Friday, October 5, 2018

LALITHA SAHASRANAMAM


   ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (559-577 )- J.K. SIVAN

 ताम्बूल -पूरित -मुखी
दाडिमी-कुसुम -प्रभा ।
मृगाक्षी मोहिनी मुख्या
 मृडानी मित्ररूपिणी ॥ ११४॥

Tambulapuritamukh
 dadimikusumaprabha
Mrugashi mohini mudhya
mrudani mitrarupini – 114

தாம்பூல பூரித முகீ
 தாடிமீ குஸுமப்ரபா
ம்றுகாக்ஷீ  மோஹினி முத்யா
ம்ருடானி மித்ர ரூபிணி

नित्यतृप्ता भक्तनिधिर्
 नियन्त्री निखिलेश्वरी ।
 मैत्र्यादि -वासनालभ्या
महाप्रलय-साक्षिणी ॥ ११५॥

Nityatrupta bhaktanidhi
rniyantri nikhileshvari
Maityradi vasanalabhya
mahapralayasakshini – 115

நித்யத்ருப்தா, பக்தனிதி,
 ர்னியம்த்ரீ, னிகிலேஶ்வரீ |
மைத்ர்யாதி வாஸனாலப்யா,
மஹாப்ரளய ஸாக்ஷிணீ || 115 ||

परा शक्तिः परा निष्ठा
 प्रज्ञानघन-रूपिणी ।
माध्वीपानालसा मत्ता
मातृका-वर्ण-वर्णरूपिणी ॥ ११६॥

Parashaktih paranishta
pragynana ghanarupini
Madhvipanalasa matta
matrukavarna rupini – 116

பராஶக்திஃ, பரானிஷ்டா,
ப்ரஜ்ஞான கனரூபிணீ |
மாத்வீபானாலஸா, மத்தா,
 மாத்றுகா வர்ண ரூபிணீ || 116 ||

      லலிதா ஸஹஸ்ரநாமம் - (559- 577 ) அர்த்தம்

* 559 * தாம்பூல பூரித முகீ -  வாய் சிவக்க சிவக்க  கோவைப்பழம்போல வெற்றிலை பாக்கு  தாம்பூல தரித்து சுகிப்பவள் அம்பாள்  என்கிறார் ஹயக்ரீவர். அவள் ஏற்கனவே சிவந்த மேனியள். கேட்கவேண்டுமா
தாம்பூலத்தால் சிவந்த இதழ்கள் அவளுக்கு  கூடும் தனி அழகை. நல்ல தாம்பூலம் தரிக்கும்போது கம்மென்று ஒரு மணம் சேர்ந்துவிடும்.

* 560 * தாடிமீ குஸுமப்ரபா-- அம்பாளின்  நிறத்தை எதற்கு ஒப்பிடலாம் என்று யோசித்தால் உடனே நினைவுக்கு வருவது  மாதுளை மணிகள். மாணிக்கங்கள். கருஞ்சிவப்புக்கு  எப்போதுமே  தனி அழகு. செம்பருத்திப் பூவையும் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. அம்பாள் சிறந்தவள் சிவந்தவள்.

* 561 * ம்ருகாக்ஷீ-   மானின் விழிகள் அம்பாள் விழிகளை போன்றவை என்று தான் சொல்லவேண்டும். ஒரு இடத்தில் நிலைக்காத  அலைபாயும் கண்கள். ஏன்?  உலகத்தையே  ரக்ஷிப்பவள் பார்வை எங்கும் செல்லவேண்டாமா? அவள் பார்வை விழுந்து மோக்ஷகதி  அடைந்தவர்கள் அடைபவர்கள் எண்ணிக்கையில் அடங்குமா?

* 562 * மோஹினீ - காந்தம்  போல் மனதை கவர்பவள். தன்னை மறக்கச் செய்பவள். அழகே உருவானவள். ஞானத்தால், தயையால், காருண்யத்தால், வீரத்தால், சக்தியால் ஒளிவீசும் அழகு.

* 563 * முக்யா-   எங்கள் தலைவி அன்னவர்க்கே சரண் யாங்களே.  தைத்ரிய உபநிஷத்  (III.x.6)   ''எது முதன் முதலில் தோன்றியதோ, கடவுள்களில் முதலானது எதுவோ அதுவே நான்''   என்று சொல்வது அம்பாளை என்று தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

* 564 *ம்ருடானீ-  எல்லோருக்கும்  எப்போதும் மகிழிச்சி , ஆனந்தத்தை தருபவள் அம்பாள். ம்ருடா  என்று சிவனுக்கு ஒரு பெயர். சிவனே சிவை.

* 565 *மித்ரரூபிணீ -  நேசத்தோடு பாசத்தோடு பரிவோடு, நட்போடு இருப்பதை மித்ர ரூபமாக இருப்பதாக சொல்கிறோம். சூரியன் பூமிக்கு நல்ல உற்ற  நண்பன். எல்லாமாக இருப்பவள் அம்பாள். சிவன் அக்னி ஸ்வரூபம்.  சக்தியும் அவ்வாறே.

* 566 * நித்யத்ருப்தா - எதிலும் எப்போதும் எதனிடமும் திருப்தியோடு இருப்பவள். எதுவும் தேவை இல்லாதவள் திருப்தியுடன் இருப்பதில் என்ன ஆச்சர்யம்.?

* 567 * பக்தநிதி -   ரொம்பவும் அருமையான நாமம்.  பக்தர்களுக்கு அவள் வழங்குவது அருள்செல்வம். அந்த செல்வம் அபரிமிதமாக என்றும் நிறைந்து இருக்கும்  களஞ்சியம் அம்பாள் ஸ்ரீ லலிதை. செல்வக்களஞ்சியமே என்று பாரதியார் பாடுவாரே! அன்புச்செல்வம் அருள்செல்வம் நிறைந்த  நிதி அம்பாள்.

 * 568 * நியந்த்ரி - இந்த பிரபஞ்சத்தை கட்டி ஆள்பவள். லோக நிர்வாகி. வழிகாட்டி அம்பாள்.
.
* 569 * நிகிலேஶ்வரீ -   நிகிலம்  என்றால்  முழுதுமாக  என்று அர்த்தம்.  அம்பாள்  சர்வேஸ்வரி. புவனேஸ்வரி. கட்டி ஆளும் கருணாம்பிகை. ப்ரம்மஸ்வரூபிணி.

* 570 *  மைத்ர்யாதி வாஸனா லப்யா,  நேசத்தால், பாசத்தால்  அன்பால்  அடையக்கூடியவள் அம்பாள்.

* 571 * மஹாப்ரளய ஸாக்ஷிணீ -  ஒவ்வொரு  யுக சந்நிதியிலும்  நேரும்  மஹா ப்ரளயத்துக்கு சாட்சியாக இருப்பவள் அம்பாள். யுகமுடிவில் அனைத்து அழிந்து புனருத்தாரணம் ஆகும். அதற்கு ஒரே சாக்ஷி அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை.   முடிவில் எல்லாம் ஒரு நாள் சிவனில் கரைந்து ஆகாசத்தில் மீண்டும்  உருவாகும். இது தான் சிருஷ்டி தத்வம்.

* 572 *பராஶக்தி  -   இந்த பிரபஞ்சத்தில்  அசையும் ஒவ்வொன்றும் பெருகின்ற சக்தி அம்பாள் ஸ்ரீ லலிதையினால் தான்.எனவே தான் அவளை பரா சக்தி என்கிறோம். அவள்  ஞான சக்தி, இச்சா சக்தி, க்ரியா சக்தி,   பிராண சக்தி.

* 573 * பரானிஷ்டா  -  நிஷ்டை என்றால் தெரியுமல்லவா. மனதை ஒருநிலைப்படுத்தி அசைவற்று தியானித்தல். மனம் வாக்கு  காயம் எல்லாமே ஒன்றாகி தியானிப்பது. பிரம்மத்தை தேடி அதில் லயித்தல்.

* 574 * ப்ரஜ்ஞான கனரூபிணீ -  உயர் தத்துவங்கள், ஞானத்தின் மொத்த உருவம் ஸ்ரீ லலிதாம்பிகை.


* 575 * மாத்வீபானாலஸா -   பக்தர்களின் அன்பும்   ஞானமும்  தரும்  ஆனந்த அனுபவத்தில் திளைப்பவளுக்கு வேறு என்ன மது தேவை?   சிவனை நினைந்து பேரானந்த மையமாக திளைப்பவள் அம்பாள்.

*576*  மத்தா-  மேலே சொன்ன ஆனந்த பரவச நிலையில் ஆழ்ந்து இருக்கும் பரமானந்த ஸ்வரூபம் அம்பி அம்பாள்.

*577* மத்ருகா வர்ண ரூபிணீ-    சமஸ்க்ரித அக்ஷரங்கள் 51ம் மத்ருகா  எனப்படும் வரிசையில் உள்ளன. அவை ஆறு பகுதிகளாக பிரிபடும்.  ஆறு சக்ரங்களாக வழிபடப்படும்.  மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா சக்ரம் வரை. வித வித வண்ணங்கள் கொண்டவை. பிரபஞ்ச சாஸ்த்ர சம்பந்தமுள்ளவை.  சிவ  சக்தி ஜீவன் உள்ளவை.  அவற்றின் சப்தம்  சப்த ப்ரம்மம்.  அக்ஷரங்கள் தாய்  என்பது தான் மாத்ருகா. ஸ்ரீ சக்ரத்தின் ஆதாரம்  இந்த அக்ஷரங்கள்.  ஸ்ரீ சக்ர வழிபாட்டில்  கைலாச ப்ரஸ்தாரத்தை தவிர   மேரு ப்ரஸ்தாரம்  பூ ப்ரஸ்தாரம் என்றும் இரு பிரிவுகள் உண்டு.  ப்ரஸ்தாரம் என்பது மேலே அழைத்து செல்லும்  மாடிப் படிக்கட்டுகள் என்று எடுத்துக் கொள்வோம்.

சக்தி பீடம்.    GAYA  MANGALAGOWRI  TEMPLE

பீகாரில் உள்ள மங்கள கௌரி ஆலயம்  பற்றி பத்ம புராணம், வாயு புராணம், அக்னி புராணம், தேவி பாகவத புராணம்,  மார்க்கண்டேய புராணம் எல்லாம்   அறிந்திருக்கும்போது நமக்கு தெரியாதது  தப்பல்லவா?  ஆகவே உடனே தெரிந்து கொள்ள வேண்டும்  என்பதற்காக இந்த குறிப்புகள்.

இது 15ம் நூற்றாண்டு கோவில்.  கயா ஒரு முக்கியமான புனித க்ஷேத்ரம். மங்கள கௌரி வாரி வழங்கும் அன்னை. இதை  உபசக்தி பீடம் நபர். சதி தனது தந்தை தக்ஷன் வளர்த்த யாகத்தில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டபோது  சினம் கண்ட பரமேஸ்வரன் சதியின்  கருகிய உடலைச்சுமந்தவாறு கோர தாண்டவம் ஆடுகிறார். சதியின் உடல் பல கூறுகளாக சிதைந்து பூமியில் விழுந்த  51 க்ஷேத்ரங்கள் சக்தி பீடம் என்று வழிபடப்பட்டு வருகிறது. சதியின்  மார்பகம் விழுந்த இடம் தான் பீகாரில் மங்களகௌரி ஆலயம். மார்பகம் தான்  சிசுக்களாக இருந்த போது நமக்கு உணவளித்து காப்பாற்றிய தாயின் உடலில் ஒருபாகம். .

கிழக்கு பார்த்த இந்த ஆலயம் மங்களகௌரி குன்றின் மேல் உள்ளது. மலை மேல் வாகனங்கள் செல்கிறது. ஆலய வாசலில் ஒரு சிறு மண்டபம்.  சிவனுக்கு இரண்டு குட்டி கோயில்கள்  உள்ளன. மகிஷாசுர மர்த்தினி துர்க்கா தக்ஷிண காளி ஹனுமான், ஆகியோருக்கு சந்நிதி உண்டு.   மலைப்படி  ஏறும் போது  முதலில் பீமனுக்கு ஒரு கோவில் இருக்கிறது.  இங்கு அவன் ஸ்ராத்த கர்மா செயதானாம் பீமவேதி கயா  என்பார்கள் இதை.

200 படி மேலே ஏறினாள் தான்  மங்கள கௌரியை தரிசிக்க முடியும். தீப ஒளியில் சதிதேவியின் மார்பகத்தை விக்ரஹமாக தரிசிக்கலாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...