Monday, April 1, 2019

LALITHA SAHASRANAMAM




       ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - .(678 - 694)   -   J.K. SIVAN




भाषारूपा बृहत्सेना भावाभाव-विवर्जिता ।
सुखाराध्या शुभकरी शोभना सुलभा गतिः ॥ १३३॥  

Bhasha roopa Brihat sena Bhavabhava vivarjitha
Sukharadhya Shubhakaree Shobhana sulabha gathi

பாஷாரூபா, ப்றுஹத்ஸேனா, பாவாபாவ விவர்ஜிதா |
ஸுகாராத்யா, ஶுபகரீ, ஶோபனா ஸுலபாகதிஃ || 133 ||

राज-राजेश्वरी राज्य-दायिनी राज्य-वल्लभा ।
राजत्कृपा राजपीठ-निवेशित-निजाश्रिता ॥ १३४॥

Raja Rajeswari Rajya Dhayini Rajya vallabha
Rajat krupa Raja peetha nivesitha nijasritha  
ராஜராஜேஶ்வரீ, ராஜ்யதாயினீ, ராஜ்யவல்லபா |

Rajya lakshmi Kosa natha Chathuranga baleswai
Ashta moorthy Aja jethree Loka yathra vidahyini

ராஜ்யலக்ஷ்மீஃ, கோஶனாதா, சதுரம்க பலேஶ்வரீ |
ஸாம்ராஜ்யதாயினீ, ஸத்யஸம்தா, ஸாகரமேகலா || 135 ||  

        லலிதா ஸஹஸ்ரநாமம் - (678-694  ) அர்த்தம்

* 678 * 
பாஷாரூபா *   மொழி எனும்  பாஷைக்கு  உருவம் இருந்தால் அது அம்பாள் ஒருவள். மொழிக்கான அக்ஷரங்கள் தோன்றுவதே அவளிடமிருந்து தான்.  மொழியினால் தான்  கற்க முடியும், ஞானம் கூடும். புரிதல் ஏற்படும்.    கல்விக்கடவுள் சரஸ்வதியும் அம்பாள் ஸ்வரூபமே அன்றோ.



*679* ப்ருஹத் சேனா  -  மா பெரும்  சைன்யத்தை உடையவள். இந்த பிரபஞ்சத்தை கட்டி ஆள்வது அவ்வளவு எளிதா? 




*680* பாவாபாவ விவர்ஜிதா -  தோற்றம்  மறைவு, பிறப்பு  இறப்பு அற்ற நிரந்தரமானவள். மறைவு தோற்றம் அனைத்திற்கும் மாயை  ஒன்றே காரணம். தோற்றம் மறைவு எல்லாமே  அபாவம் என்கிற  ''இல்லாத''  வகையை சேர்ந்தவை.  இந்த அபாவம் நான்கு விதமானது.    1.  ப்ராகாபாவம்:  உற்பத்தி ஆவதற்குமுன் இல்லாதது.  பஞ்சு நூலிலிருந்து ஆடை  கிடைக்கிறது.  பஞ்சு நூல் இருந்தபோது  ஆடை இல்லை. ஆடை ஆனபின் பஞ்சும் நூலும் மறைந்து விட்டது.    2.  த்வம்ஸபாவம்  :  அழிந்தபின்  இல்லாமை.   பஞ்சை நூலாக்கி அழித்தபின் ஆடையானது போல.  3. அத்யாந்தாபாவம் :  முழுதுமே  இல்லாமை.  பிரம்மம்  ஒன்றே நிலையானது. ஆதி முதல் அந்தம் வரை மற்றெல்லாம்  மறைந்தது.   அத்வைதம்.  இரண்டற்ற ஒன்று.  4.அன்யோன்யாபாவம்:   சமரச  நிலையாமை.  ஒரு மண் பாண்டம்  நூலாடை இல்லை.  நூலாடை  மண்பாண்டங்கள் இல்லை. வெவ்வேறு. இரண்டும் ஒன்றில் ஒன்று இருக்கிறது. அது இதல்ல. இது அதல்ல. உபநிஷத்துகள்  நேதி   ந இதி, இதுவல்ல  என்று ஒவ்வொன்றாக  விலக்கி  ஒன்றேயான  பிரம்மத்தை அடைவது போல்.







* 681 * 

ஸுகாராத்யா:   அம்பாள்  ஆராதிக்க சுகமானவள் என்று சொல்கிறது இந்த நாமம். எந்த வித கஷ்டமும் இல்லாமல் அம்பாளை ஆராதனை செய்யலாம்.  விரதம், உபவாசம், தவம், தீ மிதிப்பது   என்ற  எந்த  சடங்கும் தேவையில்லை அவளை தொழுவதற்கு.
ஶுபகரீ, 


* 682 * சுபகரீ .  -  அம்பாள்  ஸ்ரீ லலிதை  நனமையை புரிபவள். நல்லதே செய்பவள். 
உடலை வருத்திக்கொண்டு, பயந்து கொண்டு  இதை செய்யாவிட்டால் கோபிப்பாளோ  என்ற பீதி இல்லாமல்  சௌலப்யத்தோடு அவளை மனமார  வழிபடுபவர்களை  தாயன்போடு  அரவணைத்து  அருள் பாலிக்கிறாள்.







* 683 *சோபனா  சுலபா  கதி .-   எளிதில் அடையப்படுபவள் மட்டுமல்ல  நன்மையே  புரிபவள் ஸ்ரீ அம்பாள்.







* 684 * ராஜராஜேஸ்வரி  -  சக்ரவர்த்தினி.  ராணிகளுக்கெல்லாம் ராணி. ராஜாவுக்கெல்லாம் ராஜா மாதிரி அம்பாள்  லலிதா  ப்ரம்மா, விஷ்ணு  மஹேஸ்வரர்களுக்கெல்லாம்  ஈஸ்வரி.  


* 685 * ராஜ்யதாயினி  - "வைகுண்டம், கோலோகம், கைலாசம், பிரம்மலோகம், எந்த சாம்ராஜ்யம் ஆனாலும் அளிப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை.


* 686 *  ராஜ்யவல்லபா -  சகல சாம்ராஜ்யங்களுக்கும்  மேலான அதிகார  நாயகி.  வல்லபை. 










* 687 *




ராஜத்-க்ருபா  -  அவள்  ஆளும்  ராஜ்யத்திலிருந்து  எட்டு திக்கிலும் கருணையை வாரி வழங்குபவள் ஸ்ரீ மாதா  லலிதாம்பிகை.





* 688 *  



ராஜபீட நிவேஶித  நிஜாஶ்ரிதா -  அம்மா  நீயே  கதி என்று சரணடைந்தவர்களை  ராஜாக்களாகி  சிம்மாசனத்தில் அமர்த்தி  வைத்து அலங்கரிப்பவள். அவ்வளவு கருணைகொண்ட தாய்  அம்பாள்.

* 689 * ராஜ்யலக்ஷ்மீ -   இந்த பிரபஞ்சத்தையே தனது ராஜ்யமாக கொண்டவள் அம்பாள் லலிதை.  எல்லையில்லாதது. 



* 690 * கோச நாதா -   ஒரு ராஜ்யத்தின் நிதியை, செல்வத்தை கோசம் என்பார்கள். அப்படிப்பட்ட  திரவியத்தை அருள்பவள் அம்பாள்.  நமது உடல் அற்புதமானது. அதில் ஐந்து கோசங்கள்  அன்னமய கோசம், ப்ராண மய கோசம், மனோமய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்த மய கோசம் என   பஞ்சகோஸம்  அமைந்துள்ளது 













* 691 *சதுரங்க பலேஸ்வரி  -   அம்பாளுக்கு இப்படி ஒரு நாமம்.   நமக்குள்  இயங்கும் நால்வகை சேனைகளுக்கு அதிபதி, சக்தி அளிப்பவள்.   அந்த நால்வகை சேனைகள்:  மனம்,  புத்தி , எண்ணம்,  அகம்பாவம் எனும்  அந்தக்கரண சைன்யங்கள்.













* 692 *


ஸாம்ராஜ்யதாயினீ  -  பக்தர்களை சாம்ராஜ்ய அதிபதிகளாக்குபவள் என்று சொல்லும்போது ஸ்ரீ லலிதாம்பாளின்  தாராள மனசு,  காருண்யம் எல்லாம் எவ்வளவு அழகாக  வெளிப்படுகிறது. ராஜசூய யாகம் புரிந்தவன் தான் சாம்ராட்.  சாம்ராஜ்ய அதிபதி. ராஜாக்களையெல்லாம் தலைவன்.   தைத்ரிய உபநிஷத் 
 (I.vi.2) ஆப்னோதி  ஸ்வாராஜ்யம் என்று சொல்லும்போது, நமக்குள் உறையும் பிரம்மத்தை அறிந்து கொள்ளும்  ஆத்ம  ஞானிகளாகிறோம்.  இதற்கும் மிஞ்சிய  சாம்ராஜ்ய அதிபதி பட்டம் உண்டா?

















* 693 * 



ஸத்யஸந்தா  -    உண்மை தவிர சத்யம் தவிர வேறொன்றும் நெருங்காத அம்பாள். அம்பாளின் சொல் செயல், அனைத்துமே சத்தியத்தின்  நேர்மை, உண்மையின் அடிப்படையில் என்பதால் அதன் சக்தி அஃகிகம். எதிர்கொள்ளமுடியாதது. 
* 694 * ஸாகரமேகலா    -  அம்பாள்  இடுப்பில் அணியும் மேகலை இருக்கிறதே  அது  சமுத்ரங்களால் வேயப்பட்டது என்றால் அவள் இடுப்பளவை  யூகிப்போம்.  அவள் விஸ்வரூபி.   கதோபநிஷத் சொல்லுமே  ஒரு அற்புத வாக்கியம்  (I.ii.20) ''  அணோரணீயும்  மஹதா மஹியான்''   -  பிரம்மத்தை இதை விட சிறப்பாக  வர்ணிக்க முடியாது.  சிறியதில் சிறியது, பெரியதில் பெரியது. அம்பாள் பரப்ரம்மஸ்வரூபி.


     சக்தி பீடம்:   

                                        திருவெண்காடு. 

மயிலாடுதுறை -தரங்கம்பாடி  சாலையில்  23 கி.மீ  மயிலாடுதுறையிலிருந்து ஒரு வண்டியை பிடித்து சென்றால்  திருவெண்காடு எனும் ஸ்வீகாரண்யம் க்ஷேத்ரத்தை அடையலாம்.  அந்தக்காலத்தில் நடந்தே அடைந்திருக்கிறார்கள்.  சீர்காழியிலிருந்து பூம்புகார் பாதையில் சென்றால் 13 கி.மீ. தூரம் 
சிவன்  இங்கே  ஸ்வேதாரண்யர், திருவெண்காடர், வெண்காட்டு நாதர்.   அம்பாள்  ஸ்ரீ ப்ரம்ம வித்யாம்பிகை. சக்தி பீடம். ரொம்ப பெரிய 12  ஏக்கரா கோவில்.  மூன்று தீர்த்தங்கள்  சூரியன் , சந்திரன் அக்னி தீர்த்தங்கள்.  தேவார பாடல்களை இங்கே  சைவசமய குரவர்கள்  வந்து பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். உட்கார்ந்து ஒருநாள் படிக்கவேண்டாமா?  நவகிரஹ  பரிஹாரஸ்தலங்களில் இது புதனை சேர்ந்தது.  வாலமீகி ராமாயண காலத்தில் இருந்தே இந்த ஸ்தலம் உண்டு.   சோழர்காலத்தில் சிறப்பாக பராமரிக்கப்பட்ட  ஆலயம்.   சோழ பாண்டிய ராஜாக்கள் பொரித்த  கல்வெட்டுகள் பேசுகிறது. 
அம்பாள் பிரமனுக்கு  ப்ரம்ம கலைகளை உபதேசித்த க்ஷேத்ரம். அம்பாளுக்கு அதனால்  ப்ரம்ம வித்யாம்பிகே என்று பெயர்.

ஞான சம்பந்தர்   திருவெண்காட்டு  பதிகம்  ஒன்று தருகிறேன். 

மண்ணொடு  நீ ரனல்   காலோ  டாகாயம் மதி  இரவி      
எண்ணில்  வருமியமானன் இகபரமு மெண்டிசையும்                                                                            பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்                                              
விண்ணவர் கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

''என் மன்னவா, மகாதேவா,    இந்த மண், நீர்,  அனல்,  கற்று,   ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களுடன், சூரிய சந்திரன் இரண்டும் கண்களாகவும், இகம் பரம்  என ஈரேழு புவனங்களிலும் ஆணோடு பெண்ணாக  சக்தியும் சிவமுமாக , இரண்டறக்கலந்து, என் பெருமை சிறுமை எதையும் லட்சியப்படுத்தாமல்  பேரன்பு கொண்டு, மனதில் அன்போடு  கருணையோடு  இந்திரன் தவம் மெச்சி அவன் மேன்மையுற வழிகாட்டிய  திருவெண்காட்டில் உரை  பெம்மானே உன்னை நமஸ்கரிக்கிறேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...