Monday, November 27, 2017

NEETHI SATHAKAM

ராஜா பர்த்ருஹரியின்  நீதி சதகம்:            
                                                                                           
                                              சுபாஷிதம்  - 9

यस्यास्ति वित्तं स नरः कुलीनः
स पण्डितः स श्रुतवान्गुणज्ञः ।
स एव वक्ता स च दर्शनीयः
सर्वे गुणाः काञ्चनम् आश्रयन्ति

yasyāsti vittaṃ sa naraḥ kulīnaḥ
sa paṇḍitaḥ sa śrutavānguṇaṅñaḥ |
sa eva vaktā sa ca darśanīyaḥ
sarve guṇāḥ kāñcanam āśrayanti || 1.41 ||

யஸ்யாஸ்தி வித்தம் ஸ னரஃ குலீனஃ
ஸ பண்டிதஃ ஸ ஶ்ருதவான்குணஜ்ஞஃ |
ஸ ஏவ வக்தா ஸ ச தர்ஶனீயஃ
ஸர்வே குணாஃ காஞ்சனம் ஆஶ்ரயன்தி || 1


குப்புசாமி  ஐந்தாவது  தாண்டாதவன்.   சுட்டுப்போட்டாலும் படிப்பு  ஏறாதவன். அதனால் என்ன?.அவன் தந்தை பாட்டனார்கள் மரத்தில் கள் இறக்கி விற்று காசு பண்ணினவர்கள். ஊரெல்லாம் பனந்தோப்பு. நிலம் நீச்சு. அநியாய வட்டிக்கு விட்டு பணம் குட்டி போட்டு மூட்டை மூட்டையாக இருக்கிறதே.  ராஜா மாதிரி ஜமீன்தார்.  அவனை சுற்றி யாசிக்கும்  பலர். நிறைய படித்த பண்டிதர்கள். கவிஞர்கள், புலவர்கள்.  அவர்கள் என்ன சொல்கிறார்கள் அவனைப் பற்றி ?  அடாடா  இவர்  ராஜ குடும்பம் ராமன் மாதிரி, கிருஷ்ணன் மாதிரி, கல்வியில் வியாசர், யஞவல்க்யர்.  குணம் பற்றியா?  கரும்பு கூட கசக்கும் அவ்வளவு இனிய குணம்.  தங்கமான மான  தாராள குணம். கடல் மடை திறந்தால்  போல  ஞானம் நிரம்பிய பேச்சு. அழகும் கம்பீரமும் இவன் தான் மன்மதனோ? என்று திகைக்க வைக்கும்.  ''   இதெல்லாம்  எதனால்..... குப்புசாமி  கொடுக்கும்  பரிசு, திரவியம், பணம்.... இதற்காக??  இப்பவும் பார்க்கிறோமே  நிறைய படித்த ஆசாமிகள் கூட  சில  அயோக்கியர்கள் பின்னால் ஆதாயத்துக்கு  சுற்றுவதை...  பணம் பத்தும் செய்யும் என்பார்கள்  இல்லை  அது பார்த்தும் பார்க்கமால் கூட  செய்யவேண்டியதை  செய்யும். 

 दानं भोगो नाशस्तिस्रो
गतयो भवन्ति वित्तस्य ।
यो न ददाति न भुङ्क्ते
तस्य तृतीया गतिर्भवति

dānaṃ bhogo nāśastisro
gatayo bhavanti vittasya |
yo na dadāti na bhuṅkte
tasya tṛtīyā gatirbhavatI

தானம் போகோ னாஶஸ்திஸ்ரோ
கதயோ பவன்தி வித்தஸ்ய |
யோ ன ததாதி ன புங்க்தே
தஸ்ய த்றுதீயா கதிர்பவதி

சரி,   நிறைய  செல்வம் இருக்கிறது. மூட்டை மூட்டையாக  கணக்கிலோ, அதில் வராமலோ  இருக்கிறது.  என்ன செய்வது  அதை?  மூன்றே மூன்று வழிகள் தாண்டா  குப்புசாமி.   ஒன்று   எல்லோருக்கும் கொடுத்து நீயும் தேவையானதை வைத்துக்கொள்.    ரெண்டாவது  நீயே  அதை ஏகபோகமாக  அனுபவி... ஒரு சல்லிக்காசு கூட எவனுக்கும் கொடுக்காதே......  கர்ணனுக்கு எதிரியாக,  மைடாஸாக (Midas,  the miser)  வாழ்ந்து  கொள்.  மூன்றாவது வழி  நீ  தேடிபோகவேண்டாம்.  அதுவே  தானாக நேரும்.   இப்போது நடப்பது போல்  எங்கோ எவனோ சொந்தம் கொண்டாடிவிடுவான்--தெரிந்தோ தெரியமாலோ, திருட்டு,  ஏமாற்றி, கொள்ளை, நெருப்பு,சுனாமி  போலவும் கூட இழப்பு நேரலாம். 


राजन्दुधुक्षसि यदि क्षितिधेनुम् एतां
तेनाद्य वत्सम् इव लोकम् अमुं पुषाण
तस्मिंश्च सम्यगनिशं परिपोष्यमाणे
नानाफलैः फलति कल्पलतेव भूमिः

rājandudhukṣasi yadi kṣitidhenum etāṃ
tenādya vatsam iva lokam amuṃ puṣāṇa
tasmiṃśca samyaganiśaṃ paripoṣyamāṇe
nānāphalaiḥ phalati kalpalateva bhūmiḥ || 1.46 ||


ராஜன்துதுக்ஷஸி யதி க்ஷிதிதேனும் ஏதாம்
தேனாத்ய வத்ஸம் இவ லோகம் அமும் புஷாண
தஸ்மிம்ஶ்ச ஸம்யகனிஶம் பரிபோஷ்யமாணே
னானாபலைஃ பலதி கல்பலதேவ பூமிஃ

ராஜாவே, ஏ அரசனே, இல்லை அரசன்   போல  நாட்டை ஆள்பவனே,  ராஜா  பர்த்ருஹரி சொல்வதை கவனமாக கேள். நீ  ஆளும் நாடு  ஒரு  பசு மாதிரி.  பசு பால் கொடுக்கவேண்டுமானால் முதலில் அதன் கன்றுக்குட்டியை நன்றாக பராமரிக்க வேண்டும். அதற்கு போஷாக்கு வேண்டும். அது தான்  ஜனங்கள்,  நாட்டின் குடிமக்கள், அவர்களுக்கு தேவையானதை, சௌகர்யமாக கொடு.  பசு நிறைய பால் சொரியும்.  உன் நாடு அதுபோல் சுபிக்ஷமாக இருக்கும்.  கற்பகவிருக்ஷமாக கேட்டதை எல்லாம்  நாடு, பூமி, வாரி வழங்கும்.

आज्ञा कीर्तिः पालनं ब्राह्मणानां
दानं भोगो मित्रसंरक्षणं च
येषाम् एते षड्गुणा न प्रवृत्ताः
को‌உर्थस्तेषां पार्थिवोपाश्रयेण ॥ 1.48 ॥

āṅñā kīrtiḥ pālanaṃ brāhmaṇānāṃ
dānaṃ bhogo mitrasaṃrakṣaṇaṃ ca
yeṣām ete ṣaḍguṇā na pravṛttāḥ
ko‌உrthasteṣāṃ pārthivopāśrayeṇa || 1.48 ||

ஆஜ்ஞா கீர்திஃ பாலனம் ப்ராஹ்மணானாம்
தானம் போகோ மித்ரஸம்ரக்ஷணம் ச
யேஷாம் ஏதே ஷட்குணா ன ப்ரவ்றுத்தாஃ
கோ‌உர்தஸ்தேஷாம் பார்திவோபாஶ்ரயேண

நாட்டை  ஆள்கிறேன் பேர்வழி என்று தனது சுகத்தை, தேவையை பூர்த்தி செய்த்துக்கொள்பவனால் என்ன பயன்?  அதிகாரம், புகழ், நல்லவர்கள், முதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என்று எல்லோருடைய நல்வாழ்வு, தானம் தர்மம்,  செல்வத்தை எல்லோருக்கும் உதவ செலவழித்தால், நண்பர்கள்,உற்றவர்கள் பாதுகாப்பு,  இதெல்லாம்  கருதாமல், கவனிக்காமல், ஒருவன் மக்களை ஆள , முயல்வதால், அரசனுக்காக அரசுக்காக பணிபுரிந்து என்ன பயன்?  -- இப்படி  ஞாயமாக கேட்பவர்  பர்த்ருஹரி.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...