Tuesday, August 24, 2021

PESUM DEIVAM



 


பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN

67   சித்தூர்,  வேலூர்  விஜய யாத்திரை. 

மஹா பெரியவா சித்தூர் வருகிறார் என்கிற சேதி அந்த பகுதி வாழ் பக்தர்களுக்கு  ஆனந்தத்தை அளித்தது.  ஆந்திராவில் சந்திரகிரி மண்டலத்தை சேர்ந்த இந்த  ஊர் மூன்று  ஆறுகள்  சங்கமமாகும் ஸ்தலம். ஸ்வர்ணமுகி, கல்யாணி, பீமா என்பவை அவை.தொண்டவடா   என்ற அந்த ஸ்தலத்தில்  அகஸ்தீஸ்வர சுவாமி ஆலயம் ரொம்ப புராதனமானது.  திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து  பொடி நடையாக  15 நிமிஷத்தில் அடைந்துவிடலாம்.  அகஸ்தியரால் ஸ்தாபிக்கப்பட்டு  பூஜிக்கப்பட்ட சிவாலயம்.  மூன்று வாசல்கள். துவாரபாலகர்கள் அழகாக  செதுக்கப்பட்ட சிலைகள். ரெண்டாவது பிரகாரத்தில் பார்வதி அம்மன் சந்நிதி.  அம்பாளுக்கு  வள்ளி மாதா என்ற பெயர்.  ஆலய எதிரில்  ஆழமான  ஆறு. அதன் மத்தியில் நீராழி மண்டபம். ,மண்டபத்தில்  பாலாஜி, ஐயப்பன் , கணேசர் விக்ரஹங்கள்.


ஸ்ரீ அகத்திய பெருமானால் பூஜிக்கப்பட்டு நிறுவப்பட்ட லிங்கங்களுள் ஒன்று அகஸ்தீஸ்வரர் ஆலய லிங்கம். .விஷ்ணுபகவானின் பாத தரிசனமும் பகவானின் சிலையும் முன்னே இருக்க சிவபெருமான் லிங்கமாக பின்னே இருக்கிறார்..

 மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீனிவாசப் பெருமாள் லக்ஷ்மியின் அவதாரமான பத்மாவதித் தாயாரை நாராயண வனம் என்கிற இடத்தில் திருமணம் முடித்து,  ஸ்ரீனிவாச மங்காபுரம் அருகில்  உள்ள இந்த தொண்டவடா கிராமத்தில் பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் உள்ளது.   இந்த சிவாலயம் திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து 11.8 கி.மீ., தூரத்தில் உள்ளது.  சந்திரகிரி அரண்மனை போகும் முன்னே தொண்டவடா ஊர் போக சாலை சந்திப்பு வரும் சந்திப்பில் இருந்து 2km தூரத்தில் கோவில் உள்ளது.

சித்தூரில் மஹா பெரியவா தங்குவதற்கு  வியாச மண்டபம் தயாரானது.  அகஸ்தீஸ்வரன் ஆலயம் எதிரே அது உருவாயிற்று. வியாச பூஜைக்கு முதல் நாள்  மஹா பெரியவா வந்துவிட்டார்.  கோலாகலமான வரவேற்பு. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜயம்.   பல்லக்கில்  நகர்வலம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.   சித்தூரை சேர்ந்த  அந்தகூர்  சுப்பிரமணிய  சாஸ்திரிகள், மடத்துக்கு பிரதம நிர்வாகி, வக்கீல் C . வெங்கட்ராம ஐயர், ஸ்வாமிகளை பூர்ண கும்பத்துடன் வரவேற்று வியாச ,மண்டபம் அழைத்துச் சென்றார்கள்.  பூஜை விமரிசையாக நடந்தது.  வியாச அக்ஷதை, பிரசாதம் அனைவருக்கும் அளிக்கப்பட்டது.

சாயந்திரம் வேதாந்த  மாநாடு நடந்தது.  அதில் மைலாப்பூர்   ஸம்ஸ்க்ரித கல்லூரி  தலைவர்  வேதாந்த விபூஷணம் கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள் தலைமை வகித்தார். வேதாந்த தர்க்கத்தில் பங்கு கொண்ட மற்றும் சிலர் பெயர்கள்:  சாஸ்த்ர  ரத்நாகர திருவையாறு விஸ்வநாத சாஸ்திரிகள்,  புளகம் ராம சாஸ்திரிகள், வரகூர்  வெங்கட்ராம  சாஸ்திரிகள்,  பக்ஷி தீர்த்தம்   T  A  வெங்கடேச தீக்ஷிதர், மதுரை  K V  சுப்ரமணிய சாஸ்திரிகள்  மடத்து ஆஸ்தான வித்வான்  லக்ஷ்மி  நாராயண சாஸ்திரிகள்,  ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  ப்ரம்ம ஸ்ரீ  வெங்கடேச தீக்ஷிதர் மஹா பெரியவா மீது தான்  இயற்றிய  15 ஸ்லோகங்களை வாசித்தார். சபையில் அனைவருக்கும் ஸமஸ்க்ரிதம்  தெரியாது அல்லவா? ஆகவே  அர்த்தத்தை விளக்கினார்.  
கோவில்களி  லிருந்தெல்லாம்  அர்ச்சகர்கள் ப்ரசாதத்துடன்  மஹா பெரியவா  தரிசனம் பெற வந்தார்கள்.  சித்தூர் முழுதும் ஆனந்த  பரவசத்தில் இருந்தது என்பது வாஸ்தவம்.  

மஹா பெரியவா சித்தூரில் ரெண்டு மாச காலம் தங்கி இருந்து அனைவருக்கும்  தரிசனம் கொடுத்து எல்லோருடனும் பேசினார். சாதுர்மாஸ்ய விரதம் பூர்த்தியாயிற்று.  

1931ம் வருஷம்  செப்டம்பர் மாதம் 26ம் தேதி  சாதுர்மாஸ்யம் முடிந்து  மஹா பெரியவா பரிவாரத்தோடு    முருக்கம்பட்டு  கிராமம் சென்றார். இது   எங்கிருக்கிறது என்று  என்னால் தேட முடியவில்லை.  சந்திர கிரஹணம்  என்பதால் அங்கே  ஸ்நானம் செய்ய சென்றார்.  மறுநாள் காலை விஸ்வரூப யாத்ரா துவங்கிற்று.  

''மஹா பெரியவா,  நீங்க  இங்கே  நவராத்திரிக்கும்  இருக்கணும்''  என்று பக்தர்கள் வேண்டிக் கொண்டார்கள்.  

''ஆஹா  வருகிறேன்''  என்று   அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி  மஹா பெரியவா அக்டோபர்  1931, 12ம் தேதி சித்தூரில்   நவராத்ரி  வைபவத்தை  கொண்டாட  அக்டோபர் மாதம் பூரா அங்கே இருந்தார்.

பிறகு தான் அங்கிருந்து  குடியாத்தம், வைத்தியநாத குப்பம், காட்பாடி, வழியாக சென்று  வேலூர் விஜயம் நடைபெற்றது.   டிசம்பர்  மாதம் 22தேதி வரை  மஹா பெரியவா வேலூரில் இருந்தார் . அவர்  வாசம் செய்த  இடம்  தோட்டப்பாளையம் ஸ்ரீதாரகேஸ்வரர் கோயில். 

இந்த  ஆலயம் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தது என்கிறார்கள்.   தோட்டப்பாளையம் ஸ்ரீஅபயாம்பிகை சமேத தாரகேஸ்வரர் கோயிலின் நூற்றாண்டு பழமை வாய்ந்த தேர் பழுதடைந்து கவனிப்பாரின்றி சிதிலமடைந்து போனதால் கடந்த 20 ஆண்டுகளாக தேர்த்  திருவிழாவே நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்து சமய அற  நிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தாரகேஸ்வரர் கோயிலுக்கு ஏராளமான சொத்துக்கள் மூலம் வருவாய் இருந்தும் புதிய திருத்தேரை உருவாக்குவதில் இந்து சமய அறநிலையத்துறை மெத்தனம் காட்டியது. நன்கொடையாளர்கள் முன்வந்து திருத்தேரை உருவாக்குவதாக கூறியும் தேர் செய்வதற்கான நடவடிக்கைகள் மெத்தனமாக நடந்து வந்தது. இது வழக்கமாக  நடப்பதால் எல்லோரும் மறந்து போய்விட்டோம்.  இப்போது  கவலைப்படவேண்டிய  அறநிலையத்துறையோ,  பொதுமக்களோ கவலைப்படாத  ஒரு கோயிலாகத்தான்  அநேகம் உள்ளன. அதில் ஒன்றோ  என்னவோ இந்த  தோட்டப்பாளையம்   தாரகேஸ்வரர்  ஆலயம். வேலூர் காரர்கள் யாராவது இந்த ஆலயம் பற்றி எனக்கு சொல்லுங்களேன்.

மஹா பெரியவா  வேலூர்  விஜயத்திற்கு பெரிதும்  உதவி ஏற்பாடுகள் செய்தவர்  வக்கீல்  கங்காதர சாஸ்திரிகள். மஹா பெரியவா வழக்கம்போல் ஒவ்வொரு  சாயங்காலமும்  பிரசங்கம் செய்து ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பயனுற்றனர்.  

தொடரும் பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN

67   சித்தூர்,  வேலூர்  விஜய யாத்திரை. 

மஹா பெரியவா சித்தூர் வருகிறார் என்கிற சேதி அந்த பகுதி வாழ் பக்தர்களுக்கு  ஆனந்தத்தை அளித்தது.  ஆந்திராவில் சந்திரகிரி மண்டலத்தை சேர்ந்த இந்த  ஊர் மூன்று  ஆறுகள்  சங்கமமாகும் ஸ்தலம். ஸ்வர்ணமுகி, கல்யாணி, பீமா என்பவை அவை.தொண்டவடா   என்ற அந்த ஸ்தலத்தில்  அகஸ்தீஸ்வர சுவாமி ஆலயம் ரொம்ப புராதனமானது.  திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து  பொடி நடையாக  15 நிமிஷத்தில் அடைந்துவிடலாம்.  அகஸ்தியரால் ஸ்தாபிக்கப்பட்டு  பூஜிக்கப்பட்ட சிவாலயம்.  மூன்று வாசல்கள். துவாரபாலகர்கள் அழகாக  செதுக்கப்பட்ட சிலைகள். ரெண்டாவது பிரகாரத்தில் பார்வதி அம்மன் சந்நிதி.  அம்பாளுக்கு  வள்ளி மாதா என்ற பெயர்.  ஆலய எதிரில்  ஆழமான  ஆறு. அதன் மத்தியில் நீராழி மண்டபம். ,மண்டபத்தில்  பாலாஜி, ஐயப்பன் , கணேசர் விக்ரஹங்கள்.

ஸ்ரீ அகத்திய பெருமானால் பூஜிக்கப்பட்டு நிறுவப்பட்ட லிங்கங்களுள் ஒன்று அகஸ்தீஸ்வரர் ஆலய லிங்கம். .விஷ்ணுபகவானின் பாத தரிசனமும் பகவானின் சிலையும் முன்னே இருக்க சிவபெருமான் லிங்கமாக பின்னே இருக்கிறார்..

 மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீனிவாசப் பெருமாள் லக்ஷ்மியின் அவதாரமான பத்மாவதித் தாயாரை நாராயண வனம் என்கிற இடத்தில் திருமணம் முடித்து,  ஸ்ரீனிவாச மங்காபுரம் அருகில்  உள்ள இந்த தொண்டவடா கிராமத்தில் பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் உள்ளது.   இந்த சிவாலயம் திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து 11.8 கி.மீ., தூரத்தில் உள்ளது.  சந்திரகிரி அரண்மனை போகும் முன்னே தொண்டவடா ஊர் போக சாலை சந்திப்பு வரும் சந்திப்பில் இருந்து 2km தூரத்தில் கோவில் உள்ளது.

சித்தூரில் மஹா பெரியவா தங்குவதற்கு  வியாச மண்டபம் தயாரானது.  அகஸ்தீஸ்வரன் ஆலயம் எதிரே அது உருவாயிற்று. வியாச பூஜைக்கு முதல் நாள்  மஹா பெரியவா வந்துவிட்டார்.  கோலாகலமான வரவேற்பு. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜயம்.   பல்லக்கில்  நகர்வலம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.   சித்தூரை சேர்ந்த  அந்தகூர்  சுப்பிரமணிய  சாஸ்திரிகள், மடத்துக்கு பிரதம நிர்வாகி, வக்கீல் C . வெங்கட்ராம ஐயர், ஸ்வாமிகளை பூர்ண கும்பத்துடன் வரவேற்று வியாச ,மண்டபம் அழைத்துச் சென்றார்கள்.  பூஜை விமரிசையாக நடந்தது.  வியாச அக்ஷதை, பிரசாதம் அனைவருக்கும் அளிக்கப்பட்டது.

சாயந்திரம் வேதாந்த  மாநாடு நடந்தது.  அதில் மைலாப்பூர்   ஸம்ஸ்க்ரித கல்லூரி  தலைவர்  வேதாந்த விபூஷணம் கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள் தலைமை வகித்தார். வேதாந்த தர்க்கத்தில் பங்கு கொண்ட மற்றும் சிலர் பெயர்கள்:  சாஸ்த்ர  ரத்நாகர திருவையாறு விஸ்வநாத சாஸ்திரிகள்,  புளகம் ராம சாஸ்திரிகள், வரகூர்  வெங்கட்ராம  சாஸ்திரிகள்,  பக்ஷி தீர்த்தம்   T  A  வெங்கடேச தீக்ஷிதர், மதுரை  K V  சுப்ரமணிய சாஸ்திரிகள்  மடத்து ஆஸ்தான வித்வான்  லக்ஷ்மி  நாராயண சாஸ்திரிகள்,  ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  ப்ரம்ம ஸ்ரீ  வெங்கடேச தீக்ஷிதர் மஹா பெரியவா மீது தான்  இயற்றிய  15 ஸ்லோகங்களை வாசித்தார். சபையில் அனைவருக்கும் ஸமஸ்க்ரிதம்  தெரியாது அல்லவா? ஆகவே  அர்த்தத்தை விளக்கினார்.  
கோவில்களி  லிருந்தெல்லாம்  அர்ச்சகர்கள் ப்ரசாதத்துடன்  மஹா பெரியவா  தரிசனம் பெற வந்தார்கள்.  சித்தூர் முழுதும் ஆனந்த  பரவசத்தில் இருந்தது என்பது வாஸ்தவம்.  

மஹா பெரியவா சித்தூரில் ரெண்டு மாச காலம் தங்கி இருந்து அனைவருக்கும்  தரிசனம் கொடுத்து எல்லோருடனும் பேசினார். சாதுர்மாஸ்ய விரதம் பூர்த்தியாயிற்று.  

1931ம் வருஷம்  செப்டம்பர் மாதம் 26ம் தேதி  சாதுர்மாஸ்யம் முடிந்து  மஹா பெரியவா பரிவாரத்தோடு    முருக்கம்பட்டு  கிராமம் சென்றார். இது   எங்கிருக்கிறது என்று  என்னால் தேட முடியவில்லை.  சந்திர கிரஹணம்  என்பதால் அங்கே  ஸ்நானம் செய்ய சென்றார்.  மறுநாள் காலை விஸ்வரூப யாத்ரா துவங்கிற்று.  

''மஹா பெரியவா,  நீங்க  இங்கே  நவராத்திரிக்கும்  இருக்கணும்''  என்று பக்தர்கள் வேண்டிக் கொண்டார்கள்.  

''ஆஹா  வருகிறேன்''  என்று   அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி  மஹா பெரியவா அக்டோபர்  1931, 12ம் தேதி சித்தூரில்   நவராத்ரி  வைபவத்தை  கொண்டாட  அக்டோபர் மாதம் பூரா அங்கே இருந்தார்.

பிறகு தான் அங்கிருந்து  குடியாத்தம், வைத்தியநாத குப்பம், காட்பாடி, வழியாக சென்று  வேலூர் விஜயம் நடைபெற்றது.   டிசம்பர்  மாதம் 22தேதி வரை  மஹா பெரியவா வேலூரில் இருந்தார் . அவர்  வாசம் செய்த  இடம்  தோட்டப்பாளையம் ஸ்ரீதாரகேஸ்வரர் கோயில். 

இந்த  ஆலயம் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தது என்கிறார்கள்.   தோட்டப்பாளையம் ஸ்ரீஅபயாம்பிகை சமேத தாரகேஸ்வரர் கோயிலின் நூற்றாண்டு பழமை வாய்ந்த தேர் பழுதடைந்து கவனிப்பாரின்றி சிதிலமடைந்து போனதால் கடந்த 20 ஆண்டுகளாக தேர்த்  திருவிழாவே நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்து சமய அற  நிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தாரகேஸ்வரர் கோயிலுக்கு ஏராளமான சொத்துக்கள் மூலம் வருவாய் இருந்தும் புதிய திருத்தேரை உருவாக்குவதில் இந்து சமய அறநிலையத்துறை மெத்தனம் காட்டியது. நன்கொடையாளர்கள் முன்வந்து திருத்தேரை உருவாக்குவதாக கூறியும் தேர் செய்வதற்கான நடவடிக்கைகள் மெத்தனமாக நடந்து வந்தது. இது வழக்கமாக  நடப்பதால் எல்லோரும் மறந்து போய்விட்டோம்.  இப்போது  கவலைப்படவேண்டிய  அறநிலையத்துறையோ,  பொதுமக்களோ கவலைப்படாத  ஒரு கோயிலாகத்தான்  அநேகம் உள்ளன. அதில் ஒன்றோ  என்னவோ இந்த  தோட்டப்பாளையம்   தாரகேஸ்வரர்  ஆலயம். வேலூர் காரர்கள் யாராவது இந்த ஆலயம் பற்றி எனக்கு சொல்லுங்களேன்.

மஹா பெரியவா  வேலூர்  விஜயத்திற்கு பெரிதும்  உதவி ஏற்பாடுகள் செய்தவர்  வக்கீல்  கங்காதர சாஸ்திரிகள். மஹா பெரியவா வழக்கம்போல் ஒவ்வொரு  சாயங்காலமும்  பிரசங்கம் செய்து ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பயனுற்றனர்.  

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...