Thursday, June 4, 2020

RASA NISHYANDHINI



ரஸ நிஷ்யந்தினி     J K   SIVAN  

                                                               ராமன் புருஷோத்தமன்  

கைகேயியின்  மனத்தை முழுதுமாக  கலைத்து விட்டாள்  மந்தரை. எடுத்த  காரியத்தை வெற்றிகரமாக முடித்தாள் மந்தரை.
தசரதனை  கிடுக்கிப்பிடி போட்டு அவன் கொடுத்த  இரு வரங்களை இரும்பு கவசமாக்கிவிட்டாள் . பரதன் பாராள்வான் . பட்டாபிஷேகம்  மறுநாள் நிச்சயிக்கப்பட்ட நிலையில்  பட்டாபிராமன் பதினாலு வருஷம் காடாள்வான்.

வரங்களும் சாபங்களும் இன்ப துன்பத்தை மாறி மாறி தருவன. இதோ சுமந்திரன் தேரை கொண்டு வாசலில் நிறுத்தி விட்டான். ராமன் லக்ஷ்மணன் சீதை மூவரும்  மரவுரி தரித்து கானகம் செல்லப்போகிறார்கள்.  தேர் கிளம்பிவிட்டது. அதன் புழுதி மறைவதற்குள்  தசரதன் மறைந்துவிடப்போகிறான்.
கங்கைக்கரையில் தேர் நின்றது.  குதிரைகள் அவிழ்த்து விடப்பட்டன.
குகன்  எதிரே நிற்கிறான். இனி அவன் பாதுகாப்பில் ராமன் என அறிந்து சுமந்திரன் மன சஞ்சலம் குறைகிறது.
குகன் நிறைய  உணவு பண்டங்கள்,  சௌகரியமான படுக்கை விரிப்புகள் , ராம லக்ஷ்மணர்களுக்கு தேவையான பூஜா சாமான்கள், வஸ்துக்கள் எல்லாமே கொண்டுவந்துவிட்டான். 

''என் குகனே, உன்னுடன்  நாங்கள்  நால்வர்  இனி ஐவரானோம்''  என கட்டி அணைத்தான். 
'' நீ கொண்டு வந்து அன்போடு அளித்த இவைகள் அனைத்திற்கும் உனக்கு மனமார வந்தனம் '
ஆனால்  நான்  விரத மேற்கொண்டுள்ளேன்.  தரையில் குசம் எனும் புல்லின் மேல் தான் எனக்கு படுக்கை  மரப்பட்டை மாற உரி, மான் தோல்  இவையே என் உடைமைகள். மரங்களில் இருந்து உதிர்ந்த காய் கனி கிழங்குகள்  இவையே எனக்கு ஆகாரம்.  ஆகவே  உன் பொருள்கள்  அனைத்தையும்  தயவு செய்து   திரும்ப  உன்னோடு எடுத்துச் செல். நீ கொண்டுவந்தவற்றில்  எதெல்லாம்  இந்த குதிரைகளுக்கு  உணவாகுமோ அவற்றை மட்டும் அவைகள் அனுபவிக்கட்டும்.
இவை என் தந்தை தசரதனுக்கு பிரியமான குதிரைகள். அவை சந்தோஷப்படட்டும்.
 ராமனின்  தாராள மனசு இதில் நமக்கு புரிபடுகிறது.

இனி  பருத்தியூர் பெரியவா அருளிய  ரஸ  நிஷ்யந்தினியில் அடுத்து ஐந்து  ஸ்லோகங்களை அனுபவிப்போம்:  86-90.

86. एनं बहिरन्ये शरीरिणं पश्यन्ति सदोषा अपीति त्वम् अयम् 'अन्तश्शरीरे ज्योतिर्मयो हि शुभ्रो अमुं पश्यन्ति यतयः क्षीणदोषाः' इत्यहम् ।

ஏனம்   பஹிரண்ஏ  சரீரிணம்  பஸ்யந்தி  ஸதோஷா  அபீதி  த்வம் ; அயம்  அந்தஸரீரே  ஜ்யோதிர்மயோ  ஹாய்  சுப்ரோ அமும்  பஸ்யந்தி   யதய ; க்ஷீண தோஷா; இத்யஹம்

''தசரதா ,   ஸ்ரீ ராமனை ,   நற்குணம் அற்ற, குறைபாடுடையவர்கள் கூட அவனை ஒரு  மனித உடல் கொண்ட  ராமனாக பார்க்கமுடியும் என்று நம்புகிறாயே, அவனை காண்பது எளிதா?  அவன் நுண்ணிய உருக்கொண்ட பரமாத்மா, புனித தெய்வீக ஒளி வீசும் ஜோதி.  குறையொன்றுமில்லாதவர்கள் மட்டுமே உணர முடிந் தவன்.''

 87. एष सूनुः अस्माकं चक्षुषा वेदितव्य इति त्वम् 'एषोऽणुरात्मा चेतसा वेदितव्यो, यस्मिन् प्राणः पञ्चधा संविवेश, प्राणैश्चित्तं सर्वमोतं प्रजानां, यस्मिन् , विशुद्धे विभवत्येष आत्मा' इत्यहम् ।

ஏஷ  ஸுனு ; அஸ்மாகம் சக்ஷுஷா  வேதிதவ்ய  இதித்வம்;  யேஷோணுரத்தம் சேதஸா வேதிதவ்யோ   யஸ்மின்  பிராண; பஞ்சதா சம்விவேஷ   ப்ராணோஸ்சித்தம்சர்வமோதம்  ப்ரஜாநாம்  யஸ்மின்  விஷத்தே  விபவத் யேஷ ஆத்மா இத்யஹம் ;

88. एनं बलहीनाः प्रमादवन्तः अलिङ्गतपस्काश्च लभ्यः न च प्रमादात् तपसो वाप्यलिङ्गात्, एतैरुपायैर्यतते यस्तु विद्वान् तस्यैष आत्मा विशते ब्रह्म धाम' इत्यहम् ।

ஏனம்  பலஹீனா ;ப்ரமாதவந்த ; ஆலிங்கத பஸ்காஸ்ச  லப்ய;   ந ச ப்ரமாதாத்  தபசோ  வாப்யாளிங்காத்  ஏதை ருபாயைர் யததே  யஸ்து  வித்வான் தஸ்யைஷ  ஆத்மா  விசாதே ப்ரம்ம தாம  இத்யஹம்  

''ஏதோ பூஜை, விரதம், மூலம் அவனை காணமுடியும் என்று நினைக்கிறாய் நீ  தசரதா. அப்படியல்ல.  ஆத்ம ஞானம், ஆசாரம் அனுஷ்டானம் இல்லாதவர்கள் அவனை காண்பது அரிது. அவன் ப்ரம்ம ஸ்வரூபம்  ''

89. सम्प्राप्यैनं बहवो मानतृप्ताः भविष्यन्तीति त्वम्, 'सम्प्राप्यैनमृषयो ज्ञानतृप्ताः कृतात्मानो वीतरागाः प्रशान्ताः' इत्यहम् ।

ஸம்ப்ராப்தயைன  பஹவோ  மானத்ருப்தா: பவிஷ்யந்திதி  தவம் ; ஸம்ப்ராப்தயைநம்மருஷயோ  ஞானத்ருப்தா; க்ருதாத்மானோ  வீதாராகா ; பிரசாந்தா; இத்யஹம்

89. சில பேர் பிரபலமானவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டு மகிழ்வார்கள்.. அந்த காலத்தில் இதுவும்  உண்டோ ? என் நண்பன் குப்பை காகிதங்களில் கூட   அந்த கால   சினிமா நடிகர் தியாகராஜ பாகவதர் படங்களை சேகரித்து நோட் புஸ்தகத்தில் ஒட்டி வைத்து மூன்று வேளையும்  பார்த்து மகிழ்வான்....!!! எனக்கு தெரிந்து அவன் ஐந்தாம் வகுப்பை வாழ்க்கையில் தாண்டவே இல்லை.. கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில்  குதிரை வண்டி ஒட்டி வாழ்ந்தான்.

 விஸ்வாமித்ரர் கேட்கிறார்  ''தசரதா ,  ராமனை  அறிந்தவர்கள் பார்த்தவர்கள் மகிழ்கிறார்கள் என்கிறாயே. வெறுமனே பார்ப்பதும் பெயர்  தெரிந்து  கொள்வதும் தான் லட்சியமா? பெருமையா ?  அவனை யார் என்று அறிந்துகொண்ட ரிஷிகள் ஞானிகள்  பவசாகரம் கடந்தவர்கள். எல்லையற்ற மனத்தூய்மை கொண்டவர்கள். பிரம்மத்தில் லயிப்பவர்கள்.

90. स एषो अस्मन्नयनगोचरो तिष्टतीति त्वम्; ‘स य एषोऽन्तर्हृदय आकाशः, तस्मिन्नयं पुरुषो  मनोमयः, अमृतो हिरण्मयः' इत्यहम् ।

ஸ  யேஷோ அஸ்மத்ரயன கோசரோ  திஷ்டதிதி தவம்;  ச யா  யேஷோந்த ஹ்ருதய ஆகாச:  தஸ்மிந்த்ரயம்  புருஷோ  மனோமய:  அம்ருதோ  ஹிரண்மய: இத்யஹம் .

''ராமா''    என்று அழைத்ததும் எதிரே வந்து நிற்பவன் தான் ராமனா? ஹ்ருதயத்தில் அடிவாரத்தில் உள்ள ஆத்மா அல்லவோ  அவன்.

மேற்கொண்டு  ரஸ   நிஷ்யந்தினி   ரசிப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...