Saturday, October 26, 2019

DEEPAVALI


' லோகா ஸமஸ்தா ஸு கினோ பவந்து: '' ஜே கே சிவன் எங்கே பார்த்தாலும் 'படார் டபார்'' என்று காதைப் பிளக்கும் இடி சப்தம் கேட்கிறது. ஏதோ யுத்த பூமியில் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. தெருவில் எந்த நேரம் எது வந்து தாக்குமோ என்று பயத்தோடு தலையை நாலா பக்கமும், மேலே கீழே கூட பார்த்து செல்ல வேண்டி இருக்கிறது. செத்தது மாதிரி அசைவு இல்லாத ஏதோ ஒன்று நான் அருகில் போனவுடன் நான் தான் சஞ்சீவி பர்வதம் போல் புத்துயிர் பெற்று வெடிக்கிறது. இல்லை பறக்கிறது. வண்டியில் சென்றால் கை நடுங்கி பாலன்ஸ் தவறி விழுந்து விடுவோமோ? எதிரே யார் மீதாவது மோதிவிடுவோமோ? தெரு ஓரத்தில் சில பையன்கள் நின்றுகொண்டிருந்தால் நடுத்தெருவில் எதையோ கொளுத்திவிட்டு காத்திருக்கிறார்கள் என்று அறியாமல் சென்று ஒருவன் பட்டாசு என்று கத்தினவும் மூன்று அடி உயரம் திடீரென்று எம்ப எப்படி சக்தி வந்தது?
தெருவெல்லாம் ஏற்கனவே குப்பை. இப்போது அதிகம். கந்தக நெடி மூச்சு திணறுகிறது. ஒரு நாய் மாடு கண்ணில் படவில்லை. ஒரு பறவை மூச்சு காட்டவில்லை. கிருஷ்ணன் அவற்றை எங்கோ பதுங்க வைத்துள்ளான். காசெல்லாம் கரியாகி , கரியெல்லாம் காசாகும் நேரம் இது. போகட்டும் எல்லாம் கண்ணனுக்கே. வீட்டில் குத்து விளக்கு எரிகிறது. அதன் எதிரே புல்லாங்குழல் கையிலேந்தி ''ஆடாது அசங்காது நிற்கிறாயே ''உன் பார்வை ஒன்றே போதுமே'' வெளியே உள்ள சப்தம் என் மனதில் இல்லாமல் அமைதி ஓடட்டும். குப்பைகள் அகலட்டும். வா வந்து இரு அதில்.
''பாரோ க்ரிஷ்ணய்யா. நீ எங்கும் இருப்பவன் எல்லோர் மனத்திலும் குடி புகுந்துவிடு. என்னும் நிறைவைக் கொடு. எதிலும் நிம்மதியைக் கொடு. இயற்கையின் சீற்றமும் போதும். வறட்சியும் போதும். ''மந்திரி நமது ராஜ்யமதிலே மாதம் மும்மாரிமழை பொழிகிறதா?"" என்று இப்போதெல்லாம் கேட்க ராஜா கிடையாது. கேட்டாலும் மாதிரிக்கு தெரியாது. யாரையாவது கீழே இருப்பவனை கேட்டு தான் சொல்ல வேண்டும். சட பட என்று வானம் அடிக்கடி பொத்துக்கொண்டு பொழியட்டும். ஐப்பசி அடைமழை கார்த்திகை கன மழை பொழியட்டும். எங்கும் சுபிட்சம் நிலவட்டும். நோய் நொடி மறையட்டும். ஒற்றுமை எங்கும் நிலவட்டும். அன்பு உன் எதிரே ஒளிவீசும் தீபத்தைப் போல அழகாக ஒளி வீசட்டும். ஒரு விஷயம் மறக்காதே. கிருஷ்ணனுக்கு பிடிச்ச மாடுகளை பறவைகளை பட்டாசு சத்தத்திலே பயப்படுத்தாதே. நிறைய விளக்கு ஏற்றி பிரார்த்தனை பண்ணு. கிருஷ்ணனைப் பாடு. அது தான் தீபாவளி. தீப ஒளி தான் தீபாவளி. இனிப்பு நாக்கை தாண்டி உள்ளே இறங்கி இதயத்திலும் நிறையட்டும். நெஞ்சில் பரவட்டும். கண்ணில் கருணை தெரியட்டும். எல்லோரும் நல்லவரே. கிருஷ்ணா உன் படைப்பில் எது மட்டம்? தீபாவளி தீபாவளி தீபாவளி -- லோகா சமஸ்தா சுகினோ பவந்து. இது தானே உனக்கு பிடித்த மந்திரம். அதை திருப்பி திருப்பி சொல்கிறேன். இன்று மட்டும் அல்ல ஒருநாள் வாழ்த்தாக இல்லை. வாழ்நாள் முழுதும் எதிரொலிக்கட்டும்.தீபம் அவசியம். ஏன். இருட்டை போக்க. அதுபோல் நமது உள்ளத்திலே இருக்கிற அஞ்ஞானம் என்கிற இருட்டு போக நாம் ஞானம் என்கிற தீபத்தை ஏத்திக்கணும். இதை தான் வேதத்திலே '''தமஸோமாம் ஜ்யோதிர் கமய '' என்பது. தாமச குணமாகிய அறியாமை என்கிற இருட்டு போக ஞானம் என்கிற ஒளியைக் கொடு '' என்று கிருஷ்ணனை கேட்கிறோம். எல்லோரும் இனிப்பு கொடுத்து மற்றவர்களை உறவினர்களை எல்லாம் அன்று சந்திக்கிறது ஒற்றுமையை வளர்க்க அன்பைப் பரப்ப, நேசம் வளர, புதிய ஆடை தரித்துக்கொள்வது கூட என்ன அர்த்தத்தில் தெரியுமா? இன்றிலிருந்து நான் இதுவரை செய்த தவறுகளை செய்யாமல் திருந்தி புத்தம் புதியவன். என் பாபங்கள் இன்று விடியலில் நான் குளித்த நீரில் கங்கை இருந்து அவற்றை அழித்து என்னை புனிதனாகட்டும் என்று உணர்வதற்காக. அதனால் தான் ''கங்கா ஸ்நானம் ஆச்சா ?'' என்று கேட்பது. குழாய் தண்ணி, கிணற்று தண்ணி, காசு கொடுத்து வாங்கின எந்த தண்ணியும் தீபாவளி அன்று காலை புனித கங்கை நீர் தான், புரிகிறதா'

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...