Friday, July 31, 2020

KRISHNA'S HOROSCOPE


                       பலே  ஜாதகன்-   ராசி பலன்    J K  SIVAN 

ஒரு சில  வீடுகளில்  ரத்தக்கண்ணீர்  வடிக்கிறார்கள். குழந்தை இல்லையே என்று.  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று தெரியும்.  குழந்தை பிறந்ததும் சொல் வந்து கொல் கிறேன்  என்று  ராஜா ஆணை  இட்டு,  அந்த அப்பா அம்மா ஏழு குழந்தைகளை பெற்ற  அடுத்த கணமே  அவர்கள் கண்ணெழுதிரே  அந்த குழந்தைகள்  கொல்லப்படுவதை பார்த்தவர்கள்.  இதை எப்படி எழுத முடியும்?  அந்த துயரம், துன்பம்  நிர்கதி எழுத்தில்  பிடிபடுமா?   இந்த நிலையில் தான் எட்டாவது குழந்தையும்  பிறந்து நல்ல வேளை  உயிர் பிழைத்தது. ஏனென்றால் அது உலகத்தின் அனைத்து உயிர்களையும்  பிழைக்க வைப்பது ஆயிற்றே.

எந்த தாயாவது  குழந்தையை பிறந்ததும்  இழக்க  சம்மதிப்பாளா?அப்புறம் அது எங்கே சென்றது, வளர்ந்தது, என்ன ஆயிற்று என்று அறியமுடியாத நிலை அவளுக்கு..... அந்த குழந்தையை பற்றி தான் இப்போது சொல்லப்போகிறேன்.

குழந்தை பிறந்த சேதி  கேட்டு எல்லா உறவினர்களும் நண்பர்களும்  பரிசோடு வருவார்களே. கொஞ்சுவார்களே.......அந்த குழந்தை பிறந்தபோது,  அதை கொஞ்ச யாரும்  வரவில்லை. இரவோடு  இரவாக அதை  தாயிடமிருந்து பிரித்தாகிவிட்டது. பிறந்ததே  வெளியே  தெரியாத போது  பிறந்த தை  யார்  கொண்டாட முடியும்?.  வளர்ந்ததும் எங்கோ! . அதற்கு  ஜாதகம் பார்த்தார் களா?  நல்ல  நாள்  பார்த்து  பேர்  வைத்தார்களா?   கன்னங்கரேல் என்று இருக்கும் அந்த கருப்பழகன்  ஊரில்   யாராலும்  கிருஷ்ணன்  என்றே  அழைக்கபட்டான்.   கிருஷ்ணன் என்றால் கருப்பன் என்று அர்த்தம்.

அதெல்லாம்  சரி,    இதற்காக  அவனுக்கு  ஜாதகம்  என்று  ஒன்று  இல்லாமலா போய் விடும்?.
 ஒருவன் பிறந்த நாள், நேரம்  எல்லாம்   சரியாக  தெரிந்ததால்  அதை வைத்து கொண்டு  பல   ஜோசியர்கள்   ஜாதகம் கணித்து  குணாதிசயம், எதிர்காலம் எல்லாம் சொல்கிறார்களே. நாம் இலவசமாகவும், காசு கொடுத்தான்  ஜாதகம் பெருகிறோமே .

அந்த பயல் ஜாதகத்தை  அப்போது யாரும் கண்டிக்கவில்லை.  பல  ஆயிரம் வருஷம் கழித்து எத்தனையோ ஜோசியர்கள் அவன் ஜாதகத்தை கணித்து, பலன் சொல்கிறார்கள்.... ஆச்சர்யமாக இருக்கிறது.

அவர்கள் கணிப்பு அந்த கருப்பனின்  வாழ்க்கையை  அப்படியே  படம்  பிடித்து காட்டுகிறதே. அவன்  ஏன்  மற்றவர்களை  விட  வித்யாசமாக   இருந்தான்??அவன்  ஏன்  ஒரு  காந்த சக்தியாக  இருந்தான்?   கண்ணற்ற சூர்தாசை கேட்டால்  அவர்  கவிதை ரூபமாகவே  அவன் ஜாதகத்தை  பாடிவிடுகிறார்!அவர் அப்படி என்ன சொன்னார்?   அவன்  அதி  புத்திசாலி, பேரழகன்,  பெரிய செல்வந்தன், மாணிக்கம், மரகதம், வைரங்கள் ஜொலிக்கும் ஆபரணதாரி....  16000  பெண்கள்  அவனை நம்பி,  அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனி பெரிய  மாளிகைகளாம் .சொன்னது எல்லாமே  அவன் செல்வத்தின்  அளவில்  துக்குணியூண்டு  என்றால்  பார்த்துகொள்ளுங்கள் .  நவ கிரஹங்களும் அவன் சொற்படியே கேட்கும்.   அவன் ஒரு தியாக செம்மல்.  அவன்  ஒரு தனிப்பிறவி. இறைவனின்  மானுடஉரு என்று சுருக்கமாக சொல்வது தான் சரி.

அன்பை  தருவதிலும்,   தானே  அதுவாகவும்  ஆனவன் அவன்.   ஒரு பிரபல ஜோசியர் தொடையைத் தட்டி உரக்க சொல்கிறாரே காதில் விழுகிறதா?

''அவன்  ரிஷப ராசிக் காரன்யா!! . லக்னாதிபதி சுக்ரன்!  கேக்கணுமா?”  ரோஹிணி  நக்ஷத்ரம் வேறே! .  சந்திரன்,  சனி, அங்காரகன் எல்லாம் உச்சத்திலே இருக்கா.   அவா அவா   கிரஹ த்திலே சூரியன், குரு,  புதன்  எல்லாரும்  சௌகர்யமா உக்காந்திருக்கா. ரிஷப ராசியிலே லக்னத்தில்  சந்திரன் அக்கடான்னு  இருந்தா  ஜாதகன்,  அழகனா, பேரும்  புகழுமா  ஆள் மயக்கியா, செல்வத்திலே புரளாம என்ன பண்ணுவான்?

ஒண்ணாம் மடத்திலே  கேது ங்கிறதாலே  கொஞ்சம்  அதிகமாவே கேளிக்கை உண்டு. அபவா தங்களும் கூடதான்  அவன் மேலே  இருக்கும் !.

3ம்  வீட்டிலே  செவ்வாய்   நீச்ச பங்கனா இருக்கான் என்கிறதாலே   ஆசாமி  யுத்தத்திலே படு
தைர்யசாலி!  ரோகிணி அழகி,   சந்திரனை  ஆக்ரமித்தவள். எனவே சந்திரனும் ரோஹிணி
யும்  சேர்ந்த  ஜாதகன்  அழகனாக ஆள் மயக்கியாக  இருந்ததில்  என்ன அதிசயம்?.  ரிஷபத்துக்கு  பசு  நேசம்  உண்டே!!  இந்த ராசிக்காரன் பசுக்களிடையே பிரபலமானவன்  இதனால் தானோ?? 


6ல்  புதன்,  10ல் சனி  பிரதானமாக  இருந்து  ஜாதகன்  தர்ம ஞாயத்தில்  ஸ்ட்ராங்காக  இருக்க  உதவியிருக்கிறான்.  அங்காரகன்  ராஹுவுடன்  சேர்க்கையால்  ஜாதகன்  ராஜதந்திரி.  

இதை கேளுய்யா!!  ரெண்டுலே உடைமையானவன்  புதன்; படு  ஜோரா  5ல்  இருக்கான்.  அதனா லே  வாய்லேருந்து  வர வார்த்தை எல்லாம் முத்துன்னா முத்து தான். பேச்சிலே மயங்காதவா  புத்திசாலித்தனத்தால் அடிமையாகாதவா  கிடையாது. இதை பாரு.  சூரியன்  தன்னுடைய  வீட்டிலே  குருவோட  ஸ்வஸ்தமா  இருக்கான். அதனாலே என்னவா?    ஹு ம்ம்  .. எதிரிகள்  பொடிப் பொடி!!  ஆசாமியை  அசைக்க முடியாது.  

இது  என்ன வேடிக்கை.  7ம் வீட்டுக்கு  சொந்தக்காரன்  அங்காரகனோடு   களத்ர 
காரகன் 
சுக்ரன் சேர்ந்துட்டதாலே  மனைவிகள்  கொஞ்சம்   ஜாஸ்தி  தான்.அதனாலே என்ன  நாமா சோறு போடப் போறோம்? இல்லே  சண்டை போடப்போறோம்.     பரவாயில்லை!!   ஏன்னா, ராகு  பக்கத்திலேயே இருக்கான். தெய்வீக  உறவு தான். 

9லே, அதான்,  சனியோட இடத்திலே,  கேது இருக்கான்.   யோககாரகனா சனி  7ல் இருந்துண்டு  வெற்றி மேலே  வெற்றியா தரான். யுத்தத்திலே  ஜாதகனை  அடிச்சிக்க  ஆளு  கிடையாது. புரியறதா??.   சனி தான்   ஆயுள் காரகன், வர்கோத்தமன்  ஆச்சே. ஆசாமிக்கு  பூரண  வயசு
 கிருஷ்ணன்  தான்  125 வயசு இருந்தானே.  




 எல்லாத்துக்கும்  காரணமான தெய்வத்தின் ஜாதகத்தில்  எல்லாமே  சரியாக இருப்பதில் என்ன ஆச்சர்யம் என்று தான் எனக்கு தோன்றுகிறது. 

Thursday, July 30, 2020

VIVEKA CHINTHAMANI




விவேக சிந்தாமணி   2. J K  SIVAN  

               
ரெண்டு மணியான பாடல்கள் 

விவேக  சிந்தாமணி எனும் பழைய தமிழ் நூலைப்  படிக்க நேர்ந்தது. அதில் ஒன்றிரண்டு பாடல்களை உங்களுக்கு  எழுதியிருந்தேன்.  பலருக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லும்போது மேலும் சில பாடல்களை தரவேண்டும் என்று ஆவல் மேலிட்டு இன்றும்  ரெண்டு பாடல்களை விளக்கிச்  சொல்லத் தோன்றியது. 

இதை எழுதியவர் எந்த மஹானோ?  பெயர், விலாசம்,  காலம்,   ஒன்றும் தெரியவில்லை.   தமிழ் சினிமா கவிஞர்கள் பொல்லாத பேர்வழிகள். எப்படியோ இது போன்ற அனாதை பாடல்களை பிடித்து  கொஞ்சம் அங்கேயும் இங்கேயும் மட்டும் மாற்றி அவர்கள் எழுதியது போல்  பெரும் புகழும், கூடவே  அதிகம்  பணமும் சம்பாதிக்கிறார்கள்.  பிழைத்து விட்டுப்  போகட்டும் நமக்கு என்ன நஷ்டம். காசைக்  கொடுத்து சினிமா பார்ப்பவனுக்கு நல்ல பாடல்களாவது கிடைத்தால் சந்தோஷம் தான். 

குடும்பத்தில்  அப்பா அம்மாவுக்கு   பிறந்த  குழந்தை  ஆண்  என்று தெரிந்தால் ரெட்டிப்பு சந்தோஷம். குழந்தை வளர்ந்தான். கோலி பம்பரம்  விளையாடினான்.  பள்ளிக்கு போனான், படித்தான். சண்டை போட்டான். சட்டை  கிழிந்தது. காலேஜுக்கோ வேலைக்கோ போனான்.  கல்யாணம் ஆகியது. அவனுக்கு இப்போது ரெண்டு குழந்தைகள். அப்பா அம்மா  தாத்தா  பாட்டி.  வயோதிகர்கள்,  அமெரிக்காவில் இருப்பவன் அவர்களை லக்ஷியம் செய்வதில்லை. அப்பா பேச்சு  கொஞ்சமும் பிடிக்காது. போடா உனக்கென்ன தெரியும் ? என்கிறான். அப்பா  சொல்வதையா கேட்கப்போகிறான்?

மனைவி மட்டும் என்ன ஒசத்தி.  ஒருகாலத்தில் கல்யாணமான புதிதில் கட்டுப்பெட்டி. அப்புறம் குழந்தை குட்டி பெற்றாள் . அதிகாரம் தூள் பறக்கிறது. எது சொன்னாலும் எதிர் பேச்சு பேசுகிறாள். எங்கிருந்து கற்றாள்  இதெல்லாம்.?  

 கல்வி கற்பது  பற்றி  பேசும்போது இன்னொரு விஷயம்  ஞாபகம் வருகிறது.  சீடன்   ''அனா  ஆவன்னா '' தெரியாமல் வந்தவன் எல்லாம்  கற்றுக்கொண்டு அப்புறம்   குருவுடனேயே  தர்க்கம் வாதம் செய்கிறான்.  அவருக்கென்ன தெரியும்  என்கிறான்?  அவனுக்கிப்போது குரு  உதவாக்கரை.. 

உதவாக்கரை என்கிறபோது  ராமசுப்பு பண்டிதர் ஞாபகத்துக்கு வருகிறார்.  நல்ல மருத்துவர். எல்லா நோய்க்கும் ஒரே கலர் மாத்திரை,  கஷாயம்,    பிரவுன் கலர்  சூரணம் தேனில் கலந்து நாக்கில் தடவி  வியாதி குணமாகி விட்டது.  முன்பெல்லாம் ஏதாவது வியாதி இருந்தபோது  பண்டிதர் தேவைப்பட்டார். இப்போது அவர் வேண்டாம்.   அவர் பாட்டுக்கு வந்து திண்ணையில் உட்கார்ந்துவிட்டு  நீர் மோர் குடித்த்துவிட்டு  ரெண்டு வாழைக்காயையும் அரைப்படி அரிசியும் வாங்கிக்கொண்டு போகிறார். அவர் வைத்தியம் தேவையில்லை.  

இதெல்லாம் ஏதோ சிலர் வீட்டில் மட்டும் நடக்கிற விஷயம் இல்லை ஸார் .  இது தான்  பொதுவாக  எல்லா இடங்களிலும் நாட்டு நடப்பு. ஜனங்கள் குணம் அப்படித்தான் என்கிறது இந்த  விவேகசிந்தாமணி பாடல். படியுங்கள் மேலே சொன்ன அர்த்தம் புரியும். 

''பிள்ளை தான் வயதில் மூத்தால் பிதாவின்  சொல் புத்தி கேளான்
கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் போராளி
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உளன்  நோய் பிணிகள் தீர்ந்தா  லுலகனார்பண் டிதரைத் தேடார்''

இன்னொரு சுகமான பாடலோடு நிறுத்திக்   கொள்கிறேன் 

டாமி,   ஜிம்மி, டைகர்,  மணி  என்று  நாய்களுக்கு  பெயர் வைத்து   கொஞ்சுகிறோம்.  ஒரே படுக்கையில்  படுக்கிறது.   . சரிதான்.   அடுத்த வீட்டுக்காரன்  புனுகுப்  பூனை கூண்டில் வைத்து வளர்க்கிறான்.  புனுகு  நல்ல விலைக்கு விற்கிறான். நல்ல சம்பாத்தியம். நமது டைகர், டாமியையும்  அப்படி வளர்த்தால் என்ன? 
 டாமியைப்  பிடித்து ஒரு கூண்டினில் வைத்து, வேளா  வேளைக்கு  புஷ்டியாக ஆகாராதிகள் கொடுத்து,  அதற்கு மஞ்சள்  பூசி குளிக்க வைத்து   சாம்பிராணி புகை பிடித்து, குங்குமம் தடவினால்  அது புனுகுப்பூனை  ஆகுமா?.  நாய் நாய் தான். பெரிய  பணக்கார  அரசியல் தலைவன்  வீட்டில்  ராஜா வீட்டில் வளர்பவனும் அவ்வாறே. அவன் பிறவி குணம் மாறாது என்கிறார்  பேர் தெரியா புலவர். 

''குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணஞ் செயதாலும் தான்
அக்குலம் வேற தாமோ வதனிடம் புனுகுண் டாமோ
குக்கலே குக்க லல்லாற் குலந்தனில் பெரியதாமோ''. 

இன்னும்  சொல்லட்டுமா?

gitanjali


கீதாஞ்சலி 25        J K  SIVAN
தாகூர்
                                                             

                25     ஓய்வு தா-   மிகவும் அவசியம்..

25.   In the night of weariness let me give myself up to
sleep without struggle, resting my trust upon thee.
Let me not force my flagging spirit into
a poor preparation for thy worship.
It is thou who drawest the veil of night upon
the tired eyes of the day to renew its sight
in a fresher gladness of awakening.

கிருஷ்ணா,  நீ படைத்த  இந்த  பிரபஞ்சத்தின்  ஜாலங்களை என்னவென்று சொல்லுவேன்?


பொன்னிற போர்வை போர்த்திய மாலை மங்கி எங்கும் மலைப்பாம்பு இரை கவ்வுவதைப்போல இருள் சர்வத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு வருகிறது. காரிருள் ஆக இன்னும் சற்று நேரம் ஆகலாம். நானும் களைத்து விட்டேன் கிருஷ்ணா. கொஞ்சமும் எதிர்ப்பு  காட்டாமல்,   ஒன்றும் பேசாமல்  தூக்கத்தின் வசம் என்னை தந்துவிடுகிறேன். என் நம்பிக்கை, ஊக்கம், நோக்கம் எல்லாம் உன் மீது தான் எப்போதும் வைத்தி ருப்பேனே.   அலைபாயும் என் மனத்தை திடப்படுத்திக் கொள்கிறேன். உன்னை வழிபட துதிக்க என் முழு உணர்வையும்  முடிந்தவரை செலுத்துகிறேன். ரொம்ப களைத்து  ஓய்ந்து விட்ட  என் அங்கங்களை புனர்ப்பித்து உன்னை வழிபட வைக்கிறேன்.

பகல் நிறைய உழைக்கிறது. எப்போது சூரியன் தலையை தூக்குகிறானோ கிழக்கில் அப்போது முதல் ஓயாமல் உழைக்கும் பகலுக்கு ஒய்வு தர, மீண்டும் புத்துணர்ச்சி பெற, மறுபடியும் தனது ஓய்தல் இல்லாத கடமையை செய்ய அதற்கு சக்தி வேண்டாமா?   அதற்காகத்தானே கிருஷ்ணா, நீ மெதுவாக இருளை அதன் மீது மெல்லிதாக   போர்வையாகப் போர்த்தி உறங்கப்பண்ணுகிறாய்!    இந்த ஒய்வு  என்னைப்போல  பகலுக்கும் அவசியம். அப்போது தான் மறுநாள் காலை  புத்துணர்ச்சி பெறும் .

 உனக்கு தெரியாதது என்ன இருக்கிறது  கிருஷ்ணா. யாருக்கு எப்போது எதை, எந்தவிதத்தில் எவ்வளவு, எப்படி செய்யவேண்டும் .... ஆஹா!   நீ ஒருவனே அதை உணர்ந்தவன்.

 

Wednesday, July 29, 2020

SKIT


                            நான்  யாரு  சொல்லுங்கோ?   J K SIVAN 

  விடாமல்  என் ஆபிஸ் போன் அலறியது. காலை   10மணி ஆகப்போகிறது.  இன்னிக்கு நிறைய வேலை இருக்கு.
'' ஹலோ  யாரு?''

''தெரியலையா? ....    (யாருன்னு கேட்டாலே  தெரியலைன்னு தானே அர்த்தம்  எதுக்கு இப்படி ஒரு கேள்வி?)

'' கோபாலரத்னம் ஸாரா ....(உத்தேசமா ஏதோ ஒரு  பேர்  சொன்னாதானே  யாருன்னு சொல்வார்..அதுக்காக...)

''இல்லே... சரியா திங்க்  பண்ணுங்கோ....( இப்படி யாரு ஒரு கழுத்தறுப்பு....)

'' மைலாப்பூரிலிருந்தா?   ( ஒரு ஹேஷ்யம்.  ப்ரஹதீஸ்வரன் குரல் மாதிரி இருக்கே.... அவரோடு நிறைய  பேசணுமே .)

''சரியா  கண்டுபிடிச்சிட்டேளே ... மைலாப்பூருக்கு அடுத்த  ராயப்பேட்டாவிலிருந்து பேசறேன்..... (அப்போ கூட பேர் சொல்லாத மனுஷன்... யாருன்னே தெரியலியே..)

'ரொம்ப கேட்ட குரலா இருக்கே''

''உங்க ப்ரதரோட ஒர்க் பண்ணின  சுப்பராமன் ..''   (சத்தியமா  இந்த  ஆள்  யாருன்னே  தெரியல)

''ஓ ஓ.....     சௌக்கியமா?   (  இது ரொம்ப  சாதாரணமாக  தப்பிக்கும்  பதில். எனக்கு  நாலு  பிரதர்ஸ். எந்த பிரதரோட ஒர்க் பண்ணவர் ? )

''உலகமே  கொரானா லே  தவிக்கிறது  நமக்கு என்ன  சௌக்கியம்...? (  மறுபடியும்  குழப்பம்)

''ஆமாம்  சார்   சொல்லுங்கோ....  (சீக்கிரம் விஷயம் சொல்லமாட்டாரா?)

''உங்க  ஊர்  பிள்ளையார்  கோவில்  புனருத்தாரணத்துக்கு  2 ஜோடி வேஷ்டி வாங்கி கொடுத்தேனே  இப்ப   ஞாபகமிருக்கா?    (எந்த கல்யாணத்துக்கு,  எந்த  விழாவுக்கு  என்ன கொடுத்தோம் என்றா ஞாபகம் இருக்கும். நாம் தான்  கர்ண பரம்பரை ஆச்சே. வலது கை  கொடுத்தது இடது கைக்கே தெரியாது)  யார் இவர்?  காலம்பற இவர் கிட்டே  மாட்டிக்கொண்டேன்...)

''அப்படியா... வயசாயிடுத்து  சரியா எதுவும்    ஞாபகம் இருக்க மாட்டேங்கிறது..''   (சமாளித்தேன்).

''அப்படி சொல்லாதேங்கோ.. வயசு  மனசுலே கிடையாது. நாமா  நினைச்சுக்கிறது.... (என்ன அர்த்தம் இதுக்கு ?)

''நான் எதுக்கு  போன் பண்ணினேன்னு கேட்டா ....     இருமல்  விடாமல் ஒலித்தது..

''ரொம்ப இருமறது . கொஞ்சம்  ரெஸ்ட் எடுத்துண்டு அப்புறமா பேசுங்களேன்......  (தப்பிக்க முயற்சித்தேன். தோற்றேன்)
'அது கழுதை  வரும்  போகும்..  லட்சியமே பண்ணக்கூடாது. இந்த உடம்பு இருக்கே........ (வேதாந்தியாக மாறிவிட்டார் தவிர  இன்னும் இவர்   யார் என்றே  புரியவில்லை.)
மறுபடியும் இருமல்.   ...... நான் என்ன சொன்னேன்?''

'உங்க  உடம்பை பத்தி சொல்லிண்டிருந்தீர்கள்.''

''ஆமாம்    காமாட்சி கிட்டே கூட  அடிக்கடி சொல்வேன்.....  ( இவரே யார் என்று இன்னும் தெரியவில்லை. இது யார் நடுவில் காமாட்சி?)

''ஓ.  மாமி கிட்டேயா....  (பொத்தாம் பொதுவா  நடுவிலே  இப்படி  ஒரு பதில் விட்டேன்....  மாட்டிக்கொண்டேன்)

''மாமி இல்லே சார்... சிரிப்பு.  என்னை ஏதாவது  இக்கட்டிலே  மாட்டிவிட பாக்கறேளா....( கெக்கெக்கே    சிரிப்பு . வேறு.)
ஓ  மாமி இல்லியா?  ( நான் கேட்டது காமாட்சி மாமி இல்லையா என்று தானே. அதற்கு என்ன பதில் பாருங்கள்)

''மாமி இல்லை . மாமி   அடுத்த தெருவிலே  ரேஷன் கடைக்கு போயிருக்கா?  (ரெண்டாயிரம் கொடுக்கற கூட்டத்தில் நிக்கறா)

''அடேடே    ஜாக்கிரதை.ஸார்   .. இப்போ எல்லாம் கூட்டத்திலே  சேரக்கூடாது....   ( ஜெனரல் அட்வைஸ் கொடுத்தேன். பிடித்துக் கொண்டார் )

''யார்  சொன்னா கேட்கறா?   நானும் இதே தான் சொன்னேன்.  போகாதேன்னு....  ..போய்யா  நீரும் சம்பாதிக்க மாட்டீர். வரத்தையும்  வேணான்னு தடுப்பீர்..  என்கிறா. சரி   மூணு கஜம் தள்ளி நின்னு வாய்ண்டு வான்னு சொன்னேன்... இப்போ  நான் எதுக்கு போன் பன்றேன்னு சொல்லலியே?''

''நீங்க  சொன்னா தானே  தெரியும். சொல்லுங்கோ...
''நான் என்ன சொல்றது.  நீங்க சொன்னது  ஞாபகம் இல்லியா?
''நான் என்ன சொன்னேன் எப்போ சொன்னேன், எதுக்கு சொன்னேன்னு  மறக்கிறது  சார். 
''குளத்தங்கரை சீனு கிட்டே நான்  வீடு கேட்டேனே ஞாபகம் இருக்கா?    (ஐயோ  யார்  இது குளத்தங்கரை சீனு?.  எனக்கு எந்த குளமும் தெரியாதே.  நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் கால் வைக்கும் வழக்கமே இல்லையே.  பேசாமலே  இருந்தேன்  )
''.........''
ஹலோ ..  என்ன  பதிலே  பேசலே.  அதான்  சீனு.  அவன் நேத்திக்கு பார்த்துட்டு  நீங்க  இன்னும்  கொடுக்க வேண்டியதை கொடுக்கலேன்னு சொன்னான். 

''யார் சீனுன்னு தெரியலே சார். நான் என்ன கொடுக்கணும் அவருக்கு. எனக்கு தெரிஞ்சு நான் எதுவும்  தரேன்னு யாரு கிட்டேயும் சொன்னதில்லையே சார். யாருக்கும் எதுவும் பாக்கி இல்லேயே...

பார்த்தேளா  பார்த்தேளா.. இதான் அவனும் சொன்னான்.   அவர் அப்படி தான் ஜோக்கா  பேசுவார் எப்போவும் னு சொன்னான்''

''சார். சத்தியமா சொல்றேன். எனக்கு எந்த குளத்தங்கரை சீனுவையும் தெரியாது. சீனுவாசன்னு ஒரு ரிட்டயர்டு ஹெட் கிளார்க் ரயில்வே லே  ஒர்க் பண்ணினவர் அடுத்த வீட்டிலே இருந்தபோது தெரியும். அவருக்கும் எனக்கு கொடுக்கல் வாங்கல் எதுவும் இல்லையே சார். ''

உண்மையா சொல்லுங்கோ சீனுவை தெரியவே தெரியாது?

''உண்மையா இப்போ சொல்றேன் சார்.    கேளுங்கோ.   நீங்க சொல்ற சீனுவை தெரியறது இருக்கட்டும்  . நீங்க யாருன்னே முதல்லே  எனக்கு  தெரியலே...''

''ஆஹா  வழிக்கு வந்துட்டேளா.. இதை தான் எதிர்பார்த்தேன்.  உங்களுக்கு ஐநூறு ரூபா போனவாரம் கொடுத்த    கிருஷ்ணமாச்சாரி. .மறந்துட்டேளா அதுக்குள்ளே....

''சார். நீங்க  தப்பா என்கிட்டே பேசறேள். உங்களை எனக்கு தெரியலே. நான் யார் கிட்டேயும் கடன் வாங்கற வழக்கம் இல்லை.. சாரி...   வச்சுடறேன்....

ஆமாம்  ...சாரி தாண்டா.  கோபு , நான்  கிருஷ்ணமாச்சாரி தான். சாரின்னு  தானே என்னை கூப்பிடுவே. 

''சார்.  நான் போனை வைக்கிறேன். நீங்க யாருன்னே தெரியலே. நான்  அனந்தராமன், அட்வோகேட்  .. கோபாலபுரம்.  யாரோ க்ளையண்ட்  பேசறா  அடையாளம் தெரியலேன்னு  இத்தனை நேரம் சமாளிச்சேன் உங்களை. உங்களுக்கு யாரோட பேசணும்.''

''அடேடே   நீ  முத்துகிருஷ்ணன் இல்லையா...  நங்கநல்லூர்....

''இல்லே ஸார்  தயவு செய்து  சரியான நம்பரை தேடி போன் பண்ணுங்கோ.  என்னை பேசவே நடுவிலே  பேசவே  விடலே... நான்  வக்கீல்  இப்படி கேள்வி கேட்டதே இல்லை..''...

''அடாடா  அந்த கடன்காரன்  சீனு   ராங் நம்பர் கொடுத்துட்டானே.   இதோ  குளத்தங்கரை சீனுவை மறுபடியும் பிடிச்சு  சரியான  நம்பர் வாங்கறேன்''......
டெலிபோன் ஓய்ந்தது...


இன்டர்நேஷனல் நண்பர்கள் தினம் இன்று.   இப்படி நண்பர்கள் நமக்கு நிறைய இருக்கிறார்களே. எங்கிருந்தாலும் வாழ்க  வளமுடன்....

BHEESHMA




                           ஒரு  வீர  தாத்தா  J K  SIVAN  

மஹா  பாரத  யுத்தம்  விவரிக்க முடியாதபடி  அவ்வளவு பெரியது.  உலகமே  ரெண்டு பாதியாக பிரிந்து ஒரு பாதி இன்னொரு பாதியோடு  மோதினால் எப்படி இருக்கும்.  அது போல்  இருபக்கமும்  சைன்யங்கள்..   பதினெட்டு நாள் நடந்த போர்.  முதல் பத்துநாள் யுத்தத்தில்  கௌரவ   சேனையின் தளபதி பீஷ்மர். அவரின் வீரத்துக்கும்  சக்திக்கும்  சரியான ஜோடி   எதிர்  பக்கம்  இல்லை எனலாம்.



 பத்தாம்  நாள்   யுத்தம்  முடியும் தருவாயில்  பேரிடி  காத்திருந்தது  கௌரவ சைன்யத்துக்கு.   பிதாமகர்  பீஷ்மர்  பாண்டவர்களை   வறுவலாக  ஒன்பது நாளாக வாட்டி எடுத்தார்.    எப்படியோ  தாக்கு பிடித்தனர்  பாண்டவர்கள்.  கிருஷ்ணன் தான்  காரணம் இதற்கு.  

 “அர்ஜுனா,  உன் வீரம்  பீஷ்மன்  முன்  செல்லாது.   வீணாக பிரயாசை படாதே.  நான்  பார்த்து கொண்டு தானே  இருக்கிறேன்.   தர்மனை  வரச்சொல் உடனே”  என்றான்  கிருஷ்ணன்.  ஓடி வந்தான்  தர்மன் 

“யுதிஷ்டிரா,  பீஷ்மனை பூமியில் எவராலும்  வெல்ல முடியாது.  எனக்கு  தெரிந்து ஒரு வழி தான்  உண்டு.  பீஷ்மன்   பெண்களை எதிர்த்தோ  அல்லது  ஆணல்லாதவருக்கு  எதிராகவோ  ஆயுதம்  தொட மாட்டான்.  துருபதனிடம்  ஒருமுறை  நான்  பேசிக்கொண்டிருந்தபோது  அம்பை  என்ற பெண்  பீஷ்மனை  கொல்ல வென்றே  தவமிருந்து  ஆணாக மாறியவள்  அவனது  அரண்மனையில் வளர்கிறாள்  என்று சொன்னான்.
 அவள்  இந்த  போரில்  உனக்கு   உதவ வந்திருக்கிறாள். அவள்  பீஷ்மனை பழி வாங்க வென்றே  நீலத்  தாமரை மாலை சூடிக்கொண்டவள்.   ஆணாக  மாறியவள்.   சிகண்டி என்று பெயரோடு இப்போது  உன் சேனையில்  அங்கம் வகிக்கிறாள்  என்பது உனக்கு தெரியும்.   உடனே சிகண்டியை  வரவழை.  

இதோ பார்  அர்ஜுனா,  உன் மீது  பீஷ்மன்  எய்த கொடிய  சக்தி வாய்ந்த பாணங்கள் முழுதும்  நான் ஏற்று  அவை என்னை  சல்லடைக்   கண்ணாக்கி விட்டன. அவ்வளவும்  அர்ஜுனனை  நோக்கி  வந்தவை.  எனது பொறுமை எல்லை மீறி  ஒரு  கணம்  நானே பீஷ்மனை   கொன்றுவிட தேரிலிருந்து இறங்கி விட்டேன்.  பிறகு அமைதியானதற்கு  காரணம்  என்னை எப்படியாவது  ஆயுதம் எடுக்க  வைக்கிறேன் என்று  பீஷ்மன்  சபதமிட்டது நினைவு வந்ததால் .  எல்லாம்  உங்களுக்காக  நான்  தாங்கிக்கொண்டேன்.  பொறுத்து கொண்டேன்

''அர்ஜுனா  நான் சொல்வதை கவனமாகக் கேள்.  
இன்று  யுத்தம்  ஆரம்பிக்கும்போது  சிகண்டியை   உனக்கு  கவசமாக  முன்னிறுத்திக்   கொள்  எனக்கு  இனி  பீஷ்மனின்  சித்ரவதை  தாங்க முடியாது”  என்று  சிரித்து கொண்டே  சொன்னான்  கிருஷ்ணன். 

 பத்தாம் நாள்  யுத்தம்  துவங்கும்போது  பீஷ்மன்  ஆக்ரோஷத்தோடு  பாண்டவ சைன்யத்தை  நிர்மூலம் செய்ய வந்துவிட்டான்.  இன்றே கடைசிநாள்  அர்ஜுனனையும்   பாண்டவர்களையும்  வென்று  இந்த  யுத்தத்தை இன்றோடு  முடிக்கிறேன் '' என்று முடிவெடுத்தான்.
அர்ஜுனன்  முன்னால்  சிகண்டி நீல  தாமரை   மாலையுடன்  போரிட  வந்ததை  கவனித்த  பீஷ்மன்  சிந்தித்தான்.   ஓஹோ   இது நிச்சயம்   கிருஷ்ணனின்   திட்டம் போல் இருக்கிறது   என  சட்டென்று புரிந்து கொண்டான். சிகண்டி சரமாரியாக   பொழிந்த அம்புகளை  எதிர் கொண்டான்.  திருப்பி  தாக்காமல் அவற்றை ஏற்றுகொண்டான்.   பீஷ்மன்   சிகண்டியின்  சரங்களை  தாக்காமல்  இருந்த நேரத்தில்  அர்ஜுனனி ன் கடும்  தாக்குதல்கள்  பீஷ்மனை துன்புறுத்தின. கடைசியில்  வேறு  வழியின்றி பீஷ்மன்  குற்றுயிரும் குலையுயிருமாய்  யுத்த களத்தில் சாய்ந்தான்.

 பெரிய  ஆபத்திலிருந்து  பாண்டவர்களையும்   அவர்கள் சேனையையும்  கண்ணன் இவ்வாறு  மீட்டான்.  

“யுதிஷ்டிரா, அதோ பார்   பீஷ்மன் குற்றுயிராக  மடிந்து கொண்டிருக்கிறான். நீ   உடனே  செல். அவனுக்கு பணிவிடை செய்''   என்றான் கிருஷ்ணன்.

''அர்ஜுனா,  ஒரு  தாத்தாவுக்கு  பேரனிடம்  யுத்தம்  செய்து  தோற்பதில்  என்ன  ஆனந்தம்  இருக்கும் என்று  புரியும்   வயதில்லை உனக்கு.   இங்கே வா.  எனக்கு மரணம்  அடுத்த அயனத்தில்  தான்.  43  நாள்  காத்திருக்க  வேண்டும் நான்.  அதுவரை எனக்கு  ஒரு நல்ல  அம்பு  படுக்கை விரித்துக்  கொடு” என்றான் பீஷ்மன்.  அவ்வாறே  செய்தான் அர்ஜுனன்.  

“யுதிஷ்டிரா  இங்கே  வா. உனக்கு  நாராயணனின்  ஆயிர  நாமங்களை  சொல்கிறேன்  எழுதிக்கொள்  இதையே  ஸ்ரத்தையாக   யுதிஷ்டிரன் வியாசரிடம்   சொல்ல அவர்  நமக்கு  விஷ்ணு சஹஸ்ரநாமம்  தந்திருக்கிறார். படித்தால் மட்டும் போதாது,  காதில் சுகமாக அது விழுந்தால்  தான் மனதில் பதியும்  என்று கிருஷ்ணன்  M .S . சுப்புலக்ஷ்மி  என்ற ஒரு மனித தெய்வத்தை படைத்து  நீ இதைப் பாடு என்று கட்டளையிட்டு அவரும் அற்புதமாக பாடி  என்றென்றும் எல்லா வீடுகளிலும்  அது ஒலித்துக்கொண்டு கோடிக்கணக்கானவர் மனதில் பதிந்து விட்டது.   ஸர்வம் விஷ்ணு மயம்  ஜகத்

Tuesday, July 28, 2020

GITANJALI


கீதாஞ்சலி 24 J K SIVAN தாகூர்

24. எனது நீண்ட பிரயாணத்தில்........

24 If the day is done, if birds sing no more, if the wind has flagged tired, then draw the veil of darkness thick upon me, even as thou hast wrapt the earth with the coverlet of sleep and tenderly closed the petals of the drooping lotus at dusk. From the traveller, whose sack of provisions is empty before the voyage is ended, whose garment is torn and dustladen, whose strength is exhausted, remove shame and poverty, and renew his life like a flower under the cover of thy kindly night.

ஒவ்வொருநாளும் காலை கிழிக்கும் தினசரி காலண்டர் ஷீட்டுக்கு ஏன் ''நாட்காட்டி"" என்று வெகு பொருத்தமான பெயர். அதை விட சிறந்த பெயர் யோசிக்க முடியவில்லையே .
'' டேய் ஒரு நாள் போய்விட்டதடா. நீ கிழித்துவிட்டாய் ஒரு நாளை உன் வாழ்வில். இதோ அடுத்தது இன்று காலை உனக்காக கிழிபட காத்திருக்கிறது. யாரும் உன்னை இன்று என்ன பெரிசாக செய்து கிழித்தாய்?'' என்று கேட்பதற்கு முன் நீயே அதை கேட்டுக்கொள். நல்லபடியாக இந்த நாளை உபயோகப்படுத்து. இது போனால் வராது பொழுதுபோனால் நிக்காது. 24 மணி நேரம் தான் உனக்கு கொடுக்கப்பட்ட நேரம். ஜாக்கிரதை, கெட்டிக்காரனாக அதை நல்ல வழியில் உபயோகி என்று அல்லவோ சொல்கிறது அந்த குட்டி காகிதம். இந்த நாட் காட்டி. தெளிவாக சொல்லாமல் சொல்கிறது.
''அடே உன்னிடம் இருக்கும் மீதி நாட்களை இனி எண்ணமுடியும், அது தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறதே. இருப்பதை அருமையாக உபயோகி. இந்தா இன்று உனக்கு ஒரு முழு புது நாள்''.... என்று புதிய தேதியை காட்டுகிறது...

இன்று ஒரு சீட்டு கிழித்ததில் ஒரு நாள் குறைந்து போனது புரிகிறது. அதற்குள் இந்த புது நாள் வந்து விட்டதே. காலையில் துவங்கிய நாளை அந்தி நெருங்கி முடிந்து இருள் எல்லாவற் றையும் மெதுவாக நிதானமாக சொகுசாக விழுங்குகிறது. காலதேவா, காலையில் கிளுகிளு என்று சந்தோஷத் தோடு சப்தித்த பறவை கூட்டம் இதோ அந்தி கருக்கலில் இனி பறக்காது, பாடாது. கூடு தேடி ஒதுங்குகிறது. பகல் தேய்ந்து இரவு படர்கிறது. காற்று வீசி வீசி ஓய்ந்து போய்விட்டது. கிருஷ்ணா, நீ படைத்த உலகை இருட்டாக்கி, அதை தூக்கம் எனும் போர்வையால் போர்த்தி விடுகிறாய். உறக்கம் எல்லாவற்றையும் கண்ணை மூட வைக்கிறது. நானும் இருளில் கண்மூடி உறங்கட்டுமா?

கிருஷ்ணா, நீ உறக்கத்தால் ஓய்வில் லாது அசையும் உலகத்தை கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு மறுபடி இயங்கு என்று ஒரு இரவு கண் மூட வைப்பவன். இதோ அந்தியில் தாமரை மலர்கள் இதழ்களை சுருக்கிக் கொண்டு கூம்பி அவற்றின் மடல் கண் இமை போல் மூடுகிறது. உறக்கம்.....

காலதேவா, ஒரு காட்சி கண் முன்னே காண்கிறேன். நான் தான் அதில் வரும் வயது முதிர்ந்த பிரயாணி. லொங்கு லொங்கு என்று வெகு தூரம் நீண்ட பாதையில் நடந்து விட்டேன்.. பிரயாண ஆரம்பத்தில் என் முதுகில் சுமந்த உணவுப் பொருள் மூட்டை போகும் வழியில் என்னால் உண்ணப்பட்டு என் உணவு மூட்டையும் என்னைப்போல் இளைத்து விட்டது. இதோ வெகு சீக்கிரம் அது காலி கோணிப்பை யாகபோகிறது. ஓஹோ அது முடியும்போது என் பிரயாணமும் முடிவுக்கு வருகிறதோ?

என் ஆடையை பார்த்தாயா, எத்தனை பழையது. கல்லில், முள்ளில், காற்றில்,வெயிலில், மழையில், அதன் வனப்பு இழந்து, கிழிந்து, கசங்கி, மண் புழுதிபடலமாக கரை படிந்து தொங்கு கிறது. இனி என்னை மூடிக் கொள்ளும் சக்தி கூட குறைந்து விட்டது. மானமாவது மண்ணாங்கட்டியாவது. எதையும் மறைக்க என்னிடம் சக்தியோ தகுதி யோ கூட இல்லை. இதிலிருந்து மீள முடியாதோ? இதெல்லாம் விலகுமோ? அது உன்னால் மட்டுமே முடியும்.

ஆஹா, கிருஷ்ணா, உன் அளவற்ற கருணையால், புத்துணர்ச்சி, புது வாழ்வு கொடுக்கமுடியும். அதோ அந்தியில் சாம்பி கூம்பிய அந்த தாமரை மொட்டு மீண்டும் காலை புத்தம் புதிதாக கண்ணைப்பறிக்க ல் மடல் விரிக்குமே . வண்டுகளை அழைக்குமே மலருமே , அதற்கு செய்யும் தயவை எனக்கும் காட்டு. இனி நானும் வாழ்வில் உன் கருணையால் அமைதியாக ஒரு புது நாளை தொடங்குகிறேன். உன் நினை வால், அது மலரட்டும். என் வாழ் வில் ஒரு புதிய பக்கம் திருப்புகிறேன்.

BRINDHAVAN




பிருந்தாவனத்தில் சில நிமிஷங்கள்  J K SIVAN


நாம்  இப்போது  பிருந்தாவனத்தில்  இருக்கிறோம்.  சந்தோஷமாக இருந்தால்  சைதாப்பேட்டை கூட  பிரிந்தாவனமாகும் . 

கோடை வெயிலில் எங்காவது குளிர்ச்சியாக  இருக்கும் இடம் தேடும்போது  உடலுக்கு மட்டும்  குளிர்ச்சி போதாதே.   கொடைக்கானல், ஊட்டிக்கு போகிறவர்கள்  உடல் குளிர்ச்சியை தான் அனுபவிக்கிறார்கள். 
 உள்ளத்துக்கு  குளிர்ச்சி தரும்  இடம்  எது என்று  சில  இடங்களைத்  தேடும்போது ஆயர்பாடி ''இதோ  நான் இருக்கிறேனே   என்னை உனக்குத் தெரியவில்லையா?''  என்று  கேட்டது. எனவே நான் உங்களையும் அங்கே அழைத்துச் செல்கிறேன்.  நம்முடைய அதிர்ஷ்டம்  நாம்   இப்போது  கிருஷ்ணன்  இருந்த காலத்திலேயே  ஆயர்பாடியில்  இருக்கிறோமே!!   

இங்கு வரும் வரை   சென்னை  போக்கு வரத்து  நெரிசல்,   டீசல்,  பெட்ரோல் நாற்றம், புழுதி, குப்பை , டிவி,  கட்சி கொடிகள் , ஊர்வலம், பொதுக்கூட்டம்,  '' ஒழிக, வாழ்க''   சத்தம் கேட்டோம், அதெல்லாம் இங்கே காணோமே. அது தான் பிருந்தாவனம். 
இங்கே   அன்றாடம்  நடப்பது.    ஆயர்பாடி  சிறுவர்கள்  சேர்ந்தே  போவர் வருவர் எங்குமே.  யாருக்கும் சட்டை கிடையாது. அதை சட்டை செய்யாதவர்கள்.   மேல் துண்டு,  இடையிலே ஒரு துண்டு,  காலில் செருப்பெல்லாம் கிடையாது.  எப்போதும் உற்சாகமாக இருக்கும்  அவர்களை  பார்த்து  ஆயர்பாடி  மக்கள்  அனைவரும்  பெருமிதம்  அடைவார்கள்.  

இத்தனை  மகிழ்ச்சி  ஆரவாரம்  எல்லாம் .அவர்களுக்கு  எங்கிருந்து  வருகிறது ?  என்பதன் ரகசியம்  அனைவரும்  அறிந்ததே.  
கிருஷ்ணன்  என்கிற  சிறுவன்  தான்  அவர்களை  இவ்வாறெல்லாம்   ஆட்டி  படைக்கிறவன்.  அந்த  சிறுவனே அவர்களுக்கு  தலைவன்.  பசுக்களும்  கன்றுகளும்  கூட   மறக்காமல்  அன்றாடம் ஒருமுறை  கூட்டத்தில்  மற்ற சிறுவர்களிடையே  கண்ணன்  இருக்கிறானா  என்று  முதலில் பார்த்துக் கொண்டு  தான்  சந்தோஷமாக இரை தேட  செல்லும்.   கன்றுகள்  தாவித்   தாவி   குதித்து  ஓட  தாய்ப்   பசுக்கள்  பெருமிதமாக மிதந்து செல்லும். கண்ணன்  ஏதாவதொரு பசுவின் அருகில் தான்  நிற்பான்.    கூடவே அதன்  கழுத்தைக்  கட்டிக்கொண்டு  நடப்பான்.  அவன்  இடையில்  இருக்கும்  சிறு  மூங்கில் குழல்  பகல் பூரா சில சமயம் அந்த  காட்டு பிரதேசத்தில்  அவனது வேணு கானத்தைப் பரப்பும்.  சில  சமயங்களில்  சிறுவர்கள் யமுனை நதியில்  குதித்து  நீச்சல் அடிப்பார்கள் விளையாடுவார்கள் . சில சமயங்கள்  ஒன்று கூடி பேசி பாடி ஆடுவார்கள்.  கண்ணன் வேணுகான நேரங்களில்  பசுக்கள்   எல்லாம் வயிறு   நிரம்ப உண்டு ஒன்றாக  கூடி  அவனருகே   மர  நிழல்க  ளில்   கூட்டமாக அமர்ந்து   அசை போட்டுக்கொண்டு  கண்மூடி தலையாட்டி கண்ணனின்  குழலிசையை  கேட்கும்.

ஒரு  கன்று  குட்டி  தாயைக்  கேட்டது. அது பிறந்து முழுக்க  ஆறு நாள்  ஆகவில்லை. 

 " அம்மா  உனக்கு  என்னை பிடிக்குமா  கண்ணனின்  குழல் இசை பிடிக்குமா?

"   ஏன்  இரண்டுமே பிடிக்கும்.!  

"   ரெண்டுலே  எது  ரொம்ப  பிடிக்கும்?

".  உன்னைப்   பார்த்துக்   கொண்டே இருக்க  ரொம்ப  பிடிக்கும் ;"  கண்ணன்  குழலிசையைக் கேட்டுக்  கொண்டே  இருக்க ரொம்ப பிடிக்கும் "   என்று  பசு  சொன்னது.

ஒரு  கன்றுக்குட்டி  மற்றொரு  ஆயர்பாடி  சிறுவன்   ஊதிய குழலை  கேட்டது.  "ஏன்  உன்னிடம்  கண்ணன்  ஊதும்  குழலின்  ஓசை  வரவில்லை?   அதற்கு  அந்த மூங்கில் புல்லாங்குழல் பதில்   சொன்னது:  

 " நானும்  கண்ணன்  கையில்  இருக்கும்  மூங்கில்  குழலும்  ஒரே  மரத்தில்  இருந்து பிறந்தவர்கள்,  வந்தவர்கள் தான். என்னை இந்த   ஆயர்பாடிச் சிறுவன்,      கண்ணன் ஊதுகிறதைப்போல   உபயோகிக்கவில்லையே. அதற்கு  நான்  என்ன செய்ய முடியும்?''

இதை கேட்ட  அந்த  சிறுவன்  தனது   குழலை  கண்ணனிடம்  கொடுத்து   '' கிருஷ்ணா,  என்னுடைய   புல்லாங்குழலில் நீ   வாசி நான்  உனதில்  வாசிக்கிறேன்'' என்றான்    அவன்    கண்ணனுடைய புல்லாங் குழலை  வாங்கி  ஊதினான்.   அப்போதும் அவன் வாசித்த  ஓசையில்   எந்த  மாற்றமும்  இல்லை

.அப்போது  கண்ணனின்  குழல் சொல்லியது:  
 
" ஏ, சிறுவா, நான்  மாற்றமே  இல்லாத மரத்துண்டு  தான். நீ ஊதினால்  நான்  அதுவாகவே  இருக்கிறேன். கண்ணன்  என் மீது அவன்  காற்றை  செலுத்தும்போது  எனக்கு   ஜீவன்  கிடைத்து  அவன்  அருளால்  அவனின் ஒரு  பகுதியாகவே  மாறிவிடுகிறேன்.ஆகவே  தான்  கண்ணன்  ஊதும்போது நான்  அவன்  ஜீவ நாதமாகி  காற்றில்  கலக் கிறேன்".

ஆயர்பாடி  பூலோக  சுவர்க்க பூமியாக  திகழ்ந்ததில்  என்ன  ஆச்சரியம்?  நாமும்  சென்னை  வெயிலுக்கே  திரும்புவோம்.  இப்போது கரோனா என்ற பரிசு வேறு நமக்கு...




RAMA NATAKA KEERTHTHANAI



   அருணாசல  கவிராயரின் அற்புத ராம நாடக கீர்த்தனைகள்   J K   SIVAN  


தமிழில் எண்ணற்ற பக்தி கீர்த்தனங்களை பாடிய  கவிஞர்கள்  ஏராளம்.   அன்றும் இன்றும்.   நான் கவனித்த வரையில்  வடமொழியில், தெலுங்கில், கன்னட, மலையாள மொழிகளில் பாடிய கவிஞர்கள் புலவர்களை நன்றாக  ஞாபகம் வைத்து பேசும் நாம்,   நமது தமிழில் பாடிய கவிஞர்களை ஏன் மறந்துவிடுகிறோம். யாரவது முத்து தாண்டவர், அருணாச்சலாகவிராயர், அண்ணாமலை ரெட்டியார்,  மாரிமுத்தா பிள்ளை , கவி குஞ்சர பாரதியை  ஞாபகம்  வைத்திருந்து அவர் பாடல்களை பற்றி என்றாவது  பேசுகிறோமா?

அருணாசலக் கவிராயர் (1711-1779) அற்புதமான கவிஞர்.    என்  தாய் வழி முன்னோர்கள் வாழ்ந்ததே இந்த அருணாச்சல கவிராயரின் ராமநாடக கீர்த்தனைகளை பாடியும் நாடகம் நடித்தும் தான். நான் அவரைப்பற்றி சொல்ல கடன், அல்ல, கடமைப் பட்டிருக்கிறேன்.

பிறந்தது சீர்காழியில் 1711 ல். தில்லையாடி என்னும் ஊரில். கார்காத்த வேளாளர் குலம். இளமையிலேயே
கவிபாடும் புலமையும், இசையுடன் பாடும் ஆற்றலும் இருந்ததால் தருமபுர ஆதீனத் தலைவர் ஆதரவு கிடைத்தது. சீர்காழியில் குடும்பம் வசதியாக தங்க ஆதீனம் உதவியது.  கர்நாடக இசையில் அற்புத பாட்டுகள் மெட்டமைத்தவர். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராச சுவாமிகள், முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் காலத்துக்கும் முந்தியவர். முதலில் இருந்தவர் முத்து தாண்டவர். (1525-1625) . அப்புறமாகதான் அருணாச்சலாகவிராயர் மற்றும் அவரது சம காலத்தவரான மாரிமுத்துப் பிள்ளை (1717-1787). அருமையான முத்தான தமிழ் கீர்த்தனைகள் படைத்தவர்கள் இந்த மூவரும். இன்றும் பாடப்பட்டு வருகிறது.

இராம நாடகக் கீர்த்தனை (சங்கீத ராமாயணம்) 258 இசைப்பாடல்களை நாடக வடிவில் கொண்டது. இந்த கீர்த்தனைகளை தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பல பிரசித்த ராகங்களில் அமைத்தார். மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடுகிறார்கள்.

நெய்வேலி சந்தான கோபாலன் அவர்கள் பாடிய ''ராமனுக்கு மன்னன் முடி.." இந்தோள ராக பாட்டை கேட்டு ரசித்ததுடன் கண்களில் நீரைத் துடைத்துக் கொண்டேன். மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய ''ஏன் பள்ளிக்கு கொண்டீரய்யா'' என்ற மோஹன ராக பாடலை எத்தனை முறை இதுவரை கேட்டிருக்கிறேன் என்று கணக்கே இல்லை.

கவிராயரை  இதிகாச கதையை கீர்த்தனைமூலமாக மக்களிடம் பரப்பிய முதல் கவிஞர் எனலாம். 'இராமநாடகக் கீர்த்தனை'     திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் அரங்கேறியது. என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி. 1779 இல் தமது 67வது வயதில் மறைந்தார்.

ஒரு அல்ப சந்தோஷம். நாம் மறந்துவிட்டாலும் அருணாசலக் கவிராயருடைய கீர்த்தனைகளை எம். எஸ். சுப்புலட்சுமி, டி. கே. பட்டம்மாள், மகாராஜபுரம், அரியக்குடி, போன்ற மஹா வித்துவான்களும் திரைநடிகையும் பாடகியுமான பானுமதி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் பாடி எத்தனை லக்ஷம் ரசிகர்கள் செவிகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்திருக்கிறதோ!

கவிராயரை   ஆரம்பத்தில்  காசுக்கடை என்ற நகை அடமானம் வைத்து கடன் கொடுக்கும் கடை வைத்து பிழைக்க வைத்தார்கள். மனம் அதில் செல்லவில்லை. ஒரு அதிசயம் நடந்தது.

புதுச்சேரிக்கு வியாபாரத்துக்காக தங்கம் வாங்க நடந்தார். ரெண்டு மஹா வித்வான்களை வழியில் சந்திக்கும் பாக்யம் கிடைத்தது. வெங்கட்டராம ஐயர், கோதண்டராம ஐயர் என்ற அந்த ரெண்டு சங்கீத வித்வான்களும்  
சீர்காழியை அடுத்த சட்ட நாதபுரத்தைச் சேர்ந்தவர்கள்.    அருணாச்சல கவிராய ர்   சீர்காழியில்   தருமபுர மடத்துக் கிளையில் தங்க நேர்ந்தது.    அப்போது அந்த சீர்காழி மடத்தில் தலைவராக இருந்தவர் முன்பு அருணாசல கவிராயருடன் படித்த சிதம்பரம் பிள்ளை என்பவர். அவர் "கட்டளை மாலை" என்ற பாமாலையை இயற்றியிருந்தார். அவருக்குத் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சீர்காழி குறித்த ஒரு பாடலை இயற்றி  அதில்   சேர்க்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் வேலை பளுவின் காரணமாக எழுத நேரமில்லை. பாட்டில் தொடக்க அடி மட்டும்தான் எழுதியிருந்தார், மேற்கொண்டு எழுத நேரமில்லை. அந்த நேரம் பார்த்து அருணாசல கவிராயர் சீர்காழி வந்தபடியால்,

''அருணாசலம், நான் ஆரம்பித்தேன். அப்புறம் எழுத நேரமே இல்லை. நீ இந்த பாமாலையை பூர்த்தி செயகிறாயா? என்றார் சிதம்பரம்பிள்ளை.

''சரி நான் எடுத்துக் கொண்டு போகிறேன். புதுச்சேரியில் தங்கம் வாங்கும் வேலை இருக்கிறது. முடிந்தால் அங்கேயே எழுதுகிறேன். வரும்போது தருகிறேன்'' என்கிறார் கவிராயர்.

புதுச்சேரியில் ஒரே இரவில் அந்த பாமாலை பூர்த்தி ஆகியது. ஒரு ஆள் மூலம் சீர்காழியில் உள்ள சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளைக்கு ஒரே ஆச்சரியம். ''ஆஹா எத்தனை சிறப்பாக எழுதியிருக்கிறார் என்று அவர் புலமையை வியந்தார். மனதில் ஒரு எண்ணம் உதித்தது. எப்படியாவது அருணாசலத்தை தன்னுடன் சீர்காழியில் தங்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து தில்லையாடியிலிருந்து அவரது குடும்பத்தை சீர்காழிக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்துவிட்டார்.

புதுச்சேரியிலிருந்து தங்கம் வாங்கிக்கொண்டு திரும்பிய கவிராயர் வழியில் சீர்காழி வந்தபோது நண்பர் சிதம்பரம் பிள்ளை தனது குடும்பத்தையே தில்லையாடியிலிருந்து சீர்காழியில் கொண்டு வந்து குடியமர்த்தி யது ஆச்சரியமாக இருந்தது. சரி இனிமேல் நமக்கு சீர்காழி தான் என்று அங்கேயே தங்கிவிட்டார். அது முதல் சீர்காழி அருணாசல கவிராயர் என்றழைக்கப்பட்டார்.

புதுச்சேரியில் பழக்கமாகி சந்தித்த இரு சங்கீத வித்வான்களான வெங்கட்டராம ஐயரும், கோதண்டராம ஐயரும் சீர்காழியில் மீண்டும் அருணாசல கவிராயரை சந்தித்து கம்பராமாயணத்தில் சில சந்தேகங்களைக் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வதற்காக வந்தனர்.

''கவிராயரே, எங்கள் சந்தேகங்களை அற்புதமாக கம்பராமாயணத்திலிருந்து விளக்கி தெளிவாக சொன்னீர் கள். எங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இவ்வளவு அற்புதமாக நீங்கள்  கண்முன் தோன்றுவது போல் சொல்கிறீர்களே, நீங்கள் ஏன் கம்பராமாயணத்தை ஒரு நாட்டிய இசை நாடகமாக நிறைய பாடல்கள் எழுதி ஆக்கக்கூடாது. கவிதைகளை நீங்கள் இயற்றுங்கள், நாங்கள் அவற்றுக்கு ராகம், தாளம் இவற்றை அமைத்து இசை நாடகமாக ஆக்க உதவி செய்கிறோம்" என்றனர்.

''வித்வான்களே, இது மிக பிரமாதமான யோசனையாக அல்லவோ இருக்கிறது. எனக்கு தோன்றவே இல்லையே. என்கிறார் கவிராயர்.

அருணாசல கவிராயர்  கம்பனுடைய காப்பியச் சுவையில் திளைத்தவர். அதை மேலும் படித்து அனுபவிக்க இப்படி ஒரு சந்தர்ப்பமா? கம்பனின் கவி நயமிக்க பாடல்களும், பால பாரதியின் சந்த விருத்தங்களும் அவர் மனதில் ஒரு தாக்கம் விளைவிக்க இராம நாடக கீர்த்தனைகள் உருவாயின. பண்டிதரும் பாமரரும் பாடி மகிழ்ந்து, நாடகமாக நடிக்கப் பட்டது. அவர் கையாண்ட சிறந்த உத்தி என்னவென்றால் சாதாரணமான அன்றாட புழக்கத்திலுள்ள சொற்களைப் போட்டு, பழக்கத்திலிருக்கும் பழமொழி களைச் சேர்த்த எளிமையான பாட்டுக்கள் நல்ல இசையோடு சேர்ந்து, கேட்போர் அனைவர் நெஞ்சங்களையும் கவர்ந்தது .

"இராம நாடக கீர்த்தனைகள்" பூர்த்தியானபின் முன்பு கம்ப நாட்டாழ்வார் தனது கம்ப ராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றியது போல அங்கேயே கொண்டு சென்று அரங்கேற்றினார்.

"ஏன் பள்ளிகொண்டீர் ஐயா, ஸ்ரீ ரங்கநாதா" எனும் மோகன ராக கீர்த்தனை எண்ணற்ற பரத நாட்டியக் கலைஞர்களால் அபிநயம் பிடித்து பிரபலமானது. இன்றும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறது.

அவர் காலத்தில் தஞ்சையை துளஜாஜி என்ற மராட்டிய மகாராஜா ஆண்டார். குடும்ப சூழ்நிலை சரியில்லா மலிருந்த காரணத்தால், இந்த நாடகத்தின் அரங்கேற்றம் துளஜாஜி ராஜா முன்னிலையில் நடத்த முடியாமல் போனது. கவிராயர் புதுச்சேரி துபாஷாக இருந்த ஆனந்தரங்கம் பிள்ளையைச் சந்தித்துப் பேசினார். அவர் சென்னையில் அப்போது இருந்த வள்ளலும், கலை ஆர்வலருமான மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினார்.

மணலி முத்துகிருஷ்ண முதலியார் நல்ல கலா ரசிகர். அருணாசல கவிராயரின் சில பாட்டுக்களை வித்வான்கள் பாடக் கேட்டிருக்கிறார். அவருக்கு அவை மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட சூழ் நிலையில் இப்போது அந்த பாடல்களை இயற்றிய ஆசிரியரே நேரில் வந்திருக்கிறார், அதிலும் இராமாயண நாட்டிய நாடகத்துக்கான எல்லா பாடல்களோடும் வந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

பிறகு தஞ்சையில் துளஜா ராஜா நிலை சரியானபின்பு அருணாசல கவிராயரின் இராம நாடகத்தை அரண்மனையில் நிகழ்த்தினார். புதுவை சென்று ஆனந்தரங்கம் பிள்ளையின் முன்னிலையிலும் நடத்தினார். அப்போது பிள்ளையுடன் வேறு பல செல்வந்தர்களும் இருந்து ரசித்துப் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் அருணாசல கவிராயருக்கு அரும் பெரும் விலைமதிப்பற்ற பரிசுப் பொருட்களை அளித்து கெளரவித்தனர்.

முடிப்பதற்கு முன் ஒரு பாடல் பற்றி சொல்கிறேன்

''ஆஞ்சநேயருக்கு மிகவும் சந்தோஷம். இலங்கை வந்த ராம காரியம் முடிந்தது. சீதையை உயிரோடு கண்டு அவளுக்கு ராமர் பற்றிய செய்தி சொல்லியாகிவிட்டது. அவளிடமிருந்து ராமருக்கு பதில் செய்தியும் தக்க அடையாளத்தோடு வாங்கிக் கொண்டாயிற்று. சீக்கிரம் திரும்பிப் போய்விட வேண்டியது தான். நான் ராம தூதன். தூதனுக்கு லக்ஷணம் திருட்டுத் தனமாக வந்து தப்பி ஓடுவதல்ல. இந்த ராவணனுக்கு அவன் யாரோடு மோதுகிறான் என்று தெரிய வேண்டாமா? எச்சரிக்கை கொடுக்க வேண்டாமா? அப்படிச் செய்யாமல் திருட்டுத் தனமாக வந்து செல்வது என்போன்ற வீரனுக்கு அழகா?தேவையா?

எதிரி எப்படிப்பட்டவன் அவன் பலம் என்ன என்று அறிவுறுத்த, ராவணனுக்கு சில கஷ்ட நஷ்டங்கள் உண்டாக்கியாகி விட்டது. இனி அவனைச் சந்தித்து புத்திமதி சொல்ல வேண்டியது ஒன்று தான் பாக்கி இருக்கிறது. நல்ல வேளை. அந்தச் சந்தர்ப்பத்தை அவன் மகனே உண்டாக்கிக் கொடுத்திருக்கிறானே. நான் தேடிப்போவதற்கு பதிலாக அவனே என்னை தருவிக்கிறான். நல்லது '' என்று தன்னைக் ''கட்டு'' ப் படுத்திக்கொண்டார்.   எனவே பயந்தவராக பிடிபட்டவராக தன்னைக் காட்டிக்கொண்டு, கட்டுப்பட்டு ராவணன் மாளிகைக்கு இழுத்துச் செல்லப்பட்டபோது கோபமாக இருந்த இலங்கை வாசிகள் அவரைத் தாக்கினார்கள். பிரம்மாஸ்திரம் அவரை தொட்டுவிட்டு விலகியது. இந்திரஜித்துக்கு பெருமிதம். ஒரு பலசாலியை அடக்கி கட்டி இழுத்துக் கொண்டு வந்துவிட்டோம் என்று.

''இவன் சாதாரண வானரன் இல்லை. எண்ணற்ற நமது வீரர்களை தனியொருவனாகக் கொன்றவன். சேதம் விளைவித்தவன். என் திறமையால் பிரம்மாஸ்திரம் உபயோகித்து இவனைக் கட்டிக் கொணர்ந்தேன். இனி இவனுக்கு தக்க தண்டனை கிடைக்கும். '' என்று அனைவரும் கேட்க மேகநாதன் முழங்கினான்.

ராவணன் முன் நின்ற ஹனுமனை ராவணன் கேட்கச் சொன்னதால் ப்ரஹஸ்தன் என்ற ராக்ஷச அதிகாரி கேட்கிறான்:
''ஏ, வானரா, நீ யார், யாரால் அனுப்பப்பட்டவன்? பயப்படாமல் உண்மையைச் சொல், உன்னை விடுவிக்கிறேன்.'

இது தான் அந்த பாடல்:
செஞ்சுருட்டி : ஆதி தாளம்
'' ஆரடா குரங்கே - இங்கே வந்த நீ - ஆரடா குரங்கே''
வார் சிங்காசனம் போல், - வால் இட்டென்னிலும் மேல் இட்டிருகிறாய் ''
கம்பத்தின் மேலே காலனைப் போலே
செம்புமாலியையும் சேனாதிபரையும் கொன்றொருக்காலெ
சிட்சை செய்வேன் என்று கட்சி உடனே வந்த
அட்சதனைக் கூட பட்சணம் செய்த நீ.... ஆரடா குரங்கே.....

(ராவணன் எதிரில் தனது வாலைச்சுற்றி உயரமான ஆசனம் அமைத்து ராவணனை விட மேலே உயரமாக அனுமன் அமர்ந்திருக்கிறானாம்) ( செஞ்சுருட்டி ராகத்தில் ஆதி தாளத்தில் -- ராவணன் கேட்பது )

அதற்கு அனுமார் பதில்: மோகனம்: ஆதி தாளம்

''ராமசாமியின் தூதன் நான் அடா -- அடடா ராவணா
நான் அடா என் பேர் அனுமான் அடா ( ராவணன் ஒரு அடா போட்டால் அனுமன் பல அடா போடுகிறான்!!)
கொடுத்த வரமும் தனமும் கனமும் வீணிலேன் போக்குகிறாய்
குடிக்கும் பாலை அய்யோ கமர் வெடிக் குளேன் வார்க்கிறாய்
துடுக்குடன் பரஸ்த்ரி செனங்களை தொடர்ந்தேன் பழி ஏற்கிறாய்
தூக்கி ஏறவிட்டேணியை வாங்கும் துர்த்தர் வார்த்தையைக் கேட்கிறாய் ...( . ராம )

கவிராயரின் இன்னும் சில பாடல்களை பற்றி ஒவ்வொன்றாக எழுத விருப்பம் இருக்கிறது. நேரம் கிடைக்கட்டும். என் அம்மா  இந்த  பாடல்களில் நிறைய மனப்பாடம் செய்து பாடுவாள். 



Monday, July 27, 2020

krishna story

                                           
                            “சாமி,   நீயே   துணை    J K   SIVAN
 
            
மனைவி குழந்தைகளை  நிர்க்கதியாக, நிராதரவாக விட்டுவிட்டு  எவளுடனோ  ஓடும்  கணவன்கள்  பற்றி நாம்  அறிவோம்.   இருவது வருஷம்  ஆயிட்டுது  ருக்குவை  மாதவன்  கைக்குழந்தை முரளியோடு விட்டுச் சென்று!!.

நாகர்ஜுன சாகர்   அருகே  ஒரு கிராமத்தில்  ருக்கு   குழந்தை முரளியோடு  குடியேறி  வளர்த்து  அவனை பக்கத்து  நகரத்தில்  படிக்கவும்  வைத்தாள்.  பள்ளியில்  முரளியின்   பெயர்  “பார்த்தசாரதி”   இதன் பின்னால்  ஒரு குட்டி கதை  ஒளிந்துகொண்டிருப்பதை  வெளியே எடுத்து தருகிறேன்.  சுருக்கமாக  அது  இதுதான் :

***
 ஏகாம்பரம்  கிண்டியிலேயே பழியாக கிடப்பான்    குதிரை  ரேஸ் செல்பவன்.  எந்த  குதிரையின்  மீது  பணம்  கட்டினாலும்  அது   அடிபடாமல்  ஜாக்ரதையாக கடைசியில்  தான்  வந்தது.  அவன் பெண்  தான்  ருக்மணி   என்கிற ருக்கு.  அவர்கள்  ஆந்த்ராவில்  ஒரு கிராமத்தில்   வசித்தபோது  எதிர்  தெருவில்   இருந்த பார்த்தசாரதி கோவில்  தான்  ருக்குவுக்கு  போக்கிடம்.  பார்த்த சாரதியின்  புன்முறுவல் நிறைந்த  முகம்   நெஞ்சிலே எப்போதும்  நிற்க அவள் தினமும் சொன்ன வார்த்தை   “சாமி,  நீயே துணை”.    இதுவே அவளுக்கு  தெரிந்த  எல்லா மந்திரமும்.   பார்த்தசாரதியை  நினைத்தாலே அவள்  கவலைகள் பறக்கும்.   அப்பன் தினமும் குடி போதையில்   இரவில் அம்மாவோடு சண்டையிட்டு  அவளையும்  ருக்குவையும்  தனி ஆவர்த்தனம்  வாசிக்கும் போதெல்லாம்   "சாமி நீயே  துணை".    அப்பன்   ஒருநாள்  திடீரென்று மாரடைப்பால் கண்ணை மூடினான்  அவனது  கை  வண்டியில் ருக்கு காய்கறி  வியாபாரம் செய்து பிழைத்தாள் . வயிறு கழுவ  4வது   படிக்கும் போதே  பள்ளிப் படிப்பை  நிறுத்தி  வீட்டு வேலை செய்து  பாத்திரம் கழுவியது  அவளது பழங்கதை.
***
நாகர்ஜுன சாகர்  பக்கம்  முரளி தினமும்  ஒரு  மைல்  நடந்து தான் குறுக்கு வழியில்  ஒரு  அடர்ந்த காட்டு  பாதையில்   பள்ளி செல்ல வேண்டும்.  பஸ்  டவுன் வழியே  செல்லும்  அதில்   போக முரளிக்கு ஆசை.  

“அம்மா  என்னை  பஸ்ஸிலே  அனுப்பு”  
“ ஏன்   அழுவுறே” 
“நாம்ப ஏழை கண்ணு   என்கிட்டே காசு இல்லப்பா.   நீ  குறுக்கு வழியாகவே  நடந்து போப்பா”  என்றாள்.
“ பயமா இருக்கு மா”.
“சாமி, நீயே  துணை''  என்று சொல்லுடா.  கிருஷ்ணன்  காப்பாத்துவார்.  பயமா  இருக்கும்போது  கிருஷ்ணா
கிருஷ்ணா என்று கூப்பிட்டு கிட்டே  போ.  வேறே வழி தெரியலை கண்ணு.” 

காட்டு பாதையில்  கிட்டத்தட்ட  ஒரு  மாதமாக  பத்து வயது முரளி,    கிருஷ்ணா கிருஷ்ணா என்று கூப்பிட்டு கொண்டே  போனான்.  அவன்  மனதுக்கு  அது தெம்பாக  இருந்தது.  யாரோ  கூடவே  துணைக்கு  வருவது போல்  இருந்ததால் மனதில் பயம்  விலகியது.

 அன்று பள்ளியில்  தலைமை ஆசிரியருக்கு  பிரிவு உபசார விருந்து என்பதால்   எல்லா மாணவர்களும்  எதாவது பரிசு கொடுக்கவேண்டும் என்று  அவன் வகுப்பு வாத்தியார்   தாமோதரன்   ஆர்டர் போட்டார்.

''அம்மா  எங்க வாத்யார்   ஹெட்மாஸ்டருக்கு  பரிசு கொடுக்க ஏதாவது  கண்டிப்பாக  கொண்டு வரணும் 
னுட்டார். நீ என்னம்மா  தருவே?''

 “நான் கூலி வேலை செய்றேன். நமக்கு  யார்டா   இருக்க உதவ.  உனக்கு  வழியிலே துணைக்கு  வருவானே  கிருஷ்ணன், அவனையே  ஏதாவது தரச்சொல்லி  கேளு ''  என்று ஏழை அம்மா  கண்ணீர்விட்டு   மனமுருகி
 சொன்னாள்.
“கிருஷ்ணா கிருஷ்ணா”  என்று  வழக்கம்போல்  முரளி   கூப்பிட்டபோது  “என்ன முரளி  சொல்லு”  என்று   காட்டுப்பாதையில் அவனுக்கு பழக்கமான குரல்  கேட்டது 

 “எங்க வாத்தியார்  தாமு ஸார் ,  ஹெட்மாஸ்டருக்கு  என்னை ஏதாவது   பரிசு  கொண்டான்னு  சொல்றார். அம்மாவை கேட்டா  உன்னை  கேக்க  சொல்றா.  நீ  ஏதாவது எங்க ஹெட்மாஸ்டருக்கு  பரிசு  கொடுக்கிறியா”.  

''அதுக்கென்னடா,   அதோ  உன்  எதிரே  தெரியுது பார்  ஆலமரம் அதன்  அடியில்  ஒரு  செம்பு  நிறைய   பால்  வச்சிருக்கேன்  அதை கொண்டு போய்  கொடு.   மாட்டுக் காரன் கிட்ட  பால்  தானே  இருக்கும்”.  

எல்லா  பிள்ளைகளும் வித  விதமான பரிசு  கொடுக்க  முரளியின்  பால் செம்பு  சீந்தப்படாமல்  இருந்தது.  தாமு  அவனை   கேவலமாக பார்த்தார்.  

மதியம்  தாமு  தனது  வீட்டில் மனைவியிடம்  “அந்த முட்டாள் பையன் கொடுத்த  செம்பு  பாலை காய்ச்சி கொடு  நாம்பளாவது  குடிக்கலாம்”   என்றதும்  அடுப்பில்  பாத்திரத்தில்  பால்  செம்பை   கவிழ்க்க “என்ன  அதிசயம்!  பால்  செம்பு   மீண்டும் நிரம்பியது.  ஆச்சர்யத்தோடு  மறுபடியும்  பாத்திரத்தில் பாலைக்  கொட்டினாள்.   செம்பு  மீண்டும் பாலோடு தானாகவே   நிரம்பியது.  பயந்து போய்  அவள்  இதை  தாமுவிடம் சொல்ல,   அவர்  பள்ளிக்கூடத்துக்கு  ஓடி  முரளியைப்   பிடித்து  

“ஏலே, உனக்கு  யார்டா பால் செம்பு கொடுத்தது?”  
அவன்  பூரா விஷயம்  சொல்ல,   தாமுவும்   மற்ற பிள்ளைகளும்   கொல்லென்று சிரித்தனர்  
“கிருஷ்ணனாவது,  ராமனாவது,   என்னடா இது  உளறல்? . யாரோ  மாஜிக்  காரன் கிட்டே  செம்பு  வாங்கி  வந்து  ஏமாத்தறே”
“ இல்லே சார்,   கிருஷ்ணன்  தான்  கொடுத்தான்”.
“ டே,   எனக்கு பைத்தியம் பிடிச்சுடும்  திருப்பி  திருப்பி  கிருஷ்ணன்  தினமும்  கூப்பிட்டா  பேசுவான்,  துணை வருவான், பால்  செம்பு  தந்தான்  என்று   அதையே சொன்னாக்க . முட்டாளே,   கிருஷ்ணன்  ராமன்   எல்லாம் இப்போ எங்கடா இருக்காங்க?  கோவில்ல தான்   சிலையாக,  படமாக இருக்காங்க   புராணத்திலே தான்  பேசியிருக்காங்க” 

“இல்லே சார்  தினமும்   என் கூட கிருஷ்ணன்  பேசுவான்  சார், அவன்  தான் சார் இதை  உங்க கிட்டே  கொடுக்க சொன்னான்”.

“டேய் ,   மேலே  பேசாதே,   ரொம்ப கோவமாயிருக்கேன்.   பிரம்பு  பொளந்துடும்.  இப்போவே  உன் கூட வரேன்  அந்த  கிருஷ்ணனை  காட்றியாடா?”
“சரிங்க சார்”
காட்டில்  தாமு  அருகில் நிற்க   முரளி உரக்க     ''கிருஷ்ணா  கிருஷ்ணா''  என்று  பலமுறை  கூப்பிட்டும்  பதிலே இல்லை.
முரளி  அழுதுகொண்டே  ”:கிருஷ்ணா  எங்க  வாத்தியார்  வந்திருக்கார்  நான் சொல்றதை   நம்ப மாட்டேன்கிறார்.    உன்னை பார்க்கணுமாம்   கொஞ்சம் வரியா.”  

அப்போது   தீர்க்கமாக ஒரு  குரல்  அவர்கள் இரண்டு பேருக்கும்  கேட்டது.
“முரளி,   நான்  எப்படி அப்பா  வர முடியும்   அவர்  தான்  நான் இப்போது  இல்லவே  இல்லை . வெறும் கட்டுக்கதை  என்று  சொல்லிட்டாரே  நம்பாதவர்  முன்  நான்  எதற்கு  வரணும்''

தாமு  கண்ணில்  நீர் வடிய  “கிருஷ்ணா  என்னை  மன்னிச்சுடு  நான்  தப்பு பண்ணிட்டேன்” என்று  குரல் வந்த திசையில் வணங்கினார். 

முரளியின்  காலை  பிடித்து கொண்டு  “சாமி,   நீயே  எனக்கு  துணை  வழிகாட்டு”  என்றார். .    

GITANJALI



கீதாஞ்சலி 23 J K SIVAN தாகூர் 23 நண்பனே ஆருயிர் நண்பனே ! 23 Art thou abroad on this stormy night on thy journey of love, my friend?
The sky groans like one in despair. I have no sleep tonight. Ever and again I open my door and look out on the darkness, my friend! I can see nothing before me. I wonder where lies thy path! By what dim shore of the ink-black river, by what far edge of the frowning forest,
through what mazy depth of gloom art thou threading thy course to come to me, my friend? இது கல்கத்தா இரவு. மழை காலம். எங்கும் அட்டை கருப்பாக இருள் சூழ்ந்து இருக்கிறது. ''ஊ'' வென்று உடல் நடுங்க வைக்கும் குளிரை வாரி வீசும் புயல் காற்றுல். உடலை ஊசி துளைப்பது போல் துளைக்கிறது.
கிருஷ்ணா, என் ஆருயிர் நண்பா, நான் உன்னை நினைக்கிறேன். நீ எங்கே இந்த நேரத்தில் இருக்கிறாய்? எங்கேயாவது தூர தேசத்திலா? இல்லை இந்த நாட்டிலேயே எங்காவதா மூலை முடுக்கிலா ?
மேலே பார்த்தால் வானம் நிர்கதியாக வலி தாங்கமுடியாத வியாதியஸ்தன் போல் உறுமுகிறது. முனகுகிறது. எப்போது வெடிக்குமோ? எந்நேரமும் வானம் பிளந்து ஜோ மழை கொட்ட லாம்.
இன்று இரவு எனக்கு தூக்கம் போய் விட்டது. யாருக்காக ? நான் ஏன் அடிக்கடி எழுந்து போய் கதவை திறந்து திறந்து பார்க்கிறேன்? ஒரு வேளை நீ வாசலில் வந்து நிற்கிறாயோ? நீயாக அது இருக்கலாமோ? என்ற நப்பாசை. இருளில் உற்று உற்று பார்க்கிறேன்.
காற்று தான் கதவை படபடவென்று இடிக்கிறது. நீயோ யாரோ தட்ட வில்லை..
இந்த இருளில் யார் உன்னைத் தவிர என்னைத் தேடி வரப்போகிறார்கள்? என் எதிரே தோன்றுவது எல்லையற்ற வெறுமை,.சூன்யம் தான். அது சரி, உன் பிரயாணத்தில் எந்தப்பக்கம் நீ நடந்துகொண்டிருக்கிறாய்? உன் பாதை எந்த பக்கம்? என் ஆசை தீர இந்த பக்கம் உண்டா? கிருஷ்ணா, என் ஆருயிர் நண்பா, இந்த இருளில் கன்னங் கரேல் என்று கருப்பு மை தடவியது போல் அதோ தெரிகிறதே அந்த நதியின் கரையிலா நிற்கிறாய் ? நீயே கருப்பு. அகண்ட இருள் சூழ்ந்த காட்டின் எந்த மூலையிலிருந்து நீ தோன்றப்போகிறாய்? தேடுகிறேன்.

எண்ணற்ற சிக்கல்கள் கொண்ட வலை பின்னி நகர முடியாமல் இருப்பதுபோல் என் எண்ணங்கள், மனதில் குழப்பம் தரும் அமைதியின்மை, ஏக்கம், துயரம் இதிலிருந்து பளிச்சென்று சிறிய ஒளிக்கம்பியாக ஒரு வழி உருவாக்கிக் கொண்டு என்னிடம் வருவாயா கண்ணா , உனக்காக தானே நான் காத்திருக்கிறேன் என் ஆருயிர் நண்பா! காதில் விழுகிறதா என் ஓலம்?

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...