Sunday, February 24, 2019

YAKSHAPRASNAM



ஐந்தாம் வேதம்    J K SIVAN 

யக்ஷ ப்ரச்னம்

                3.   அவசர கேள்வியும் அவசிய பதிலும்

நாம் மீண்டும் யுதிஷ்டிரனைத் தேடி காட்டுக்குள் சஹாதேவன் கண்டுபிடித்த நச்சுப் பொய்கையை அடைந்து விட்டோம். யக்ஷனுக்கு என்ன, சௌகர்யமாக ஒரு மரத்தின் மீது சாய்ந்து கொண்டு சாவதானமாக கேள்வி கேட்க தயாராகி விட்டான். பதில் சொல்பவனுக்குத்தானே சிரமம். கேட்பதற்கு என்ன கஷ்டம்? மேலும் யுதிஷ்டிரனின் பதிலை ஒட்டித்தான் அவன் சகோதரர்களின் ஒருவன் பிழைக்க வழி இருக்கிறது. எனவே யுதிஷ்டிரன் கவனமாக அடுத்த கேள்விக்கு காத்திருந்தான். யுதிஷ்டிரன் ஏதோ முன்பே கேள்விகள் லீக்காகி பதில் தெரிந்து வைத்துக் கொண்டவன் போல் யக்ஷனின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்வதைப் பார்த்து யக்ஷன் அதிசயிக்கிறான்.

அவர்கள் கேள்வி பதில் தொடர்கிறது.

31 பிறந்தும் கூட நகராதது?
முட்டை.

32. இதயம் இல்லாதது?
கல்

33. வேகத்தோடு வளர்வது?
நதி பிரவாகம்

34 வெளிநாட்டு செல்பவனின் நண்பன்?
அவன் கற்றுத் தேர்ந்த கல்வி ஒன்றே.

35 வீட்டிலேயே கிடப்பவனுக்கு ?
மனைவி ஒருவளே. (அதுவே போதுமே!)

36 நோயாளிக்கு நண்பன் யார்?
அவனது வைத்தியன்

பாவம், தண்ணீர் குடிக்க வந்தவனை இவ்வளவு கேள்விகளா கேட்பது? கேட்டும் தர்மன் பொறுமையாக தம்பிகளின் சடலங்களை அருகில் வைத்துக்கொண்டு பொறுமையாக பதில் சொல்கிறானே.

37. இது ஒரு சாதுர்யமான கேள்வி. சாகப்போகிறவனின் நண்பன் யார்?
அவன் செய்த தான தர்மம்.

38 யார் எல்லோரும் தேவை என கருதும் வஸ்து?
அக்னி. தீ இல்லையேல் ஒருவராலும் வாழ இயலாதே.

39. எதை செய்தால் சாஸ்வதம் ?
எது ஒருவனை அது நற்கதிக்கு கொண்டு செல்கிறதோ அச் செய்கை.

40. எது அம்ருதமாகும்?
சுத்தமான பசும் பால் அம்ர்தத்துக்கு சமானம். சோமம் என்பதும் அதே.

41. உலகம் நிறைந்தது எது தெரியுமா?
சர்வ வியாபியான காற்று.

42 எவன் தனித்தே பிரயாணிக்கிறான் ?
சூர்யன்.

43 மீண்டும் மீண்டும் பிறப்பவன் ?
சந்திரன்.

44. பனிக்கு மாற்று எது?
உஷ்ணம்.

45. எல்லாவற்றையும் தன்னுள் தாங்குவது எது?
பூமி.

மிகவும் மகிழ்கிறான் யக்ஷன். இப்படியா ஒருவன் தனது சட்டென்ற கேள்விக்கு பட்டென்று பதில் சொல்வான் !! பலே. மேலே தொடர்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...