Saturday, July 4, 2020

THEVITTADHA VITTALA

தெவிட்டாத விட்டலா  J K SIVAN

லக்ஷ்மி கடாக்ஷம்

பாண்டுரங்கன் பக்தர்களில் எல்லோர்  மனதையும் கவர்ந்தவர் ஒருவர் உண்டு என்றால் அது துக்காராம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.  மிகவும்  எளியவர். பணத்தாசை இல்லாதவர். குடும்பம் வறுமையில் தத்தளித்தபோதும் பணத்தை அவர் தேடவில்லை.  அவருக்கு கிடைத்த பணத்தை, பொருள்களை  யாரேனும்  ஏழைகள், பாண்டுரங்க பக்தர்களைக் கண்டால்  கொடுத்து விடும்  தாராளமனம் . அவர் மனது பூரா  பாண்டுரங்கன் மேல் பக்தி ஒன்றே  நிரம்பியிருந்தது. அவரது அபங்கங்கள்  கேட்க  இனிமையானவை. பக்தி ரசம் சொட்டுபவை.
வழக்கம் போல் ஒருநாள் பாண்டுரங்கன் ஆலயத்தில்  வெகுநேரம் இருந்து பஜனையில்  பங்கேற்று ரசித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார் துக்காராம்.  வழக்கத்துக்கு  மாறாக  அவர் மனைவி ஏதோ பூஜை செய்து கொண்டிருக் கிறாள்.
"இன்னிக்கு  வீட்டில்  என்ன விசேஷம்?  ஏதோ  பூஜை எல்லாம்  பண்றே?
"லக்ஷ்மி  கடாக்ஷம் வேணும் என்று ருக்மணிக்கு  லக்ஷ்மி பூஜை செய்யறேன் ''
"புரியல்லை,  எதுக்காக திடீர்னு இப்படி  ஒரு  பூஜை?
"நீங்க  கிருஷ்ணனை, பாண்டுரங்கனை  எப்பவும்  பாடுகிறீர்கள்,  ஆடுகிறீர்கள்.   அதுபோல தான் இதுவும்"
"பூஜை பண்றது  நல்லது தான். ஆனால்  காம்யார்த்தமா  எதையாவது கிடைக்கணுனு வேண்டிக்கறது  சரியில்லை. நமக்கு  எது தேவை என்று  விட்டலனுக்கு தெரியும்.   தானே  அதை  நமக்கு  கொடுத்து கொண்டு தானே  இருக்கான். நமது வாழ்க்கை அவ்வாறு தானே  ஓடிக்கொண்டிருக்கிறது?''
கொஞ்சநாள் கழித்து  வீட்டில்  துக்காராம் மனைவி ஜீஜாவுக்கு  எப்படியோ  கொஞ்சம்  பணம்  கிடைத்தது. புதிய  துணிமணிகள்  எல்லாம் தனக்கும்  குழந்தைகளுக்கும்  வாங்கினாள். அடகு வைத்திருந்த  நகைகளை மீட்டு  அணிந்து கொண்டிருந்தாள்.
அன்று வீட்டுக்கு சாப்பிட வந்த  துக்காராம் கண்ணில் இது பட்டது.    சாப்பிட  உட்காரும் போது தான்  கவனித்தார்.  ஜீஜா  குழந்தைகள்  எல்லாம்  புது  துணிமணிகளை  அணித்திருக் கிறார்களே.
''ஜீஜா.  ஏது இதெல்லாம்  எப்படி வந்தது ?"
"ருக்மணிக்கு  லக்ஷ்மி பூஜை பண்ணியதாலே  வீட்டிலே  இப்போ  கொஞ்சம்  சுபிக்ஷம்"
அவள்  உள்ளே  சென்று  அவருக்கு  உணவு கொண்டு  வருவதற்குள்  அவர் சாப்பிடாம லேயே  எழுந்து  வெளியே சென்று விட்டார்.
சரி  அந்த மனுஷனுக்கு  எதோ கோபம்.  தானே  திரும்பி வருவார்  என்று   ஜீஜா காத்திருந்தாள்.
ஒருநாள்,  இரண்டுநாள்,  மூன்றுநாள். துக்கா ராம்  வீட்டுக்கு  வரவே இல்லை.  வழக்கமாக  அவர் செல்லும்  பாண்டுரங்க  பக்தர்கள் நண்பர்கள் கடைத்தெரு எங்கு தேடியும்  "அவர் இங்கு வரவே இல்லையே"  என்ற  சேதி  தான்.  ஒருக்கால்  அடிக்கடி சொல்வாரே  பந்தர்பூர் போகவேண்டும் என்று, அங்கே போயிருக் கலாம் என்று தோன்றியதால் பந்தர்பூர் சென்று விசாரித்தாள். விவரம் கிடைக்கவில்லை.
விட்டலன் முன்  நின்று  ஜீஜா அழுது கொண்டு   " பாண்டுரங்கா, நீ தான்  எனக்கு   என் துக்கா ராமை  திரும்ப தரவேண்டும்" என்று  பிரார்த்தித்தாள். அவள்  மனத்தில் யாரோ உன் வீட்டுக்கு அருகே இருக்கும்  ஒரு  சிறு  குன்றில் சென்று பார் என்று சொல்வது போல் இருக்கவே  உடனே  தனது ஊரான  தேஹூவுக்கு  திரும்பிச் சென்று  ஊருக்கு கடைசியில் உள்ள ஒரு சிறு  குன்றில் சென்று பார்த்தபோது  இளைத்து வாடி  விட்டலன்  மேல் அபங்கங்கள் பாடிக்   கொண்டு துக்காராம் அமர்ந்திருப்பதை கண்டாள். வீட்டை விட்டு  கிளம்பியவர்  அன்ன ஆகாரமே மூன்று நாட்களாக  உட்கொள்ள வில்லை.
கண்ணை திறந்து பார்த்த  துக்காராம்  " ஜீஜா,  இங்கு எதற்கு  வந்தாய்?  நான்  இங்கு  சுகமாக  என் விட்டலன் மேல் அபங்கங்கள் பாடிக் கொண்டு  இருக்கிறேனே?"  என்றார்.
"நீங்கள்  இல்லாமல்  நானும்  குழந்தைகளும்  எப்படி வாழ்வது?"
"அம்மா,  நீ தான் லக்ஷ்மி பூஜை செய்து  குடும்பம்  நடக்க  தேவையான  பொருள் பண்டம்  எல்லாம் பெற்றுக் கொண்டு இருக்கும்போது  நான்  எதற்கு? தேவை இல்லையே"
"இல்லை,  நீங்கள்  தான்  எனக்கு  வேண்டும்"
"சரி, அப்படியே ஆகட்டும்,  தயவு செய்து  அந்த  நகை நட்டு  எல்லாம் கழற்றி ஏழைகளுக்கு  தானம் செய்து விடேன். பழையபடியே இருப்போம்"
அவ்வாறே செய்தாள் ஜீஜா.  அவரோடு  சேர்ந்து  தானும்  விட்டலன் ஸ்மரணையில்  ஆழ்ந்தாள்.
விட்டலன் புன்முறுவலுடன்  தன் ஆசைக்   குழந்தை க ளை  ரசித்தான் என்று  முடிக்கட் டுமா, ரக்ஷித்தான் என்று சொல்லட்டுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...