Wednesday, August 18, 2021

geetanjali

 கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --

தாகூர் 


99.   காத்திருக்கிறேன்  வா 


99.  When I give up the helm I know that the time has come for thee to take it.
What there is to do will be instantly done. Vain is this struggle.
Then take away your hands and silently put up with your defeat, my heart,
and think it your good fortune to sit perfectly still where you are placed.
These my lamps are blown out at every little puff of wind,
and trying to light them I forget all else again and again.
But I shall be wise this time and wait in the dark, spreading my mat on the floor;
and whenever it is thy pleasure, my lord, come silently and take thy seat here.



எனக்கு  புரிந்து விட்டது கிருஷ்ணா.   யாரையும்  கல்லாலே  கட்டி, சாந்தாலே  பூசி  வைக்கலே நீ. நேரம் வந்தா  என்னுடைய நிர்வாகத்தை நான் திருப்பிக் கொடுக்கும்பொழுது, நீயே   திருப்பி அதை  எடுத்துக் கொள்ளும் வேளை வந்துவிட்டது என்பதை தெரிந்து கொண்டேன்.  

செய்யவேண்டிய காரியங்கள் உடனே  மெஷின் மாதிரி செய்யப்படும்.  அதை தவிர்த்து  ஆர்ப்பாட்டம் எல்லாம்  தேவையில்லை. வீண். 

என் இதயமே,  வீணான உன் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு,    பேசாமல் ஆடாமல் அசையாமல் இருந்த இடத்திலேயே உட்கார்ந்து வருவதை  அமைதியாக  எதிர்கொள். உன் தேவையற்ற முயற்சிகள் தோல்விகளைத்  தந்ததை   இன்னுமா புரிந்து கொள்ளவில்லை?.  அது மேலிடத்து உத்தரவு.   நீ  எதையும் மீறமுடியாது.  நீ  செல்லும் வேளை வந்தாகி விட்டது.  தயாராகு. .  உன் தோல்வியைத் தாங்கிக் கொள், என் நெஞ்சமே!

இடிச்ச  புளி  போல்  அப்படியே இருக்கும் இடத்தில் அசையாமல்   உட்கார்வது  கூட நீ  செய்த அதிர்ஷ்டம். அது  எத்துணைப் பேறு என்பதை நீ எண்ணிப் பார்.  

இதோ  நான் ஏற்றும்  இந்த விளக்குகள் காற்றின் ஒவ்வொரு சிறு வீச்சுக்கும்  கூட  எதிர்த்து போரிட முடியாமல்  அணைந்து போகிறது.  அவற்றை  மறுபடி மறுபடி  ஏற்றும் முயற்சியிலேயே நான் குறியாக இருப்பதால்,   மீதி எல்லாம்  மறந்து விடுகிறேன்.  

ஆனால்,   கிருஷ்ணா, இந்த முறை நான் ரொம்ப தெளிவாக இருக்கிறேன். இதோ பார்  விளக் கில்லாத  இருளில்  கூட   கோரைப்பாயை  தரையில் விரித்துக் காத்திருப்பேன்.  என் தலைவா!  உனக்கு எப்பொழுது தோன்றுகின்றதோ, அப்பொழுது அமைதியாக வா.      வா, வந்து, உன் இதோ என் பாயில் பக்கத்தில்  உன் இருக்கையில்  உட்கார்.    சேர்ந்து போவோம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...