Wednesday, February 20, 2019

MANTHRA PUSHPAM



மந்த்ர புஷ்பம். J.K. SIVAN 

                                   3.  எல்லாம்  நீயே.

கோவில்களில் பகவானை அர்ச்சித்து, நைவேத்தியம் எல்லாம் சமர்ப்பித்து கடைசியில் கற்பூர ஹாரதி காட்டும்போது அனைவரும் கன்னத்தில் விரல்களால் போட்டுக்கொண்டு தலைக்கு மேல்  கரம் தூக்கி கற்பூர ஜோதியில் தெரியும் விக்ரஹத்தின்  திவ்ய ரூபத்தை மனநிறைவோடு வணங்குகிறோம். 
அற்புதமான தரிசனம் கிடைத்தது என்கிறோம்.  கற்பூர ஹாரதி காட்டும்போது  அர்ச்சகர் சொல்வாரே ஒரு மந்திரம் அது ஞாபகம் இருக்கிறதா?  நிறைய பேர் வீடுகளில் அன்றாட பூஜையின் போது  கற்பூர ஹாரதி காட்டும்போதும் வீட்டிலும் சொல்வார்களே அந்த மந்திரம்.   அதை விளக்குகிறேன்:  

रा॒जा॒धि॒रा॒जाय॑ प्रस॒ह्य साहिने॓ ।
 नमो॑ व॒यं वै॓श्रव॒णाय॑ कुर्महे । 
स मे॒ कामा॒न् काम॒ कामा॑य॒ मह्यम्॓ । 
का॒मे॒श्व॒रो वै॓श्रव॒णो द॑दातु ।
 कु॒बे॒राय॑ वैश्रव॒णाय॑ । म॒हा॒राजाय॒ नमः॑

Rajadhi rajaya Prasahya Sahine|
Namo Vayam Vai Sravanaya Kurmahe
Samekaman Kama Kamaya mahyam
Kamesvaro Vai Sravano dadatu
Kuberaya Vai Sravanaya  Maha rajaya Namah.  

ஓம் ராஜாதிராஜாய’ ப்ரஸஹ்ய ஸாஹினே” |
நமோ’ வயம் வை”ஶ்ரவணாய’ குர்மஹே | 
ஸ மே காமான் காம காமா’ய மஹ்யம்” | 
காமேஶ்வரோ வை”ஶ்ரவணோ த’தாது | 
குபேராய’ வைஶ்ரவணாய’ | மஹாராஜாய நமஃ’ |

''ஹே  ராஜாதி ராஜனே, என் பிரபு, உன்னை போற்றுகிறேன்.  ஜெயத்தை அளிப்பவன். விருப்பங்களை நிறைவேற்றி  தருபவனே, செல்வம் வாரி வழங்குபவனே, குபேரனே, உன்னை போற்றுகிறேன். ராஜாவுக்கெல்லாம் ராஜாவான மஹாராஜனே, வணங்குகிறேன். அருள்வாயாக.


तद्ब्रह्म । ओं॓ तद्वायुः । ओं॓ तदात्मा ।
ओं॓ तद्सत्यम् । ओं॓ तत्सर्वम्॓ । ओं॓ तत्-पुरोर्नमः ॥

अन्तश्चरति भूतेषु गुहायां विश्वमूर्तिषु
त्वं यज्ञस्त्वं वषट्कारस्त्व-मिन्द्रस्त्वग्ं
रुद्रस्त्वं विष्णुस्त्वं ब्रह्मत्वं॑ प्रजापतिः ।
त्वं तदाप आपो ज्योतीरसो‌உमृतं ब्रह्म भूर्भुवस्सुवरोम् ।

ईशानस्सर्व विद्यानामीश्वर स्सर्वभूतानां
ब्रह्माधिपतिर्-ब्रह्मणो‌உधिपतिर्-ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवोम् ।

तद्विष्नोः परमं पदग्ं सदा पश्यन्ति
सूरयः दिवीवचक्षु राततं तद्वि प्रासो
विपस्यवो जागृहान् सत्समिन्धते
तद्विष्नोर्य-त्परमं पदम् ।

ऋतग्ं स॒त्यं प॑रं ब्र॒ह्म॒ पु॒रुषं॑ कृष्ण॒पिङ्ग॑लम् ।
ऊ॒र्ध्वरे॑तं वि॑रूपा॑क्षं॒ वि॒श्वरू॑पाय॒ वै नमो॒ नमः॑ ॥

ॐ ना॒रा॒य॒णाय॑ वि॒द्महे॑ वासुदे॒वाय॑ धीमहि ।
तन्नो॑ विष्णुः प्रचो॒दया॓त् ॥

ॐ शान्तिः॒ शान्तिः॒ शान्तिः॑ ।


Om thad Brahma,  Om Thad Vayu. Om Thad Athma Om Thad Sathyam Om That Sarvam Om That puror nama   Anthascharathi bhootheshu Guhyam Viswa Murthishu, Thvam Yajna Thwam vashatkara Thwam Indra Thvam vayu  Thvam Rudra   Vishnus thvam Brahmasthvam Thvam prajaipathi  Om Thadhapa apo jyothi raso amrutham brahma bhur bhuvasuvarom 

ஓம்” தத்ப்ரஹ்ம | ஓம்” தத்வாயுஃ | ஓம்” ததாத்மா |
ஓம்” தத்ஸத்யம் | ஓம்” தத்ஸர்வம்” | ஓம்” தத்-புரோர்னமஃ ||

அம்தஶ்சரதி பூதேஷு குஹாயாம் விஶ்வமூர்திஷு
த்வம் யஜ்ஞஸ்த்வம் வஷட்காரஸ்த்வ-மிம்த்ரஸ்த்வக்‍ம்
ருத்ரஸ்த்வம் விஷ்ணுஸ்த்வம் ப்ரஹ்மத்வம்’ ப்ரஜாபதிஃ |
த்வம் ததாப ஆபோ ஜ்யோதீரஸோ ‌அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம் |

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ |

இது மந்த்ர புஷ்ப ஸ்லோகங்கள் கடைசி பகுதி. இதையும் சேர்த்து தான் சொல்வார்கள்.  இதற்கு என்ன அர்த்தம்?   ஓம்.  இது தான்   ப்ரம்மா.  ஓம்.  இது தான்  வாயு  என்கிற காற்று. உயிர் மூச்சு.   ஓம்.  இது தான்  என்னுள்ளே இருக்கும் ஆத்மா.  ஓம். இது தான்  நிரந்தரமான பேர் உண்மை. ஓம். இது தான்  எல்லாமே.  ஓம் என் 
நமஸ்காரங்களுக்குரிய  புருஷனே, எங்கும் எந்த உயிரிலும் உள்  நின்று இயங்கும்  விஸ்வமூர்த்தியே . நீயே நான் செய்யும் யாகத்தீ.  நீயே  வேதம் சொல்லும்  தியாகங்களின் உருவகம். நீயே இந்திரன்.  நீ தான்  வாயு எனும்  காற்று.   நீ தான் சம்ஹாரம் செய்யும் ருத்ரன். நீயே  காக்கும் மஹா விஷ்ணு.  நீயே படைக்கும் ப்ரம்ம  தேவன்.  சகல உயிர்களுக்கும் தலைவன் நீயே.  ஓம்.   நீர் என்பதே ஒளி.   வடிகட்டிய  அம்ருத சக்தி.  ஏழுலகிலும் பிரம்மத்தின் தத்வம்.  எங்கும்  அமைதி  உள்ளும் புறமும் அமைதி. அமைதி. அமைதி.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...