Sunday, June 28, 2020

GITANJALI

தாகூர் கீதாஞ்சலி J K SIVAN

1 எங்குமே ஆனந்தம். 1. ''Thou hast made me endless, such is thy pleasure.
This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life.
This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new.
At the immortal touch of thy hands my little heart loses its limits in joy and gives birth to utterance ineffable.
Thy infinite gifts come to me only on these very small hands of mine.
Ages pass, and still thou pourest, and still there is room to fill. தாகூருக்கு கிருஷ்ணன் ஞாபகம் வந்திருக்கிறதோ? எப்படி அவன் குழலிசை கீதத்தை நினைவிலிறுத்தி கீதாஞ்சலியை எழுத ஆரம்பிக்கிறார். கீதை தந்தவனுக்கு அஞ்சலி தான் கீதாஞ்சலியோ? யாராயிருந்தாலும் எந்த பாஷை பேசினாலும் கிருஷ்ணனை மறந்து இயற்கையையோ தெய்வத்தையோ நினைக்க வழி உண்டா? அவனை நினைத்தாலே ஆனந்தம் பெருகாதா? ''பகவானே, எனக்குகடைசிகாலம் என்று ஒன்று இல்லை. நிரந்தரமாக்கி விட்டாய். அதில் உனக்கு எவ்வளவு சந்தோஷம். இந்த தேகம்எனும் மண்பாத்திரம் அடிக்கடி உடையும், காலியாகும். ஆனால் நீ மறுபடியும் இன்னொன்று படைத்து அதில் உயிரை உள்ளே வைத்து நிரப்பி அனுப்புபவன் . மீண்டும் புது வாழ்க்கை. !! அடேயப்பா, கிருஷ்ணா, நீஎப்படியப்பா, இந்த சாதாரண நாணல் மூங்கில் குழாயில் உன் மூச்சுக்காற்றை செலுத்தி ஒரு தெய்வீக சங்கீதத்தை கொடுத்து, காடு மலை, நதி பள்ளத்தாக்கு என்று எங்கும் ஜீவநாதத்தை பரப்பி உயிர்ப்பிக்கிறாய்.ஒவ்வொரு ஒலியும் உயிரோட்டம் நிறைந்த ஒரு புது நாதம். ஜீவ கானம் .எல்லையற்ற நிரந்தர அமர இன்னிசை. உன் மூச்சுக்காற்று மட்டுமா?. உன் தெய்வீகக் கரங்கள் தாங்கி விரல்கள் அசைந்து எழும் அந்த சாஸ்வத சங்கீதம் என் மேல் காற்றில் படும்போது நான் எங்கே இருக்கிறேன் என்றே தெரியவில்லை! எங்கோ எல்லையில்லாத ஆனந்த லோகத்தில் சஞ்சரிக்கிறேன்.என் நெஞ்சத்திற்கு அதை எடுத்துச் சொல்லும் சக்தி இல்லை. அது வார்த்தைகள் மொழிகள் மீறிய ஒரு எல்லையற்ற இன்பம். அதன் அர்த்தங்கள் எத்தனை வேதத்திலும் அடக்க முடியாதது. நீ பரோபகாரி, எவ்வளவு அதிசயதானமாக இதை அளிக்கிறாய். இந்த பிரபஞ்சத்தில் எனது கரங்கள் மிக நுண்ணியவை. அவற்றின் மூலம் நீ அளிக்கும் அளவற்ற தொடரும் பரிசுகள் எண்ணற்றவை .
யுகங்கள் தான் மாறி மாறி வருமே தவிர உன் கருணைப் பரிசு தொடர்ந்து தான் அளித்துக் கொண்டிருக் கிறாய். இந்த பிரபஞ்சத்தில் சுற்றிப்பார்க்கிறேன். இதயமாகிய என் மண் பாண்டமும் காலி
ஆகவில்லையே. விடாமல் உன் பரிசு மழை அதை நிரப்புகிறதே. இல்லையே அடடா எல்லாமே உன் ஜீவ நாதத்தால் நிரந்தரமாக நிரம்பி பொங்கி வழிகிறதே! எங்குமே ஆனந்தம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...