக்க  தாக்குவாயா? ஆகாசத்துக்கும் பூமிக்குமாக  நீண்ட சாட்டை அடியா?  எதையோ செய்.  ஆனால் இந்த அமைதியான  நீரற்ற நிலத்தில் வீசும்  காற்றிலும் தெரியும் உஷ்ணத்தை நீக்கு. உன்னிடமே இந்த வறட்சியை திரும்பப்  பெற்றுக்கொள்.  யார் கேட்டார்கள் இதை?   எங்களுக்கு வேண்டாம்.  அசையாமல் எல்லாம் வெப்பத்தில்  வாடும் இந்த அவஸ்தை போதும். இது கொடிய செயல்.  இதயத்தை ஏமாற்றத்தால்  எரிந்து  துயரால் வாடி துடிக்கச்  செய்யாதே. 

உன் கருணை மேகம் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  பூமியை நோக்கி இறங்கட்டும்.  என் மனதில் தோன்றும்  ஒரு காட்சியைச்  சொல்கிறேன் கேள். 

 அப்பா  கொடியவராக கோபத்தோடு  எடுத்ததற்கெல்லாம் கோபித்து,  அடித்து , திட்டி,  சித்ரவதை பண்ணும்போது அம்மா பாவம் பேசாமல் நிர்க்கதியாக , கதவோரம், சுவற்றோரம், தலை குனிந்து  நின்று அத்தனையும் வாங்கிக்கொண்டு கண்களில் நீர் ததும்பி  தரையில் சொட்ட சொட்ட  பிறகு  வாய் பேசாமல் தீனமாக  வேறு வழியின்றி பார்ப்பாளே............  அந்த பார்வை தான் என் பார்வை இப்போது,   உன் வருகைக்காக, மழை ரூபமாக, கருணை உருவமாக நீ வரவேண்டும். வா வா  கண்ணா வா...


the rain has held back for days and days, my God, in my arid heart. 

Monday, April 29, 2019

VADAPALANI

    வினை தீர்க்கும்  வேலவா  -   ஜே கே சிவன் 
                               
வட பழனியாண்டவர் கோவில் ஒரு சிறிய குடிசை வேய்ந்த க்ஷேத்ரம் அப்போது. கதவு கிடையாது.  ஓலைத் தட்டி. உள்ளே ஒரு பெரிய அழகான முருகன் படத்தில். அந்த படம் கிடைத்து அதை இணைத்தி ருக்கிறேன்.    இந்த ஒரு கோவிலில் விசேஷம் பழனி ஆண்டவன் பாத ரக்ஷையுடன் தாமரை இதழ்மேல் நின்று அருள் பாலிப்பது என்று பிறகு தான் தெரிந்து கொண்டேன். வலது பாதம் சற்று முன்னால்  வைத்திருப்பார்.   நான்கு ஐந்து வயதில்  எனக்கு  இது தெரியவில்லை.  ஸ்தல விருக்ஷம் அத்திமரம்.

கிராம நிர்வாகிகள் பிள்ளைமார்களுக்கு என் அப்பா ஜே. கிருஷ்ணய்யரை  ரொம்ப பிடிக்கும். நிறைய படித்தவர். அவர்களுக்கு விஷயங்களை வாரி வழங்குவதில் பிள்ளைமார் குடும்பங்கள் திருப்தி அடைந்து எங்களை ஆதரித்து வந்தனர்.

இப்போது  லேக் ஏரியா எனப்படும் வள்ளுவர் கோட்டம் பகுதி அப்போது கிடையாது. எங்கும் மண் பாண்டம் சட்டி பாத்திரங்கள் செய்பவர்கள் நிறைந்து காணப்படுவார்கள். லயோலா காலேஜ் இருந்தது. புஷ்ப நகர்  பகுதியெல்லாம் ஒரே தோட்டம் வயல்களாக இருந்தது.  மின்சார ரயில் வண்டிகள் கோடம்பாக்கம் விட்டால் அடுத்து சேத்துப்பட்டில்   தான் நிற்கும். நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அப்போது பிறக்கவில்லை. அதேபோல்  கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை  அடுத்து ஒரு  இரும்பு லெவல் கிராஸ்ஸிங்.  ரெண்டு பெரிய  கேட்களை  மணி அடித்ததும் மெதுவாக மூடுவார்கள்.  வண்டிகள் கடந்தவுடன் பச்சை விளக்கு எரியும் போது திறந்து விடுவார்கள். அரைமணி நேரமாகவாவது  ஆற்காட் சாலையின் இரு பக்கமும்   அடைபட்டு,  வண்டிகள், போக்குவரத்துகள்  காத்திருக்க வேண்டும்.   நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அப்போது  பிறக்க வில்லை. ஆற்காடு ரோடு ஒன்று தான் நேர் வழி. இரண்டு பள்ளங்கள். நடுவே மேடு.  பள்ளங்கள் மாட்டு வண்டிகள்  குதிரை வண்டிகள் ஏற்படுத்தியவை. நாகேஸ்வரராவ் கட்டிடம் என்று பெயர் தாங்கிய  கார்ப்பரேஷன்   உயர்நிலைப்  பள்ளிக்கூடத்தில் எங்கள் தகப்பனார் சரித்திரம், ஆங்கில பாடங்கள் சொல்லிக்கொடுப்பார். இன்னும் அந்த பள்ளிக்கூடம் இருக்கிறது.  நுங்கம்பாக்கம் போகும்போது அதை பார்க்கும்போது பழைய சின்ன வயது ஞாபகம் வருகிறது.

என் அண்ணாக்கள்  ரத்தினம் அய்யர் (இன்றும்  FB யில் என்னுடைய கட்டுரைகளை படித்து கருத்துகள் சொல்லிக் கொண்டிருக்கிறாரே. ஜம்பு (இப்போது  இல்லை. மேலே சென்று விட்டான்.) அங்கே தான் படித்தவர்கள். அப்பாவோடு  எட்டே முக்காலுக்கு  வடபழனியிலிருந்து  நுங்கம்பாக்கம் தினமும் காலை  எட்டரை மணிக்கு  வடபழனியிலிருந்து நுங்கம்பாக்கம்  இருவேளைகளும்  நடந்து சென்றவர்கள்.

வடபழனி முருகன் கோவிலில் தான் நாங்கள்  விளையாடுவோம். பின்னால்  நிறைய மரங்கள் நந்தவனமாக இருந்தது. பூக்களை பறித்து  படத்துக்கு போடுவோம். என்னை வடபழனி ஆண்டியாக்கி விபூதி பூசி கோவணத்தோடு கையில் ஒரு கொம்பை கொடுத்து (அது தான் வேல்)  வெகுநேரம் நிற்க வைத்து தலையில் அட்டையில் கிரீடம் அணிவித்து அலங்கரித்து விளையாடுவார்கள்.  எனக்கு இப்படி ஒரு பாக்யம் சின்ன வயசில் கிடைத்ததா?? பிறகு தான் நான் பாக்கியசாலி என்பதை புரிந்துகொண்டேன்.

எங்கள்

  கிராம 
 பெரியவர்களிடம் என் அம்மா தெரிந்துகொண்டு  சொல்லியதை  கேட்டிருக்கிறேன். இந்த கோவில் உருவாக காரணம் சில மஹான்கள்.  அண்ணாசாமி நாயக்கர் ஒரு முருக பக்தர். தீராத வயிற்றுவலி. எப்போதுமே  சிவ முருக பக்தர்களுக்கு வயிற்று வலி ஒரு காரணமா?  திருநாவுக்கரசருக்கு வந்தமாதிரி சூலை நோய்.    நாயக்கர் எங்கெல்லாமோ அலைந்து பல கோவில்களுக்கு சென்று வேண்டினார். ஹுஹும்.  வயிற்று வலியால் துடித்தார். தீரவில்லை. பழனி முருகன் வலி தீர்த்தான். நாயக்கர் நன்றிக்கடனாக தனது நாக்கை அவன் முன்னால் துண்டித்து பேச்சிழந்தார்.   நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுப்பதற்கு  பாவாடம் என்று பெயர்.

நாயக்கர்  கண்ணில்  பழனியில்  ஒரு முருகன் படம் தென்பட்டது.  காந்தமாக அது அவரை ஈர்க்க அதை வாங்கினார்.  அது தான்  என் மனதில் பதிந்த இன்றும் வாழும் வடபழனி முருகன். அந்த படத்தை தலையில் சுமந்துகொண்டு புலியூர் வந்தார். அப்போது வடபழனி ஏரியாவுக்கு புலியூர் கோட்டம் என்று பெயர். 

அவருக்கு ஒரு வீடு விஸ்தாரமாக இருந்தது. அதில் ஒரு கீற்றுக் கொட்டகை நிர்மாணித்தார். அதில் அந்த படம் ஜம்மென்று வீற்றிருந்த  போது தான் நான் விளையாடியிருக்கிறேன்.



அந்த படம் இன்றும் வடபழனி முருகன் சந்நிதியில் உட்ப்ரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருக்கிறது. முருகன் எனக்கு பிடித்த ஒரு அழகான  தெய்வம். நிறைய முருகன் பாடல்கள் கேட்டதுண்டு. இன்னமும் கேட்கிறேன். கே.பி. சுந்தராம்பாள், T.M.S, சீர்காழி, பெங்களூர் ரமணியம்மாள், பித்துக்குளி முருகதாஸ், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம்   ஆகியோர் பெயர்கள் உடனே நினைவுக்கு வந்தவை. இன்னும் அநேகர் உண்டு.   கல்லிடைக்குறிச்சி  M.A . மஜீத்  ஒரு முஸ்லீம். பட்டை பட்டையாக விபூதி, இடுப்பில் எப்போதும் திருநீறு சுருக்குப் பை . கணீரென்ற குரலில் எங்கள் வீட்டில் வந்து முருகன் பாடல்கள் பாடி இருக்கிறார்.  சமீபத்தில் நான் கேட்ட பாலமுரளி கிருஷ்ணா பாடல் என்னை கவர்ந்ததால் அதை பாட விருப்பம் எழுந்தது. அதை பாடுகிறேன்.

VADAPALANI

    வினை தீர்க்கும்  வேலவா  -   ஜே கே சிவன் 
                               
வட பழனியாண்டவர் கோவில் ஒரு சிறிய குடிசை வேய்ந்த க்ஷேத்ரம் அப்போது. கதவு கிடையாது.  ஓலைத் தட்டி. உள்ளே ஒரு பெரிய அழகான முருகன் படத்தில். அந்த படம் கிடைத்து அதை இணைத்தி ருக்கிறேன்.    இந்த ஒரு கோவிலில் விசேஷம் பழனி ஆண்டவன் பாத ரக்ஷையுடன் தாமரை இதழ்மேல் நின்று அருள் பாலிப்பது என்று பிறகு தான் தெரிந்து கொண்டேன். வலது பாதம் சற்று முன்னால்  வைத்திருப்பார்.   நான்கு ஐந்து வயதில்  எனக்கு  இது தெரியவில்லை.  ஸ்தல விருக்ஷம் அத்திமரம்.

கிராம நிர்வாகிகள் பிள்ளைமார்களுக்கு என் அப்பா ஜே. கிருஷ்ணய்யரை  ரொம்ப பிடிக்கும். நிறைய படித்தவர். அவர்களுக்கு விஷயங்களை வாரி வழங்குவதில் பிள்ளைமார் குடும்பங்கள் திருப்தி அடைந்து எங்களை ஆதரித்து வந்தனர்.

இப்போது  லேக் ஏரியா எனப்படும் வள்ளுவர் கோட்டம் பகுதி அப்போது கிடையாது. எங்கும் மண் பாண்டம் சட்டி பாத்திரங்கள் செய்பவர்கள் நிறைந்து காணப்படுவார்கள். லயோலா காலேஜ் இருந்தது. புஷ்ப நகர்  பகுதியெல்லாம் ஒரே தோட்டம் வயல்களாக இருந்தது.  மின்சார ரயில் வண்டிகள் கோடம்பாக்கம் விட்டால் அடுத்து சேத்துப்பட்டில்   தான் நிற்கும். நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அப்போது பிறக்கவில்லை. அதேபோல்  கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை  அடுத்து ஒரு  இரும்பு லெவல் கிராஸ்ஸிங்.  ரெண்டு பெரிய  கேட்களை  மணி அடித்ததும் மெதுவாக மூடுவார்கள்.  வண்டிகள் கடந்தவுடன் பச்சை விளக்கு எரியும் போது திறந்து விடுவார்கள். அரைமணி நேரமாகவாவது  ஆற்காட் சாலையின் இரு பக்கமும்   அடைபட்டு,  வண்டிகள், போக்குவரத்துகள்  காத்திருக்க வேண்டும்.   நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அப்போது  பிறக்க வில்லை. ஆற்காடு ரோடு ஒன்று தான் நேர் வழி. இரண்டு பள்ளங்கள். நடுவே மேடு.  பள்ளங்கள் மாட்டு வண்டிகள்  குதிரை வண்டிகள் ஏற்படுத்தியவை. நாகேஸ்வரராவ் கட்டிடம் என்று பெயர் தாங்கிய  கார்ப்பரேஷன்   உயர்நிலைப்  பள்ளிக்கூடத்தில் எங்கள் தகப்பனார் சரித்திரம், ஆங்கில பாடங்கள் சொல்லிக்கொடுப்பார். இன்னும் அந்த பள்ளிக்கூடம் இருக்கிறது.  நுங்கம்பாக்கம் போகும்போது அதை பார்க்கும்போது பழைய சின்ன வயது ஞாபகம் வருகிறது.

என் அண்ணாக்கள்  ரத்தினம் அய்யர் (இன்றும்  FB யில் என்னுடைய கட்டுரைகளை படித்து கருத்துகள் சொல்லிக் கொண்டிருக்கிறாரே. ஜம்பு (இப்போது  இல்லை. மேலே சென்று விட்டான்.) அங்கே தான் படித்தவர்கள். அப்பாவோடு  எட்டே முக்காலுக்கு  வடபழனியிலிருந்து  நுங்கம்பாக்கம் தினமும் காலை  எட்டரை மணிக்கு  வடபழனியிலிருந்து நுங்கம்பாக்கம்  இருவேளைகளும்  நடந்து சென்றவர்கள்.

வடபழனி முருகன் கோவிலில் தான் நாங்கள்  விளையாடுவோம். பின்னால்  நிறைய மரங்கள் நந்தவனமாக இருந்தது. பூக்களை பறித்து  படத்துக்கு போடுவோம். என்னை வடபழனி ஆண்டியாக்கி விபூதி பூசி கோவணத்தோடு கையில் ஒரு கொம்பை கொடுத்து (அது தான் வேல்)  வெகுநேரம் நிற்க வைத்து தலையில் அட்டையில் கிரீடம் அணிவித்து அலங்கரித்து விளையாடுவார்கள்.  எனக்கு இப்படி ஒரு பாக்யம் சின்ன வயசில் கிடைத்ததா?? பிறகு தான் நான் பாக்கியசாலி என்பதை புரிந்துகொண்டேன்.

எங்கள்

  கிராம 
 பெரியவர்களிடம் என் அம்மா தெரிந்துகொண்டு  சொல்லியதை  கேட்டிருக்கிறேன். இந்த கோவில் உருவாக காரணம் சில மஹான்கள்.  அண்ணாசாமி நாயக்கர் ஒரு முருக பக்தர். தீராத வயிற்றுவலி. எப்போதுமே  சிவ முருக பக்தர்களுக்கு வயிற்று வலி ஒரு காரணமா?  திருநாவுக்கரசருக்கு வந்தமாதிரி சூலை நோய்.    நாயக்கர் எங்கெல்லாமோ அலைந்து பல கோவில்களுக்கு சென்று வேண்டினார். ஹுஹும்.  வயிற்று வலியால் துடித்தார். தீரவில்லை. பழனி முருகன் வலி தீர்த்தான். நாயக்கர் நன்றிக்கடனாக தனது நாக்கை அவன் முன்னால் துண்டித்து பேச்சிழந்தார்.   நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுப்பதற்கு  பாவாடம் என்று பெயர்.

நாயக்கர்  கண்ணில்  பழனியில்  ஒரு முருகன் படம் தென்பட்டது.  காந்தமாக அது அவரை ஈர்க்க அதை வாங்கினார்.  அது தான்  என் மனதில் பதிந்த இன்றும் வாழும் வடபழனி முருகன். அந்த படத்தை தலையில் சுமந்துகொண்டு புலியூர் வந்தார். அப்போது வடபழனி ஏரியாவுக்கு புலியூர் கோட்டம் என்று பெயர். 

அவருக்கு ஒரு வீடு விஸ்தாரமாக இருந்தது. அதில் ஒரு கீற்றுக் கொட்டகை நிர்மாணித்தார். அதில் அந்த படம் ஜம்மென்று வீற்றிருந்த  போது தான் நான் விளையாடியிருக்கிறேன்.



அந்த படம் இன்றும் வடபழனி முருகன் சந்நிதியில் உட்ப்ரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருக்கிறது. முருகன் எனக்கு பிடித்த ஒரு அழகான  தெய்வம். நிறைய முருகன் பாடல்கள் கேட்டதுண்டு. இன்னமும் கேட்கிறேன். கே.பி. சுந்தராம்பாள், T.M.S, சீர்காழி, பெங்களூர் ரமணியம்மாள், பித்துக்குளி முருகதாஸ், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம்   ஆகியோர் பெயர்கள் உடனே நினைவுக்கு வந்தவை. இன்னும் அநேகர் உண்டு.   கல்லிடைக்குறிச்சி  M.A . மஜீத்  ஒரு முஸ்லீம். பட்டை பட்டையாக விபூதி, இடுப்பில் எப்போதும் திருநீறு சுருக்குப் பை . கணீரென்ற குரலில் எங்கள் வீட்டில் வந்து முருகன் பாடல்கள் பாடி இருக்கிறார்.  சமீபத்தில் நான் கேட்ட பாலமுரளி கிருஷ்ணா பாடல் என்னை கவர்ந்ததால் அதை பாட விருப்பம் எழுந்தது. அதை பாடுகிறேன்.



aindham vedham



ஐந்தாம் வேதம்    J K  SIVAN 
பகவத் கீதை 

                                                             
                                          
                          'ஒருநிலை,  வைராக்கியம்''                                                                                                                                                        
மஹா பாரதம் கதை எழுதுவது கடினம் என்று கூற மாட்டேன். மூலத்திலிருந்து பிறழாமல் ஒட்டி அணைத்துக் கொண்டுபோவது அது.  ஆனால் ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசித்த பகவத் கீதை விஷயம் வேறு வகை.

புரியாதது போல் இருக்கும் அழகாக புரியவைக்கும்.  புரிந்து கொள்வது என்பதற்கே  கொஞ்சம் முயற்சியும், பிரயாசையும், தகுதியும் வேண்டும்.  ஒண்ணாம்  கிளாஸ் பையன் காலேஜ் புஸ்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்கவோ, படித்தால் புரிந்து கொள்ளவோ முடியாதல்லவா? இதைப்  புரிந்து கொள்வதற்கு மனப் பக்குவம் தேவை. எண்ணற்ற மாமனிதர்கள் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். சமீபத்தில்  நான் இதை எழுத வேண்டிய நிர்பந்தத்தில் எதற்கு வந்தேன் என்றால், மகா பாரதம் எழுதும்போது இந்த 18 அத்யாயங்களையும் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல முயல்வோமே என்ற எண்ணம் என்னுள் எழுந்ததால்  ராஜாஜி, பாரதியார், கண்ணதாசன், வினோபாஜி, காந்தி, விவேகானந்தர்  என்று  பலரைத் தேடி அவர்கள் சொன்ன  கீதையின் உரைகளை அசை போட்டேன் . சில இடங்கள் அல்ல, பல பகுதிகள், எளிதில் புரிபட வில்லை.   மேலும் மேலும் சிந்திக்க வைத்தது.   அசை போடா வேண்டியிருந்தது.    திரும்ப திரும்ப படித்து, யோசிக்க வைத்தது.  என் சிற்றறிவுக்கு எட்டியவரை அவற்றை  இன்னும் சுலபமாக்க கிருஷ்ணனையே  வேண்டி எழுத  ஆரம்பித்தேன். 

 கீதையை முழுமையுமாக தெரிந்து கொள்ள  விரும்புவோர்  மேற்சொன்ன ஆசிரியர்களைத் தவிரித்து, பிரபுபாதா, ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வர், அரவிந்தர் ஆகியோரையும் அணுகலாம். பொறுமை வேண்டும். விருப்பம் உள்ளே தோன்றவேண்டும். முக்யமாக நேரம் ஒதுக்க வேண்டும்.

ஆறாம் அத்தியாயத்தில் தியான யோகம் பேசப்படுகிறது. இதுவரை கர்மயோகம், சன்யாச யோகம் இவற்றில் எது சிறந்தது, எல்லோராலும் கடைப்பிடிக்க உகந்தது என்று கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொல்வது போல் நமக்கு வேதவியாசர் மூலம் சொன்னார்.   மனப் பயிற்சி எப்படி உதவும், என்று விளக்கினேன்.

கீதை உலக மக்கள் அனைவருக்குமே வாழ்வில் முன்னேற ஒரு சிறந்த  வழிகாட்டி, எளிய சாதனம் என்று கற்பூரம் ஏற்றி சத்யம் செய்யலாம். கீதை எவராலும் சுலபமாக அணுகத்தக்கது.  ஒவ்வொருவனையும்   கையைப் பிடித்து மேலே தூக்கக்   கூடியது. ''என்னால் எப்படி முன்னேற முடியும் என்று  மனம் பாசாங்கு இல்லாமல் சுத்தமாக நினைத்து கீதையைத் தொட்டால், அதன் அர்த்தமே எளிதாக புரியும். மனம் கட்டுண்டால், உயரிய நோக்கம், ஆவல் தோன்றி ஒவ்வொரு அடியாக முன்னேற முடியும்.கர்மம், விகர்மம், அகர்மம் எல்லாம் புறத்தே செய்யும் கர்மங்கள் சம்பந்தப் பட்டது என்று விளங்கியது அல்லவா?

இப்போது மனச் சாதனை பற்றி தெரிந்து கொள்வோம்.  மனது வைத்தால் நீ தேவனாகலாம்.

மனம் (சித்தம்) ஏகாக்ரதை என்கிற ஒருநிலைப் பாடு அடைவது, அதற்கேற்றவாறு வாழ்க்கையை ஒரு வரம்புக்குள் வைத்துக்கொள்வது, எல்லாவற்றையும், எல்லோரையும் சமமாக நோக்குவது ஆகியவையே  மனதைத்  தூய்மைப் படுத்தி முன்னேற வைக்கும். அந்த நிலை தான் தியான யோகம்.இதற்கு பயிற்சி யும்  வைராக்கியமும் அவசியம். எந்த காரியம் செய்தாலும் அதில் விளையும் இன்ப துன்பம், வெற்றி தோல்வி,புகழ் அவமானம்,சாதகனை அசைத்து விடாமல் சம நோக்குடன் இருப்பது தான் வைராக்கியம்.
வைராக்கியம் கொண்டவனால் தான் மனத்தை சித்தத்தை ஒரே நிலையில் இயங்கச் செய்ய இயலும்.

''அர்ஜுனா, அதோ மரம், அதன் உச்சாணி கிளை, அதன் மேல் இலைகள், அதன் நடுவே பட்சி பொம்மை, இதெல்லாம்   தெரிகிறதா?  என்று துரோணர் கேட்டதற்கு இதே அர்ஜுனன் என்ன சொன்னான்?

‘ஒன்றுமே தெரியவில்லை குருதேவா,   அந்த  பட்சியின் கழுத்து ஒன்றே தெரிகிறது''  என்று த்ரோணாரைப்பார்க்காமலேயே பதிலளித்தான்  அர்ஜுனன்.
''சரி அதை வீழ்த்து'' 
 அடுத்த  கணம்  ஒரே அம்பில் எதன் மீதும் படாமல் பக்ஷியை வீழ்த்தினான்.   அது தான் concentration, ஏகாக்ரம். மனதை அலைய விடாமல் ஒரே லட்சியத்தில் நிறுத்துவது. 
நாம்  கோவிலுக்கு சென்றாலும் மனதை பொங்கல் பிரசாதத்தின் மேலும், எப்படி வரிசையில் போகாமல் சுலபமாக உள்ளே சென்று தரிசிப்பது, வாசலில் இருக்கும் புது செருப்பு, தரிசனம்  முடிய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்,  திரும்ப பஸ் சீக்கிரம் கிடைக்குமா,  இரவு என்ன சாப்பிடுவது இவற்றின் மீது எல்லாம் எண்ணங்களை சிதற அடிக்கிறோம். 
பிரார்த்தனை பண்ணும்போதும்  இதே கதி. மனதை ஓடவிட்டு  வெறும் கண்ணை மூடிக்கொண்டு என்ன பயன்?  மனிதன் பஞ்ச  இந்திரியங்களுக்கு, ஐம்புலன்களுக்கு அடிமை ஆகிவிட்டால் ஏகாக்ரம் எப்படி சாத்தியமாகும்.?

உலக வாழ்வில் நாம் புரியும் அனைத்து காரியங்களும் சொந்த லாபம் கருதியோ, பூர்வ ஜென்ம வாசனைகளின் த்ருப்திக்காகவோ ,புற விஷயங் களுக் காகவோ பயன் பட்டால் இறுதி நாள் இன்பத்திற்கு என்ன வழி?  கடைசிக் கணம் புனிதமாக இருக்கவேண்டாமா? பகல் பூரா செய்த எல்லா வேலையும் புனிதமாக செய்தால் இரவு நிம்மதியாக பிரார்த்தனை யோடு உறங்குவது சுகமல்லவா? வாழ்கையை செப்பனிட்டு அமைத்துக் கொண்டால் பயணம் சுகமாக  போகவேண்டிய இடத்துக்கு சவுகரியமாக செல்ல முடியுமே. 

மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரி அல்ல. அவயவங்கள் ஒன்று தான்.  ஒருவன் தேவனாகவும் அடுத்தவன் மிருகமாகவும் இருப்பது எதனால்?  ஒரே களிமண்ணில் செய்த பானைகள் தானே?  ஒவ்வொருவனும் மேலே உயரத்துக்கு செல்ல முடியும். உயர்வதற்கு வழி உண்டு. நிறைய பேர் ஏற்கனவே உயரே சென்றிருக்கிறார்கள். சென்று கொண்டிருக்கிறார்கள்,  தனது குறை நோக்காமல் அடுத்தவர் குறையில் கவனம் செல்வதால்  தான் நமது முன்னேற்ற  தடை.  தனது குறை உணர்ந்து அதை தவிர்ப்பவன் உயர்கிறான். சித்தம் ஏகாக்ரதை  பெற இது முதல் படி. அடுத்தது வாழ்க்கை முறை. தனக்கென்றான  வரம்புக்குள் வாழ்வது. 

உடல் நலத்துக்கு எது அவசியம்?   முறையான சரியான அளவு, குறித்த நேர உணவு, தூக்கம்.  இதில் அதிகமோ குறைவோ இருந்தால் உடல் க்ஷீண மடையும். ருசிக்கு அடிமையாகாமல் உடல் பாதுகாப்புக்கு எது தக்கதோ அந்த உணவு அந்த அளவில் பெற மனக் கட்டுப்பாடு வேண்டும்.  கடற்கரையில் காற்று வாங்கப் போய் அறுபது ரூபாய் தேடி எடுத்துக் கொடுத்து, ஆறு வெங்காய பஜ்ஜி சாப்பிட்டு  ஆறாயிரம் ரூபாய் டாக்டரிடம் கொடுக்கிறோமே, அது யாரால்?  நம்முடைய  நாக்கை அடக்க முடியாததற்கு தண்டனை தானே?  வயிற்றுப் போக்கு,  வயிற்று வலி, வாந்தி, தலைவலி இதெல்லாம் இதற்கிடையே போனஸ். ஐம்புலன்களை தவறான வழியில் ஓடாமல் நிறுத்தி பிடித்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர மன உறுதி வேண்டும். இந்த ஐம்புலன்களுக்கு நாம் எஜமான் இல்லை. உள்ளே ஆத்மா தான் எஜமான். நம் மனதை  இந்த ஐம்புலன்களின்  விருப்பப் படி அவற்றை    திருப்திபடுத்த  அலைய விட்டால் உள்ளே இருக்கும்  உண்மை எஜமான் தண்டிக்கிறான். அது தான் நம் உடலே படும் அவஸ்தை.  மேலே சொன்னது.

அடுத்ததாக கிருஷ்ணன் முக்கியமாக நமக்குச்  சொன்னது சம நோக்கு. நல் நோக்கு. இதைப் பெறாத வரையில்  சித்தத்தில்  ஏகாக்ரம் கிடைக்காது.  உலகில் மனிதனைத் தவிர மற்ற உயிர்கள் எல்லாம்  ஏதோ ஒரு வித பயத்தில் தான் எப்போதும் வாழ்ந்து வருகின்றன. டிவியில்   யூ ட்யூபில்  எல்லாம்  காடுகளில், நீர்நிலைகளில், மலைகளில், உயிர்வாழும்  ஜந்துக்கள், பறவைகள்,  விலங்குகள் அன்றாட  வாழ்க்கைக்கு பயப் படும் அவஸ்தையை வேடிக்கையாக  பார்க்கிறோம். ஒவ்வொரு கணமும் உயிர்மேல் நம்பிக்கை இல்லாத  ஜீவனம்.  

தன்னம்பிக்கை மனிதனுக்கு கொடுக்கப்பட்ட வரப் பிரசாதம். தன் மீது இருக்கும் நம்பிக்கை உலகில் காணும் அனைத்து  பகவானின் சிருஷ்டிகள் மீதும் இருக்க வேண்டும். எல்லாமே தூயவை, கடவுள் சிருஷ்டியில் அனைத்தும் புனிதமானது இதில் எதற்கு,  என்ன பயம், அன்பல்லவோ  இருக்கவேண்டும் ?  என்ற நோக்கம் தான் சம நோக்கம். குற்றம் நமது பார்வையில் தான் இருக்கிறது.

ஒரு குட்டிக் கதை சொல்கிறேன்.  

ஸ்ரீ ராம தாச சுவாமிகள் ராமாயணம்  ஸ்லோகங்கள்  எழுதிக் கொண்டிருந்தார். ஒரு இடத்தில் அனுமான் இலங்கையில் சீதையைத் தேடும்போது அங்கே ராவணனின்  அரண்மனை நந்தவனங்களில் வெண்மையான நிறம் கொண்ட மலர்களை பார்த்தான்  என்று எழுதினார். ராமாயணம் என்ற சொல் எங்கே கேட்டாலும் அங்கே தான் ஹனுமான் இருப்பானே? 

 ' எதற்கு இந்த மனிதர்  இப்படி எழுதியிருக்கிறார்?   அங்கே   வெள்ளை யாக எந்த பூவையும் நான் பார்க்கவே இல்லையே ,  செக்க ச்  சிவந்த பூக்கள் அல்லவோ எங்குமே காணப் பட்டது. இவர் தப்பு தப்பாக அல்லவோ எழுதுகிறார் என்று  தோன்றியது.  ஹனுமான்  தான் சிரஞ்சீவி ஆயிற்றே.  உடனே  ராம தாசர் முன்னே தோன்றி,

 ''நீங்கள் யார் அய்யா அசோக வனத்தில், நான் கண்டதெல்லாம்  வெள்ளை நிற  மலர்கள் என்று தவறாக எழுதுகிறீர்கள்.  நீர்  பார்த்தீரா?  நான்  பார்த்தேனா? அனைத்தும் செக்கச் செவேலென்று அல்லவோ நான் அங்கே மலர்களை பார்த்தேன்.''

''ஆஞ்சநேய  ப்ரபோ.   க்ஷமிக்கவேண்டும்.   நீங்கள் பார்த்தவை எல்லாமே  வெள்ளை  நிற புஷ்பங்கள் தான் '' என்றார் ராமதாசர். இருவருமே  தமது வாக்குவாதத்தை நிறுத்தவில்லை.  சரி  ராமனையே கேட்போம் என்று ராமனிடம் முறையிட

''ஹனுமா,  ராமதாசர்  ஞான திருஷ்டியில் கண்ட புஷ்பங்கள் வெள்ளை நிறம் தான். ராவணாதிகள் மேல் கடுங்கோபம் கொண்ட உன் கண்கள் சிவந்திருந்ததால் எல்லாமே சிவப்பாக உன் கண்ணில் பட்டது.'' என்றார். 

 நாம்  வெயிலில் கருப்பு  'ரேபான்' RAYBON   கண்ணாடி அணிந்து வெயிலையே நிறம் மாற்றி பார்க்கி றோமே அது போல்.

‘ஏ,   உலகமே  நீ நல்லது. என்னை மகிழ்விக்க  நீ ஏராளமாக எங்கும் இருக்கிறாய். நான் தான் உன்னை சரியாக நோக்க வில்லை.  ஜவஹர்லால் நேரு  டேராடூன்  சிறையில் இருக்கும்போது இமய மலை பனி சிகரங்கள் பூதாகாரமாக எதிரே தோன்றியதைப்  பார்த்து

 ''its solidity, and imperturbability looked down upon me with the wisdom of a million  years and mocked at my varying humours and soothed my fevered mind'' 

என்று எழுதியதை  என் பள்ளிக்கூட காலத்திலிருந்தே  பல முறை படித்து ரசித்திருக்கிறேன். நீண்ட கடல், திறந்த புல் வெளி, உயர்ந்த மலைத் தொடர், அமைதியான பள்ளத் தாக்கு, சல சல வென்று ஓடும் நதி, கூட்டமாக பறக்கும் பறவைகள், சுதந்திரமாக திரியும் விலங்குகள், எதற்கு இவைகளையெல்லாம் சென்று விடுமுறை நாளில்  காண்கிறோம்.  மனத்தை உறுதிப் படுத்த.  புத்துணர்ச்சி பெற.   ஒருநிலை பயிற்சி பெற. புறத்திலேயே  இவ்வளவு சாதனங்கள் இருக்கும்போது ஆழம் காண முடியாத, எல்லையில்லாத அக உலகில் எத்தனை அமைதி தரும் அழகிய, அற்புத   சாதனங்கள் இருக்கிறது தெரியுமா?

பக்தி,   ஞானம்,  என்பவை எவ்வளவு பெரிய மலைகள், ஆறுகள், கடல்கள். அவையல்லவோ சாந்தி தரும். வெளியே தெரியும் கல்லும், மண்ணும், காற்றும்  அகண்ட வெளியுமே  இவ்வளவு இன்பம் கண்ணுக்குத் தரும்போது அகத்தே மலர்ந்துள்ள சிருஷ்டி   இன்னும் எவ்வளவு பெரிய, எத்தனை,  இன்பம்,  அமைதி  தரும்!

சித்தத்தில் உண்டாகும் குழப்பம் தான் ஏகாக்ரம் அடையமுடியாமல் தடுக்கிறது.  இது இயற்கைக்கு மாறானது. நாமே தருவித்துக் கொள்வது. குழந்தைப் பருவத்தில் தான் நமது சித்தம் ஏகாக்ரதையை இயல்பாக பெறுகிறது. காரணம் சித்தம் தூய்மையாக இருக்கும் காலம் அது. கொஞ்சம் கொஞ்சமாக நாம் செயற்கையாக வாழ  பழகி விட்டோம். பாழாகி விட்டோம். பிள்ளைமனம் கொள்ளை போய்  விட்டது. கள்ளம், கபடம்,  சுயநலம்,  எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக   நம்மோடு கூடவே வளர்ந்து விட்டது.

இதுவரை   ஏகாக்ரதை,  வரம்புக்குட்பட்ட வாழ்க்கை, சமநோக்கு என்பதை பார்த்தோமல்லவா. இனி வைராக்கியம் பற்றி பேசுவோமா? இதற்குப்  பயிற்சி என்ன தெரியுமா?  ஒரு வயலில் பயிரிட நாம் என்ன செய்கிறோம். நிலத்தை பண்படுத்தி, புல்  பூண்டு செடி கொடிகளை வேரோடு களை  பிடுங்கி, அவற்றை அழிப்பது ஒரு முதல் வேலை.  பிறகு  நீர்வார்த்து, உரமிட்டு, விதை விதைத்து  பாதுகாத்து வளர்ப்பது.  என்ன புரிகிறது?   ஒன்று அழித்தல்  மற்றொன்று ஆக்கல். சரிதானா ?  ஒன்று விடாமல்  தீய எண்ணங்களை, ஸம்ஸ்காரங்களை வேரோடு களைந்து நல்ல எண்ணங்களை  விதைத்து  மனதை பக்குவப் படுத்தி வளர்க்கும் பயிற்சியில் விளைவது வைராக்கியம்.

அனுமனுக்கு  சீதை  அவன் சேவையை மெச்சி  பட்டாபிஷேகத்திற்கு பிறகு  தனது விலையில்லா  சிறந்த  முத்து மாலையை  பரிசாக அளித்தாள். .ஹனுமான் என்ன செய் தான்?  ஒவ்வொரு முத்தாக எடுத்து கடித்து ருசித்து வெளியே துப்பிவிட்டான். மாலை காலி. ''என்ன இது ஆஞ்சநேயா?''  என்று கேட்டதற்கு  ''இதில் எதிலுமே  என் ராமன் தென்படவில்லையே'' என்றான்.  மனத்தில் நோக்கம் இருக்க வேண்டும்.

''எதிலும்  நான் இருப்பதை காண்பாய் அர்ஜுனா. எதுவும் என்னிடத்தில் இருப்பதையும் உணர்வாய். அப்படிக் காண்பவன் என்னை எப்போதும் எதிலும் காண்பவன் அல்லவா? நானும் அவனை எப்போதும் என் நோக்கில் தானே  வைத்துக்கொண்டிருக்க வேண்டும்!

அப்படிப் பார்ப்பவன் நானாகி  விடுகிறானே. நானே அவன். அவனே நான்' ..இது தான் சமதர்சனம்

ஒரு கணம் யோசிப்போம்.  இது வரை கண்ணன் சொன்னது நடைமுறையில் முடியாததா?  இல்லை, உண்மையான உழைப்பும், முயற்சி, தன்னம்பிக்கை  கண்டிப்பாக  முதலில் வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தான் முன்னேறவேண்டும். ஆத்மாவினாலேயே ஆத்மாவை முன்னேற்ற  வேண்டும்.  ஒரு பிறவியில் இது முடியாது போனாலும் இனி வரும் பிறவிகளில் தொடர்ந்து வரும்போது சுலபமாகிவிடும்.   மரணம்  முடிவில்லாத  தூக்கம்.  சாதாரண அன்றாட தூக்கம் சில மணி நேரங்களே. தூக்கத்திற்கு பின் நாம் புத்துனச்சி பெறுகிறோமே,  அது போல் இனி வரும் பிறவிகளும்  ஏற்கனவே செய்த முயற்சியால் பாக்கி உள்ள முயற்சியை எடுக்கவோ  முடிக்கவோ  உதவும். பளுவைக்குறைக்கும் .

மேலே தொடர்வோம்.

Sunday, April 28, 2019

CURRENCY EXCHANGE



BED TIME STORIES    J K SIVAN 
                                                    
                                  CURRENCY  EXCHANGE 

The exams were over and the children enjoyed  summer holiday and they never missed haunting Siva Thatha  for their stories whenever they had time.  As such, they gathered around him on an evening under the neem tree where he usually sits relaxed on his easy chair.
They talked so manythings, some complaining about others, some of them  singing and dancing, but the child Radha was thinking  something without joining the other children which Thatha noticed. 
He asked her   ''Radha, what are you thinking?''
''Thatha  I often hear people  talking about Dharmam and Punyam''  what is it ? can you tell me?
''Thatha  today will you tell us a story on what Radha asked, suggested some more children.
Yes my dear children today's story will be based on what Radha asked said the Thatha and commenced his story: 

''Govindasami, a  richman, who  founded and owned many  large companies,  was travelling in his expensive car. He  took a break when the car reached a village. There was an old big temple and many devotees were crowded in a mandap where an old man was performing his discourse.  The richman slowly approached the mandap and sat in a corner for a few minutes to rest and happen to listen to what the speaker was telling.
    
''.........  This  world we live in is madly after money money and money....People are ignorant that this money what they seek relentlessly is of no use and cannot take with them when they leave this world......Why then they dont realise this fact and still running after the money trying in all  possible ways, good or bad?.......

Govindasami  was annoyed and uneasy and could not sit there anymore. He got up and went back to his car and contifnued his journey.
But his mind was preoccupied all the time on what the old man preached at the temple..He pacified his disturbed mind telling that ''He is a fool, and could not earn money and so being a pauper he talked like that..  But  I must think more on what he said and find out  what he told was whether true or not''  

The next day, the multi rich Govindasami  assembled all his employees and seniors at his office  and called upon each of them to deposit a  piece of paper in a box advising him how he can take all his wealth in this world to the next world after his departure.
Everyone was surprised how  such a shrewd boss has become suddenly so mad !  Time passed and as there was no fruitful suggestion from any one the richman was disappointed and restless.  

Oneday a stranger passed by the place where Govindasami lived and heard about his problem.  The stranger was a Yogi and a wise man with rich philosophical knowledge.  He sent word to the rich man for meeting him and was allowed to give his advice.

''Why did you want to meet me?' asked Govindasami.
' My friend, I think I have an answer for yourquestion ""
''Óh  I am very happy. go ahead and tell me?
'Let me ask you a few questions by way of solution to your problem''
''Have you travelled to places?''
''I visited almost all countries in the world''
''Did you go to America? If so how were you able to go there?''
''I apply and complete all formalities for travel and fly, taking enough money for my expenses there''
''How many rupees  you carried?''
''How can I carry Indian rupees, I got them exchanged for  US Dollars as our Rupeel is of no use there''- The richman thought the stranger was an idiot not knowing this basic thing.
''Oh   similarly you travelled to UK and Japan and Germany etc, changing your money into currencies used in the countries you visited''
''Exactly'' said the richman.
''Yes, you are  right. you know well that the money you earned,saved and use here cannot be of use in the countries you visited and needed the currency there to meet your demands and expenses''
My dear sir,  You  want  to  go  to  the  Heaven  the world after you leave this world,  Do you think the currency here will be of use there. Dont you think the currency recognised there is different from your Rupee?'
''Oh I see. I do understand now sir, what is the currency needed there?
''It is not needed there,  it is needed to go there. The enough money you need to earn and save before you venture to go to the world above, is known as Punya, and the method of earning it  is through charities, and Dharma, which is the converter of your rupee. Do you now understand''
The  rich  man  was   convinced and very happy  to  hear  his  idea. From that day he was a well known philanthropist helpilng many poor and downtrodden who needed food and shelter to survive ..and praised and blessed the richman who provided many of them them with these.. 
Dear children do you understand why we should be of benefit to others through our service, physically, financially or mentally, 
'Thatha where is the richman Govindasami  now?
''Govindasami  must  be living  in the divine kingdom of Lord Govinda in Heaven.''

ARUPATHTHU MOOVAR



அறுபத்து மூவர் J K SIVAN
சண்டேஸ்வர நாயனார்
20 தந்தையென்றும் பாராமல்...
வல்லவரையன் வந்தியத்தேவன் போல் குதிரைமீது ஆரோகணித்து காவிரிக்கரையோர மாகவே தஞ்சாவூர் ஜில்லாவை சுற்றி வளைத்து அலைந்து எல்லா கோவில்களுக்கும் சென்று, தரிசித்து, ஆற்ற்றில் சலசலவென்று ஓடும் குளிர்ந்த நீரில் தானும் குளித்து, குதிரையையும் குளிப்பாட்டி, ஓய்வெடுத்து, கோவில்கள் ஊர்மக்கள் சத்திரத்தில் அளிக்கும் சூடான உணவை அருந்தி, வயல்களில் பெண்கள் நாற்று நடுவது, பாடுவது எல்லா கேட்க ஆசைதான். இப்போது குதிரையும் இல்லை. ஆறுகளும் இல்லை, இருந்தாலும், ஆறுகளில் தண்ணீர் இல்லை, பெண்கள் பாடுவதில்லை. நாற்று நட நிறைய நிலமும் இல்லை.

அப்படி ஒரு அழகான பழைய கால ஊர் சேய்ஞலூர். கும்பகோணம் - அணைக்கரை திருப்பனந்தாள் செல்லும் வழியில், ஓடும் பஸ் , சோழபுரம் கடந்ததும் சேங்கனூர் வந்ததும் சற்று களைப்பாற நிற்கும். நாம் அங்கே இறங்கிக்கொள்ள வேண்டும். கிழக்கு பக்கம் செல்லும் சாலையில் அங்கிருந்து ஒரு கி.மீ. தூரம் நடந்தால் ஒரு புராதன சிவன் கோவில் தென்படும் . ஒரு விஷயம் சேய்ஞலூர் என்றால் யாரும் பதில் சொல்லமாட்டார்கள். அது தான் சேங்கனூர் ஆகிவிட்டதே!. சிவனுக்கு பெயர் சத்யகிரீஸ்வரர் அம்பாள் சகி தேவி. நமக்கு முன்னாள் ஞான சம்பந்தர் நடந்தே சென்று சிவனைக் கண்டிருக்கிறார்.
கோச் செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். கோயில் கட்டுமலை மேல் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கர்ப்பக்கிருகத்தைச் சுற்றிலும் மலைமேல் ஒரு பிராகாரமும், சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன. கட்டுமலை மீது மேலே மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை உள்ளன. மகா மண்டபத்தில் நடராஜர், தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர், நால்வர் சன்னதிகள் உள்ளன. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. சண்டேசுவரரின் திருமுடியில் பிறை, சடை, குண்டலம், கங்கையுள்ளன. நாயனாருக்குக் காட்சி தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். மூலவர் சத்தியகிரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டுமலைக்குக் கீழே அம்பாள் ஆலயம் தெற்கு நோக்கிய சந்நிதியாகவுள்ளது.

இந்த ஊர் விசேஷம் என்ன? அது தான் மேலே ஒரு பேர் சொன்னேனே. கவனிக்க வில்லையா.? சண்டேஸ்வரர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் மிகவும் முக்கியமான சண்டேசுவர
நாயனார் இந்த ஊரில் தான் பிறந்தார். பிராமண குலம் . அப்பா எச்ச தத்தன். அம்மா பவித்ரா.
அவர்கள் வைத்த பெயர் விசார சர்மா. கல்வி கற்றான். ஏழு வயதில் உபநயனம். சிவன் மேல் சதா சிந்தனை.

வைணவர்களுக்கும் இது ஒரு முக்கிய ஸ்தலம். நாலாயிர திவ்விய பிரபந்தததிற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை அவதார ஸ்தலம் இது தான். சிவன் கோவில் எதிரே இவருக்கு கோயில் உள்ளது.

சேய்ஞலூர் என்று எதற்கு இந்த ஊருக்கு பெயர்? முருகப்பெருமான் இந்த க்ஷேத்ரத்தில் தந்தை சிவபெருமானை வழிபட்டு சர்வசங்கார ஆயுதம், ருத்ர பாசுபதத்தை பெற்றார். சேய்: முருகன். அவருக்கு நல்லபடியாக வழிபட்ட பலன் கிடைத்ததால் :சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர். இப்படி சொல்வது நான் அல்ல, கந்தபுராணம் ( வழிநடைப் படலம்). ஆலயத்தில் முருகன் சந்நிதி பெரியது.

இந்த ஊரில் வாழ்ந்த விசார சர்மா, ஒருநாள் நண்பர்களோடு தெருவில் போய்க்கொண்டிருந்த போது ஒரு மாட்டிடையன் ஒரு பசுவை கொடுமையாக அடித்துக்கொண்டிருந்ததை பார்க்கிறான்.
ஏனப்பா சாதுவான வாயில்லாத பசுவை வதைக்கிறாய்? பசு உன்னதமான வழிபடும் ஜீவன். தெய்வீகமானது. எத்தனையோ தேவர்கள் குடிகொண்ட தேகத்தை உடையது. அதை பராமரிப்பது பாதுகாப்பது நமது கடமை, பசுவதை செய்பவனுக்கு நரகம் நிச்சயம் என்றெல்லாம் உனக்கு தெரியாதா?
உனக்கு முடியவில்லை ல் என்றால் இனி நானே பசுக்களை பராமரிக்கிறேன்'' என்று அன்று முதல் விசார சர்மா பசுக்களை மேய்க்க ஆரம்பித்தான்.

அந்த ஊர் அந்தணர்களின் பசுக்கள் அவனிடம் மேய்ப்பதற்கு வந்தன. பெற்ற தாய் போல் விசார சர்மா பசுக்களை நேசத்துடன் மேய்த்து பராமரித்ததால் பசுக்கள் அவனை விரும்பின. அதிக பால் கொடுத்தன. விசாரசருமன் சதா சர்வகாலமும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் ஒரு சிவலிங்கம் செய்து பிரதிஷ்டை செயது மகிழ்ந்தான். லிங்கத்தின் மேல் பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்து மகிழ்ந்தான்.
இதனால் பசுக்களின் எஜமானர்களுக்கு பால் அளவு குறையவில்லை.

விசாரசர்மா இப்படி பசும்பால் அபிஷேகம் லிங்கத்துக்கு செய்வதை பார்த்த யாரோ சிலர் அவன் பசுக்களின் பாலை விரயம் செய்கிறான் என்று விசார சர்மாவின் அப்பாவிடமும் கூட புகார் செய்ய அவர்க்கும் கடுங்கோபம் வந்தது.

ஒருநாள் நேரே சென்று என்ன நடக்கிறது என்று பார்த்தார். பசுக்களிடம் பாலைக் கறந்து நிறையக மண் லிங்கத்தின் மேல் தாராளமாக அவன் அபிஷேகம் செய்வதை பார்த்து விட்டார். அவன் மந்திரங்கள் ஸ்தோத்ரம் எல்லாம் சொல்லி அபிஷேகம் பூஜை செய்துகொண்டிருந்தான்.

கையில் ஒரு பெரிய கொம்புடன் அவன் தந்தை அவனை அணுகி தாக்கினார். பால் செம்புகளை காலால் உதைத்து உருட்டி கொட்டினார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை யாரென்று கூட பார்க்காமல் ஒரு குச்சியால் கால் மீது அடித்து விரட்ட, அந்த குச்சி சிவனின் மழுவாக மாறி விசார சர்மனின் தந்தை எச்சதத்தரின் கால்களை துண்டாக்கியது.

கால்கள் வெட்டப்பெற்றவர் தன் அப்பா என்று கூட விசார சர்மா அறியாமல் பூஜையில் ஆழ்ந்திருந்து வழி படும் தொண்டனை, பக்தனை சிவன் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா. பார்வதி சமேத பரமேஸ்வரன் அவன் முன் தோன்றி "எவ்வளவு பக்தி என் மீது உனக்கு? தந்தை என்றும் பாராமல் அபிஷேக பால் செம்புகளை உதைத்த கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தை'' அன்று அருளி தான் அணிந்திருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி "சண்டிகேஸ்வரர்" ஆக்கினார். சிவனோடு கலந்த ஈஸ்வரனானார். ஒரு சிவபக்தரால் தாக்கப்பட்ட தந்தைக்கும் மோக்ஷம்.

விசாரசருமன் சிவபூஜை செய்து முக்தி பெற்ற திருஆப்பாடி தலம் சேய்ஞலூரிலிருந்து சற்று தொலைவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் சண்டிகேஸ்வரர் ஒருவர் தான். இன்றுமுதல் சிவன் கோவில் சென்று தரிசனம் செய்யும்போது சண்டிகேஸ்வரர் சந்நிதியில் கை தட்டி அவர் தியானத்தை கலைக்காமல் வணங்கும்போது இந்த திருத்தொண்ட புராண கதை நினைவுக்கு வருமா?
ஒரு ஞானசம்பந்தர் தேவாரம் இதை பற்றி சொல்லி முடிக்கிறேன்.
.
பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.



சிறப்பான கோச்செங்கணான் கட்டிய மாடக் கோயிலான திருச்சேய்ஞலூரில் அருள் பாலிக்குஜ்ம் சிவபிரானே, பசுவின் முலைக் காம்பின் வழிச்சுரந்த பாலைச் சண்டீசர் மணலால் ஸ்தாபித்த சிவ லிங்கத்துக்கு அபிஷேகித்து வழிபட, அதனை விரும்பாது சினந்து பாற்குடத்தை இடறிய தன் தந்தையின் காலைத் துண்டித்த சண்டீசரின் பக்தியை மெச்சி உன்னுடைய தாரையும் மாலையையும் அவருக்கு சூட்டி சண்டேஸ்வரரை சிவகணங்களின் தலைவன் சண்டிகேஸ்வரனாக உயர்த்தியது ஏனப்பா?



Saturday, April 27, 2019

AANDAVAN PICHAI



புலவர்கள். சித்தர்கள், மஹான்கள். JKSIVAN
ஆண்டவன் பிச்சை.
உன்னை .நினைக்கையிலே....

சதாசிவ ப்ரம்மேந்த்ர ப்ரம்ம ஞானியை தெரியாதவர்கள் இப்போது அவர் பெயரை மட்டும் தெரிந்து கொள்ளலாம். விவரம் தானாகவே சேகரிக்கலாம் அல்லது ஒருநாள் நான் மீண்டும் அவரைப் பற்றி சொல்லும் வரை என்னை ஜபிக்கலாம்/சபிக்கலாம் .

அவர் ஒரு அவதூதர். அவர் வாழ்ந்த காலம் அது. அவருடைய சிஷ்யர் ஒரு யோகி, பின்னவாசல் ராமகிருஷ்ணன் என்பவர். தபஸ்வி. அம்பாள் பக்தர். மணமாகியும் மனைவியை நெருங்கவிடவில்லை. அவள் அவர் சிஷ்யையாக அருகே இருக்க துடித்தும் அவர் நெருங்க விடவில்லை. அவள் இறக்கும் முன்பு கணவனை ''நீயும் ஒரு பெண்ணாகி என்போல் தவிக்க வேண்டும்'' என்று சாபம் கொடுத்தாள். சன்யாசம் பெற வழியில்லாமல் தவித்த ராமகிருஷ்ணன் தானே சந்நியாசியாக வாழ்ந்து சமாதி அடைந்தார். சமாதி யடையும் முன்பு அவர் குரு சதாசிவ பிரம்மேந்திரர் அவர் முன் தோன்றுகிறார்.

''உன் மனைவியின் சாபம் நிறைவேற ஒன்று நீ பெண்ணாக பிறக்கவேண்டும் இல்லாவிட்டால் ஒரு பெண்ணின் உடலில் உன் ஆத்மா தங்கி சாபம் நிறை வேறவேண்டும். இரண்டாவதுக்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 25 வருஷங்களாக முருகன் குடிகொண்ட மனதுள்ள ஒரு பெண்ணின் உடலில் உன் ஆத்மா புகுந்து செயல்படட்டும். இது போன்ற உன்னத தேகம் பக்தியும் தூய்மையும் கொண்ட பெண் தேகம் உனக்கு வேறு கிடைக்காது. உடனே செயல்படு. உன் மனைவியின் சாப நிவர்த்தி பெறு '' என்கிறார்.

மைலாப்பூரில் மாடியிலிருந்து தலை சுற்றி விழுந்த மரகதத்தின் உடலில் இதயத் துடிப்பு நிற்கும் நிலையில் சந்நியாசி ராமகிருஷ்ணனின் ஆத்மா அதில் குடியேறியது. இது உடனே நடந்ததா அல்லது பல வருஷங்கள் கழிந்ததுமா என்ற கேள்வி நமக்கு எதற்கு? இது ஆண்டவன் பிச்சை அம்மாளே சொன்ன விஷயம். இதில் கால நேரம் எதற்கு?

பிள்ளை குட்டிகள் கண்களில் சோகத்தோடு சுற்றி சூழ்ந்திருக்க மரகதம்மா கண் திறந்தாள். யாரையும் அவளால் அடையாளம் காண முடியவில்லை. மலங்க மலங்க எல்லோரையும் பார்த்தாள். குழந்தைகளோ கணவனோ, உறவோ தெரியவில்லையா, புரியவில்லை. சந்நியாசி ராமகிருஷ்ணனுக்கு எப்படி அவர்களை தெரியும்? ஆறுமாதம் படுத்த படுக்கை. மெதுவாக எழுகிறாள். கஞ்சி பருகினாள் .

உள்ளே ஒரு குரல் ஞாபகப்படுத்தியது. நேரம் வந்து விட்டது. இனி நீ வேண்டியதை, விரும்பியதை அடைவாய். ஊர் ஊராகப் போ. க்ஷேத்ரங்களை தரிசி. மரகதத்தின் அற்புதமான தேகம் ராமக்ரிஷ்ணனுடைய வாடகை வீடாயிற்று. இனி மரகதம் பெயர் மட்டும் கொண்டவள். வெளிப்பாடு அவள். உள்ளே ஒரு யோகி. மரணமடையாத மரகதம் ஆவலுடன் இணைந்த யோகியின் ஆத்மா. ரெண்டு ஜீவன்கள் அவள் தேகத்தில்.

பல வருஷங்களுக்கு பிறகு மரகதத்தின் வீட்டில் அவள் எழுதி, அவள் மாமியார் காவேரியம்மாள் அவற்றை ஒளித்து வைத்த பாடல்கள் காவேரியம்மாவின் பெட்டியில் ஒரு நாள் கண்டுபிடிக்கப்பட்டன. செல்லரித்த அவளது ரூபாய் நோட்டுகள், தஸ்தாவேஜ்கள், அவற்றிற்கு இடையே துளியும் பாதிக்கப்படாத மரகதத்தின் முருகன் பாடல்கள்!! என்னே முருகன் அருள்!!

வீட்டிலிருந்தவர்கள் அந்த முருகன் பாடல்களை அப்போது வாழ்ந்திருந்த சிறந்த முருக பக்த மஹான் திருப்புகழ் மணி அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். மரகதம் அம்மாளின் முருகன் பாடல்கள் அச்சேறின.

புத்தகங்கள் அச்சேறிய மறுநாள் மரகதத்தின் முன்பு முருகன் புன்சிரிப்புடன் தோன்றி, முகவாயை பிடித்து மேல் நோக்கி திருப்பி கண்களோடு கண்களாக அவளை பார்த்து ''என்னைத் தெரிகிறதா?'' என்கிறான். ''சரவணபவா, ஷண்முகா, என்று கண்ணீர் மல்க அவன் காலடியில் விழுந்து வணங்குகிறாள் மரகதம்.
''நேற்று ஏன் என்னைப் பற்றி நீ எழுதிய பாடல்களை கொடுத்துவிட்டாய். என்னையோ என் மேல் பாடல்களோ பிடிக்கவில்லையா உனக்கு? இனி நான் உனக்கு தேவையில்லையா? பூமாலை, நகை ஆபரணங்களை விட பாமாலைகளை விரும்புபவன் நான். முன்பு நீ செய்தது போல் இனிமேல் என் மேல் பாடு'' என்றான் முருகன்.

''என் தெய்வமே!! என்று கதறுகிறாள் மரகதம். ''எல்லாமே மறந்து போச்சு. நான் யார்? என்னை பாடவைத்து நீ தானே, இனி உன்னை பாடக்கூடாது என்று எனக்கு கட்டளையிட்டு, நான் உன்னை பாடாமல் செய்ததும் உன் செயலே அல்லவா? உன்னை பாடிக்கொண்டே இருந்த குயில் இந்த கூட்டை விட்டு எப்போது பறந்து போனது? இந்தக்கூட்டில் வசிக்கும் பறவை யாரென்றும் உனக்கு தெரியாதா? முருகா, விளையாட இது நேரமா? இனி நான் உன்னை பாட வழி ஏது?'' என்றாள் மரகதம்.

''அதென்ன அப்படி சொல்லி விட்டாய். என்னை பாடமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்த ஆத்மா நீ இல்லை இப்போது? தேகம் மட்டும் தான் அப்படியே இருக்கிறது. ஆகவே நீ தாராளமாக பாடு. உனக்கு நான் தானே அந்த சக்தியை தந்தவன். பாட்டும் நானே பாவமும் நானே. உன்னை பேச, பாட, எழுத வைத்ததும் நானே. உனக்கு நீ யார் என்ற மயக்கம் இன்னும் தெளியவில்லை!. கலகலவென்று சிரித்த குமரன் மேலும் பேசினான்: ‘இது நீ கேட்ட முதல் தரிசனம். இந்த நாடகத்தில் இன்னும் பல காட்சிகளில் நான் வருவேன்.துன்பமும் இன்பமும் மாறி மாறிவரும். பேசாமல் எல்லாவற்றிற்கும் சாட்சியாக அமைதியாக இரு. என்னை நினை. எழுது.'' பளிச்சென்ற வெளிச்சத்தோடு மின்னல் போல எப்படி வந்தானோ அப்படியே முருகன் மறைந்தான்.

மரகதத்தின் முருகன் பாடல்கள் வெள்ளமாக வெளி வந்தன.


இனி மரகதம் ஆண்டவன் பிச்சை.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...