Thursday, February 28, 2019

NOSTALGIA



காலம் மாறி போச்சு - J K SIVAN

காலம் மாறிப்போச்சு என்று எல்லோரும் .தான் சொல்கிறோம். ஒவ்வொருவரும் வாழும் வாழ்ந்த விதம் தான் வேறே. காலம் என்றும் ஒரே சீராகத்தான் எல்லோருக்கும் இருக்கிறது. மாறுதல் நம்மிடம் தான் காலத்திடம் இல்லை. ரயிலில் உட்கார்ந்து பயணம் செய்யும்போது ஜன்னல் ஓரம் உட்கார தான் எல்லோருக்கும் பிடிக்கும். வெளியே மரங்கள் வீடுகள் தெரு எல்லாமே ஏன் கிடு கிடு வென ஓடுகிறது? அவைகள் நின்ற இடத்திலேயே தான் இருக்கிறது. நாம் தான் ரயிலில் ஓடுகிறோம். அதுபோல தான் இதுவும். மனிதன் மனதில் தோன்றும் எண்ணங்கள் தனிமனிதனையும் சமூகத்தையும் பாதிக்கத்தான் செய்யும்.

காலம் மாறிப்போச்சு என்று ஒரு தமிழ் சினிமாவே வந்தது. அதில் ரொம்ப பிரபலமாக ஒரு பாடல் தெருவில் எல்லோரும் பாடிக்கொண்டே போனது ஞாபகம் இருக்கிறது. 'ஏரு பூட்டி போவாயே அண்ணே சின்னண்ணே.. என்று வஹீதா ரஹமான் டான்ஸ் ஆடிக்கொண்டே பாடுவார் . தங்கப்பன் நடன​ கோஷ்டி சட்டையில்லாமல் வெறும் தலைப்பாகை மட்டும் அணிந்து கொண்டு தலையாட்டி சிரித்துக்கொண்டு கையில் ஒரு டமாரம் வைத்து அடித்துக்கொண்டு ஆடுவார்கள். பாலையா ரொம்ப பொல்லாத பண்ணையாராக வந்து எல்லோரையும் படுத்துவார். படம் பார்ப்பவர்களை பிழிய பிழிய அழவைப்பார். ,அமிஞ்சிக்கரை லட்சுமி டாக்கீஸ் நடந்து போய் இந்த படம் பார்த்து விட்டு வந்தது ஞாபகம் இருக்கிறது.

​பழசெல்லாம் தாத்தா காலம். நான் தாத்தா தானே. வேறு என்ன பொருத்தமான கதை சொல்லமுடியும்?

சுமார் 75 வருஷங்களுக்கு முந்தைய விஷயம். நடந்த ஸ்தலம் , கோடம்பாக்கம். வடபழனி ஆண்டவர் கோவில் அருகே பிள்ளைமார்கள் வசித்த பகுதியில் ரங்கநாதன் பிள்ளை வீட்டில் குடியிருந்த காலத்தில்.
அப்போதெல்லாம் தெருவில் ஒரு சிறு ப்ரொஜெக்டரை தூக்கிக்கொண்டு ஒருவன் வருவான். சில பிலிம் சுருள்களை இணைத்து கையால் சுற்றுவான், உள்ளே ஒரு சிறிய திரையில் சினிமா படம் ஓடும். பயாஸ்கோப் என்று அதை அடையாளம் கண்டு கொண்டிருந்தோம். சத்தம் கேட்காது. பாடாது, பேசாது. இரண்டு மூன்று நிமிஷ நேரம் ஒரு துளை வழியாக பார்க்க ஒரு அணா (இப்போது 6 பைசா) வாங்குவான். நீல கொட்டடி சட்டையில் தான் அவனை அடிக்கடி பார்த்திருக்கிறேன். அழுக்கு நாலு முழ வேஷ்டியை மடித்து முழங்காலுக்கு மேல் டப்பா கட்டுடன் தோளில் அந்த ப்ரோஜெக்டருடன் அவன் வந்ததைப் பார்த்தாலே ஒரு சிறு கூட்டம் அவனை சூழ்ந்து கொள்ளும். சில்லறைகள் நிறைய அவன் பாக்கெட்டில் சீக்கிரமே சேர்ந்து விடும். அவனே பாடுவான்.

'' ரங்கசாமி'' என்று கூப்பிட்டு அவனுக்கு என் தாயார் காபி கொடுப்பதால் எனக்கும் என் சகோதரனுக்கும் ஒரு சில நிமிஷங்கள் அதிகமாக துளை வழியாக சினிமா பார்க்க சலுகை உண்டு.

பாடாத பி. யூ. சின்னப்பாவை இப்படிப் பார்த்த வெகு சிலரில் நான் ஒருவன். ஜகதலப் பிரதாபன் என்ற படம் அது. நினைவில் இருக்கிறது. ஒரு நாள் ஒரு காலை கர்ண பிள்ளை வீட்டு காளை மாடு சிவப்பு சட்டை போட்டிருந்த ரங்கசாமியை வேகமாக ஓடிவந்து முதுகில் முட்டிவிட்டது. அதற்கு பிறகு அவனும் வரவில்லை, படம் பார்ப்பதும் நின்று போனது.. அல்ப ஆயுசில் மாடு முட்டி, அலங்காநல்லூர் போகாமலே மறைந்தவன் ரங்கசாமி.

சனிக்கிழமைகளில் ''கோவிந்தோ கோவிந்தோ'' காலை ஆறுமணிக்கே தெருவில் சத்தம் கேட்கும்.
ஒருவர் உடம்பெல்லாம் நாமம் போட்டுக்கொண்டு ஒரு பித்தளைச் சொம்பை பள பள வென்று தேய்த்து, புதிதாக்கி, அதன் வாயை ஒரு மஞ்சள் தோய்த்த துணியால் கட்டி துணியில் காசு போட மட்டும் துவாரம் பண்ணி வைத்துக்கொண்டு, தலைக் குடுமியை நாரதர் போல் நடுத் தலைமேல் முடிந்து கொண்டு தாடி மீசை ஆறு மாதத்திற்கு குறையாத வளர்ச்சியோடு இடுப்பில் ஒரு மஞ்சள் தோய்த்த வேஷ்டியை கச்சம் வரிந்து கட்டியவாறு தெருவில் மண்ணில் புரண்டு கொண்டே வருவார். செம்பு நேராக இருக்கும் அதைச் சாயாமல் தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு புரள்வார். எங்களுக்கு எல்லாம் அவர் பக்கத்தில் போகவே பயமாக இருக்கும். பிடித்துக் கொண்டு போய்விடுவார் என்று யாரோ சொல்லியதின் விளைவு அது. ஆனால் அவர் பின்னாலேயே தெரு முனை வரை போவோம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கொஞ்சம் சத்தமாகவே ''கோவிந்தோ''.போடுவார். உள்ளேயிருந்து யாராவது காசு கொண்டு வந்து செம்பில் போடும் வரை நகர மாட்டார். சத்தமும் நிற்காது. காசு கொண்டு வந்தால் தலையை மட்டும் தூக்கி சொம்பை நீட்டுவார்.

ஒரு முஸ்லீம் ''பாய்'', பல்லில்லாமல், சிகப்பு குஞ்சம் தொங்கும் தொப்பியோடும் தன்னை விட பெரிய கோணிப் பையையோ, அழுக்கு கித்தான் பையோ தூக்கிக்கொண்டு வரும் ஒரு குள்ளப் பையனோடும் மாதம் ஒரு முறை வருவார். பொடி போடுவார். கைலிக்குள் நிறைய கத்தி, சுத்தி எல்லாம் கொண்ட ஒரு பையை செருகிக் கொண்டு வருவார். ''பித்தளை பாத்திரம் ஈயம் பூசறது'' என்று பையன் கத்திக்கொண்டே வராவிட்டால் அடிப்பார். பையன் அவர் மகனா, வேலைக் காரனா, என்று எனக்கு இன்னும் தெரியாது. எங்கள் வீட்டு வாசல் மகிழ மரம் வயதானது. நிறைய நிழல் தரும். அது தான் அவர் கடை போடும் இடம்.

கீழே மண்ணில் ஒரு இடத்தில் பள்ளம் தோண்டுவான் பையன். ஒரு துருத்தி ஒரு பக்கம் இணைத்து அடுத்த பக்கம் மண்ணிற்கு வெளியே நிறைய கரி துண்டுகள் போட்டு நெருப்பு மூட்டுவான். வெள்ளையாக நீளமாக ஒல்லியாய், கம்பி கம்பியாக ஈயம் வைத்திருப்பார் பாய். அவரைச் சுற்றி வெகு சீக்கிரம் பழைய தவலைகள், அண்டாக்கள், குண்டாக்கள், செம்புகள், வாயகன்ற போசி, அடுக்குகள் நிரம்பிவிடும். எல்லாவற்றையும் யார் யார் வீட்டு சாமான்கள் என்று பிரித்து வைத்துக் கொள்வார். பையன் துருத்தி அடிப்பான். வாயைத் திறந்து திறந்து அது மூடும்போது காற்று மண்ணிற்குள் அவன் செய்த சுரங்கம் வழியாக புஸ் புஸ் என்ற சத்தத்தோடு அடுத்த முனையில் எரியும் கரிக்கு உஷ்ணம் கொடுக்கும். சில சமயங்களில் எங்களையும் துருத்தி அடிக்க அனுமதிப்பான். துருத்தி அடிக்க எங்களுக்குள் போட்டி. அதற்கு முன் பாய் எங்காவது கண்ணில் தெரிகிறாரா என்று சிஷ்யப் பையன் பார்த்துக் கொள்வான்.

பாய் கோபக்காரர். எங்களை துருத்தியை தொட அனுமதிக்க மாட்டார். கண்ணால் கண்டாலே போ போ என்று விரட்டுவார் எங்களை. கெட்டவார்த்தை நிறைய பேசுவார்.

துருத்தியின் புஸ் காற்றில் அடுத்த பக்கம் நெருப்பு எரிய, அந்த சூட்டில் பாத்திரங்கள் உள்ளே முதலில் கருப்பாக இருக்கும். என்ன மாயம்? பாய் அந்த ஈயக்கட்டியை கொஞ்சமாக பத்திரத்தின் உள்ளே கோடுகளாக கிழித்து ஒரு அழுக்கு துணியால் துடைப்பார். புகை வரும். ஒரு கார நெடியடிக்கும். இருமல் வரும். புகைக்கு இடையே, வெள்ளை வெளேரென்று கண்ணை பறிக்கும் பாத்திரத்தின் உட்புறம். வெள்ளியாக அது மாறுவது எங்களுக்கு உலக மகா அதிசயம். ஈயம் பூசிய பாத்திரங்களை ஒரு தவலை தண்ணீரில் கொஞ்சம் எடுத்து அலம்பி கொடுப்பார் பாய். தண்ணீரில் போட்டவுடன் ஜிஸ் என்று சப்தம் நுரையோடு, குமிழிகள் கொப்புளங்களோடு தண்ணீரில் அமிழ்ந்த அந்த சூடான பாத்திரம் சூடு ஆறியவுடன் சாதுவாக இருக்கும். எங்களை விட்டு ஈயம் பூசிய பாத்திரங்களை ஒவ்வொரு வீட்டிலாக கொண்டு போய் கொடுக்க சொல்வதில் எங்களுக்கு பெருமை. காசு மட்டும் தானாகவே போய் வாங்கி கொள்வார்.

அப்துல்லா என்ற ஒரு நடு வயது உயரமான ஆள். சிகப்பாக இருப்பார். சுருள் சுருளாக தலை முடி. அந்தகால ராஜ் கபூர் மாதிரி ஒரு கவர்ச்சியான முகம் அதே மீசை. கண்களை சுருக்கிக் கொண்டு நெற்றியில் சுருண்டு விழும் முடியை ஒதுக்கி விட்டுக்கொண்டே பேசுவார். கையில் ஒரு பெரிய தடி. அதன் முனையில் சிவப்பு, பச்சை, நீலம், ஆரஞ்சு போன்ற கலர்கள் கொண்ட இனிப்பு சுற்றி வைத்திருப்பார். அரையணா முதல் ஓரணா வரை யார் காசு கொடுக்கிறார்களோ அவர்கள் கைகளில் அந்த நீண்ட ஜவ்வு போன்ற கலர் மிட்டாயை எடுத்து கொஞ்சம் திரித்து பாம்பு மாதிரியாகவோ, கடிகாரம் மாதிரியோ சுற்றி விடுவார். அதை கொஞ்சம் நேரம் அப்படியே எல்லாருக்கும் காட்டி மகிழ்ந்த பிறகு பையன்கள் பெண்கள் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக அதை சாப்பிட்டு விடுவார்கள். எங்கம்மா இதை வாங்க அனுமதிகாததால் இன்று வரை அதன் ருசி யான் அறியேன் பராபரமே.

கோவிந்தம்மா மோர் கூடையில் கொடுக்காப்புளி நிறைய பறித்து வந்து விற்பாள். எங்களுக்கு எப்போதாவது இலவசமாகவே கொஞ்சம் கிடைக்கும்.

அவள் வாரம் ஒரு நாள் கமர்கட் என்ற ஒரு மிட்டாய் பண்ணிக் கொண்டு வருவாள். (சமீபத்தில் ஒரு பொட்டலம் கமர்கட் ஒரு பெரிய கடையில் வாங்கினேன். அழகிய ஒரு பாக்கெட்டில் 4 சிறிய எள்ளுருண்டை போல் கமர்கட். அதன் விலை 25 ரூபாய்).

அரை அணாவிற்கு இதை விட மிகப் பெரியதாக கம கம வென்று தேங்காய், வெல்லப்பாகு மணம் வீச கோவிந்தம்மா கொடுத்த கமர்கட் மகிழ்ச்சி அளித்தது. இனி இந்த ஜென்மத்தில் அது மீண்டும் கிடைக்கப் போவதில்லை. அந்த ஒரு கமர்கட்டுக்கு ஒரு மாச சம்பளமே தர ஆசை. ஆனால் இப்போது நான் சம்பாதிக்கவில்லை என்பதால் இவ்வளவு தாராளமாக வார்த்தை வீசுகிறேனோ?

பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் மாமாவின் கடைசிப் பையன் ஆராவமுது ஒருநாள் எங்களோடு கமர்கட் சாப்பிட்டான் என்று அவன் அண்ணன் பாபு போய் வீட்டில் சொல்லிவிட்டதால் கோபாலாச்சாரி கையில் வேப்பங் குச்சியோடு வேட்டையாடி கடைசியில் ஆராவமுது ஓடமுடியாமல் கீழே விழுந்து பிடிபட்டு முதுகில் வேப்பஞ்குச்சி விளைவித்த தழும்புகளோடு வீட்டில் அழுது கொண்டிருந்ததை ஜன்னல் வழியாக பார்த்து பயந்தோம். ரொம்ப ஆசாரம் அவர்கள் வீட்டில். வெளியே கண்ட இடத்தில் எதையும் யாரிடமும் வாங்கி தின்பது அவர்களைப் பொறுத்தவரை பஞ்ச மகா பாதகத்தில் ஒன்று என்று எனக்கு அப்போது தெரியாது.

இன்னும் நிறைய பேர்கள் அந்த காலத்தில் தெருவில் வந்தவர்கள் இப்போது காணோம். இனி அவர்களை இந்த ஜென்மத்தில் காணமுடியாது. ஏன் ? காலம் மாறி போச்சு.

yakshaprasnam



ஐந்தாம் வேதம். J K SIVAN
யக்ஷப்ரச்னம்.
7. அவசர கேள்வியும் அவசிய பதிலும்

யக்ஷன் யுதிஷ்டிரனை கேள்வி கேட்ட காலத்தில் ஐநூறு, ஆயிரம், ரெண்டாயிரம் ரூபாய் கஷ்டம் இல்லாமல் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதால் யக்ஷன் யுதிஷ்டிரனை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தபோது யுதிஷ்டிரன் அதைப் பற்றி கவலைப் படாமல் சரியான பதிலை அளித்துக்கொண்டிருக்கிறான். நாம் எப்போது வங்கிகள் திறக்குமோ, அதுவரை காத்திருந்து, இந்த கேள்வி பதிலையாவது சற்று கவனிப்போம்.

91. எந்த வியாதிக்கு நிவர்த்தியே இல்லை ?
பேராசைக்கு

92. எவன் புனிதன் ?
எவன் அனைத்துயிர்களிடம் அன்புடன் பழகி நன்மையே புரிகிறானோ அவனே உத்தமன்.

93. எவனை நாம் தூயவன் இல்லை என்போம்?
மனதில் அன்பு என்பதே தெரியாது, அறியாது வாழ்பவனை.

94. எது அறிவு பூர்வமற்ற செயலாகும் ?.
அதர்மம் அநீதியான சிந்திக்காத மனம்போனபடி செய்த செயல்.

95. பெருமை என்றால் என்ன?
ஒவ்வொருவனின் உள்ளேயும் தானே வளரும் சுய கர்வமும் எதிர்பார்ப்பும் தான் .

96. எதை சோம்பேறித்தனம் என்று சொல்லலாம்?
ஸ்வதர்மத்தையும் தனது அன்றாட கடமைகளையும் செய்யாததை.

97. எது உண்மையிலேயே துயரம்?
அறியாமை

98. எதை ரிஷிகளும், ஞானிகளும் சாஸ்வதம் என்பார்கள்?
விடாப்பிடியாக தனது கர்மானுஷ்டனங்களை செய்வதை, ச்வதர்மத்தின் படி ஒழுகுவதை.

99. எது தைர்யம் எனப்படும்?
ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது.

100. எது உண்மையிலேயே நல்ல ஸ்நானம் ஆகும்?
மனசிலிருக்கும் அழுக்காறுகளை நீக்குவது.

(சபாஷ். மேக்ஸ்வெல் மாதிரி செஞ்சரி போட்டுவிட்டாயே, யுதிஷ்டிரா, சரியான விடைகளை என் நூறு கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டாயே. இன்னும் கொஞ்சம் இருக்கிறது. பார்ப்போம் என்ன செயகிறாய் என்று ?' )

101. எதை ஒருவன் சிறந்த தர்மம் எனலாம்?
மற்றவரைக் காத்து ரக்ஷிப்பது

102. எவன் உண்மையிலேயே கற்றுணர்ந்தவன்?
தர்மத்தை அறிந்தவன், புரிந்தவன்.

103. எது நாத்திகம்?
தன்னையே அறியாது, நம்பாது, இயற்கையின் ரகசியத்தை புரிந்துகொள்ளாது. தன்னால் எல்லாம் தெரியும், முடியும் என கனவு காண்பது.

104 . எதை ஒருவனின் ஆர்வம் எனலாம்?
எதன் மூலம் ஒருவன் அடுத்தடுத்து பிறப்பு இறப்பு அடைய நேரிடுகிறதோ அதை.

105. எதை செய்வதை |ஒவ்வாத போட்டி மனப்பான்மை என்கிறோம்?
எதைச்செய்ய நினைத்தாலும், செய்தாலும், மனதை அடுத்தவர் செய்வதிலேயே செலுத்தி, மனதைப்
பாழ்படுத்திக்கொள்வதை.

106. எது டம்பம்?
அறியாமை.



maharishi ramana

BHAGAVAN SRI RAMANA'S TALKS : J.K. SIVAN

IT IS NOT DIFFICULT TO UNDERSTAND BHAGAVAN RAMANA IF YOU READ THE QUESTIONS PUT TO HIM AND THE ANSWERS GIVEN BY HIM, SLOWLY, CONCENTRATING ON EACH WORD ATTENTIVELY WITH INVOLVEMENT AND INTEREST TO LEARN.- It is made simple for you so that you will enjoy His teaching profusely. - jks

Maharishi Ramana: ‘’Do you exist in your sleep? ‘’
Devote.: I do.
M.: The same being is now awake and asks these questions. Is it not so?
D.: Yes.
M.: These questions did not arise in your sleep. Did they?
D.: No.
M.: Why not? Because you did not see your body and no thoughts
arose. You did not identify yourself with the body then. Therefore
these questions did not arise. They arise now because of your identity with the body. Is it not so?
D.: Yes.
M.: Now see which is your real nature. Is it that which is free from
thoughts or that which is full of thoughts? Being is continuous. The thoughts are discontinuous. So which is permanent?
D.: Being.

M.: That is it. Realise it. That is your true nature.Your nature is simple. Being, free from thoughts. Because you identify yourself with the body you want to know about creation. The world and the objects including your body appear in the waking state but disappear in the state of sleep. You exist all through these states. What is it then that persists through all these states? Find it out. That is your Self.
D.: Supposing it is found, what then?
M.: Find it out and see. There is no use asking hypothetical questions.
D.: Am I then one with Brahman?
M.: Leave Brahman alone. Find who you are. Brahman can take care of Himself. If you cease to identify yourself with the body no questions regarding creation, birth, death, etc., will arise. They did not arise in your sleep. Similarly they will not arise in the true state of the Self. The object of creation is thus clear, that you should proceed from where you find yourself and realise your true Being You could not raise the question in your sleep because there is no creation there. You raise the question now because your
thoughts appear and there is creation. Creation is thus found to be only your thoughts.

Wednesday, February 27, 2019

SRIMAD BAGAVATHAM

கிருஷ்ணன் J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம்
அவன் ஒரு அதிசயம்

கிருஷ்ணனின் பால லீலைகளை சொல்லி மாளாது. ஆயிரம் நாக்கு படைத்த ஆதிசேஷன் கூட அதை சொல்ல திணறவேண்டும். ஒவ்வொரு சம்பவமும் அலாதி. அதில் ஒரு ரகசிய செய்தி புதைந்திருக்கும். பகவான் நம்மருகே இருக்கிறான் என்பதை உணர்த்தும். நம்மை நாம் புரிந்துகொண்டால் கிருஷ்ணனை நம்மில் உணரலாம்.
பூதனையை நினைவிருக்கிறதா? கம்சனின் ராட்சச கூட்டத்தில் ஒரு சக்தி வாய்ந்த அரக்கி. '' பூதனா, உன்னைத்தான் நான் பொருத்தமானவள் என்று கருதினேன். நீ எப்படி செய்வாய் என்பது உன் திட்டம். கிருஷ்ணன் என்ற சிறுவன் உன்னால் மரணமடையவேண்டும். வெற்றிகரமாக இதை முடித்து என்னை வந்து சந்திக்கிறாயா?''

'' இது எனக்கு ஒரு கொசுவை நசுக்கும் வேலை '' என்று விரல்களை சொடுக்கினாள் பூதனை.
'' ஹாஹா என்று சிரித்தான் கம்சன், '' பூதனா சென்று வா கிருஷ்ணனை கொன்று வா'' என்று அனுப்பினான். மதுராவிலிருந்து கிளம்பிய போதனா கிருஷ்ணனை பற்றிய செயதிகளை சேகரித்தாள். யமுனை ஆற்றை கடந்து கோகுலம் சென்றாள் . இப்போது அவள் ஒரு அரக்கி அல்ல. மிக அழகான ஒரு இளம் பெண். தாய். கிருஷ்ணன் வீட்டை அடைந்தாள். அங்கே நடந்ததை அந்த ஊரில் இரு கோபியர்கள்
மறுநாள் காலை யமுனை ஆற்றங்கரையில் பேசுவதிலிருந்து தெரிந்து கொள்வோம்.

''அடியே விசாலாக்ஷி இந்த ஆச்சர்யத்தை கேள்விபட்டியோ?
''எதை சொல்றே நீ சத்யா, , நம்ப யசோதை வீட்டில் நேற்று நடந்ததைபத்தி தானே?
"வேறே என்ன விஷயம் இருக்கு பேச??
"ஆமாம். கேள்விபட்டதும் நானும் ஓடினேன் அவ வீட்டுக்கு. ஒரே கூட்டம். முண்டியடிச்சு உள்ளே போய்
யசோதையை கேட்டேன் அழுதுண்டே சொன்னாள்.
''என்ன நடந்ததாம்?''
''யாரோ ஒரு சின்ன அழகான பெண் காலையில் வந்தாளாம். வாசலில் யசோதா ஏதோ வேலையாக இருந்தாளாம்.
'' அம்மா, உங்க வீட்டு குழந்தை கிருஷ்ணன் ரொம்ப அழகாக இருப்பானாமே நான் பார்க்கலாமா?'' என்று அந்த பெண் கேட்டதாலே, இந்த அசடு யசோதா குழந்தை கிருஷ்ணனை தூக்கிக் கொண்டு வந்து அவள் கையிலே தந்திருக்கிறது. அந்த பெண் வீட்டில் நுழைந்து சப்பளிக்க உட்கார்ந்து கொண்டு மடியிலே கிருஷ்ணனைப் போட்டுக்கொண்டு போட்டு கொஞ்சியிருக்கிறாள். ''அம்மா நானும் ஒரு தாய். இந்த குழந்தைக்கு பால் குடுக்க ஆசையா இருக்குன்னு கெஞ்சியிருக்கா'' பாவம் யசோதை அதை நம்பி சரின்னு தலையாட்டியிருக்கிறாள்.
''அப்புறம்?''
''விழுப்புரம். என்ன அவசரம்? கதையா சொல்றேன் இப்போ''
''சரி சரி நீயே சொல்லு''
''என்ன ஆச்சோ தெரியல்லை.
''ஆ என்று ஒரு சப்தம் இடியோசை மாதிரி கேட்டது. குழந்தை அவள் மார்பகத்தில் வாய் வச்சு பால் குடிக்க முயற்சித்தபோதே அந்த பெண் அலறிண்டே அப்படியே சாஞ்சுட்டாளாம். அந்த பெண்ணை காணோம். அவள் இருந்த இடத்திலே ஒரு பெரிய ராக்ஷசி கோரமாக செத்து கிடந்தாளாம். குழந்தை கிருஷ்ணன் அவள் மேலே ஏறி விளையாடிக்கொண்டிருந்ததை பாத்துட்டு நந்தகோபனும் மற்ற கோபர்களும் ஓடி வந்து குழந்தையை அப்புறபடுத்திவிட்டு அந்த ராக்ஷசி யாருன்னு கண்டுபிடிச்சிருக்கிறார்கள். அவள் மதுராவிலிருந்து வந்தவள் என்று தெரிந்தது. அப்பறம் அவளை தூக்கிகொண்டு போய் ஊருக்கு வெளியே எரிச்சாளாம். ''
'' அந்த ராக்ஷஸி யாராம்?''
''பூதனை என்று பேராம். குழந்தை கிருஷ்ணனை கொல்ல வந்திருக்கலாம் என்று சொல்றா. அவள் மார்பகத்தில் கொடிய விஷம் இருந்ததாம். ஏதோ யசோதை பண்ணின புண்யம் கடவுள் குழந்தை கிருஷ்ணனை காப்பாத்தியிருக்கார். இல்லேன்னா குழந்தைக்கல்லவோ ஆபத்து ஏற்பட்டிருக்கும்.''
''ஐயோ. குழந்தை இப்போ எப்படி இருக்கு?''
''அந்த கரிகுண்டன் எப்போதும்போல சிரிச்சுண்டே தான் இருக்கான் எல்லாரையும் பார்த்து மயக்கறான்.
யசோதை கையை பிடிச்சுண்டு தூக்கு என்கிறான்
''என்னமோ போடி அந்த பயலை பத்தி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு சேதி வந்துண்டே இருக்கு.
''சரியா சொன்னே. கிருஷ்ணன் ஒரு அதிசய குழந்தை தான் சந்தேகமில்லை''.

தன்னைக் கொல்ல வந்த பூதனைக்கும் தன்னை விஷப்பால் ஊட்ட வந்தாலும் தாயாக வந்த ஒரு காரணத்தால் மோக்ஷம் கொடுத்தான் கிருஷ்ணன்...எவ்வளவு பாபம் செய்தவனையும் தன்னை நாடியவனை பரிசுத்தமாக்கும் தன்மை கொண்டவர் பரமாத்மா.

YAKSHAPRASNAM



ஐந்தாம் வேதம். J K SIVAN
யக்ஷப்ரச்னம்.

6. அவசர கேள்வியும் அவசிய பதிலும்

யாருக்குமே கேள்வி கேட்பது என்பது எளிது. அதற்கு பதில் சொல்வதும் எளிது. ஆனால் அதில் சிக்கல் என்னவென்றால் அந்த பதில் பொருத்தமாக அமையவேண்டும். இல்லையென்றால் அந்த பதிலே பல கேள்விகளுக்கு மேலும் பதில் சொல்ல வைத்து விடும்! யக்ஷனின் கேள்விகள் அப்படியொன்றும் சாதாரணமானவை அல்ல, உன் பேர் என்ன, சாப்பிட்டாயா? போன்ற கேள்விகள் அல்லவே.

76. யாகம் எப்போது பலனளிக்காமல் போகிறது?
ஸ்ரத்தையாக அதை போஷிக்க வேதம் உணர்ந்த பண்டிதர்கள் இன்றி .

77.ஹோமாக்னி எப்போது பலன் தராது?
வேதம் உணர்த்தும் ஆஹூதி, ஹோமத்தீயில் இட வேண்டிய பொருட்கள் ஸ்ரத்தையின்றி, தாராள மனமின்றி, சரியானபடி இடாதபோது.

78 எது உகந்த வழி என்று கொள்ளலாம் ?
இறைவன் மீது சிந்தனையோடு உலவும் ஞானிகள் காட்டுவதே.

79. எது நீர்?
ஆகாசமே. ஆகாசமின்றி மழை ஏது, பின் நீர் ஏது ?

80. எது ஆகாரம் ?
ஒன்றுக்கு மற்றொன்று. எது உண்கிறதோ அதுவே மற்றொன்றின் ஆகாரம்.

81 எது விஷம் ?.
யாசகம் வாங்கி அனுபவிப்பது.

82. எது நீத்தோர்க்கு செயப்படவேண்டிய ச்லாக்கியமான செயல்?
சிறந்த வேதமந்த்ரம் உணர்ந்த சரியான பிராமணனுக்கு அன்னமளித்தல்,

83. நேம நியமத்தை விளக்கு?
அவனவன் தனக்கு விதித்த, ஏற்றுக்கொண்ட ஸ்வதர்மத்தை விடாமல் கடைப்பிடிப்பதே.

84. தர்மம் என்பது?
மனக் கட்டுப்பாடு

85. சிறந்த பொறுமை எதுவோ?
துன்பம், இன்பம், உயர்வு, தாழ்வு, பெருமை, சிறுமை,எது வரினும் நிலை குலையாமல், அடக்கமாக அமைதியாக எதையும் சமநிலையோடு ஏற்பது.

86 ஞானம் எது?
அண்டத்தை பிண்டத்தில் காணும் அறிவு . சத்யத்தை உணர்வது.

87."சமம் "என்றால் என்ன?
மனத்திற்குள் அடையும், காணும், வேற்றுமை இன்மை.

88. கருணை என்பது?
எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டுவது.

89. எது நேர்வழி?
எல்லோரிடமும் மதிப்பும் அன்பும் கொண்ட எளிய வாழ்க்கை.

90. எந்த பலம் கொண்ட எதிரியை கூட ஒருவன் மனது வைத்தால் வெல்ல முடியும்?
கோபத்தை வெல்பவன் தான் பலசாலி.





GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...