Thursday, April 25, 2019

JEYADEVAR ASHTAPATHI NATHA HARE


ஜெயதேவர்        J  K  SIVAN 
கீத கோவிந்தம் 

                                                                           ஒரு அஷ்டபதி...

 ஜெயதேவர்  அந்தக்கால  ஒரிசா காரர். சமஸ்க்ரித விற்பன்னர். கிருஷ்ண பக்தர். அவர் பாடல்களுக்கு  பூரி ஜெகன்னாதனே  ஒரு விசிறி.  அவர்  ஒரு பாடலில் சில வரிகளை வேண்டாம் என்று நீக்கியபோது ஜெயதேவராக  அவனே உருவெடுத்து அவர் வீட்டுக்கு சென்று அவர் எழுதிய பாடல் தாங்கிய  பனை ஓலையை கேட்டு வாங்கி அதில் அவர்  நீக்கிய  வரிகளை மீண்டும் எழுதியவன்.

 ஜெயதேவர் பூரி  ஜெகந்நாதரை மூச்சாக கொண்டவர். கிருஷ்ணனை ஜெகந்நாதரில் கண்டவர்.  பேசியவர். ரசித்தவர். ருசித்தவர்.  கிருஷ்ணனின்  நிழலாக  கோகுல பிருந்தாவன பிரதேசங்களில்  ஓடி ஆடியவராக  தன்னை அவனுடைய  'க்ரூப்' (GROUP) பில்  இணைத்துக்கொண்டு  ராதை, கிருஷ்ணன், தோழிகளோடு அவர்கள் பேசியது பாடியது, உணர்ந்தது எல்லாம்  மனித  'டேப் ரெகார்டராக' (TAPE  RECORDER) செயல்பட்டு நமக்கு கீத கோவிந்தமாக  அளித்திருக்கிறார். கண்ணனை,  ராதையை,   அஷ்டபதியில்  ஸ்பர்சிக்கலாம், கேட்கலாம், ரசிக்கலாம்  உணரலாம்.   கீத கோவிந்தம் படிக்கும்போது பாடும்போது  சென்னையில் வெயிலில் உட்கார்ந்திருக்கும்போதே  குளிர்ந்த பிருந்தாவன சோலைகளுக்குள் கிருஷ்ணனோடு நாமும் இருக்கலாம். 

 ஒரு அஷ்டபதி சொல்கிறேன்.

Naatha hare, Nata hare, Naata hare
Pasyati disi disi, Pashyathi dishi dishi

adhatAngamtu maSaktAm chira manu raktAm latA gruhe drushTvA
tachcharitam gOvindE manasija mandE sakhee prAha ||

இந்த காட்சியில்  ராதையின் தோழி  நேராக   கிருஷ்ணனை தேடி செல்கிறாள். எளிதில் அகப்படுபவனா அவன்?  கண்ணனைக் காண்பதெப்போ  என்று  ராதை ஏங்குகிறாள்.  கண்ணனை கண்டவள் அவனும் ராதையை சந்திக்க வேண்டும் என்ற  உணர்வில்  இருப்பதை  அறிகிறாள்.

இந்த பாடலை  புரி  ஜெகந்நாதனை  'ஹரி'   என்று  அழைத்து  ஜெயதேவர் எழுதுகிறார்  

tvadadhara madhura madhu ni pibantam
nAdha harE jagannAdha harE
seedati rAdhA vAsa gruhE || nAdha||

ராதையாக  ஜெயதேவர் மனைவி  பத்மாவதியை  ஜெகந்நாதன் சந்நிதியில் அவர் பாடல்களுக்கு  அபிநயம் பிடித்து  ஆடுவாள். என்ன ஆதர்ச தம்பதிகள் !   

''ஜெகன்னாதா,  லோக நாயகா,   உனக்காக  ராதை எங்கெங்கோ அலைகிறாள்.  பசி தாகம் எல்லாம் மறந்துவிட்டாள் . பிச்சியானாள்.  நீ எங்கோ  மற்ற  கோபியருடன் விளையாடிக் கொண்டிருக்கிறாய்.  அவள் நிலை, கவலை உனக்கு தெரியாதா?  துக்கத்தின்  மொத்த உருவமாக இருக்கிறாள் ராதா.

 2tvadabhisaraNa rabhasEna valantee
patita padAni kiyanti chalantee||nAdha||

எப்படியாவது உன்னை சந்தித்தே  ஆகவேண்டும்.  பரமாத்மா உன்  திவ்ய நினைவு  என்கிற அமிர்தத்தில் திளைத்து கால் தடுமாறுகிறது அவளுக்கு.  உடல் உள்ளம் எல்லாமே கண்ணன் எனும் திவ்யானுபவத்தில் இருக்கும்போது கால்கள்  சரியாக நடக்கமுடியுமா.    சாதாரணம் ஒரு  அரை கண்ணாடி குவளை மட்ட ரக  குடி போதையே  தள்ளாட வைக்கிறதே.  பக்தி போதை என்ன செய்யாது?

C 3vihita viSada bisa kisalaya valaya jeevati paramiha tava rati kalayA||nAdha||
உடல் தஹிப்பு  தாங்கமுடியாமல்  சில்லென்று  தாமரைக் கொடிகளை எடுத்து கைகள் மேல் சுற்றிக்கொள்கிறாள். அவள் உயிர் வாழ்வது  கண்ணன் தரிசனத்துக்காகவே.

C 4muhuravalOkita manDana leelA
madhuripu rahamiti bhAvana SeelA||nAdha |

கிருஷ்ணன் நினைவு தலைக்கேறி  தானே  கிருஷ்ணனாகி  விட்டாள் .

C 5tvarita mupaiti nakadhA mabhisAram
hari riti vadati sakhee manu vAram||nAdha||

அடியே தோழி, சகி, ஏனடி என் கண்ணன் இன்னும் வரக்  காணேன்.. என்று திரும்ப திரும்ப கேட்கிறாள். 

C 6Slishyati chumbati jaladhara kalpam
harirupagata iti timira manalpam||nAdha||Radha is crazily imagining that you are embracing and kissing her.
C 7bhavati vilambini vigaLita lajjA
vilapati rOditi vAsaka sajjA||nAdha||

கண்ணீரும் கம்பலையுமாக  தூக்கமின்றி வாடுகிறாளே  ராதை. கண்ணா உன் மனம் இரும்போ, கல்லோ?

C 8Sree jayadEva kavErida muditam
rasika janam tanutam atimuditam||nAdha||

கடைசி பதத்தில்,  அஷ்டபதம் என்றால் எட்டு பதங்கள்.   அதில் கடைசியாக  கவிஞர் ஜெயதேவர்  ஐயா  இவ்வாறு ராதை மோசமான நிலையில் இருக்கிறாள், என்று நிலையை உணர்த்துகிறார். கலை ஆர்வம் ரசனை கொண்ட  பக்தர்கள்  இந்த  தெய்வீக ப்ரேமையை துய்த்து சந்தோஷிக்கட்டும்  என்கிறார்.

நானும்  இந்த  அஷ்டபதியில்  நாலு ஐந்து பதியை மட்டும்  பாடிவிட்டு அஷ்டபதியில் மீதியை விழுங்கி விட்டேன். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...