Thursday, July 23, 2020

GITANJALI



கீதாஞ்சலி  20                J K   SIVAN
தாகூர்

20     மணமும்  மனமும்

20. On the day when the lotus bloomed,
alas my mind was straying, and I knew it not.
My basket was empty and the flower remained unheeded.
Only now and again a sadness fell upon me, and
I started up from my dream and felt
a sweet trace of a strange fragrance in the south wind.
That vague sweetness made my heart ache with longing
and it seemed to me that is was the eager breath of
the summer seeking for its completion.
I knew not then that it was so near, that it was mine, and
that this perfect sweetness had blossomed in the depth of my own heart.

கவிஞனின் எண்ணங்கள் அவனிடம் இருப்பதில்லை.  சுததிரமானவை அவை.   எங்கோ வானில், விண்ணில்  திசை  நோக்காமல்  எங்கோ  பறந்துகொண்டிருக்கும்.  அன்று காலை என் கண்ணைப் பறித்தது  என் வீட்டின் அருகே உள்ள ஒரு குளத்தில்  பூத்திருந்த புத்தம்  புது  தாமரை.
மொட்டவிழ்ந்த  சில நிமிஷங்களுக்கு முன்பு பிறந்த  புது தாமரை மலர்.  சூரியனைத் தேடும் அதன் அழகில் என் மனம் எங்கோ பறந்து திரிந்து கொண்டிருந்ததை அறியேன்.
சிலையாக தோட்டத்தில்  நின்ற என் கையில் காலி பூக்குடலை.  சுற்றிலும் எங்கும் வண்ணவண்ணமாக மயக்கும்   சிரிக்கும் மலர்கள்   '' ஏனடா ரவீந்திரா , ''என்னை ஏன் பார்க்கவில்லை  பறிக்க வில்லை''  என்று கூப்பிட்டதும்,  கேட்ட தும், என் காதில் விழுந்தால்  தானே!   நான்  கனவு காண்பவன்,  எப்போதும்  ஏதோ ஒரு கனவுலகில்  சஞ்சரிப் பவன்.  விட்டு விட்டு  சிக்கலாக என்னென்னவோ  சோகத்திரைகள் என் மனதில்.  நிறைவேறாத ஆசைகள், நடக்காத கனவுகள், அது தந்த துக்கம் என்னை தளர்வடையச் செய்யும் . எண்ணச்  சிக்கலில் என் கனவின்  ஆரம்ப நுனியை தேடுகிறேன்.
என் நிலைமை புரிந்து என்னை புதுப்பிக்க, கனவுலகிலிருந்து மீட்டு இந்த அற்புத ஆனந்த  அமைதிநிலைய  தழுவிட    என்  நெஞ்சை, உடலை, இதயத்தை,  மிருதுவாக மயிலிறகால்  தடவிக் கொடுப்பது போல் இளங்குளிர் தென்றல் காற்று இனிமையான மலர்களின் நறுமணத்தைச் சுமந்து என் மீது வீசுகிறது.
மருந்து  வியாதியை நீக்காமல்  கிளப்பி விட்டுவிட்டதே..  இந்த நறுமண தென்றல்   ''அடேடே  என் இதயத்தின் வலியை அது அதிகப்படுத்தி விட்டதே. என் இதயம் இனம் புரியாத எதையோ இழந்து தேடுகிறதே.
உஷ்ணப்பெருமூச்சு என்பது  வேனில் காலம் விடைபெறும் போது  விடும்  பிரிவு மூச்சோ  இந்த பூமியை சிறிது காலம்  விட்டு நழுவுகிறதோ? அதன் ஏக்கப்  பெரு  மூச்சு தான் என் பாதிப்போ?
கிருஷ்ணா,  இதுவரையில்   நீ  என்  அருகிலேயே இருந்ததை நான் உணரவில்லையா, என்னோடு இணைந்திருந்ததை  என் இதயத்தி லேயே  குடியிருந்ததை   கவனிக்காமல்  விட்டு விட்டேனா?
''நீ என்னை மறந்தாலும் நான் உன்னை விடுவதில்லை என்று என் இதயத்தில் ஒரு பாகத்தில் குடிகொண்ட  நீ   என்பதை  உணர்த்த  தான்  இந்த  இனிய சுகந்த   நறுமணமிக்க எண்ணமோ?  ஓஹோ என் இதய ஆழத்தில் எங்கோ அது மலர்ந்து மொட்டவிழ்கிறதோ?  அது தான் வெளியே குளத்திலுமா  ? என் இதயத்தில் மலர்ந்த  தாமரை  தான் என் கண்ணுக்கு குளத்தில் மொட்டவிழ்ந்து  காண்கிறதா?\

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...