Tuesday, February 26, 2019

YAKSHA PRASNAM



மகா பாரதம் J K SIVAN
யக்ஷ ப்ரச்னம்

5 அவசர கேள்வியும் அவசிய பதிலும்

தர்மபுத்ரன் என்ற பெயர் பெற்ற யுதிஷ்டிரன் சற்றும் சளைக்காமல் தர்மதேவதை யக்ஷனாக வந்து கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறான். நாம் தான் பல நாட்களாக இந்த கேள்வி பதிலை இழுத்து பறித்துக்கொண்டு எழுதுகிறோம் படிக்கிறோம். யுதிஷ்டிரனுக்கு யக்ஷன் அவ்வளவு அவகாசம் கொடுக்கவில்லை. மேலே மேலே கேட்டுக்கொண்டே போகிறான். பதிலும் வந்து கொண்டே இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும். தாகம் தீர யுதிஷ்டிரன் இன்னும் தண்ணீர் குடிக்கவில்லை.

61. எவனுடைய நட்பு சாஸ்வதமானது?
இறைவனுடைய நினைப்பில் ஆழ்ந்தவனிடம் கொண்ட நட்பு சாஸ்வதமானது.

62. எதை விட்டுவிட்டால் துயரமே அணுகாது?
கோபத்தை அறவே ஒழித்தவனுக்கு துயரம் ஏது.

63. எதைத் தவிர்த்தால் செல்வந்தன் ஆகலாம்?
ஆசையை விட்டுப்பார். உன்னைப்போல் கோடீஸ்வரன் யாரும் இல்லை.

64. வாழ்க்கையில் சந்தோஷம் பெற வழி என்ன?
உன்னிடம் கொஞ்சமாவது கருமித்தனம் இருந்தால் அதை இப்போதே விட்டு விடு. பிறகு பார் நீ தான் உலகிலேயே சந்தோஷமான மனிதன்.

65. பிராமணர்களுக்கு தானம் செய்வது ஏன்?
அதன் மூலம் ஆத்ம திருப்தி கிடைப்பதால்.

66. உன்னுடைய தான தர்மம் ஆட்டத்துக்கும் பாட்டத்துக்கும் போவதால் பயன் என்ன ?
உனக்கு பெருமை புகழ் என்று நினைப்பதால் கிடைக்கும் அற்ப சந்தோஷம் தான் பயன்..

67. சரி அப்படியானால், நீ கொடுக்கும் தானம் தர்மம் உன் பணியாட்களுக்கும், வேலையாட்க ளுக்கும் சென்றால்?
அவர்கள் உன்னிடம் நன்றியுடன் நீ இட்டதை செய்ய உதவுதான் பயன்.

68. அரசனுக்கு செலுத்தும் பணம் எதற்கு?
உனக்கு இருக்கும் பயம் போவதற்கு .

69. எதால் இந்த உலகம் போர்த்தப்பட்டிருக்கிறது தெரியுமா உனக்கு ?
அறியாமை ஒன்றினால் தான்.

70. உலகம் என்றால் எது?
நமது ஆன்மா தான் யக்ஷனே இந்த உலகம்.

71. உலகம் ஜொலிப்பது எதால்?
நற்குணத்தால் தான் . தீய நினைப்பும் செயலும் ஒளி தராது.

72. உன் நண்பர்கள் எப்போது உன்னை பிரிகிறார்கள்?
உன்னிடம் ஒன்றும் இனி பெயராது என்று தெரிந்துகொண்டால்.

73. யுதிஷ்டிரா, இதற்கு பதில் சொல்லேன். மனிதன் ஏன் விண்ணுலகு எய்த முடியவில்லை?
இந்த பூவுலக வாழ்க்கையின் பிடிப்பு அவனை விட்டு அகலாததால் எப்படி அவன் நகரமுடியும்.

74 .மனிதன் எப்போது செத்தவனாக வாழ்கிறான்?
தான் எல்லா நற்செய்கைகளும் அறிந்தவனாக இருந்தும் அவற்றை செய்யாமல், உபயோகி க்காமல், பரம ஏழையாக சக்தியற்றவனாக தன்னைத் தாழ்த்திக்கொண்டபோது.

75. எப்போது ஒரு தேசம் உயிரற்றதாக காண்கிறது?
ஆளுவதற்கு சரியான அரசனோ தலைவர்களோ இல்லாதபோது அது செத்த நாடாகிறது.

நாளை மீண்டும் குளக்கரை செல்வோம்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...