Tuesday, August 17, 2021

geethanjali


 கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --

தாகூர் 


97.  நின்னை சரணடைந்தேன் ஆத்ம நாதனே.


97.  When my play was with thee I never questioned who thou wert.
I knew nor shyness , nor fear, my life was boisterous.
In the early morning thou wouldst call me from my sleep like my own comrade and 
lead me running from glade to glade.

On those days I never cared to know the meaning of songs thou sangest to me.
Only my voice took up the tunes, and my heart danced in their cadence.
Now, when the playtime is over, what is this sudden sight that is come upon me?
The world with eyes bent upon thy feet stands in awe with all its silent stars.

நான்   எதையும் மனம் விட்டு  பேசுபவனடா.  நான்  ஏமாளி, முட்டாள் என்று அதனால் பட்டம்  மாற்றிக்கொள்ள  விரும்பவில்லை.   சிங்கம், புலி, நாய், பூனை, குரங்கு  போல்  இயற்கையான என் குணத்தோடு இருந்துவிட்டு போகிறேன்.  

 ஆசாய் ஆசை  ஆசையாக நான் உன்னோடு விளையாடினபோதெல்லாம், நீ யார் என்று  கேட்டதேயில்லை.  எனக்கு  நாணம், அச்சம் எல்லாம் புத்தகத்தில்  படித்ததோடு சரி.  என் வாழ்வு ஆரவாம்,   கும்மாள, கொந்தளிப்போடு தான் ஆனந்தமாக  இருந்தது.  

ஒவ்வொருநாளும்  நீ தான் அதிகாலையில் ஒரு தோழனைப் போல் என்னை தூக்கத்திலிருந்து எழுப்பி, கைப்பிடித்து  அழைத்து, காட்டின் ஒரு வெட்ட வெளியிலிருந்து, வேறு ஒரு வெட்ட வெளிக்கு அழைத்துச் செல்பவன். உன்னை மறக்க முடியுமா?.

நீ  அருமையாக   பாடுபவன்,உனக்கு  குயிலின் இனிமையைப்போல் ஒரு   அற்புத குரல் உண்டு.  நீ  பேசினாலே ஆலாபனத்தோடு  பாடுவது போல்  கேட்க சுகமாக இருக்கும் .  என்  அந்த நாட்களில் நீ என்னிடம் பாடிக்  காட்டிய  பாடல்களின் பொருளை, நான் அறிய முயலவில்லை.   ஒளரங்க சீப் நான்.  சங்கீதம் தெரியாதவன்.   ஆனால் என் குரல் உன் பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருந்ததன் மூலம்  இனிய  பண்   இசையைக் கற்றுக் கொண்டது.  என் நெஞ்சம் உன் இசையின்   உச்ச  த்வனியில்  அதன்    ராகத்தில்,  தாளத்தில் களிப்புடன் நடனம் புரிந்தது.  

 காலம் மாறிவிட்டது.  பல காலண்டர்களில் சீட்டுகள்   கிழித்தாகிவிட்டது.  இப்போது  அந்த பழைய  விளையாட்டு, அதன்  நேரம் எல்லாம்  முடிந்துவிட்டதே .    இப்போது என் கண்முன் தோன்றும் காட்சி என்ன?

 ஆம் கிருஷ்ணா,  இந்த  உலகம் தன்னுடைய அமைதியான விண்மீன்களுடன் குனிந்து, உன் காலடியைப் பயபக்தியுடன் , ஒரு வித  இனம்புரியாத  அதிசயத்தோடு நோக்குகிறது.  குனிந்து  முத்தமிட முயல்கிறது  என்று வைத்துக் கொள் .


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...