Friday, July 3, 2020

GITANJALI

கீதாஞ்சலி      ஜே   கே   சிவன்  
தாகூர் 

                     5   கண்ணா  கருமை நிற வண்ணா.....

 5. ASK FOR A moment's indulgence to sit by thy side.

The works that I have in hand I will finish afterwards.
Away from the sight of thy face my heart knows no rest nor respite,
and my work becomes an endless toil in a shoreless sea of toil.
To-day the summer has come at my window with its sighs and murmurs;
and the bees are plying their minstrelsy at the court of the flowering grove.
Now it is time to sit quiet, face to face with thee,
and to sing dedication of life in this silent and overflowing leisure.

தாகூரை  எழுத்துக்கு எழுத்து மொழி பெயர்த்து பயனில்லை.  அவர் எழுத்தின்  பலத்தை, சக்தியை, உணர்வை முடிந்தவரை நாம் வெளிப்படுத்த  இயலுமானால்  எந்த யுக்தி, உத்தியை வேண்டுமானாலும் கைக் கொள்ளலாம்.  பாரதியை  தாகூரை  ரசிக்க அவர் உணர்வு நமக்குள் இருக்க வேண்டும். அதுபோதும். வார்த்தைகள்  அவற்றின் அடையாளங்கள். அவ்வளவு தான்.

++
கொஞ்சம் நான் சொல்வதை செவி மடுக்கிறாயா கிருஷ்ணா...!  உன் பக்கத்தில்  அமரட்டுமா? கொஞ்சம்  அனுமதி.  நான் உன் பக்கத்தில் உட்காரவேண்டுமானாலும்  அனுமதித்தால்  ஓடி வந்து அமர்கிறேன். அப்படி  நீ  என்னை சரி என்று அனுமதித்தால்,  அப்புறம் கூடவா என் கையில் உள்ள புத்தகங்களையோ,  நான் எழுதுவதையோ  தொடர்ந்து கொண்டிருப்பேன். அப்படியே  வீசிவிட்டு அப்புறம்  பார்த்துக்கொள்ளலாம் என்று  பறக்க மாட்டேனா.    கரையே  இல்லாத கடல் போல் வேலைகள்  இருந்தாலும் அஞ்சவில்லை. நீ இருக்கையில் அவை என்னை அச்சுறுத்தாது.

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல, உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல. அப்படி உன்னை நினையாத நாள் ஏதாவது இருந்தால் அது பிறவா நாளே. என்னால்  உன்னை நினைக்காமல், உன்னை  காணாமல்  இருப்பது  என்பது  நரகவேதனை.  உன்  முகம்  மனதில் காணாதபோது கூட,  அப்பப்பா, என் இதயம் துடிப்பதை எப்படி சொல்வேன்.  நிலை கொள்ளாது தவிக்கும் நேரம் அது.  


மாரிக்காலம்  ஓய்ந்து    வசந்தம் தேய்ந்து   பனிக்காலம் மறைந்து,  இதோ வேனில் காலம் வந்துவிட்டது. சூரியன் தங்கச் சிலம்பாக கிழக்கில்  காட்சி அளித்து  அவன் கோடிக்கணக்கான கிரணங்களால் உள்ளே வர   ஜன்னலை தட்டுகிறான்,   சாளரத்தில் நுழைகிறான். 

 உன்னை  என் எழுத்தில் வடிப்பதற்கு எல்லை ஏது ?  என் பாடல், சொல்லாடல், கதை, காவியம், கட்டுரை, சொல்   எல்லாவற்றிலும் நீயே அல்லவோ என் நாயகன், நீ அதில்  காணாவிட்டால்  எனக்கு  தீராத தாகம், எங்கோ  கடும் பாலைவனத்தில் நீரில்லாமல் தவிப்பது போல் என்று வைத்துக் கொள்,  கரையே  இல்லாத கடலில் தத்தளிப்பது போல் என்றும் சொல்லலாம்.

 வெயில் இரக்கமின்றி  கொளுத்த  ஆரம்பித்து விட்டது. கோடை காலம். ஜன்னலில் கம்பி வழியாக  நுழைந்து சுள்ளென்று என்ன பாடு படுத்துகிறது பார். எதை பற்றவைக்கலாம் என்றல்லவா  தேடுகிறது?   ஜன்னல் வழியாக என் தோட்டம் நல்லவேளை பச்சையாக தெரிகிறது. அதில் கருவண்டு கூட்டங்கள் ம்ம்ம்ம் என்று ரீங்காரம் செய்து  கொண்டு   நீதி மன்றத்தில் கருப்பு கோட்டுகள்  சுற்றி சுற்றி வருவதைப் போல, பூக்களை வட்டமிடுவது பார்க்க ரசிக்கிறது.

எங்கும் அமைதி, நிசப்தம்.  இதோ உன்னைக்கண்டு விட்டேன், உன் எதிரிலே, ஒட்டிக்கொண்டு உட்காரும் நேரம். உன் முகத்தையே அசையாமல்  பார்க்கிறேன். அது ரொம்ப பிடிக்கும் எனக்கு. என் ஜீவனையே உனக்கு அர்ப்பணித்து மனத்தில் அன்போடு  நான்  பாடுகிறேன்.. கேள், எங்குமே  ஆனந்தம் , அமைதியெல்லாதென் மனத்தில் அமைதி பொங்குகிறது.. உன்னை கண்மூடி ஏன் பாடுகிறேன் தெரியுமா. என் கண்ணுக்குள் கண்ணான கண்ணன் அல்லவா நீ. அதனால் தான்.......                                         

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...