Wednesday, August 18, 2021

GEETHANJALI

 கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --

தாகூர் 


98.  நடக்காது என்பார்  நடந்து விடும்.


98.  I will deck thee with trophies, garlands of my defeat. It is never in my power to escape unconquered.
I surely know my pride will go to the wall, my life will burst its bonds in exceeding pain,
and my empty heart will sob out in music like a hollow reed, and the stone will melt in tears.
I surely know the hundred petals of a lotus will not remain closed for ever
and the secret recess of its honey will be bared.
From the blue sky an eye shall gaze upon me and summon me in silence.
Nothing will be left for me, nothing whatever, and utter death shall I receive at thy feet.

கிருஷ்ணா,  நான்  ஒளிவு மறைவு  இல்லாதவன்.  மனத்தில் உதிப்பதை பட்  பட்  என்று உதிர்ப்பவன்.  இதனால் எனக்கு நண்பர்களை விட   விரோதிகள்  என்று சொல்லமாட்டேன்,   என்னை நேசிக்காதவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம், அவர்கள் தான் அதிகம்.  
இந்த உலகத்தில்  பொய்  சொல்வதும்,  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோரும் தான் வாழமுடியும்.  மற்றவர்களுக்கு  இடம் இல்லாமல் போய்க் கொண்டு வருகிறதே என்ன செய்வது?

நான் உன்னை என் தோல்வியெனும் பரிசுகளாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிப்பேன். தோல்வியைச் சந்திக்காமல் தப்பிப்பது என்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.  என் பெருமை சுவரில் முட்டிக் கொள்ளட்டும். என் வாழ்வு அதன் பந்தங்களை எல்லைகளை மீறி பொங்கி, வெடிக்கும்.  மிகுந்த வேதனையுடன்  ஆறு கரையை உடைத்து வெளியேறுவது போல் என்  உணர்ச்சிகள்  பிரவாகமாக வெளிப்படும்.   என் வெற்று நெஞ்சம்   மூங்கில் குழலின்   துளைகளின் வழியாக பீறிட்டு ஏக்கத்துடன் ஒலிக்கும் . கல்லும் கண்ணீரில் கரையும் என்பார்களே  அது அப்போது நிகழும்.
இது  எனக்கு உறுதியாகத் தெரியும்.  தாமரை மலரின் நூறு இதழ்கள்  என்றென்றும் மூடியிருக்கப்  போவதில்லை.  அதன் ஆழத்தில்  சுரந்திருக்கும்,   மறைந்திருக்கும்   பூந்தேன்   வண்டுகளின்  கண்ணில்  படத்தான் போகிறது.   இதுவும்  எனக்குக் கண்டிப்பாகத் தெரியும்.

இனி நான் எதிர்பார்த்தது நடை பெறப்போகிறது.
நீலவானிலிருந்து ஒரு விழி என்னை நோக்கி, அமைதியாக   வா  என்று ஜாடை காட்டி அழைக்கும். அப்போது எனது, எனக்கு, என்று  எதுவுமே  இருக்காது.  உறுதியாக எதுவும் என்னுடையதில்லை என்று ஆகிவிடும்.   ஆஹா நான்  முழுமையாக மரணத்தை   வரவேற்று  உன்னிடம் வருவேன், உன் காலடியில்  அமைதி பெறுவேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...