Friday, April 26, 2019

SUR SAGARAM

சூர் சாகரம்    J K SIVAN 

ஸூர்தாஸ்
                                                         ஹே கோவிந்தா.

சூர் தாசரை வடக்கத்திய ஊத்துக்காடு  வேங்கட சுப்பையர் என்பதா, குருவாயூரப்பனை நேரில் கண்டு பேசிய மேல்பத்தூர் நாராயண பட்டாத்ரி என்பதா,    அல்லது  அவரும்  ஒரு  பில்வமங்களா, சைதன்யரா? '' ''ஆம்/ இல்லை'' ரெண்டும்  சரி.  ஏனென்றால்,  மேலே சொன்னவர்களை போல இல்லை கண்ணற்ற சூர் தாஸ்.    கண்ணனை மனதால் கண்டவர்.விழியில்லையே தவிர   சிந்தையிலே அந்த சின்னக்கண்ணனை நிலை நிறுத்திக் கொள்ள  வழி தெரிந்த அற்புத மஹான்.

அவரின் ஒரு பிரபல பாடலிலிருந்து சூர்தாசரை அனுபவிப்போம்

ஹே கோவிந்தா, ஹே கோபாலா, ரகோ சரண ஹமாரே,
அப் தோ ஜீவன ஹரே,
நிர் பிவனு ஹேது தரணு கையோ சிந்து கே கினாரே (ஹே கோவிந்தா)
சிந்து பிச்சா பஸது க்ராஹ சரண தரித பச்சறே            (ஹே கோவிந்தா)
துவாரக்கு மேம் சபது கையோ சோறு பியோ பாரே,
சங்கு சக்ர கதை பத்ம கருதலே சிதரே (ஹே கோவிந்தா)
சூர் கஹே ஷ்யாம் சுனோ ஷரனே திஹாரே
அப் கி பார் பார் கரோ நண்டு கே துலாரே  (ஹே கோவிந்தா)

Hey Govind hey Gopal
Hey Govind rakho sharan
Aab to jivan hari --(2)
Neer pivan heytu gayo
Sindhu ke kinare
Sindhu beech basat grah
Charan dhari pachhare
Hey Govind hey Gopal
Chaar prahar yudha bhayo
Ley gayo mazdhare
Naak Kaan Dooban lagey
Krishna ko pukare
Hey Govind Hey Gopal
Dwarika me Sabd gayo
Shor bhayo bhare
Shankh Chakra Gada Padma, Garud ley sidhare
Sur kahe shyam suno sharan hai tihare
Aab ki bar paar karo, Nand ke dulare
Hey Govin Hey Gopal

''அடே குட்டி கிருஷ்ணா, ஒண்ணு மட்டும் செய்யேன்'''
''என்ன தாத்தா  நான் என்ன செய்யணும்? என்றான் கிருஷ்ணன்.
''''என்னை எப்போவும் உன்கிட்டேயே வச்சுக்கோ! நீ தானே என்னை ரக்ஷிக்கணும். உனக்கு தெரியாதா, நான் இதோ இப்பவோ இன்னும் கொஞ்சநாளோ?''   என் வாழ்க்கை முடியப்போறதே.
அன்னிக்கு சிந்து நதிக்கரையில் என்னாச்சு மறந்து போச்சா?
என்ன நடந்தது  நீயே சொல்லு தாத்தா?''
தாகத்திற்கு நீர் அருந்த கஜேந்திரன் ஆற்றில் காலை வைத்து இறங்கினான்.
எதை சாப்பிட்டு இன்று பசியாறலாம் என்று ஒரு முதலையும் அப்போது அந்த நதியில் காத்திருந்ததே.  அடடா,  நமக்கு கிடைச்ச  வரப்பிரசாதம் என்று யானையின் காலை பிடித்து கவ்வியது. உயிர் காத்துக் கொள்ள கஜேந்திரன் அதை எதிர்த்தான். வந்த ஆகாரத்தை விடுவேனா என்று முதலையும்  விடவில்லை. உயிரா, பசியா? எது வெல்லும்?. அதுவும் நீரில் முதலை பல யானைகளுக்கு சமம். பன்னிரண்டு மணி நேர போராட்டம். முதலையின் கை ஓங்கி யானையை இன்னும் ஆழத்திற்கு இழுத்துக்கொண்டு போகிறது.

யானைக்கு தெரிந்து விட்டது. நம் சக்தி விரயமாகிக்கொண்டு வருகிறதே. இனி உதவி வெளியேயிருந்து தான் வரவேண்டும். யார் உதவுவார்கள்? 

''கிருஷ்ணா, கிருஷ்ணா, துவாரகா நாதா'  ஆதி மூலா'' .... யானையின் சோக ஒலி துவாரகை சென்று அரண்மனை கதவை படார் படார் என்று இடித்தது.
''கிருஷ்ணா உனக்கு அவசரம் புரிந்து விட்டது. எங்கே கருடன்? நொடியில் கருட  வாகனனாக சங்கை ஒலித்துக் கொண்டு (''நான் வந்துவிட்டேன் '' என்று தைரியம் சொல்ல ) கதாயுதத்தோடு பறந்தாயே. ''இதோபார்,  இதைக் கேள்.  நான் உன்னை அண்டி வந்தேன். என்னைக்  காப்பாய் என்று கதறுகிறேன். முதலையை காத்ததுபோல் இந்த பவ சாகரத்திலிருந்து, உலக வாழ்க்கை கடலிலிருந்து  என் ஐம்புலன்களாகிய முதலைகளின்  பிடியிலிருந்து  என்னை மீட்பாய். நந்த குமாரா !
சூர்தாஸை அவரது பிரிஜ் பாசி மொழி தெரிந்து படித்தால்  அவர் இன்னும் மணம்  வீசுவார். நாம் கொடுத்து வைத்தது ஆங்கில மொழி பெயர்ப்பில். எதிலாவது திருப்தி அடையவேண்டாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...