Wednesday, October 31, 2018

DIWALI GIFT



MY DIWALI GIFT - J.K. SIVAN

Swami Vivekananda, lived only just 39 years in this world. He was one of the disciples of Sri Ramakrishna Paramahamsa. Swami Vivekananda was the first to introduce Indian philosophies to the West, and made the world become aware of Hinduism as a major world religion.

I came across the 15 laws for a better living introduced by Swami Vivekananda and made it in simple sentences for all to easilly follow and offer this to you as MY DIWALI GIFT.

1. Love Is The Law Of Life: All love is expansion, all selfishness is contraction. Love is therefore the only law of life. He who loves alone is living; he who is selfish, is dying. Therefore, love for love's sake, because it is law of life, just as you breathe to live.

2. Your Outlook is what that matters. Our mental attitude makes the world we find. Our thoughts make things beautiful; same way sometimes our thoughts make things ugly. The whole world is therefore in our own minds. Learn to see things in the proper light.

3. Life is Beautiful: First, believe in this world. There is meaning behind everything. Everything in the world is good, is holy and beautiful. If you see something evil, interpret it to mean that you do not yet understand it in the right light. Throw the burden only on yourselves!

4. It's The Way You Feel: Feel like Krishna, you will be a Krishna. Feel like Christ and you will be a Christ; feel like Buddha and you will be a Buddha. It is feeling that is the life, the strength, the vitality--without which no amount of intellectual activity can reach God.

5. Set Yourself Free: The moment I have realized God sitting in the temple of every human body, the moment I stand in reverence before every human being and see God in him--that moment I am free from bondage, everything that binds disappears and I am free.

6. Don't Play The Blame Game: Dont condemn anyone. if you can stretch out a helping hand, do so. If you cannot, fold your hands, bless your brothers and let them go their own way.

7. Help Others: If money helps a man to do good to others, it is of some value; but if not, it is simply a mass of evil, and the sooner it is got rid of, the better.

8. Uphold Your Ideals: Our duty is to encourage every one in his struggle to live up to his own highest ideal, and strive at the same time to make the ideal as near as possible to the Truth.

9. Listen To Your Soul: You have to grow from the inside out. None can teach you, none can make you spiritual. There is no other teacher but your own soul.

10. Be Yourself: The greatest religion is to be true to your own nature. Have faith in yourselves!

11. Nothing Is Impossible: Never think there is anything impossible for the soul. It is the greatest heresy to think so. If there is sin, it is this only sin-- ''to say that you are weak, or others are weak''. REMEMBER NO ONE IS WEAK.

12. You Have The Power: All the powers in the universe are already ours. It is we who have put our hands before our eyes and cry that it is dark.

13. Learn Every Day: The goal of mankind is knowledge. .Knowledge is inherent in man. No knowledge comes from outside: it is all inside. What we say a man 'knows,' should, in strict psychological language, be what he 'discovers' or 'unveils;' what man 'learns' is really what he discovers by taking the cover off his own soul, which is a mine of infinite knowledge.

14. Be Truthful: Everything can be sacrificed for truth, but truth cannot and should NOT be sacrificed for anything.

15. Think Different: All differences in this world are of degree, and not of kind, because oneness is the secret of everything.



AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்  J.K. SIVAN 
மகா பாரதம் 

               விந்திய மலை காத்திருக்கிறது.
                                               
எங்கேயாவது நீண்ட பயணம் நடந்து செல்லும்போது உம்மணாமூஞ்சியுடன் போனால் கால்வலியோடு தலைவலியும் உடல் வலியும் சேர்ந்து விடும். சுகமாக பேசிக்கொண்டே செல்லும்போது நேரமும், தூரமும் தெரியாது. யுதிஷ்டிரனுக்கு லோமசர் கிடைத்தது அவன் செய்த பாக்யம். வழியெல்லாம் தீர்த்த யாத்திரை நடந்து சென்றபோது நேரமோ காலமோ தெரியவில்லை. புதிது புதிதாக இடங்களை மட்டுமா  பார்த்தான். நிறைய இதுவரை அறியாத விஷயங்களும் அல்லவா லோமசர் அவிழ்த்து விட்டார். லோமசரிடம்  நிறைய  விஷயங்கள்  கை வசம் இருந்ததால்  யுதிஷ்டிரன்  அவரைத் துளைத்து எடுத்து  விட்டான் .

(அவர் சொன்ன  சில விஷயங்களை நாமும் கேட்போம்.  நன்றியப்பா,  யுதிஷ்டிரா உனக்கு.  உன்னால் தான்  இவற்றை யெல்லாம் நாங்களும் அறிய முடிகிறது)


'' மகரிஷி,  நீங்கள் சொன்னீர்களே  விந்தியமலை அரசன் தான் உயர்ந்தவன் என்ற கர்வம் கொண்டவன் என்று. அப்புறம் அவன் என்ன செய்தான்?  எதற்காக  விந்திய மலைஅரசன்,  தான்  அதிகமாக உயர்ந்து  பூமியின்  நிலையை குலைய செய்தான்.  என்ன கோபம் அவனுக்கு? 'என்று கேட்டான் யுதிஷ்டிரன்.

''சொல்கிறேன் கேள்,   யுதிஷ்டிரா.  சூரியன்  நித்யம் மேரு, மற்றும் ஹிமகிரி, கைலாசம்  எல்லாவற்றுக்கும்  மேலே  உலகை சுற்றி  வருகிறான். இதை கவனித்த  விந்திய பர்வதன்    ''சூர்யா,  நீ  என்ன எப்போதும்  மேரு, ஹிமவான்  ஆகியோரை மட்டும் பிரதட்சிணம்  வந்து கொண்டிருக்கிறாய். நான் இருப்பது உனக்கு  தெரியவில்லையா. . இனி என்னையும் சுற்றி வா'' என்றான்.

''விந்தியா,   என்ன பேசுகிறாய் நீ?  நானாக  எந்த  பர்வதத்தையும்  சுற்றி வரவில்லை.  என்னையும் உன்னையும் படைத்தவன்  எனது நித்ய  பிரதட்சிணத்திற்கு எந்த  வழி அமைத்திருக்கிறானோ அந்த வழியில் தான்   நான்  பிரயாணம்  செய்தாக வேண்டும். இதில் எனது விருப்பம் எதுவுமில்லை . புரிந்துகொள்.'' என்றான் சூரியன்.

''அப்படியா, இப்போது என்ன செய்கிறேன்  பார்''  என்று  விந்திய பர்வதம்  தனது உயரத்தை  அதிகப்படுத்திக்கொண்டது.  சூரியனும் சந்திரனும்  அதைக் கடந்து மேற்கொண்டு நகரமுடியாதபடி வழியை மறைத்து அடைத்தது. தேவர்கள்  திகைத்தார்கள்.  யோசித்தார்கள்.  சூரியனின் போக்கை  தடை செயகிறானே விந்திய பர்வதன்.  எப்படி  இதை நிவர்த்தி செய்வது?  அகஸ்தியர் நினைவுக்கு வந்தார்.   அவரது தவ வலிமை தான் எல்லோருக்குமே தெரியுமே.  அவரிடம் சென்று  விந்தியனின்  கோபச் செயலைக்  கூறி  சூரிய சந்திரர்களின் அன்றாட பிரயாணம்  தங்கு  தடை இன்றி நடக்க  வேண்டினார்கள். அகஸ்தியர்  விந்தியனிடம் சென்றார். அவரை வணங்கி  விந்தியன் உபச்சாரம் செய்தான்.

''விந்திய பர்வத ராஜனே,  எனக்கு  தெற்கே  போக வழி விடுகிறாயா. நான்  திரும்பி வரும் வரை நீ  அப்படியே உயரம் குறைந்தே   இரு.  உயர வேண்டாம்.  நான் வந்த பிறகு,   நீ  மீண்டும்  உயர்ந்து கொள். செய்வாயா'?  என்று அகஸ்தியர் கேட்க  விந்திய பர்வதம்  'சரி'  என்று தலையாட்டிவிட்டு  பாவம்  இன்று காலை  நான் இதை எழுதும் வரை அகஸ்தியர் திரும்பி வரவில்லை. விந்தியபர்வதமும்  காத்துக்கொண்டிருக்கிறது. 

 சூரியனும்  சந்திரனும்  வழக்கம்போல்   தங்கள் பாதையில் நித்ய  பிரயாணம் செய்கிறார்கள்.  தமிழில்  ஒரு பாட்டு  கேட்டிருக்கிறேன்.'' வடகோடு உயர்ந்தென்ன  தென்கோடு சாய்ந்தென்ன'' என்று  அது இதைத்  தான் குறிப்பிடுகிறது. வடவரையை மத்தாக்கி  என்ற அற்புத பாடலில் வரும் வடவரை விந்திய பர்வதம்.
மகரிஷி  அகஸ்தியர்  தெற்கே  நின்றுவிட்டதால் அவரது  எடை  விந்தியனை  மேலே  எழச் செய்ய முடியவில்லை என்பது இன்னொரு உண்மையாக இருக்கலாம்  அல்லவா? என்றான் யுதிஷ்டிரன்.

''ஆமாம்.''

''மகரிஷி கேட்க மறந்துவிட்டேனே.  தேவர்கள்  இந்திரன் தலைமையில் பிரம்மா சொன்னபடி  அகஸ்தியரை சென்று  வேண்டி, எப்படியாவது  கடலை வற்றச் செய்யவேண்டும். அப்போது தான் அதில்  ஒளிந்திருந்த ராக்ஷசர்கள் அழிவார்கள்  என்று  விண்ணப்பித்தார்கள்  இல்லையா ?''

''ஆம்  கேட்டார்களே''
''அகஸ்தியர்  என்ன சொன்னார்?''
''இந்திரா, கவலைப் படாதே,  நான் கடல் நீரை அப்படியே  உறிஞ்சிவிடுகிறேன்'' என்ற அகஸ்தியர்  கடலை நோக்கி புறப்பட்டார்.வருணனின் புத்திரன் அல்லவா.  இறைவனை மனதில் வேண்டி, இதனால்  நல்லதே ஏற்படும்,  சகல தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், யோகிகளும் துன்பமின்றி  இருப்பார்கள் என்பதால்  என்னால்  இந்த  கடலை வற்றச் செய்ய சக்தி கிடைக்கட்டும் என்று  கண்ணை மூடி  தியானித்து   ஆ வென  வாய் திறந்தார்.   எதிரே இருந்த கடல் நீர் அத்தனையும்  அவரது வாயில் புகுந்தது. வற்றிய கடலில் ஒளிந்திருந்த காலகேய  ராக்ஷசர்கள் ஓட ஒளிய  இடமின்றி  இந்த்ராதி தேவர்களிடம் சிக்கி  முழுதுமாக அழிந்தனர்.

உலகில் கடல் இன்றி  எப்படி உயிர் வாழ்வது?  நீங்கள்  தான்  மீண்டும்  கடலை நிரப்ப வேண்டும் என்று  தேவர்கள் வேண்ட ''ஜீரணமாகிவிட்டதை  மீண்டும்  கொண்டுவரவேண்டுமானால்  வாதாபியும்  வந்து விடுவான்  பரவா இல்லையா  '' என்று சிரித்தார்  அகஸ்தியர்.

எல்லோரும்  பிரம்மாவை  வேண்ட  அவர்  மீண்டும் கடல்  நிரம்ப வேண்டுமானால்,  ஆகாச கங்கை தான்  அருள் புரிய வேண்டும்.  அதற்கு பகீரதன் வருவான். காத்திருங்கள்'' என்றார் '
நாமும் காத்திருப்போம்.

SWAMIJI'S TIME

SWAMIJI'S TIME: J.K. SIVAN

BE LIKE THE PEARL OYSTER

When one begins to concentrate, the dropping of a pin will seem like a thunderbolt going through the brain. As the organs get finer, the perceptions get finer. These are the stages through which we have to pass, and all those who persevere will succeed. Give up all argumentation and other distractions. Is there anything in dry intellectual jargon? It only throws the mind off its balance and disturbs it. Things of subtler planes have to be realised. Will talking do that? So give up all vain talk. Read only those books which have been written by persons who have had realisation.



Be like the pearl oyster. There is a pretty Indian fable to the effect that if it rains when the star Svâti is in the ascendant, and a drop of rain falls into an oyster, that drop becomes a pearl. The oysters know this, so they come to the surface when that star shines, and wait to catch the precious raindrop. When a drop falls into them, quickly the oysters close their shells and dive down to the bottom of the sea, there to patiently develop the drop into the pearl. We should be like that. First hear, then understand, and then, leaving all distractions, shut your minds to outside influences, and devote yourselves to developing the truth within you. There is the danger of frittering away your energies by taking up an idea only for its novelty, and then giving it up for another that is newer. Take one thing up and do it, and see the end of it, and before you have seen the end, do not give it up. He who can become mad with an idea, he alone sees light. Those that only take a nibble here and a nibble there will never attain anything. They may titillate their nerves for a moment, but there it will end. They will be slaves in the hands of nature, and will never get beyond the senses.

DEEPAVALI STORY 1



  கங்கா ஸ்னானம்   J.K. SIVAN 

இன்னும்  ஆறுநாளில்   டமால் டுமீல்  எங்கும் காதை கிழிக்கும் சப்தம் கேட்கப்போகிறதோ?  அல்லது  உச்ச கோர்ட்டை  விட  சக்தி வாய்ந்த வருணதேவன்  எண்ணத்தில் மண்ணை போடுவானோ,  இல்லை   மழையைத்  தெளிப்பானோ?   பட்டாசு கிடக்கட்டும். வெடிக்காவிட்டால் வெத்து வேட்டு . நமக்கு தெரிந்த  சில மனிதர்கள் போல.

ஆனால்  தீபாவளிக்கு கங்கையோடு நிறைய பரிச்சயம் உண்டு.  தீபாவளி  அன்றைக்கு ஒரு நாள் மட்டும் எல்லா வெந்நீரிலும்  கூட  அருணோதயதிலிருந்து ஸூர்யோதயம் வரை ஒரு முஹூர்த்தம் – அதாவது இரண்டு நாழிகை – கங்கை இருக்கிறாள். 

தீபாவளி அன்று  ''என்ன சார்  கங்கா ஸ்னானம் ஆயிற்றா?''  என்று கார்பொரேஷன் குழாயில் குளித்தவனை கேட்டாலும் அது சரி தான். பைத்தியக்காரத்தனம் அல்ல.

 தீபாவளியன்று முதலில் நாம் அருணோதயத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு கங்கா ஸ்மரணத்தோடு வெந்நீர் ஸ்நானம் பண்ண வேண்டும். அப்புறம் ஸூர்யோதயமானபின், ஆனால் ஆறு நாழிகைக்குள், பச்சை ஜலத்தில் இன்னொரு ஸ்நானம் செய்ய வேண்டும். 

இந்த ஸ்நானத்தின் போது துலா காவேரியை ஸ்மரித்துக்கொண்டு பண்ணவேண்டும். முதல் ஸ்நானத்தில் நரகாஸுரன், பூமாதேவி, ஸத்யபாமா, கிருஷ்ணர் எல்லார் நினைவும் வரும். இரண்டாம் ஸ்நானத்தில் பரமேச்வரன் நினைவும் வந்துவிடும்.  

என் அம்மா எங்களை உட்காரவைத்து  தொடையில் சுடச்சுட மிளகாய் பழம் போட்டு  காய்ச்சிய நல்லெண்ணையை  ''அஸ்வத்தாமா, பலி, வியாச.....  என்று  ஏழு சிரஞ்சீவிகளை பேரை சொல்லி நாங்களும் அப்படி சிரஞ்சீவியாக இருக்கவேண்டும் என்று ஸ்லோகம் சொல்லி  ஏழு புள்ளி வைத்து பிறகு நெற்றி உச்சித் தலையில் தேய்ப்பாள் . பின்னால் கொல்லைப்புறத்தில் விறகு மூட்டி மண் அடுப்பு பெரியதாக இருக்கும் அதன் மூன்று முண்டுகளில்  அலுமினியம் தவளை ஒன்று வாயைத் திறந்து நிறைய தண்ணீர் குடித்து பாதிக்கு மேல் கொதித்துக் கொண்டு இருக்கும். பக்கத்தில் ஒரு  துருப்பிடிக்காத  கனமான வாளி . அதில்   கிணற்று நீர்  பாதி ரொம்பி இருக்கும். சுடசுட வென்னீரை  பித்தளை சொம்பினால்  மொண்டு  பக்கெட்டில்  விளாவி, ஒவ்வொருத்தருக்கும்  ஸ்நானம். துண்டை வைத்துக்கொண்டு  அப்பா காத்திருப்பார். எல்லோர் தலையும் தண்ணீரில்லாமல் துடைத்து உள்ளே அழைத்துக் கொண்டு போவார். சுவாமி ரூமில்  பலகையில் புது வஸ்திரங்கள். ஸ்கூலுக்கு அந்த வருஷம் போட்டுக்கொண்டு போக புது காக்கி நிஜார், கட்டம் போட்ட அரைக்கை சட்டை. மூன்று பேருக்கும் ஒரே அளவு. பெரியண்ணா சைஸ். அப்போது தான் நாங்கள் வளர்ந்தால் புதிதாக தைக்கவேண்டாம்.  அவனுக்கு சரியாக இருக்கும் சட்டை எங்களுக்கு  தொள  தொளவென்று  ஜிப்பா போல் இருக்கும். 

தீபாவளி அன்று இப்படி  இப்படி கங்கா ஸ்நானம் பண்ணியவர்களுக்கு நரக பயமும், அபமிருத்யுவும் (அகால மரணம், கோர மரணம்) ரோகங்களும் ஏற்படாமலிருக்க வேண்டும் என்று கூடுதலாக நம்மெல்லோருக்காகவும் வரம் வாங்கித் தந்தாவள் பூமாதேவி. நரகாசூர ( பூமாதேவி மகன் என்பதால் பௌமாசுரன்)னுக்கு மட்டுமில்லை, நம் எல்லோருக்குமே தாய் .Mother Earth.  பசு, பூமி, வேதம் மூன்றுமே  அனைவருக்கும் தாய். 

பூமாதேவியின் மகன் பௌமாசுரன். தவம் செய்து வரம் பெற்றான். என்ன வரம். தனது தாயைத்தவிர  எவராலும் அவனைக் கொல்ல  முடியாது. அவனது அக்கிரமங்கள் அதிகமாகி தேவர்கள் பூமியில் அனைவரின் வேண்டுதலுக்கு இசைந்து கிருஷ்ணன் சத்யபாமா (பூமா தேவியின் அவதாரம்) உதவியோடு அந்த அசுரனை கொன்ற நாள் தீபாவளி, நரகாசுரன் என்றும் அவனுக்கு பெயர். அவன் மாண்ட நாள் நரக சதுர்த்தசியை  பூமியில் அனைவரும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும். அன்று எந்த நீரில் குளித்தாலும் அது கங்கை நீர் என்று நமக்கு அருள் செய்தவன் அந்த அசுரன்.   அதனால் தான் குளிக்காதவனை  தீவுளிக்கு  தீவுளி குளிப்பவன்  என்கிறோம். 

கங்கையின்  சகோதரன் கீதை,  கங்கைக்கும் காவேரிக்கும் சம்பந்தம் போன்ற ருசிகர  விஷயங்களை தொடர்ந்து சொல்கிறேன்.


ORU ARPUDHA GNANI



ஒரு  அற்புத ஞானி   J.K. SIVAN 

ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் 

        ''சீக்கிரமே  ஸ்வாஹா ஆயிடுமே!''   

நம்மிடம்  ஒரு  ஆச்சர்யமான குணம்.  பலபேரிடம் இருப்பது தான்.   நமக்கு ஏதாவது எதிராளி சொல்வது புரியவில்லை என்றால்  ''ஏதோ உளறுகிறார்,  பேத்தல்''  என்று அதற்கு  உடனேயே அந்த கணத்திலேயே  ஒரு சர்டிபிகேட் கொடுப்பது.   நம் அளவிலேயே  இப்படி ஒரு நிலை என்றால் மஹா புருஷர்கள்  ப்ரம்ம ஞானிகள் சுருக்கமாக ஏதாவது சொன்னால் புரியவா போகிறது. பலபேர்  இப்படித்தான்   சேஷாத்திரி ஸ்வாமிகள் பேசுவதை புரிந்து கொண்டார்கள்.

இன்று சேஷாத்திரி ஸ்வாமிகள் அனுபவங்களை பற்றி எழுதும்போது முதலில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தான் சொல்ல வேண்டும் என்று எனக்கு  விதித்திருக்கிறதோ என்னவோ? அதிலேயே ஆரம்பிக்கிறேன்.

அப்பாவு செட்டியார் புதுப்பாளையைத்தைச்சேர்ந்தவர்.  அவருக்கு வெகுநாளாக ஒரு  கனவு.  எப்படியாவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரருக்கு ஒரு தேர்  செய்து சமர்ப்பிக்கவேண்டும் என்று. எப்படியோ ஒரு தேர் கட்டுவதற்கு தீர்மானித்து  கட்டி முடித்தாகிவிட்டதே.  வெள்ளோட்டம் விட்டு பார்க்கவேண்டாமா?  செட்டியார் சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தர்.   ஆகவே  திருவண்ணாமலை சென்றார்.  சேஷாத்திரி  ஸ்வாமிகளை  எங்கோ தேடித் பிடித்து அவரிடம் தான் தயார் செய்துவைத்த தேர் பற்றி சொல்லவேண்டும். அவரது ஆசியைப்  பெற வேண்டும் என்று  நண்பர்களோடு சென்றவர்   ஸ்வாமிகளை  கண்டுபிடித்து வணங்கினார். 

''ஸ்வாமிகள்  ஒரு நல்ல நாள் பார்த்து என்று புதிதாக கட்டிய  தேரை வெள்ளோட்டம் விடலாம் என்று அருள் புரியவேண்டும்''  என்று  கேட்க எண்ணம்.  ஆனால் எப்படிக் கேட்பது ஸ்வாமிகளை என்று பயம்.  வார்த்தை வெளியே வரவில்லை. 

 செட்டியார்  விஷயம் சொல்லும் முன்பாகவே  ஸ்வாமிகள் அவரிடம் என்னவோ தானாகவே சொல்ல ஆரம்பித்தார்.  ''அடே ,துக்கிரி  அல்பாயுசு. சீக்கிரமே ஸ்வாஹா  ஆயுடுமே என்ன பண்ணுவே?'' லட்சுமி சாபம்டா. லட்சுமி சாபம்.''     ஸ்வாமிகள் என்ன சொல்கிறார், என்ன இது, ஏதோ சாபம் கீபம் என்கிறார். எதற்கு  ஏன்?  ஒன்றும் புரியாமல் செட்டியார் சிலை போல் நிற்க  ஸ்வாமிகள் வழக்கம்போல  அங்கிருந்து  பறந்துவிட்டார். 

செட்டியாருக்கு இடி விழுந்தால் போல் ஆகிவிட்டது.   தான்  புதுத்  தேர் கட்டினது பற்றியோ, வெள்ளோட்டம் என்று விடலாம் என்று நாள் குறித்து தரவோ இன்னும் ஒன்றுமே  சொல்ல வில்லையே.  ஏதோ  லட்சுமி சாபம் என்று என்னவோ சொல்லிவிட்டு போய்விட்டார்... என்ன செய்வது.  மேற்கொண்டு ஒரு  வேலையும் செய்ய வழியில்லையே,  ஆரம்பமே இப்படியா?  

செட்டியார் உடைந்து போனார்.   தேர் எங்கு கட்டி நின்றதோ அங்கேயே  இருக்க,  மூன்று வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் பலத்த மழை, இடி,   மின்னல் தாக்கியது.  வானம் பொத்தலாகி விட்டது..  அன்றிரவு  கட்டிய புது தேர் மின்னல் தாக்கி பற்றி எரிந்துவிட்டது. வெறும்  கரியும் சாம்பலும்  தான் கிடந்தது அந்த இடத்தில்.

மறுநாள் காலை எல்லோரும் வருத்தத்தோடு செட்டியாருடன் அங்கே நிற்கும்போது  சொல்லி வைத்தாற்போல் அந்த இடத்தில் ஸ்வாமிகள் வந்து விட்டார். 

அவரது பக்தர்களில் ஒருவரான  சுப்புலக்ஷ்மி அம்மாள் மற்றும்  சில பெண்களைக்  கை தட்டி அழைத்து  ''பார்  எரியறது .தேர். லட்சுமி சாபம்'' என்று சொன்னார். என்ன விவரம், என்ன லட்சுமி சாபம் என்பது இன்றுவரை எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அனால் ஸ்வாமிகள் சொன்னது போல் ''சீக்கிரமே  ஸ்வாஹா  ஆகிவிட்டதே.  அக்னியில் ஹோமத்தில் எதை போட்டாலும் ஸ்வாஹா  என்று தானே சொல்கிறோம்.  தேர் அக்னியில் சாம்பலாக போவது எப்படி தேரைப் பற்றி சொல்வதற்கு முன்னாலேயே  ஸ்வாமிகளுக்கு தெரிய வந்தது?''
இவரை அற்புத ஞானி என்று சொல்லாமல் வேறு எந்தப் பெயரில் வணங்க முடியும்?

Monday, October 29, 2018

KAARADAIYAN NONBU



 காராமணி சுண்டலுக்கு மட்டும் அல்ல.
                      J.K. SIVAN 

காராமணி  என்று ஏன் அதற்கு பெயர் என்று யோசித்து விடை தெரியாமலேயே  28.10.18 அன்று கிருஷ்ண பிரசாதமாக  காராமணி சுண்டல் கிடைத்தது. வெள்ளையாக அழகாக ருசியாகவும் இருந்தது.  அன்று இரவு கனவில் காராமணி வந்தது.  எப்போதோ   இனிப்பும் உப்பும் சேர்ந்த அடையாகி, தெய்வத்துக்கு நிவேதனமாகி என் அம்மா  தந்த காராமணி அடை ஞாபகம் வந்தது. அதோடு  சம்பந்தப்பட்ட  காரடையான் நோன்பும் விரதமும் நினைவுக்கு வந்தது. என் அம்மா ஒருநாள் காராமணி அடை தட்டி  காரடையான் நோன்பு பண்ணிக்கொண்டிருந்தபோது அவளுக்கு திடீர் என்று ஏதோ ஒரு பயம் வந்தது. என் அப்பாவுக்கு ஏதோ பேராபத்து நிகழ்வது போல்.  கதறி விட்டாள் . அம்பாளை வணங்கினாள் . அன்று இரவு தான் விஷயம் தெரிந்தது.  என் அப்பா ஸ்ரீ  ஜே. கிருஷ்ணய்யருக்கு திடீர் மார் வலி. நுங்கம் பக்கம் கார்பொரேஷன் பள்ளிக்கூடத்திலிருந்து டாக்டர் கோபாலமேனன் வீட்டுக்கு  அழைத்து போனார்கள். கார் டாக்ஸி எதுவுமில்லாத காலம். குதிரை வண்டியில்.  டாக்டர் அவருக்கு முதல் உதவி செய்தார் ஏதோ மருந்து கொடுத்தார். அதற்கு பிறகு  85-86 வயது வரை வாழ்ந்தார்.  எப்படி  எங்கோ கோடம்பாக்கம், சூளைமேட்டில் இருந்த அம்மாவுக்கு  அப்பாவின் உடல் ஆபத்து தெரிந்தது. அவளும் நானும் நிச்சயம் அவள் மாங்கல்ய பலத்தால் தான் அய்யர் பிழைத்ததாக  நம்பினோம். அசையாத நம்பிக்கை தான் பக்தி. இவ்வித  பக்தி நிச்சயம் பலன் தரும். எங்கள் குடும்பத்தில் இதுவே ஒரு உதாரணம். 

இந்த காரடையான்  நோன்பின் தாத்பரியம் மாங்கல்ய பலம். தீர்க்க சுமங்கலியாகத் திகழவேண்டும் என்பது திருமணமான எல்லா பெண்களுக்கும் உள்ள நியாயமான ஆசை. ''தீர்க்க சுமங்கலி பவ:''  இது தானே  பெரியோர்கள் ஆசீர்வாதம். அந்த பாக்கியத்தை  பெறவே  பெண்கள் மேற்கொள்ளும்  ஸ்பெஷல் விரதம் இது .

 கோவில் என்றால் ஒரு ஸ்தல புராணம் இருக்கும்.  நோன்பு பண்டிகை என்றால் ஒரு ராக்ஷஸன் கதை இருக்கும். இந்த விரதத்துக்கு பின்னால் ஒரு அற்புதமான கதை.  அதை  நான் மஹா பாரதம் எழுதும்போது படித்தேன். சாவித்ரி சத்யவான் சரித்ரம்  விவரமாக எழுதினேன். அது இருக்கட்டும். இப்போது அதை சுருக்கமாக சொல்கிறேன்.

அஸ்வபதி என்கிற ராஜாவின் பெண், சாவித்ரி.  தனக்கு  ஏற்ற கணவனைத் தேட முயற்சி செய்து  அவள் தந்தை  அஸ்வபதி கடைசியில்  ஒரு சுயம்வரம் நடத்தினபோது   வந்த எந்த ராஜகுமாரனையும், ராஜாவையும் சாவித்திரிக்கு பிடிக்கவில்லை. ''இவள்  நமக்கு  எட்டாக்கனி''  என்று அந்த ராஜாக்களும் கொண்டு  வந்த பையோடு ஊர் திரும்பினார்கள். 

''இது என்னடா வம்பு. எவனையும் என் பெண்ணுக்கு பிடிக்கவில்லையே என்று அஸ்வபதிக்கு  பெரிய வருத்தம்.  தன் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை யாராக இருப்பான்?.   கவலை அவர் மனதை அரித்தது.  யாருமே சரிப்பட்டு வராத நிலையில், சாவித்ரி தனக்கேற்ற மணாளனைத் தானே தேடிக்கொள்ளப் புறப்பட்டாள். அவளுடைய உள்ளுணர்வு அவளை வழி நடத்தியது. அதன்படி அவள் அந்த ராஜ்யத்தின் காட்டுப் பகுதிக்குச் சென்றாள். அங்கே சத்யவான் என்ற ஒரு மரம் வெட்டியைப் பார்க்கிறாள்.  அவனைப் பார்த்த கணத்திலேயே அவன்தான் தன் கணவன் என்று சாவித்ரி தீர்மானித்துவிட்டாள். அந்த சத்தியவான் சால்வ நாட்டு மன்னனுடைய மகன். எதிரிகள் நாட்டைக் கைப்பற்றியதால் மன்னன், தன் மனைவி, மகன் சத்யவானோடு காட்டுக்குத் தப்பி ஓடிவந்து இங்கேயே வாழ்ந்துகொண்டிருந்தான். அரண்மனைக்குத் திரும்பிய மகள், தான் சத்யவானைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியபோது அஸ்வபதி  முதலில்  மிகவும் வேதனைப்பட்டாலும்  அவன் விதிவசத்தால் இப்போது மரம் வெட்டியே  தவிர  ஒரு  ராஜ பரம்பரையைச் சேர்ந்தவன் என்ற உண்மை தெரிந்து  மன நிம்மதி  அடைந்தார்.  சத்தியவானுக்கே சாவித்ரியை திருமணம் முடிக்க முன்வந்தான். ஆனால், இந்தக் கல்யாணத்திற்கு ஓர் இடையூறு வந்தது. அதாவது, சத்யவான் இன்னும் ஒரு வருடம்தான் உயிரோடு இருப்பான் என்று திருமணம் பற்றிப் பேசும்போது அரச குடும்பத்தின் ஆஸ்தான குருவான ஒரு முனிவர் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.  எனக்கு தெரிந்து  நிறைய கல்யாணங்கள், நல்ல இடத்து சம்பந்தங்கள் சில ஜோசியர்களால் நின்று போகிறது. தடை படுகிறது. ஜோசியர் தப்பா, ஜோசியம் தப்பா என்பது ப்ரம்ம ரகசியம்.

அஸ்வதியின்  ஜோசியர் அதுவரை தீர்க்கதரிசனமாக  சொன்னவை எல்லாமே  பலித்து விட்டதால்  அனைவருக்கும், முக்கியமாக மன்னனுக்குக் கலக்கமாக இருந்தது. ஆனாலும் சாவித்ரி தன் முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. அஸ்வபதியும் வேறு வழியில்லாமல் அந்தத் திருமணத்துக்கு சம்மதித்தார். திருமணம் நடந்தேறியது. சம்பிரதாயப்படி மனைவி கணவனுடன்தானே தங்கவேண்டும்? ஆகவே, சாவித்ரி, மரம் வெட்டும் கணவனுடன் காட்டுப்பகுதிக்கே போய் வசித்தாள்.

அந்தக் காட்டுப் பகுதியில் அரசகுமாரிக்கு எந்த சௌகரியம்  கிடைக்கும்?  அதோடு அவள் கணவனுக்கு ஆயுள் இன்னும் ஒரு வருடம்தான் என்ற சங்கடமும் பிற அனைவருக்கும் நாளுக்கு நாள் உறுத்திக்கொண்டே இருந்தது. ஆனால், சாவித்ரியோ தனக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்பதில் மிகவும் தீர்மானமாக இருந்தாள். எதிர்பார்த்தபடியே ஒரு வருடம் முடிந்ததும் சத்யவான் உயிரைப் பறிக்க யமன் வந்தான்.

பொதுவாக யார் கண்ணிலும் படாமல் வருவதுதான்  யமனின் பழக்கம். அவனுக்கு தெரியும். யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் அவன் முடிவு என்ன ஆகும்?  ஆனால், அவன் வருவது சாவித்ரிக்குத் தெரிந்துவிட்டது. யமன் தன் கணவரை தன்னிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்கத்தான் வந்திருக்கிறான் என்பது புரிந்ததும் அவள் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள். யமன் சத்யவானுடைய உயிரை எடுத்துக்கொண்டு வானுலகம் போக ஆரம்பித்தபோது, சாவித்ரியும் கூடவே ஓடினாள்.

யமன் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் சாவித்ரி  விடாப்பிடியாக தொடர்ந்தாள். சரி, இவளுக்கு ஏதாவது வரம் கொடுத்து இப்போதைக்கு இவளிடமிருந்து தப்பித்துவிடலாம் என்று யமன் கருதினான். 

 ‘பெண்ணே  என் பின்னே வராதே.  இந்தா நீ கேட்கும் வரத்தைத் தருகிறேன். ஆனால், உன் கணவனுடைய உயிரை மட்டும் திரும்பக் கேட்காதே’ என்றான். 

‘சரி, யமதர்ம ராஜரே,  எனக்கு ஒரே ஒரு ஆசைதான்''.

''அது என்ன? சீக்கிரம் சொல் பெண்ணே. நிறைய பேர் எனக்காக காத்திருக்கிறார்கள் நான் போகவேண்டும்'' என்றான் யமன்.

''என் குழந்தையை என் தந்தையார் தன் மடியில் போட்டுக் கொஞ்சுவதை நான் பார்க்கவேண்டும்,’ என்று கேட்டாள். நல்லவேளை, தன் கடமையில் இவள் குறுக்கே வரவில்லை என்று ‘நிம்மதி’ கொண்ட யமன் அந்த வரத்தைத் தந்தான். அவனுக்கு எத்தனையோ இடம் போகவேண்டும். நிறைய பேரை அன்று பிடிக்கவேண்டும். ஆகவே  விட்டால் போதும் என்று அவள் கேட்டதற்கு சரி என்று சொல்லி விட்டான். யோசிக்க நேரமே இல்லை அவனுக்கு. 

 ‘அப்படியென்றால் என் கணவனை எனக்குத் திருப்பித் தா’''

 ''என்ன உளறுகிறாய்?''  திடுக்கிட்டான் யமன். கடமை உணர்விலேயே தான் ஒன்றி இருந்துவிட்டதில் அவள் கோரிய வரத்தின் பின்விளைவை அவன் எதிர்பார்க்கவில்லை.

அவன் கொடுத்த வரம் பலிக்கவேண்டுமென்றால், அவளுக்குக் குழந்தை பிறக்கவேண்டும்; அப்படி குழந்தை பிறக்க, அவளுடைய கணவன் வேண்டுமே! வேறு வழியில்லாமல் சத்யவானைத் திரும்பக் கொடுத்தான் யமன். சாவித்ரிக்கு இப்படி ஒரு தைரியமும், யமனையே பின்பற்றிப் போகக்கூடிய அருளும் கிடைத்ததற்கு அவள் மேற்கொண்டிருந்த காரடையான் நோன்புதான் காரணம்.

ஆமாம், சத்யவானின் ஆயுள் பற்றிச் சொன்ன அரச குருவிடமே போய், இந்த விதியை மாற்ற இயலாதா என்று மனம் உருகி வேண்டிக் கேட்டாள். உடனே முனிவர் அவளுக்கு காரடையான் நோன்பு பற்றி விவரம் சொல்லி, அதை ஒரு வருடம் அவள் தீவிரமாகக் கடைபிடித்து வந்தாளானால் ஒருவேளை அந்த விதி மாறலாம் என்று சொல்லி ஆசிர்வதித்தார். அந்த விரதத்தை சாவித்ரி முறையாகக் கடைபிடித்துத் தன் மாங்கல்ய பலத்தைக் காப்பாற்றிக்கொண்டாள்.

இந்தப் புராண சம்பவத்திலிருந்துதான் தன் கணவனின் ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் எந்தக் குறையும் வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டு சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை இந்த வருஷ  காரடையான் நோன்பு வரை  மேற்கொள்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற கணவன்மார்களும் நீண்டநாள் சேர்ந்து  வாழ்ந்து நல்லபடியாகக் குடும்பத்தை நடத்திச் செல்வார்கள் என்பது ஐதீகம். இந்த விரதத்தை காமாட்சி விரதம் என்றும் சொல்வார்கள். ஏனென்றால் அம்பிகை காமாட்சியும் இப்படி ஒரு விரதம் மேற்கொண்டு சிவபெருமானை வழிபட்டிருக்கிறாள்.

காஞ்சித் தலத்தில், கம்பா நதிக்கரையில் மணலால் ஆன சிவலிங்கம் ஒன்றைப் பிடித்து வைத்து  காமாட்சி தியானத்தில் ஆழ்ந்தாள். கூடவே, நதி பெருக்கெடுத்துத் தான் பிடித்துவைத்திருக்கும் லிங்கத்தை அழித்துவிடுமோ என்ற அச்சமும் தோன்றியது. உடனே, காரடையான் நோன்பை மேற்கொண்டாள். அதாவது தெய்வமே மனித ரூபத்தில் இப்படி விரதம் மேற்கொண்டு மனிதர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது!

அவ்வாறு காமாட்சி அம்மன் மேற்கொண்ட விரத மகிமையால் சிவலிங்கம் காப்பாற்றப் பட்டது. ஆமாம், நதி வெள்ளமாய்ப் பெருகி வந்தபோதும், சிவலிங்கத்தை நெருங்காமல் சென்றுவிட்டது. விரதத்தை முடித்த அவள் முன்னால் சிவபெருமான் தோன்றி அவளைத் திருமணம் செய்துகொண்டார். இதுதான் காமாட்சி விரதம்.

சரி, இந்த விரதத்தை எப்படி மேற்கொள்வது?

காரடையான் நோன்பு அன்று சுமங்கலிப் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, நெற்றியில் குங்குமத் திலகம் இட்டுக்கொள்ளுங்கள். பிறகு பூஜையறையில், தாம் மேற்கொள்ளும் விரதம் நல்லபடியாக நடந்தேறவேண்டுமென விநாயகரை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒரு சொம்பை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்துகொண்டு, அதனுள் நல்ல நீரை விட்டு நிரப்பிக்கொள்ளுங்கள்.

ஒரு தேங்காயை எடுத்து, அதற்கு மஞ்சள் பூசி, ஒரு குங்குமப் பொட்டையும் வையுங்கள். சொம்பின் வாய்க்குள் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவே இந்த தேங்காயை குடுமி மேலே பார்த்தபடி சொம்புக்கு  கிரீடமாக  வையுங்கள். இதுதான் பூஜைக் கலசம். பூஜையறையிலே ஒரு கோலம் போட்டு அதுக்கு மேலே இந்தக் கலசத்தை வைக்கலாம். இப்போது கலசத்துக்குப் பூ போட்டு வணங்குங்கள். கழுத்தில் கட்டிக்கொள்ளத் தோதாக சற்றே தடிமனான கயிறை எடுத்து அதற்கும் மஞ்சள் தடவி தயாராக வைத்துக் கொள்ளுங்கள். 
சில புரோகிதர்களும் கைவசம் வைத்திருப்பார்கள்  நிறைய வீடுகளில் வாத்யார் ஓரிரு நாள் முதலாகவே கொண்டு வந்து தருவார். தக்ஷிணை பெறுவார். 

வாத்யார் வராத  தராத வீட்டுக்காரிகள் மஞ்சள் குங்குமம், பூஜா திரவியங்கள் விற்கும் பெட்டிக்கடைகளில்,  கோவில் வாசலில், இது மஞ்சள் கயிறாகவே கிடைக்கும். . பிறகு, வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப் பெண்கள் எண்ணிக்கைப்படி ஆளுக்கு ஒன்றாக இப்படி மஞ்சள் சரடைத் தயார் செய்துக்கொள்ளலாம். ஒவ்வொரு சரடு நடுவிலேயும் ஒரு பூவை வைத்துக் கட்டிக்கொள்ளுங்கள்.

இந்த விரதத்துக்கு நைவேத்யமாக காரடையைத் தயாரித்து, கூடவே வெண்ணெயையும் வைத்துக் கொள்ளுங்கள்.   (இந்தக் காரடை மற்றும் வெல்லடையைத் தயாரிக்கும் விதத்தை  மாமிகள் யாரிடமாவதோ , பெண்கள் பத்திரிகைகளிலேயோ, கூகிள் சென்றோ தெரிந்து கொள்ள  வழி உண்டு. நான் செய்ததில்லை. எனக்கு தெரியாது.  இப்படித் தயாரித்த வெல்ல அடை, உப்பு அடை இரண்டையும் ஒரு வாழை இலையில் வைத்து, அடைகளுக்கு மேல் கொஞ்சம் கெட்டியாக வெண்ணை  வைத்து அப்படியே அந்த கும்பத்துக்கு முன்னால் படையுங்கள்.

கூடவே, வெற்றிலை-பாக்கு, பழம், பூ, மஞ்சள் சரடு எல்லாவற்றையும் வைத்து கும்பத்தில் ஆவாகனமாயிருக்கும் அம்மனை நோக்கி, ‘உருகாத வெண்ணெயும், ஓரடையும் நான் வைத்தேன். ஒரு நாளும் என் கணவன் எனைப் பிரியாத வரம் தருவாய் தேவி’ என்று மனமுருகச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். கூடவே உங்களுக்குத் தெரிந்த அம்மன் ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் சொல்லலாம்.

இப்படி ஸ்லோகம் சொல்லி, நிவேதனம் செய்து, தீபாராதனை காட்டி, பூஜையை முடித்ததும், இந்த கும்பத்துக்கு எல்லாரும் நமஸ்காரம் செய்யுங்கள். மஞ்சள் சரடை எடுத்துக் கழுத்தில் கட்டிக்கொள்ளுங்கள். பிறகு காரடை, வெல்லஅடை பிரசாதத்தை வெண்ணெயோடு சேர்த்து சாப்பிடுங்கள். அடுத்து, உங்கள் வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கைத் துண்டு, காரடை என்று கொடுத்து உபசாரம் செய்யுங்கள். அவர்களுடைய மன சந்தோஷம் உங்களுடைய மாங்கல்யத்தை மேலும் பலமுள்ளதாக்கும்.

இந்த விரதத்தை ஒட்டி, ‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்று சொல்வார்கள். அதாவது, மாசி மாதத்தில் வரும் இந்த காரடையான் நோன்பு நாளன்று உங்களுடைய பழைய தாலிச் சரடுக்கு பதிலாகப் புது தாலிச்சரடை மாற்றிக்கொள்ளலாம்.   மாங்கல்ய பலத்தை அதிகரிக்கக்கூடிய விரதத்தை மேற்கொள்ளும் இந்த நாளைவிட, தாலியை புதுப்பித்து மாற்றிக்கொள்வதற்கு வேறு நல்லநாள் இருக்க முடியுமா என்ன?
விரதம் இன்னும் பூர்த்தியாகிவிடவில்லை. நைவேத்யம் செய்த அடைகளில்  சிலதை  எடுத்து வைத்து  மறு நாள்  பேப்பர், பிளாஸ்டிக்,  தின்பதற்கு வரும் ஒரு பசுமாட்டுக்கு அவற்றைக் கொடுத்து அந்தப் பசுவையே அம்மனாக நினைத்து வழிபடுங்கள். மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்கும் போது   இந்த  விரத பூஜையை வழிபடுவார்கள்.  காரடையான் நோன்புக்கான ஒரு ஸ்லோகம் இருக்கிறது. அதை எழுதி வைத்துக்கொள்ளலாம். நோன்பு அன்று நம்பிக்கையோடு, திரும்ப சொல்கிறேன்,  நம்பிக்கையோடு  துதித்தால் குடும்ப வாழ்க்கை மிகவும் நிறைவாகவும், சந்தோஷமாகவும் அமையும்.

சந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலா
பாங்கலீலாம்
குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூத
ப்ருங்காம்
மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம்
தீபயந்தீம்
காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லீ
முபாஸே

''பிறைச் சந்திரனை  சிரசில் ஆபரணமாக  சூடியவளே, அம்பா, அழகு வதன முடையவளே , மனக் கிலேசம் சஞ்சலம், கொண்டவர்  வேதனையை  உன்   கடைக்கண்  பார்வையால்  தீர்ப்பவளே,  குந்தபுஷ்பம் போல பேரழகியே,  அழகிய மனம் கவரும் சரீரத்தைக் கொண்டவளே, மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளே, வாக்தேவி,  கவிகளின் வாக்கில் கல்பவல்லியே , காமாக்ஷி , தாயே  உன் திருவடிகளுக்கு நமஸ்காரம்''

JKS STORIES




            உலகம் பலவிதம்.    J.K. SIVAN 

கொடை வள்ளல்  யார் பேராவது ஒன்று சொல்லு என்றால் எனக்கு  பாரி, ஓரி, காரி என்று எல்லாம் சொல்ல வராது. உடனேயே பட்டென்று  பட்டாபிராமன் என்று தான் சொல்வேன்.

பட்டாபிராமன் எந்த ஊர் அரசர், என்ன வள்ளல் தன்மை அவரிடம் என்று யோசிக்கவேண்டாம். அவர்   பழைய மாம்பலம்  பார்ட் டைம் ஜோசியர். பள்ளிக்கூட வாத்தியார்.    வேலை ஒய்வு பெற்று பலகாலம் பள்ளியில் பாடம் எடுக்கும் நேரத்தில் குரு, புதன், சுக்ரன் எங்கெல்லாம்  எப்போதெல்லாம் வீடு மாறுகிறார்கள் அதனால் வீட்டுக்காரனுக்கோ, ஜாதகனுக்கோ என்ன பலன் என்று யோசித்து கணக்கு போட்டு  அனுபவம் பெற்றவர்.  அவர் எப்படி கொடை வள்ளல் என்று பெயர் பெற்றார் என்பது தான் இங்கே  நான் விளக்கவேண்டியது அவசியமாகிறது. 


சுப்ரமணியன்  பட்டாபி அய்யர்  தம்பி.  ரொம்ப ஞாபக மறதி. ஒரு விதத்தில் விசித்திர ஞாபக மறதி கூட.   நமக்கு ஞாபகமறதி என்றால் போன இடத்தில் செருப்பை விட்டு விடுவது, மேல் அங்கவஸ்திரத்தை மறந்து வைத்து விடுவது,  குடை, கைப்பை, பொடி டப்பா, பர்ஸ் (அதிகம்  நாம் தொலைக்காத, ஆனால்  நமக்கு தெரியாமல் அபேஸ் ஆகும்,  கோட்டை விடும் வஸ்து பர்ஸ் ) ஆனால்  சுப்ரமணியனுடைய  ஞாபக மறதி விசேஷமானது. எங்கேயாவது வெளியே போனால்  ஞாபகமறதியாக யாரிடமாவது பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் மேசையில் இருந்த பேனா, சாவி, சாக்பீஸ்  எதையாவது எடுத்து பையில் போட்டுக் கொள்வான்.  புதிதோ பழையதோ  எவர் செருப்பிலாவது காலை நுழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவான். அவனிடம் புது செருப்பு இல்லாததால் பாவம் அதன் சொந்தக்காரருக்கு அவனது பழைய செருப்பு ஆறுதல் பரிசு அளிக்கும்.

அதே போல் தான் அடிக்கடி உள்ளூர்  பொது இலவச நூலகம் செல்வான்.  செய்தித் தாள் எல்லாம் படிப்பான். வெறும் கையோடு  போனவன் ஏதோ ஒரு குடையோடு வீட்டுக்கு வருவான்.  கொடையாளி  இலவசமாக  நூலகத்தில் ஊர் செயதிகள் எல்லாம் அறிந்து கொண்டு தன்னுடைய குடை இன்றி வீடு செல்வார்.  

பட்டாபிக்கு  சுப்ரமணியன் ஞாபகமறதி தெரியும்.  வீட்டில் குடை அதிகமாக இருந்தால் யாராவது வந்து கேட்கப்போகிறார்களே, இந்த குடை என்னுடையது இங்கே எப்படி வந்தது என்று கேட்பார்களோ என்று பயம்  ஆகவே  கோவிலுக்கு சென்று அங்கே  ஞாபகமாக  ''மறந்து போய் '' குடையை வெளியே செருப்பு விடும் இடத்தில் வைத்துவிட்டு வந்துவிடுவார்.  யாராவது  ஏழைகள் வழியில்  மழையில் நனைந்தால், வெயிலில் காய்ந்தால் ஓடிச்சென்று  வலது கை  கொடுப்பது இடது கை  அறியாமல் ஒரு குடையைக்   கொடுத்து விடுவார்.  இது சில காலமாக நடப்பது எனக்கு சமீபத்தில் ஒரு ஊர்க்குருவி,  (கோபாலன் தான்-- எங்கு யார் வீட்டில் என்ன நடந்தாலும்  இந்த கழுகுக்கு மூக்கில் வியர்த்து விடும்)  மூலம் அறிந்த விஷயம்..  

இதில் பட்டாபி அய்யர்  தனக்கு  கெட்ட பெயர் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்ததற்கு  ஒரு காரணம் சொல்ல வேண்டியி ருக்கிறது.   ஜோசியத்தை தவிர  அவருக்கு இன்னொரு விதமான உத்யோகம். அதுவும் பார்ட் டைம் தான்.  கையிலும் காசு, வயிற்றிலும் நல்ல சாப்பாடு. அதோடு கூட  வாருங்கோ என்று கூப்பிட்டு கால் கழுவி விட்டு  மரியாதையோடு சந்தன குங்குமம் வேறு தந்து எல்லோரும் நமஸ்காரம் பண்ணி  திருப்தியாக சாப்பீட்டீர்களா என்று கேட்பார்களே!  இன்னும் புரியவில்லையா?

அந்த பேட்டை யில்  பிரபல ராமு கனபாடிகள் நிறைய வீடுகளில் வாத்யார். வைதிகர்.   சுப அசுப காரியங்கள் பண்ணி வைப்பவர். அடிக்கடி  அவருக்கு உதவியாளர்கள் தேவைப்படும். ரிட்டையர் ஆனவர்களில் கைக்கடக்கமாக  சிலரை வைத்திருப்பவர் . அதில் ஒருவர்  பட்டாபி. சாது.  ப்ராம்மணார்த்தம் சாப்பிட அழைத்து செல்வார்.   பட்டாபி அக்ஷதை போடுவார். ததாஸ்து சொல்வார்.  சின்ன சின்ன மந்திரங்கள் மனப்பாடம்.  ராமுவுக்கு  வேண்டிய  ஸாமக்ரியைகளை வாங்கி வருவார். ராமு பட்டாபிக்கு என்று சொல்லி ஐநூறு வாங்கினால் அதில் 200 ரூபாய் தான்  தருவார்.  பட்டாபி மீதி எங்கே என்று கேட்கமாட்டார். அவருக்கே தெரியும். தனது மந்திர ஞானத்திற்கு இருநூறு அதிகம் என்று.     வேஷ்டி சொம்பு செருப்பு எல்லாம்  ராமு வாத்யார் தான் வைத்துக்கொண்டு  சின்ன குடைகள்,  பஞ்ச பாத்திரம் சந்தனக்கட்டை துண்டு, வாழைக்காய், அரிசியை பட்டாபியிடம் கொடுத்துவிடுவார். 

ஆகவே அவருக்கும் பல இடங்களில்  குடைகள்  பஞ்சபாத்ர  கீதை புஸ்தகம்   தானம் கிடைக்கும். ஆகவே  யாருக்காவது குடையை விற்றால் அது  ராமுவுக்கு தெரிந்து தெரிந்தால் கோபிப்பார். அது அவர் உரிமை.  சுப்பிரமணி குடையை விற்றாலும் அபவாதம்.   தப்பாகி விடுமே. ஆகவே  தான் கொஞ்சம் புண்யம் தேட இப்படி  ''கொடை '' தானம் செய்து கொடையாளி ஆகிவிட்டார்.  நாம் குடை என்று எங்கே சொல்கிறோம் ? கொடை  என்று தானே வாயில் வார்த்தை வருகிறது?

இதை யாரையாவது குறை சொல்வதாக கொள்ள வேண்டாம். எங்கோ சில இடங்களில் இப்படியும் நடப்பதுண்டு என்பதால் எவரையும் குறிப்ப்பாக உணர்த்துவது  ஆகாது.  ஆனந்த விகடனில் அப்போதெல்லாம் ''இதில் வரும் பெயர்கள் பாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுபவன அல்ல '' என்று எழுதி இருக்கும். 

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்      J.K. SIVAN 
மஹா பாரதம் 

     
உங்கள் எலும்பு தான் வேண்டும் 
                                    
நாம்  எங்காவது ஒரு ஊர் சென்றோமானால்  அங்கே சென்றதை,  பார்த்ததை எல்லாம் மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வோம்.   சிலர் அப்படியா   என்று சந்தோஷமாக அதை ஏற்றுக்கொள்வார்கள். 

சிலர்  '' ஓ  ஓஹோ அங்கே   சென்றாயா,  இதை ப்பார்த்தாயா   அதைப் பார்க்கவில்லையா? என்று  நாம் பார்க்காத அற்புதங்களை சொல்வார்கள்.   அடடா  அவ்வளவு தூரம்   ,சென்றோமே அதை எல்லாம் பார்க்கவில்லையே  என்று ஒரு ஏக்கம் நமது மகிழ்ச்சியை தின்று விடும்.  நாமும்  அந்த அதிசயங்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.  அந்த அதிசயம் நாம் சென்ற இடத்தில்  இருக்கிறது என்பது தெரியாமல் இருக்கலாம். என்ன செய்வது. அடுத்து முறை பார்த்துக்கொள்வோம் என்று தலையை சொரிந்து கொள்ளவேண்டியது தான். 

அதற்காகத்தான் எங்காவது செல்லுமுன்பு  அந்த இடததை பற்றி நன்றாக அறிந்துகொண்டு, அங்கே என்ன வெல்லாம் நாம் பார்க்க வேண்டும், செய்ய வேண்டும் என்று ஒரு துண்டு காகிதத்திலாவது நமது பையில் இருக்க வேண்டும்.  தெரியவில்லை என்றால் அந்தந்த ஊரில் இருப்பவர்களிடமாவது கேட்டு தெரிந்து கொண்டு சென்று பார்க்கவேண்டும். செய்யவேண்டியதை செய்ய வேண்டும்.

யுதிஷ்டிரனுக்கு அந்த கவலையே இல்லை.  ரிஷி  லோமசர் சிறந்த டூரிஸ்ட் கைட் . எல்லா விஷயமும் விரல் நுனியில் வைத்திருந்தவர். அவர் யுதிஷ்டிரனுக்கு ஒவ்வொரு இடம் செல்லும்போதும்  அங்கே சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயம் எல்லாம் சொல்கிறார்.
            
''யுதிஷ்டிரா, இது தான் பிருகு தீர்த்தம் பரசு ராமர் ஸ்நானம் செய்த இடம். இதில் ஸ்நானம் செய்.''   லோமசர் ஆங்காங்கே ஒவ்வொரு இடத்தையும் இவ்வாறு விளக்குகிறார். யுதிஷ்டிரன்  ஆர்வமாக அவரை நிறைய   கேள்வி கேட்டு துளைத்து எடுக்கிறான்.

லோமசர் ரெண்டு ராமர்கள் கதையை யுதிஷ்டிரனுக்கு சொல்கிறார்;

''விஷ்ணு, ராவண சம்ஹாரத்திற்காக தசரதன் புத்திரன் ராமனாக அவதாரம் செய்தார். பிருகு வம்ச பரசுராமன் க்ஷத்ரியர்களை வதம் செய்ய விரதம் பூண்டவன். ராமன் மிதிலையில் சிவ தனுசுவை ஒடித்து பெருமை பெற்றது பரசுராமனுக்கு தெரிகிறது. பரசுராமனிடம் சக்தி வாய்ந்த  ஒரு விஷ்ணு தனுசு வைத்திருப்பான். அதை எவராலும் எடுத்து நாண் மீட்டி அம்பு தொடுக்க முடியாது. மிதிலையிலிருந்து விஸ்வாமித்ரரோடு அயோத்தி திரும்பிக் கொண்டிருந்த ராம லக்ஷ்மணர்களை  பரசுராமன் வழியில் சந்திக்கிறான். பேச்சு தொடர்கிறது.

''நில்  யார் நீ?

''நமஸ்காரம்  முனிவரே,  நான்   அயோத்தி நகர ராஜா  தசரதனின்  மகன்  ராமன்.''

''ஓஹோ  நீ தான் அந்த  ராமனா?  ஏதோ ஒரு பழைய வில்லை ஒடித்து பெருமைப் படாதே. உன்னால் என்  கரத்தில் உள்ள  இந்த தனுசுவை நிலை நிறுத்தி நாண் ஏற்றி இழுத்து வளைத்து அம்பு தொடுக்க முடியுமா? முடிந்தால் நீ உண்மையிலேயே  ஒரு வீரன் என்று  உன் வீரத்தை ஒப்புக்கொள்வேன்.'' என்கிறான் பரசுராமன். .

''இஷ்க்வாகு வம்சத்தினர் தமது வீரத்தை பற்றி வெளியே டம்பமாக பேசும் வழக்கமில்லை'' என்கிறார் ராமர்.
''சாமர்த்திய பேச்சால் என்ன பயன். இந்தா இதை உன்னால் தூக்கவாவது முடிகிறதா பாரேன்'' என்று தன்னுடைய விஷ்ணு தனுசுவை நீட்டுகிறான் பரசுராமன்.. ராமருக்கு சிரிப்பும் கோபமும் வருகிறது.  அட   பரசுராமனுக்கு பாடம் கற்பிக்க நினைக்கிறார். அவனது வில்லை அலட்சியமாக பிடுங்கி நாண் ஏற்றுகிறார்.

அதன் சப்தம் எங்கும் எதிரொலிக்கிறது. ''என்ன  மகரிஷி பரசுராமரே , இப்போது என்ன செய்யட்டும்.   அம்பை  ஒரு முறை  செலுத்தினால் அதற்கு ஒரு இரை கண்டிப்பாக  வேண்டும்''.

ஜமதக்னி புத்திரன் பரசுராமன் ஒரு அம்பை எடுத்து கொடுக்கிறான். இதை காதுவரை இழுத்து வளைத்து வில்லில் பொருத்து''
அவ்வாறே செய்கிறார் ராமர்.    பரசுராமன் திகைத்து நிற்கிறான். அவனுக்கு ராமர் தனது விஷ்ணு ரூபத்தை காட்டினவுடன் வணங்கி கர்வம் நீங்கி தவம் செய்ய மகேந்திர மலை நோக்கி செல்கிறான் பரசுராமன். அவனுடைய சக்தி பூராவும் ராமருக்கு வந்து சேருகிறது.

 யுதிஷ்டிரா இதையும் கேள்

க்ருத யுகத்தில் சில ராக்ஷசர்கள் பலம் மிக்க வ்ரித்ராசுரன் தலைமையில் ஆயுதங்களோடு, இந்திரனையும் தேவர்களையும் எதிர்த்தனர். தேவர்கள் இந்திரனோடு பிரம்மாவை அணுகி வணங்குகிறார்கள். ''இந்திரா உனது கவலை, பொறுப்பு எல்லாமே எனக்கு புரிகிறது. ததீஸி  எனும் முனிவரிடம் செல். அவரை வணங்கி வரம் கேள். அவர் அளித்த வரத்தினால் அவரது எலும்புகளைக் கேள். அவர் கொடுப்பார். அவரது எலும்புகளால் ஒரு ஆயுதம் செய். வஜ்ராயுதம் என்று அதற்கு பெயர். ஆறு பக்கங்கள்  தாக்கும் சக்தி அதற்குண்டு. அதன் மூலமாகத்தான் நீ வ்ரித்தாசுரனை வதம் செய்ய முடியும். வேறு வழியில் வ்ரித்தாசுரனை அழிக்க முடியாது'' என்கிறார் பிரம்மா.  ததீசி முனிவரை  சந்திக்க இந்திரன் செல்கிறான்.

ஸரஸ்வதி நதியின் மறு கரையில் எழில் பூத்த மரங்கள் செடி கொடிகளுக்கிடையே ஒரு அமைதியான ஆஸ்ரமத்தில் ததீஸி  முனிவர் இருந்தார். ஆசிரமத்திலிருந்து  வேத சப்தம் ஒலித்துக் கொண்டிருந்தது. தவம் செய்துகொண்டிருந்த முனிவரை தேவர்கள் வணங்கினார். அவரிடம் இந்திரன் ஒரு வரம் தரவேண்டும் என்றவுடன் அவர் தருவதாக வாக்களிக்க, பிரமன் சொற்படி '' மகரிஷி  உங்களது உடலின் எலும்புகள் தான் அவசியம்  வேண்டும், அதனால்  தான் மட்டுமே  அசுரன் வ்ரித்ராசுரனை கொல்ல முடியும்''  என்று வேண்டினான் இந்திரன். முனிவர் மிக்க மகிழ்ச்சியோடு தனது வாழ்வை முடித்துக்கொண்டு உடலை அளிக்கிறார். இந்திரன் தேவலோக ஆயுத நிபுணன் த்வஷ்திரி யிடம் அந்த எலும்புகளைக் கொடுத்து வஜ்ராயுதம் தயார்செய்து முடித்தான். தேவாசுர யுத்தம் மிக பயங்கரமாக நடக்கிறது. விஷ்ணுவின் சக்தியும் இந்திரனுக்கு சேர, அவன் வஜ்ராயுதத்தை வீசி வ்ரித்ராசுரனை கொல்கிறான்.  தேவர்கள் புத்துணர்ச்சி பெற்று மற்ற அசுரர்களை தாக்க, அவர்கள் உயிர் தப்ப பாதாள லோகம் செல்கிறார்கள்.

ராக்ஷசர்கள் பழி வாங்க தொடங்கினார்கள். இரவில், ரிஷிகள் ஆஸ்ரமங்களுக்கு கூட்டமாகச் சென்று முனிவர்கள், ரிஷிகளை  எல்லாம் விழுங்க ஆரம்பித்தார்கள். ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு உயிரிழந்தனர். யாகங்களைக் கெடுத்தனர். ஆச்ரமங்களின் தூய்மையை அழித்தனர். கடலில் ஒளிந்துகொண்டிருந்த ராக்ஷசர்களை எப்படி அழிப்பது. இந்திரன் முதலானோர் நாராயணனை வேண்டினார்கள். அவர் ''அகஸ்தியர் கடலையே வற்றச் செய்பவர் அவரிடம் செல்லுங்கள்'' என்றார். அகஸ்தியரிடம் சென்று முறையிட்டார்கள்.

 

Sunday, October 28, 2018

JKS THOUGHTS


        புரியாதது புரிந்தது!  - J.K. SIVAN

கையில் இருப்பதையெல்லாம்  டபார்  என்று கீழே போட்டுவிட்டு இதை செவி மடுக்கவேண்டும்: 


'' இதன் மூலம் சர்வ ஜனங்களுக்கும்  தெரியப்படுத்துவது  என்னவென்றால்,

 எங்கே எப்போது சந்தித்தாலும் பட்டண்ணாவிடம்  எதைக் கொடுத்தாலும் ,  தயவு செய்து ஒரு பேனாவையோ, அதோடு அவர் கேட்கிறாரே என்று ஒரு பேப்பரையோ மட்டும் யாரும் கொடுக்கவேண்டாம்.  அவர் கண்ணில் படும்படியான இடத்திலும் வைக்கவேண்டாம்.  கிடைத்தால் அதை உடனே அவர் உபயோகித்து,   தனது அடுத்த  கடிதமாக  ஹிந்துவுக்கோ,. டைம்ஸ் பேப்பருக்கோ,  அல்லது ஏதோ ஒரு பத்திரிகைக்கோ எழுதி அனுப்பி

விடுவார்.  பிறகு  அதை படித்தாயா என்று உங்களை  பிடுங்கி எடுத்துவிடுவார்.

என் அனுபவம் இது என்பதால் உங்களுக்கு தெரியப்படுத்த கடமைப் பட்டுள்ளேன்.

பட்டண்ணாவின்   "லெட்டர்ஸ் டு எடிடர்'' எப்படியும்  வாரத்திற்கு  ரெண்டு நிச்சயம். தெருவில் காகிதம் போடுவதால்  வரும் தீமைகளிலிருந்து , ரேஷன் அரிசியில் ஒரு கிலோவுக்கு எவ்வளவு கிராம் எடை குறைவு,  தெருவில் நாய்கள் எத்தனை சாயந்திரம் முதல் மறுநாள் காலை வரை உலவுகிறது, முதல்  உலகில் கச்சா
 எரிவாயு என்ன விலைக்கு விற்க வேண்டும், எப்படி இதில்  அமெரிக்கா அரேபிய நாடுகள் தவறு செய்கின்
றன என்பது வரை எழுதித் தள்ளுவார்.  எதெல்லாமோ பற்றி எழுதுவதால் அவருக்கே  என்ன எழுதினோம் என்பது அடிக்கடி மறந்து போய்விடும்.  

ரெண்டு மூன்று மாத காலமாக  பட்டண்ணா  ஊரில் இல்லை.அவரது மகள் அலமேலு அவரை பேரனைப் பார்த்துக் கொள்வதற்காக  கோயம்பத்தூர் கூட்டிச் சென்று விட்டாள் . பத்திரிகை உலகம் தப்பிக்க  அவளால் உதவ நேர்ந்தது தெய்வாதீனம். போற்றுதற்குரியது.

மூன்று மாதங்களுக்கு முன் அவர் என்னை சந்தித்தார். 

''உங்களுக்கு தெரியுமா  தாத்தா சார்,  ''நம்ம கோபாலாச்சாரி வீட்டுக்கு போனேன்  “ இந்தா பிள்ளையார் கோயில் பிரசாதம். நாளைக்கு பிள்ளையார் சதுர்த்தியாச்சே. ஹோமம் நடத்தினா ”  என்று விபூதி குங்குமம் கொடுத்தார்.உடனே  எனக்கு  ஒரு  எண்ணம் உதயமாயிற்று.. எடுத்தேன் பேனாவை.

''அன்புள்ள ஹிந்து /எக்ஸ்பிரஸ் /டைம்ஸ்  ஆசிரியருக்கு,''..................''இப்படிக்கு  வாசகன் பட்டண்ணா.''
நீளமான  பட்டண்ணா எழுதியதை நான்  இங்கே எழுதி உங்களிடம் அவதிப்பட விருப்ப
மில்லை என்பதால் கடைசியில் முடிவாக அமைந்த வாசகம் மட்டும் இது என்று சொல்லி நிறுத்திவிடுகிறேன்.

"  இதுவரை முப்பது வருஷமாக ஏராளமான கோயில்கள் சென்றுள்ளேன். அங்கே இதுவரை 3000 தடவை மந்த்ரங்கள் , அதுக்கும் மேலேயும்,  சொல்லுவதை கேட்டுள்ளேன். எனக்கு இன்னி தேதி வரை ஒரு மந்திரம் கூட நினைவில் இல்லையே. கோயிலுக்கு போவதாலோ, மந்த்ரங்கள் கேட்பதாலோ, பூஜைகளை அந்த அர்ச்சகர்கள் செய்வதாலோ ஒரு பயனும் இல்லை என்பது அடியேன் அபிப்ராயம். நேரம் தான் வீண்."   ஒரு சாதாரண  அப்பாவி பக்தன்  பட்டண்ணா ''

பட்டண்ணா மூட்டிய தீ புகைவிட்
டு
 பத்திரிகை (யில்)  எரிய ஆரம்பித்தது.
விடுவார்களாஏகப்பட்ட பட்டண்
ணாக்கள்?  அவனை ஆதரித்தும் சுட்டெரித்தும் ரொம்ப  நாள்  ஹிந்துவில் கிழி கிழி என்று வறுத்து எடுத்து
 எழுதினார்கள். 

ஹிந்து 
ஆசிரியருக்கு முதலில் விஷயம் சூடு பிடித்ததில் பரம சந்தோஷம். சில நாட்களில் இது ஹனுமார் வாலாக வளராது இருக்க ஒரு வாசகர் எழுதியதால்  இந்த விவகாரம்  நிறைவு பெற்றது:

அந்த வாசகர் என்ன எழுதினார் அப்படி?  

"இந்த  விஷயத்தை 
ஆரம்பித்த திரு
 பட்டண்ணாவுக்கும் அவர் ஆதரவாளர்களுக்கும்:    இதில்  அதிகமாக ஈடுபட  எனக்கு விருப்பமில்லை  என்பதாலும்  எழுத எனக்கு அனுபவமில்லாதாலும்  சுருக்கமாக  நான் சொல்ல விரும்புவது இது ஒன்றே. 

எனக்கு கல்யாணமாகி இதுவரை முப்பது ஆண்டுகள். என் மனைவி கோகிலா குறைந்தது 32000 தடவையாவது சமைத்து நான்  இன்று காலை வரை சாப்பிட்டிருக்கிறேன். சத்தியமாக இன்று காலை அவள்  என்ன சமைத்தாள் எதை சாப்பிட்டேன் என்று நினைவில்லை. கத்திரிக்
காயா வெண்டக்காயா குழம்பிலே? தெரியாது.  நினைவில் இல்லை. ரெண்டும் ஒன்று போல் அவள் சமைப்பதாலும்  கண்டுபிடிப்பது சிரமம். இருந்தும் வேறு வழியின்றி
  தினமும் சாப்பிட்டு விட்டு தான் ஆபிஸ் போகிறேன். ஒண்ணு மட்டும்  நிச்சயம். கோகிலா சமைக்கும் வீட்டு சாப்பாடு இல்லாவிட்டால் நான் இதை எழுத இன்று இருந்திருக்க மாட்டேன். ஹோட்டல் சாப்பாடோ வேறு எதுவோ என்னை நோயுற்று அவதிப்பட வைத்தி
ருக்கும். அழைத்து வா  எடுத்துப்போ  ஆஸ்பத்திரி அனுபவம் கிடைத்தி
ருக்குமோ என்னவோ?

கோவிலுக்கு போவதும் இதுபோலவே தான்.  மந்திரம் புரிகிறதோ இல்லையோ, பூஜை பிடிக்கிறதோ இல்லையோ,  அது என்னை ஏதோ புரிபடாத சந்தோஷத்தில் திருப்தியில் அமைதியில் ஆழ்த்துகிறது. இந்த அனுபவத்தை வார்த்தையால் சொல்லவோ எழுதவோ முடியாது. அனுபவித்தால் அந்த இன்பமே அதன் பலன்.  இதை முடிப்பதற்கு  முன்னாலே பட்டண்ணாவுக்கும்  மற்றும் எல்லோருக்கும்  இங்கிலிஷில் ஒரு வார்த்தை:

Let  us  remember this: “When  we  are DOWN to nothing,  God is UP to something! Faith sees the invisible, believes the incredible  and  receives the impossible!  Let us Thank God for our physical and our spiritual nourishment -- ராமசேஷன்.''

Saturday, October 27, 2018

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்  J.K. SIVAN 
மஹா பாரதம் 

             ''வாதாபி  ஜீர்ணாபி''

மகரிஷி வைசம்பாயனர்  தொடர்ந்து ஜனமேஜயனுக்கு சொல்கிறார்:

"யுதிஷ்டிரன், லோமசர், தௌமியர் மற்றும் அனைவரும் நைமிஷம் நீண்ட நேரம் நடந்தபின் ஒரு நாள் விடிகாலை  நைமிஷம் அடைந்தார்கள். பித்ருக்கள், பிராம்மணர்கள் ஆகியோருக்கு ப்ரீதி செய்தார்கள். கன்யாதீர்த்தம், அச்வதீர்தம், கோ தீர்த்தம்ஆகியவையில் ஸ்நானம் செய்தார்கள். பிரயாகை, கங்கை யமுனை சங்கமத்தில் ஸ்நானம், வேதி தீர்த்தம், கயா, மகாநதி, பிரம்ம ஸாரா என்றெல்லாம் தேடிச்  சென்று  மனதும் உடலும் குளிர ஸ்நானம் செய்து, தேவ, பித்ரு கடன்களை ஸ்ரத்தையாக செய்தார்கள். அங்கிருந்து அகஸ்தியர் ஆஸ்ரமம் சென்றார்கள்.

'' யுதிஷ்டிரா,  இதோ பார்   இங்கு தான் அகஸ்தியர் வாதாபியைக் கொன்றார்'' என்று லோமசர் கையை நீட்டி ஒரு இடத்தை காட்டினார்.
 ' மகரிஷி ஏன் அகஸ்தியர் வாதாபியை கொன்றார் என்ற விருத்தாந்தம் கூறவேண்டும்''  
 லோமசர் நீளமாக சொன்னதை   சொன்னதை இங்கே சுருக்கமாக தருகிறேன் :

''மணிமதி நகரத்தில், இல்வலன் என்று ஒரு ராக்ஷசன். அவன் தம்பி வாதாபி. ஒரு முனிவரிடம் அந்த ராக்ஷசன் ''சுவாமி எனக்கு இந்திரன் போல் ஒரு பிள்ளை வேண்டும். அனுக்ரஹம் செய்யுங்கள்'' என்றான். அவர் அவ்வாறு வரமளிக்கவில்லை. இல்வலன் கோபம் கொண்டு அன்று முதல் ரிஷிகள்-பிராமணர்களை கொல்ல தொடங்கினான். இதை ஒரு நாடகமாடி ரசித்தான்.   அந்த திட்டம் என்னவென்றால்,  இல்வலன்  வாதாபியை ஒரு ஆடாக உருமாற செய்வான். வாதாபியும் நினைத்த உருமாறும்  ராக்ஷஸன் அல்லவா? ஆகவே கொழுத்த ஆடாக மாறிவிடுவான்.

இல்வலன்  ரிஷி-பிராமணர்களை வரவழைத்து, உபசரித்து, அவர்களுக்கு போஜனம் செய்விப்பான். அந்த ஆகாரத்தில் வாதாபி உள்ளே இருப்பான். ரிஷிகள்-பிராமணர்கள் வயிற்றில் அவன் ஆகாரமாக சென்றவுடன், ரிஷிகளுக்கு  தாம்பூல  உபச்சாரம் செயது சிரமபரிகாரம் செய்விப்பான். பிறகு   இல்வலன் '' வாதாபி வெளியே வா'' என்பான். உடனே கூரான கொம்புள்ள ஆடாக ரிஷி-பிராமணர்கள் வயிற்றை பிளந்து, கிழித்துக்கொண்டு வாதாபி வெளியே வருவான். ரிஷிகள் பிராமணர்கள் வயிறு கிழிந்து ஸ்தலத்திலேயே  மரணமடைவார்கள். இல்வலன், வாதாபி இருவரும் சிரித்து  மகிழ்வார்கள். இது தான் இல்வலன்-வாதாபி விளையாட்டு.  இப்படியே நிறைய ரிஷிகள் பிராமணர்கள் மாண்டார்கள்.

இதற்கிடையில், அகஸ்தியர் தமது முன்னோர், அகஸ்தியர்  கல்யாணம் செயது கொள்ளாததால்   வம்சம் விருத்தி அடையாததால்  பித்ருலோகம் செல்ல முடியாமல்   புத்  என்கிற நரகத்தில் உழல்வதை கண்டு தவிப்பதை  பார்க்கிறார்.  உடனே லோபாமுத்ரையை மணந்துகொள்கிறார். அவளுக்கு தேவையான ஆபரணங்களை  அளிக்க  அவரிடம் செல்வம் இல்லை. ஒரு அரசனை அணுக, அவன்  ''மகரிஷி  நீங்கள் இங்கே   இல்வலன்  என்ற மிகுந்த செல்வம் உள்ளவரிடம் செல்லுங்கள். அவனைக் கேட்டால் கிடைக்கும் என, அவனிடம் செல்கிறார் அகஸ்தியர்.
இல்வலன்  குள்ளமாக  குண்டாக எதிரே நிற்கும் அகஸ்தியரைப்  பார்த்தான். அகஸ்தியர் நல்ல ரிஷி இன்று வசமாக நம்மிடம்  தானே வந்து  அகப்பட்டார் அவரைக் கொல்லலாம் என திட்டமிட்டான்.  அவனும் வாதாபியும் வழக்கம்போல்  அவரை உபசரித்து போஜனம் செய்விக்கிறார்கள்.  அவருடைய உணவில் வாதாபி உள்ளே புகுந்து அவர் வயிற்றை நிரப்பினான்.
''அகஸ்திய ரிஷியே , வயிறு நிறைய உண்டீர்களா?'' என்று பவ்யமாக கேட்டான் இல்வலன்.
''ஆமாம் அப்பனே மிகச் சிறந்த உணவு கொடுத்தாய், வயிறு நிறைந்தது என்று வயிற்றைத்தொட்டு  நன்றாக   தடவினார் அகஸ்தியர்''
 
''அப்படியா சேதி, இப்போது பாருங்கள் என்று சிரித்து விட்டு ''வாதாபி வெளியே வா!!'' என்று வழக்கம்போல் கூப்பிட்டான் இல்வலன்.
'' ஒரு ஏப்பம் தான் பதிலாக அகஸ்தியரிடம் இருந்து வந்தது''

''வாதாபி, வாதாபி. வா வெளியே'' என்று கத்தினான் இல்வலன்.

''ஏனப்பா உன் தம்பி வாதாபியை கூப்பிடுகிறாய், எங்கே அவன் ?
''நீங்கள் சாப்பிட்ட உணவில் கலந்து உங்கள் வயிற்றில் கூரான கொம்புகள் ஆண்ட ஆடாக உள்ளான். இப்போது உங்கள் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வருவான். பார்க்க தான் நீங்கள் இருக்க மாட்டீர்கள்''  என்று சிரித்தான் இல்வலன்.

'' ஓ  அப்படியா.  என் உணவாக  வாதாபி என் வயிற்றில் இருந்தானா. அடேடே  அவன் ஜீர்ணாபி'' --வாதாபி ஜீரணமாகி விட்டானே. எப்படி வருவான், அவன் தான் என் ரத்தத்தில் கலந்துவிட்டானே'' என்று சிரிக்கிறார் அகஸ்தியர்.

இல்வலன் நடுங்கிவிட்டான். கைகூப்பி அகஸ்தியரை வணங்கி நான் செய்த தவறுக்கு மன்னிக்கவேண்டும். எனக்கு கட்டளையிடுங்கள்'' என்கிறான்.

''உன்னுடைய செல்வத்தை எல்லோருக்கும் அளித்து உன் பாபத்திற்கு பரிகாரம் தேடு'' என்கிறார்.

அகஸ்தியரும்  லோபாமுத்ரைக்கு  ஆபரணங்கள் வழங்கி மகிழ்வித்து அவர்களுக்கு  சந்ததி பிறந்து அவரது முன்னோர்கள் ''புத்'' என்ற நரகத்திலிருந்து விடுபட்டனர். வாழ்த்தினர் என்று கதை செல்கிறது.

அகஸ்தியர் ஆஸ்ரமம் அருகே பாகீரதி நதி நீண்டு ஒரு பெரிய சர்ப்பமாக மலை முகடுகளிடையே பின்னிப் பின்னி ஓடுகிறது.

 தீர்த்த யாத்திரை தொடர்கிறது.

SKSS

A SMALL SUGGESTION FROM SREE KRISHNARPANAM SEVA TRUST

Instead of spending money on crackers whch only conribute to pollution of atmoshere and wastage of money besides being an avoidable disturbance to innocent animals and birds, old sick people in neighbourhood and young babies, PLEASE DONATE AND GET STORY BOOKS PUBLISHED BY US TO CHILDREN FOR THEIR KNOWLEDGE TO IMPROVE AND TO KNOW ABOUT OUR TRADITION, CULTURE AND FAITH

HAPPY DIWALI GREETINGS IN ADVANCE. LIST OF BOOKS ATTACHED FOR YOUR SELECTION WITH MINIMUM DONATION. MAXIMUM DONATION IS YOUR DISCRETION.

SREE KRISHNARPANAM SEVA SOCIETY NANGNALLUR MINIMUM
SREE KRISHNARPANAM SEVA SOCIETY DONATION
15 KANNIKA COLONY 2ND ST.NANGANALLUR, CHENNAI 600061
TEL: 9840279080 EMAIL: jksivan@gmail.com.
RS
KALADIYIL KIDAITHTHA KAI VILAKKU 50
THEVITTADHA VITTALA 175
VITOBA THE NECTAR 200
MUKUNDHALIL MOOVAR 100
VISWAROOPANIN VAMANA KATHAIGAL 2ND EDITION COLOR 150
RAME RAME MANORAME - ADHYATHMA RAMAYANAM ART PAPER + MULTICOL PICS 200
RAMAPATHIYUM UMAPATHIYUM 100
YOU, I AND KRISHNA 2ND EDITION ART PAPER+ MULTICOL PICS 200
ENDHAIYE NANDHALALA 100
KATHIDA VA KESAVA 100
GOVINDHA'S GARLANDS ART PAPER +MULTICOL PICS 100
PAVAIYUM PARAMANUM 2ND EDITION ART PAPER MULTI COL PICTURES 150
HARE KRISHNA - RADHA MEERA ANDAL STORIES IN ART PAPER MULTICOL PICTURES 150
PESUM DHEIVAM 100
VISWAROOPAN KATTUM VAZHI 100
ENTHAIYE RAMANUJA 100
GLORIES OF GITA ART PAPER+MULTICOL PICTURES - GITA STORIES 100
PARAMESWARAN PADUM PAMATHMAN - 2ND EDITION 50
AVASARA KELVIYUM AVASIYA BADHILUM 40
ETERNAL QUESTIONS & EVERLASTING ANSWERS 40
AYIRANAMAN VISHNU SAHASRANAMAM MEANING 100
ACHARYA AND ACHYUTHA 40
AMUDHAN EENDHA AAZHWARGAL 100
ARPUDHA GNANI SESHADRI SWAMIGAL LIFE HISTORY 100
RAMANUNA THE UNPARALLELED 150
AINDHAM VEDHAM VOL 1 AND 2 MAHABARATHAM FULL - IN ART PAPER +COL.PICS 1000
KAMBAN KANDA RAMAN 150
POSTAGE/COURIER EXTRA RS 200 WITHIN INDIA FOR AINDHAM VEDHAM BOOK
FOR OTHER BOOKS ACCORDING TO WEIGHT AND NO. OF BOOKS.
OTHER BOOKS OF J.K. SIVAN
ENGAL BARATHI VAMSAM 100
NADHA BRAHMAM 251 NOTES 50



GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...