Wednesday, October 16, 2019

SUR SAGARAM



சூர் சாகரம்   J K  SIVAN 


                                                எழுந்திரப்பா !

அதோ பார்  மேலே   கருப்பாக இருந்த  உச்சி வானம் வெளுக்க ஆரம்பித்து விட்டது.  கீழ் வானம் சிவந்து விட்டது.

எழுந்திருடா  கிருஷ்ணா.  உன் தாமரை இதழ் கண்களை  திறவாய்.  அழகிய அல்லி விழிகளை மெல்ல  மெல்ல திற .


வயிறு முட்ட  தேனைக் குடித்துவிட்டு தேனீக்கள் திருப்தியாக  ரீங்காரம் பண்ணிக்கொண்டு மலர்களை விட்டு கிளம்புவதைப்  பார். செடிகளும் கொடிகளும் காற்றில் ஒரு புது நாளை வரவேற்க என்னமாக  ஆடுகின்றன பார்.
''கொக்கரக்கோ'........'  எங்கோ  ஒரு சேவல் கத்த  பல திசைகளிலிருந்தும் எதிரொலி போல் மற்ற சேவல்களும் கத்துவது வேடிக்கையாக இல்லை?

மடியில் பால் சுமந்து பசுக்கள் தொழுவங்களில் கன்றுகளை தேடுகிறதா? அல்லது  உன்னைத்  தேடுகிறதா போய்ப்பார்.

எனக்கு  ''டூட்டி''  முடிந்துவிட்டது நண்பா  என்று சந்திரன் விடைபெறுகிறான். சூரியனும் அவனுக்கு ''குட் மார்னிங்''  சொல்கிறானே.

ஆயர்பாடி உயிர் பெற்றுவிட்டது.  கோபியர் எழுந்து விட்டனர். கலீர் கலீர்  என்று அவர்கள் கால் தண்டை கொலுசு   கை வளையல் சப்தம் கேட்கிறதே.   கோபர்கள்  ஏற்கனவே  எழுந்து  யமுனை ஆற்றங்கரைக்கு சென்று விட்டார்களே. அவர்கள்  உன்னைப்  பாடும் சப்தம் கேட்கவில்லையா?

தாமரைக் கண்ணா  எழுந்திரு  இன்று நிறையவே  நீ விளையாட வேண்டுமே. அதைக்  காணவே தானே  பொழுதும் விடிந்து விட்டது.

சூர் தாஸின்  கவிதைநயம் என்னை எங்கோ கொண்டு போய் விட்டது.

Awake, Krishna,
awake the lotus-petals
open the water-lilies droop
the bumblebees have left
the creepers cocks crow,
and birds chirp on the trees.
The cows are in the byre lowing;
they run after their calves;
the moon fades before the sun.
Men and women arise
and joyfully sing their songs;
Krishna, of hands lotus-like awake,
for the day is about to dawn.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...