Tuesday, July 7, 2020

DRONA

                   ''யுதிஷ்டிரா இது  நிஜமா ?  J K  SIVAN 


"எனக்கென்னமோ, இன்றைக்கு உங்களுக்கு ஒரு   பெரியகண்டம்  காத்திருக்கிறது  என்று  தான்  தோன்றுகிறது  யுதிஷ்டிரா!”  என்று சொல்லிக்கொண்டிருந்தான்  கிருஷ்ணன்.   பாண்டவர்களின்  யுத்தகள  கூடாரத்தில் ஆலோசனை நடந்துகொண்டிருந்தது. எல்லோர் முகத்திலும் கவலை. 


"எப்போதும் எங்களை  ஊக்குவித்து உய்விக்கும்  நீயே  இவ்வாறு பேசுவது  ஆச்சர்யமா யிருக்கிறது  கிருஷ்ணா" என்றான்  தர்மன்.

"புரிந்து கொள்,  யுதிஷ்டிரா!,  கடந்த  5  நாளாக  உனது  சேனையை  வாட்டி  எடுக்கிறார்  த்ரோணாச்சார்யர். இன்று மாலைக்குள்  நீ  த்ரோணாசார்யாரை  வீழ்த்தா விட்டால்  பாண்டவ சேனை அழிந்து விடும். ஜாக்ரதை!.  என்னால்  இதை மட்டும் தான் உறுதியாக சொல்ல முடியும். துரோணரின்  பிரம்மாஸ்திரம் உங்கள்  சேனையில்  பாதி  பேரை விழுங்கிவிட்டது  என்பதை கவனம்  கொள்!" 

  “அர்ஜுனா   என்ன  எங்கோ சிந்தனையாக இருக்கிறாய் . நான்  சொல்வது உனக்கு புரிந்ததா?''  என்றான் கிருஷ்ணன்.
''..............................''

''என்ன   அர்ஜுனா  மௌனமாக  இருக்கிறாய். பயமா  துரோணரிடம்?''

“ஒன்று மில்லை கிருஷ்ணா.அவரிடம்  கற்ற வித்தையெல்லாம்  அவர் மேலேயே  பிரயோகிக்கிறேன்”. 

“அதெல்லாம்  போதவே  போதாது  அர்ஜுனா.  இந்த  போரில்  துரோணரை வெல்ல  ஒரு உபாயம்  தான்  எனக்கு  தோன்றுகிறது.     இதற்கு  பீமன்  சரியானவன்.  இதோ, பார்  பீமா  இன்று  உனது முக்யமான  வேலை கௌரவ சேனையில்  இருக்கும்  ஒரு  யானையை  கொல்வது தான்.  முதலில் அதை முடி  பிறகு  நான்  அடுத்த கட்டத்தை தாண்டுவது எப்படி என்று  பார்ப்போம் "   என்றான் கிருஷ்ணன் 

பீஷ்மர்  பெரிய  பொறுப்பை தனது தலையில் சுமத்திவிட்டு  இதோ யுத்தகளத்தில்  பார்த்த்துக்  கொண்டிருக் கிறார்.  நான் துரியோதனன் சுடு  சொல்  பொறுக்கமுடியாமல் ப்ராணத்யாகம்  செய்ய  தயாராகிவிட்டேன்.  மடிந்தால்  என்  பிரதம சிஷ்யன்   அர்ஜுனன் காய் அம்பால்  மரணமடைய துடிக்கிறேன்.  அதற்கு முன் அவனை அவன் சகோதரர்களோடு,  கூட இருக்கும் கிருஷ்ணனோடு சேர்த்துக் கொல்லவும்  துணிந்துவிட்டேன். வேறு வழி இல்லை எனக்கு''    என்று  தனக்குள் பேசிக்கொண்டார்  துரோணர்.

குருக்ஷேத்ரத்தில்  யுத்தம்  ஆரம்பித்து விட்டது.  பாதி சேனை இருபுறமும் அழிந்தும் இன்னும் யுத்தம் முடியவில்லை.  மேலே சூரியன் தகிக்க ஆரம்பித்துவிட்டான்.  குதிரைகள் யானைகள்  படைவீரர்கள்,  சேனைத்தளபதிகள்  உயிரைத்  திரணமாக மதித்து  இருபுறமும் மோதுகிறார்கள்.    கௌரவ சேனையின் பலம் அதிகம்.  


துரோணர்  மின்னல்  வெட்டில்  அன்று  பாண்டவர் சேனையை,  வியூகங்களை உடைத்து அழிக்க ஆரம்பித்தார். அர்ஜுனன்  பாணங்களை  வெகு லாகவமாக எதிர்த்தார்.  

சரியான  நேரத்தில் பீமன்  அந்த  யானையைக்  கொன்றான்.  பாண்டவ சேனை  வெகு  உற்சாகமாக "அஸ்வத்தாமன்  மடிந்தான்"  என்று  சப்தமிட, சங்கங்களும்  பேரிகைகளும்  முழங்க  ஒரு  கணம்
திகைத்தார்  துரோணர்.  அஸ்வத்தாமன்,  அவர்  மகன்,  மகா வீரன், எப்படி இறந்தான் என்ற  அதிர்ச்சி அவருக்கு.  உண்மையா,  பொய்யா  என்று  தெரிந்து கொள்ள  ஒரே வழி  உண்மையையே  பேசும்
தர்மனையே கேட்போம் என

"யுதிஷ்டிரா, நீ சொல் என் மகன் அஸ்வத்தாமன் மடிந்தது உண்மையா? “

தர்மன்  சொல்லிக் கொடுத்தபடியே  பதில் சொன்னான்.  

"ஆம்,  அஸ்வத்தாமன்  இறந்தான்" ............        
" மனிதனல்ல, யானை" . இந்த  இரண்டாவது  வார்த்தை  துரோணர்  காதில்  கேட்காதவாறு  கண்ணனும்  மற்றவர்களும்  தத்தம் சங்க நாதங்களை எழுப்ப  யுத்தகளத்தின் பேரிரைச்சலில்  "அஸ்வத்தாமன்  இறந்தான்"  என்ற தர்மனின் வாக்கு  துரோணரை வீழ்த்தியது. அப்படியே  தேர்த் தட்டில் தனது   வில்லையும்  அம்பையும்  ஒரு கணம் வைத்து  கண்களை  மூடினார்  துரோணர். 

 இந்த கணத்துக்காகவே காத்திருந்த  த்ருஷ்டத்யும்னனிடம்   "உடனே  த்ரோணரைக் கொல் ''  என்ற  கிருஷ்ணன்  கட்டளையை  துரோணரை கொல்வதற்காகவே  காத்து கிடந்த  துருபதன் மகன்  நிறை வேற்றி  துரோணரின்  சகாப்தம்  முடிந்தது.   உடைவாளால்  துரோணர் சிரத்தை கொய்து  கௌரவ சென்னையில் துரியோதனன் இருக்குமிடத்தில் வீசி எறிந்தான். 

யுத்தத்தில்  ஒரு  முக்ய  திருப்பம்  கிருஷ்ணனால் பாண்டவருக்கு  இதன் மூலம்  கிடைத்தது

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...