Tuesday, August 13, 2019

SHEERDI BABA



ஷீர்டி சாயிபாபா J K SIVAN ஸாய்  ஸத் சரித்திரம்
 
  

 10  பொறுத்தார் பூமி ஆள்வார்.

ஸாயி  சத் சரித்திரம் எழுத  ஆரம்பித்து சிலநாளில் ஒரு திருப்பம். .
நேற்று அபிராமபுரம் பக்கம்  வாரன்  தெருவில் ஒரு அமைதியான வீட்டில் ஒரு ஆன்மீக தம்பதியரை சந்திக்க ஒரு சந்தர்ப்பம் நிகழ்ந்தது.  சுந்தரராமன் ஒரு chartered அக்கௌன்டன்ட்.  அவர மனைவி  ஒரு விஞ்ஞானி என்று பட்டம் பெற்றாலும்  இருவரும் மொத்தத்தில் ஸாயீ பக்தர்கள். வீடே ஒரு குட்டி  ஷீர்டி-புட்டபர்த்தி  ஆலயமாக தோன்றியது. எங்கும் பாபங்கள் அகல பாபாக்கள் அருள் பார்வை, அபய  ஹஸ்தம். கருணை பார்வைகள்.  கிருஷ்ணன் வண்ண சிலையாக ''வா  சிவா  வா '' என்று  புன்னகைத்தான். பூஜை அறையில் பாபாவின் ஆசனம். அவரே அடிக்கடி அங்கு வந்து பிரசாதங்களை எடுத்துக் கொள்கிறார் என்று கேட்டபோது மயிர்க்கூச்செரிந்தது. அந்த குடும்பத்துக்கு ஷீர்டியிலிருந்து  சிவராத்திரி அன்று  நேரடியாக 'பாபாவால்  அபூர்வமாக  கண் இமைக்கும் நேரத்தில் உருவாக்கப்பட்டு  அளிக்கப்பட் ட   ஸ்படிக லிங்கங்களை  பார்த்தேன். ஒன்றில் பாபாவின் உருவம் கூட லேசாக தெரிகிறது.  ஷீர்டி பாபாவின் பாத, பாதுகா தர்சனம் எங்கும்..
இந்த ஆன்மீக தம்பதியர்  இருவரும்  போட்டிபோட்டுக்கொண்டு  எத்தனையோ பள்ளிகளில்,  பால விகாஸ் நிறுவனங்களில் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள் போதிக்கிறார்கள். ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா ட்ரஸ்ட் நிறுவனமும் இவர்களோடு சேர்ந்து கொண்டு தங்களால்  இயன்ற சேவையை செய்ய  ஈடுபட  எண்ணம் கொள்கிறது.  இது தான் ஸத்ஸங்கம்.  கிட்டத்தட்ட  ஒரு மணிநேரம் அவர்களது   பாபா  லீலா விபூதி அனுபவங்களை ஆர்வத்தோடு கேட்டு அவர் அளித்த ஒரு அருமையான புத்தகத்தோடு  '' ஸ்ரீ ஷீர்டி  ஸாயி ஸஹஸ்ரநாம விரிவுரை'' யோடு  திரும்பினேன். அறுநூறு பக்கங்கள் கொண்ட  அரைக்கிலோவுக்கு மேல்  எடை கொண்ட   அருமையான பதிப்பில் வெளிவந்த அந்த புத்தகத்தின் விலையை தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.   ஆமாம்.
அந்த புத்தகத்தின் விலை '' நான்கு பைஸா .: 1. பக்தி.  2. ஸ்ரத்தை 3. பொறுமை 4. விடாமுயற்சி''   இந்த பைசாக்கள் நம்மில் அநேகரிடம் இல்லையே!  என்பது தான் வருத்தமான விஷயம்.
++
ஸாய்  சத் சரித்ரம்  எழுதிய  தபோல்கர் 1916ல் அரசாங்க உத்யோகத்தில் ஒய்வு பெற்று கிடைத்த பென்ஷன்  குடும்ப செலவுக்கு போதவில்லை.  குரு பூர்ணிமா அன்று ஷீர்டிக்கு  சில பக்தர்களோடு  செல்கிறார். அண்ணா  சிஞ்சலிகர் என்ற நண்பர்  பாபின் அருகே இவர்கள் கைகூப்பி  நிற்கும்போது மெதுவாக ஆரம்பிக்கிறார்.
''பாபா  இதோ இருக்கிறாரே  தபோல்கர், அவர்மீது  தங்களது  அருள்பார்வை செலுத்த வேண்டுகிறேன்.  அவர் குடும்பம் பெரியது. அவரது பென்ஷன் வருமானம் போதாது. அவருக்கு ஏதாவது ஒரு வருவாய்  தரும் உத்யோகம் கிடைக்க அருளவேண்டும். '' சிஞ்சலிகர் வேண்டுகோளை செவிமடுத்த பாபா தபோல்கரை நோக்கி
''தபோல்கர், உனக்கு வேறு வேலை கிடைக்கப்போகிறது.  அதற்குள் நீ எனக்கு சேவை செய், என்னோடு  சந்தோஷமாக இருப்பாய். உனக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கும். பக்தி உணர்வற்ற தீயோர்,  நாத்திகர் நட்பு வேண்டாம். என்னோடு இரு.  மனதாலும் செயலாலும் நிதானம், அமைதி பொறுமை வேண்டும். என்னை வழிபடு. நிரந்தர ஆனந்தம் கிட்டும்'' என்கிறார். எத்தனை பேருக்கு இந்த பாக்யம் கிட்டும்.
பாபாவின் அளவற்ற அன்புக்கு உதாரணமாக ஒரு சம்பவம்  சொல்கிறேன்
ரோஹில்லா என்ற ஒரு உயரமான திடகாத்திரமான காளை  போன்ற ஒருவர் ஷீர்டி வருகிறார்.  அவரும் நீண்ட அங்கி  kafni  உடுத்தவர். யார் இந்த ஸாயி பாபா  என்று அவரை பார்க்க ஆர்வம். மசூதியில் தங்குகிறார்.  உரக்க  காலை  மாலை வேளைகளில், இரவு பகலாக  திருக்குரானிலிருந்து கல்மா  kalma  பாராயணம் செய்வார். அல்லா ஹோ  அக்பர் என்று உரக்க கத்துவார்.  (God is Great).  ஷீர்டி வயல் சூழ்ந்த அமைதியான பகுதி. ஆண்கள், பெண்கள், குடும்பத்தோடு வயலில் உழைத்து இரவில் வீடு திரும்பும் போது  அருகாமையில் இருந்த மசூதியில்  ரோஹில்லாவின் குரல் அவர்கள் கவனத்தை கவரும்.  அண்டை அசல் வீடுகளில் இரவில் தூக்கம் கெட்டது . என்ன செய்வது யாரிடம் சொல்வது?  கஷ்டத்தைப்  பொறுத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். சில காலம் ஓடியது.   ஒரு சமயம் அது பொறுக்க முடியாமல் போனபோது அவர்கள் ஸாயிபாபாவை  சென்று பார்க்கிறார்கள்.
''நாளெல்லாம் பாடு பட்டு உழைக்கிறோம். எங்கள் குடும்பம் நிம்மதியாக  இரவில் தூங்க முடியவில்லை. ரோஹில்லாவின் கூச்சல் தொந்தரவு குறைய நீங்கள் தான் அருள வேண்டும்'' என வேண்டுகிறார்கள்.
பாபா  ஒன்றும் பேசவில்லை. பேசாமல் அவர்களைப் பார்த்துக்கொண்டே  சிலையாக இருந்தார்.  திடீரென்று
''நீங்கள் போய் உங்கள் வேலையை பாருங்கள். ரோஹில்லாவை பற்றி என்ன கவலை?  அவர் வேலையை அவர் பார்க்கட்டும்.  போங்கள்.   உங்களுக்கு அவர் கஷ்டம் தெரியுமா.  இறந்த அவர் மனைவி சாந்திபி கெட்டவள்.  என்னையும்  அவரையும் அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிறாள். படுத்துகிறாள்.  உரக்க அவர் எழுப்பும் கடவுள் நாம சப்தம் அவளை விரட்டுகிறது.  நாங்கள் இருவருமே கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம்.
நன்றாக பின்னர் யோசித்தபோது ரஹஸ்யம் புரிந்தது.  ரோஹில்லாவுக்கு மனைவி இல்லை . தொந்தரவு தொல்லை கொடுப்பது  ஒருவரின் துர்புத்தி, தீய எண்ணங்கள் மட்டுமே.  அதைத் தான் ரோஹில்லாவின் மனைவி என்கிறார் பாபா.  கடவுள் நாமம், அதை உரக்க சொல்வது ரொம்ப நல்லது, மனது இதமாக இருக்கும். அதை தான் ஆதரிக்கிறார் பாபா. ரோஹில்லாவின் செயலை ஒரு குறையாக பார்க்கவில்லை. அமைதியாக இருங்கள் நாளாவட்டத்தில்   சரியாகிவிடும் என்று அந்த கிராமத்தார்களை  அனுப்பிவைத்தார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...