Tuesday, August 31, 2021

PESUM DEIVAM




 பேசும் தெய்வம்:    நங்கநல்லூர்  J K  SIVAN  -


69.    கோவிந்தராஜ  வெங்கடேச  பெருமாள் தரிசனம் 

மஹா பெரியவா காளஹஸ்தியில் இருந்த  ஒருவார காலம் முழுதும் தினமும் காளஹஸ்தீஸ்வரர், ஞானகுசம்பாள்  சந்நிதியில் தியானம் செய்ய தவறவேயில்லை.  தியானம்  பல மணிநேரங்கள் கூட ஆகும். யாரும் கிட்டே வரமாட்டார்கள். அவராக தியானம் கலைந்து எழுந்திருப்பார்.  நாள் தவறாமல், பாரத்வாஜ தீர்த்தம், மயூர தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பனசகோணா , சஹஸ்ரலிங்கேஸ்வர கோணா  என்று பல   புண்ய தீர்த்தங்களில்  விடாமல்  ஸ்னானம். 
மஹா சிவராத்திரி  அமாவாசை அன்று  கைலாசகிரி போகவேண்டும் என்று முடிவு செய்தார். பலருக்கு பெரியவாளை எப்படி தடுப்பது என்று கவலையும்  சங்கடமும்.  அந்த காட்டுப்பாதை, கரடுமுரடானது,  முப்பது மைல்  நடக்கவேண்டும். கொடிய  வனவிலங்குகள் மலிந்த இடம். இருட்டு. மஹா பெரியவா துணிந்துவிட்டார் என்றால் எந்த சக்தியும் அவரை தடுக்க முடியாது.   கைலாச கிரி ப்ரதக்ஷணத்துக்கு   நடக்க கிளம்பிவிட்டார்.  பெரிய கிரி பிரதக்ஷணம்,    பல  மைல்கள் நீளமானது. 

மஹா  பெரியவா காலை 9மணிக்கே  தீர்மானித்தபடி  கிளம்பிவிட்டார். கொளுத்தும் வெயிலை லக்ஷியம் பண்ணவில்லை. கிரி பிரதக்ஷணம்   ராத்திரி நள்ளிரவு தான் முடிந்தது. அங்கிருந்து  மடத்துக்கு நடந்து வந்தார். மஹா பெரியவா நடப்பதை பார்த்திருக்கிறீர்களா?  ஓட்டமும் நடையு மாக இருக்கும். அவரோடு சேர்ந்து நடக்க முடியாது.  கூட வந்த இருபது பேர் களைத்துவிட்டார்கள். மேல் மூச்சு  கீழ்மூச்சு வாங்கியது. கண்களில் ஆயாசம்.  நொந்து போய்விட்டார்கள்.  மஹா பெரியவா எந்த ஸ்ரமத்தையும்  காட்டவில்லை.  மஹா பெரியவா காலில் நிறைய கொப்புளங்கள்  வெயிலினால்,  காட்டுப்பாதையில்  நீண்ட நடை காரணமாக  இந்த  கொப்புளங்கள்.  அப்படியும் அவர்  அதைப் பற்றிய  கவனம் சிறிதும் இல்லாமல் இருந்தார். 
மறுநாள் காலை  காளஹஸ்தி ராஜா வந்துவிட்டார்.  பாத பூஜை செய்ய அனுமதி கேட்டு ஏற்பாடுகள் நடந்தது.  காளஹஸ்தி அரண்மனையில் ஒரு பழைய  ஸிம்ஹாஸனம் இருந்தது..  பல  ராஜாக்கள் முன்னோர்கள் அமர்ந்து ஆட்சி செய்தது. அதில்  மஹா பெரியவாளை அமர்த்தினார். அதில் யாரும் அமராமல்  பூஜிக்கப்பட்டு வந்த ஸிம்ஹாஸனம்  அது.  இன்னொரு விஷயம் சொல்கிறேன்  கேளுங்கள். ஆச்சரியப்படுவீர்கள். மஹா பெரியவா அமர்ந்த அந்த சிம்மாசனத்தில் அதற்கு முன்  யார் எப்போது அமர்ந்தார் தெரியுமா?  1887ம் வருஷம்,  முந்தைய  காமகோடி பீட 65வது ஜகத்குரு   ஸ்ரீ மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தான் கடைசியாக அதில் அமர்ந்தவர்.   இது கப்ஸா இல்லை.  காளஹஸ்தி ராஜா சமஸ்தானத்து தஸ்தாவேஜிகள், ஆவணங்கள்   சொல்லிய  ஆதார பூர்வ  விஷயம்.

காளஹஸ்தி முகாமுக்கு பிறகு  மஹா பெரியவா  திருப்பதிக்கு  விஜயம் செய்தார்.  1932ம் வருஷம் மார்ச் மாதம் 13ம் தேதி திருப்பதிக்கு விஜயம் செய்தார்.  திருமலை   ஏறும் முன்பு கீழே  திருப்பதியில்  அநேக பக்தர்கள்,  திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள், பணியாளர்கள்,  இதர மற்ற  இடத்திலிருந்து வந்தவர்கள் என்று பெரிய கூட்டம் சேர்ந்து விட்டது.   திருப்பதிக்குத் தெற்கு எல்லையில் அங்காளம்மன் ஆலயம் உள்ளது. அங்கே  எல்லோரும் ஒன்றுகூடி  பெரியவா வருகைக்கு காத்திருந்தார்கள்.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட  ஒரு பல்லக்கில் மஹாபெரியவா ஆரோகணித்து அனைவருக்கும்  தரிசனம் தந்தார்.  ஊர்வலம் அங்கிருந்து  தொடர்ந்தது.   ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டார்கள்  வேத பாராயணம்  ஒலித்தது.   பஜனை குழுக்களின் ஏகோபித்த  குரல் இனிமையாக எங்கும் கேட்டது. பக்க வாத்யங்கள் இனிமை கூட்டியது.  
திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமிகள் சந்நிதி, தேவஸ்தானம்  வரை ஊர்வலம்  களைகட்டியது. மஹா பெரியவா ஆலயத்தின் அருகே  பல்லக்கை விட்டு இறங்கினார்.

ஒரு விஷயம்.  திருப்பதி செல்லும் அநேகர்,  நேராக  நூல் பிடித்த மாதிரி திருமலை சென்று வெங்கடேசனை தரிசித்து லட்டு சாப்பிட்டுவிட்டு  வீடு திரும்புகிறோம் .  அநேகருக்கு   ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவில் மலையடிவாரத்தில் இருப்பதும் தெரியாது, தெரிந்தாலும் பலர்  அங்கே சென்று தரிசிப்பதில்லை.   இது காலத்தின் கோளாறு.

சிவனும்  விஷ்ணுவும் சேர்ந்து  பிரதான தெய்வங்களாக உள்ள கோவில்கள் ரொம்ப அரிதானவை.  இத்தகைய ஆலயங்களில் சைவ வைணவ சம்பிரதாயங்கள் விடாமல் கடை பிடிக்கப்படும்.  பாரத தேசத்தில் ரெண்டு  கோவில்கள் இப்படி பிரபலமானவை.  சிதம்பரம் நடராஜர் சந்நிதிக்கு அருகே  ஸ்ரீ கோவிந்தராஜ  பெருமாள் இருக்கிறார்.  வைணவர்களின் திவ்ய தேசம் அது.  திருச்சித்ர கூடம் என்று பெயர். ஆனந்தமாக  சயன கோலம்.  இந்த பக்கம் ஆனந்த   நடராஜன். .  காஞ்சிபுரத்தில் இதே  போல் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்.  அந்த ஆலயத்தில்  மூலவருக்கு அருகிலேயே  ஒரு பெருமாள் சந்நிதி உள்ளது. அதுவும் வைணவர்களின் முக்கிய திவ்யதேச ஆலயங்களில் ஒன்று. அங்கே  மஹா விஷ்ணுவுக்கு பெயர் நிலாத்திங்கள்  துண்டத்தான்.  உண்மையில்  ஹரி ஹர  வேறுபாடு கிடையாது.  வித்யாசம் எல்லாம் நமது மனதில் தான்.   சிவனின் மனைவி பார்வதி தேவி, விஷ்ணுவின் சகோதரி.   விமானம்  புருஷ சுக்தம்.பெருமாள்  நின்ற திருக்கோலம்.  தாயார் பெயர்   நேர் ஒருவரில்லா  வள்ளித்  தாயார்.  தீர்த்தம் சந்திர புஷ்கரணி.  
  திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த போது வெப்பம் மூண்டது.  ஸ்ரீ மஹா விஷ்ணுவும்  மற்ற தேவர்களும்  பிரம்மனைப்  பிரார்த்தனை செய்தார்கள்.  அமிர்த கடல் வெப்பம் நீங்க வேண்டு மானால் காஞ்சியிலுள்ள சிவ பெருமான் குடிகொண்டிருக்கும் ஏகாம்பரநாதன் திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை  வணங்கினால் போதும் என்று பிரம்மன்  வழிகாட்டியதால்  மஹா விஷ்ணு  காஞ்சிபுரம் வந்து இங்கே  தவம் செய்தார் என்று ஒரு  ஸ்தலபுராணம். 

 சிவபெருமான் தலையில் இருக்கும் சந்திர ஒளி திருமால் மீது பட்டதும்  திருமாலுக்கு வெப்பம் நீங்கியது.  இதனால் பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் என்று பெயர்.

 ஒரு மாமரத்தின் கீழே பார்வதி தேவி தவம் செய்யும் பொழுது,  அவளது  ஜெபத்தை சோதிக்க சிவன் அந்த  மாமரத்தை எரித்ததாகவும் அப்பொழுது பெருமாள் தனது அம்ருத கிரகணங்களை கொண்டு எரிந்து போன மாமரத்தை தழைக்கச் செய்து குளிர்ச்சியை உண்டு  பண்ணியதாகவும் வேறொரு ஸ்தலபுராணம். பார்வதியின் அருகே வாமனர் சிலை உள்ளது.   இந்த வாமனர் தான் மாமரத்தை தொலைக்க வைத்த பெருமாள் என்று புராணச் செய்தி.  சைவ ராஜா  ரெண்டாம் குலோத்துங்க சோழன் கோவிந்தராஜ பெருமாளை சிதம்பரம் ஆலயத்திலிருந்து  எடுத்து  கடலில் எறிந்தான். 1130ல்  வைணவ பக்தர்கள்  கோவிந்தராஜ ஆலய உத்ஸவ மூர்த்திகளை  திருப்பதிக்கு எடுத்து சென்றார்கள். ஸ்ரீ ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார்.  1235ல்   ரெண்டாம் ராஜராஜன் காலத்தில் தான் இந்த திருப்பதி கோவிந்தராஜர் ஆலயம் பற்றி அதிகம் வெளியில் தெரிந்தது.  அதன் மஹாத்மியம் தெரிந்தது. முன்னூறு வருஷங்கள் கழித்து அப்புறம் விஜயநகர நாயக்கர்கள் காலத்தில்  ஆலயம் புனருத்தாரண  கும்பாபிஷேகம் பெற்றது.  சித்ர  வேலைப்பாடுகள் நிறைந்த  ஆலயம். 11 கலசம் கண்ட 7 நிலை ராஜகோபுரம். 
கோவிந்தராஜ பெருமாள்   திருமலை வேங்கடேச பெருமாளுக்கு மூத்தவர். வெங்கடேசன் பத்மாவதி கல்யாணத்தில் முக்கிய பங்கு வகித்தவர். கோவிந்தராஜன் தான் குபேர சம்பத்தை நிர்வகித்து பாதுகாத்தவர். அவர் தான் செல்வ நாயகன்.  ஆரம்பகாலத்தில் ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் என்று பெயர். கோவிந்தராஜ பெருமாள் யோகநித்ரா சயன  கோலத்தில்  உள்ளவர்.  பலராமர் தான் கோவிந்தராஜனாக அவதரித்தவர் என்று ஒரு ஐதீகம்.
மஹா பெரியவா  திருப்பதியில் தங்கி தரிசனம் செய்ய சகல ஏற்பாடுகளும் செயதிருந்தார்கள்.  ஸ்ரீ ராமஸ்வாமி ஆலயத்தின் எதிரில்  தோட்டத்தில்  பந்தல், நிர்மாணித்து  அங்கே மஹா பெரியவா முகாமிட்டார். மஹா பெரியவா அமர்ந்திருந்த பல்லக்கு  ஆலயத்தின் வாசலுக்கு வந்து மஹா பெரியவா  இறங்கினார் அல்லவா. அப்போது ப்ரம்ம ஸ்ரீ வெங்கட்கேஸ தீக்ஷிதர் ஸமஸ்க்ரிதத்தில்  அவருக்கு வரவேற்புரை  வாசித்தார்.  நாகபுடி N  குப்புசாமி அய்யர்  தெலுங்கில்  அதே   போல் வரவேற்புரை வழங்கினார்.  சாயந்திரம்  மடத்திற்கு விஜயம் செய்து  மடாதிகாரி பிரம்மஸ்ரீ வேங்கடேச  தீக்ஷிதர் ஏற்பாடு செய்த  பாதபூஜையை ஏற்றார்.  கீழ் திருப்பதியில் இவ்வாறு  1932 வருஷம்  ஏப்ரல் மாதம் 21ம் தேதி வரை  மஹா பெரியவா  தங்கி இருந்தார்.  அந்த சமயத்தில் மூன்று நாள்  திருமலைக்கு சென்று  வெங்கடேச பெருமாள் தரிசனம் செய்தார்.  அங்கே  பாதபூஜை, பிக்ஷா வந்தன ஏற்பாடுகள் சிறப்பாக நடந்தன.  தங்கப்பூண் போட்ட குடை ஒன்றும் பீதாம்பர வஸ்திரமும் பெருமாள் பிரசாதமாக  மஹா பெரியவாளுக்கு தேவஸ்தான நிர்வாகம் அளித்தது.   காஞ்சி காமகோடி மட சார்பாக  மஹா பெரியவா நவரத்ன கல் பதித்த மகரகண்டி  பதக்கம் ஒன்றையும்  பீதாம்பர வஸ்திர ஜோடி ஒன்றும்  வேங்கடாசலபதி  பெருமாளுக்கு சாத்தினார்.   அப்போது தான்  சஹஸ்ரகலச அபிஷேகம், கருடோத்சவம் நிகழ்த்தினார்.  தேவஸ்தான நிர்வாகிகள்,  பணியாளர்களுக்கு பிரசாதம்   பரிசுகள் அளித்து ஆசி வழங்கினார்.  திருமலையில் தங்கி யிருந்த மூன்று நாட்களிலும்   பாபநாசம்   ஆகாச கங்கை  நீர் வீழ்ச்சியில் ஸ்னானம்.    மலையிலிருந்து நடந்து கீழே இறங்கி வரும் வரை வழியில் அமர்ந்திருந்த அநேக  ஏழைமக்களுக்கு   வஸ்திர, ஸ்வர்ண புஷ்ப  தானம்  செய்தார்.  திருப்பதி விஜயத்தின் பொது எண்ணற்ற பக்தர்கள்  எங்கிருந்திருந் தெல்லாமோ  வந்திருந்து  தரிசனம் பெற்று மகிழ்ந்தார்கள்.  பிராமணர்கள், வைசியர்கள், வைசியர்கள், பெரி வைஸ்யர்கள் , பலிஜாக்கள், ரெட்டிகள்,  கண்டல வகுப்பினர்  அனைவரும்  பாதபூஜை பிஷவந்தன வைபவத்தில் கலந்து கொண்டார்கள். மஹா பெரியவா சரளமாக  தெலுங்கில் அவர்களுக்கு பிரசங்கம் செய்தார். , மடத்துக்கு விஜயம் செய்த  வித்வான்களுக்கு , பண்டிதர்களுக்கு எல்லாம்  காஷ்மீர் சால்வை வழங்கி  கௌரவித்தார்.  

Monday, August 30, 2021

sriman narayaneeyam


 ஸ்ரீமந் நாராயணீயம் - நங்கநல்லூர் J K SIVAN --

41வது தசகம்.

41. ஸ்வர்க பூமி வாசிகள்.

என்னைப் பொறுத்தவரை, ராக்ஷஸர்களிலேயே மிகவும் மரியாதை, மதிப்பும் பெற்று , முதலிடம் வகிப்பவள், ஒரே இடம் அடைந்தவள், பூதனை தான். எத்தனையோ தாய்மார்கள் ராக்ஷஸிகளாக பெற்ற குழந்தைகளை வதைத்து, கொல்கிறார்கள். நேற்று கூட பேப்பரில் விடியோவில் பார்த்தேன். இத்தனைபேர் நடுவிலே ஒரு ராக்ஷஸியே தாயாக வந்து தான் பெறாத கண்ணனுக்கு பால் ஊட்ட வந்தாளே என்பதால், அவள் ஊட்ட விரும்பியது பால் என்கிற போர்வையில் விஷமாக இருந்தாலும் அவனை வாரி மடியில் வைத்து அணைத்து, முத்தமிட்ட ராக்ஷஸ ஜென்மம் அவள் ஒருவள் தான்.

व्रजेश्वरै: शौरिवचो निशम्य समाव्रजन्नध्वनि भीतचेता: ।
निष्पिष्टनिश्शेषतरुं निरीक्ष्य कञ्चित्पदार्थं शरणं गतस्वाम् ॥१॥

vrajeshvaraH shaurivachO nishamya samaavrajannadhvani bhiitachetaaH |
niShpiShTa nishsheShataruM niriikshya ka~nchitpadaarthaM sharaNaM
gatastvaam || 1

வ்ரஜேஶ்வர꞉ ஶௌரிவசோ நிஶம்ய ஸமாவ்ரஜன்னத்⁴வனி பீ⁴தசேதா꞉ |
நிஷ்பிஷ்டனிஶ்ஶேஷதரும் நிரீக்ஷ்ய கஞ்சித்பதா³ர்த²ம் ஶரணம் க³தஸ்த்வாம் || 41-1 ||

கோகுலமே ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் திகைத்தது. நந்தகோபன் வேகமாக மதுராவிலிருந்து கோகுலம் திரும்பி வந்து கொண்டிருந்த போது வசுதேவர் சொல்லியது அவன் காதுகளில் ரீங்கார மிட்டுக் கொண்டே இருந்தது. பயத்தில், கவலையில் அவன் முகம் வெளிறியது. கை கால்கள் சக்தி இழந்து நடக்கத் தடுமாறினான். அவன் பயம் அதிகரித்தது. வழியில் பெரிய பெரிய மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து கிடந்தன? ஏன்? என்ன உற்பாதம் நடந்தது இங்கே? அவன் மனம் ''பகவானே என்னவோ நடக்கிறதே, நீ தான் என் குழந்தையை காப்பாற்றவேண்டும்'' என்று ''உனக்காக உன்னையே ''வேண்டிக் கொண்டே இருந்தது.
निशम्य गोपीवचनादुदन्तं सर्वेऽपि गोपा भयविस्मयान्धा: ।
त्वत्पातितं घोरपिशाचदेहं देहुर्विदूरेऽथ कुठारकृत्तम् ॥२॥

nishamya gOpiivachanaadudantaM sarve(a)pi gOpaa bhayavismayaandhaaH |
tvatpaatitaM ghOrapishaacha dehaM dehurviduure(a)tha kuThaarakR^ittam || 2

நிஶம்ய கோ³பீவசனாது³த³ந்தம் ஸர்வே(அ)பி கோ³பா ப⁴யவிஸ்மயாந்தா⁴꞉ |
த்வத்பாதிதம் கோ⁴ரபிஶாசதே³ஹம் தே³ஹுர்விதூ³ரே(அ)த² குடா²ரக்ருத்தம் || 41-2 ||

எல்லா கோபிகளுக்கும் கிருஷ்ணன் செல்லம் என்பதால் அனைவருமே யசோதை வீட்டில் இருந்த தால், அங்கு நடந்த கோர சம்பவத்தை வீட்டுக்கு வந்து தத்தம் கணவன்மார்களிடம் இன்னும் அதிகமாக சுவாரஸ்யம் ஊட்டி கண்ணும் காதும் வைத்து விவரித்துச் சொன்னபோது கோபர்களும் திடுக்கிட்டார்கள். இதென்ன அக்ரமம், இதுவரை கேள்விப்படாததாக இருக்கிறதே! சிலரால் பேசவே முடியாமல் இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்கள். பல கோபர்கள் ஒன்று சேர்ந்து பயத்தை அடக்கிக் கொண்டு உன்னால் கொல்லப்பட்ட அந்த பிரம்மாண்ட ராக்ஷஸி போதனையின் உடலை பல துண்டுகளாக வெட்டி தூக்கிக்கொண்டு போய் தூரமாக யமுனை நதிக்கரையில் ஒரு இடத்தில் எரித்தார்கள்.
त्वत्पीतपूतस्तनतच्छरीरात् समुच्चलन्नुच्चतरो हि धूम: ।
शङ्कामधादागरव: किमेष किं चान्दनो गौल्गुलवोऽथवेति ॥३॥

tvatpiita puutastana tachChariiraat samuchchalannuchchatarO hi dhuumaH |
shankaamadhaadaagaravaH kimeShaH kiM chaandanO gaulgulavO(a)thaveti || 3

த்வத்பீதபூதஸ்தனதச்ச²ரீரா-த்ஸமுச்சலன்னுச்சதரோ ஹி தூ⁴ம꞉ |
ஶங்காமதா⁴தா³க³ரவ꞉ கிமேஷ கிம் சாந்த³னோ கௌ³ல்கு³லவோ(அ)த²வேதி || 41-3 ||

அந்த ராக்ஷஸியின் உடல் உன் வாய் பட்டு பால் அருந்தியதால், உன் ஸ்பரிஸம் பட்டதால் புனித மாகி கொழுந்து விட்டு எரிந்து புகை உயரமாக ஆகாயத்தை தொடுவது போல் எழும்பியது. உன் தொடர்பால் அவள் உடல் சந்தனம், அகில், சாம்பிராணி புகை நறுமணத்துடன் சாம்பலாகியது.

मदङ्गसङ्गस्य फलं न दूरे क्षणेन तावत् भवतामपि स्यात् ।
इत्युल्लपन् वल्लवतल्लजेभ्य: त्वं पूतनामातनुथा: सुगन्धिम् ॥४॥

madangasangasya phalaM na duure kshaNena taavad bhavataamapi syaat |
ityullapanvallavatallajebhya-stvaM puutanaamaatanuthaassugandhim || 4

மத³ங்க³ஸங்க³ஸ்ய ப²லம் ந தூ³ரே க்ஷணேன தாவத்³ப⁴வதாமபி ஸ்யாத் |
இத்யுல்லபன்வல்லவதல்லஜேப்⁴யஸ்த்வம் பூதனாமாதனுதா²ஸ்ஸுக³ந்தி⁴ம் || 41-4 ||

குருவாயூரப்பா, இதுவும் உன் கருணை தானே . உன்னைக் கொல்ல வந்தவளுக்கு இத்தனை மரியாதையா? ராக்ஷஸி பூதனை உடலுக்கு இத்தனை மேன்மையா ! ''கோபர்களே பார்த்தீர்களா, என்னை தொட்டதாலேயே அந்த ராக்ஷஸிக்கு கிடைத்த மஹிமையை. உங்கள் எல்லோருக்கும் இன்னும் அதிக பாக்யம் இனி என்னோடு உறவாடுவதால் கிடைக்கப்போகிறது. அது வெகு தூரத்தில் இல்லை '' என்று நீ சொல்வது போல் இருந்தது.
चित्रं पिशाच्या न हत: कुमार: चित्रं पुरैवाकथि शौरिणेदम् ।
इति प्रशंसन् किल गोपलोको भवन्मुखालोकरसे न्यमाङ्क्षीत् ॥५॥

chitraM pishaachyaa na hataH kumaara-shchitraM puraivaakathi shauriNedam |
iti prashamsan kila gOpalOkO bhavanmukhaalOkarase nyamaankshiit || 5

சித்ரம் பிஶாச்யா ந ஹத꞉ குமாரஶ்சித்ரம் புரைவாகதி² ஶௌரிணேத³ம் |
இதி ப்ரஶம்ஸன்கில கோ³பலோகோ ப⁴வன்முகா²லோகரஸே ந்யமாங்க்ஷீத் || 41-5 ||

''இவனா, இந்த குட்டிப் பயலா இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தவன். எவர் உதவியும் இல்லாமல், பயமே துளியும் இல்லாமல் அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே உயிரை உறிஞ்சி விட்டானே. அதிசயப்பயல் இவன் ! ஒன்றுமறி யாதவனாக நீ விளையாடிக் கொண்டிருக்கும் போது உன் முகத்தை பார்த்து அதிசயித்தார்கள். எல்லையற்ற சந்தோஷம் அடைந்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவரோடு பேசியது உன்னைப் பற்றியே தான்.
''நல்லவேளை அந்த ராக்ஷஸி பாவம் குட்டி கிருஷ்ணனை கொள்ளவில்லை. பகவான் கருணை தான் இது '' எப்படியோ தப்பித்தான் கிருஷ்ணன். ஏதோ திடீரென்று மாரடைப்பால் அந்த ராக்ஷஸி உடனே கீழே விழுந்து இறந்துவிட்டாள். தெய்வாதீனம் தான் இது. ஐயோ நினைத்துக் கூட பார்க்க முடியவில்லையே. கிருஷ்ணனை நம் கண்ணெதிரிலேயே கொன்றிருப்பாளே. ஆச்சர்யத்திலேயே அதிக ஆச்சர்யம் இது தான். நந்தகோபன் வந்தது சேதி அறிந்தான். தலை சுற்றியது, கண் இருண்டது . வசுதேவர் சொன்னது எவ்வளவு உண்மை. மஹான் அவர். எவ்வளவு கவலையோடு நம் பிள்ளையைப் பற்றி சொன்னார் '' என்று நினைத்தான். அவர் பிள்ளை அவன் என்று நந்த கோபனுக்கு எப்படி தெரியும்?
दिनेदिनेऽथ प्रतिवृद्धलक्ष्मीरक्षीणमाङ्गल्यशतो व्रजोऽयम् ।
भवन्निवासादयि वासुदेव प्रमोदसान्द्र: परितो विरेजे ॥६॥

dine dine(a)tha prativR^iddhalakshmii-rakshiiNa maangalya shatO vrajOyam |
bhavannivaasaadayi vaasudeva pramOdasaandraH paritO vireje || 6

தி³னே தி³னே(அ)த² ப்ரதிவ்ருத்³த⁴லக்ஷ்மீரக்ஷீணமாங்க³ல்யஶதோ வ்ரஜோ(அ)யம் |
ப⁴வன்னிவாஸாத³யி வாஸுதே³வ ப்ரமோத³ஸாந்த்³ர꞉ பரிதோ விரேஜே || 41-6 ||

பலநாட்கள் வேகமாக ஓடின, குருவாயூரப்பா, நீ தானே அந்த வசுதேவன் மகன் வாசுதேவன். நீ இருப்பதால் அந்த வஜ்ரபூமியே செழிக்கத்தொடங்கியது. எங்கும் லக்ஷ்மிகடாக்ஷம். குறையொன்று மில்லாத கோபர்களை கோபிகளை எங்கும் பார்க்க முடிந்தது கோபாலா. எங்குமே ஆனந்தம். எவர் முகத்திலும் மகிழ்ச்சி ஒளி வீசியது. பல சூரியன்கள் கீழே, ஒரே ஒரு சூரியன் மேலே.
गृहेषु ते कोमलरूपहासमिथ:कथासङ्कुलिता: कमन्य: ।
वृत्तेषु कृत्येषु भवन्निरीक्षासमागता: प्रत्यहमत्यनन्दन् ॥७॥

gR^iheShu te kOmalaruupahaasa-mithaH kathaa sankulitaaHkamanyaH
vR^itteShu kR^ityeShu bhavanniriikshaa samaagataaH pratyahamatyanandan || 7

க்³ருஹேஷு தே கோமலரூபஹாஸமித²꞉ கதா²ஸங்குலிதா꞉ கமன்ய꞉ |
வ்ருத்தேஷு க்ருத்யேஷு ப⁴வன்னிரீக்ஷாஸமாக³தா꞉ ப்ரத்யஹமத்யனந்த³ன் || 41-7 ||

கிருஷ்ணா, வஜ்ர பூமியில் வசித்த கோபிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். தினமும் ஏதாவது பேச விஷயம் அகப்படும். இந்த பூதனை விஷயம் பல நாள் பேசும் சமாசாரமாகி விட்டது. உன் அழகு, வசீகரம், காந்த புன்னகை தான் தலைப்பு செய்தி. வேக வேகமாக தங்களது அன்றாட ஜோலிகளை முடித்துக்கொண்டு எல்லோரும் யசோதை வீட்டிலேயே பழியாக கிடப்பார்கள். போட்டி போட்டுக் கொண்டு உன்னோடு விளையாடுவார்கள். சொல்ல முடியாத அளவு சந்தோஷம் உன்னைப் பார்த்தாலேயே அவர்களுக்கு.
अहो कुमारो मयि दत्तदृष्टि: स्मितं कृतं मां प्रति वत्सकेन ।
एह्येहि मामित्युपसार्य पाणी त्वयीश किं किं न कृतं वधूभि: ॥८॥

ahO kumaarO mayi dattadR^iShTiH smitaM kR^itaM maaM prati vatsakena |
ehyehi maamittyupasaarya paaNii tvayiisha kiM kiM na kR^itaM vadhuubhiH || 8

அஹோ குமாரோ மயி த³த்தத்³ருஷ்டி꞉ ஸ்மிதம் க்ருதம் மாம் ப்ரதி வத்ஸகேன |
ஏஹ்யேஹி மாமித்யுபஸார்ய பாணிம் த்வயீஶ கிம் கிம் ந க்ருதம் வதூ⁴பி⁴꞉ || 41-8 ||

''என் தெய்வமே, கைகளை ஆசையோடு விரித்துக் கொண்டு உன்னைத் தூக்கிக் கொள்ள ஓடிவரும் கோபிகளை நினைத்துப் பார்க்கிறேன்.
''அழகு செல்லமே, நீ என்னை மட்டும் தானே பார்க்கிறே. என்கிட்டே மட்டும் தானே வருவே '' என்று கொஞ்சிக்கொண்டே ஒவ்வொருவரும் உன்னை நெருங்கினார்கள்.
''இதோ பாத்தியாடி, இவன் என்னை மட்டும் பார்த்துண்டே இருக்கான், சிரிக்கிறான்'' '' இல்லேடி, என்கிட்டே தான் வரணும்னு தாவுகிறான் '', \
'அவா யாரும் வேண்டாம்டா, கண்ணப்பா, நீ என்கிட்டே மட்டும் வாடா ''
என்று பெருமையாக ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டார்கள்.

भवद्वपु:स्पर्शनकौतुकेन करात्करं गोपवधूजनेन ।
नीतस्त्वमाताम्रसरोजमालाव्यालम्बिलोलम्बतुलामलासी: ॥९॥

bhavadvapusparshana kautukena karaatkaraM gOpavadhuujanena |
niitastvamaataamra sarOjamaalaa vyaalambilOlambatulaamalaasiiH || 9

ப⁴வத்³வபு꞉ஸ்பர்ஶனகௌதுகேன கராத்கரம் கோ³பவதூ⁴ஜனேன |
நீதஸ்த்வமாதாம்ரஸரோஜமாலா-வ்யாலம்பி³லோலம்ப³துலாமலாஸீ꞉ || 41-9 ||

''ஆஹா குருவாயூரப்பா, இந்த காட்சியை மனக்கண்ணால் உன் முன் அமர்ந்து காண்கிறேன் எனக்கு நீ அப்படி தோண்றுகிறாய் தெரியுமா? நிறைய பூக்காடாக சூழ்ந்திருக்கும் செந்தாமரை மலர்களிடையே, சுற்றிக்கொண்டு ஒவ்வொரு பூவுக்குள்ளும் அவசரம் அவசரமாக புகுந்து தேன் குடிக்க புறப்படும் தேன் வண்டு தான் அத்தனை கோபிகளிடமும் நீ கொஞ்சி குலாவியதை நினைவூட்டு கிறது. இதில் ஒரே ஒரு வித்யாசம் என்ன தெரியுமா? அங்கே பல வண்டுகள் ஒரே ஒரு மலராகிய உன்னைத்தேடி சுற்றி சுற்றி வந்தன என்பது தான் சரி. உன்னைப் பார்ப்பதே தேன் குடிப்பது போல் தானே. பந்து விளையாடும் போது அது வேகமாக ஒவ்வொரு கையாக மாறுமே, அது போல் உன்னை ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி ஏந்திக்கொண்டு கொஞ்சி விளையாடி னார்கள்.

निपाययन्ती स्तनमङ्कगं त्वां विलोकयन्ती वदनं हसन्ती ।
दशां यशोदा कतमां न भेजे स तादृश: पाहि हरे गदान्माम् ॥१०॥

nipaayayantii stanamankagaM tvaaM vilOkayantii vadanaM hasantii |
dashaaM yashOdaa katamaaM na bheje sa taadR^ishaH paahi hare gadaanmaam ||10

நிபாயயந்தீ ஸ்தனமங்கக³ம் த்வாம் விலோகயந்தீ வத³னம் ஹஸந்தீ |
த³ஶாம் யஶோதா³ கதமான்ன பே⁴ஜே ஸ தாத்³ருஶ꞉ பாஹி ஹரே க³தா³ன்மாம் || 41-10 ||

உன்னை மடியில் ஏந்தி, கைகளால் ஆசையோடு, பாசத்தோடு அணைத்து , முத்தமிட்டு, உனக்கு பாலூட்டினாளே அந்த யசோதை ஆஹா என்ன தவம் செய்தவள். அவள் சந்தோஷத்தை என் அல்ப வார்த்தை களால் எழுத முடியுமா கண்ணா? உன் அழகில் அவள் மூழ்கி வெகு நேரமாகி விட்டதே. உன் சிரித்த முகம் அத்தனை பேரையும் அங்கே கொள்ளை கொண்டு போய் வெகுநாளாயிற்றே. எண்டே குருவாயூரப்பா, ஹரி, எனது நோயை நீக்கி என்னையும் ரக்ஷிக்க வேண்டுமப்பா.
தொடரும்

ULLADHU NAARPADHU

உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்   J K   SIVAN---
 பகவான் ரமண மகரிஷி

 
''  ஸர்வம்  ப்ரம்ம மயம் ''


''பார்வை சேர், நாம் உலகம் காண்டலால்  நானா  ஆம் சக்தி உள ஓர்   முதலை ஓப்பல்  ஒருதலையே – நாம  உருச்
சித்திரமும் பார்ப்பானும்  சேர் படமும்  ஆர் ஓளியும் 
அத்தனையும்  தான் ஆம்  அவன் ''


நாம்  என்னென்னவோ  வித விதமான  வஸ்துக்களை, உயிர்களை உலகில் பார்க்கிறோம். அவற்றுக்கு மூலமான, ஆதாரமான ஏதோ ஒன்று இருக்கிறது  என்ற அளவில்  நாம்  அறிகிறோம்.இதெல்லாம்  பார்க்கிற, இல்லை,  அனுபவிக்கிற,   நாம்,---  நமக்கு முன் தோன்றும்   விதவிதமான  உருவம், பெயர்களோடு கொண்ட    வஸ்துக்கள், உயிர்கள்,  அனைத்தும்,  ----இந்த பொருள்களை உயிர்களை எல்லாம்  நாம் அனுபவிக்க வைக்கும், உணரவைக்கும் ஏதோ ஒரு சக்தியும்  --- ஒன்றே தான்.  அது தான் ப்ரம்மமாகிய ஈஸ்வரன்.

நமக்கு  கண்ணில் பட்டது, நாம்   இந்த உலகத்தில் அறிந்ததை, அனுபவித்ததை,  '' ப்ரத்யக்ஷம்'' என்கிறோம்.   நாம் அனுபவிக்க  வைத்த சக்தி  ''அபரோக்ஷம்''    நமது ஐம்புலன்கள் வழியாகத் தான் இந்த உலக அனுபவம் பெற்றோம்  அதை ''ப்ரதீதி'' என்கிறோம்.  இதிலிருந்து என்ன புரிகிறது.  கண் வழியாக பார்த்தது, காதால் கேட்டது, மெய் வாய் மூக்கு செவி இதனால் எல்லாம் அறிந்த ப்ரத்யக்ஷம் தான் நமது அனுபவமான ப்ரதீதி. ரெண்டும் ஒன்று.  ஏதோ ஒன்று  இதற்கெல்லாம் ஆதாரமானது என்று உணரவைத்ததே அது ''ஸத் ''  அதால்  தான் உலகத்தில் எல்லாம் புலனாகியது. ஆகவே  அதிலிருந்து தான் எல்லாமே  உருவாகியது.    காட்சி, காணுதல், காண்பவன் இந்த மூன்றும்   காரணமான  ''ஸத் '' தை ம

றைக்கும் திரை (ஆவரணம்),   மாயை.    


சாயந்திர  அரை இருட்டில்  கோபாலசாமி  ஒரு கயிறை பாம்பாக கண்டு  பயத்தில்  ஐந்தடி உயரம் தாண்டி குதித்தான்.  அந்த பயம்  பிரமை. கயிறு பாம்பு இல்லை, பாம்பாக மாறவில்லை.  கோபாலசாமி புத்தியில்  உண்மையை மறைத்து திரை போட்டது.  இந்த ஆவரணம் ஆத்மாவை கொஞ்சமும் பாதிப்பதில்லை.  புத்தியின் தோஷம்.  அருகே இருந்த ஒருவன்  டார்ச் அடித்து பார்த்தபின் கயிறு பாம்பு அல்ல என்று தெரிகிறது.  இதை தான்  அவித்யா தோஷம் என்பது.  விகல்பங்களை உண்டாக்குவது.  இல்லாதது இருப்பது போல் தோன்றுவது.   எல்லாம்  நான், நீ, அது அவன், சென்று ஏதோ ஸ்வரூபத்தில் காட்டுவது.  அனைத்தும் ஸத்தில் மறைந்துவிடும்  ஞானம் நமக்கு வேண்டும். 


எதிரே  பெரிய  கடல்.  அதில்  அலை,  நுரை, குமிழிகள், என்று பல வஸ்துக்கள்  தெரிகிறது.  உண்மையில் அத்தனையும்  நீர் ஒன்றே.  இப்படி  உணர்பவன் தான் ''ஏக த்வர்ஸி''   ஒன்றாக காண்பவன்,உணர்பவன்.  எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான்,   ஸர்வம்  ப்ரம்ம மயம்   அவனன்றி ஓர் அணுவும் அசையாது  என்பது இப்போது புரிகிறதா?சகலமும்  ஆத்மாவின்  விகல்பம் .  

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...